மக்கள் பிறந்த பின்னர்
மணவாளன் பின்னிருக்கையில்
மூச்சிருக்கும் வரை
முதலிடம் அவர்களுக்கே
Printable View
மக்கள் பிறந்த பின்னர்
மணவாளன் பின்னிருக்கையில்
மூச்சிருக்கும் வரை
முதலிடம் அவர்களுக்கே
அவர்களுக்கே தெரியும்..
போடுவது வேஷம் என
பார்ப்பவர்களுக்கும்...
இருப்பினும்
அலுக்காமல்
நடந்து கொண்டிருக்கிறது
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
நாடகம்
நடிப்பவர்களிடமும்
பார்ப்பவர்களிடமும் தான்
மாற்றமிருக்கும்..
மற்றதில் இல்லை..
இல்லை எனும் சொல்
இல்லை என்று சொல்
இலகுவாய் எதையும் வெல்
இன்பம் எனதென்று சொல்
சொல்லிவிட வேணு மின்னு
...சுறுசுறுப்பாய்த் தானி ருந்தேன்
அல்லிமலர்க் கால வெச்சு
..அன்றவளும் போகை யிலே
மெல்லமெல்ல வேகங் கூட்டி
..மேவிமுன்னால் சென்று நிக்க
கள்ளவிழி பாத்த பின்னால்
...காணாமலே போச்சு வார்த்தை..
..
வார்த்தை விளையாட்டில்தான் எத்தனை வகை
மூழ்கி துழாவி வெல்கையில் பிறக்குது உவகை
கட்டங்களுக்குள் மல்லு கட்டும் அப்போட்டிகள்
இன்றெந்தன் இனிய இணைய பொழுதுபோக்குகள்
பொழுது போக்குகள்
பூக்களைப் போன்றவை..
தொடுப்பவரைப் பொறுத்து
தினம், வாரம், வருடம் என மலர்பவை..
சிறப்பான ஒரு பூ
ஐந்து வருடங்களுக்கு
ஒருமுறை மலரும்.
தொடுப்பவரில்
சிலருக்கு வெற்றியும் சிலருக்குத் தோல்வியும்
வழங்கி விட்டு
தொடுக்காத மீதம் பேருக்கு
அழகாய்
அடுத்த ஐந்து வருடம் வரை
அளித்துச் செல்லும் ஏமாற்றத்தை..
ஏமாற்றத்தை வாடிக்கையாய் பலரும்
அறியாத வேடிக்கையாய் மிக சிலரும்
அரசியல் நடக்கும் அசிங்க அரங்கத்தில்
பல்லாயிரம் ஒன்றல்ல அவதாரங்கள்
உலகை உய்விக்க வந்த உத்தமர்கள்
கோடிகளில் உருட்டி வைத்த ஊழல்கள்
உச்சரிப்பதெல்லாம் தன்னல பொய்கள்
கேட்டிடத் திரளும் செம்மறியாடுகள்
சீரழிந்த செயல்பாடுகள் மாறாதா
நேர்மையான நல்லாட்சி வாராதா
வாராதா கண்ணனவன் உருவம் கண்ணில்
..வந்துவக்க வைக்கவரும் காலம் என்றே
ஆறாக மனமுருகி அழைத்த பெண்ணின்
..அழகுமிகு பாடல்கள் கேட்ட வண்ணம்
வா ராதா என்றபடி வந்தான் அங்கே
..வஞ்சியவள் மனங்கவர்ந்த மாயன் மேலும்
பேறாகத் தந்துவிட்டான் தன்னைத் தானே
..பெண்மயிலும் கலந்துவிட்டாள் அவனில் அன்று...
அன்று நடந்தது ஒரு புரட்சி
விதவை முகத்தில் மலர்ச்சி
வெறுமை தொலைத்த நெற்றி
கையில் கழுத்தில் அணிகள்
இன்று தேவை ஒரு புரட்சி
பொதுவாய் பெண் என்பவள்
வயது பருவம் பொருட்டின்றி
என்றும் மூளியாய் நிற்கிறாள்
பூவை தொலைத்து விட்டு
பொட்டை அழித்து மறந்து
மொட்டை கை கழுத்துடன்
காணத்தான் சகியலையே
புது நாகரிகம் புகுந்ததேன்
புரியாமல் தவிக்கிறேன்
தவிக்கிறேன் துடிக்கிறேன் தணற்புழுவாய் என்றே
...தயங்காமல் முழக்கங்கள் பலவிதமாய்ச் செய்தே
பவித்திரமாம் பாரதத்தின் பண்பதனைக் காக்க
..பாங்காக நீங்களெல்லாம் பேருதவி செய்வீர்
செவிக்குணவு கிடைத்ததனால் பேசாமல் நின்றே
..சோம்பேறிக் குணமடைந்து எதிரியிடம் சென்றால்
தவிலுக்கு அடிபடுமே இருபக்கம் இல்லை
..தக்கபடி அடிபடுவீர் எப்பக்கமும் என்றே
முடிக்கின்றேன் இவ்வுரையை மூவுலகும் காக்கும்
...மேலான தலைமையிது எனச்சொல்லி அமர்ந்தால்
நடிக்கின்றேன் என்பார்கள் நால்வகையும் தம்முள்
..நன்றாக அடக்கிவைத்து இருப்பதாக எண்ணும்
தடியர்கள் எதிரணியில் இருக்கின்ற நண்பர்
..தானாகத் தெரியாத மூடர்கள் பலராம்
விடிவதற்கு ஓட்டெனக்கே எனச்சொல்லி முடிக்க
...வெறும்பேச்சுப் புரியாமல் எழுந்ததுகை தட்டல்..
..