http://i65.tinypic.com/szzguc.jpg
Printable View
நடிகர்திலகத்தை வைத்து படமெடுத்த 90% சதவிகித தயாரிப்பாளர்கள் முதல் வெளியீட்டிலேயே லாபம் கண்டு அவரை திரும்ப திரும்ப வைத்து படமெடுத்தவர்கள்.இது நடிகர்திலகத்தின் வெற்றி விகிதம்,ஒரு முறை எடுத்தவர்கள் திரும்ப திரும்ப எத்தனை முறை எடுத்தனர் என்ற கணக்கை போட்டாலே தெரியும்.(உ.ம் -பக்ஷிராஜா,வேலுமணி,பீ.எஸ்.வீரப்பா,பந்துலு,ஏ.பீ .நாகர ாஜன்,ஸ்ரீதர்,ஜெமினி,ஏ.வீ.எம்,பாலாஜி, முக்தா,ஏ.சி.டி,பீ.மாதவன் என்று பெரும் படை ,பல படங்கள்)
ஆடி பாடி கதிரறுப்பார் ஆனந்தத்தோடு. ஆனால் அறுத்த கருது போற இடம் வேறொரு வீடு என்பது போலத்தான் மறு வெளியீடுகள்.தயாரிப்பாளர் துண்டை காணோம் துணியை காணோம் என்று போன பிறகு ,மற்றவர் அடிமாடு விலையில் வாங்கி நடத்தும் முறையில்லா வியாபாரம். எதற்கும் புள்ளி விவரமோ,நிரூபணமோ செய்ய முடியாத வெற்று கூச்சல்களே.
நடிகர்திலகம் படங்கள் மட்டுமே போட்டிக்காக இல்லாமல்,இயல்பாக பொது மக்கள் பார்த்து ஓடிய படங்கள். அவருக்கு அரசியல் சார்ந்த உதவிகளோ, கைகாசு போட்டு படத்தை ஓட வைக்க வேண்டிய அவசியமோ அல்லது அதை மாதிரி செய்து அவரை தூக்கி பிடிக்க பார்க்கும் போலி ரசிகர் படைகளோ இருந்ததில்லை. இதை பெருமையாகவே கூறி கொள்ளலாம்.
இப்போதுதான் தெள்ளதெளிவாக முரளி சார் மறு வெளியீட்டு சாதனைகளையும் உரைத்து, யார் வசூல் சக்ரவர்த்தி என்று நிருபித்து விட்டாரே?
மறு வெளியீடுகளிலும் புதிய பறவைக்கும்,சிவந்த மண்ணுக்கும், பராசக்திக்கும்,கட்டபொம்மனுக்கும்,வசந்த மாளிகைக்கும் சென்னையில் நான் மாணவனாக இருந்த போது (1976-1984) யார் படத்திற்கும் எந்த காலத்திலும் கண்டதேயில்லை. புதிய பறவை பைலட் திரையரங்கில் 1977 வாக்கில் மறு வெளியீடு கண்டு ,கிட்டத்தட்ட சென்னை நகரை நான்கு வருடங்கள் தொடர்ந்து, பல திரையரங்குகள் கண்டு ஆண்டது வரலாறு.
திரண்ட மக்கள்தலைவரின் இதயங்கள், மிரண்ட மதுரை சென்ட்ரல் தியேட்டர்.
கடந்த 11.03.2016 வெள்ளியன்று மதுரை சென்ட்ரல் திரையரங்கில் மக்கள்தலைவரின் காலத்தால் அழியாத மாபெரும் காதல் காவியம் வசந்தமாளிகை திரைப்படம் திரையிடப்பட்டது.
நாம் ஏற்கனவே கூறியது போல் மக்கள்தலைவரின் படங்களை திரையிட பல விநியோகஸ்தர்கள் சென்ட்ரல் தியேட்டர் நிர்வாகத்திடம் தேதி கேட்டுள்ளனர். அதில் கலைமதி சார்பில் வசந்தமாளிகை திரையிட தியேட்டர் நிர்வாகம் அனுமதியளித்தது. பட விளம்பரத்திற்கு போதுமான சுவரொட்டிகள் இல்லை என்பதனால் இருக்கின்ற சுவரொட்டிகளை வைத்து படத்தை திரையிட போவதாக தகவல் வந்தது. உடன் தியேட்டர் நி்ர்வாகத்திடம் முறையிடப்பட்டது, சரியாக விளம்பரம் செய்யாமல் படத்தை திரையிட்டு கூட்டம் வரவில்லையென்றால் சிவாஜி படம் சரியாக போகவில்லை என்றால், ரசிகர்களாகிய எங்களது உழைப்பு வீணாகிப் போகும். எனவே, எல்லா படத்திற்கும் செய்வது போல் விளம்பரம் செய்யாவிட்டால் நாங்கள் எப்படி ரசிகர்களிடம் எடுத்துச் செல்வது என்று கூறினோம். தியேட்டர் நிர்வாகம் உடனே தலையிட்டு விநியோகஸ்தரிடம் நன்றாக விளம்பரம் செய்யவேண்டும் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள், எனவே நன்றாக விளம்பரம் செய்யுங்கள் என்று கூறினார். மறுநாள் நானும் (சுந்தராஜன், பிரபு வெங்கடேஷ், பழனிச்சாமி, பச்சைமணி, பாண்டி, ராஜன் ஆகியோர் விநியோகஸ்தரை சந்தித்து பேசினோம். ஆனால், அதற்கு முன்னதாக இரவோடு இரவாக புதிய சுவரொட்டிகள் தயாராகி அதிகாலை வந்து விட்டது என விநியோகஸ்தர் எங்களிடம் காட்டினார். மேலும் தியேட்டர் நுழைவு வாயிலில் வைக்கும் பேனர் ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு அலங்கார் தியேட்டரில் வைத்தது அந்த பேனரை இங்கு வைப்பதாக கூறுகிறார்கள் அதன் அளவு வேறு சென்ட்ரல் தியேட்டர் அளவு வேறு என்று கூறியதும், வேறு புதிய பேனர் வைத்து விடுகிறோம் என்று கூறினார்.
ஆண்டாணடு காலமாக சிவாஜி படமென்றால் விநியோகஸ்தர்கள் போஸ்டர் ஒட்டாமல் மக்களுக்கு தியேட்டரில் சிவாஜி படம் ஓடுகிறது என்பதே தெரியாத அளவிற்கு தான் விளம்பரம் இருக்கும்.
விநியோகஸ்தர் சொன்னது போல் போஸ்டர் விளம்பரம் புதன் இரவு நன்றாக செய்யப்பட்டது. இதிலும் சோதனை என்னவென்றால் தேர்தல் நடத்தை விதியைக் காட்டி போஸ்டர் ஒட்டக்கூடாது என்று கூறி போஸ்டர் ஒட்டியவர்களிடமிருந்து போஸ்டர், ஏணி மற்றும் சைக்கிள் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொண்டு காலையில் தான் கொடுத்தார்கள். விநியோகஸ்தர் வியாழன் மாலை மலர் நாளிதழில் விளம்பரம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களின் கொண்டாட்டம் புதன் கிழமையிலிருந்தே துவங்கிவிட்டது. அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் மாபெரும் இரண்டு போஸ்டர்கள், பிரபு வெங்கடேஷ் மற்றும் சிவாஜி குமார், சிவாஜி ராஜன் சார்பில் வசந்த மாளினை சாதனை பேனர் வைக்கப்பட்டது, சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் பிரமாண்ட போஸ்டர், மதுரை நகர் சிவாஜி மன்றத்தின் போஸ்டர்கள் மற்றும் அவனியாபுரம் சிவாஜி ரசிகர்கள் சார்பில் மாபெரும் பேனர் என தியேட்டர் திருவிழாக் கோலம் பூண்டது. நமது மக்கள்தலைவரின் இதயங்கள் செய்யும் அலங்காரங்களைப் பார்ப்பதெற்கென்ற ஒரு கூட்டம் வரும், அது இந்தப் படத்திற்கும் தொடர்ந்தது.
படம் வெளியான வெள்ளியன்று காலை காட்சியிலேயே வசூல் மழை பொழிய துவங்கி விட்டது. ஆம் சில மாத காலமாக எந்தப் படம் போட்டாலும் தியேட்டரில் வசூல் சரியாக இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கோடையில் கோடை மழை வருகிறதோ இல்லையோ நமது தலைவரின் படத்திற்கு வசூல் மழை வந்து விட்டது. வெள்ளியன்று படத்தின் வசூல் 17,000 ஐ தாண்டியது. விழாக்காலம் இல்லாமல் திரையிடப்படும் எந்தப்படமும் மறுநாள் சனியன்று வசூல் 13,000 ம் தான் வரும் ஆனால் வசந்தமாளிகை படத்திற்கு மறுநாளும் வசூல் 15,000 ம் ஆனது. மறுநாள் ஞாயிறு தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தது. ஞாயிறும் வந்தது,
ஞாயிறு காலை, மதியக் காட்சியும் வசூல் அட்டகாசமாக இருந்தது. மாலைக் காட்சிக்கு மாலை 5 மணியிலிருந்தே ரசிகர்கள் குவியத் தொடங்கினர். சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற சிவகாமியின் செல்வன் டிரைலர் வெளியீட்டு விழாவின் கூட்டத்தைப் பார்த்து வியந்தவர்களுக்கு மற்றொரு வியப்பாக இருந்தது கூட்டம். தியேட்டர் நுழைவு வாயில் முழுவதும் மாநாட்டிற்கு வந்த கூட்டம் போல்
ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே டிக்கெட் கொடுக்கப்பட்டது. பழைய ரசிகர்கள் நிறைய பேர் மீண்டும் வந்திருந்தனர், ஒவ்வொரு படத்திற்கும் பல புதிய ரசிகர்களும் பழைய ரசிகர்களும் அதிகமாகிக் கொண்டே வருவதைப் பார்க்க எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அன்று மதியம் சன் டிவியில் தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டதால் பாதி ரசிகர்கள் வரவில்லை என்பது எங்களுக்கு சந்தோசமாக இருந்தது. ஏனென்றால் அவர்களும் வந்திருந்தால் தியேட்டரில் நிற்பதற்கு கூட இடம் இருக்காது.
வெளியில் நின்றிருந்த எங்களுக்கு அரங்கிற்குள் இருந்து பயங்கரச் சத்தம் வர தியேட்டருக்கும் ஓடினோம். ஆம் நாங்கள் எதிர்பார்த்தது போல் நமது மக்கள்தலைவரின் அறிமுகக் காட்சி, படம் வெளிவந்த போது இப்படி ஒரு அலப்பரை இருந்திருக்குமா என்பது சந்தேகமே.
அடுத்து ஏன் ஏன் பாடல் தியேட்டரில் ஒருவர் கூட இருக்கையில் இல்லை வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரும் ஆடித் தீர்த்து விட்டனர். ஒட்டு மொத்த கூட்டமும் ஆடினால் தியேட்டர் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். அதிலும் தலைவர் அதில் நான் சக்கரவர்த்தியடா என்று சொல்லும் போது, நாங்கள் உள்ளே வெடி போடக்கூடாது எவ்வளவோ தடுத்திருந்தும் ரசிகர்கள் அரங்கினுள் வெடியை வைத்தனர். அடுத்து குடிமகனே பாடல் சொல்லவும் வேண்டுமா ரசிகர்களின் குதுாகலத்திற்கு. இடைவேளையில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஏன் ஏன் பாடல் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. மீண்டும் அதே ஆட்டம் ரசிகர்கள் சோர்வடையவே இல்லை. ஆம் நம் தலைவரின் முகம் தான் நமது சத்து டானிக் ஆயிற்றே, அவரைப் பார்க்க பார்க்க உடல், மனது எல்லாம் புத்துணர்ச்சி பெறுகிறதே.
இன்னும் முழுவதும் எழுதினால் இதைப் படிப்பவர்கள் மனம் புண்படும், ஆம், நாம் இந்தக் காட்சியைக் காண முடியவில்லையே என்று எனவே இத்தோடு நிறுத்தி விட்டு வசூல் சக்கரவர்த்தியின் வசூல் விபரங்களுக்கு வருகிறேன்.
ஞாயிறு மாலைக் காட்சி வசூல் 14,700 சில மாதங்களாக சென்ட்ரல் ஞாயிறு மாலைக்காட்சியின் வசூல் 10,000 ஐ தொடுவதே சந்தேகமாக இருந்த நிலையில் 15,000 ஐ நெருங்கியது தியேட்டர் நிர்வாகம் தொடங்கி விநியோகஸ்தர் வரை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஞாயிறு இரவுக் காட்சியும் சேர்த்து மொத்த வசூல் 25,000 ஐ நெருங்கியது.
திங்கட்கிழமையும் வசூல் குறையாமல் நின்று கொண்டிருக்கிறார் நமது மக்கள்தலைவர், ஆம் திங்கள் மாலைக் காட்சி வரை வசூல் 10.000 ம். திங்கட்கிழமை மாலைக்காட்சி வரை மொத்த வசூல் 67,000. இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் சிலர் சிவா மூவீஸ் சார்பில் போடப்படும் படங்களுக்கு மட்டும் தான் அவர்கள் வசூல்சக்கரவர்த்தி சிவாஜி என்று விளம்பரம் செய்வார்கள் மற்ற விநியோகஸ்தர்கள் செய்யமாட்டார்கள் என்று பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக படத்தை திரையிட்ட கலைமதி கம்பைன்ஸார் வசூல் சக்கரவர்த்தி சிவாஜி விஜயம் என்று படத்திற்கு விளம்பரம் செய்திருந்தார் அவருக்கு நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.
திரைப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து மக்கள்தலைவரின் புகழ் காக்க எனக்கும் (சுந்தராஜன்) பிரபு வெங்கடேசிற்கும் ஒத்துழைப்புக் கொடுத்த அகில இந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ரமேஷ்பாபு, பழனிச்சாமி, சோமசுந்தரம், சிவாஜி சமூகநலப் பேரவையைச் சேர்ந்த பாண்டி, சிவாஜி செல்வம், பச்சைமணி, மதுரை நகர் சிவாஜி மன்றத்தைச் சேர்ந்த ஜோதிபாஸ்கரன், சிவாஜி வெங்கிடு மற்றும் சிவாஜி ராஜன், சிவாஜிகுமார் அவனியாபுரத்தைச் சேர்ந்த குப்புசாமி ஆகியோர் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
http://www.sivajiganesan.in/Images/140316_2.jpg
http://www.sivajiganesan.in/Images/140316_1.jpg
(திரு சுந்தரராஜன் அவர்களின் பதிவலிருந்து
http://www.sivajiganesan.in/Images/140316_3.jpg
(திரு சுந்தரராஜன் அவர்களின் பதிவலிருந்து
http://www.sivajiganesan.in/Images/140316_13.jpg
(திரு சுந்தரராஜன் அவர்களின் பதிவலிருந்து
http://www.sivajiganesan.in/Images/140316_14.jpg
(திரு சுந்தரராஜன் அவர்களின் பதிவலிருந்து
http://www.sivajiganesan.in/Images/140316_17.jpg
(திரு சுந்தரராஜன் அவர்களின் பதிவலிருந்து
http://www.sivajiganesan.in/Images/140316_16.jpg
(திரு சுந்தரராஜன் அவர்களின் பதிவலிருந்து
http://www.sivajiganesan.in/Images/140316_20.jpg
(திரு சுந்தரராஜன் அவர்களின் பதிவலிருந்து
http://www.sivajiganesan.in/Images/140316_21.jpg
(திரு சுந்தரராஜன் அவர்களின் பதிவலிருந்து
Breaking News
சாதனை படைத்தார் சின்ன ஜமீன்!
சென்ற வெள்ளி முதல் இன்று வியாழன் இரவு வரை ஒரு வார காலத்தில் மதுரை சென்ட்ரலில் ஒரு லட்ச ருபாய் வசூலை அள்ளினார் ஆனந்த். பண்டிகை நாட்கள், விசேஷ நாட்கள், விடுமுறை நாட்கள், சிறப்பு தினங்கள் (பிறந்த நாள் போன்றவை) இவை எதுவும் இல்லாத ஒரு வார காலத்தில் ஒரு லட்ச ருபாய் வசூல் செய்திருக்கிறார் என்றால் அதிலும் அதிக பட்ச டிக்கெட் கட்டணமே 30 ரூபாய் எனும்போது என்றென்றும் சாதனை சக்கரவர்த்தி நமது நடிகர் திலகம்தான் என்பதை மீண்டும் ஆணித்தரமாகவும் ஆதாரப்பூர்வமாகவும் உறுதிப்படுத்தியிருக்கிறது நான்மாடக்கூடல். வசந்த மாளிகை என்றுமே வசந்த மாளிகைதான் என்பதன் சான்று இது!
ஒரு வார மொத்த வசூல் Rs 1,00,200/- [தோராயமாக]
இந்த சாதனைக்கு உறுதுணையாய் இருந்த அனைத்து நல்லிதயங்களுக்கும் சிரந்தாழ்ந்த நன்றி!
அன்புடன்
( திரு முரளி அவர்களின் பதிவு)
https://scontent.fdel1-1.fna.fbcdn.n...51&oe=574E7F64
தகவல். நண்பர் சந்திரசேகர், மதுரை.
மதுரை சென்ட்ரல்
11.03.2016 முதல் 17.03.2016 வரை
7 நாட்கள் ஓடிமுடிய
மொத்த வசூல் 1,00,212.00
( திரு ராகவேந்திரா அவர்களின் பதிவு march .18. 2016)
திருச்சி- கெயிட்டி திரையரங்கில் இன்று
( 26.03.2016 ) முதல் தினசரி
நான்கு காட்சிகளாகத்
திரையிடப்பட்டிருக்கிற,
காலம் வென்ற கலைப்படைப்பாம் நம் நடிகர்
திலகத்தின் "தங்கப் பதுமை"
திரைக்காவியத்திற்காக
ஒட்டப்பட்டிருக்கிற சுவரொட்டிகள்.
http://i1028.photobucket.com/albums/...psp6ehfiq7.jpg
http://i1028.photobucket.com/albums/...pspgfazypo.jpg
http://i1028.photobucket.com/albums/...psbvuroq81.jpg
http://i1028.photobucket.com/albums/...psbitigyns.jpg
http://i1028.photobucket.com/albums/...psym5aekai.jpg
தகவலுக்கும்,நிழற்படங்களுக்கும் நன்றி:
திரு.S.அண்ணாதுரை,
அகில இந்திய சிவாஜி மன்ற
சிறப்பு அழைப்பாளர்.
(ஆதவன் ரவி அவர்களின் பதிவு 26.03.2016 )
திருச்சி மாநகரின் கெயிட்டி
திரையரங்கில் 26.03.2016 முதல் தினசரி 4 காட்சிகளாக
நடிகர் திலகத்தின் அற்புதக்
கலைப்படைப்பான " தங்கப்
பதுமை" திரையிடப்பட்டுள்ளது.
இன்று ஞாயிறு மாலைக் காட்சியில் ரசிகர்கள் சந்திப்பு
நடந்த போது, திரையரங்க மேலாளர், திரையரங்க ஆபரேட்டர், திரையரங்க
ஊழியர்கள் மற்றும் இந்தத் திரைப்படத்தின் விநியோகஸ்தர் ஆகியோருக்கு
ரசிகர்களின் சார்பாக மரியாதை
செலுத்தி கௌரவம் செய்யப்பட்டது.
http://i1028.photobucket.com/albums/...ps020vdsc7.jpg
http://i1028.photobucket.com/albums/...pshqwotq7k.jpg
http://i1028.photobucket.com/albums/...pshyolwhfz.jpg
http://i1028.photobucket.com/albums/...pshdtye9lg.jpg
http://i1028.photobucket.com/albums/...psjtj5c390.jpg
தகவலுக்கும்,நிழற்படங்களுக்கும் நன்றி:
திரு.S.அண்ணாதுரை,
அகில இந்திய சிவாஜி மன்ற
சிறப்பு அழைப்பாளர்.
ஆதவன் ரவி அவர்களின் பதிவு 27.03.2016 )
http://i1065.photobucket.com/albums/...psxmf2zenj.jpg
இன்றுமுதல் கோவை டிலைட்டில்
"தெய்வமகனின்"
நீதி
திரைப்படம் திரையிடப்படுகிறது.
http://i1065.photobucket.com/albums/...psynh0lda7.jpg
(செந்தில்வேல் அவர்களின் பதிவு 30.10.2015 )
14.02 2014. அன்று கோவை ராயலில் நீதி திரையிடப்பட்டபோது ...
http://i1065.photobucket.com/albums/...psxpgi2jel.jpg
(செந்தில்வேல் அவர்களின் பதிவு 30.10.2015 )
"தங்கப் பதுமை" நாயகன்,
நேற்று ( 27.03.2016 ) ஞாயிறு
மாலைக் காட்சியில் திருச்சி
கெயிட்டி திரைக்குத் தந்த
திருமுக தரிசனமும்,
அற்புதரை மறவாத அன்பு
நெஞ்சங்கள் அங்கே திரண்டு
வந்து தலைவன் மீது காட்டிய
கரிசனமும்.
http://i1028.photobucket.com/albums/...psx5ilppv1.jpg
http://i1028.photobucket.com/albums/...psosmobuq1.jpg
http://i1028.photobucket.com/albums/...psdm40cdzc.jpg
http://i1028.photobucket.com/albums/...psqghv4m8z.jpg
ஆனந்தத் தகவலும்,
அழகிய நிழற்படங்களும்:
திரு.S.அண்ணாதுரை,
அகில இந்திய சிவாஜி மன்ற
சிறப்பு அழைப்பாளர்.
ஆர்ப்பரிக்கும் அலை ஓசை
இம் மக்கள் கூட்டத்தை
விடவாபெரிது http://i1039.photobucket.com/albums/...ps4uwrlggk.jpg
http://i1039.photobucket.com/albums/...psxtutjgm5.jpg
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...46&oe=5786CD7D
குடந்தை எம்எஸ்எம் திரையரங்கில் சிவகாமியின் செல்வன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் வைத்துள்ள பேனர்.
குடந்தை சிவாஜி சேகர் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து.
நமது மதுரை சிவா மூவீஸாரின் புதிய பரிமாணத்தில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட சிவகாமியின் செல்வன் திரையில் ஒளி வீசும் கண்கொள்ளாக் காட்சி மனதைக் கவர்கிறது. திரையில் அதன் தோற்றத்தை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு அதன் சிறப்பை எடுத்துரைக்கும் முகமாக சில நிழற்படங்கள் இங்கு பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இந்தத் துல்லியம் இப்படம் திரையிடும் அனைத்துத் திரையரங்குகளிலும் அனைத்துப் பிரதிகளிலும் சமமாக இருப்பது இதன் சிறப்பு.
http://i1146.photobucket.com/albums/...pslus0cjhr.jpg
http://i1146.photobucket.com/albums/...psnvsqapf3.jpg
http://i1146.photobucket.com/albums/...psry9wsklo.jpg
http://i1146.photobucket.com/albums/...pshsyhqgla.jpg
http://i1146.photobucket.com/albums/...ps6zjw0zqe.jpg
http://i1146.photobucket.com/albums/...ps6lsgocqu.jpg
sivagaamiyin selvan - warm arrival !!!
அனைவரும் எதிர்பார்த்திருந்த நடிகர் திலகம் இரு வேடங்களில் பிரமாதபடுத்திய சிவகாமியின் செல்வன் டிஜிட்டல் வடிவில் நேற்றுமுதல் தமிழகத்தில் சுமார் 27 திரை அரங்குகளில் ( எண்ணிக்கை சரிதானே? முரளி ஸ்ரீநிவாஸ் சார் )மறுவெளியீடு கண்டுள்ளது.
புதிய திரைப்படங்கள் பல கடைசி நிமிடத்தில் வெளிவந்தமையால் கோவை, திருநெல்வேலி நாகர்கோயில் வட ஆற்காடு, தென் ஆற்காடு, பாண்டிச்சேரி திருச்சி ஆகிய ஊர்களில் சிவகாமியின் செல்வன் திரைக்கு வரவில்லை என்பது ஒரு பக்கம் வருத்தத்திற்கு உரிய செய்தி என்றாலும், விநியோகஸ்தர்கள் பலரும் தங்களுடய இயலாமையை வருத்தத்துடன் தெரிவித்து கூடிய விரைவிலையே திரை அரங்கு தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளனர்.
ஆகையால் அதிக திரை அரங்குகள் வரும் நாட்களில் கிடைக்கும் என்று தாராளமாக நம்பலாம் !
இனி சிவகாமியின் செல்வன் வியாபார நிலவரம் !
சென்னையில் சிறந்த முறையில் ஒரு opening சிவகாமியின் செல்வன் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.
குளிர் சாதன வசதி இல்லாத ஸ்ரீனிவாச திரை அரங்கில் நேற்று மதிய காட்சிக்கு சுமார் 200 உக்கும் அதிகமான மக்கள் திரளாக வந்திருந்து கண்டுகளித்துள்ளது highlight !
ஸ்ரீனிவாச திரை அரங்கை பொருத்தவரை வெள்ளிகிழமை அன்று வெளியாகும் திரைப்படம் ..அது புதியதொ ..பழயதோ...60 முதல் 70 டிக்கெட் மட்டுமே போகும்....திரை அரங்கு நிர்வாகிகள் அனைவரும் மிகவும் மலைப்பில் உள்ளனர்...!
காரணம் இவர்களும் ஒரு சிலரை போல சிவாஜி படத்திற்கு கூட்டம் வராது என்ற காலம் காலமாக பரப்பியுள்ள பொய் செய்தியை நம்பியவர்களே !
ஆனால் நேற்று ...நடந்ததோ ....உண்மையான ஒரு நிகழ்வு....இதில் ஒரு சாரர் தியேட்டரை சேர்ந்தவர்கள்....போட்டாதானே தெரியும்...கூட்டம் வருதா இல்லையான்னு...சொம்மா இஷ்டத்துக்கு கதகட்டகூடாதுபா ..நம்ப தியேட்டர்ல எப்பயாவது 80 ஆடியன்ஸ் மேல வெளிகிழமா பாத்ருகொமா சொல்லு... இன்னிக்கிதான்யா களகட்டுது ...செல்வத்துக்கு ( கான்டீன் வைத்துள்ளவர்) இனிக்கி ஜாக்பாட் போ ! ...என்று அவர்களுக்குள்ளயே கூறியும் உள்ளனர் !
கர்ணன் , ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் வெளியிட்ட திரு சொக்கலிங்கம் அவர்கள் ஸ்ரீனிவாச திரை அரங்கில் சென்று அங்கு வந்த மக்கள் கூட்டத்தை பார்த்து ...இடைவேளை வரை திரை அரங்கில் படமும் பார்த்து நம்முடைய சிவா மூவீஸ் திரு சந்திரசேகர் அவர்களை தொடர்புகொண்டு " சந்திரசேகர் சார் ...நீங்க ஜெயிசுடீங்க ! என்று அன்புடன் வாழ்தியுள்ளது கூடுதல் செய்தி !
நேற்று மூன்று காட்சிகள் முடிய ஸ்ரீனிவாச திரை அரங்கில் 600 உக்கும் அதிகமான மக்கள் கண்டுகளித்துள்ளது ....அந்த திரை அரங்கில் கடந்த பல வருடங்களில் நடக்காத ஒரு புதிய சாதனையாக திகழ்கிறது !
அடுத்து பெரம்பூர் மகாலட்சுமி திரை அரங்கம் - காலை முதலே திரை அரங்கு களைகட்ட துவங்கியுள்ளது நேற்று....சிவகாமியீன் செல்வன் அல்லவா !
நேற்று இரவு காட்சி வரை சுமார் 780 உக்கும் மேற்பட்ட மக்கள் கண்டுகளித்துள்ளனர் - இங்கும் சிவகாமியின் செல்வன் தினசரி 3 காட்சிகள் !
Ags திரை அரங்கை பொருத்தவரை மட்டும் சுமாரான வரவேற்ப்பு மட்டுமே சிவகாமியின் செல்வன் கண்டுள்ளது. எனினும் டிக்கெட் விலை 150 என்பதை கணக்கில் எடுத்தால் கணிசதிர்க்கும் கூடுதலான வசூல் என்றே விநியோகஸ்தர்கள் கூறியுள்ளார்கள். அதே சமயம் புதிய திரைப்படத்திற்கு வந்துள்ள மக்களை காட்டிலும் சிவகாமியின் செல்வனுக்கு இரண்டு மடங்கிற்கு மேல் கூடுதலாக வந்துள்ளார்கள் என்று ஒப்பீடு அவர்களே செய்து குறிப்பிட்டும் உள்ளார்கள். போஸ்டர் கொஞ்சம் சீக்கிரம் ஓட்ட சொல்லுங்க...ஜனங்களுக்கு தெரியனும்லே என்று திரை அரங்கு நிர்வாகிகள் கூறியுள்ளார்கள் ! .
அங்கு சிவகாமியின் செல்வன் போஸ்டர் திரைப்படம் வெளியான பிறகும் ஏன் ஓட்டுபவர்கள் இன்னும் ஒட்டாமல் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்பது விளங்கவில்லை !
மொத்தத்தில் கிடைத்த விவரங்களை வைத்து பார்க்கும்போது....limited ஏரியாவில் மட்டுமே வெளியாகி இருந்தாலும் கிட்டத்தட்ட 98.5% திரை அரங்குகளில் சிவகாமியின் செல்வனுக்கு மக்கள் ரிலீஸ் செய்த புதிய திரைப்படங்களை விட இரண்டு மடங்கு கூடுதலாக நல்ல வரவேற்ப்பு கொடுத்துள்ளார்கள் என்பது மட்டும் உறுதி செய்துள்ளனர் திரைப்படத்தை விநியோகம் செய்துள்ளது விநியோகஸ்தர்கள்.
தரத்திலும் டிஜிட்டல் செய்யப்பட்ட விதத்திலும் சிவகாமியின் செல்வன் மிக மிக சிறந்த முறையில் உள்ளதாக மக்கள் feeback கொடுத்துள்ளது அனைவரையும் உற்சாகபடுத்தி உள்ளது !
மற்ற ஏரியாக்களின் தகவல்களை திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளை சுந்தர்ராஜன் சார் அவர்களும் பகிர்ந்துகொள்ள விரைவில் வருகிறார்கள் !
இது ஒருபுறம் இருக்கட்டும்....இனியாவது பொய் பேசும் சில விநியோகஸ்தர்கள் மாறுவார்களா தங்கள் காழ்புணர்ச்சியை மாற்றிகொள்வார்களா என்ற கேள்வி எழாமலும் இல்லை !
Rks
Sathyam Cineplex - Almost 5 Films are running the same show - THE ONLY FILM TO SEE FULLHOUSE IS OUR SIVAGAMIYIN SELVAN !
http://i501.photobucket.com/albums/e...ps0gz351hf.jpg
மக்கள் தலைவரின் சிவகாமியின் செல்வன் என்ற பெயர் கொண்டவராயிற்றே..
வரவேற்புக்கு சொல்லவா வேண்டும்.
நேற்று ஒரே நாளில் மஹாலக்ஷ்மி சீனிவாசா இரு திரையரங்குகளிலும் தலா மூன்று காட்சிகள் வீதம் 6 காட்சிகளில் மொத்தம் சுமார் 1200க்கும் மேல் எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வருகைதந்திருப்பது ஒன்றே நடிகர் திலகத்தின் வீச்சும் தாக்கமும் எந்த அளவிற்கு தலைமுறைகளைக் கடந்தது என்பதை எடுத்துக் காட்டும். திரையரங்கு நிறைய வேண்டும், வசூல் மழை பொழிய வேண்டும் என உண்மையாக விரும்பும் விநியோகஸ்தர்கள், மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் நிச்சயம் நடிகர் திலகத்தின் படங்களுக்குத் தான் முன்னுரிமை கொடுப்பார்கள். என்ன தான் ஆராதனா வை ஒப்பிட்டாலும், இன்றைய தேதியில் ஆராதனா வின் மறு வெளியீட்டிற்கு இது போன்ற மக்கள் வரவேற்பு கிடைக்குமா. இதைப்போன்ற சாதனைகளையெல்லாம் செய்யக்கூடியவர் நடிகர் திலகம் மற்றும் அவர் படங்கள் மட்டுமே.
துரதிருஷ்டவசமாக திரையரங்குகள் ஒரு வளையத்திற்குள் மாட்டிக்கொண்டு விட்டதாக ஒரு தோற்றம் உள்ளது. இது உண்மையாக இருந்தால் ஒரு திரையரங்கில் என்ன படம் வெளியிடுவது என்பதைத் தீர்மானிக்கும் உரிமைகூட அந்த திரையரங்கிற்கு இல்லையோ என்ற ஐயம் எழுகின்றது. இப்படிப்பட்ட போக்கு நிலவுவதும் உண்மையாக இருந்தால் அது நீடித்தால் நிச்சயம் அது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமானதல்ல.
இது ஒரு புறம் இருக்க, திரையிட்ட திரையரங்குகள் அனைத்திலுமே நல்ல வரவேற்பை சிவகாமியின் செல்வன் பெற்றுள்ளது பாராட்டத் தக்கது. வெளியூரிலிருந்து வரும் தகவல்களும் மகிழ்ச்சியூட்டுவதாக உள்ளன.
படத்தைப் பொறுத்த வரையில் நவீனமயமாக்கலில் ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டு வந்துள்ள மதுரை சிவா மூவீஸார் அதில் பெற்றுள்ள வெற்றி மிகவும் தெம்பூட்டக்கூடியதாகும். அது மட்டுமின்றி வருங்காலத்தில் பழைய படங்களைத் திரையிடுவதில் ஊக்கமும் உற்சாகமும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிக்கும் வகையிலும் இது அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
நம்மைப் பொறுத்தமட்டில் சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் நவீனமயமாக்கலின் புதிய பரிமாணம், அதற்குக் கிடைத்த வெற்றியின் மூலம், எங்கும் எதிலும் முதல்வர் நடிகர் திலகமே என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
மதுரை சிவா மூவீஸுக்கு நமது உளமார்ந்த பாராட்டுக்கள்.
நண்பர் ரவிகிரண் சொல்வது போல, சிவகாமியின் செல்வன் படத்தின் வணிக ரீதியான வெற்றி விவரங்களை முரளி சாரும் மற்றும் மதுரையைச் சார்ந்த சிவா மூவீஸ் நண்பர்களும் பகிர்ந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
( ராகவேந்திரா அவர்களின் பதிவு ஏப்ரல் 02 2016)
http://oi64.tinypic.com/2qnaa21.jpg
(ஏப்ரல் .08. 2016 முதல்)