தரம் கூட்டும் உரம் தரமில்லையெனில்
உரமிட்டு என்ன பயன்.
-
கிறுக்கன்
Printable View
தரம் கூட்டும் உரம் தரமில்லையெனில்
உரமிட்டு என்ன பயன்.
-
கிறுக்கன்
ஒன்றுமில்லை!
tharam illaa uram tharai uyaram koottum ! :lol:Quote:
Originally Posted by pavalamani pragasam
Oh! :lol2:
உறவு உயர்ந்திடும் உள்ளம் இணைந்திடும்
உற்றோரை உளமார பாராட்ட.
150ஆவது கிறுக்கிறள்...
வழிகாட்டும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
கிறுக்கு இன்னும் தெளியவில்லை ஆகவே இது தொடரும்..
-
கிறுக்கன்
தெளியவேண்டாம் உங்கள் இனிமையான, ரசிக்கத்தக்க, சிந்திக்க வைக்கும் அரிய 'கிறுக்கு'!!!!
நன்மையும் தீதென திரிந்து தெரியும்
வெறுப்போர் செய்தார் எனின்.
-
கிறுக்கன்
:thumbsup: :clap: :thumbsup: :clap:
Congratttttssss!!!! nga K.....:-) on the 150th....plz continue to share your valuable pon mozhigals.
Good luck to write more!!
சறுக்கல் இல்லா வாழ்வின் சாரம்
சலனம் இல்லா சந்தோஷம்.
-
கிறுக்கன்
:clap: மிகச் சரியாகச் சொன்னீர்கள்!
தன்செயல் பிறர் போற்றல் பெருமை
தானே போற்றல் சிறுமை.
-
கிறுக்கன்
சுமையின் சுமையறிய
சுமையை சுமக்க
சுமை சுமையென
எண்ணி
சுமையை இறக்க
நான் நினைக்க
சுமையேயில்லை என
அடுத்தோர் எண்ணி
சுமையை ஏற்றிவிட்டால்
நானே சுமையாகி
வீழ்வேனோ????
-
கிறுக்கன்
:lol:
இதை கண்டுQuote:
Originally Posted by pavalamani pragasam
பிறர் சிரிக்க
என் செய்வேன்
பராபரமே.... :(
சுமக்கிறோம் என்று எண்ணாமலே சும்ந்து செல்வது சுகம்!
வழிகாட்டல் வற்புறுத்தலிடை வித்யாசம் சிறிது
அதன் வினை பெரிது.
-
கிறுக்கன்
அதிகாரம் ஆளுமை மட்டும் இருக்கும்
இடத்து இருப்பதில்லை அன்பு.
-
கிறுக்கன்
ஆமாம்.
முகத்தினில் இனித்து முதுகினில் கசக்கும்
முட்டாளாக்கி மூழ்கடிக்கும் உறவு.
-
கிறுக்கன்
:( எப்போதுமா? எல்லோருமா? விதிவிலக்குகள் நம் ஆறுதலுக்கு எப்போதும் உண்டே!
இரண்டாம் அடியை முதலில் படித்து முதல் அடியை பின் படிக்கவும்....Quote:
Originally Posted by pavalamani pragasam
நான் கண்ட பெரும்பாலான உறவுகள் அவ்வண்ணமே ...95%...
-
கிறுக்கன்
:sigh2:
குற்றம் பார்க்கின் சுற்றமில்லை, நீர் அடித்து நீர் விலகாது, தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும்..இன்னும் எத்தனையோ சொல்லியிருக்கிறார்கள்..ஆனால் கசக்கும் உண்மைகளை விழுங்கத்தான் வேண்டியிருக்கிறது!
திருந்த வைக்கும் அறிவுரை பரிசு
வருந்த வைப்பதோ தரிசு.
-
கிறுக்கன்
:)
நினைத்தது நினைத்தபடி நிலைக்காத போதும்
நிலைப்பது நிகரில்லா நல்லனுபவம்.
கருத்துதவி- Thanks to NOV
-
கிறுக்கன்
:swinghead:
பழுதாகி புண்பட்டாலும் புரை நீக்கி
பழுதகற்ற பண்படும் மனம்.
-
கிறுக்கன்
ஆம்!
ஆணவம் தன்னுள் ஆனந்தத்தை மறைக்க
வெளியே தேடும் மானிடம்.
-
கிறுக்கன்
:lol:
வித்தாகி சத்தாகி சித்தாகி பித்தம்
தெளிய வைக்கும் சிவம்.
-
கிறுக்கன்
:)
தவறி தவறலினும் தவறாகும் என
நம்பி தவறல் தவறு.
-
கிறுக்கன்
:lol:
இன்பமே என்னாளும் துன்பம் இல்லை
ஈடில்லா இறையருள் பெறின்.
கருத்துதவி- அப்பர்
-
கிறுக்கன்
உயிருடன் வாழ்தலினும் உயிர்ப்புடன் வாழ்தலே
வாழ்வில் உயர்வு தரும்.
-
கிறுக்கன்
ஆம்,ஆம்!
மறதி மன்னிப்பை மனிதன் மறக்க
மறைந்திடும் மன அமைதி.
-
கிறுக்கன்
இல்லாதோர் பலமைல் புசிக்க நடக்க
இருப்போர் நடப்பர் செரிக்க.
-
கிறுக்கன்
போட்டியில் போட்டியிடாது வாழ்வில் போட்டியிட
வாழ்க்கை நொடிந்து வாடிடும்.
-
கிறுக்கன்