தேனிசைத்தென்றலின் முத்துக்கள்-17
90'களின் ஆரம்பத்தில் சத்யராஜ் பானுப்பிரியா பிரபலமான ஜோடியாக திகழ்ந்தனர். நிறைய படம்
அதில் ஒன்று தெற்கு தெரு மச்சான்
பாடல்கள் அனைத்தும் அருமை, தேவாவின் இசையில்
இதோ
https://www.youtube.com/watch?v=k21pLP5NdSA
Printable View
தேனிசைத்தென்றலின் முத்துக்கள்-17
90'களின் ஆரம்பத்தில் சத்யராஜ் பானுப்பிரியா பிரபலமான ஜோடியாக திகழ்ந்தனர். நிறைய படம்
அதில் ஒன்று தெற்கு தெரு மச்சான்
பாடல்கள் அனைத்தும் அருமை, தேவாவின் இசையில்
இதோ
https://www.youtube.com/watch?v=k21pLP5NdSA
இது ஒரு அழகான பாட்டு தென்னமரத் தோப்புக்குள்ள குயிலே குயிலே..ராஜ்ராஜ் சார் தென்னமரம்னு சொன்னதும் நினைவுக்கு வந்ததாக்கும்..
தென்னமரத்துல தென்றலடிக்குது நந்தவனக்கிளியே நினைவுக்கு வருது..! பாட் நான் பார்த்ததில்லை..இனிமேல் தான் ஈவ்னிங்க் பார்க்கணும்..!
http://www.youtube.com/watch?v=NCL4jGJwsHc
ராஜேஷ் சுசீலாம்மா மலேசியா வாசுதேவன்.. முடிவல்ல ஆரம்பம் பாட்டு ரொம்ப ப் பிடிக்கும்.. தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கைகுலுக்கும் காலமடி
வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி ஆசைகளோ கோடி..இதுவும் பார்த்ததில்லை..கேட்க மட்டும் செய்திருக்கிறேன்..! உங்களுக்காக..
http://www.youtube.com/watch?v=9U8SwHizU58
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 12)
http://www.upperstall.com/files/imag...a-stills-1.jpg
1977-ல் ராஜாவின் இசையில் பரிமளித்த இன்னொரு படம் கவிக்குயில். இப்படத்திலும் பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டுக்கள்.
கே.என்.சுப்பு அளிக்கும் எஸ்.பி.டி.பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் ஒரு கருப்பு வெள்ளைத் திரைப்படம். சிவக்குமார், ஸ்ரீதேவி, ரஜினி, படாபட், சுப்பையா, லட்சுமிஸ்ரீ நடித்திருந்தனர். ஆர் செல்வராஜின் கதைக்கு திரைக்கதை, வசனம் பாடல்கள் அமைத்தவர் பஞ்சு அருணாச்சலம். வழக்கம் போல தேவராஜ் மோகன் இரட்டையரே இப்படத்தையும் இயக்கியிருந்தார்கள்.
பாலமுரளிகிருஷ்ணாவின் 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்' மிகப் பிரபலமானது. அதுவே ஜானகியில் குரலிலும் ஒலித்தது.
புல்லாங்குழல் இசையில் பின்னியிருந்தார் ராஜா இப்படத்தில்.
நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இதுதானா கண்மணி ராதா
பாலமுரளியின் குரலில் தேன் மதுரமாய் ஒலித்தது.
'குயிலே கவிக்குயிலே யாரை எண்ணிப் பாடுகிறாய்' பாடலும் மெகா ஹிட். நம் எல்லோரையும் ஆட்கொண்ட ராகம்.
'மானோடும் பாதையிலே' பாடலும் சுசீலா குரலில் அருமை. (இந்தப் பாடலை 'இன்றைய ஸ்பெஷல்' தொடரில் அலசியாகி விட்டது)
'உதயம் வருகின்றதே' ஜானகியின் குரலில் சோக கீதமாய் ஒலித்தது. தனது குருநாதர் ஜி.கே வெங்கடேஷ் அவர்களையும் ராஜா இப்பாடலில் பயன்படுத்திக் கொண்டார்.
'மானத்திலே மீனிருக்க
மருதையிலே நானிருக்க
சேலத்திலே நீ இருக்க
சேருவது எக்காலம்'
ராஜா இசையமைத்த படங்களில் கிராமத்து மண்வாசனையுடன் கூடிய நாயகி இயற்கை சூழ்ந்த பகுதிகளில், வயல் வரப்பு வெளிகளில் ஜானகியின் குரலில் ஓடி, ஆடிப் பாடுவது அன்றைய சினிமாவின் புது இலக்கணமானது. அதே வகையில் 'குயிலே கவிக்குயிலே' பாடலும் அமைந்தது நாயகி ஸ்ரீதேவி. தாவணி போட்ட குயிலாக. இப்போது நாம் பார்க்கப் போகும் பாடல் சுஜாதா பாடியது.
காதல் ஓவியம் கண்டேன்
கனவோ நினைவோ
மனச் சோலையின் காவியமே
உன்னை நானும் நாளும் வேண்டுகிறேன்
கனவோ நினைவோ
அருமையான ஒரு பாடல். சுஜாதா மோகனின் கிறங்கும் குரல்களில். பாடலில் வரும் வயலின் இசையும், கோரஸ் குரல்களும் அமைதியான மெட்டும், தரமான வரிகளும் இப்பாடலுக்கு நம்மை அடிமையாக்குகின்றன.
http://www.youtube.com/watch?v=IZ0Nc...yer_detailpage
இந்தப் பாடல் முதலில் படத்தில் உள்ளதா என்று தெரியவில்லை. இந்தப் பாடலைத் தரவேற்றியிருக்கும் நண்பர் ஏனோதானோவென்று மிக்ஸிங் செய்திருப்பது தெரிகிறது. பாடலுக்கும் காட்சிக்கும் ஒத்து வரவே இல்லை. நண்பர்கள் விளக்கவும். அல்லது ஒரிஜினல் பாடல் இருந்தால் பதியவும். தற்சமயம் கேட்டு மகிழ.
http://www.youtube.com/watch?v=uyDLjVtatIw&feature=player_detailpage
My Favourite Singer Sujatha's first Debut Song. Very Classy music with unique rendering.Thanks Vasu.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோபால் சார்..
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 13)
http://www.upperstall.com/files/imag...a-stills-1.jpg
அடுத்து 'ஓடி விளையாடு தாத்தா'. இதுவும் 1977 இல் வந்த படம். காமெடிக் கூத்து. தரை டிக்கெட், பெஞ்ச் டிக்கெட் ரசிகரக்ளைக் குறி வைத்து எடுத்து காசும் பண்ணின படம். பக்கா லோ கிளாஸ் மூவி. சுருளி, வி.கே.ஆர், அசோகன் இவர்கள்தான் தாத்தாக்கள். ஸ்ரீப்ரியாவைப் பார்த்து ஜொள் விடும் தாத்தாக்கள். இரட்டை அர்த்த வசனங்கள், ஸ்ரீப்ரியாவின் ஓவர் கவர்ச்சி என்று போகும்.
இதிலும்
'ஓல்டெல்லாம் கோல்டு
உன் மண்ட பால்டு
ஓடி விளையாடு தாத்தா
நீ ஓடி விளையாடு தாத்தா'
என்று 3 தாத்தாக்களையும் ஸ்ரீப்ரியா கலாய்த்துப் பாடும் பாடல் சுசீலா அம்மாவின் குரலில் உண்டு. சுசீலா செம ஜாலியாகப் பாடிக் கொடுத்திருப்பார்.
இது இல்லாமல் இளையராஜா முதன் முதலாக எல்.ஆர்.ஈஸ்வரியை ஒரு காபரே நடனத்துக்காக, ஸ்ரீபிரியாவுக்காக பாட வைத்திருப்பார்.
'பார்.... காதல் மலர்த் தோட்டம் பார்'
என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடல். ஆனால் சென்சார் செய்வதற்கு முன்னம் எழுதப்பட்ட வரிகள் என்ன தெரியுமா?
'பார்.... ஆடை மறைத்தாலும் பார்'
இது எப்படி இருக்கு?
இன்னொரு பாடல்.
மனோரமா, ஸ்ரீபிரியா, திருமுருகன் மூவரும் மூன்று தாத்தாக்களைக் கட்டிப் போட்டு டீஸ் செய்து பாடும் பாடல்.
'ஒரு கோடிப் பொய்யை ஒன்னாகச் சேத்து
உண்டாக்கின கட்சி எங்க கட்சி'
ஏ.எல்.ராகவன், மலேஷியா, இளையராஜா, எல்.ஆர். அஞ்சலி பாடிய பாடல் இது.
http://i.ytimg.com/vi/1gJPM-zMHh0/maxresdefault.jpg
நாம் இன்று பார்க்கப் போகும்பாடல்.
மூன்று தாத்தாக்களையும் ஏமாற்றி ஒரு குழந்தை பெற்றதாக பொய் சொல்லி விடுவார் ஸ்ரீப்ரியா. அது என் குழந்தைதான் என்று தாத்தாக்கள் மூவரும் உரிமை கொண்டாடுவார்கள். அப்போது அழும் குழந்தையைத் தாலாட்டி மூன்று கிழங்களும் பாடல் ஒன்று உண்டு. அப்போது ரொம்பவும் ஃபேமஸ் பாடல் அது.
'சின்ன நாக்கு சிமிழி மூக்கு ஆராரோ
பொன் மின்மினியாம் கண்ணு ரெண்டும் தாலேலோ
இளமையிலே நான் நினச்ச ஆச
நீ கெடச்ச போது நரைச்சி போச்சு மீச
செட்டி நாட்டு அஞ்சற பொட்டி
சிங்கப்பூரு வைரக் கட்டி
ஒத்தக் கல்லு சின்னக் கடுக்கண்
ஒனக்குத் தாரேன் முத்தம் கொடுப்பேன்'
'எத்தனையோ அப்பா இந்த உலகத்திலே
உன் பெரியப்பனும் சித்தப்பனும் பக்கத்திலே'
என்று வி.கே.ஆர் அசோகனையும், சுருளியையும் குழந்தையிடம் காட்டி பாடுவது வேடிக்கைதான்.
டி .எம்.எஸ், பாலா, மலேஷியா மூன்று பேரும் சேர்ந்து பாடிய பாடல். சுருளிக்கு பாலா குரல்.
https://www.youtube.com/watch?v=ZF6y5hInK94&feature=player_detailpage
கோ,
என்னுடைய மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்தை சொல்லிக்கிறேன். ஹேப்பி பர்த் டே.
http://www.birthdayimage.net/wp-cont...hday-Gopal.jpg