தமிழ் இசையின்
பெருமை காக்க
விறகுவெட்டியாக
வந்த இறைவன்,
தமிழ்க் கலையின்
பெருமை காக்க
சிவாஜியாக வந்தான்.
இதுவும் ஒரு
திருவிளையாடல்.
Printable View
தமிழ் இசையின்
பெருமை காக்க
விறகுவெட்டியாக
வந்த இறைவன்,
தமிழ்க் கலையின்
பெருமை காக்க
சிவாஜியாக வந்தான்.
இதுவும் ஒரு
திருவிளையாடல்.
கட்டபொம்மனாக நீங்கள்
குதிரையில் வரும்
காட்சியைப் பார்க்கும் போது
தோன்றுகிறது..
வேகம் குறித்து
உங்களிடமிருந்து
நிறைய
கற்றுக்கொள்ள வேண்டும்
அந்தக் குதிரை.
செந்தில்வேல் சார்
கடமையை தான் செய்தேன். அதற்க்கு எதற்கு சார் நன்றி எல்லாம் !
ஆதாரத்துடன் எழுதினாலே "பொய்" என்றும் "தவறான தகவல்" என்றும் உண்மைகள் திசை திருப்பப்படும் முயற்சிகள் நடைபெறும் காலத்தில், கிடைத்த ஆதாரத்துடன் (போட்டோ மற்றும் இணையதள முன்பதிவு நிலவரம் )பதிவு செய்யாமல் விட்டால் எப்படி சார் ..காரணம் இது கலியுகம் அல்லவா !
எங்கோ ஒரு மூலையிலாவது உண்மை ஆதாரங்கள் இருந்துவிட்டு போகட்டுமே !
கோவையில் விரைவில் பாரிஸ்டர் ரஜினிகாந்த்தை வரவேற்க தயாராக இருங்கள் சார் !
http://i501.photobucket.com/albums/e...psj76j3u58.jpg
டிஜிட்டல் அல்ல ...சாதாதான் !
Rks
முரசு தொலைகாட்சியில் நடிகர் திலகத்தின் ராஜபார்ட் ரங்கதுரை தற்போது ஒளிபரப்பாகிகொண்டிருக்கிறது !
மதன மாளிகையில் ....பாடல்.....நம் திராவிட மன்மதனின் அழகும், இளமையும் அள்ளிக்கொண்டு போகும் பாருங்கள்.....ஆஹா !
https://www.youtube.com/watch?v=i6UeorX-aVo
கலைக்கு ஒரு திலகம் ! நமது நடிகர் திலகம் !
இந்த தருணத்தில் திரு முத்தையன் சார் ஞாபகம் !
முத்தையன் சார்...ஒரு விண்ணப்பம் !
மதன மாளிகையில் பாடலில் நடிகர் திலகம் தோற்றங்களை தயவு செய்து இங்கு பதிவு செய்து தர முடியுமா ?
அன்பிற்கினிய மதிப்புக்குரிய மதுரகான திரி நண்பர்கள் வாசு /மது / ராகவேந்தர் / சின்னக்கண்ணன் / ரவி / ராஜ்ராஜ் / ராகதேவன் / கல்நாயக் / ராஜேஷ் மற்றும்
நெல்லை கோபு ,mgr திரியிலிருந்து எஸ்வீ / செல்வகுமார்/கலைவேந்தன் /வரதகுமார்/ சைலேஷ் / ரவிசந்திரன் / யுகேஷ் /முத்தையன் அம்மு./சுகாராம்....
நடிகர்திலகம் திரியின் நண்பர்கள் முரளி / ரவிகிரண்/ கோபால் / ஜோ /சுப்பிரமணியம் ராமஜெயம்/ j ராதாக்ருஷ்ணன்/சிவா / ஆதிராம் / திருச்சி ராம் / s. வாசுதேவன்/sss/ vcs / ஹரீஷ்/ராகுல் /பட்டாக்கத்தியர் / அரிமாசெந்தில்/ சுந்தராஜன்/ பாஸ்கர் /ஆதவன்ரவி/ சார்ஸ்! அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்......
திரிப் பதிவுகளுக்குத் தற்காலிக இடைவெளி தரவேண்டிய சூழல்! எனது மொத்த லாபமே வேற்றுமையிலும் ஒற்றுமையாக மலர்ந்திட்ட இனிய நண்பர்களான நீங்கள் அனைவருமே!!
Quote:
வருகிற செப்டம்பர் 30 எனது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண்மைப் பொறியியல் பேராசிரியப் பணியிலிருந்து 60 வயது முதிர்வில் 37 வருடங்கள் கல்விப் பணி...மூவாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள், முன்னூறுக்கும் அதிகமான ஆராய்ச்சி கட்டுரைகள், இருபத்தைந்து முதுநிலை/ பதினைந்து முனைவர் பட்ட ஆய்வு வழிகாட்டியாக....பசுமையான நினைவுகளுடன் மனநிறைவுடன் ஓய்வு பெறுகிறேன்!!
பென்ஷன் பார்மாலிடிஸ் ...அடுத்த கௌரவ பேராசிரியர் பணியில் சேர்வு....கொஞ்சம் கான்சென்ட்ரேஷன் தேவைப்படுவதால் சிறு இடைவெளி!!
திரைப்படங்கள் மேலும் நம்மை மகிழ்வித்த நடிகர்திலகம் மக்கள் திலகம் காதல் மன்னர் .....அனைவர் மீதும் நன்றிகலந்த மரியாதை நிமித்தம் நண்பர்களான உங்களுடன் இணைந்து மகிழ்ந்த நினைவுகளுடன்.... விடை பெறுகிறேன்!!
மீண்டும் வருவேன் சில கடமைகள் நிறைவு பெற்ற பின்னர் ...நிச்சயமாக அன்பு நெஞ்சங்களே!!
என்றும் உங்கள் நண்பன் செந்தில்
இன்று ரக்ஷா பந்தன் - அண்ணன் தங்கை உறவுமுறை செழித்து சகல சொவ்க்யங்களுடன் வாழ இறைவனை வேண்டி அண்ணனாக நினைப்பவரை, அண்ணனை தங்கை பாசம் கொண்ட சரடால் வலது கரத்தில் அன்பால் கட்டிபோடுவதுதான் ரக்ஷா பந்தன் .
திரை துறையில் மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் இருவரது படங்களிலும், தாய்மை, தங்கை பாசம் இரெண்டும் இடைவெளி இல்லாமல் இருந்துகொண்டே இருக்கும்..! இவர்கள் அளவிற்கு மற்றவர்கள் தங்கள் படங்களில் அண்ணன் தங்கை பாசத்தை சித்தரித்ததுண்டா என்றால் இல்லை என்றே கூறலாம் !
என் தங்கை - 1952
https://www.youtube.com/watch?v=oIFVcdYtTic
1952 இல் வெளிவந்து தமிழ் திரை உலகையே புரட்டி போட்ட நடிகர் திலகத்தின் முதல் திரைப்படமாம் பராசக்தி திரைப்படமும் அண்ணன் தங்கை பாசத்தை சமுதாய சிந்தனையோடு பின்னப்பட்ட கதையை கொண்ட படம் !
மறக்க முடியுமா .....பராசக்தி கோர்ட் காட்சியை ! முதல் படத்தில் இப்படி ஒரு சிம்ம கர்ஜனை, லாவக நடிப்பு, முதன் முறையாக தமிழின் உயிர்நாடி கண்டுபிடித்து அதனை முருக்க வேண்டிய இடத்தில் முறுக்கி, குருக்கவேண்டிய இடத்தில் குறுக்கி...சறுக்கவேண்டிய இடத்தில் சறுக்கி தளுக்க வேண்டிய இடத்தில் தளுக்கி - உலக திரை இதுவரை கேட்டதும் இல்லை கண்டதும் இல்லை !
என்ன ஒரு ஒற்றுமை இருதிலகங்களுக்கும் -
என் தங்கை 1952 & பராசக்தி 1952 வெளியீடு
https://www.youtube.com/watch?v=q7k8dt6FykI
இதன் தொடர்ச்சியாக
பாசமலர்,
என் அண்ணன்,
நினைத்ததை முடிப்பவன்,
விடிவெள்ளி,
அன்புக்கரங்கள்,
பச்சை விளக்கு,
தங்கை,
லட்சுமி கல்யாணம்,
தங்கைக்காக,
எங்கள் தங்கம்,
இதயவீணை ,
அண்ணன் ஒரு கோவில்,
இப்படி பல காவியங்கள் இரு திலகங்களும் அண்ணன் தங்கை பாசபினைப்பை திரையில் வாழ்ந்து காட்டினார்கள் !
https://www.youtube.com/watch?v=9P8Hynotz1M
https://www.youtube.com/watch?v=OJ3xtZIHFxY
https://www.youtube.com/watch?v=hJ7GdrID5LI
https://www.youtube.com/watch?v=JEHN6Beyg7A
https://www.youtube.com/watch?v=JiqTqJILB1k
https://www.youtube.com/watch?v=qk6Ru8lPBww
https://www.youtube.com/watch?v=08JYpCpNGfw
https://www.youtube.com/watch?v=CXtjNlLAH8E
https://www.youtube.com/watch?v=S_Xh-OAbeos
நாஞ்சில் நாட்டில் கட்டபொம்மன் வெற்றி நடை..
நாகர்கோயில் ஸ்ரீவள்ளி திரையரங்கில் இன்றைய காட்சியில் திரளான அளவில் தாய்மார்கள் வருகை புரிந்துள்ளார்கள்.
குறிப்பாக கடந்த 21ம் தேதி திரையிட்ட நாள் முதல் இன்று வரை ஒரு மூதாட்டி, தினமும் படம் பார்த்துச் செல்கிறாராம். அவருக்கு நமது பாராட்டுக்கள். இன்றைய இளைஞர் சமுதாயம் இவரிடம் தேசபக்திக்கு முன்னுரிமை தருவதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பாராட்டுக்கள் அம்மணி.
தகவல் தந்த நாகர்கோயில் நண்பருக்கு உளமார்ந்த நன்றி.
"நீ கூடத்தான் கட்டபொம்மனை காட்டிக் கொடுத்திருப்பாய்" என்று
ஊமைத்துரை எள்ளலாய்ச்
சொன்னதும், வெடிக்கும் கோபத்தோடு வெகுண்டெழும்
தேச பக்தி மிகுந்த அந்தப் பாட்டியை நினைவூட்டுகிறார்..
அந்த நாகர்கோவில் பாட்டி.