கோ, சின்னக் கண்ணன் சார்,
நான் புதுப்படங்கள் பார்ப்பதே இல்லை. புதுப்படப் பாடல்களையும் பார்ப்பதில்லை. எனக்கு அறவே காட்டுக் கத்தல்களும், கூச்சல்களும் பிடிப்பதே இல்லை. பாலையில் சோலையாக ஒரு புதுப் பாடலைப் பார்க்கும் சந்தர்ப்பம் வைத்தது. நிரம்பப் பிடித்திருந்தது. அழகான வார்த்தைகள், அளவான, அம்சமான இசை, ரம்யமான வெளிப்புறப் படப்பிடிப்பு, விமல், அனன்யாவின் கேஷுவலான மூவ்மெண்ட்ஸ், சின்ன சின்ன எக்ஸ்ப்ரஷன்ஸ், இயல்பான டான்ஸ் ஸ்டெப்ஸ், அற்புதமான அருவி என்று இந்தப் பாடல் என் மனதை ரொம்பவே கவர்ந்தது. அனன்யாவின் சுட்டித்தனமான முகபாவங்கள் வெகு அற்புதம்.
நீலாங்கரையில் கானாங்குருவி
தானா தவிக்குதே
வானம் திரண்டு வையம் கடந்து
பறப்போம் காற்றிலே
இசைக்கருவிகளின் ஆதிக்கம் இல்லாமல் பாடலின் வரிகள் வெகு சுகமாக காதில் வந்து தேனைப் பாய்கின்றன. கார்த்திக் மற்றும் ஸ்ரேயா கோஷாலா அல்லது சைந்தவியா?.. மிக இனிமையாகப் பாடியுள்ளனர். இசை ஏ.ஆர்.ரகுநந்தன் என்பவராம். ஒரு நல்ல பழைய பாடலைக் கேட்கும் சுகம் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் புதுப்படப் பாடலைக் காணும் போது எனக்குக் கிடைத்தது.
நீங்களும் அனுபவியுங்களேன்.
https://www.youtube.com/watch?featur...&v=KFxRL3vhIEs