-
1945ல் பேரறிஞர் அண்ணா எழுதிய நாடகம் , "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் ".
எம்.ஜி.ஆர். சிவாஜியாக நடிக்க ஒப்புக்கொண்டு மறுத்த நாடகம்.கம்பீரமாக அவருக்காகத் தைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து 17 வயதில் சத்ரபதி
சிவாஜியாக தந்தை பெரியார் தலைமையில் நாடகத்தில் நடித்தார் வி.சி.கணேசன்.
இன்று முதல் சிவாஜி கணேசன் என புகழ்மாரி பொழிந்தார் , பெரியார்.
எம்.ஜி.ஆர். அந்த காட்சியைக் கண்டார். சிவாஜி கணேசன் உள்ளிட்ட நாடகக் கலைஞர்களுக்கு பசியாற்றுவது எம்.ஜி.ஆருக்கு பொழுதுபோக்கு .
டி.ஆர். ராஜகுமாரியின் தம்பி ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜி.ஆர். -சிவாஜி நடிக்க
கூண்டுக்கிளி தயாராகி வெளிவந்தது .
http://i58.tinypic.com/1fjqr6.jpg
-
-
-
-
-
-
-
-
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "பணத்தோட்டம் " வெளியாகி 52 ஆண்டுகள்
நிறைவு பெற்றது . வெளியான தேதி: 11/01/1963.
இனிமையான பாடல்களும், பல திருப்பங்களும் நிறைந்த படம்.
நடிகர் நாகேஷ் முதன்முறையாக மக்கள் திலகம் படத்தில் நடித்தார்.
நாகேஷ், வீரப்பன் ஜோடி நகைச்சுவை படத்தில் கலக்கலாக இருந்தது.
கண்ணதாசனின் பாடல்களுக்கு, விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அபாரம் .
இறுதி வரை படத்தில் தொய்வில்லாமல் இயக்கினார் இயக்குனர் சங்கர்.
டைட்டிலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பெயரை புதுமையாக , கடைசியாக
காட்டினார்கள். ஆறுவிரல் சஸ்பென்ஸ் , கிளைமாக்ஸ் வரை கொண்டு சென்று
மர்மத்தை உடைத்தது படத்தின் சுவாரஸ்யம்.
எனக்கு விவரம் அறிந்தவகையில் நான் பார்த்து ரசித்த (முதல் வெளியீட்டில் ,
வெளியான,) முதல் எம்.ஜி.ஆர். படம் - பணத்தோட்டம் - கிரௌன் அரங்கில்
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே - அரங்கமே பாடலில் ஆர்ப்பரித்தது .
ஒருவர் ஒருவராய் பாடலில் மக்கள் திலகத்தின் மேல் நாட்டு இசைக்கு ஈடான
அற்புத நடனத்திற்கு பலத்த கைதட்டல், நல்ல வரவேற்பு.
பேசுவது கிளியா - படத்தின் ஹை லைட் . அந்த காலத்தில் திருமணம் மற்றும்
இசை நிகழ்ச்சிகளில் இந்த பாடல் இடம் பெறாத இடமே இல்லைஎனலாம் .
மக்கள் திலகமும், அபிநய சரஸ்வதியும் அற்புதமாக , பாத்திரத்தோடு ஒன்றிபோய் ,
பாடலுக்கு அபிநயத்தோடு நடித்து , நல்ல ஜோடி என பெயர் வாங்கினர்
இடைவேளையில் இந்த பாடல் பற்றிய முணுமுணுப்பு அனைவரிடம் கேட்க
முடிந்தது .
குரங்கு வரும் தோட்டமடி- அருமையான தத்துவப்பாடல்.
ஜவ்வாது மேடையிட்டு -எம்.ஜி.ஆர். -சரோஜாதேவி ஜோடி இந்த பாடலுக்கும்
மிக அருமையாக நடித்து , நல்ல பாராட்டைப் பெற்றனர் .
ஒருநாள் இரவில் - சுசீலா பாடிய மென்மையான, இனிய பாடல்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் சிறுசிறு மாறுவேடத்தில் தோன்றிய காட்சிகள் அற்புதம். வேடங்கள் அனைத்தும் பொருத்தமாக இருந்தது
சென்னையில் 12 வாரங்கள் ஓடியது. 100 நாட்கள் ஓடியிருக்க வேண்டிய படம்.
அடுத்தடுத்து 30 நாள் இடைவெளியில் கொடுத்து வைத்தவள் மற்றும் 42 நாள் இடைவெளியில் தர்மம் தலை காக்கும் வெளியாகியதால் இதன் ஓட்டம் தடைபட்டது . சென்னையில் 3 படங்களுமே ஒரே சமயத்தில் 1963-ல் 9 அரங்குகளில் வெற்றிகரமாக ஓடி மூன்றுமே வெற்றிப்படங்களாக அமைந்தன .