நடிகர் திலகம் - சில எண்ணங்கள்
நடிகர் திலகம் - சில எண்ணங்கள்
என்னுடைய முதல் ஏழு இடுகைகள் என்னுடைய நினைவுகளை அசை போடுவதாக அமைந்தது. இது மேலும் தொடரும். அந்த அளவிற்கு நடிகர் திலகம் எனது வாழ்வில் ஊனும் உணர்வுமாக (எனது வாழ்வில் மட்டும்தானா?) கலந்து விட்டிருக்கிறார். என் தாயார் நான் அவரின் ரசிகராக சரஸ்வதி சபதம் படத்தில் இருந்தே ஆகி விட்டதாகக் கூறினாலும், எனக்கு நினைவு தெரிந்தபிறகு, அதாவது, ஓரளவு புத்தி தெரிந்த பிறகு சினிமா பார்க்க ஆரம்பித்த பிறகு, நான் அவருடைய ரசிகனானது, முதலில், ராஜா. அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். அவரது ரசிகர்கர் கூட்டம் - படை என்று கூட சொல்லலாம் - ஏராளமாகப் பெருகிக் கொண்டிருந்த காலம் அது. முக்கியமாக, சுமதி என் சுந்தரி அவருக்கு நிறைய காலேஜ் Students ரசிகர்களாக வழி வகுத்தது என சொல்லுவர்.
அவருடைய பல அற்புத நடிப்பில் உருவான கணங்களைப் பற்றி அனேக அன்பர்கள் ஏராளமான இடுகைகளை பதிவிறக்கம் செய்து விட்டீர்கள். ஒரு ஒற்றுமை அனைத்து நடிகர் திலகம் ரசிகர்களுக்கும் என்னவென்றால் (நீங்கள் அனைவரும் அறிந்ததுதான்) எல்லோரும் ஒரே மாதிரியாகத் தான் சிந்திப்போம். அவருடைய ஒவ்வொரு படத்திலும் சிறந்த பல/சில காட்சிகள் ஒரே மாதிரியாக அனைவரும் நினைவு கூர்வதுதான். அதனால்தான், ஒவ்வொரு படமும் திரை அரங்கில் பார்க்கப் படும் பொழுதும், குறிப்பிட்ட சில கட்சிகளில் ஆரவாரம் மொத்த அரங்கில் இருந்தும் இந்த நிமிடம் (இனி எப்பொழுதும் கூடத்தான்) வரை இருக்கிறது. இனி வரும் இடுகைகளில், நான் ரசித்த பல தருணங்களைப் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.
இது வரை ஆறு திரிகள் முடிந்து ஏழாவது திரியின் நிறைவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இரண்டாவது திரியின் ஆரம்பத்தில் இருந்து நடிகர் திலகத்தின் சிறந்த பத்து படங்களைப் பற்றி பெரிய கருத்துக் கணிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடிகர் திலகத்தின் சிறந்த பத்து படங்கள் என்று அடக்குவதைக் காட்டிலும் இந்த முறை சரியாக இருக்குமா என்று பாருங்களேன்.
முதலில், நடிகர் திலகத்தின் பங்களிப்பை ஒரு பத்து படங்களில் அடக்குவது என்பது மிகச் சிரமம் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இருப்பினும், இந்த முறை சரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது.
நடிகர் திலகத்தின் அற்புத நடிப்பில் உருவான பத்து படங்கள்
நடிகர் திலகம் நடித்த படங்களில் பத்து அற்புதமான படங்கள்
உதாரணத்திற்கு, முதல் வகையில், தெய்வ மகன் (எனது கணிப்பில்) முதல் இடத்தையும் முறையே, gauravam, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்கள் அடுத்தடுத்த இடங்களையும் பிடிக்கலாம்.
இரண்டாவது வகையில், தில்லானா மோகனாம்பாள் (எனது கணிப்பில்) முதல் இடத்தையும் முறையே, கை கொடுத்த தெய்வம் (நாங்கள் இந்த படத்தை போர்வை படம் என்று சொல்லுவோம் - ஏனென்றால் படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை மயிர் கூச்செறியும் அளவிற்கு நடிப்பும் காட்சி அமைப்புகளும் ஒருங்கே அமைந்த மிகச் சிறந்த படம் - இன்று எத்தனையோ பேர் காமெடி track இல்லாத படம் என்று ஏதோ கூருகிகார்கள், இந்த படத்தில் தனி காமெடி track இல்லை. In fact அவருடைய ஏராளமான படங்கள் தனி காமெடி track இல்லாமல் வெற்றியும் அடைந்திருக்கிறது.), பாச மலர், படிக்காத மேதை, அடுத்தடுத்த இடங்களையும் பிடிக்கலாம்.
மூன்றாவது வகை ஒன்று உண்டு. அது, நடிகர் திலகத்தின் பிரத்யேக ரசிகர்ளின் நினைவில் நீங்காத படங்கள் - அதாவது அவருடைய ஸ்டைல் தூக்கலாக அமைந்து - அவருடைய ரசிகர்களுக்கு மிகுந்த மன நிறைவைத் தந்த படங்கள்.
இந்த மூன்றாவது வகையில் முதல் இடம் எப்போதும் வசந்த மாளிகை (இதில் மாற்றுக் கருத்துக்கு இடமேது?), ராஜா, என் தம்பி போன்ற படங்கள் வரலாம்.
நடிகர் திலகம் என்ற அந்த அற்புதக் கலைஞனை இப்படி வரிசைப் படுத்தி ஒன்று இரண்டு கூண்டுகளுக்குள் அடைத்து விட முயல்வது முடிகிற காரியம் இல்லை. அப்படி முயன்றால், அது என்னைப் பொறுத்த வரையில் தவறாகக் கூட இருக்கலாம்.
இப்படி முயலும் பொழுதே, அவருடைய சிறந்த படங்கள் குறைந்தபட்சம் ஐம்பதைத் தாண்டும் என்றால் இது மலைக்க வைக்கும் விஷயம்.
அன்புடன்,
பார்த்தசாரதி