http://i501.photobucket.com/albums/e...psd2d358c7.jpg
Printable View
THE 6.13 Minute, 10 Page Dialogue - & Nadigar Thilagam takes "can anyone beleive??" just a single take to complete it. Watch the Camera in one position & Watch Nadigar Thilagam delivering this dialogue without compromising on Body Language, Expression and What not ! -
https://www.youtube.com/watch?v=vAE6xvRMn34
http://i1087.photobucket.com/albums/..._002927840.jpg
இந்த ஸ்டில் நான் ரொம்ப ரசித்த ஸ்டில் சார்
நடிகர் திலகத்தின் இளமை குறும்பு கொப்பளிக்கும்
நெய்வேலியாரை நான் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்
பாடலை நினைவு கூர்ந்த ரவி கிரண் அவர்களுக்கு சிறப்பு நன்றி
ஆங்கில மற்றும் தமிழ் பாடல் கலந்த POP ரகம்.
திரு அஜீத் மற்றும் L R ஈஸ்வரி இனைந்து பாடிய "LOVE IS FINE DARLING WHEN YOU ARE MINE ! "
நடிகர் திலகம் அவர்களுடைய இன்னொரு திறமை இந்த பாடலில் பளிச்சிடும் ! ஆங்கில பாடலுக்கு வாயசைப்பது மட்டுமல்ல ..இந்த பாடல் இடையே வரும் " HEY FOLKS ...TIMES ARE CHANGING ....என்ற ஒரு சில வரிகள் ! அதில் கிண்டல் கலந்த வரி வரும்போது நாக்கை கடித்து , கையை அசைத்து நகைக்கும் நகைப்பு இருக்கிறதே....! இனி ஒரு கலைஞன் பிறந்து தான் வரவேண்டும் ..!
அனைவரின் பார்வைக்கும் !
http://www.youtube.com/watch?v=ORqLDJZ6WJk
தே போல பாட்டும் பாரதமும் திரைப்படத்தில் வரும் " my song is for you " என்ற pop ரகம் பாடல்.
இந்த முறை SPB SOLO ...இதில் ஒரு கட்டத்தில் ஸ்ரீப்ரியா கிளப் உள்ளே வர...நடிகர் திலகம் அவரை "MIND A DANCE WITH ME BABY " என்று நடனமாட அழைக்க ...ஸ்ரீப்ரியா தயங்க...நடிகர் திலகம் உடனே "OH COME ON ...! " என்றழைக்கும் அந்த ஸ்டைல், அந்த COMMAND OVER THE LANGUAGE !!.. அழைத்து அவருக்கு சொல்லிகொடுத்தபடியே போடும் ஸ்டெப் ....!
ஒரு தேர்ந்த POP பாடகன் எப்படி செய்வாரோ அதைப்போலவே ஒரு PERFECTION !!
கண்டு மகிழுங்கள் ! கருத்தை பகிருங்கள் !
http://www.youtube.com/watch?v=tC_Z5_FX3SI
நல்வாழ்த்து நான் சொல்வேன்..விட்டுப் போச்சே ஆர்.கே.எஸ் :)
நல்ல நண்பர்களுகிடையே சண்டை மூடிவிடும் சில சமூக விரோதிகள் இன்றும் நம் நாட்டில் இருக்கதான் செய்கிறார்கள்.
இவர்கள் எண்ணமே ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டிக்கொண்டு, ஏசிக்கொண்டு, பூசளிட்டுகொண்டிருக்கவேண்டும் என்பதுதான்.
இவர்கள் இதை செய்வதற்கு காரணம் அடுத்தவர் மீதுள்ள கேவலமான ஒரு தரமற்ற ஒரு காழ்புனற்சியே.
இந்த சமூக துரோகிகள்...ஏமாறுபவர்களின் ரத்தத்தை ஏமாறும் தருணத்தில் ஏமாந்தவர்கள் அறியா வண்ணம் அட்டையை போல அவர்களிடமிருந்து பயன் பெற்றுகொள்வதுதான்.
இது போன்ற ஜென்மங்கள் ஊளையிட்டுகொண்டேதான் இருக்கும்..! காரணம் அடுத்தவர்கள் உழைப்பில் வாழ பழகி பல வருடங்கள் ஆயிற்று...! இனி உழைத்து எங்கிருந்து வாழ்வது...!
இரண்டு ஆடுகளை மோதவிட்டு ...அவை இரெண்டிலிருந்தும் வடியும் ரத்தத்தை குடிக்க சமயம் பார்த்து பதுங்கி நிறுக்கும் ஐந்தறிவு ஓநாய்களுக்கும் இவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை !
இப்படி பட்ட சமூக துரோகிகளுக்கு ஏற்ற பாடல் !
https://www.youtube.com/watch?v=bekqnlpm6Nw
Dear RKS:
Outstanding and mind boggling efforts by you. Words fail me in congratulating you.
Dear KCS:
Your single minded dedication and devotion ... Congratulations.
Mere words will not do justice to your contribution and hence, am unable to say anything.
Regards,
R. Parthasarathy
பாப் பாடல்கள் என்றில்லை ...
சாஸ்த்ரீய சங்கீதம் கொண்ட பாடல்களுக்கும் நடிகர் திலகம் வாயசதிருக்கிறார். கவரிமான் படத்தில் நமோ ப்ரவமோ என்கின்ற திரு யேசுதாஸ் அவர்கள் குரலில் இளையராஜா இசையில் அமைந்த பாடல் ...! இதில் நடிகர் திலகம் அவர்களின் TIMING வாயசைப்பு அனைவரையும் மிகவும் அதிசயிக்கபடவைத்த ஒன்றாகும்...!
https://www.youtube.com/watch?v=1uqz7z7Cu5Q
மலையாள நடிகர் திரு மோகன்லால் நடித்த ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்த சித்திரம் என்ற படத்தில் இதே போல ஒரு காட்சியமைப்பு வரும்.
அதுவும் சாஸ்திரிய சங்கீதம் கொண்ட "நகுமோ" என்ற பாடல்.
https://www.youtube.com/watch?v=eX_F2JR7Etk
நம்முடைய பாடலை பார்த்துகூட திரு மோகன்லால் அவர்களுக்கு அல்லது திரு ப்ரியதர்ஷன் அவர்களுக்கு அப்படி ஒரு காட்சியமைப்பு வைக்கவேண்டும் என்று எண்ணியிருக்கலாம். அதன் விளைவாக அந்த பாடல் தோன்றியிருக்கலாம்.
நமது நடிகர் திலகம் தான் கேரளாவிலையே அதிக ரசிக பெருமக்களை கொண்ட தமிழ் நடிகர் ஆயிற்றே !
நடிகர் திலகத்தின் படங்கள் எப்போதுமே நம்முடைய கலாசாரத்தை நம்முடைய பெருமைகளையும் அவைகளை தெரியாதவர்களுக்கு தெரியவைக்க முயற்சிக்கும் வகையில் காட்சிகள் சில எப்போதும் இருக்கும்.
பல படங்கள் அதற்க்கு உதாரணம் கூறலாம். நம் தமிழர் பண்பாடு, கலாசாரம், விருந்தோம்பல், கலை, இப்படி பல சிறப்புக்களை எப்படி அவை மற்றவைகளைவிட உயர்ந்து நிற்கிறது என்பதை வலியுறுத்தும்படி அமைந்திருக்கும்.
தேசிய நடிகர் ஆயிற்றே ...தேசியமும் தெய்வீகமும் அவர் ரத்தத்தில் ஊறியவை அல்லவா !
இந்த உயர்ந்த எண்ணம் அவர் மனதில் வராமல் இருக்குமா என்ன ?
https://www.youtube.com/watch?v=VF7VPpAQfSA
The Hindu - Tamil - 22-07-2014
http://tamil.thehindu.com/opinion/co...cle6236099.ece
சிவாஜி கணேசன்: கம்பீரத்தின் கடைசி அவதாரம்
21.07.2014 - சிவாஜி கணேசனின் 13-வது நினைவு நாள்
ஸ்ரீதர் இயக்கிய ‘சிவந்த மண்' திரைப்படத்தின் இந்திப் பதிப்பான ‘தர்த்தி' 1970-ல் வெளியானது. ராஜேந்திர குமார், வஹீதா ரஹ்மான் நடித்த அந்தப் படத்தில் புரட்சி வீரனாக, கவுரவ வேடத்தில் சிவாஜி தோன்றினார். இந்தப் படம்குறித்து சுவாரசியமான தகவல் ஒன்று உண்டு. படம் வெளியான அன்று பம்பாயில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாம். அதைக் குறிப்பிட்டு சிவாஜியிடம் ராஜேந்திர குமார் சொன்னாராம், “உங்கள் நடிப்பைப் பார்த்து பம்பாயே நடுங்கிவிட்டது!”
சிறிய வேடம் என்றாலும் சிவாஜியின் ‘திரை வீச்சு' (ஸ்கிரீன் பிரெசன்ஸ்) அத்தனை கம்பீரமானது. அதனால்தான், இன்றும் கம்பீரமான பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் சிவாஜியுடன் ஒப்பிடப்பட்டே மதிப்பிடப்படுகிறார்கள்.
சிவாஜியின் நடிப்பு நிச்சயம் விமர்சனத்துக்கு அப்பாற் பட்டதல்ல. மற்றவர்கள் இயல்பாக வசனம் பேசும் காட்சிகளில், அதீத உணர்வுடனும் அழுத்தமான உச்சரிப்புடனும் திரையில் தனிக் கவனம் பெறும் அவர் மீது காத்திரமான விமர்சனங்கள் பல உண்டு. அவற்றையெல்லாம் மீறி, அற்புதமான தன் நடிப்புத் திறனால், பல படங்களின் வெற்றியை உறுதி செய்தார் சிவாஜி. தன்னை விட அதிக வயதுள்ள நாயகர்கள் இளைஞர்கள் வேடத்தில் நடித்துக்கொண்டிருந்த கால கட்டத்தில், ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் 13 குழந்தைகளுக்குத் தந்தையாக நடிக்கும் துணிச்சலை வேறு எவரிடமும் எதிர்பார்க்க முடியாது. ‘திருவருட்செல்வர்' தொடங்கி எத்தனையோ வயோதிகப் பாத்திரங்களில் நடிக்கத் தயங்கியதில்லை.
வேறென்ன செய்ய முடியும்?
உண்மையில், நடுத்தர மற்றும் சற்றே வயதான வேடங் களில் நடித்தபோது சிவாஜியிடம் கம்பீரமும் மிடுக்கும் கூடியிருந்ததைப் பார்க்க முடியும். ‘தெய்வமகன்' படத்தின் புகழ்பெற்ற அந்த கோரமுக மகன் பாத்திரத்தைவிடத் தந்தை பாத்திரத்தில் வரும் சிவாஜிதான் சிறப்பாக நடித்திருப்
பார். மகனைப் புறக்கணிக்க நேர்ந்ததால் எழும் குற்றவுணர்ச்சி யும், சமூகத்தின் முன் அவனைத் தன் மகனாக அறிவிக்கத் தயங்கும் போலி கவுரமும் தன்னை அலைக்கழிப்பதை நுட்பமாக வெளிப்படுத்தியிருப்பார். ஒரு காட்சியில், கேமராவுக்கு முதுகைக் காட்டியபடி சிவாஜி விசும்பிக் கொண்டிருப்பார். அப்போது எதிரில் மேஜர் சுந்தர்ராஜன் அசைவற்று அவரையே பார்த்துக்கொண்டு நிற்பார். அதை ஒரு விமர்சனத்தில் இப்படி எழுதியிருந்தார்களாம்: ‘சிவாஜியின் முதுகுகூட நடித்துக்கொண்டிருந்தது. மேஜர் சுந்தர்ராஜன் தேமேயென்று நின்றுகொண்டிருந்தார்’ என்று. பின்னாட்களில் அதைக் குறிப்பிட்டு மேஜர் சுந்தர்ராஜன் சொன்னார், “சிவாஜி நடித்துக்கொண்டிருக்கும்போது அதைப் பார்த்துக்கொண்டு நிற்காமல் வேறென்ன செய்ய முடியும்!”
சிவாஜி வந்து நிற்கும் தோரணையைக் கண்டு, அதற்கு முன் ஆர்ப்பாட்டமாகப் பேசிக்கொண்டிருப்பவர்கள், பேச மறந்து உறைந்து நிற்கும் காட்சிகளைப் பல படங்களில் பார்க்கலாம். ‘முதல் மரியாதை' படத்தில் மரணப் படுக்கையில் படுத்திருக்கும் சிவாஜியை, சில சிறுவர்கள் வேடிக்கை பார்க்க வந்து நிற்பார்கள். அந்த நிலையிலும் தன் கோபத்தைக் காட்ட ஒரு உறுமு உறுமுவார். அடுத்த கணத்தில் சிறுவர் குழாம் சிதறி ஓடும். படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் இந்தக் காட்சியே, சிவாஜியின் கதாபாத்திரம் எத்தனை மரியாதைக்குரியது என்பதை உணர்த்திவிடும். ‘பாசமலர்’ படத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஜெமினி கணேசன் எழுப்பும் கேள்விகளைக் கேட்டுக் கொதிப்படைந்து சிவாஜி பேசும் வசனங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. “யாருடைய துணையுமின்றித் தனியாகவே நான் உழைப்பேன்” என்று கர்ஜித்துவிட்டு, முத்தாய்ப்பாக ‘‘கெட் அவுட்'' என்று மெல்லிய குரலில் சொல்ல சிவாஜியால்தான் முடியும்.
எப்போதும் மரியாதை
மிகை நடிப்பு என்று அவரை விமர்சிப்பவர்கள்கூட பின்னாட்களில் ‘முதல் மரியாதை', ‘தேவர் மகன்' ஆகிய படங்களில் அவர் ஏற்று நடித்த பாத்திரங்களை வியக்கின்றனர். குறிப்பாக, தேவர் மகன் படத்தில், முகத்தில் படர்ந்த வீர மீசையும், தோளைச் சுற்றிய சால்வையுமாக அவர் வந்து நிற்கும் கம்பீரம் அலாதியானது. சிவாஜியைப் புகைப்படம் எடுக்கும் கவுதமி, அவர் சற்று திரும்பி முறைத்ததும் தடுமாறும் காட்சியே சொல்லும் சிவாஜியின் கம்பீரத்தை.
திரைக்கு வெளியிலும் தன் கம்பீரத்தைக் கடைப்பிடித்தார் சிவாஜி. ஒருமுறை அவரது மகன் ராம்குமார் குறிப்பிட்டார்: “வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அப்பா மிக நேர்த்தியாக உடையணிந்துகொள்வார். விமான நிலையங்களில் எங்களையெல்லாம் சோதனை செய்வார்கள். அப்பா நடந்துவரும் தோரணையைப் பார்க்கும் விமான நிலையக் காவலர்கள் அவரை ஒருபோதும் சோதித்துப் பார்க்கத் துணிந்ததில்லை.” அதுதான் சிவாஜியின் ஆளுமை!
-வெ. சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
சந்திப்பு - நான்காம் நாள் - மதுரை
நான்காம் நாளான நேற்று மீண்டும் மக்கள் ஆதரவோடு சென்ட்ரலில் மறு வெளியீடு கண்ட பழைய படங்களின் வசூலில் முன்னணி பெற்றிருக்கிறது. நான்கே நாட்களில் சுமார் ஐம்பத்தி ஆறாயிரம் ரூபாய்க்கும் அதிகமாகப் வசூலித்து நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் பவரை மீண்டும் பறை சாற்றியிருக்கிறது சந்திப்பு.
பிற ஊர் செய்திகள்
கோவையில் டிலைட் திரையரங்கில் தங்கப்பதக்கம் பெற்ற வெற்றியை தொடர்ந்து சென்ற வெள்ளிக்கிழமை முதல் புதிய பறவை திரையிடப்பட்டு பெரும் வரவேற்ப்பை பெற்றிருக்கிறது, ஞாயிறு மாலை படத்திற்கு வந்த கூட்டத்தையும் வசூலையும் பார்த்த அரங்க நிர்வாகத்தினர் அடுத்தடுத்து நடிகர் திலகத்தின் படங்களை வெளியிட முடிவு செய்திருக்கின்றனர். அதன்படி விரைவில் டிலைட் திரையரங்கில் எங்க மாமா ஹரிசந்திரா போன்ற படங்கள் திரையிடப்பட்ட உள்ளன.
நெல்லை சென்ட்ரலில் பராசக்தி ராஜா மற்றும் எங்கள் தங்க ராஜாவை தொடர்ந்து சென்ற வெள்ளி முதல் தியாகம் திரையிடப்பட்டு வெற்றி கொடி நாட்டி வருகிறது. முந்தைய படங்களைப் போலவே இதுவும் வெளியிட்டவருக்கு கணிசமான தொகையை பெற்று தரும் என நெல்லை தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன.
அன்புடன்
thanks KCS sir. follow up to your post 462
http://tamil.thehindu.com/opinion/co...cle6236099.ece
the Hindu tamil / rasigargalin comments
சிவாஜி ரசிகன்
நடிப்பு என்பதே மிகைதான்..அதில் மிகை நடிப்பு என்றெல்லாம் ஒன்னும் இல்லை.சுத்தி இருக்கறவங்க (மற்ற கதாபாத்திரங்கள்) அந்த சிங்கத்துக்கு இணையா நடிக்க முடியாததுனால ,அவரோடது வேணும்னா கொஞ்சம் மிகையா தெரியலாம்..சிவாஜி,கட்டபொம்மன்,தங்க பதக்கம்,கௌரவம் அந்த கம்பீர நடை,நெருப்பு தெறிக்கும் வசனங்கள் இன்னைக்கு வரைக்கும் யாரும் அத செய்ய முடியல.இனிமே செய்வாங்கன்னும் தோணல..அதிசய நடிகன் சிம்ம குரலோன் சிவாஜி கணேசன்..
about an hour ago · (1) · (0) · reply (0)
G.Kasinathan Govindharaj
வியட்நாம் வீடு கௌரவம் போன்ற படங்களில் அவரது நடிப்பை பார்த்து மலைத்து என்னை மறந்தது போனது உண்டு
Points
250
about 3 hours ago · (0) · (0) · reply (0)
நடிகர்திலகம் சிவாஜி
சிறப்பான, நடுநிலையான கட்டுரை. மறைந்து 13 ஆண்டுகளாகிறது. 13 ஆண்டுகள் அல்ல 13 நூறாண்டுகள் ஆனாலும், சினிமா என்ற சொல் அகராதியில் இருக்கும்வரை நடிகர்திலகத்தின் புகழ் இப்புவியில் உலாவந்துகொண்டுதான் இருக்கும்.
about 3 hours ago · (2) · (0) · reply (0)
Sri G.
நடிப்பின் இலக்கணம்..பாத்திரமாகவே மாறும் இயல்பு. மிகை நடிப்பு என்று சொல்வார்கள் ஆனால் அது மிக அழுத்தம் என்று வேண்டுமானால் சொல்லலாம். நடிப்புலகின் பிதாமகன். அஸ்தமனம் இல்லா ஆதவன். சிலையாகிப்போன சிற்பி. கனவு தொழிற்சாலை இருக்கும் மட்டும் இருக்கும் கனவு. ஒளியில்லாது அவர் உதடுகளை வைத்தே உச்சரிப்பை சொல்லிவிடலாம். எத்தனையோ பேர் வந்தாலும் அத்துணை பேரும் அவர் கீழ்தான்..
Points
515
about 5 hours ago · (4) · (0) · reply (0)
Conjivaram
கலாநிகேதன் பாலு அவர்கள் எங்கள் குடும்ப நண்பர் இன்றும் அவர் சிவாஜியின் நடிப்பை பற்றியும் தொழில் பக்தியை பற்றியும் சிலாகிப்பார் .. 6 வயது முதல் சிவாஜி நாடகமன்றம் அரங்கேற்றும் நாடகங்கள் முதல் அவர் நடித்த பெரும்பான்மையான படங்கள் பார்த்து உருகி இருக்கிறேன் .. அவர் வெள்ளை உள்ளம் கொண்டவர் .. உணர்ச்சி வசப்படுபவர் .. அதுவே அவர் நடிப்பு ஒரு மடை திறந்த வெள்ளமாய் பெருக்கெடுத்து முடிசூடா மன்னனாய் வலம் வந்தார் .. இந்த உலகம் உள்ளளவும் அவர் புகழ் பேசப்படும்
Points
880
about 6 hours ago · (0) · (0) · reply (0)
Conjivaram
ஒரு முறை கோவை விமான நிலையத்தில் அவரை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது தேவர் மகன் படப்பிடிப்பில் இருந்து சென்னை திரும்பும் வழியில் .. அப்பப்பா என்ன கம்பீரம் என்ன மிடுக்கு கண்களில் மின்னும் அசாதாரமான ஒளி .. இனிஒரு சிவாஜி சார் நமக்கு கிடைக்க மாட்டார் அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தது நமது பெரும் பேறு.. பராசக்தி நடிப்பு உலகிற்கு ஒரு அரிச்சுவடி அல்லவா? கடும் உழைப்பு தொழில்மீது பக்தி நேரம் தவறாமை இவற்றுக்கு அவர் இலக்கணம் .. தமிழ் அவர் உச்சரிப்பில் பெருமை பெற்றது என்றுதான் சொல்லவேண்டும் .. யாரும் எட்டமுடியாத சிகரங்களை அவர் எட்டிவிட்டார் .. அவர் நினைவில் நம் மீதமுள்ள காலத்தை ஓட்டுவோம் .. இந்த பிரபஞ்சத்தில் பஞ்ச பூதங்கள் உள்ளளவும் அவர் புகழ் நீடித்து இருக்கும் .. 50 ஆண்டுகளுக்கு மேல் எம் மக்களை உம ஒப்பற்ற நடிப்பால் மகிழ்வித்த நடிகர் திலகமே உம்மை கரம்கூப்பி சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
Points
880
about 6 hours ago · (1) · (0) · reply (0)
முஹம்மது
சிவாஜி :திரையுலகின் சகாப்தம்.
Points
410
about 6 hours ago · (1) · (0) · reply (0)
ISO NAGARAJ
சிவாஜியின் நேரத்தை கடைபிடித்த பழக்கம் அதாவது குறித்த நேரத்தில் போவது அல்ல குறித்த நேரத்திற்கு முன்பே சென்று தயாராக இருப்பது வேலையில் காட்டிய முழுஈடுபாடு இந்த இரு பழக்கங்களை கடை பிடித்தால் இளைய சமுதாயம் உயர்வது நிச்சயம்
about 7 hours ago · (1) · (0) · reply (0)
R.M.Manoharan Manoharan
இத்தகு பெரும்புகழ் சிவாஜிக்கு சென்னையில் பீச் ரோடில் சிலைவடித்தார் கலைஞர்அவரது ஆட்சியில். உலகமே வியந்த மாபெரும் நடிகர் சிவாஜி. அவரது ஒவ்வொரு அங்கமும்அழகாக நடிக்கும்சிறப்பான நடிகர் சிவாஜி.அத்தகைய நடிகரின் சிலையை அவருடன் ஜோடியாக நடித்த அன்றைய நடிகை, இன்றைய முதல்வர் அடம் பிடித்து அகற்ற குப்பையில்வீசியது ஏனோ? ஆர் எம் மனோகரன்
Points
3115
about 7 hours ago · (2) · (1) · reply (0)
sasibalan
சிவாஜி கணேசன் அவர்கள் திரையுலக நடிப்பில் புதிய இலக்கணத்தை வகுத்தவர்.வசன உச்சரிப்பில் அவருக்கு இணையான ஒரு நடிகர் இன்றளவும் உருவாகவேயில்லை என்பதே அவருக்கு பெருமைதான்.கட்டபொம்மனாக,பாரதியாக,வ.உ.சி.யாக நடித்தார் என்பதை விட அந்த பெருமக்களை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினர் என்றே கூறலாம்.சிவாஜி தமிழனாக பிறந்தது தமிழ்மக்கள் அனைவருக்கும் பெருமையே.அவரது நினைவு நாளில் 'சிவாஜி கணேசன் கம்பீரத்தின் கடைசி அவதாரம்' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு சிறப்பித்த இந்து நாளிதழுக்கு நன்றியும் பாராட்டும் உரித்தாகுக.
Points
915
about 7 hours ago · (3) · (1) · reply (0)
sasibalan
சிவாஜி கணேசன் அவர்கள் திரையுலக நடிப்பில் புதிய இலக்கணத்தை வகுத்தவர்.வசன உச்சரிப்பில் அவருக்கு இணையான ஒரு நடிகர் இன்றளவும் உருவாகவேயில்லை என்பதே அவருக்கு பெருமைதான்.கட்டபொம்மனாக,பாரதியாக,வ.உ.சி.யாக நடித்தார் என்பதை விட அந்த பெருமக்களை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினர் என்றே கூறலாம்.சிவாஜி தமிழனாக பிறந்தது தமிழ்மக்கள் அனைவருக்கும் பெருமையே.அவரது நினைவு நாளில் 'சிவாஜி கணேசன் கம்பீரத்தின் கடைசி அவதாரம்' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு சிறப்பித்த இந்து நாளிதழுக்கு நன்றியும் பாராட்டும் உரித்தாகுக.
Points
915
about 7 hours ago · (4) · (0) · reply (0)
ISO NAGARAJ Up Voted
GUNA
சிவாஜி கணேசனைப் பற்றி நல்ல நடுநலையான விமர்சனம் கொடுத்துள்ளீர்கள்.பாராட்டுக்கள்.
Points
1310
about 9 hours ago · (1) · (0) · reply (0)
balu
we miss u lot. shivaji sir.
Points
230
about 9 hours ago · (0) · (0) · reply (0)
DEVKUMAR ARUMUGAM
சிவ பெருமானே திரு விளையாடல் - சிவாஜி கணேசனுக்கு ரசிகராயிருப்பார் என் எண்ணத்தோன்றுகிறது.
Points
185
about 9 hours ago · (7) · (0) · reply (0)
Most Commented Stories
dear RKS sir. If these fans come to our thread, ...it gets enriched.
dear RKS Sir. In Coimbatore editions of Hindu/Dinamalar etc., no ad on the memories of NT.
நடிகர் திலகத்தின் நினைவலைகள் 10 : (நினைவஞ்சலியின் நிறைவாக )
வயது முதிர்ந்தால்........வாழ்வில் பயம் ? தன்னம்பிக்கை கூடிய தைரியம்? : இமேஜ் பாராமை!
எந்தவொரு உலகக்காவியத்தை அலசினாலும் நடிகர்திலகம் அளவு வயது முதிர்ந்த பாத்திரங்களில் முத்திரை பதித்தவர் எவருமில்லை! பணிமூப்ப்டைந்த வயதில் தன்னம்பிக்கை இழந்தவராக பிரஸ்டிஜ் பத்மநாபன், நேர்மாறாக சவால்களை தவிடுபொடியாகும் மனத்தைரியம் கொண்ட எங்க ஊரு ராஜா மமதை கொண்ட பாரிஸ்டர் ரஜனிகாந்த், முதிர்வயதில் கம்பீரம் வெளிப்படுத்தும் எஸ்பி சௌத்ரி, ..........பாடல்கள் பலவிதம்! நடிகப்பேரரசரின் நடிப்புப்பாவங்களும் பலரகம்!!
https://www.youtube.com/watch?v=NC3QQL3cMlg
https://www.youtube.com/watch?v=ZvXxGrgqWY4
https://www.youtube.com/watch?v=HEaY_qGscLo
https://www.youtube.com/watch?v=54HL4BSefHA
https://www.youtube.com/watch?v=xwfNcgPmgeo
https://www.youtube.com/watch?v=Rmhx_FiOMfQ
https://www.youtube.com/watch?v=dGLvY7aVRnQ
https://www.youtube.com/watch?v=kpCzej-Sr04
https://www.youtube.com/watch?v=2VyResf6y0o
https://www.youtube.com/watch?v=CMfbEd5aggI
https://www.youtube.com/watch?v=tq98SXE9as8
https://www.youtube.com/watch?v=I5temOuRbNY
வயது முதிர்ந்த பெரியவர் தன இயலாமையை ஆற்றாமையை கம்பீரமான தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் பாடல்களுக்கு முன்னோடி நடிகர்த்திலகமே அவரைத்தவிர வேறு ஒருவரை நம்மால் நினைத்துப்பார்க்க இயலாது. ஒரே exception ஜெமினியின் உனக்கென்ன குறைச்சல்!
https://www.youtube.com/watch?v=gcdZb_WIvYM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி.
இத்தகைய பின்புலத்தில்தான் பட்டிக்காடா பட்டணமா வெளியானது. தொடர்ந்து 115 காட்சிகள் அரங்கு நிறைந்து ஓடிக் கொண்டிருக்கிறது. நீண்ட பிளாஷ் பாஃக்கை முடித்து மீண்டும் 1972 ஜூன் 10-ந் தேதிக்கு வருவோம்
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
அதற்கு முதல் நாள் வெளியான நான் ஏன் பிறந்தேன் படத்திற்கு divided ரிப்போர்ட். ஆனால் நிறைய ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்று செய்தி வந்தது. அதற்கு ஒரு முக்கிய காரணம், படத்தின் முதல் காட்சி ஓடிக் கொண்டிருக்கும் ட்ரெயின் அதன் மேல் போடப்படும் டைட்டில்ஸ். அடுத்த காட்சி ரயிலில் இருந்து இறங்கும் எம்ஜிஆர் பாடும் நான் ஏன் பிறந்தேன் என்ற பாடல். அது முடிந்து வீட்டிற்கு வந்து வாசல் கேட் திறக்கும் எம்ஜிஆரைப் பார்த்து அப்பா என்று ஓடி வந்து நிற்கும் பையன். இது ரசிகர்களை upset செய்தது. இதற்கு முன்பும் எம்ஜிஆர் குழந்தைக்கு தந்தையாக நடித்திருக்கிறார். ஆனால் அவற்றில் (வேட்டைக்காரன், பணம் படைத்தவன், நல்ல நேரம் போன்ற சில) இடைவேளைக்கு பிறகோ அல்லது கடைசி ஒரு மணி நேரமோ என்ற வகையில்தான் இருந்ததே தவிர படம் ஆரம்பம் முதலே ஒரு பையனுக்கு தந்தையாக நடித்தது எனக்கு தெரிந்த வரை இது ஒன்றுதான். சண்டைக் காட்சிகள் எல்லாம் இருந்த போதும் படம் குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கலைப் பற்றி பேசியதால் படம் ரசிகர்களின் விருப்ப படமாக வரவில்லை. இந்த ரிப்போர்ட் முதல் நாள் மாலையே எங்களுக்கு வந்து விட்டது.
மறுநாள் ஜூன் 10 சனிக்கிழமை காலை. எனக்கு ஒரு சிறப்பு வகுப்பு இருந்தது. அதற்காக காலையில் திண்டுக்கல் ரோடு வழியாக சென்று கொண்டிருக்கும் போது (என் கஸினும் என்னுடன் வந்துக் கொண்டிருந்தான்) வழியில் வைத்து மதுரை மாநகர் எம்ஜிஆர் மற்ற பொறுப்பாளர் C.தங்கம் அவர்களை பார்த்தோம். அவர் எங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர். இவரைப் பற்றி சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு மீண்டும் ஒரு பிளாஷ் பாஃக் போக வேண்டும் என்பதால் அதை பின்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். எம்ஜிஆர் ரசிகர் என்றால் சிவாஜி ரசிகர்களை எதிரிகளாகவும் ஜென்ம விரோதிகளாகவும் பார்க்க வேண்டும் என்று சொல்லி தரும் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த நட்புணர்வுடன் பழக கூடியவர். நாங்கள் வயதில் சிறியவர்களாக இருந்த போதும் மரியாதை கொடுத்து பழகுவார்.
dig
<இன்றைய காலத்தில் எம்ஜிஆர் விசுவாசிகளுக்கு ஆளும் கட்சியில் மதிப்பில்லை, பதவியில்லை என்று நண்பர் வினோத் போன்றவர்கள் அடிக்கடி குறைப்பட்டுக் கொள்வார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்திலேயே அவருக்கு விசுவாசமாக இருந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள், sideline செய்யப்பட்டார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை. அதற்கு ஒரு உதாரணம் C.தங்கம். ஆனானப்பட்ட KAK, SDS போன்றவர்களே எம்ஜிஆரால் ஒதுக்கப்பட்டனர் எனும்போது இந்த தங்கம் எல்லாம் எம்மாத்திரம்?>
end dig
தங்கம் அவர்களிடம் படத்தைப் பற்றி விசாரித்தோம். அவர் எப்போதும் diplomatic-ஆக பதில் சொல்லுவார். நன்றாக இருக்கிறது என்றார். ரசிகர்களின் மனக்குறையைப் பற்றி கேட்டதற்கு அப்படி ஒரு கருத்து இருப்பது உண்மைதான். ஆனாலும் ஓகே என்றார். அவரிடமிருந்து விடை பெற்று நான் பயிற்சி வகுப்புக்கு போய் விட என் கசின் அவன் வேலையை பார்க்க போய் விட்டான். வகுப்பு பத்து மணிக்கு முடிந்ததும் மீண்டும் திண்டுக்கல் ரோடு வழியாக வராமல் மேல மாசி வீதி சென்று டவுன் ஹால் ரோடு உள்ளே நுழைந்து சென்ட்ரல் தியேட்டர் வாசலை அடைந்தேன். மணி 10.30யை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
அங்கே காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. சரியான கூட்டம். நான் செல்லும் போதே 45 p, 75 p, 85 p, Re 1.20 p வரை அனைத்தும் புல். வாசலுக்கு போய் சேர்ந்தவுடன் Re 1.80 p இடம் இல்லை என்ற போர்டு மாட்டப்படுகிறது. அதன் பின் ஒரு ஐந்து நிமிடந்தான். Rs 2.70 p இன்னும் எத்தனை டிக்கெட் பாக்கி இருக்கிறது என்று ரசிகர்கள் பேசிக் கொண்டிருந்தனர் வெளியே கூடி நின்ற ரசிகர்களிடமிருந்து சட்டென்று ஒரு பெருத்த ஆரவாரம் மற்றும் கைதட்டல்கள் காதை அடைக்க ஹவுஸ் புல் இடம் இல்லை என்ற போர்டு தியேட்டர் கேட்டில் மாட்டப்பட அந்த கணத்தில் அங்கே ஒரு புதிய சாதனை சரித்திரம் எழுதப்பட்டது. தொடர்ந்து 116-வது காட்சி அரங்கு நிறைந்து முந்தைய ரிகார்ட் முறியடிக்கப்பட்டது. 1000 வாலா 5000 வாலா சரங்கள் சரமாரியாக வெடித்துச் சிதற தியேட்டர் வாசலில் இருந்த விளக்கு கம்பத்தில் கட்டப்பட்டிருந்த தட்டியில் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் எத்தனை என்பதை தெரிவிக்கும் வண்ணம் ஒட்டபட்டிருந்த பேப்பர் ஷீட்டில் 116 என்ற எண்கள் பதிக்கப்பட்டன.
அன்று நடைபெற்ற அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்தது. மறு நாளும் அதற்கு அடுத்த நாளும் அரங்கு நிறைந்து தொடர் ஹவுஸ் புல் காட்சிகள் 125-ஐ கடந்தன. ஜூன் 13 செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்ற 129 காட்சிகளும் புல் ஆனது. 40-வது நாள் மாட்னி காட்சியில் தொடர் ஹவுஸ் புல் விட்டுப் போனது.
மதுரை மாநகரின் 83 வருட திரைப்பட வரலாற்றில் தான் நடித்த கருப்பு வெள்ளை படங்கள், ஒன்றல்ல இரண்டல்ல மூன்று கருப்பு வெள்ளைப் படங்கள் தொடர்ந்து 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைவது என்ற சாதனையை செய்துக் காட்டிய ஒரே நாயக நடிகன் நமது நடிகர் திலகம் மட்டுமே.
சாதனை என்றால் எந்தக் காலத்திலும் நிலைத்து நிற்பதுதான் சாதனை. மதுரை மாநகரை பொறுத்தவரை அன்றும் இன்றும் என்றும் யாராலும் முறியடிக்க முடியாத ஒரு டஜன் சாதனைகளுக்கு சொந்தக்காரர் நடிகர் திலகம். அவற்றைப் பற்றி ஏற்கனவே இந்த திரியில் பேசியிருக்கிறோம். அவற்றுள் ஒன்றுதான் இந்த கருப்பு வெள்ளைப் படங்களின் தொடர் ஹவுஸ் புல் சாதனைகள்.
பட்டிக்காடா பட்டணமா இப்படி வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருக்க அடுத்து வரப் போகும் படங்களின் ரிலீஸ் தேதி பற்றிய சர்ச்சைகளும் ஆரம்பித்தன.
(தொடரும்)
அன்புடன்
முரளி,
வார்த்தைகள் போதாது.உனக்கு இன்னும் நேரம் கிடைக்க கூடாதா?
ரவி கிரண்,
அசுர உழைப்பு. நன்றிகள் பல. ராகவேந்தர் சொன்ன படி வாசுவும்,பம்மலாரும் உன் ரூபத்தில் எங்களிடம் தினமும் வருகிறார்களே?
The Hindu - Tamil - 22-07-2014
http://tamil.thehindu.com/opinion/co...cle6236099.ece
சிவாஜி கணேசன்: கம்பீரத்தின் கடைசி அவதாரம்
21.07.2014 - சிவாஜி கணேசனின் 13-வது நினைவு நாள்
Fan comments (continued)......
Share:
yathavan nambi
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும்! இந்த பாடலின் வரிகள் நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கும் பொருந்தும். என்றென்றும் செவாலியே சிவாஜியின் புகழ் ஓங்குக! ஜெய் ஹிந்த்!(சிவாஜியின் சிம்மக் குரலில் ஒங்கி ஒலிக்கட்டும்!
about 9 hours ago · (0) · (0) · reply (0)
தங்க பதக்கம் படம் வெளி வந்த பிறகே போலீஸ் காரர்களுக்கு மிடுக்கு தனம் வந்திருக்க கூடும் .அவ்வளவு நேர்த்தியாக போலீஸ் அதிகாரியின் கம்பீரம் பளிச்சிடும் . கட்டபொம்முவின் வீரம் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் வெளிவந்த பிறகே இந்த மண்ணிற்கு தெரிய வந்தது கப்பலோட்டிய தமிழன் வஉசி அவர்களின் ஒப்பற்ற தியாகம்அவரை பார்த்தறியாத நமது கண்களில் நீரை வரவழைத்தது என்றால் அது நடிகர் திலகத்தின் ஈடுபாட்டுடன் கொண்டு வந்த திரைகாவியம் ஆகும் . அவர் மிகையாக நடித்தார் என்றால் அதற்கு அவரை இயக்கிய இயக்குனர்களில் மிகையான எதிர்பார்ப்புதான் காரணமே தவிர நடிகர் திலகம் அல்ல . சராசரி குடும்பஸ்தனுக்கு நாலு பேரை அடித்து வீழ்த்தும் பராக்கிரமும் இருக்குமா ? சிவாஜி நம் குடும்பங்களில் உள்ள உறவுகளின் பிரதியாக திரையில் தோன்றியவர் அவருக்கு சண்டை காட்சிகளில் பரிமளிக்க முடியாமல் போனது ஒன்றும் குறையில்லை தேவர்மகன் படத்தில் அவருக்கும் கமலுக்கு நடிப்பில் பெரும் போட்டியே நிகழும் . இரு கதாபாத்திரங்களும் சார்ந்து நின்றதால் யார் வெற்றி பெற்றார்கள் என்று தெரியாது அந்த கம்பீரம் கவுதமியிடம் காட்டும் எள்ளல் எல்லாம் மிகையா ?எதார்த்தத்தின் உச்சம
Points
375
about 11 hours ago · (1) · (0) · reply (0)
Suresh Kumar
சிவாஜியின் நடிப்புக்கு நவராத்திரி படம் ஒன்று போதும். டாக்டர் கதா பாத்திரம். என்ன ஒரு சாந்தம் முகத்தில்... சிவாஜியின் நடிப்பு எப்பொழுது பார்த்தாலும் வியக்கவைக்கின்றன..
about 12 hours ago · (0) · (0) · reply (0)
senthilvel
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தன ரசிகர்களுக்கு விட்டுச்சென்ற சொத்து காலம் தவறாமை, தொழில் பக்தி, தமிழ் உச்சரிப்பின் சரியான விதம் ..... எல்லாவற்றையும் விட ஒப்பாரும் மிக்காருமில்லாத தன் உன்னத நடிப்பில் உருவான காலத்தையும் வென்று நின்று இன்றும் திரையரங்குகளை நோக்கி மக்களை ஈர்க்கும் மந்திரகாந்தன் !
about 12 hours ago · (0) · (0) · reply (0)
சிவாஜி ரசிகன்
நடிப்பு என்பதே மிகைதான்..அதில் மிகை நடிப்பு என்றெல்லாம் ஒன்னும் இல்லை.சுத்தி இருக்கறவங்க (மற்ற கதாபாத்திரங்கள்) அந்த சிங்கத்துக்கு இணையா நடிக்க முடியாததுனால ,அவரோடது வேணும்னா கொஞ்சம் மிகையா தெரியலாம்..சிவாஜி,கட்டபொம்மன்,தங்க பதக்கம்,கௌரவம் அந்த கம்பீர நடை,நெருப்பு தெறிக்கும் வசனங்கள் இன்னைக்கு வரைக்கும் யாரும் அத செய்ய முடியல.இனிமே செய்வாங்கன்னும் தோணல..அதிசய நடிகன் சிம்ம குரலோன் சிவாஜி கணேசன்..
about 12 hours ago · (3) · (0) · reply (0)
G.Kasinathan Govindharaj
வியட்நாம் வீடு கௌரவம் போன்ற படங்களில் அவரது நடிப்பை பார்த்து மலைத்து என்னை மறந்தது போனது உண்டு
Points
250
about 14 hours ago · (0) · (0) · reply (0)
நடிகர்திலகம் சிவாஜி
சிறப்பான, நடுநிலையான கட்டுரை. மறைந்து 13 ஆண்டுகளாகிறது. 13 ஆண்டுகள் அல்ல 13 நூறாண்டுகள் ஆனாலும், சினிமா என்ற சொல் அகராதியில் இருக்கும்வரை நடிகர்திலகத்தின் புகழ் இப்புவியில் உலாவந்துகொண்டுதான் இருக்கும்.
about 15 hours ago · (2) · (0) · reply (0)
Sri G.
நடிப்பின் இலக்கணம்..பாத்திரமாகவே மாறும் இயல்பு. மிகை நடிப்பு என்று சொல்வார்கள் ஆனால் அது மிக அழுத்தம் என்று வேண்டுமானால் சொல்லலாம். நடிப்புலகின் பிதாமகன். அஸ்தமனம் இல்லா ஆதவன். சிலையாகிப்போன சிற்பி. கனவு தொழிற்சாலை இருக்கும் மட்டும் இருக்கும் கனவு. ஒளியில்லாது அவர் உதடுகளை வைத்தே உச்சரிப்பை சொல்லிவிடலாம். எத்தனையோ பேர் வந்தாலும் அத்துணை பேரும் அவர் கீழ்தான்..
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)
6. "நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு"; படம்:- நெஞ்சிருக்கும் வரை (1967); இயக்கம்:- சி.வி.ஸ்ரீதர்
இன்னமும் கூட, பல கலைஞர்கள், சினிமாவில், பாடல் காட்சிகளில், எப்போதெல்லாம் வேகமும் ஒரு சில மூவ்மெண்டுகளும் தேவையோ, அப்போதெல்லாம் நடனமாட வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாறாக, சினிமாவில், பாடல்களில் பெரும்பாலும் தேவைப் படுவது, நடனம் அல்ல, மூவ்மெண்டுகளுடன் கூடிய சில பல அபிநயங்கள் தான் என்று தெரிவதில்லை. அவர்கள் எல்லோரும் இந்தப் பாடலை ஒரு முறை பார்த்தால் போதும்.
மூன்று படித்த இளைஞர்கள், வேலை தேடித் தேடி அலுத்துப் போனாலும், தன்னம்பிக்கையை வரவழைக்க, தங்கள் கண் முன் அப்போது இருக்கும் சூழலை ரசித்து, அனுபவித்து, தன்னம்பிக்கையோடு பாடுவதாக வரும் பாடல்.
பாடலின் துவக்கத்தில் வரும் இசையே ஒரு வித உற்சாகத்தை அளிக்க, நடிகர் திலகம், முத்துராமன் மற்றும் வி.கோபாலகிருஷ்ணன் மூவரும், பாடலைத் துவக்குகின்றனர்.
இந்தப்பாடலைக் கேட்டாலே, பாடல் துவங்கி முடியும் வரையிலும், ஒரு வித சரளமும், வேகமும், உற்சாகமும் இருப்பதை உணரலாம். பார்த்தால், இவை பல மடங்கு
விருத்தியாவதைக் கண்டு பிரமிக்கலாம். இதற்கு முழு காரணம் நடிகர் திலகம் மட்டுமே.
பாடல் முழுவதிலும், அவர் காட்டியிருந்த சரளமும், நளினமும், கௌரவத்துடன் கூடிய அழகும்/மெருகும், வேகமும், வெவ்வேறு நடைகளும், ஒவ்வொரு முறையும், வேறு வேறு பாவனைகளையும், இலேசான மூவ்மெண்டுகளையும் மாற்றி மாற்றிக் காண்பித்தும் நடித்த விதம், படம் பார்த்து பல வருடங்கள் ஆனாலும், நெஞ்சில் பசு மரத்தாணி போல் நிரந்தரமாகத் தங்கி விட்டது (அதன் பின்னர் பல முறை பார்த்தாகி விட்டது என்பது வேறு விஷயம்!).
இந்தப் பாடலின் துவக்கத்தில் வரும் இசையிலிருந்தே, நடிகர் திலகத்தின் இராஜாங்கம் துவங்கி விடும். நடிகர் திலகத்தின் ஒரு பக்கத்தில் முத்துராமனும், மறு பக்கத்தில் வி. கோபாலகிருஷ்ணனும் கூடவே வர, துவக்கத்திலிருந்தே, மிக மிக நளினமாக மெதுவாகத் துவங்குவார். முதலில், துவக்க இசைக்கேற்ற நளினமான நடை - இப்போது, விசிலடித்துக் கொண்டே, கைகளையும் கால்களையும் ஆங்கில பாணியில் அபிநயித்துக் கொண்டே செல்வார்... மெல்ல மெல்ல மூவ்மெண்ட் வேகமெடுக்கும் - ஆனால் ஒரு அளவோடு. இப்போது, நேர் போஸில் மற்ற இருவரோடும் அவர் வர, பல்லவி துவங்கும். "நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு" எனும்போது, இரண்டு கைகளையும் ஒரு மாதிரி லூசாக வைத்துக் கொண்டே, வலது கையால் சொடக்குப் போட்டுக்கொண்டே, இடது கையை லூசாக வைத்துக் கொண்டே, நடை. "வாழ்ந்தே தீருவோம்" எனும்போது, ஒரு வித இலேசான திமிருடனும் நம்பிக்கையுடனும், வலது கையை உயர்த்தி இந்த வார்த்தைகளுக்கேற்ற பாவம். இப்போது, பல்லவியை மறுபடியும், முத்துராமனையும் கோபியையும் நோக்கித் திரும்பி பாடும் போது வேறு விதமான நடை, மற்றும் பாவம், இப்போது "நாளை என்ற நாளிருக்கு" எனும்போது, இரண்டு கைகளையும் கீழே வைத்து "எப்படி வாழாமல் போவோம்" எனும் விதத்தில் வெளிப்படுத்தி, "வாழ்ந்தே தீருவோம்" எனும் போது, வலது கையை, பெரிய நம்பிக்கையுடன் உயர்த்தி இரண்டு பேரையும் நோக்கிச் சொல்வார். "எங்கே கால் போகும் போக விடு" என்று மற்ற இருவரும் சொன்னவுடன், இடது கையை உயற்றி “முடிவைப் பார்த்து விடு” என்று பாடி, திரும்பவும், "எங்கே கால் போகும் போக விடு" எனும் போது, இப்போது சைட் போஸில், வலது கையை உயர்த்தி சொல்லும் ஸ்டைல்; “காலம் ஒரு நாள் கை கொடுக்கும்”, என்று கூறி, "அது வரை பொருத்து விடு" என்று இப்போது, இரண்டு கைகளால், லூசாக, பொருத்தமாக, அந்த "பொறுத்து விடு"வைச் சொல்வார். இது எல்லாமும், ஒரு இடத்தில் கூட டெம்போ தொய்ந்து விடாமல், ஒன்று நடந்து கொண்டோ, அல்லது இலேசாக அபிநயித்துக் கொண்டோ, இல்லை, ஆங்கில பாணியில் நடனமாடிக் கொண்டோ தான் செய்து கொண்டே இருப்பார். அத்தனை சரளமாக! அனு பல்லவி முடியும் போது, "லா லா ... யா ய யா யா" என்று மூன்று பேரும் ஹம் செய்யும் போது, இவருடைய பாவனையைக் கவனியுங்கள்!
இப்போது வரும் ஒரு துள்ளல் இசைக்கு, அப்படியே, பின்னோக்கி ஆங்கில ட்விஸ்ட் நடன பாணியில் நடனமாடிக் கொண்டே செல்லும் போது, ஆரவாரத்தில் தியேட்டர் கிழிந்தது.
முதல் சரணம் துவங்குவதற்கு முன் வரும் இசைக்கேற்றபடி (filler music) , இந்தப் பாடல் துவங்கிய டெம்போ குறையாமல், நடிகர் திலகம் நடந்து கொண்டோ, இலேசான அபிநயத்துடன் கூடிய நடனத்துடனோ, மற்ற இருவருடனும் கைகளைக் கோர்த்துக் கொண்டோ, வலது கையால் சொடக்குப் போட்டபடியேவோ, அல்லது இடது கையோடு சேர்ந்து, கால்களின் துணையோடு, அற்புதமான நளினத்துடன் நடந்து கொண்டோ, நடனமாடிக் கொண்டோ வருவார்.
முதல் சரணம் - "இருந்தால் தானே செலவு செய்ய" இப்போது "கைல என்ன இருக்கு செலவு செய்ய" என்பதை நளினத்துடன் செய்து காண்பிப்பார். "எடுத்தால் தானே மறைத்து வைக்க" எனும் போது கைகளில் அதற்கேற்ற அபிநயம் இருக்கும். திரும்பவும் அதே வரிகள் - பாருங்கள் - வேறு மாதிரியான அபிநயம் மற்றும் பாவனை - ஆனாலும், அந்தக் கருத்துகேற்பத்தானிருக்கும்! "கொடுத்தால் தானே வாங்கிச் செல்ல தடுத்தால் தானே விழித்துக் கொள்ள" என்று இரண்டு முறை சொல்லும் போதும், வலது கையை உயர்த்தி இரண்டு முறையும் இரண்டு விதமாகச் சொல்லும் விதம்! இப்போது, கேமரா டாப் ஆங்கிளில் இருக்கும்!!
"எங்கே கால் போகும் போக விடு முடிவைப் பார்த்து விடு; காலம் ஒரு நாள் கை கொடுக்கும் அது வரை பொறுத்து விடு" எனும் போது, நடனமாடாமல், இப்போது வேகமாக நடக்கத் துவங்கி விடுவார் - அதுவும் படு ஸ்டைலாக. இப்போது முதலில் வந்த ஹம்மிங் மறுபடியும் "லா லா ... யா ய யா யா" - முதல் சரணத்துக்கு முன், இதே ஹம்மிங்கிற்கு ஆங்கில பாணியில் அபிநயித்து இலேசாக நடனமாடியவர், இப்போது அதே ஹம்மிங்குக்கு, ஒரு மாதிரி ஸ்டைலாக நடந்து கொண்டே வருவார் - மற்ற இருவர் மட்டும் ஹம் பண்ணுவார்கள். ஏனென்றால், இந்த ஹம்மிங்குக்கு முன் தான் வேகமாகப் பாடிக் கொண்டே நடந்து வருவார். இந்த ஹம்மிங் உடனே வருவதால், அந்த நடையின் வேகத்தைச் சிறிதே குறைத்து, மற்ற இருவரையும் ஹம் செய்ய விட்டு, நடு நாயகமாக, அனாயாசமாக நடந்து வருவார். மீண்டும், பல்லவி "நெஞ்சிருக்கும் எங்களுக்கு..." என்று துவங்கும் போது, அந்த வேகமான நடையுடன் கூடிய அபிநயத்துக்கு வந்து விடுவார். ஆங்கிலத்தில், 'follow through' என்று சொல்வார்கள். இதை நடிகர் திலகத்தைப் போல், பூரணமாகச் செய்து காட்டியவர் இன்று வரை ஒருவரும் இல்லை; இனி ஒருவர் பிறக்கப் போவதும் இல்லை!
திரும்பவும், இப்போது, இரண்டாவது சரணத்திற்கு முன் வரும் துள்ளல் இசைக்கு ஏற்ற படி, கைகளையும் கால்களையும் ஒரு வித தாள கதியுடன் மற்ற இரண்டு பேர்களின் கைகளைக் கோர்த்துக் கொண்டு ஆங்கில பாணியில் நடனமாடிக் கொண்டே வருவார்.
இப்போது இரண்டாவது சரணம் - "துணிந்தால் தானே எதுவும் முடிய தொடர்ந்தால் தானே பாதை தெரிய" எனும் போது, மறுபடியும் இரண்டு கைகளையும் லூசாக, ஆனால், இப்போது வேறு மாதிரி அபிநயித்துக் கொண்டே வருவார். "சிரித்தால் தானே கவலை மறைய" என்று முதல் முறை சொல்லும் போது, வலது கையை உயர்த்தி சொல்லும் போது, அவர் முகத்தில் தோன்றும் அந்த பாவம் - சிலிர்க்க வைக்கும்! (மனுஷன் எல்லா போஸ்களிலும் அழகாக இருந்தாலும், அந்த சைட் போஸ் மட்டும் - அடிச்சுக்க முடியாது!). மீண்டும் மறு முறை இதேயே சொல்லும் போது "இரண்டு கைகளையும் மேலே தூக்கி "எங்க சிரிக்கறோம்" எனும் போர்வையில் (ஆங்கிலத்தில் wry ஸ்மைல் என்பார்கள் அது போல் - ஒரு வித வறண்ட புன்னகை) அபிநயிப்பார்.
கடைசியில், "நெஞ்சிருக்கும் எங்களுக்கு" என்று மீண்டும் பல்லவி துவங்கும் போது மூவரும், அங்கிருக்கும் வட்ட வடிவ நீரூற்றின் மேலே ஏறி பாடிக் கொண்டே போய் (இதற்குப் பக்கத்தில் தானே நீ இன்று சிலையாய் இருக்கிறாய் கலைக் கடவுளே!), கீழே இறங்கி அந்த வேகத்தை மெல்ல மெல்ல குறைத்து, "லா ல லா லா" என்று ஹம் செய்த படியே முடிக்கும் போது, அடடா, இவ்வளவு சீக்கிரத்தில் பாடல் முடிந்து விட்டதே என்று தோன்றும்!
பாடல் எழுதிய கவிஞர் வாலியின் நோக்கத்தைப் புரிந்து, இப்படித் தான் எடுக்க வேண்டும் என்று நினைத்த இயக்குனர், நடன இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோரின் இதயத்திற்குள் நுழைந்து, அருமையாக இசையமைத்த மெல்லிசை மன்னர் மற்றும் அற்புதமாகப் பாடிய டி.எம்.எஸ்ஸின் வித்தைக்குத் தலை வணங்கி, இந்தப் பாடலை மறக்க முடியாத பாடலாக்கிய பெருமை, நடிகர் திலகம் ஒருவருக்கு மட்டுமே சேரும்.
இத்தனைக்கும் இந்தப் பாடல், சுட்டெரிக்கும் வெய்யிலில் மெரீனா கடற்கரைச் சாலையில் படமாக்கப் பட்டது. எனக்குத் தெரிந்து, இந்தப் பாடலை ஒரே நாளில் எடுத்து விட்டார்கள். என்ன, கூட நடித்தவர்கள் இவர் அளவிற்கு இயைந்து நடிப்பதற்கு நேரம் பிடித்திருக்கும் என்பதால், நிறைய டேக்குகள் போயிருக்கும். இருப்பினும், காலில் செருப்பில்லாமல் நடித்திருப்பார்கள், நடிகர் திலகம் உட்பட!
நினைவு தெரிந்து இந்தப் படத்தை முதலில் ஒரு டூரிங் டாக்கீஸில் ஒரு வார நாளில் - அதுவும் - மதியக் காட்சியில் - பார்த்த போது (அரங்கம் நிரம்பி வழிந்து, ப்ளாக்கில் டிக்கெட் வாங்க வேண்டியதாகி விட்டது!), இந்தப் பாடலில், நடிகர் திலகம் ஒட்டு மொத்த மக்களையும் ஆர்ப்பரிக்க வைத்தது பசுமையாக நினைவில் உள்ளது - நிறைய பேர் ஆபரேட்டரிடம் சென்று, "ஒன்ஸ் மோர்" கேட்டு, மறுபடியும், இந்தப் பாடல் போடப் பட்டது - இதெல்லாம், வேறு எந்த நடிகருக்கும் சாத்தியமா?
நடிகர் திலகத்திடம் இந்தப் பாடல் நெடுகக் கொப்பளிக்கும் குதூகலம், நளினம், நம்பிக்கை, இவை அத்தனைக்கும் மூல காரணங்களான அவரது அசாத்திய, அபாரமான கற்பனை வளம் மற்றும் அர்பணிப்புக்கு முன் கலை வாணியே மயங்கித் தான் தீர வேண்டும் எனும் போது, பார்க்கும் கேவலம் மனித ஜென்மங்களாகிய நாம் என்ன செய்ய முடியும்? அவரைப் பார்த்து வாய் பிளந்து பிரமிப்பதைத் தவிர!
தொடரும்,
இரா. பார்த்தசாரதி
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)
3. "சுந்தரி சௌந்தரி"; படம்:- தூக்குத் தூக்கி (1954); இயக்கம்:- r.m. கிருஷ்ணஸ்வாமி
இந்தக் கட்டுரையில் நான் எடுத்துக் கொள்ளும் பாடல்கள் அனைத்தும் - ஒன்று தமிழ் சினிமாவில், முதல் முறையாகக் கையாளப்பட்டவை; இல்லை, மரபை உடைத்தவை. இப்படியும் ஒரு விஷயத்தைக் கையாளலாம்; சொல்லலாம்; அதன் மூலம் சொல்ல வந்த விஷயத்தை, ஆணித்தரமாக மக்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்கிற கலை தாகத்தை உள்ளடக்கிய பாடல்கள்.
இந்தப் படத்தின் கதாநாயகன் சுந்தராங்கதன் (நடிகர் திலகம்) , ஒரு நாட்டின் மூன்று இளவரசர்களில் ஒருவன்; ஒரு விசித்திரமான ஆய்வுக்காக நெடிய சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போது சந்தர்ப்ப வசத்தால், மனைவியாலேயே, சிரச்சேத தண்டனையை அடைந்து, தப்பி விடுகிறான். மற்றவர் கண்ணில் இருந்து தப்புவதற்காக, ஒரு விதமான கோமாளி (சொன்னதைத் திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளை போல) வேடம் தாங்கி, வேறொரு நாட்டிற்கு வந்து, அந்த நாட்டிலுள்ள ஒரு கோவிலில், அந்த நாட்டைச் சேர்ந்த இளவரசி மற்றும் அவரது தோழி (மந்திரி மகள்) (பத்மினி-ராகினி) நுழையும் போது கூடவே நுழைந்து விடுவார்.
இந்தப் பாடலில் குறிப்பிடத்தக்க அம்சங்களில் முதன்மையானது, நடிகர் திலகத்தின் ஒப்பனை மற்றும் நகைச்சுவை உணர்வு கலந்த நடிப்பு. இதற்கு சற்று முன்னர் தான், நடிகர் திலகம் அந்தக் கோமாளி வேடத்துடன் அறிமுகமாவார். அதுவும், "பெண்களை நம்பாதே" பாடலோடு. ஆக, அப்போது தான் ஒரு பாடல் முடிந்திருக்கும்; பாடல் முடிந்த கையோடு மற்றொரு பாடல். இருப்பினும், நடிகர் திலகத்தின் அற்புதமான, டைமிங் கலந்த நகைச்சுவை நடிப்பினாலும், பத்மினி-ராகினி நடிப்பாலும், பாடலின் இனிமையாலும், சலிப்பே ஏற்படாது. அரங்கமே சிரிப்பலையில் மூழ்கும்.
பாடல் துவங்கிய சில நேரத்தில், காவலாளி (என்னத்தே கன்னையா - வரும் ஆனா வராது என்பவர்) துரத்தத் துரத்த கோவிலினுள் நுழைபவர், "சூலி எனும் உமையே குமரியே" என்று பத்மினியும் ராகினியும் பாடியவுடன், "குமரியே சூலி எனும் உமையே" என்று தொடர்ந்து பாட ஆரம்பிப்பார்.
முதல் சரணத்தில், "அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே" என்று அவர்கள் சொன்னவுடன், தானும் அதையே திரும்பச் சொன்னவுடன், சகோதரிகள் இவரை நீயே பாடு என்று சைகை செய்தவுடன், இவரும் "நீயே பாடு" என்று அதையும் திரும்பச் செய்வார். இந்த இடத்தில், ஒட்டு மொத்த அரங்கமும் அதிர்ந்தது இன்னமும் என் காதில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது. சரணம் முடியும்போது, "மாயே" என்று அவர்கள் நீண்டதொரு ஆலாபனை செய்தவுடன், இவரும் அதை அப்படியே திரும்பச் சொல்லும் விதம் குபீர் சிரிப்பை வரவழைக்கும்.
இரண்டாவது சரணத்தில், "தீரமும் வீரமும் சீரும் செல்வமும்" என்று சகோதரிகள் பாடியதும், இவர் தீரமும் வீரமும் என்று சொல்லும்போது ஒவ்வொரு முறையும், வாயைக் கோணிக் கொள்வது மறுபடியும் குபீர் சிரிப்பை வரவழைக்கும். பத்மினியும் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்துத் தொடருவார்.
பாடல் அப்படியே தொடர்ந்து முடிந்து, சகோதரிகள் இருவரும் கோவிலை விட்டு வெளியில் சென்றவுடன் தான், நடிகர் திலகம் அதை கவனிப்பார். உடனே, பின்னாலேயே தொடர்வார்.
இந்தப் பாடல் நடிகர் திலகத்தின் அத்தனை சேட்டைகளையும் தாங்கியிருந்தாலும், அந்தப் பாடலில் தொனிக்கும் ஒரு விதமான தெய்வீகத் தன்மை பார்க்கும் போதும், அழியாமல் இருக்கும். அதுதான் இந்தப் பாடலின் தனிச்சிறப்பு. அதாவது, நடிகர் திலகத்தின் தனித்தன்மையான நடிப்பால் அமைந்த தனிச்சிறப்பு. தன்னுடைய பங்களிப்பு, ஒரு காட்சியையோ, பாடலையோ, படத்தையோ, மேலும் நிமிரச் செய்யுமே தவிர, அதன் தரத்தை எள்ளளவும் குறைக்காது.
இதே படத்தில், மேலும், பல பாடல்கள் வித்தியாசமாக அமைந்திருக்கும் - குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன், அபாய அறிவிப்பு, ஏறாத மலைதனிலே (இது தான் அத்தனை பாடல்களிலும் மிகவும் புகழ் பெற்ற பாடல்). இருப்பினும், இந்தப் பாடலை நான் தேர்ந்தேடுத்ததற்க்குக் காரணம், பாடல் மரபை மீறி எடுக்கப் பட்ட பாடல் - அதாவது நடிப்பின் மூலம் - இருப்பினும், பாடலின் தெய்வீகத் தன்மை குறையாமல் இருந்தது.
தொடரும்,
இரா. பார்த்தசாரதி
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)
4. பனி படர்ந்த மலையின் மேலே; படம்:- இரத்தத்திலகம் (1963); இயக்கம்:- தாதா மிராசி
மறுபடியும் சொல்கிறேன். இந்தக் கட்டுரையில் இடம் பெறும் பாடல்கள் மிகவும் வித்தியாசமாக சிந்திக்கப்பட்டு எடுக்கப் பட்ட பாடல்கள். வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்றால் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 40 வருடங்கள், தமிழ் சினிமாவின் முக்கிய கதாசிரியர்களும் இயக்குனர்களும், ஏன் தயாரிப்பாளர்களும், நடிகர் திலகத்தின் மேல் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையால், அவற்றை செயலாக்கினார்கள். அவர்கள் நினைத்ததை அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு மேல் இவரால் வடிக்க முடிந்தது; அதை வைத்து அவர்களால் காசு பண்ணவும் முடிந்தது.
இரத்தத் திலகத்தில் இடம் பெறும் இந்தப் பாடலின் சூழலே அருமையாகவும், அமைதியாகவும், அலாதியாகவும் இருக்கும். போர்க்களத்தில், ஒரு இரவு நேரத்தில் ஒரு போர்த் தளபதியின் (கேப்டன் - நடிகர் திலகம்) கூடாரத்தின் வெளியே, அவனுடைய குழுவினர் உட்கார்ந்து கொண்டிருக்க, அந்த கூடாரத்தினுள்ளிருந்து வெளியே வரும் அந்த கேப்டன் பாடுவதாய் - அதாவது தன் தாய்த் திருநாட்டையும், பாரதத் தாயையும் நினைத்துப் பாடுவதாய் வரும் பாடல்.
பாடல் துவங்கும் போது, கூடாரத்திலிருந்து பேண்ட் பாக்கெட்டில் இரு கைகளையும் நுழைத்தவாறே நடிகர் திலகம் ஸ்டைலாக அதே சமயம் ஒரு வித அமைதியான மன நிலையோடு வெளிப்படும் விதமே, அந்தப் பாடல் எத்தகையது என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டி விடும். இதை எழுதும்போதே புல்லரிக்கிறதே, பார்த்தால்?
பாடல் நெடுகிலும், அவரது க்ளோசப்பில் அதற்கேற்ற முக பாவங்களுடன் பாடுவதாயும், பின்னணியில் அவர் பாரதத் தாயைப் பார்த்து சொல்வதாயும் வரும்.
இந்தப் பாடல் மிகவும் வித்தியாசமான டியூனில் வரும், திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களது மகத்தான இசையமைப்பில். கவியரசரின் பாடல் வரிகளில் கல் நெஞ்சையும் கரைத்து விடும். நீண்ட பாடல்.
முதல் சரணம் - "குனிந்து நின்ற முகத்தைப் பார்த்தேன்" என்று துவங்கும் போது நடிகர் திலகத்தின் முகத்தினின்று வெளிப்படும் கனிவு ... "கண்ணீரின் சின்னம் பார்த்தேன்" என்று முடியும் போது இலேசான சோகத்துடன் முடியும்.
இப்போது முதல் தொகையறா "கலங்கினேன்...துடித்தேன்..." அவரது நாடி நரம்புகள் வெறும் முகத்தால் மட்டுமே துடிக்கும் ... நாமும் தான். சோகம் மேலிட "கானகமும் கலங்குதம்மா" என்று கூறி "காரணத்தைச் சொன்னால் காளை நான் உதவி செய்வேன்" எனும் போது காட்டும் துடிப்பு; "ஊர்வலமாய் உன்னை உடனழைத்து நான் வருவேன்" எனும் போது காட்டும் உணர்வு... அப்படியே மெல்லக் கனிந்து "சொல்லம்மா சொல் என்றேன் தூய மகள் தலை நிமிர்ந்தாள்" எனும்போது அமைதி கலந்த உற்சாகம்.
இரண்டாவது சரணம் - "அமைதி தேடி உருகி நின்றேன்....... இமயம் முதல் குமரி வரை என் இதயத்தையே திறந்து வைத்தேன்" எனும் போது வெளிப்படுத்தும் நம்பிக்கை... அபாரம்.
இப்போது இரண்டாவது தொகையறா. இதுதான் பாடலின் முக்கிய அம்சம். அப்போது, சீன தேசத்திலிருந்து நட்புறவோடு இந்தியா வந்து, நயவஞ்சகமாக, இந்தியாவுடன் போர் புரிந்த சீனத் தலைவரைப் பற்றிப் பாடுவதாக வரும். ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் உள்ளக் குமுறலையும் சத்தம் போட்டு இயம்பும். "உண்டு பசியாற உலகம் வரட்டும் என்று......" அவரது அகன்ற, பெரிய ஒளி வீசும் கண்களை கவனியுங்கள்..."பசியாற ஓடி வந்த பத்து பேர் மத்தியிலே பகையாற ஒருவன் வந்த பாவத்தை என்ன சொல்வேன்!" எனும் போது வெளிப்படுத்தும் சோகம் கலந்த குமுறல்! "யாரை அடித்தேன்? யார் குடியை நான் கெடுத்தேன்?" என்று வெடித்து கடைசியில், அமைதியாக, "அன்னை உரைத்த மொழி அத்தனையும் கேட்டிருந்தேன்" என்று நிறுத்தி, "பின்னர் மனதில் பெறும் துணிவு மோதி வர" என்று நிமிர்ந்து எழுந்து "வீரம் உண்டு தோள்கள் உண்டு..." என்று உற்சாகமடைந்து நம்பிக்கையுடன் "தர்மம் மிக்க தலைவன் உண்டு" என்று முடிப்பார்.
இப்பொழுது கடைசி தொகையறா. "அன்பு நிறைந்த மகன் அருள் நிறைந்த கருணை மகன் பண்பு நிறைந்த மகன் பழ நாட்டின் மூத்த மகன்" - என்ன ஒரு கனிவு அந்த முகத்தில் என்ன ஒரு நம்பிக்கை அந்தக் கண்களில் - பண்டித நேருவைக் குறித்து தான் சொல்வார் - "இருக்கின்றான் தாயே ஏங்காதே என்றுரைப்பேன்" என்று கூறி "அன்னை சிரித்தாள் அடடா... ஒ! அச்சிரிப்பில் முன்னைத் தமிழ் மணமே முளைத்தெழுந்து நின்றதம்மா" என்று கூறி "என்னை மறைந்தேன் இரவுலகில் சேர்ந்து விட்டேன்" என்று மெதுவாகக் கூறி "கண்ணை மெல்ல மறைத்து ......" என்று ஒருவாறு இனிமையாக டி.எம்.எஸ். இழுத்து அற்புதமாகப் பாடியதர்க்கேற்றாற்போல் இவரும் அற்புதமாக முடித்து மறுபடியும் பல்லவியைப் பாடி முடிக்கும் போது, அவர் மட்டுமல்ல, பார்க்கும் ஒவ்வொரும் தங்களை மறந்து நடிகர் திலகத்துடன் ஒன்றி விடுவார்கள்.
தேசப் பற்று, தேசியம் என்று வரும் போது, நடிகர் திலகம் தொட்ட அளவுக்கு வேறு ஒரு கலைஞரும் இந்த உலகத்தில் அந்த விஸ்தீரணத்தை தொட்டதில்லை. இந்தப் பாடலும் அந்த வகையில் அற்புதமான ஒரு பாடல். அதற்கு உயிர் கொடுத்த அந்த யுகக் கலைஞனை எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் மறக்க முடியுமா?
தொடரும்,
இரா. பார்த்தசாரதி
படிக்கும் போது புல்லரிக்குது
https://www.facebook.com/notes/10150321884983462/
நடிகர் திலகம்
1 அக்டோபர் 2011 இல் 04:00 PM
மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
(அவருடைய அனுபவங்களின் தொகுப்பிலிருந்து)
தமிழில் : ஸ்ரீபதி பத்மநாபா