கூடும் ஆசைகளும் வசதிகளும்
குறையும் திருப்தியும் நிம்மதியும்
பெருகும் நோயும் கவலையும்
புத்தர் கண்டுபிடித்தது புதிதல்ல
Printable View
கூடும் ஆசைகளும் வசதிகளும்
குறையும் திருப்தியும் நிம்மதியும்
பெருகும் நோயும் கவலையும்
புத்தர் கண்டுபிடித்தது புதிதல்ல
புதிதல்ல கண்விழித்துப் பார்த்த போது
...புத்துணர்வாய் தெரிந்திருந்த தாயின் உள்ளம்
புதிதல்ல பள்ளிமுதல் தொடங்கி நாளும்
...பாடங்கள் மனதினிலே பதிந்த உண்மை
புதிதல்ல சின்னவனாய் இருந்து இன்று
..பொன்மனத்து வாலிபனாய்த் தோற்றம் ஆனால்
புதிதாய்த்தான் இருக்கிறது அன்பே உந்தன்
..பூப்பூக்கும் இதழ்கொண்ட தேனைக் கண்டே..!
கண்டே பசியாறும் கஞ்சனா
உறியிலே ஊறுகாயை வைத்து
சோற்றை அப்பக்கம் காட்டியோ
வாடையிலே திருப்தியாய் உண்டு
ஓடையிலே கை கழுவி திரும்பவோ
ஏலாது என்னால் வா கைக்குள்ளே
கைக்குள்ளே உலகமென குருவும் சொல்ல
..காணவில்லை என்றுசொன்னான் சிஷ்யன் அங்கே
பைக்குள்ளே இருக்குமனம் சொல்லும் வார்த்தை
..பக்குவமாய் நீசொல்ல வாங்கிக் கொள்ளும்
தைத்துவீடு நெஞ்சத்தில் தூய எண்ணம்
..தெளிவாகக் கொண்டுதெய்வம் தொழுதால் நன்றாய்
மெய்ப்பொருளூம் உன்னருகில் வந்து சேரும்
..மேல்வாழ்வு கிட்டிவிடும் குருவும் சொன்னார்..
சொன்னார்
பதமாய்
பக்குவமாய்
நயமாய்
நல்லவிதமாய்
பலிக்கவில்லை
பதி பாவம்
சதி சக்தியல்லவோ
சக்தியல்லவோ சிவனல்லவோ சாந்தமாகவே பணிவாய்
பக்தியாகவே பக்குவங்களை பார்த்துபார்த்துதான் உரைப்பீர்
முக்திகொள்ளவும் நெஞ்சமெலாமுமே நிறைந்துநின்றிடும் இறையை
நித்தியபூஜைகள் நன்குசெய்திட மோட்சங்கிட்டுமே அறிவீர்...
அறிவீர் வெயிலின் கொடுமையை
அவசியமான ஒரு பருவத்தை
பரிகாரமாய் பதநீரும் இளநீரும்
நுங்கும் முலாம்பழமும் வெள்ளரியும்
எலுமிச்சை நன்னாரி நாவினிக்க
பரிவாய் இயற்கை வழங்குவதை
இயற்கை வழங்குவதை எழிற்கூட்ட வேண்டுமென
..ஏதோ செய்கின்றார் ஏந்திழையர் இன்னாளில்
மிகையாய்ச் சிகப்பழகு சாயத்தில் தான்வந்தால்
..மென்னுதடும் இழக்காதோ மின்னுகின்ற தன்நிறத்தை
சிகையில் சிச்சிறிதாய் மாற்றங்கள் செய்திடலாம்
..சிகையே சின்னதெனப் போய்விட்டால் ஆவதென
சுயமாய்த் தான்பொங்கும் அழகினைத்தான் தக்கவைக்க
..தூய மனமிருந்தால் போதுமென உணராரோ
உணராரோ இங்கிவர் உணராரோ
அறிவியல் வளர்ச்சி அபாரந்தான்
ஐம்புலனுக்கும் சுகம் அதிகந்தான்
அத்தனை கண்டுபிடிப்பும் அருமையே
ஆனாலும் கொடுக்கும் விலை என்ன
கொஞ்சமும் சிந்திக்காமல் திளைக்க
யந்திரங்கள் அடுக்காய் வீட்டுக்குள்
நுழைந்தபின் சிரமமின்றி சடுதியில்
வேலைகள் முடிந்தாலும் அவயங்கள்
வேலையிழந்து நோய்கள் பழகியதே
இயல்பாய் கிடைத்த உழைப்பை
உடற்பயிற்சியிலே தேடியும்
உடலும் இளைக்கவில்லை
பிணிகளும் ஒதுங்கவில்லை
எங்கும் எப்போதும் வேண்டும்
செயற்கை குளிரூட்டல் எனில்
வியர்வை சுரப்பிகள் வீணாகி
கழிவகற்றி தேயுதே கிட்னியும்
இயற்கையோடு ஒன்றி வாழாது
இயந்திரங்களோடு பிணைந்து
பிழையாகுதே வாழ்க்கை முறை
புத்திசாலித்தனம் போனதெங்கே
போனதெங்கே என்றெல்லாம் புலம்பாமல் கொஞ்சம்
..புத்தியுடன் நடந்துவிடு இனிமேல்தான் நீயும்
ஆனபடி தானுரைத்தேன் செவிகளையும் மூடி
..அழகாக வக்கணைகள் காட்டிநின்றாய் இன்றோ
கானங்கள் பலபாடி சோகத்தில் மூழ்கி
..காதலினைச் சொலவிலையே என்றெல்லாம் ஏங்கி
கானலென நினைக்கின்றாய் கலங்காதே பெண்ணே
..காதலர்க்கு தூதுசெல நான்போவேன் முன்னே!