http://i67.tinypic.com/2utt4du.jpg
Printable View
இன்று சென்னை தண்டையார்பேட்டை mm தியேட்டரில் மாலை 3 மணிக்கு நாடோடி மன்னன், மதுரை சென்ட்ரலில் குடியிருந்த கோயில் ( தினசரி 4 காட்சிகள்), ஞாயிறு மாலை ரசிகர்கள் பிரமாண்ட விழா ஏற்பாடு) கோவை ராயலில் மாட்டுக்கார வேலன் 2 வது வாரம் ( தினசரி 4 காட்சிகள்).
தொடரும்...
http://i63.tinypic.com/9sc7r8.jpg
நண்பர் திரு.ரவிச்சந்திரன் அவர்களின் கவனத்திற்கு ,
தாங்கள் குறிப்பிட்ட தண்டையார்பேட்டை எம்.எம்.தியேட்டர்
வெகுநாட்களுக்கு முன்பு மூடப்பட்டு விட்டது .
நாடோடி மன்னன் -திரைப்படம் இன்று பிற்பகல் 3 மணி அளவில்
சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் உள்ள எம்.எம்.
பிரி வியு (pre view theater) அரங்கில் சிறப்புக்காட்சியாக
திரையிடப்பட்ட உள்ளது.
ஆர். லோகநாதன்
.தின இதழ் -29/05/2016
http://i65.tinypic.com/2yv3txu.jpg
mgr -100 the hindu tamil article-comments portion.
எம்ஜியாரின் திரைப்படங்களில் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்துக்கு நிச்சயம் ஓர் தனி இடம் உண்டு. தமிழ் திரையுலகில் முதன் முறையாக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அழகுகளை சாமான்ய ரசிகனுக்கும் காணச் செய்தவர் எம்ஜியார். குறிப்பாக expo 70 எனும் வர்த்தக பொருட்காட்சியி அட்டகாசமாக படம் பிடித்திருந்ததை சொல்லலாம். எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன்.
நிறைய படங்களில் தாயை பற்றிய பாடல்கள் சொகமகதான் இருக்கும் .... அனால் தலைவர் படத்தில் மட்டும் விதிவிலக்கு .....மிகவும் உற்சாகமாகவும் ....உயர்வாகவும் இருக்கும் .....
அள்ளிக்கொள்ளும் மனமும் , துள்ளிச்செல்லும் உடலும் அவருக்கு இறைவன் அருளிய வரம் ! அடிமைப்பெண் படத்துக்கு ஒரு குறிப்பிட்ட பாடலை எழுத ஒரு கவிஞர் நியமிக்கப்பட்டார் , கொஞ்சம் தாமதம் ஆனதால் வேறொரு கவிஞரை பாடல் எழுதி கொடுக்கும்படி m g r அவர்கள் கேட்டுக்கொண்டார் , அவரும் 4 நாட்களில் பாடலை எழுதி கொண்டுவந்து கொடுத்தார் உடனடியாக அவருக்குரிய சம்பளத்தை கொடுத்துவிட்டு தலைவர் ஒரு பாடலை கொடுத்து படிக்க சொன்னாராம் ,படித்தபின் நீங்களே உங்கள் கருத்தை சொல்லுங்கள் இரண்டில் கதைக்கும் , அந்த காட்சிக்கும் எந்த பாடல் பொருத்தமானது , உங்கள் பாடலா இல்லை இந்த பாடலா என்று, கவிஞர் சொன்னார் அய்யா என்னுடைய பாடலைவிட இந்த பாடல்தான் உங்களுக்கும் , கதைக்கும் பொருத்தமானது மட்டுமல்ல நல்ல கருத்தானதும் கூட என்று , அந்த பாடல்தான்
" தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறப்பதில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள் " பிறர் மனம் நோகும்படி எப்போதும் தலைவர் நடந்ததே கிடையாது .
தமிழ் / ஆங்கிலம் படித்த நல்லதொரு எழுத்தாளர் மேற்கண்ட கட்டுரைகளை மொழியாக்கம் செய்து வெளியிட்டால் உலகமெங்கும் பொன்மனச்செம்மல் mgr அவர்களின் புகழ்
பரவிட ஒரு நல்ல வழி உண்டாகும். M g rநூற்றாண்டு காணும் இந்த தருணத்தில் படித்த நடுநிலையாளர்கள் / மற்றும் எழுத்தாளர்கள் கவனிக்கவேண்டிய விசயமிது ..!
அவரது படமான நீதிக்கு தலை வணங்கு படத்தில் வந்த "இந்த பச்சைக்கிளிக்கு ஒரு..." நான் இன்றளவும் ரசிக்கும் ஒரு பாடல்.
உணர்ச்சிகரமான , புரட்சிகரமான, உற்சாகமான , கருத்தான பாடல்கள் மக்கள் திலகம் படத்தில் கண்டிப்பாய் இருக்கும் . குழந்தைகள் நலன் சார்ந்த , பச்சை மனதில் பதியும்படி கருத்தை சொல்லும் பாடல்களும் தலைவர் படங்களில் மட்டுமே உண்டு .
" நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி "
" நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே "
" சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
" அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன்னகையோ ஆனந்த சிரிப்பு "
" தம்பிக்கு ஒரு பாட்டு , அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு - வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நான் சொல்லும் கதை பாட்டு " இப்படி பல பாடல்கள் பாலகருக்காய் பாடியவர் . அவர் பாட்டில் சொன்ன கருத்துக்களை தனது வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்ந்தும் காட்டியவர் நம் m g r .
நம் நாடு படத்தில் வரும் "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே" என்ற பாடல் குழந்தைகளுக்கான மிக அருமையான பாடல் ஆகும்.
ஏழைகளின் காவலன் "எம்ஜிஆர் "
எமது மனம் கவர்ந்த பண்பாளர் அவர். அதிமுகவை ஆரம்பித்த பின்பு தான் இவரது மேலும் வள்ளல் தன்மை உலகளாவியரீதியில் தெரிய வந்துள்ளது. இவரது 100வது பிறந்ததினத்திற்கான ஆரம்ப வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
நம்.ஜி .ஆர் அவர்களுக்கு பேர் ஆசை கூட இல்லை என்பது போற்றத்தக்கது .
"தன்னை நம்பி கெட்டவர்கள் இதுவரை யாருமில்லை! ....." என்று ஒரு படத்தில் பேசி நடித்தவர் எம்.ஜி.ஆர்! நல்ல நோக்கத்திற்காக ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் தமிழர்க்கே மானக்குறைவு என்ற போதும், வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், யாரையும் எதற்காகவும் கைவிட்டதில்லை!
விளம்பரத்தை விரும்பாத அவரின் உள்ளத்தின் அழகு இந்த உலகில் வாழும் தமிழர் உள்ளங்களை வியாபித்திருக்கிறது ! தனது கருத்திலும் , கொள்கையிலும் முரண்படாமலும், பிறரது மனம் புண்படாமலும் எல்லாவற்றையும் சிந்தித்து நேர்பட செய்தவர் புரட்சி நடிகராய் இருந்து புரட்சி தலைவரான எங்கள் m g r .
" எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னை தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோவில்
அவளே என்றும் என் தெய்வம் " தாயை உயிராய் , உயர்வாய் மதித்து வாழ்ந்த " தமிழ் தாயின் தலைமகன் "
திருடாதே என்பதை ஸ்டிக்கர் ஆக்கி கட்சியினர் ஒவ்வொருவர் சட்டையிலும் அல்லது கையிலும் பச்சை குத்தி விடவேண்டும்
ஓடி ஓடி உழைக் கணும் பாடலில் கடைசியில் ஒரு வரி அற்புதமானது அதற்கு வாய் அசைத்து நடிக்கும் போது எம்.ஜி.ஆர் உணர்ந்து நடித்து இருப்பார் அந்த பாடல் வரி " வலிமை உள்ளவன் வைத்தது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகனும் தம்பி " வாழ்க புரட்சி தலைவர் .
இது போன்ற மனித தெய்வங்கள் இனிமேலும் இந்த பூமியில் பிரப்பர்களா? ... அரசியல் சாக்கடையாக மாறியுள்ள சமயத்தில் இது சாத்தியம் தானா?. எந்த அரசியல்வாதியும் இப்போது மக்களுக்காக உழைப்பதாக தெரியவில்லை. சுய லாபதிர்க்காகவும் தங்களுடைய குடும்ப நலனுகக்காகவுமே அரசியல் செய்கிறார்கள். எல்லாம் மக்கள் புரிந்து கொண்டால் தான்.
கதை , வசனம் , காட்சிகள், பாடல் எல்லாமே மக்களுக்கு நல்ல கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்பதில் புரட்சி நடிகர் உறுதியாக இருந்தார் ! படங்களின் பெயர்களுமே எளிதாக புரியும்படி இருக்குமாறு செய்வார். படகோட்டி , என் கடமை , நீதிக்கு பின் பாசம் , தர்மம் தலைகாக்கும் , இதயக்கனி, நாடோடி , மீனவ நண்பன் இப்படி பல ! நல்ல மனம் இருந்தால் மட்டுமே இதுவெல்லாம் சாத்தியம் , அது அவருக்கு இருந்தது .
இந்த கட்டுரைகளை சகல கட்சித் தலைவர்களும் அ தி மு க உட்பட படித்தறிந்தால் நலமாக இருக்கும் படிப்பார்களா?படிப்பார்களா?
மெய் சிலிர்க்கிறது ....வார்த்தைகள் வரவில்லை
ஒரு உண்மையான தலைவன்
மக்கள் திலகத்தின் ''என் தங்கை '' . 31.5.1952
இன்று 64 ஆண்டுகள் நிறைவு தினம் .
ராஜகுமாரி படம் தொடர்ந்து ராஜாராணி கதையம்சம் படங்களில் நடித்த மக்கள் திலகம் சமூக கதை யான
என்தங்கை படத்தில் பாசமிகு அண்ணனாக வாழ்ந்து காட்டினார்.அமைதியான , உருக்கமான ,யதார்த்தமான நடிப்பில் மக்கள் மனதை வென்றார் .மறக்க முடியாத காவியம் .
ரிக்ஷாக்காரன் முதல் நாள். சிறப்பு காட்சி 29.5.1971.
சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் முதல் நாள் முதல் காட்சியில் அன்றைய தமிழக முதல்வர் திரு கருணாநிதி மற்றும் அவருடைய அமைச்சர்கள் எல்லோரும் கலந்து கொண்டார்கள் .தமிழ் திரை உலக பிரமுகர்கள் பலரும்
மக்கள் திலகத்தின் எம்ஜிஆர் மன்றங்கள் - ரசிகர்கள் மற்றும் மக்கள் வெள்ளம் சூழ திருவிழா போல் அண்ணா சாலை திக்கு முக்காடியது .
முதல் முறையாக மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் படத்தை ஸ்டீரியோ ஒலியுடன் , இந்த அரங்கில் காணும் வாய்ப்பு கிடைத்தது .டைட்டில் மியூசிக் - சைக்கிள் ரிக்ஷா ரேஸ் - பாடல்கள் பின்னனி இசை - சைக்கிள் ரிக்ஷா சண்டை - மனோகருடன் மோதும் சண்டை - கிளைமாக்ஸ் சண்டை - காட்சிகளில் மெல்லிசை மன்னரின் பிரமாண்ட இசை யின் தாக்கம் தேவிபாரடைசில் காண முடிந்தது . அவ்வளவு அருமையாக இருந்தது .
முதல் காட்சியிலே ரிக்ஷாக்காரன் வெற்றியை அறிய முடிந்தது .எம்ஜிஆர் ரசிகர்களின் நீண்ட நாள் கனவு நினைவானது .எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் , இந்திய திரை உலகத்திற்கும் , பல பெருமைகள் இந்த ரிக்ஷாக்காரன் தருவார் என்று எதிர்பார்த்தோம் .
1972ல் எங்கள் கனவு நிறைவேறியது . 1971ல் வந்த ரிக்ஷாக்காரன் - சிறந்த நடிகருக்கான பாரத் விருது கிடைத்தது .
1971ல் வசூலில் இமாலய வெற்றி அடைந்தது .
உலகமெங்கும் பரவியிருந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு மீண்டும் 1972ல் ஒரு கனவு . அதை மக்கள் திலகம் 1977ல் நிறைவேற்றிவிட்டார் . மீண்டும் எங்கள் கனவு பலித்தது .
ரசிகர்களை திருப்தி படுத்துவதில் மக்கள் திலகம் என்றுமே முதல்வர் .
பல சாதனைகளை உருவாக்கிய ரிக்ஷாக்காரன் - 45 ஆண்டுகள் கடந்த பின்னரும் அந்த படத்தின் தாக்கம் இன்னும் தொடர்கிறது .