பரிதாபமாய் பசியோடுதான் பழக்கத்திலே கரங்கள்
வரியோடிய முதுமையதன் வழக்கத்தையே உரைக்க
பரிவானவர் சிலபேரெதும் தருவாரென நீட்ட
கரிபூசிய முகத்தோடதைக் காணாதுசெலல் தவறே
Printable View
பரிதாபமாய் பசியோடுதான் பழக்கத்திலே கரங்கள்
வரியோடிய முதுமையதன் வழக்கத்தையே உரைக்க
பரிவானவர் சிலபேரெதும் தருவாரென நீட்ட
கரிபூசிய முகத்தோடதைக் காணாதுசெலல் தவறே
தவறே அதிசயமான தவறே
பூந்தளிர் பாதந்தான் நடந்தது
அதில் பூகம்பம் விளைந்தது
பசி தாகம் தூக்கம் தொலைந்தது
அளவிட முடியாத சேதாரம்
அதுவே வாழ்வின் ஆதாரம்
ஆதாரந் தனைக்கேட்டு முதியவரின் குற்றம்
..அழகுறவே தவறென்றே சுந்தரனும் சொல்ல
மோதாதே சிறுபயலே என்னிடமா கேட்பாய்
..முக்கியமாய்ச் சான்றிதழும் இங்கிருக்கு தப்பா
பூதாகர மெனவே காட்டிவிட்ட ஓலை
..புனிதமனச் சுந்தரனின் பெற்றவரின் ஒப்பம்
வேதாந்தம் பலச்சொல்லும் கிழவனென ஈசன்
..வித்தையன்று புரிந்ததுவும் விளையாட்டுத் தானே..
விளையாட்டுத் தானே காட்டுது என் செல்லப் பறவைகள்
ஆப்பிரிக்கக் கிளி அழகிய கிளி இரு ஜோடி இரு வண்ணம்
பயந்து பானைக்குள் பதுங்கும் பக்கம் சென்று பார்க்கையில்
காத்துக் கிடந்தேன் எப்போது முட்டையிடும் பொரிக்கும்
என்ன வண்ணத்திலே எத்தனை குஞ்சு பிறக்குமென
பக்குவமாய் ஊறிய பயிறுகளை கருத்தாய் ஊட்டினேன்
அறிகுறியே இல்லை என் ஆசை நிறைவேறவெனவே
மெத்த வருந்தி நிதமமும் நான் கவனித்து வருகையிலே
ஆஹா! நேற்று கண்டேன் ஐந்தாவதாய் ஒரு பறவை
பச்சை வண்ணத்திலே முழு இறகுகளுடனே அழகாய்
முட்டையிட்ட சுவடில்லாமல் குஞ்சு குரல் கேளாமல்
ரகசியமாய் வந்துதித்த அதிசயம் எனக்கு பேரின்பம்
பேரின்பம் சிற்றின்பம் என்றெல்லாம் சொல்லி
..பிரித்துத்தான் பேசுவது என்னென்று அங்கே
ஊரிலிரு நண்பர்கள் சந்தித்த போது
..உளமார மனமாரச் சொன்னானே ஒருவன்
தேரினிலே வருகின்ற முருகனவன் அழகை
..திகட்டாமல் பார்ப்பதுவே பேரின்பம் என்றான்
வாரிவிடும் வள்ளலனெ பிரம்மனவன் தந்த
..வஞ்சிமுகம் கொஞ்சுமொழி எனச்சொன்னான் ஒருவன்
காரிருளில் கன்னியுடன் சுகிப்பதல்ல இன்பம்
...கண்மல்க இறைவனிடம் கொள்வதுவே இன்பம்
தூறிவரும் சாரலென தோகையவள் இன்பம்
..துவண்டுவிடும் வறண்டுவிடும் எனப்பேச்சு கூட
நேராக அறிவதற்கு எந்த இடம் என்றே
..நெடுநேரம் பலவிதமாய் யோசனைகள் கொண்டு
தேரினையே இழுத்துவரும் திருவிழாவின் போது
..தெரிந்துகொள்வோம் எனச்சொல்லி பிரிந்திடவும் செய்தார்..
சிவந்தநிறம் சிரித்தவிழி சிறுமழலைத் தோற்றம்
..சிந்தனையில் வந்துவிடும் சீர்மிகுந்த ஏற்றம்
உவந்தபடி முருகனையே பார்த்தவனின் நெஞ்சோ
..உணர்வுடனே வஞ்சியிடம் சென்றவனை எண்ண
துவண்டயிடை துடிக்குமிதழ் திரண்டவுடல் கொண்ட
..தேவியவள் அருகினிலே ஆர்வமுடன் வந்தும்
குவலயத்தின் குமரனையே இன்னொருவன் எண்ணி
..கொள்ளாத பேரின்ப நிலையினையே பெற்றான்
பெற்றான் உலகத்தார் நன்றியை
இணையத்தை கண்டுபிடித்தவன்
தூரங்களைத் தொலைத்தவன்
இதயங்களை இணைத்தவன்
இணையில்லாதோர் சேவகன்
இன்றிங்கோர் இனிய நாயகன்
நாயகனைப் பற்றியொரு பாட லிங்கு
.. நலமுடனே எழுதுவென்று சொல்லி விட்டார்
ஆயர்குல்த் தில்உதித்து அரிய செயலை
..அழகுறவே செய்துவிட்ட கண்ணன் மற்றும்
தூயமனம் கொண்டராமன் என்று மேலும்
..துள்ளிவரும் கோபநிறை பரசு ராமன்
பாயாமல் பதுங்கிநின்ற கூர்மத் தோற்றம்
..பன்றிமுகம் மச்சமென மேலுங் கொண்டே
நடுஙகவைக்கும் நரசிங்கத் தோற்ற மொன்று
..நல்லவித பலராமன் தோற்ற மொன்று
ஒடுங்கித்தான் வாமனனாய் வரங்கள் கேட்டே
..ஓங்கியகால் உலகளந்த தோற்ற மொன்று
முடுக்கிவிட்ட கோபத்தால் மூர்க்கங் கொண்டு
..மோதிமோதி உலகினையே அழிக்கும் தோற்றம்
தொடுத்தநற் பெருமாளே சிவந்த உந்தன்
..தாமரைப்பூப் பொற்பாதம் பணிந்தேன் நானே..
நானே நானே என முந்தி எழுந்தால்
மண்டையில் குட்டு முந்திரிக்கொட்டை
குட்டியும் மட்டந்தட்டியும் தணியாது
முனைப்பு ஆர்வம் ஆச்சர்யம் வீரம்
வீரமுடன் வேலெடுத்து எதிரியின்மேல் தானெய்து
..வெற்றிநகை புரிந்தவந்த மன்னனவன் தன்னுடைய
ஊரென்று அழைக்கின்ற தலைநகரம் நுழையுங்கால்
..உணர்ச்சியெலாம் மிகக்கோண்டு கோஷங்கள் பலவாக
காரிருளாம் பொழுதெனினும் கண்விழித்துக் கூடியங்கே
..களிப்புடனே வாழ்த்துகளை மக்களலை சொல்லிடவே
வேர்முதலாய் மகிழ்ச்சியுடன் வீடடைந்தால் நீள்பிரிவால்
..வேல்விழியாள் பார்வைசுட விக்கித்தே நின்றானே..
விக்கித்தே நின்றானே
விண்ணகம் ஏகிய காந்தி
ஜப்பானிய குரங்கு மூன்று
கண்ணை காதை வாயை
மூடிக் காத்த தீமையை
திக்கெட்டும் பரப்பிடும்
பரபரப்பான ஊடகங்கள்
ஆற்றிடும் சேவையிலே