1959ல் நாடகத்தில் நடிக்கும் போது எம்ஜிஆருக்கு ஏற்பட்ட கால் முறிவு காரணமாக பல படங்களின் படபிடிப்புகள் நின்று போனது .எம்ஜிஆர் முழு ஓய்வில் இருந்தார் . திரை உலகில் எல்லோரும் எம்ஜிஆர் அத்தியாயம் முடிந்து விட்டது . இனி எதிர்காலம் அவருக்கு இல்லை என்று கணித்தார்கள்
நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த ''தாய் மகளுக்கு கட்டிய தாலி '' படம் 31-12-1959 அன்று வெளியானது .
1960ல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தார் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
1960-1977 வரையில் 18 ஆண்டுகளில் மன்னாதி மன்னனாக , வசூல் சக்ரவர்த்தியாக இந்திய திரைஉலகில் பல அரிய சாதனைகள் படைத்தார் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் .