Not sure if it was posted already...
KALAIGNAR TV TELECASTS 'SIVAJI THE BOSS' THIS DIWALI.
Printable View
Not sure if it was posted already...
KALAIGNAR TV TELECASTS 'SIVAJI THE BOSS' THIS DIWALI.
Both Vijay And Rajini are sitting together in Nehru Stadium for some function. "Rajini namMA thalapathy ThOzh mela kaiya potU uTkanthu kitU irukaAR . . . Kolaveri mass in stadium ." After a long time the Superstar and Super Nayagan seen together.
FROM FB!
Super Star and Idhaya Thalapathy together at Nehru Stadium For Director's Function:
http://images.orkut.com/orkut/photos...YKY-vIbYWv.jpg
அழகிரி மகன் திருமணம் - தலைவருக்கு நேரில் அழைப்பு.
2010-Oct-23
மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி -அனுஷா திருமணம் வரும் நவம்பர் 18-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழை அமைச்சர் அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் விஐபிக்களுக்கு நேரில் வழங்கி வருகின்றனர்.
தலைவர் ரஜினிக்கு அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் இன்று காலை நேரில் திருமண அழைப்பிதழை வழங்கினார் மு.க.அழகிரி. அவருடன் அவரது மனைவி காந்தி, மகள் மற்றும் மருமகன் சென்றிருந்தனர்.
குடும்பம் சகிதமாக சௌந்தர்யா - அஷ்வின் திருமணத்திற்கு வந்து சிறப்பு சேர்த்தவர் மு.க.அழகிரி என்பது குறிப்படத்தக்கது.
http://rajinifans.com/latest_news_detail.html?rId=1517
D40 - K.Balachander invterview with Thalaivar...
2010-Oct-24
நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த இந்நிகழ்ச்சியில் தன்னை சூப்பர் ஸ்டாராக உயர்த்திய இயக்குநர்கள், படைப்பாளிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாகப் பங்கேற்ற தலைவர், அவர்கள் எதிர்ப்பார்த்ததற்கும் மேலாக வருவாய் கிடைப்பதற்கு ஒரு வழி செய்து கொடுத்தார். அது, ஒரு அசத்தலான நேர்காணல் அளித்ததுதான்.
ஒரு நல்ல நேர்காணலுக்கு கேள்விகள் நன்றாக அமைய வேண்டும் என்பார்கள். இயக்குநர் சங்க விழாவில், பாலச்சந்தரின் கேள்விகள் அசத்தலாக இருந்ததால், அந்த கேள்விகளை தூக்கிச் சாப்பிடும் விதத்தில் சூப்பர் ஸ்டாரின் பதில்கள் அமைந்தன.
தனிப்பட்ட வாழ்க்கை, சின்ன வயது காதல், சினிமாவில் அடுத்த இலக்கு, அரசியல், ஆன்மீகம் இப்படி ரஜினி ஆர்வம் காட்டும் அனைத்துத் துறைகள் குறித்தும் பாலச்சந்தர் கேட்ட கேள்விக்கு பட்டுத் தெறித்தது போல பளிச் பளிச் என்று பதிலளித்து அசத்தினார் தலைவர்.
முன்னதாக பேசிய பாலச்சந்தர், ரஜினி வளர்ந்து விட்ட நிலையிலும் எனக்கு மாணவன் தான். என்னை எப்போதும் குருவாகவே மதிக்கிறார். அவரிடம் கேட்க நினைத்திருந்த பல கேள்விகளை இப்போது கேட்கிறேன் என்றார்.
பாலசந்தர் கேட்ட கேள்விகளும் அதற்கு தலைவர் அளித்த பதில்களும் இங்கே உங்களுக்காக...
கே.பி: பெரிய நடிக ரான நீங்கள் எதை இழந்ததாக உணருகிறீர்கள்?
தலைவர் : சாதாரண மனி தர்களைப் போன்று ஓட்டல்களுக்கு சென்று சாப்பிட்டு வர ஆசை உண்டு. அந்த சந்தோஷத்தை பறிகொடுத்து இருக்கிறேன். நிம்மதியை இழந்து இருக்கிறேன். சூழ்நிலை கைதியாக உள்ளேன். இவைகளை தியாகம் செய்து தான் புகழ் அடைந்து இருக்கிறேன்.
கே.பி : உங்கள் வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக எழுதுவீர்களா?
தலைவர் : சுயசரிதை எழுதினால் உண்மைகளை மறைக்காமல் அதில் குறிப்பிடவேண்டும். நான் உண்மைகளை அப்படியே எழுதினால் நிறைய பேர் மனது கஷ்டப்படும். மகாத்மா காந்தியிடம் சுயசரிதை எழுதுவதற்கு தைரியம் இருந்தது. இது எனக்கும் வரும் போதுஎழுதுவேன்.
கே.பி : உங்களை உயரத்தில் தூக்கி வைத்த சினிமாவுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தலைவர் : தமிழர்களும், தமிழ் சினிமாவும் பெருமைப் படுகிற மாதிரி ஏதாவது செய்வேன். (தலைவா... சீக்கிரம் பண்ணுங்க...)
கே.பி: டைரக்டர் ஆவீர்களா?
தலைவர் : படங்களை டைரக்டு செய்யும் ஐடியா இல்லை. அது எனக்குத் தெரியாது.
கே.பி: இதுவரை நடித்த படங்கள் எத்தனை?
தலைவர் : 154 படங்களில் நடித்துள்ளேன்.
கே.பி: வீரபாண்டிய கட்ட பொம்மன், எங்க வீட்டுப்பிள்ளை போன்ற பல படங்கள் இப்போதும் பேசப்படுகிறது. அதுபோல் 50 ஆண்டுகளை தாண்டியும் நிற்கிற உங்கள் படங்கள் எது என கருதுகிறீர்கள்?
தலைவர் : ராகவேந்திரா, பாட்சா, எந்திரன்.
கே.பி: தேசிய விருது எப் போது வாங்குவீர்கள்?
தலைவர் : அது டைரக்டர் கையில் இருக்கிறது.
கே.பி: நாடகங்கள் போட்டால் நடிப்பீர்களா?
தலைவர் : கண்டிப்பாக நடிப்பேன்.
கே.பி: மேஜர் சந்திர காந்த் நாடகத்தை ஏப்ரல் 15-ந் தேதி போடப்போகிறேன். நடிப்பீர்களா?
தலைவர் : நீங்கள் செய்தால் நானும் செய்கிறேன்.
கே.பி: சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் சிகரெட்டை தூக்கி போட்டு புகை பிடிப்பீர்கள். தற்போது அதை குறைத்து விட்டீர்களா?
தலைவர் : சிகரெட் பிடிப்பதை இப்போது நிறைய குறைத்து விட்டேன்.
கே.பி: நான் இயக்கிய படங்களில் உங்களுக்கு பிடித்தது எவை?
தலைவர் : 2 படங்கள் ரொம்ப பிடிக்கும். ஒன்று “அவள் ஒரு தொடர்கதை”, அதை 8 முறை பார்த்தேன். இன்னொன்று அரங்கேற்றம். 12 தடவை பார்த்தேன்.
கே.பி: அரசியலில் பிடித்த தலைவர் யார்?
தலைவர் : லீ குவான் யூ. நவீன சிங்கப்பூரை உருவாக்கியவர்.
கே.பி: யாரையேனும் பார்த்து பொறாமைப் பட்டதுண்டா?
தலைவர் : இமயமலையில் உள்ள துறவிகளைப் பார்த்து பொறாமைப் பட்டிருக்கிறேன்.
கே.பி: பிடித்த இயக்குனர் யார்?
தலைவர் : மகேந்திரன். (கேள்வி கேட்பது தன் குரு என்று தெரிந்தும், தலைவரின் நேர்மை நம்மை வியக்க வைக்கிறது)
கே.பி : பிடித்த உணவு எது?
தலைவர் : சிக்கன்.
கே.பி: நெருங்கிய நண்பர் யார்?
தலைவர் : ராவ்பகதூர்.
கே.பி: என்னிடம் பிடிக்காத விஷயம் எது?
தலைவர் : நீங்கள் கோபப்படு வதை குறைக்க வேண்டும்.
கே.பி: அரசியலுக்கு வருவீர்களா? மாட்டீர்களா?
தலைவர் : அது ஆண்டவன் கையில் இருக்கிறது. (தலைவர் மீண்டும் தப்பித்து விட்டார்.. ஹஹா ஹா.)
இந்நிகழ்ச்சி சன்.டிவி யில் விரைவில் நீங்கள் எதிர்பார்க்கலாம் :)
-விஷ்வா
http://rajinifans.com/latest_news_detail.html?rId=1520
-edited by self-
Idhaya Thalapathy, Dhanush na avalo problem a? Nana ukara sonain :P ... Nan picture ai change pana mudiyatha pa apdi than vanthutu.... Ippalam behaviour ingya romba orkut mari irka :think:Quote:
Originally Posted by Nerd
nice reply :lol:Quote:
Originally Posted by Nerd
vandhutangaya vandhutanga :lol:Quote:
Originally Posted by Anban
:oops: :roll:Quote:
Originally Posted by Sudarsh