பயணமோ என்றும் இனியது
பார்ப்பதெல்லாம் புதியது
பாதையிலே எத்தனை விந்தை
பகலில் நாளை வரும் கிரகணம்
பேரதிசயமாய் நிகழ்வதாம்
பரிதியின் நட்ட நடுவிலே
பால் நிலவும் துஞ்சி செல்லுமாம்
பல காதம் கடந்து வந்து
பரவசமாய் பலர் காத்திருக்க
பிள்ளைப் பிராயத்து ஆவலும்
பிறக்கின்றதே என்னுள்ளே
பிரபஞ்சமே என் மஞ்சமே