Quote:
உதிரிப்பூக்கள்-200
http://www.dailythanthi.com/muthucha...20825/Tv08.jpg
சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் உதிரிப்பூக்கள் தொடர், 200-வது எபிசோடை எட்டியிருக்கிறது.
தொடரில் இப்போது ஷக்தியின் சொந்த அப்பா தட்சிணாமூர்த்திக்கும் வளர்ப்பு அப்பா சிவநேசனுக்குமான `ஈகோ' மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கிறது. அதன் விளைவாக வளர்ப்பு அப்பா சிவநேசன் நடத்த விரும்பிய ஷக்தியின் திருமணத்தை சொந்த அப்பா தட்சிணாமூர்த்தி தடுக்கிறார். ஆனால் வளர்ப்பு அப்பா சிவநேசன் சாமர்த்தியமாக செயல்பட்டு ஷக்திக்கு அவள் விரும்பிய இடத்திலேயே திருமணத்தை நடத்தி முடித்து விடுகிறார்.
தன் மகனுக்கு நடந்த திருமணத்தின்போது ஒவ்வொரு கணமும் விபரீதம் நடந்து விடுமோ என்று பதட்டத்தின் உச்சியில் இருந்த அலமேலு, திருமணம் முடிந்ததும் மருமகள் ஷக்தியிடம் போட்ட முதல் கண்டிஷன் இது தான். `இனி உன் சொந்த அப்பா குடும்பத்தில் இருந்தோ, வளர்ப்பு அப்பா குடும்பத்தில் இருந்தோ யாரும் உன்னைப் பார்க்க இந்த வீட்டுக்கு வரக்கூடாது. நீயும் இவர்கள் யார் வீட்டுக்கும் போகக்கூடாது.'
மாமியாரின் இந்த கட்டளை ஷக்தியை பெரிதும் பாதிக்கிறது. தன் குடும்பத்தில் உள்ளவர்கள் செய்த குழப்பம் தான் தனது மாமியாரை அப்படியொரு முடிவு எடுக்க வைத்து இருப்பதை அவள் உணர்ந்தாலும், அந்த பாசத்தடை அவளை பாதிக்கவே செய்கிறது.
ஷக்தியின் திருமணம் முடிந்த அன்று இரவே தன் இரண்டாவது மனைவியின் வீட்டுக்கு போகிறார், தட்சிணாமூர்த்தி. நடந்ததை போதையில் அவளிடம் சொல்லிப் புலம்ப, அவள் கொடுத்த யோசனையின் பேரில் அந்த ராத்திரியிலேயே மீண்டும் ஷக்தி வாழ்க்கைப் பட்ட வீட்டுக்கு வந்து கத்தி கலாட்டா செய்கிறார். இதனால் திருமண வீட்டில் உள்ளவர்கள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் தள்ளி விட, அப்போது ஏற்பட்ட கைகலப்பில் தட்சிணாமூர்த்தி மீது சில அடிகள் விழுகிறது. தட்சிணாமுர்த்தியுடன் வந்த அவரது சின்ன வீட்டு மகள் பிரியா இதனால் கோபமாகி, `எங்க அப்பா மேல கைவைக்கிறதுக்கு நீங்க யாரு? என்று எகிறுகிறாள்..
இதனால் தட்சிணாமூர்த்திக்கு இன்னொரு குடும்பம் இருக்கிறது. அந்தக் குடும்பத்தில் 20 வயதில் ஒரு பெண் இருக்கிறாள் என்பது வரை அந்த நேரத்தில் வெட்ட வெளிச்சமாகி விடுகிறது. இந்த விஷயம் தட்சிணாமூர்த்தியின் முதல் மனைவி வள்ளியம்மாளுக்குத் தெரிந்தால் அவள் நிலைமை என்னவாகும்? தன் கணவர் தனக்கு மட்டுமே உரிமையானவர் என்று இதுகாறும் நம்பிக்கொண்டிருந்த அவள், இந்த உண்மை தெரிய வரும்போது எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும்?
கணவன் வீட்டில் வாழவந்த ஷக்திக்கு மாமியார் மற்றும் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களால் என்ன மாதிரியான பிரச்சினைகள் நேரப்போகிறது? அதை அவள் தன் வளர்ப்பு அப்பாவிடமோ குடும்பத்தினரிடமோ பகிர்ந்து கொண்டாளா? பிரச்சினைக்கு தீர்வு கண்டாளா? என்பது அடுத்தகட்ட அதிர்ச்சித் திருப்பம்.
தொடரில் நட்சத்திரங்கள்: சேத்தன், வடிவுக்கரசி, மானசா, ஷர்வன், எல்.ராஜா, ஸ்ரீலேகா, ரூபஸ்ரீ, கருணா, பாரதி, அகிலா, மகாலட்சுமி, சுரேகா.
திரைக்கதை: முத்துச்செல்வன். வசனம்: `சம்யுக்தா'ஆனந்த். ஒளிப்பதிவு: சாகித்யாசீனு. இயக்கம்: விக்ரமாதித்தன். `ஹோம் மூவி மேக்கர்ஸ்' சார்பில் தயாரிப்பு: சுஜாதா விஜயகுமார்.
நன்றி: தினதந்தி