-
ஜுலை 15 கர்ம வீரர் காமராஜர் பிறந்த நாள்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தேசத் தலைவர்கள், நாட்டுக்கு உழைத்தவர்கள், தியாகிகள் பெயர்களை மாவட்டங்களுக்கு சூட்டினார். 1984-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்த நாளன்று அவர் பிறந்த விருது நகரை தலைமையிடமாகக் கொண்டு காமராஜர் மாவட்டத்தை எம்.ஜி.ஆர். உருவாக்கினார்.
தலைமை செயலகம் தலை நிமிர்ந்து பெருமை கொள்ள காரணமான இரு தனிப் பெருந்தலைவர்கள்...... Thanks...
-
July 15, பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா.கல்விக் கண் திறந்த காமராஜர் புகழ் வாழ்க வளர்க.
இந்தி சீனி பாய் - பாய்’ என்று உறவு கொண்டாடிய சீனா 1962-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திடீரென இந்தியா மீது தாக்குதலை தொடங்கியது. நண்பரைப் போல நடித்து நயவஞ்சமாக தாக்குதலில் ஈடுபட்ட சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாரானது. ஆசிய ஜோதி பண்டித நேரு அறைகூவல் விடுத்தார்.
‘‘ராணுவத்துக்கு உதவுவதற்காக பொது மக்கள் தாரளமாக யுத்த நிதி வழங்க வேண்டும்’’ என்று வானொலி மூலம் நாட்டு மக்களை பிரதமர் நேரு கேட்டுக் கொண்டார். அவரது உரையைக் கேட்டவுடன் 75 ஆயிரம் ரூபாய் நிதியை வழங்குவதாக அறிவித்த முதல் நடிகர் மட்டுமல்ல; நாட்டிலேயே முதல் குடிமகன் எம்.ஜி.ஆர்.தான். அது மட்டுமல்ல; அனைத்து இந்தியாவிலும் அவ்வளவு பெரிய தொகையை எந்த தனிநபரும் கொடுக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் 75,000 ரூபாய் இன்று பல கோடிகளுக்கு சமம்!
அறிவித்ததோடு நிற்காமல் உடனடியாக அப்போது முதல்வராக இருந்த காமராஜரிடம் முதல் தவணையாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை கொடுப்பதற்காக காமராஜர் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். சென்றார். காமராஜர் வீட்டில் இல்லை. ரயில் மூலம் வெளியூர் பயணம் செல்வதற்காக அவர் எழும்பூர் ரயில் நிலையம் சென்றுவிட்டது தெரியவந்தது. காமராஜர் திரும்பி வரட்டும், கொடுக்கலாம் என்று எம்.ஜி.ஆர். காத்திருக்கவில்லை. எழும்பூர் ரயில் நிலையம் விரைந்து காமராஜர் பயணம் செய்த பெட்டிக்குச் சென்றார் எம்.ஜி.ஆர்.
ரயில் நிலையத்தில் ஒரே பரபரப்பு. திடீரென அங்கு எம்.ஜி.ஆரைக் கண்டதும் காமராஜருக்கே வியப்பு. நேருவின் உரையை வானொலியில் கேட்டதாகவும் யுத்த நிதிக்கு ரூ.75,000 நன்கொடை அளிக்க இருப்பதை தெரிவித்து, முதல் தவணையாக ரூ.25,000க்கான காசோலையை காமராஜரிடம் வழங்கினார் எம்.ஜி.ஆர். ‘ரொம்ப சந்தோஷம்’ என்று மகிழ்ச்சி தெரிவித்த காமராஜர் இதுபற்றிய செய்தி பத்திரிகைகளில் வெளிவர ஏற்பாடு செய்தார். எம்.ஜி.ஆர். நிதி அளித்த விஷயம் மக்களுக்குத் தெரிய வந்தால், மக்கள் மேலும் ஆர்வமுடன் நிதி அளிக்க முன்வருவார்கள் என்பது காமராஜரின் எண்ணம்.
வெளியூர் பயணம் முடிந்து சென்னை திரும்பிய காமராஜர், பத்திரிகையாளர்களை சந்தித்தார். எம்.ஜி.ஆர். யுத்த நிதி வழங்கியது பற்றியும் பேச்சு வந்தது. அப்போது ஒருவர், ‘விளம்பரத்துக்காகத்தான் எம்.ஜி.ஆர். நிதி வழங்கியிருக்கிறாரா?’ என்று கேட்டதும் வந்ததே கோபம் காமராஜருக்கு.
‘‘சும்மா இருங்கிறேன். நீ எவ்வளவு கொடுத்தே? எப்ப கொடுத்தே? கொடுப்பியோ, மாட்டியோ? கொடுக்கிறவங்களையும் சும்மா ஏன் கிண்டல் செய்யணும்? நேரு ரேடியோவிலே பேசப் போறாரு. காமராஜரு ரெயில்லே போவாரு. முதல்லே கொடுக்கணும்னு பிளான் போட்டாரா? எப்படி முடியும்கிறேன்? ரயில்வே ஸ்டேஷன்லே எம்.ஜி.ஆர். கொடுத்த செக்கை வாங்கி யதும் நானே பிரமிச்சு போயிட்டேன். உடனே பேப்பருக்கும் செய்தி கொடுக்கச் சொன்னேன்’’ என்று பொரிந்து தள்ளிவிட்டார் உண்மையான நாட்டுப் பற்றைப் போற்றும் பெருந்தலைவர் காமராஜர்.
இதனிடையே, தான் யுத்த நிதி அளிக்கும் செய்தியை பிரதமர் நேருவுக்கும் கடிதம் மூலம் எம்.ஜி.ஆர். தெரிவித்தார். யுத்த வேளையில், நெருக்கடியான நேரத்தில் பிரதமர் நேரு நினைத்திருந்தால் தனது உதவி யாளரையோ, பிரதமர் அலுவலக ஊழியர் களையோ எம்.ஜி.ஆருக்கு பதில் கடிதம் எழுதச் சொல்லியிருக்கலாம். ஆனால், யுத்த நிதிக்கு பெரும் தொகையை அள்ளி வழங்கிய நாட்டின் முதல் குடிமகன் எம்.ஜி.ஆருக்கு நேருவே கடிதம் எழுதினார். ‘‘ராணுவத்தினரின் பயன்பாட்டுக்கு தாராளமாக நிதி வழங்கியமைக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்’’ என்று கடிதத்தில் நேரு குறிப்பிட்டார்.
எம்.ஜி.ஆருக்கு பிரதமர் நேரு எழுதிய கடிதம்
எம்.ஜி.ஆரின் நாட்டுப் பற்றையும் நேரு பாராட்டிய பெருந்தன்மையான அவரது மனதையும் பறைசாற்றும் வகையில், சென்னை யில் எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் சாட்சியாக உள்ளது நேருஜியின் அந்தக் கடிதம்....... Thanks...
-
தமிழகத்தில் புரட்சித் ததலைவா் எம்.ஜி.ஆா். சத்துணவுத் திட்டம் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சா் புரட்சித் தலைவா் அவா்களால் ஊரக பகுதிகளில் 01.07.1982 அன்றும் நகா்புறங்களில் 15.09.1982 அன்று உருவாக்கப்பட்டது.
சத்துணவுத் திட்டத்தின் நோக்கம்
பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைத்திட வகைசெய்தல்
ஊட்டசத்து குறைபாடுள்ள பள்ளி மாணவ மாணவியா்களுக்கு ஊட்டசத்து மிக்க உணவு வழங்குவதன் மூலம் கல்வித்தரத்தை மேம்படுத்துதல்
பள்ளி பயிலும் மாணவ, மாணவியா் கல்வி இடைநிறுத்தம் செய்வதை தடுத்திடுதல்.
சத்துணவுத்திட்டத்தை இன்று சிலாகித்துப் பேசினாலும் எம்.ஜி.ஆர் அதை அமல்படுத்தியசமயம் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானார். அன்றைய எதிர்கட்சியான திமுக அந்தத் திட்டத்தை பிச்சைக்கார திட்டம் என வர்ணித்தது. எம்.ஜி.ஆர் குழந்தைகளைப் பிச்சைக்காரர்களாக்குகிறார். பெற்ற பிள்ளைக்குச் சோறு போட பெற்றவர்களால் முடியாதா...” என விமர்சித்தார் திமுக தலைவர் கருணாநிதி.
அத்தனை விமர்சனங்களுக்கு மத்தியிலும் சத்துணவுத்திட்டத்தை அவர் கைவிட விரும்பவில்லை. சத்துணவுத்திட்டத்துக்கு ஆகிற செலவு வருமானமில்லாத அதிகப்படியான செலவு என ஓர் ஆய்வுக்கூட்டத்தில் பேசிய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரைக் கூட்டம் முடிந்தபின் வறுத்தெடுத்தார் எம்.ஜி.ஆர். என்ன செலவானாலும் சத்துணவுத்திட்டத்தைக் கைவிடுவதில்லை என்பதில் உறுதியாக நின்றார் அவர். அடுத்த சில வருடங்களில் அதன் அருமையை உணர்ந்தனர் தமிழக மக்கள். பள்ளிகளில் சேர்க்கை விகிதம் உயர்ந்தது. எம்.ஜி.ஆருக்குப் பாராட்டுகள் குவிந்தன.
ஐ.நா நிறுவனம், சத்துணவுத்திட்டத்தின் செயல்பாட்டை அறிந்து அதுபற்றிய விரிவான அறிக்கையை தமிழக அரசிடமிருந்து கேட்டுப்பெற்றதோடு தனிப்பட்ட முறையில் எம்.ஜி.ஆருக்குப் பாராட்டுத் தெரிவித்தது. அந்த வருடத்தில் நடந்த ஐ.நா சபையின் ஒரு கூட்டத்தில் தமிழகம் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட வரைவு, சத்துணவுத்திட்டம் பற்றியது. அதில் கலந்துகொள்ள தனது அமைச்சரவையிலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரனை அனுப்பிவைத்தார் எம்.ஜி.ஆர்.
பல லட்சம் குழந்தைகளைப் பள்ளிக்கூட வாசலைத் தொட வைத்த இந்த மகத்தான திட்டம் 35 ஆண்டுகளாகத் தொய்வின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொலை நோக்கு திட்டத்தைக் கொண்டு வந்த எம்.ஜி.ஆரின் புகழும் அவர் மறைந்து 32 ஆண்டுகளுக்குப் பின்னும் மங்காது உள்ளது.
சத்துணவுத்திட்டத்திற்கு தமிழக அரசியலில் இன்னொரு பெருமையும் உண்டு. ஒரு கட்சி தன் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரும் திட்டத்தை, அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சி மூடுவிழா நடத்துவது என்பது தமிழக அரசியலில் இன்றுவரை தொடர்ந்துவரும் சாபக்கேடான ஒரு விஷயம். இதில் கடந்த 35 ஆண்டுகளாக மூடுவிழா நடத்தப்படாமல் அடுத்துவரும் ஆட்சியாளர்களாலும் நிதி ஒதுக்கப்பட்டு மேம்படுத்துப்பட்ட ஒரே திட்டம் என்ற பெருமை சத்துணவுத்திட்டத்துக்கு மட்டுமே உண்டு. இந்த வெற்றி சத்துணவு திட்டம் தந்த சத்தியத்தாய் பெற்றேடுத்த தவப்புதல்வனின் வெற்றி....... Thanks
-
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்தார். தெற்குமாசி வீதி மேலமாசி வீதி சந்திப்பில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. பெண்கள் உட்பட சிலர், மேடையில் இருந்த எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக கையில் மனுக்களு டன் ஓரமாக நின்றனர். காவல்துறையினர் அவர் களை போகச் சொல்லியும் மறுத்தனர். ‘‘மனுக் களை எங்களிடம் கொடுங்கள். முதல்வரிடம் நாங்கள் கொடுத்துவிடுகிறோம்’’ என்று போலீஸாரும் அதிகாரிகளும் சொன்னாலும் அவர்கள் கேட்பதாக இல்லை. ‘‘எம்.ஜி.ஆரிடம் தான் கொடுப்போம்’’ என்று உறுதியாகக் கூறினர்.
மேடைக்கு கீழே ஓரமாக நடந்த இந்த சலசலப்பை எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். அதிகாரிகளிடம் விவரம் கேட்டார். ‘‘உங்களிடம் தான் மனு கொடுப்போம் என்று கூறுகின்றனர்’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த கனமே சற்றும் தயங்காமல், ‘‘அதனால் என்ன? அவர்கள் விருப்பப்படி நானே வாங்கிக் கொள்கிறேன்’’ என்று சொன்ன எம்.ஜி.ஆர்., யாரும் எதிர்பாராத வகையில், ஐந்து அடிக்கு மேல் உயரமாக இருந்த மேடையில் அமைக் கப்பட்டிருந்த தடுப்பை கண்ணிமைக்கும் நேரத்தில் தாண்டினார். தடுப்புக் கம்பியை ஒரு கையால் பிடித்தபடி, குறுகலான மேடையின் நுனியில் குத்திட்டு அமர்ந்தபடி மக்களிடம் இருந்து மனுக்களை குனிந்து பெற்றுக் கொண்டார்.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதற்காக மேடையில் தடுப்புக் கம்பியை தாண்டி வந்து மனுக்களை எம்.ஜி.ஆர். பெற்றுக் கொண் டதைப் பார்த்த பொதுமக்கள் ‘புரட்சித் தலைவர் வாழ்க’ என்று உற்சாகமாக கோஷம் எழுப்பினர்;
இத்தகைய மனித நேயமுள்ள இதயதெய்வம் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழக முதல்வர் ஆன தினம் மகத்தானது, மகோதன்னமானது... Thanks.........
-
சென்னை கடற்கரையில் இரவு நடந்த. பொது கூட்டத்தில் தலைவர்கலந்து கொண்டார். கண்கொள்ளா காட்சி நானும் சென்னையில் தான் இருந்தேன் . அந்த மக்கள் வெள்ளத்தை பார்த்து வியந்து போனேன் . இனி அப்படியான சேர்ந்த கூட்டத்தை என் வாழ்நாளில் பார்பேனா?! என்று தெரியாது ... வாழ்க நம் இதயதெய்வத்தின் புகழ்... Thanks...
-
எம்ஜிஆர் முதலமைச்சராக வர வேண்டுமென வெளிப்படையாகவே விருப்பம் தெரிவிக்கும் பாடல் ஒன்றுக்கு உற்சாகத்துடன் வாயசைத்தார் படத்தின் கதாநாயகன் மக்கள் கலைஞர் ஜெய் சங்கர்...
" ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா..
நீ நாடாள வரவேண்டும் ராமச்சந்திரா
தருமம் ஜெயிக்குமென சொன்னவனே ராமச்சந்திரா.
ஒரு தவறும் புரியாமல்
பதவி விட்டு சென்றாய் - பொருந்தாத
பரதர்களிடம் கொடுத்துச் சென்றாய்.
சூரிய வம்சத்தில் வந்தவன் நீயே
வாரி வாரி தந்தவனும் நீயே.
சத்தியத் தாய் பெற்றெடுத்த பிள்ளையல்லவா - நீ
சத்தியத்தின் வழி நிற்பவன் அல்லவா.
மாதம் மும்மாரி பொழிய வேண்டும் ராமச்சந்திரா - அதற்கு
நீ வரவேண்டும்- வழி செய்ய வேண்டும் ராமச்சந்திரா "
- தேர்தலில் ஜெயித்து எம்ஜிஆர் முதன்முறையாக ஆட்சியை பிடிப்பதற்கு முந்தைய ஆண்டு அதாவது 1976ல் வெளியான ' பணக்காரப் பெண்' என்ற படத்தில் இடம் பெற்றது தான் மேற்படி பாடல். 1977 சட்டசபைத் தேர்தல் சமயத்தில் அதிமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் ஒலிபரப்புமளவுக்கு 'அரசியல் பிராண்டு' பெற்றிருந்தது இப்பாடல்.
தங்கத்தலைவன் தனக்காக வாதிட்டு பாடலை எழுதவைத்த அந்த சம்பவம் கவிஞரின் நெஞ்சில் படிய, அந்த நன்றியை அவர் எழுதிய பாடலில் வரிகளாக்கிக் காட்டுகிறார். அதுதான் ஒரு படைப்பாளியின் ஆளுமை என்பது. ’மீனவ நண்பன்’ படத்தில் இடம் பெற்ற ‘தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து” பாடல்தான் முத்துலிங்கம் எழுதியது. இது ஒரு காதல் பாடல். இதில் இரண்டாவது சரணத்தில் புரட்சித்தலைவருக்காக இப்படி எழுதுகிறார்.
“எந்தன் மனக்கோவிலில் – தெய்வம்
உனைக்காண்கின்றேன்
உந்தன் நிழல் போலவே – வரும்
வரம் கேட்கிறேன்”
என்று கதாநாயகி பாடுவதாக வரும் வார்த்தைகளில் தலைவனுக்கு நன்றி தெரிவிக்கிரார்....... Thanks.........
-
இனிய மாலை வணக்கம்
."எனக்கு ஜாங்கிரி சாப்பிட வேண்டும்போல இருக்கிறது"
-ஆசை ஆசையாய் கேட்ட அன்புத்தலைவர் எம்ஜியார்..
பழனி ஜி.பெரியசாமி பெரிய தொழிலதிபர், சென்னை கிண்டியிலுள்ள லீ மெரிடியன் ஹோட்டல் அதிபர்,
அவர்தான் நம் தலைவர் எம்.ஜி.ஆர். நியூயார்க் ப்ரூக்ளின் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது தலைவருக்கு பல வகையிலும் உதவிகரமாக இருந்து எம்.ஜி.ஆரின்இதயத்தில் இடம் பெற்றவர்.
1984 நவம்பர் -1985 பிப்ரவரி காலகட்டம்.எம்.ஜி.ஆர் அமெரிக்காவிலுள்ள ப்ரூக்ளின் மருத்துவ மனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்டு உடல் நலம் தேறிவரும் சமயம். அவருடன் பழனி ஜி.பெரியசாமி, அவருடைய தனி மற்றும் அரசு செயலர்கள், அவருயை மனைவி ஜானகி மற்றும் மருத்துவமனை செவிலியர்கள் அனைவரும் ஒரு நாள் மாலை பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென தலைவருக்கு ஒரு ஆசை ஏற்பட்டது. அவர் பழனி பெரியசாமியை பார்த்து,
"இப்போது எனக்கு ஜாங்கிரி சாப்பிட வேண்டும்போல இருக்கிறது" என யாரும் எதிர்பார்க்காத ஆசையை வெளியிட்டார் தலைவர்.
அனைவரும் சிறிது நேரம் அதிர்ச்சியாய் நின்றனர். காரணம் தலைவருக்கு நீரழிவு நோய் இருந்து சிகிச்சையில் இருக்கிறார். 'இப்போது போய் இப்படி கேட்கிறாரே!!' என ஆச்சரியம்.
ஆனால் கேட்பது எம்.ஜி.ஆர் ஆயிற்றே!! வேறுஎன்ன செய்வது? உடனே பழனி பெரியசாமி தன்னுடன் எம்.ஜி.ஆரின் தனி செயலர் பிச்சாண்டியை அழைத்துக்கொண்டு ஒரு டாக்ஸியில் ஜாங்கிரி வேட்டைக்கு புறப்பட்டனர்.
ஆனால் அந்த சமயம் பார்த்து ஜாங்கிரி எங்குமே கிடைக்கவில்லை. விட முடியுமா? நியூயார்க் கடை த்தெரு இந்தியன் ரெஸ்டாரண்டுகளில் எல்லாம் தேடுகின்றனர். ஜாங்கிரி லேசில் கிடைக்கவில்லை.
கடைசியில் ஒரு வழியாக ஒரு இந்தியன் ரெஸ்டாரண்டில் கண்டு பிடித்தனர். ஆனால் பரிதாபம். நான்கே நான்குதான் இருந்தன. கிடைத்ததை வாங்கிக் கொண்டு வெற்றி வீரர்களாய் மருத்துவ மனைக்கு திரும்பினர்.
ஆனால் என்ன பத்து டாலர் ஜாங்கிரி வாங்கி வர அறுபது டாலர் செலவு!
எம்.ஜி.ஆர் அவர்களைப் பார்த்து "என்ன? ஜாங்கிரி கிடைத்ததா?"
"ம்ம்.. கிடைத்தது.ஆனால் நான்குதான் கிடைத்தது." இவர்கள் பதில். இதன் பிறகுதான் ஒரு ஆச்சரியம்.
எம்.ஜி.ஆர் என்ன செய்தார் தெரியுமா??? மருத்துவமனையின் அந்த அறையில் இருந்தவர்களை எண்ணத் தொடங்கினார். செவிலியர்களையும் சேர்த்து பதினொன்று வந்தது.
அதன் பிறகு தலைவர் அந்த நான்கு ஜாங்கிரிகளையம் பிட்டு பதினொரு துண்டுகளாக்கினார். ஒவ்வொருவரையும் கூப்பிட்டு ஒவ்வொரு சிறு ஜாங்கிரித் துண்டையும் வழங்கினார்.
தானும் ஒரு துண்டை வாயில் போட்டுக் கொண்டு குழந்தை போல் சிரித்தார். அங்கிருப்பவர்களின் கண்களில் ஈரம் கசிந்தது.
அவர் நினைத்திருந்தால், ஜாங்கிரிகளை வைத்திருந்து பின்னர் சாப்பிட்டிருக்கலாம். அவர்தான் அன்னதான பிரபுவாயிற்றே! முடியுமா?
அவர் அன்னை ஊட்டி வளர்த்த அந்த பண்பு அவர் ரத்தத்தில் ஊறியதாயிற்றே!! எம்.ஜி.ஆருக்குப் பிறகு அவரைப் போன்ற கொடைத்தன்மை, மனிதாபிமானம் கொண்ட மனிதர் இவ்வுலகில் உள்ளனரா?
தேடிக்கொண்டேயிருப்போம்!!!! அவர் இன்னொறு முறை பிறக்கும் வரை........... Thanks...
-
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கம்.
எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன்’ படத்தில், ‘தூங்காதே தம்பி தூங்காதே....’, ‘ அரசிளங் குமரி' படத்தில் ‘சின்னப் பயலே... சின்னப் பயலே சேதி கேளடா...’ போன்ற கருத்தாழம் மிக்க பாடல்களை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 1959-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி இளம் வயதிலேயே அவர் மறைந்துவிட்டார். அவரது குடும்பத்தினருக்கு பண உதவி செய்து ஆறுதல் கூறிய எம்.ஜி.ஆர்., ‘நாடோடி மன்னன்’ படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் அந்தப் படத்தின் பாடல்கள் ரெக்கார்டு உரிமையை அவர்களுக்கே கொடுத்துவிட்டார்!
கொடுத்து கொடுத்து நம்மை சிறையிலிட்டார்.......... Thanks...
-
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
கக்கனை போல் ஒரு அமைச்சரை இனி என்றுமே பார்க்க முடியாது என்று சொல்லலாம். இன்றைய தலைமுறைக்கு அவரது பொதுவாழ்க்கை தெரியப்போவதில்லை.
1980லேயே மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இருந்தவர்களுக்கே அந்த மாமனிதரை தெரிய வில்லையே.
சாதாரண மக்களுடன் மக்களாக மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார் கக்கன். மதுரை முத்துவை நலம் விசாரிக்க சென்ற அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். இதை கேள்விப்பட்டு அவர் தங்கி இருந்த வார்டுக்கு ஓடோடி சென்றார்.
அவரது நிலைமையை பார்த்து தவித்த எம்.ஜி.ஆர். இவர் யார் என்று தெரியுமா? சுதந்திரத்துக்கு போராடிய வரும் தமிழகத்தில் அமைச்சராகவும் இருந்த கக்கன் என்றதும் எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.
உடனே மருத்துவர்களிடம் அவருக்கு தனி அறை ஏற்பாடு செய்து உயர் சிகிச்சை வழங்க எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். ஆனால் கக்கன் அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்து விட்டார். பின்னர் அவரை எம்.ஜி.ஆர். வலுக் கட்டாயமாக சென்னைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் சில நாட்களில் அவர் இறந்து போனார்.
அரசியலில் அவர் எப்படி வாழ்ந்து இருக்கிறார் என்பதற்கு இந்த ஒரு உதாரணமே போதும்.
நேரம் வரும்போது இப்படிப்பட்டவர்கள் வாழ்ந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்து பெருமை பட்டுக் கொள்ளலாம்.
கக்கன் மாசற்ற மனிதனாக வாழ்ந்திருக்கிறார்.புரட்சித்தலைவரோ மனித நேயமுள்ள மாமனிதராய் திகழ்ந்துள்ளார்....... Thanks...
-
முக நூல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்....
அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்....
ஒரு நாள் அதிகாலை ஒலி பெருக்கியில் உலகம் பிறந்தது எனக்காக-- மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் --புத்தன் ஏசு காந்தி பிறந்தது --தாய் மேல் ஆனை -- என்னதான் நடக்கும் நடக்கட்டுமே தொடர்ந்து தலைவர் பாடல்களாய் ஒலிக்கிறது என் மனதில் ஒரு சந்தேகம்... இன்று என்ன விஷேசம்... சந்தேகத்திற்கு இடையே நினைவு வருகிறது ...ஆகா ...இன்று ஜெ.பிறந்த நாள் என.அடுத்த நிமிடம் என் நினைவில் ஜெ.பிறந்த நாளுக்கு தலைவர் பாடல்கள் தான் ஒலிபரப்ப வேண்டிய கட்டாயம்.
தலைவரை மறக்க நினைப்பவர்களே சற்று யோசித்து பாருங்கள்.ஜெ பிறந்த நாள் என்பதற்காக ஆடை முழுதும் நனைய நனைய மழை அடிக்குதடி --பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா-- கட்டழகு தங்க மகள் திருநாளாம்-- கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ -- என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ போன்ற பாடல்களை ஒலி பரப்ப முடியுமா?அப்போது மட்டும் தலைவர் தேவைப்படுகிறார் அல்லவா? தற்போது தலைவரை புறம் தள்ளி ஜெ.வை முன்னிலை படுத்தும் நபர்களே சற்று மனசாட்சிக்கும் இடம் கொடுங்கள்.
தலைவர் அண்ணாவின் அரசு என்றார். ஜெ வோ எம்.ஜி.ஆரின் அரசு என்று கூறவில்லை மாறாக என்னோட அரசு என்றார். அவர் வழி வந்தவர்களோ அம்மாவின் அரசு என்கிறீர்கள். அப்ப எது தலைவரின் அரசு இது ஒன்று போதாதா தலைவரின் புகழை மறைக்கிறீர்கள் என்பதற்கு உதாரணம்.
எந்த பண சுகமும் பதவி சுகமும் அனுபவிக்காத கடைக்கோடி தொண்டன் தூக்கத்தில் கூட சொல்லிக்கொண்டிருக்கிறான் இது புரட்சி த்தலைவர் அரசு என்று அந்த பலவீனம் தான் பதவியில் இருப்பவர்களுக்கு பலம்.
தலைவர் ஆசியால் மக்களின் தீர்ப்பில் நல்லதொரு வாய்ப்பு கிடைக்கும் என்று நிச்சயம் நம்புவோம். அப்படி வாய்ப்பு கிடைத்தது என்றால் இனிமேலாவது தலைவர் புகழ் பாடுங்கள். தடுமாற்றம் வராது.இனிமேலும் மாறவில்லை என்றால் மாற்றம் ஒன்றே உங்களை மாற்றும்.
மாறாத நன்றி மறவாத நல்ல மனம் கொண்ட கோடிக்கணக்கான மக்கள் மனதில் தலைவர் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்...... Thanks...
-
அருமை சகோ
M Sivanatarajan Poonmanam
அவர்களே தாங்களின் கருத்து அருமை
புரட்சித்தலைவர் தான் அஇஅதிமுக & இரட்டை இலை என்பதை எல்லாம் மறந்து விட்டார்கள்
அவரின் பாடல்களை பயன்படுத்தினால் தான் ஒட்டே
புரட்சித்தலைவர் அவரின் "குரு அண்ணா" அவர்களை கடைசிவரை மறக்கமால் கொடியிலும் அவரின் (புரட்சித்தலைவரின்) கையிலும் என்னை போன்ற உண்மை விசுவாசிகள் கையிலும் அண்ணா கொடியை பச்சைக்குத்தி விட்டார் அனால்
தற்போது எல்லாம் நம்முடைய குரு புரட்சித்தலைவர் படத்தை போடுவதில்லை போட்டாலும் Stamp அளவுக்கு தான் போடுக்கிறர்கள்
நானும் டெல்லியில் பாரளுமன்றத்தில் துனை சபாநாயகர் திரு தம்பித்துரை அலுவலகத்தில் அவர் உட்காரும் டேபிளில் தலைவர் அம்மா படத்தை
பார்த்து மகிழ்ச்சி கொண்டேன் .
ஆனால் தமிழக அமைச்சர்கள் டேபிளில் அம்மா படம் மட்டும் தான் உள்ளது. இது நியாயமா ?
இனிமேலாவது புரட்சித்தலைவரின் புகைப்படத்தை பெரியதாக போட வோண்டுக்கிறேன
நானும் மதுரைக்கு போய் இருக்கிறேன்
சின்ன சின்ன ஒட்டலில் கூட சாமி படம் பக்கத்தில் புரட்சித்தலைவர் படம் இருக்கும் பூஜை செய்வதையும் பார்த்து உள்ளேன்
புரட்சித்தலைவரின் இரட்டை இலையை மறக்கமால் தேனி தொகுதியில் இரட்டை இலையை யாரும் அசைக்கமுடியவில்லை
தயவுச்செய்து புரட்சித்தலைவரை மறக்கவோண்டாம்...
இனி தலைவர் அம்மா ஆட்சி என்று சொல்ல வேண்டுகிறேன்...
வாழ்க புரட்சித்தலைவர் புகழ்....... Thanks...
-
நமக்கெலாம் தலைவர்
அரசுதான்! அதை தொடர்ந்து அவர் பெயரைச்சொன்னதால் அம்மாவின்அரசு அதைமறைத்து அம்மாவின் அரசு என்றால்தான் பிழைக்கமுடியும் என்றகூட்டம் எல்லோருக்கும் தெரியும் அது வேறு ஒரு கூட்டம் அதனால்தான் அவரையும் இழந்து!!!!!!!... எப்பொழுதும் தலைவர் அரசு என்று சொல்லி கொண்டே இருப்பார்கள் எனில் எந்த பிரச்சினையும் பறந்தோடும்...... Thanks...
-
கல்கி வார இதழ் -03/05/20
-------------------------------------------
கேள்வி*: மற்ற நாடுகளிலும்*நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் உண்டா*?
* * * * * * * * * பிரதீபா*ஈஸ்வரன், சேலம்*
தராசு பதில்கள்*:* ஹீரோக்களுக்கு ரசிகர் மன்றங்கள் என்ற கலாச்சாரத்தை உலகத்திற்கே* அறிமுகப்படுத்திய*வர்கள்* தமிழர்கள்தான் .* எம்.ஜி.ஆர்.* சிவாஜி*கணேசன் தொழிற்போட்டி உச்சமடைந்து காலத்தில்தான் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் இவர்களுக்கு ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன .*
கடல்*கடந்து*ரசிகர் மன்றங்களை வென்றவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான் .அந்தமான்*தீவில்*பணத்தோட்டம்*எம்.ஜி.ஆர். மன்றத்தை*திறந்து வைத்தவர்*அன்றைய இந்திய*பிரதமர் லால்*பகதூர்*சாஸ்திரி*.இது வரலாறு .இன்று ஹாலிவுட்*நடிகர்களுக்கு முகநூல்*பக்கமிருக்கிறது .* ஆனால் மன்றங்கள் கிடையாது . அதுபோல்*கட் அவுட், பால் அபிஷேகம் கிடையாது .
-
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும்
வணக்கம் .
நமது ஒளிவிளக்கின் குலவிளக்கு ஜானகி அம்மையாரின் நனைவு நாளான அன்று(19.05.2019)ஆனந்த விகடனில் நடிகை விஜயகுமாரியின் கருத்து.....
எம்.ஜி.ஆர் சினிமாவிலும் அரசியலிலும் ஜொலித்த காலங்களில், அவருக்கு நிழலாக இருந்து கவனித்துக்கொண்டவர், அவரின் துணைவியார் வி.என்.ஜானகி. அரசியலில் நாட்டமில்லாதவர் ஜானகி. ஆனால், எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, சிலகாலம் முதல்வர் பதவியை வகித்தார் ஜானகி. எனவே, தமிழக அரசியல் வரலாற்றில் இவரின் பெயரும் நிலைத்துவிட்டது. வி.என்.ஜானகியின் நினைவு தினமான இன்று (மே 19), அவருடன் பழகிய நினைவுகளைப் பகிர்கிறார் நடிகை விஜயகுமாரி.
``எம்.ஜி.ஆர் என் உடன்பிறவா அண்ணன் என்பது பலருக்கும் தெரியும். அவர் துணைவியார் ஜானகியை நான் அக்கானுதான் கூப்பிடுவேன். எம்.ஜி.ஆர் உச்ச நடிகராகவும் முதல்வராகவும் ஜொலித்த காலங்களில் மிக எளிமையாகவே வாழ்ந்தார் ஜானகி அக்கா. வீட்டு வேலைக்குப் பணியாளர்கள் இருந்தாலும், அக்காவும் நிறைய வேலைகளைச் செய்வாங்க. எம்.ஜி.ஆரின் சினிமா, அரசியல் பணிகள்ல அக்கா தலையிடவே மாட்டாங்க. அவங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம், எம்.ஜி.ஆர் மற்றும் குடும்பம் மட்டுமே!
ஒவ்வொரு பொங்கல் பண்டிகையின்போதும் என் கணவரும் நானும் எம்.ஜி.ஆர் வீட்டுக்குப் போவோம். அவர் எங்களுக்கு 100 ரூபாய் கொடுப்பார். ஜானகி அக்கா எனக்கு ஒரு புடவை கொடுப்பார். நானும் அக்காவுக்குப் புடவை கொடுப்பேன். எம்.ஜி.ஆர் குடும்பத்தில் நானும் ஓர் அங்கமா இருந்தேன். ஒருநாள் அதிகாலையில 5 மணிக்கு எனக்குப் போன் பண்ணினார் எம்.ஜி.ஆர். வழக்கத்துக்கு மாறாக, `சம்பந்தி... என்ன பண்றீங்க? மீதி விஷயத்தை அக்கா சொல்வாங்க'னு சொல்லிட்டு போனை ஜானகி அக்காகிட்ட கொடுத்திட்டார். எனக்கு ஒண்ணுமே புரியலை. அப்புறம் பேசிய ஜானகி அக்கா, `உன் பையனுக்கு எங்க பேத்தியைக் கல்யாணம் பண்ணிக்கொடுக்கலாம்னு ஆசைப்படறோம்'னு சொன்னார். அது சரிவராதுனு நான் சொன்னதும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜானகி இருவருமே என் சூழ்நிலையைக் கனிவோடு புரிஞ்சுகிட்டாங்க.
எம்.ஜி.ஆர் சுடப்பட்டபோதும், பல வருடங்களுக்குப் பிறகு அப்போலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோதும். தினமும் ஜானகி அக்காவுக்குச் சாப்பாடு கொண்டுபோய் கொடுத்துட்டு, சிகிச்சையில் இருந்த எம்.ஜி.ஆர் அண்ணனைப் பார்த்துட்டு வருவேன். ஜானகி அக்காவுக்கு ஆன்மிகத்துல அதிக ஆர்வம். அவங்க என்னை நிறைய கோயில்களுக்குக் கூட்டிப்போவாங்க. அவர் வீட்டுக்கு நான் அடிக்கடிப் போவேன். அவங்க என் வீட்டுக்கும் அடிக்கடி வருவாங்க. நேரம் போவதே தெரியாம, நிறைய விஷயங்களைப் பத்திப் பேசுவோம். ஆனால், எங்க உரையாடலில் சினிமா, அரசியல் விஷயங்கள் அதிகம் இடம்பெறாது.
நான் எம்.ஜி.ஆர் வீட்டுக்குப் போனால், `வா! சாப்பிடலாம்'னு சொல்லுவாங்க ஜானகி அக்கா. `அக்கா, கருவாடு சமைச்சிருக்கீங்களா'னு கேட்பேன். `நீயும் உன் அண்ணனும் கருவாடு இல்லைன்னா சாப்பிட மாட்டீங்களா'னு கேட்பாங்க. எனக்காக ஸ்பெஷலா சமைச்சுப் பரிமாறுவாங்க. அக்காவுக்கு அப்போ நடிப்பில் ஆர்வமில்லைனாலும், சினிமா பார்க்க ரொம்ப ஆசைப்படுவாங்க. `நாளைக்குப் புதுப்படம் ரிலீஸாகுது. நீ கண்டிப்பா வரணும்'னு என்னை வலியுறுத்திக் கூப்பிடுவாங்க. என் ஷூட்டிங் பணிகள் பாதிக்காத வகையில், முதல்நாள் முதல் காட்சினு அக்காவும் நானும் நிறைய படங்களுக்குத் தோழிகளுடன் போவோம். சிறப்புச் சலுகைகளைப் பயன்படுத்தாமல், நாங்களே வரிசையில் நிண்ணு டிக்கெட் வாங்கித்தான் சாதாரண மக்கள்போல படம் பார்ப்போம்.
எந்தப் பாதுகாப்பும் இல்லாம, அக்காவும் நானும் அடிக்கடி கார்ல பயணம் செய்வோம். சினிமா, கட்சிப்பணினு எம்.ஜி.ஆர் அண்ணன் தன் வேலைகளை முடிச்சுட்டு பலநாள்கள் வீட்டுக்குத் தாமதமா வருவார். அப்போ ஜானகி அக்கா, எனக்கு போன் பண்ணுவார். `எனக்குத் தூக்கம் வருது'னு சொன்னாலும், அடம்பிடிச்சு எம்.ஜி.ஆர் வரும்வரை என்கிட்ட மணிக்கணக்கில் கதை பேசுவார். . எம்.ஜி.ஆர் கடைசி காலகட்டத்தில் உடல்நிலை சரியில்லாம இருந்தார். அப்போ குளிப்பாட்டிவிடுறதுல இருந்து அவரைக் குழந்தைபோல கவனிச்சுகிட்டாங்க ஜானகி அக்கா.
கருத்து வேறுபாடு காரணமாக என் கணவரைப் பிரிஞ்சு வந்த பிறகு, நான் தனிமையில் ரொம்பவே வேதனையிலும் கஷ்டத்திலும் இருந்தேன். அப்போ எனக்குப் பக்கபலமா இருந்தார் ஜானகி அக்கா. எனக்கு வழிகாட்டியாக இருந்து, மீண்டும் நான் நடிக்கிறதுக்கு ஊக்கம் கொடுத்தார். பிறகு, எனக்கு ஒரு தாய்போல அரவணைப்புடன் இருந்தார். எம்.ஜி.ஆர் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்தபோது, ஒவ்வொரு நாளும் எனக்கு போன் பண்ணிப் பேசுவார் ஜானகி அக்கா. அவரின் கஷ்ட காலத்தில் நானும் ஆறுதலாக இருந்தேன். அக்கா ரொம்ப இரக்கக் குணம் கொண்டவங்க. யார் உதவினு கேட்டாலும், முன்வந்து உதவி செய்வார்" என்கிறார் விஜயகுமாரி.
வி.என்.ஜானகி வழங்கிய நிலத்தில்தான் தற்போதைய அ.தி.மு.க அலுவகம் செயல்படுகிறதாம். ``என் அண்ணன் அரசியல் இருந்த காலகட்டம். அப்போ தன் சொந்த நிலத்தை, கட்சி அலுவலகம் கட்ட எம்.ஜி.ஆர் கிட்ட இலவசமா கொடுத்தாங்க ஜானகி அக்கா. அந்த இடத்துலதான், இப்போ சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகம் அமைந்திருக்கு. அக்காவுக்கு துளிகூட அரசியலில் ஆர்வமில்லை. ஆனா, சூழ்நிலையால் சில நாள்கள் முதல்வராக இருந்தாங்க. அப்போ அடுத்தடுத்த அரசியல் சூழல்களால், அவங்க கவலைப்பட்டாங்க. அதனால, `ஏன் அக்கா உங்களுக்கு இந்த வேண்டாத வேலை'னு கேட்டேன். `என் தலையெழுத்து. நான் ஒரு சூழ்நிலைக் கைதி'னு சொல்லி வருத்தப்பட்டாங்க. முதல்வரா இருந்தபோதும், வீட்டு வேலைகள் செய்வதை அக்கா வழக்கமா வச்சிருந்தாங்க. `என் வீட்டு வேலையை நான் செஞ்சா என்ன தப்பு'னு கேட்பாங்க. அண்ணனின் மறைவுக்குப் பிறகு, அக்காவுக்கு உடல்நிலை சரியில்லாம போச்சு.
ஜானகி அக்காவின் தம்பியின் பேத்திக்குப் பிறந்த நாள் நிகழ்ச்சி. மதியம் வீட்டுக்குச் சாப்பிட வரச்சொல்லி என்னைக் கூப்பிடிருந்தார் அக்கா. நான் போறதுக்கு ஒருமணிநேரம் தாமதமாகிடுச்சு. அதுக்குள் நிகழ்ச்சி முடிந்துடுச்சு. அப்போ, சாப்பிட்டு முடிச்ச உடனே அக்காவின் தலை தொங்கி, இறந்துட்டாங்க. நான் அவங்க வீட்டுக்குள் போகும்போது, `அம்மா இறந்துட்டாங்க'னு காவலாளி சொன்னார். பதறிப்போய் வீட்டுக்குள் போனேன். முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அங்க வந்து, அரசு மரியாதையுடன் அக்காவின் உடல் அடக்கத்துக்கு ஏற்பாடு செய்தார்.
அக்காவின் உடல் அடக்கம் நடந்தபோது. என் விரலில் இருந்த மோதிரம் ஒன்றைக் கழற்றி அக்காவின் உடல்மீது போட்டுட்டு என் வீட்டுக்கு வந்தேன். பிறகு, இதுவரை ராமாவரம் தோட்டத்துக்கு நான் போகவேயில்லை. ஒவ்வொரு நாளும் என் அண்ணனையும் அக்காவையும் நினைச்சுப் பார்ப்பேன். அவங்க என் மனதில் நீங்கா புகழுடன் இருப்பாங்க" என்று உருக்கமாகக் கூறுகிறார் விஜயகுமாரி.
நன்றி --ஆனந்த விகடன்........ Thanks...
-
உருக்கமான நினைவுகள்... பதிவு மூலம் புது புது விவரங்கள் அறிய முடிகிறது...... நன்றி நண்பரே.... இனிய இரவு வணக்கம்.....
விஜயகுமாரியை தலைவர் தன் தங்கை போல் நினைத்ததால் அவர்களுடன் ஜோடியாக நடிக்க ஒரு போதும் சம்மதிக்கவில்லை........ Thanks...
-
புரட்சித்தலைவரின் "உலகம் சுற்றும் வாலிபன்" வெள்ளித்திரைக்கு வந்த நாள் (11.05.1973).
உலகம் சுற்றும் வாலிபன் பெரும் நெருப்பாறுகளைக் கடந்து திரையைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன் வேறு எந்த ஒரு மாநிலமொழி படத்துக்கும் இப்படி ஒரு முட்டுக்கட்டை கிடையாது திரும்பிய திசைகளிலெல்லாம் நெருக்கடி பெற்ற படம் .படத்தை திரையிடும் முயற்சியில் இறங்கும் பொழுது டப்பிங் மிக்சிங் ரீ ரிக்கார்டிங் பிரிண்ட் போடுதல் என எந்த பணிகளில் எப்போது எம்ஜிஆர் ஈடுபட்டாலும் மின்சாரம் அறவே இருக்காது எம்ஜிஆருக்கு எப்படி எல்லாம் தொல்லை தரலாம் என்பதில் முழு கவனம் செலுத்தியது கருணாநிதி யின் ஆளுங்கட்சி மேலும் சுவரொட்டிகளின் வரியை உயர்த்தியது.
படம் வெளியான அன்று சென்னையிலே மின் வினியோகம் இல்லை இனிமேலும் மின்விநியோகம் அறவே வராது என்ற நிலைமையை புரிந்த தேவிபாரடைஸ் சொந்தக்காரர்கள் சக்திமிக்க ஜெனரேட்டரை வைத்து திரையில் உலகம் சுற்றும் வாலிபனை திரையிட்டு காட்டினார்கள்.
*'மேலே ஆகாயம் கீழே பூமி' இதுதான் உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வைத்த முதல் டைட்டில் .
*அயல்நாட்டு படப்பிடிப்புக்கு அதிகம்பேர் அரசாங்கம் அனுமதிக்கவில்லை. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், விஎன் ஜானகி அம்மையார், ஆர் எம் வீரப்பன், மஞ்சுளா ,சந்திரகலா, லதா ,அசோகன், நாகேஷ், ஒளிப்பதிவாளர் ராமமூர்த்தி, இயக்குனர் பா .நீலகண்டன் ,வசனகர்த்தா கே.சொர்ணம் நடன இயக்குனர் கோபாலகிருஷ்ணன் போன்ற முக்கியமானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் .
*உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு முதலில் இசை அமைப்பாளராக நியமிக்கப்பட்டவர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் .பின்னர் எம்.எஸ்.வி இசை அமைப்பாளர் ஆனார்.
*உலகம் சுற்றும் வாலிபன் வட ஆற்காடு தென் ஆற்காடு செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கான வினியோக ஒப்பந்தம் முதன்முதலாக ஏவிஎம் மெய்யப்ப செட்டியாரோடு கையெழுத்தாகியது .
*பட்டிக்காட்டு பொன்னையா இயக்குனர் பி எஸ் ரங்கா அவர்களின் உதவியாளர் ஹரி அவர்கள் எக்ஸ்போவில் படம் எடுப்பதற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கிறார் .
*முப்பத்து ஆறாயிரம் பல்புகளில் வெளித்தோற்றத்தில் சுவிஸ் பெவிலியனில் எம்ஜிஆரும் சந்திரகலாவும் ஆடிப்பாடும் நிகழ்ச்சிக்கு விசேஷஅனுமதி வழங்கப்பட்டது.எக்ஸ்போ 70 கண்காட்சியில் மொத்தம் நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்தது .
*காமபுரா புத்தர் சன்னதி ஜப்பானின் புகழ்பெற்ற புராதான கோவில் அங்கு வீற்றிருக்கும் பிரம்மாண்ட சித்தார்த்தர் சிலைக்கு அருகில் எம்ஜிஆர் புத்தி தெளிந்து அவர் பைத்தியமாக தோன்றும் காட்சியை எடுத்தனர் .
*லில்லி மலருக்கு கொண்டாட்டம் என்ற பாடலில் எம்ஜிஆர் மஞ்சுளா கப் அண்ட் சாசரில் தோன்றும் காட்சி நாராவில் டரீம் லேண்டில் எடுக்கப்பட்டது
.
*அன்னப்பட்சி போன்ற சிறிய கப்பலில் எடுக்கப்பட்ட பன்சாயி பாடல் காட்சி டோக்கியோவில் உள்ள யுமூரிலேண்டில் எடுக்கப்பட்டது .
*டால்ஃபின் ஷோ மற்றும் தீ வளையத்தில் நாய் மற்றும் புலிகள் தாவும் காட்சியை மக்கள் ரசித்துக் கொண்டிருக்கும்போதே புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நேரடியாக படமாக்கினார்.
*லதாவின் முதுகில் அசோகன் துப்பாக்கியை நீட்டியவாறு பின்தொடரும் சீன் டோக்கியோவில் பரபரப்பான கின்சா அங்காடித்தெருவில் எடுக்கப்பட்டது .
*நிலவு ஒரு பெண்ணாகி பாடல் ஹாங்காங்கில் உள்ள பெல்ஸ் கடற்கரை யில்படமாக்கப்பட்டது .
*குழந்தைகளோடு எம்ஜிஆர் லதா பங்கேற்கும் சிக்குமங்கு பாடல்டைகர் பார்ம் கார்டனில் படமாக்கப்பட்டது .
*ஹாங்காங்கின் இந்திய வம்சாவளி
மிஸ்டர் ஹரி லீலாவின் விசைப்படகில் தங்கத் தோணியிலே பாடல் எடுக்கப்பட்டது .
தங்கத் தோணியிலே பாடல் கே.ஜே.யேசுதாஸ் எம்ஜிஆருக்காக பாடிய முதல் பாடல் .
*புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் சேர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் பாடலில் நடித்த தாய்லாந்து நடிகை மேட்டா ரூங்ராத் தமிழ் சினிமாவில் இடம் பெற்ற முதல் வெளிநாட்டு நடிகை ஆவார்.அந்த பெருமை எம்.ஜி.ஆரையே சாரும்.
*அவள் ஒரு நவரச நாடகம் பாடல் காட்சி சில மேட்சிங் ஷாட்டுகளை சத்யா ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான நீச்சல் தொட்டியில் எடுக்கப்பட்டது.
*சென்னை தேவிபாரடைஸில்
தொடர்ந்து 225 காட்சிகள்
மதுரை மீனாட்சியில்
தொடர்ந்து சுமார் 300 காட்சிகள்
அரங்கு நிறைந்த காட்சிகளாக, திரையரங்கில் ஓடியது... உலக திரைப்படத் துறையில் இனியும் யாரும், எவரும் நெருங்க முடியாத, நினைத்து பார்க்க முடியாத பிரம்மாண்டமான சரித்திரம் படைத்த, சகாப்தம் உருவாக்கிய சாதனையின் உச்சம் பெற்ற வெற்றி எது தெரியுமா???!!! சென்னை நகரில் சுவரொட்டிகள் (Wall Posters) ஒட்டப்படாமலேயே வெள்ளிவிழா கொண்டாடிய அபூர்வமான, பேரற்புதமான, ஆச்சரியமான, விசித்திரமான இணையே இல்லாத அட்டகாச வெற்றி பெற்றது மிகவும் குறிப்பிட தக்கதாகும்....... Thanks.........
-
அடிமைப் பெண் - பொன் விழா
50 -வது ஆண்டு. 01-05-1969 to 01-05-2019
அடிமைப் பெண் 1969 ஆம்
ஆண்டு இதே தொழிலாளர் தினத்தில் ( மே 1 -ஆம் ) வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நடிகர் எம். ஜி. இராமச்சந்திரன் தானே தயாரித்த இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாஇருவருமே இரட்டை வேடத்தில் நடித்திருப்பதோடு, ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடியும் இருக்கிறார்.
அடிமைப் பெண்:-
இயக்குனர் : கே.சங்கர்
தயாரிப்பு : எம் ஜி ஆர் பிக்சர்ஸ்
கதை : எம் ஜி ஆர் பிக்சர்ஸ்
நடிப்பு : எம். ஜி. இராமச்சந்திரன்,
ஜெயலலிதா, சோ , சந்திரபாபு
S.A. அசோகன் , R.S. மனோகர் ,
ஜோதிலட்சுமி , பண்டரிபாய் ,
ஜஸ்டின் , பேபிராணி , ராஜசிரி
ஒளிப்பதிவு : ராமமூர்த்தி
வசனம் : சொர்ணம்
இசை : K.V.மகாதேவன்
பாடல் : வாலி, சோமூ, புலமைப்பித்தன்
வெளியீடு : 01.05.1969
கதைச்சுருக்கம் :-
வேங்கைமலை ராணியின் மீது தவறுதலாக நடக்க முயன்ற பொழுது கால்கள் வெட்டப்படும் செங்கோடன் சூரக்கோட்டை ராஜா ஆவான். இவன் தன் மனைவி மீது தவறுதலாக நடக்க முயற்சித்தான் என்ற கூற்றினால் அவனுடன் போர் புரிய வருகின்றான் போரில் வெற்றியும் பெறுகின்றான் வேங்கைமலை ராஜா (எம்.ஜி.ஆர்). ஆனால் நயவஞ்சக முறையில் அவனைக் கொலை செய்யும் செங்கோடன் பின்னர் அவன் நாட்டில் வாழும் பெண்கள் அனைவரையும் அடிமைப் படுத்த உத்தரவு பிறப்பிக்கின்றான். இச்செய்தியைக் கேட்டு அறியும் வேங்கையன்,தாயார்தனது மகனை செங்கோடன் கையில் பறிகொடுத்து தலைமறைவான இடத்தில் வாழ்ந்து வருகின்றார். வேங்கையனும் சிறுவயது முதல் சிறையில் அடைக்கப்பட்டு உலகமறியாது வாழ்கின்றான். காட்டுவாசி போலவே மாறிவும் வேங்கையனை வேங்கைமலையினைச் சேர்ந்தவனால் காப்பாற்றப்படுகின்றான். பின்னர் ஜீவா (ஜெயலலிதா) என்ற பெண்ணால் வளர்க்கப்படுகின்றான் வேங்கையன். அவளிடன் பேச, போர் செய்ய மற்றும் பல விடயங்களைக் கற்றுக் கொள்ளும் வேங்கையன் தனது தாயாரையும் சந்திக்கின்றான். தன் மகனை முதலில் சந்திக்க மறுக்கும் வேங்கையனின் தாயார் பின்னர் வேங்கையன் அடிமையாகவிருந்த பெண்களை விடுவித்தபின்னர் அவனைச் சந்திக்கின்றார். இச்சமயம் ஜீவா போன்றொரு பெண் வேறொரு பகுதிக்கு ராணியாகவிருப்பதைக் காணும் வேங்கையன் திகைப்படைகின்றான். அவளும் இவன் மீது காதல் கொள்கின்றாள். ஆனால் ஜீவாவையே காதலிக்கும் வேங்கையன் அப்பெண்ணை ஏமாற்றி தன் நாடுதிரும்புகின்றான். அச்சமயம் பார்த்து செங்கோடனுக்கு உதவி புரியும் அந்த ராணி தன்னை ஏமாற்றியதற்காக வேங்கையனை பழிவாங்குவதற்கு முயற்சி செய்யும் சமயம் ஜீவா தனது தோழி என்பதனைத் தெரிந்து கொள்கின்றாள். இச்சமயம் பார்த்து வேங்கையனின் தாயாரைக் கடத்திச் செல்லும் செங்கோடனிடமிருந்து தன் தாயை மீட்டெடுத்து செங்கோடனைக் கொலை செய்கின்றான் வேங்கையன். அதே சமயம் ஜீவாவைக் கொலை செய்ய முயலும் பெண்ணான வேங்கையனை அடைய விரும்பிய ராணி தவறுதலாகத் தாக்கப்பட்டு கொலையும் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
புகழ்பெற்ற பாடல் : -
@ . ஆயிரம் நிலவே வா -
@. தாயில்லாமல் நானில்லை
@. காலத்தை வென்றவன் நீ
@. ஏமாற்றதே.. ஏமாற்றதே..
@. உன்னை பார்த்து இந்த
@. அம்மா என்றால் அன்பு
சிறப்பு :
@. வெளியானது தொழிலாளர் தினத்தில்
@ புரட்சி நடிகர் நடித்த 102 வது படம்
@. புரட்சி நடிகர் கதாநாயகனாக வலம் வந்த 82-வது படம்.
@. புரட்சி நடிகர் 2 வேடத்தில் பங்கு கொண்ட 7-வது படைப்பு
@. மக்கள் திலகத்துடன் ஜெயலலிதா நடித்த 17-வது படம்
@. தலைவரின் 11-வது வண்ண படம்
@. மக்கள் திலகத்துடன் ராஜசிரி நடித்த 4-வது படம்.
@. மக்கள் திலகத்துடன் K.V.மகாதோவன் இசை அமைத்த 22-வது படம்
@. அதிகமான இடங்களில் வெளிப்புற படப்பிடிப்பு நடத்த பட்ட படம்
@. K.சங்கர் தலைவருக்க இயக்கிய 5-வது படம்.
@ வெள்ளி விழா படம் 25-வாரம் - மதுரை சிந்தாமணி
@. அதிகமான பொருட்செலவில் உருவானது
இந்த பதிவை எனக்கு தந்து உதவிய
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம் அவர்களுக்கு நன்றி........ Thanks...
-
MGR Filmography Film 53 ( Poster )
1962ஆம் ஆண்டின் முதல் திங்களில் வெளியான காஸ்ட்யூம் ட்ராமா ராணி சம்யுக்தாவைப் போலவே அடுத்த மாதம் வெளியான சோஷியல் ட்ராமா மாடப்புறாவும் எம்ஜியாருக்கு சராசரி வெற்றியைத் தந்து
தன் சகோதரனைக் காப்பாற்றக் கொலைப்பழியை தான் சுமந்து, போலிசிடமிருந்து தப்பித்து உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் எம்ஜியாரின் வழக்கமான த்ரில்லர் + செண்டிமெண்ட் கதையை எஸ்.ஏ சுப்பராமன் இயக்கினார். இந்தக் காலகட்டத்தில் எம்ஜியாரின் நிரந்தர திரைஜோடியாக நிலைத்துவிட்ட சரோஜாதேவியுடன் வசந்தியும் நடிக்க, நல்லவன் ரோலில் எம்ஆர் ராதாவும் வில்லனாக நம்பியாரும் தோன்றினர். கேவி மகாதேவனின் இசையில் மருதகாசியின் சிரிக்கத் தெரிந்தால் போதும், ஊருக்கும் தெரியாது, மனதில் கொண்ட ஆசைகளை ஆகிய பாடல்கள் பிரபலமாயின.
கட்டுக்கோப்பில்லாத திரைக்கதை இந்தப் படத்தின் தோல்விக்குப் பிரதான காரணமாக அமைந்திருக்கலாம். எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும் க்ரிஸ்ப்பான கதை அவசியம் என்பதை உணர்த்தும் வகையில், ஆவரேஜ் எம்ஜியார் படங்களுடன் இதுவும் இணைந்து விட்டது.
இந்தப் படத்தின் சுவாரசியம் இருவர் இசைப்பணி புரிந்தனர் என்பதே; பாடல்களுக்கு கேவி மகாதேவன் இசையமைக்க, வயலின் மகாதேவன் பின்னணி இசைக்குப் பொறுப்பேற்றார்.அ.மருதகாசி அனைத்து பாடல்களையும் எழுதினார்...... Thanks......
-
நாணல் போல வளைவது தான் சட்டமாகுமா அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேனுமா நான் ஒரு கை பார்க்கிறேன்.....இல்லாதவர்கள் குறைவது நன்மை... இருப்பவர்கள் நிறைவது தீமை... என்று ஒரு திரைப்படத்தில் இதய தெய்வம் வசனம் பேசி நடித்திருப்பார். இது "படகோட்டி" படத்தில் வரும் பாய். அருமை நல்வாழ்த்துக்கள்...... Thanks...
-
மதுரைவீரன் படத்தில் தலைவர் இறந்து போனாலும்,படம் இமாலய வெற்றி....Paul Raj அண்ணா, மதுரை வீரன் படம் தான் தலைவர் அவர்களின் முகவரியை உலகத்திற்க்கு வெளிப்படுத்தியது ...Paul Raj அண்ணா மதுரைவீரனில் முடிவில் மதுரைவீரன் சாமியாக தலைவரை காட்டுவார்கள்...... Thanks...
-
அருமையான படம்.
தலைவர் இறப்பது போல் படம் என்பதால் நானே ஒரு முறைதான் பார்த்தேன்.
அதுபோல் ராஜா தேசிங்கு, பாசம் படங்களும் ஒரு முறை தான் பார்த்தேன்.
சாதாரணமாக தலைவரின் ஒவ்வொரு படத்தையும் பத்து தடவை முதல் எண்ணற்ற முறை பார்ப்பது வழக்கம்.
பெரும்பாலும் தலைவர் பட டிவிடி அனைத்தும் (கிடைத்தது ) சேர்த்து வைத்துள்ளேன்....... Thanks Hameed Bai...
-
"ராணி சம்யுக்தா", பாடல்கள் அருமை படமும் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது... ஆனால் நீங்கள் சொன்னது போல் இறப்பு காட்சிதான் பிடிக்கவில்லை இருந்தாலும் படம் சூப்பர்.......... Thanks...
-
அமெரிக்காவில் எம்.ஜி.ஆர் சிகிச்சை பெற்ற புரூக்ளின் மருத்துவமனையைப் பார்த்த நிகழ்ச்சியை எழுதும் போது, எம்.ஜி.ஆரின் அன்பில் திளைத்த அனுபவங்கள் என் நினைவில் அலை மோதுகின்றன.
அமெரிக்காவில் ஹட்சன் ஆற்றின் மேல் ஒரு நீளமான பாலம் இருக்கிறது. ரயில்கள் செல்வதற்கான இருப்புப் பாதை. சாலைப் போக்குவரத்திற்காக இரண்டு பாதைகள் என்று மூன்று அடுக்குகளைக் கொண்டது அந்தப் பாலம். ஆனாலும் இதைத் தாங்கி நிற்க பில்லர்கள் கிடையாது. நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும் என்று என் புரோகிராம் ஆபிசர் ஒரு வேண்டுகோள் விடுத்தார். அப்படியா? பார்க்கலாமே. அந்தப் பாலத்தின் பெயர் என்ன என்றேன் நான்.
புரூக்ளின் பாலம் என்று அவர் பதில் சொன்னார். அந்தப் பெயரைக் கேட்டவுடன் ஒரு கணம் என் இருதய ஆழத்தில் சில ரத்தக்குழாய்கள் அதிர்வுற்றன. அப்படியானால் புரூக்ளின் மருத்துவமனை இங்கே தானே இருக்கிறது என்று கேட்டேன் தவிப்போடு.
ஆம் என்றார் அந்த அதிகாரி. என்னை அளவுக்கு மீறி நேசித்த, என்னால் அளவுக்கு மீறி நேசிக்கப்பட்ட அந்த மகாமனிதனைக் காப்பாற்றி, மறுபடியும் நமது தரிசனத்திற்கு அனுப்பி வைத்தது அந்த இடம் தானே.
அதைப் பார்க்க வேண்டும் அதற்கு நன்றி வணக்கம் செலுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த அதிகாரியும் அதற்கு உடனே ஏற்பாடு செய்தார்.
கார் மருத்துவமனையை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. நான் கண்களில் ஈரங்கசிய என் ஞாபக வாசல்களை மெல்லத் திறந்தேன்.
அல்லி நகரத்தின் அந்ப் பாமரத்தனமான வாழ்க்கை நாட்களில், வெள்ளித் திரை நிழலாய் மட்டுமே அந்த மனிதனைச் சந்தித்திருக்கிறேன். எனது கிராமத்திலிருந்து வீட்டிற்குத் தெரியாமல் வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு நண்பர்க்ளோடு டபுள் பெடல் போட்டபடி, நாற்பத்தியெட்டு மைல்களை தாண்டிப் போய் மதுரை மாநகரில் நாடோடி மன்ன்ன் படம் பாக்க வியர்வை கசகசப்போடு அமர்ந்த நாட்களும் உலக உருண்டை இரண்டாகப் பிளக்க கொடிபிடித்தபடி இரு உருவங்கள் திரும்பும் எம்.ஜிஆர் பிக்சர்ஸ் பட நிறுவன எம்பளம் பார்த்து கைதட்டிய நிமிடமும் அந்த மனிதன் திரையில் தோன்றிய முதல் காட்சியில் ஒலித்த விசில்களில் வியந்த வினாடியும் இப்போதும் என்னுள் காயாத சிமெண்ட் தரையில் பதித்த குழந்தையின் காலடிச் சுவடுகளாய் இருக்கின்றன.
அந்த மனிதன் தான் என் தனி மனித வாழ்க்கையிலும் நுழைந்து, என் கலைத் திறமைகளுக்குத் தட்டிக் கொடுத்து, என் சோகங்களுக்குக் கண்ணீர் துடைத்து, என் இடறல்களுக்குத் தோள் கொடுத்து, என்னால் என்றுமே மறக்க முடியாத என் இரண்டாவது தாயாகிப் போனார் …
அலைகள் ஓய்வதில்லை படத்தைப் பார்த்துவிட்டு அந்த மனிதர் என்னைக் கட்டித் தழுவி பாராட்டிய போதும், வேதம் புதிது படத்திற்கு டெல்லி அதிகாரிகள் அனுமதி மறுத்த போது ஆறுதுல் கூறி உடனே அனுமதி வாங்கித் தந்த போதும் என்னுள் ஏற்பட்ட உணர்வுகளை என்னால் வார்த்தைகளின் மீது இறக்கி வைக்க முடியவில்லை.
அரசியலுக்கெல்லாம் வந்துவிடாதே. நீ ஒரு உண்மையான கலைஞன். உனது கலைக்கு நீ உண்மையாக இரு. அது போதும் … என்று தான் அவர் அடிக்கடி என்னிடம் கூறுவார்.
ஒரு முறை உடல் நிலை சரியில்லாத சூழலில் ஓய்வெடுப்பதற்காக அவர் ஊட்டிக்கு வந்திருந்தார். ஒரு கைதியின் டைரி படப்பிடிப்பிற்காக நானும் அங்கு சென்றிருந்தேன்.
அவர் தமிழ்நாடு ஹவுசில் தங்கியிருக்கிறார் என்றுகேள்விப்பட்டதும் அவரைச் சந்திப்பதற்காக அங்கு சென்றேன். என்னைப் பார்த்ததும் என்ன இங்கே? என்று கேட்டார்.
ஷுட்டிங்கிற்காக வந்தேன். நீங்க வந்திருக்கீங்க என்று சொன்னாங்க அதான் என்றேன் நான். ஷுட்டிங்கிற்கா … நான் வந்து இரண்டு நாளாச்சு யாருமே சொல்லவே இல்லையே சரி இங்கெல்லாம் நிறைய பூக்கள் இருக்கே இங்கேயே ஷுட்டிங் எடுக்கலாமே …
நீங்க இங்க இருக்கீங்க உள்ளே ஒரு ஆளை விடுவாங்களா என்ன? என்றேன் நான். யார் சொன்னது நீங்க எடுங்க என்று கூறிவிட்டு போன் செய்தார்,
மறுநாள் காவல்துறையினரின் பாதுகாப்போடு தமிழ்நாடு ஹவுசில் படப்பிடப்பு ஆரம்பமானது. அப்போது ஒரு அதிகாரி வந்து இன்னிக்கு மத்தியானம் லஞ்ச் எங்கேயும் அரேஞ்ச் பண்ணிடாதிங்க. மொத்த யூனிட்டிற்கும் சாரோடதான் சாப்பாடுன்னு உங்க்கிட்டே சொல்லச் சொன்னார் … என்று தெரிவித்து விட்டுச் சென்றார். நான் திகைத்துவிட்டேன்.
கொஞ்ச நேரத்தில் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தவர்கள் பரபரப்பாக ஓரிடத்தில் பார்வையைக் குவித்தனர். திரும்பிப் பார்த்தால் எம்.ஜி.ஆர் . வந்து கொண்டிருந்தார். உடனே நான் அவரை நோக்கி விரைந்தேன். என்னை அழைத்தார். எங்கே டான்ஸ் மாஸ்டர் ? தயங்கிய படியே இல்லை… நான் தான்.. ஓகோ நீங்களே டான்ஸ் மாஸ்டரா ? என்று கூறி குழந்தையாகச் சிரித்தார்
ஷாட் முடிந்தவுடன் என்னையும் கமலையும் பக்கத்தில் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். பேசி முடித்தபின் என் ஸ்டில் போட்டோகிராபர் சங்கர்ராவை அழைத்து, அவரிடமிருந்த மிகமிகச் சிறிய ஒரு கேமராவைக் கொடுத்துப் படம் பிடிக்கச் சொன்னார். நான் அவரிடம் பழக்கமான உரிமையுடன் என்னங்க உங்களைப் பத்தி நிறைய மிஸ்டரி இருக்குன்னு சொல்வாங்க கேமராவில் கூட மிஸ்டரி வச்சிருக்கிங்களே என்றேன்.
அவர் சிரித்துக் கொண்டே கையில் கட்டியிருந்த வாட்சைக் காண்பித்து இங்கே பார் இதுல கூட கேமரா இருக்கு. பேசிட்டிருக்கும் போதே கூட படமெடுக்கலாம் என்று சொல்லி அதை இயக்கிக் காட்டினார். நான் மறுபடியும் திகைத்துப் போனேன்.
மறுநாள் காலையில் என்னையும் கமலையும் கூப்பிட்டனுப்பியிருந்தார். சென்றோம். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பேனர் படம் எடுத்து ரொம்ப நாளாச்சு. நீ டைரக்ட் பண்ணு கமல் நடிக்கட்டும். இப்ப இல்ல. உனக்கு எத்தனை படம் கமிட் ஆகியிருக்கோ … அத்தனையையும் முடித்து விட்டு அப்புறமாய் பண்ணு… நான் கேக்கறேங்கறதுக்காக அவசரப்படாதே எவ்வளவு செலவழிக்கணுமோ அவ்வளவு செலவழிச்சு பிரம்மாண்டமா எடுத்துடுவோம் என்றார்.
மதுரை தியேட்டர்களில் எந்த நிறுவனத்தின் எம்பளம் பார்த்துட்டு கை தட்டினேனோ அந்த நிறுவனத்தின் படத்தை நான் டைரக்ட் செய்ய வேண்டுமா … நானும் கமலும் அதிர்ந்து போய்விட்டோம்.
ஒருமுறை சென்னை மாங்கொல்லையில் அவர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசி முடித்து விட்டு, நான் என் காரைத் தேடிக் கொண்டிருந்த போது, அவர் என்னைத் தன்னுடைய காரில் ஏறச் சொன்னார். நான் தயங்கினேன்.
கூட்டம் கூடுது சீங்கிரம் ஏறு என்றார். ஏறிக் கொண்டேன். வீடு எங்கே ஜெமினி காம்ப்ளக்சில் தானே என்று கேட்டு என்னை இறக்கி விட்டார். பின் இந்த வீட்டிலதான் இன்னும் இருக்கியா என்று கேட்டார். இல்ல தி.நகரில் புது வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். நீங்கதான் வந்து கிரகபிரவேசத்திற்குக் குத்து விளக்கேற்றி வைக்கணும் என்றேன். அவசியம் வருகிறேன் என்று சொல்லி விடைபெற்றார்.
அவர் புரூக்ளின் மருத்துவ மனையிலிருந்து திரும்பி வந்த பிறகுதான் அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டது.
வீட்டிற்குக் குடிபோவதற்கு முதல் நாள் ஒரு மரியாதைக்காக அவரிடம் சொல்லிவிட்டு வருவதற்காகச் சென்றேன். நாளைக்கு எத்தனை மணிக்கு என்றார். காலை ஆறரை மணிக்குங்க என்றேன்.
மறுநாள் காலை ஆறேகால் மணிக்கு அந்த மாமனிதனின் கால்கள் என் வாசலில் பதிந்தன. நான் நெகிழ்ந்து போனேன். அவர் ஏற்றி வைத்த விளக்கு என் வீட்டில் இன்னும் வெளிச்சம் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த மனிதன் … அந்த மனிதன் ….
புரூக்ளின் மருத்துவமனையே … அந்த மாமனிதனின் சுவாசத்தை இரண்டாண்டுகள் தானா உன்னால் நீட்டிக்க முடிந்த்து. இன்னும் கொஞ்சம் இரக்கம் காட்டியிருக்க்க் கூடாதா? கண்களில் நீர் தளும்ப நான் அதனோடு மானசீகமாகப் பேசினேன்.
புரூக்ளின் மருத்துவமனை சலனமில்லாமல் நின்றது.
ஞாபக நதிக்கரையில் நூலில் இயக்குநர் பாரதிராஜா....... Thanks...
-
ஒரு முறை எம்ஜிஆர் தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரைக்கு சென்று கொண்டிருந்தார் வேனில் ரோட்டின் இரு மறுங்கிளும் மக்கள் திரளாக நின்று கோஷமிட மாலை போடவும் ஆராவாரமாக வந்து கொண்டிருந்தார் ஏழுமலை என்ற கிராமத்தை அடைந்தவுடன் திடீரென வேன் நின்றது ஏன்? என்று பார்க்கையில் ஒரு மூதாட்டி தன் இரு மகள்களுடன் வழியை மறைத்து படுத்துக்கொண்டார் உடனே வேனை விட்டு எம்ஜிஆர் இறங்கி விட்டார் குழந்தைகள் மற்றும் வயதான மூதாட்டிகளுக்கு முதலிடம் கொடுப்பார் எல்லோரும் அறிந்ததே!
என்ன வேண்டும் எழுந்திரியுங்கள் என்றதும் எம்ஜிஆரை முதன் முதலில் அருகில் பார்த்த பாட்டிக்கு கண்ணீர் பொங்குகிறது வாய் வார்த்தை வரவில்லை பின் தளத்த குரலில் நீ நல்லா இருக்கனும் ராசா சரிம்மா என்னனு சொல்லுங்க ஒன்னும் இல்லப்பா என் வயலு ரெண்டு வருசமா விளச்சலே இல்ல ஓ பாதம் பட்டா விளையும் னு சொன்னாங்க... அதா நல்ல மழை பெய்தால் தானா விளையும் அம்மா சரி வாங்க எங்கே? இருக்கு என்றார் தலைவர் அந்தா தெரியுது பாருப்பா என்றதும் கூட்டத்தில் விசில் பறக்குது கூட்டம் பின் தொடர எம்ஜிஆர் யாரும் என் பின்னே வரக்கூடாது வயல் கெட்டு விடும் என்று கட்டளையிட்டவாரே வேஷ்டியை தூக்கி பிடித்து கொண்டு ஐந்து நிமிடத்தில் சென்று தன் செருப்பை கழட்டி விட்டு வயலை தொட்டு வணங்கி விட்டு திரும்பினார் தலைவர்
பச்சை பசேலான வயலில் வெள்ளை ஜிப்பா வேஷ்டியில் வெள்ளை கலர் தொப்பி கருப்பு கண்ணாடி தங்கமான நிறத்தில் அவர் முகம் நேரடியாக அன்று அவரை பார்த்த கண்கள் தூங்கி இருக்கவே முடியாது
பின்பு அந்த பாட்டி தயாராக வைத்திருந்த குண்டு சோடாவை கொடுக்க தன் பெருவிரலால் ஒரே அமுக்கு அமுக்கி இரண்டு மடக்கு குடித்து விட்டு பாட்டியை கட்டி பிடித்து விட்டு கை ஆட்டிக் கொண்டே வேனில் ஏறி பறந்தார் எம்ஜிஆர் இது தான் கூட்டத்தில் எல்லோரும் பார்த்தது
ஆனால் பாட்டியின் முந்தானை கொசவத்தில் பேப்பரில் சுற்றிய பணக்கட்டு யார் கண்ணுக்கும் தெரிய வில்லை அதை கட்டிப்பிடிக்கும் போதே தனது ஜிப்பாவில் இருந்து மாற்றி விட்டார் தலைவர் சென்ற பின் அந்த பாட்டியை கட்டிப்பிடித்த பெண்கள் எத்தனை பேர்? அவ்வளவு சந்தோஷம்
பின் தன் உதவியாரிடமும் ஓட்டுனரிடமும் என்னை எவ்வளவு தூரம் நம்பி இருக்கும் இந்த மக்கள் எல்லோருக்கும் எப்படி நான் உதவ போகிறேன் என்று தனது கருப்பு கண்ணாடியை கழட்டி கர்சிப்பால் கண்ணை தொடைத்து கொண்டே பயணமானார் #பொன்மனச்செம்மல்
நீங்க நல்லா இருக்கனும்
நாடு முன்னேற....
என்ற பாடல் தூரத்தில் ஒலித்த வண்ணமே இருந்தது
மீண்டும் வருவேன் நண்பர்களே!
#எல்லாபுகழும்எம்ஜிஆர்கே....... Thanks... Repost...
-
கோவை செழியன் தயாரித்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா (இரு வேடங்கள்) நடித்த 'குமரிக்கோட்டம்' படத்திற்காக படமாக்கப்பட்ட முதல் காட்சி எது ?
"நாம் ஒருவரையொருவர் சந்தித்தோமென்று" என்ற வாலி எழுதிய பாடலில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா (கிரீடம் வைத்து) நடிக்க படமானது. நாளிதழ் விளம்பரங்களிலும்
இதன் புகைப்படம் தான் இடம் பெற்றது.
Ithayakkani S Vijayan....... Thanks...
-
ஸ்ரீMGR வாழ்க
சித்திரை 14 திங்கள்
எம்ஜிஆர் பக்தர்களே
இந்தப்படத்தில் நின்று கொண்டு இருக்கும் மீசைக்கார அமைச்சர்
ஈரோடு முத்துச்சாமி
,அடுத்து அமைச்சர் விஜயசாரதி அவர்கள்
அடுத்த அமைச்சர் எஸ் என் ராஜேந்திரன் அவர்கள்
++++++++++++++++++++++++++++++++++
இந்த படத்தில் நின்றுகொண்டிருக்கும்
பெண் அமைச்சரின் பெயர் கோமதி சீனிவாசன்
வலங்கைமான் சட்டமன்ற தொகுதி
இவருடைய கணவர் ஒரு வழக்கறிஞர்
எம்ஜிஆர் மறைந்த பிறகு ஜானகி அம்மையார் அவர்களை முதலமைச்சர் ஆக்கியவர்களில்
அமைச்சர் கோமதி சீனிவாசனும் ஓருவர்
உப்பிட்ட எம்ஜிஆர் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தவர்
உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்காதவர்
கோமதி சீனிவாசன்...... Thanks...
-
புரட்சித் தலைவருக்கு டாக்டர் பட்டம் :
சென்னை பல்கலைக்கழக 125 ஆவது ஆண்டுவிழா 20.09.1983 இல் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மத்திய அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்ட 11 பேருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவது அறிவிக்கும்போது, மனித குலத்திற்கு அவர் ஆற்றிவரும் சேவைக்காகவும் கொடுமைகளை தீர்த்து இடைவிடாமல் அவர் நடத்தும் போராட்டத்திற்காகவும் கலைத்துறை சேவைக்காகவும் வள்ளல் தன்மைக்காகவும் இந்த பட்டம் வழங்கப்படுவதாக துணைவேந்தர் சாந்தப்பா தெரிவித்தார்.
விழாவிற்கு தமிழக கவர்னர் எஸ்.எல்.குரானா தலைமை தாங்கினார் . ஜனாதிபதி ஜயில்சிங் பல்கலைக்கழக 125 ஆவது ஆண்டு விழாவை தொடங்கி வைத்தார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டத்தை கவர்னர் குரானா வழங்கினார். ஜனாதிபதி ஜயில்சிங் கைகுலுக்கி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் டாக்டர் பட்டம் பெற்றதையொட்டி திரையுலகம் சார்பில் சென்னையில் நவம்பர் 20ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இதனையொட்டி நடிகர்- நடிகைகள் கலந்து கொண்ட பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற்றது. அண்ணா சாலையில் உள்ள காயிதேமில்லத் கல்லூரி அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஊர்வலத்தைப் பார்வையிட்டார்.
பிறகு டைரக்டர் பாரதிராஜா தலைமையில் விழா நடந்தது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு ஆளுயர ரோஜா மாலை அணிவித்தார். சத்துணவுத் திட்டத்திற்கு திரையுலகின் முதல் தவணையாக ரூபாய் 10 லட்சத்தை பாரதிராஜா வழங்கினார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க..... Thanks.........
-
நேரு ஸ்டேடியம்! என் தந்தை துணையோடு டீனேஜ் பாயக நானும் என் நண்பர்களும் கலந்து கொண்டோம்.
தலைவர் மேடைக்கு வந்து சேரச் சற்று காலதாமதம் ஆனது, அதுவரை மேடையிலிருந்தநடிகர்கள் கார்த்திக், சுரேஷ், மோகன், சிவகுமார், தியாகராஜன், கமல், ரஜினி, பாக்யராஜ், ராதா, அம்பிகா, ரேவதி என பல நடிகர் நடிகைகள் வரிசையாக அமர்ந்திருந்தனர், நானும் எனது நண்பர்களும் அமர்ந்திருக்கும் நடிகர்களில் யார் அழகு என்று பட்டிமன்றமே நடத்திக்கொண்டிருந்தோம்!
அன்றலர்ந்த தாமரை மலராக தேவலோகத்தின் இந்திரன் போல் காரைவிட்டு இறங்கி நம் தலைவர் மேடை ஏறியது தான் தாமதம்! அழகு அழகு என்று நாங்கள் இதுவரை யார் யாரையோ வர்ணித்து இருந்தோம், அவர்கள் அனைவரும் இவரது அழகிற்கும் நிறத்திற்கும் கிட்ட கூட நெருங்க முடியாத நிலையில் இருந்தார்கள்! அங்கு அழகின் மொத்த உருவம், அது என் தலைவர் மட்டுமே தான்!...... Thanks...
-
மனிதாபிமானத்தின் மறுஉருவம் புரட்சி தலைவர்.
********************************************
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.
நமது மக்கள் திலகம் முதல்வராக பதவியேற்ற புதிதில் 1977 ல் சென்னை கன்னிமாரா ஓட்டலலில் சில வெளிநாட்டு பிரமுகர்களை கௌரவிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் விருந்தும் நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்து தலைவர் வீட்டுக்கு புறப்பட இரவு 11 மணி ஆகிவிட்டது. காரில் போய்க்கொண்டிருக்கும் போது டிரைவரிடம் " நீ சாப்பிட்டியா " என கேட்க அவரும் சாப்பிட்டேனய்யா என பதில் கூற அவர் சொன்ன பதிலால் சந்தேகம் வரவே என்ன சாப்பிட்ட சொல்லு என கேட்க டிரைவர் சில உணவுகளைச் சொல்ல .இந்த உணவு இன்றைய டின்னரில் பரிமாறவே இல்லையே உண்மையைச் சொல் சாப்பிட்டாயா இல்லையா என சற்று கோபத்துடன் கேட்க இல்லிங்கய்யா சாப்பிடலை எனக் கூற மற்ற டிரைவர்கள் சாப்பிட்டார்களா எனக்கேட்க "யாருமே சாப்பிடலய்யா "ஏன் அதற்கு பாதுகாப்பு அதிகாரி அரசு சார்பில் விழா நடந்தால் டிரைவர்களுக்கு சாப்பாடு கிடையாது எனக்கூற அவ்வளவு தான் முகம் கோபத்தில் ரத்த சிவப்பாகி மறுநாள் காலை தலைமச் செயலகம் வந்து எல்லா அலுவல்களையெல்லாம் ஒத்திப் போட்டு பொதுத்துறை, நிதித்துறை அதிகாரிகளை கூப்பிட்டார். முக்கிய பிரமுகர்கள். அதிகாரிகள். விருத்தினர்களுக்கு மட்டும் தான் வயிறு இருக்கிறதா? டிரைவர்களுக்கு இல்லையா ? அவர்களுக்கு பசிக்காதா? இது என்ன உத்தரவு ? யார் போட்டது? எனக் கேட்க அதிகாரிகள் விளக்க நேற்றைம விருந்தின்படி நபர் 1க்கு ரூ 256 மட்டுமே அனுமதி விருந்துக்கு வந்தவரை தவிர மற்றவர்கள் சாப்பிட முடியாது என தயங்கியபடியே சொல்ல இதை கேட்டும் சமாதானமடையாமல், இனி இதுமாதிரி விழா நடந்தால் டிரைவர்களுக்கும் உணவுக்கு வழி செய்திட வேண்டும் இந்தச் செலவுகளை அரசின் கணக்கில் எழுத முடியாதென்றால் கூறிவிடுங்கள் எனது சொந்த பணத்திலிருந்து கொடுக்கிறேன் இது முடியாதென்றால் என்னை அழைக்காதீர்கள் என்று கண்டிப்பாக சொல்லி விட்டார் இந்த சம்பவத்துக்கு பின் அரசாங்க டிரைவர்கள் விருந்துக்கு வந்தால் அவர்கள் தனியே சாப்பிடலாம் எனவும் அவ்வாறு சாப்பிடலைன்னா அந்த உரிய தொகை படியாக வழங்க முடிவு செய்யப்பட்டது. தங்களுக்காக முதல்வரே வாதாடினார் எனக் கேட்ட டிரைவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லேயே இல்லை.
[நாளை போடப் போறேன் சட்டம் பாரு அது நாடு புகழும் திட்டம்] .
எவ்வளவு தீர்க்கதரிசி நமது தலைவர்....... Thanks...
-
[தமிழ் திரைப்படத்தில் எத்தனை காதல் சோக கீதங்கள் வந்தாலும் இந்த பாடலை முதன்மையாக இருக்கும் சரவணா பிலிம்ஸ் ஜி என் வேலுமணி அவர்கள் தயாரிப்பில் உருவான திரைப்படம் படகோட்டி மக்கள் திலகம் நடித்து வெற்றி அடைந்த மாபெரும் திரைப்படம் வாலி முதன்முதலாக எம்ஜிஆர் திரைப்படத்திற்கு முழுமையாக பாடல் எழுதிய வெற்றி திரைப்படம் தமிழ் சிம்மக்குரலோன் செந்தமிழ் பாடகர் டி எம் சௌந்தரராஜன் குரலிலும் எத்தனை பெண் குயில் வந்தாலும் எங்கள் பெண் குயில் இசை மிகைப்படுத்த முடியாது என்று பெருமை வாய்ந்த அம்மா பி சுசிலாவின் குரலிலும் எங்கள் புரட்சித் தலைவருக்கு என்றே பிறந்த மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் உருவான மிக அருமையான பாடல்..... Thanks...
-
[விஜயாபுரோடக்சன் பிரமாண்டமான தயாரிப்புநமது மக்கள் திலகம் நடித்த வெற்றிப் படமான எங்க வீட்டுப் பிள்ளை அன்று தினத்தந்தி நாளிதழில் ஒரு பக்கம் விளம்பரத்தில் இன்றைக்கும் நாளைக்கும் என்றைக்கும் ஒரு புதுமைப் படைப்பு என்று விளம்பரம் பட்டிருப்பார்கள் ஒருபுறம் புரட்சித்தலைவர் சாட்டை எடுத்து கொண்டு நிற்பார் இன்னொரு பக்கம் அமைதியின் சின்னமாக மக்கள்திலகம் இருப்பார் இந்த திரைப்படத்திற்கு இது திரைப்படமாக மாற்று நடிகர் நடித்த பிரம்மாண்டமான தயாரிப்பு. ஆனால் அதை மிஞ்சக்கூடிய அடிப்படையில் வெற்றி பெற்றது நமது மக்கள் திலகத்தின் திரைப்படம் படத்தின் சிறப்பு முதலில் நிதியானது டைட்டில் "எங்கவீட்டுப்பிள்ளை" மக்கள் திலகம் என்றும் எங்கள் வீட்டுப்பிள்ளை பிறகு இந்த திரைப்படத்தின் திரைக்கதை அமைப்பு இசையமைப்பு எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி மெல்லிசை மன்னர் நமது தலைவர் படத்துக்கு இசையமைத்தார் என்றால் அது வெற்றியே வெற்றியே வெற்றியே மற்றொரு நடிகர் தனது கையில் சாட்டையை எடுத்து வற்றினாலும் என் தலைவன் போல் சுழற்ற முடியாது அப்படி ஒரு ஸ்டைல் எவருக்கும் வராது அப்படி ஒரு ஆளுமையான முகமும் எவருக்கும் கிடையாது கவிஞர் வாலியின் எம்ஜிஆர் மீது கொண்ட ஈடுபாட்டின் வெறித்தனமான வார்த்தைகள் நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இந்த இரண்டு வரி எந்த நடிகனுக்கு பொருந்தும் திருந்துவதற்கு அமைப்பும் கிடையாது அதற்கு சந்தர்ப்பம் அவர்களுக்கு வாய்க்காது இன்றைக்கும் இளைஞர்கள் இந்த பாட்டை கேட்டால் துள்ளி எழுவார்கள் வீர நடையோடு....... Thanks...
-
நமது பெருமை மிகு மக்கள் திலகம் பாகம் 25 வெற்றிகரமாக பூர்த்தி செய்து கொண்டு வருகிறது... அடுத்து துவங்கவிருக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., பாகம் 26 பகுதியில் தொடர்ந்து ஏனைய தோழர்கள் தங்கள் பங்களிப்பை நல்கி பொன்மனச்செம்மல் புகழ் பாடிக்கொண்டே இருப்போம்.........
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., பற்றி சொல்ல வேண்டுமானால்
பல வருடங்கள் சொல்லவும், எழுதவும் அவ்வளவு கணக்கில்லாத தகவல்கள், விடயங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இது போன்ற அதிசயம் உலகளவில் யாருக்குமே அமையவில்லை என்பதே அவருடைய ரசிகர்கள், தொண்டர்கள் எல்லோருக்கும் தனிப்பட்ட பெருமை, பெருமிதம். முதலி அதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள், ஆசிர்வாதம் மிகவும் முக்கியமான காரணம் என்றால் அது மிகையாகாது.
அவர் நடித்த படங்கள்
136 தான்.
அவர் கற்றுக் கொடுத்த
வாழ்கைக்கு தேவையான கருத்துக்கள் கணக்கில்
அடங்காது............. Thanks mr.SR.,
-
தமிழக முதல்வர்களில்
தலை சிறந்தவர் எம்ஜிஆர்.
கடலில் நல்முத்து கிடைக்கும்.
காற்றில் தென்றல் வீசும்.
இசையால் அனைவரும்
மயங்க வைக்கும்.
நீர் நிலம் காற்று ஆகாயம் மழை எப்படி
உலகிற்கு முக்கியமோ
அதுபோல் எம்ஜிஆர்
வாழ்ந்த வாழ்க்கை
சாமான்யனாக பிறந்து
சரித்திரத்தில் இடம்
பெற்றவர்
எனக்கு தெரிந்த
ஒரே தலைவர் எம் ஜி ஆர் மட்டுமே..... Thanks...
-
எனக்கு (சுந்தர்ராஜன் )
தெரிந்தவற்றை சொல்கிறேன்.
1.உலகமே பாராட்டும்
சத்துணவு திட்டம்..
2.தனது சொத்துக்கள்
பெரும்பகுதியை
காது கேளாதோர்
வாய் பேச முடியாத வர்கள் கண் தெரியாத வர் மாணவ மாணவிகளுக்காக
இல்லம் கட்டி இன்றுவரை
வெற்றிகரமாக செயல்படுகிறது என்றால் இதன் காரணம் எம்ஜிஆர்
ஒருவரே....... Thanks...
-
3.அவர் இறந்து 33 வருடங்கள் ஆகிவிட்டன.
இன்றும் நாளையும் என்றும் மக்களின் தெய்வமாக வழிபடுகிறார்கள்
இந்த ஒரு புகழ் போதும்
தங்கத் தலைவரைக்கு..... Thanks...
-
4.தமிழக மக்களைப்பற்றி 24 மணிநேரமும் வாழ்நாளில் சிந்தித்து
அவர்களுக்கு ஏதாவது
செய்யணும் எண்ணம்
கொண்ட உத்தமர்...... Thanks...
-
5.தமிழுக்காக தமிழ் நாட்டிற்காக
தமிழ் அறிஞர்களை போற்றும்விதமாக
நல்ல தலைவர்களின் வழியில் நடந்தவர்
எம்ஜிஆர் ஒருவரே...... Thanks...
-
6.திராவிட பாரம்பரியம்
தமிழகத்தில் நிலைத்து
நிற்பதற்கு எம்ஜிஆர்
செய்த தொண்டுகள் தான்
என என்னால் அடித்து
கூற முடியும்........ Thanks...
-
7. தமிழ்நாடு முதல்வர் ஆனதும்
ஏழைகளுக்கு உதவி செய்தல் ...
நாட்டிற்கு என்னென்ன நல்ல திட்டங்கள்...
கொண்டு வருவது.... அவற்றை எல்லாம் எப்படி திறம்பட நிறைவேற்றுவது...
"நினைத்ததை முடித்தவர்".......... Thanks...