http://i60.tinypic.com/1zxb9f6.jpg
Printable View
http://i62.tinypic.com/jubnm0.jpg
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளாகிய இன்று முதல் , "திராவிட இயக்க வரலாறு" என்ற தலைப்பில், ஒரு தொடர் எழுதவுள்ளேன். இத்தொடரானது, புதிய திரி ஒன்று துவக்கப்பட்டு, அதில் இடம் பெறும் என்றும் தெரிவித்து கொள்கிறேன்.
தலை சிறந்த சட்ட மன்ற சொற்பொழிவாளர் பேரறிஞர் அண்ணா
27-01-1766 அன்று அயர்லாந்து நாட்டை சார்ந்த 'எட்மண்ட் பர்க்' நிகழ்த்திய முதல் பாராளுமன்ற சொற்பொழிவே அவரை தலை சிறந்த அரசியால் அறிஞராக உயர்த்தியது. அது போல், 30-04-1957 அன்று இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய சிறப்பு உரை, அவரை தேர்ந்த சட்டமன்ற வாதியாக வெளியுலகிற்கு அடையாளம் காட்டியது.
அவரது விரிவான சட்டமன்ற உரை, "திரவிடர் இயக்க வரலாறு" என்று நான் துவக்கும் புதிய திரியில் எழுதவுள்ளேன் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் கதை திரைப்படங்களான பட்டியல் :
1. ஓர் இரவு
2. சொக்க வாசல்
3. நல்ல தம்பி
4. நல்லவன் வாழ்வான்
5. எதையும் தாங்கும் இதயம்
6. ரங்கோன் ராதா
7. தாய் மகளுக்கு கட்டிய தாலி
8. காதல் ஜோதி
9. வண்டிக்காரன் மகன்
பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்னேட்டில் பொறிக்கத்தக்க உரை :
1962ம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தில், தமிழகத்தில் நடைபெற்ற மூன்றாவது சட்ட மன்ற தேர்தல் நடைபெற்றது. பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்றக்கழகம் இந்த தேர்தலில் 142 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 18 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் போட்டியிட்டது.
பேரறிஞர் அண்ணா அவர்களும், முன்பு போலவே (1957 சட்ட மன்ற தேர்தலில் காஞ்சி மாநகரில் போட்டியிட்டது போலவே) வேட்பாளராக நின்றார்.
பேரறிஞர் அண்ணா அவர்களை எதிர்த்து போட்டியிட்டவன் - என்று பிற்காலத்தில் பீற்றிக்கொள்ளக்கூடிய பெருமை ஒன்றை தவிர, அரசியல் வாழ்வில் வேறு எவ்வித ஆர்வமோ, செல்வாக்கோ இல்லாத ஒருவரை காங்கிரஸ் கட்சியினர், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு எதிராக நிறுத்தினர்.
அப்போது முதலமைச்சராக இருந்த காமராசரும், இதர அமைச்சர்களும் பேரறிஞர் அண்ணாவை வீழ்த்துவதில் முழு மூச்சுடன் ஈடுபட்டனர். போதாக்குறைக்கு, தந்தை பெரியார் அவர்களும், அந்த கூட்டத்தினருடன் இணைந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவை தோற்கடிக்க வரிந்து கட்டினார்.
அந்த மூன்றாவது தேர்தலின் முடிவுகள் , தி,.மு. க. தன்னுடைய அரசியல் பயணத்தில், கணிசமான அளவுக்கு, முன்னேறியிருப்பதை உலகுக்கு பறை சாற்றின. 50 சட்ட மன்ற தொகுதிகளும், 7 பாராளுமன்ற தொகுதிகளும், கழகத்தின் வசமாயின. கழகம் ஆரம்பித்து, இந்த குறுகிய காலத்தில், பெற்ற இந்த குறிப்பிடத்தக்க வெற்றியை கண்டு உள்ளூர அதிர்ச்சி அடைந்து மருட்சியுற்றனர்.
ஆயினும், அந்தோ...... கழக் காவலர் நம் பேரறிஞர் அண்ணா அவர்கள் அநியாயமாக தோற்கடிக்கப்பட்டார். பெற்ற வெற்றி கழகத்தவர் , பேரறிஞர் அண்ணா அவர்களின் தோல்வி யினால் துவண்டு போயினர். ஆனால், பேரறிஞர் அண்ணா அவர்களோ, "எதையும் தாங்கும் இதயம் படைத்தவர் அல்லவா ? தம் அடைந்த தோல்வியால், அவர் துவண்டு போய் படுத்து விட வில்லை. சோகம் தாளாமல், நெஞ்சு விம்ம நின்ற தம் தம்பியர்க்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அக்கறையோடு மேற்கொண்டு செயல்களில் ஈடுபட்டார்.
04-03-1962 அன்று நடைபெற்ற தி. மு. க. தேர்தல் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிப்பு கூட்டத்தில், உற்சாக உரையாற்றிய உரை பொன்னேட்டில் பொறிக்கத்தக்கதாகும்
அந்த வரலாற்று சிறப்பு மிக்க உரையில்,.
"ஐரோப்பா கண்டத்தில் இசுலாமியருக்கும், கிரிஸ்தவருக்கும் , இடையே புனிதப்போர் நிகழ்ந்தது. இயேசு பிறந்த ஜெருசலம் நகருக்குள், கிறிஸ்தவர்கள் நுழையக்கூடாது என்று இசுலாமியர்கள் கூறியதாலேயே அந்த போர் நிகழ்ந்தது.
சாலடி மன்னன், இசுலாமியருக்கு தலைமை வகிதது போர் நடத்தினான். ரிச்சர்டு என்பவன் கிறிஸ்தவருக்கு தலைமை தாங்கினான். ஒரு குறிப்பிட்ட நிபந்தனையின் அடிப்படையில், போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எல்லாக் கிறிஸ்தவர்களும் ஜெருசலம் நகருக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஒரு நிபந்தனை என்றான் சாலடி மன்னன். அதாவது,
கிறிஸ்தவர்களின் தலைவன் ரிச்சர்டு மட்டும் உள்ளே வரக்கூடாது என்பது தான் அந்த போர் நிறுத்த நிபந்தனையின் முக்கிய அம்சம்.
அது போல், நான் வெளியே நிற்கிறேன்; என் தம்பியரின் படை உள்ளே செல்கிறது. தலைவன் இல்லாத அணிவகுப்பு அமைக்க முடியும். ஆனால், அணிவகுப்பு இல்லாது தலைவைனை அமைக்க முடியாது. என் தோல்வியை பற்றி வருந்துவபர்களுக்கு நான் இதைத்தான் சொல்லிக் கொள்ளுவேன். கழகம் பெற்றுள்ள இந்த வெற்றி குறித்து நீங்கள் அடைய வேண்டிய மகிழ்ச்சியை இன்றே அடைந்து விடுங்கள். நாளை முதல், இதை விட மிகக் கடுமையான கடமையுணர்ச்சியும், பொறுப்புணர்ச்சியும் மிக்க பணிகளில் ஈடுபட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
என்று பலத்த கரவொலிக்கிடையே, பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறினார்.
2000 முத்தான பதிவுகள் வழங்கிய பேராசிரியர் திரு செல்வகுமார் சார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
மிகவும் வெற்றிகரமாக மக்கள்திலகம் பகுதி 16 நிறையு செய்யம் நண்பர் திரு v p சத்யா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
Congrats Prof selvakumar sir for crossing 2000 postings.
Welcome Mr.Hussain Ar
அறிஞர் அண்ணாவின் அரிய புகைப்படங்களையும் அவரைப்பற்றி பல செய்திகளையும் பதிவிட்ட பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
நமது திரியின் 17 வது பாகத்தை துவக்கி வைக்க திரு suharaam அவர்களை அழைக்கிறேன்
மூன்றாவது நினைவூட்டல்,
வணக்கம் ஆதிராம் சார்,
இந்த மூன்றாவது நினைவூட்டளுடன் இந்திய விவாதம் முடிகிறது.
இனி இதை குறித்து தங்காளிடம் எனக்கு "வினா" இல்லை சார். வாழ்த்துக்கள்.
https://www.youtube.com/watch?v=ys9IuzHoW5U
நன்றி
அனுதாபச் செய்தி.
----------------------------
மதுரை மாநகர புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் அருமை பக்தர் திரு. எஸ். குமார்
அவர்களின் அன்பு தந்தையார் திரு. க. ந. சூரிய நாராயணன் ஐயர் -வயது 82
அவர்கள் இன்று (15/09/2015) காலை 11 மணியளவில் மதுரை, வடக்கு மாசி வீதி மற்றும் தானப்ப முதலி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்
என்பதை மிகுந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது பூத உடல் நாளை (16/09/2015) காலை 10 மணியளவில் அருகில் உள்ள
மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று திரு. எஸ். குமார் கண்ணீர் மல்க
தெரிவித்தார்.
தன் தந்தையை இழந்து வாடும் திரு. எஸ். குமார். மற்றும் அவரது குடும்பத்தினர்,
உற்றார் உறவினர் அனைவருக்கும் சென்னை மாநகர அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற
அமைப்புகள் சார்பாகவும் , என் சார்பாகவும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. எஸ். குமார் அவர்களின் தந்தையின் ஆத்மா சாந்தி அடைய நமது இதய தெய்வம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கட்டும்.
ஆர். லோகநாதன்.
ஆழ்ந்த அனுதாபங்கள் திரு மதுரை எஸ்.குமார் சார்
நமது நண்பர்கள் அனைவரும் 17 வது பாகத்தில் பயணிக்கவும்
http://www.mayyam.com/talk/showthrea...gam-mgrpart-17
http://i60.tinypic.com/11lsrbl.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாகம் 16ஐ செவ்வனே துவக்கி வீறு நடை போட்டு வெற்றிகரமாக முடிவடைய காரணமாக திகழ்ந்த நண்பர் திரு. வி.பி.சத்யா
அவர்களுக்கும், இந்த பாகம் குறுகிய காலத்தில் நிறைவு பெற நம்நாடு/சிவந்த மண்
வசூல் சாதனைகள்/புள்ளி விவரங்கள் அடங்கிய வாதங்கள், (இந்த பாகத்துடன்
முடியட்டும் ) நிறைந்த பதிவுகள் பதிவு செய்த நடிகர் திலகம் நண்பர்களுக்கும்
மனமார்ந்த நன்றி.! நன்றி ! நன்றி!.
ஆர். லோகநாதன்.
http://i60.tinypic.com/34guc6r.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாகம் -17 ஐ பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் பெருமையுடன் தொடங்கிய அருமை நண்பர் திரு. சுகாராம் அவர்களுக்கு
அண்ணாவின் இதயக்கனி , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆசியோடு , அமர்க்களமாக
அனைத்து வகைகளிலும் பதிவுகள் இட்டு , இந்த பாகம் அசுர வேகத்தில் பயணிக்க
என்னுடைய ஆதரவும், ஒத்துழைப்பும் நல்குவேன் என்று நல்வாழ்த்துக்களோடு
வரவேற்கிறேன் .
ஆர். லோகநாதன்.
சென்னை பெரம்பூரில் வசிக்கும் நண்பர் திரு. ஹுசேன் அவர்களின் வரவு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாகம் -17 ல் நல்வரவு ஆகுக. பல அரிய செய்திகள் /புகைபடங்கள் அள்ளித் தருக.
ஆர். லோகநாதன்.
மக்கள் திலகத்தின் பக்தர் திரு குமார் (மதுரை) அவர்களின் அன்பு தந்தை மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழ் இந்து -15/09/2015
http://i61.tinypic.com/jl2ero.jpg
பேரறிஞர் அண்ணாவின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் /விழாக்கள் குறித்த புகைப்படங்கள் பதிவிடுவதில் மகிழ்ச்சி.
புகைப்படங்கள் உதவி :திரு. சி.எஸ். குமார், பெங்களுரு.
http://i59.tinypic.com/sddwfr.jpg