நேற்று பார்த்த விழி
கேட்ட மொழி யாவும்
காற்றிலாடிவரும் ஆற்று வெள்ளமென*
மாற்றி மாற்றி அலை மோதும்
இப்படி ஒரு பாடலின் சரணத்தில் இனிமையான வரிகள்.
பாடல் - "மாறியது நெஞ்சம் - மாற்றியவர் யாரோ"
சுசீசாவின் இனிய குரல், மாமா இசையில் பணமா பாசமா
Printable View
நேற்று பார்த்த விழி
கேட்ட மொழி யாவும்
காற்றிலாடிவரும் ஆற்று வெள்ளமென*
மாற்றி மாற்றி அலை மோதும்
இப்படி ஒரு பாடலின் சரணத்தில் இனிமையான வரிகள்.
பாடல் - "மாறியது நெஞ்சம் - மாற்றியவர் யாரோ"
சுசீசாவின் இனிய குரல், மாமா இசையில் பணமா பாசமா
ஈர இரவில் நூறு கனவு..
பேதை விழியில் போதை நினைவு... :swinghead:
பன்னீரில் ஹே...இளம் தேகம் நீராடும்...
பனிப்பூக்கள் ஹே... உனைக்கண்டு தேனூறும்...
நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில் ரோஜா மல்லிகை வாசம்...
முக வேர்வை துளியது போகும் வரையிலும் தென்றல் கவரிகள் வீசும்...
http://www.youtube.com/watch?v=wXpq7zoUnLY
இரு காதல் விழிகளில் வீசும் ஒளிகளில் பிறையும் பௌர்ணமியாகும்....:swinghead:
நீதானே எந்தன் பொன் வசந்தம்......
இளையராஜா , வைரமுத்து , பாலா ...ultimate romantics Indian cinema ever produced ! :musicsmile:
vinatha.
விழி மலையாளத்தில் நம் நாட்டுப்புற மொழி போல 'மிழி' ஆகி விடுகிறது.
சமீபத்தில் நான் கேட்டு ரசித்தது விஜய் யேசுதாஸ் அழகாகப்பாடும் 'மான் மிழிப்பெண்ணே' :-)
('கத துடருன்னு' படத்தில் 'மழமேகம்' என்ற பாடலில் முதல் சரணத்துக்குப்பின் வரும் பல்லவியில் அவர் பாடும் விதம் இனிமையோ இனிமை)
app,
Tamil il - vizhi list complete acha.
malayalathuku poyacha...
One more mizhi
Mizhiyil meetin
app has jumped to Malayalam! :)
sari en pangu
azhagE nin mizhi - amaram
உஷா சேச்சி, ப்ளம்,
மலையாளத்துக்குத்தாவவில்லை - அன்று கேட்ட பாடல், அதனால் எழுதினேன் - அவ்வளவே :-)
மற்றொரு விழிச்சரணம் - சுப்ரமணியபுரத்தில் வரும் "சிறுபொன்மணி அசையும்" என்ற கல்லுக்குள் ஈரம் பாட்டு: :
===============
விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
அழியாதது அடங்காதது அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது கிளி பாடுது உன் நினைவினில்
===============
ஒரிஜினலை விட இந்தப்படத்தில் தான் அந்த விழி வழித்தூது அழகாக இருக்கும்:-)
வி குமார் இசையில் ஒரு விழிச்சரணம் :
===============
நான்கு விழி அல்லவோ
பேசும் மொழி அல்லவோ
===============
பாடல் - என்னோடு என்னென்னவோ ரகசியம் உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
படம் - தூண்டில் மீன்
ஜெயச்சந்திரனும் ஸ்வர்ணாவும் பாடியிருப்பார்கள்...
எழுபதுகளில் வானொலியில் அடிக்கடி ஒலித்த, வரப்ரசாதம் படத்தின் 'கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான் கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்' என்ற யேசுதாஸ் வாணி ஜெயராம் பாடல்.
இசை - கோவர்த்தனம், இனிமையாக செய்திருப்பார்
இதன் சரணத்தில் அழகான உருவகப்படுத்தல் இருக்கிறது :
மணியோசை கேட்டு மணமாலை சூட்டி
உறவான வாழ்க்கை நலமாக வேண்டும்
நடமாடும் கோவில் மணவாளன் பாதம்
வழிபாட்டு வேதம் விழி சொல்லும் பாவம்
திருநாளில் ஏற்றும் அணையாத தீபம்
ஆனந்த பூஜை ஆரம்ப வேளை
எப்படியெல்லாம் கற்பனையப்பா!
கொஞ்சம் வைர வரிகள், ஆஸ்கர் நாயகன் இசையில் :
பனிதனில் குளித்த பால்முகம் காண
இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்
பசித்தவன் அமுதம் பருகிடத் தானே
பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்
இதழ் மூடும் மலராக இதயத்தை மறைக்காதே
மலர் கொள்ளும் காற்றாக இதயத்தை உலுக்காதே
பாடல் - தொடத்தொட மலர்ந்ததென்ன
படம் - இந்திரா
பால நாகம்மா-திரைப்படம்
ஸ்ரீதேவி-சரத்பாபு
கூந்தலிலே மேஹம் வந்து
குடி புகுந்தாளோ கவி எழுத
குறு நகை...அமைத்தது...இலக்கிய மெடை
கரு விழி ... வரைந்தது..மன்மத ஜாடை