சகோதரி சாரதா அவர்களுக்கு,
முதலில் ஸ்ரீகாந்த் என்றதும் நம்முடைய ஹப்பில் அவரைப்பற்றியெல்லாம் யார் விவாதிக்கப் போகிறார்கள், இது தற்போதைய ஸ்ரீகாந்த்தாக இருக்கும் என்று நினைத்து திரியை ஆரம்பித்தவர் பெயர் பார்த்தேன். சாரதா என்று இருந்தது. உடனே ஆஹா இது நிச்சயம் நம்ம ஸ்ரீகாந்த் என்று ஆவலுடன் பக்கங்களைப் பார்த்தேன். என்னை 70களுக்கே அழைத்துச் சென்று விட்டீர்கள் சாரதா, நன்றி.
நடுவில் ஸ்ரீகாந்த் மீது எனக்கு கொஞ்சம் கோபம் இருந்தது உண்மை. அவருடைய அரசியல் நிலைப்பாட்டினால் அல்ல ஏனென்றால் கிட்டத்தட்ட அனைத்து ரசிகர்களின் மனநிலையைத் தான் அவரும் மேற்கொண்டிருந்தார். ஆனால் அவர் கூட்டங்களில் மேடைப் பேச்சில் நடிகர் திலகத்தைக் கடுமையாக விமர்சித்ததை என் மனம் ஏற்கவில்லை. தெருத்தெருவாக பிச்சை எடுத்தாலும் எடுப்பேனே தவிர ஒரு நாளும் போக்ரோட்டில் போய் நிற்க மாட்டேன் என்று பேசியது இன்னும் என் நினைவில் உள்ளது. ஆனால் அது சில காலம் மட்டுமே. நாளடைவில் அத்தனை தேசியவாதிகளும் தேசிய இயக்கங்களும் சிதறு தேங்காய் போல் ஆகி விட்டது பரிதாபத்திற்குரியது. இதைப் பற்றிய விவாதம் வேண்டாம். ஸ்ரீகாந்த் விஷயத்திற்கு வருவோம்.
தொலைக்காட்சியில் ஸ்ரீகாந்தைப் பார்த்த வுடனேயே நமது உடன் பிறவா சகோதரனைப் போன்று, நம்முடன் நெருங்கிப் பழகிய ரசிக நண்பர்களைப் போன்று அன்புணர்வு ஏற்பட்டது. அந்த அளவிற்கு அந்தக் கால சிவாஜி ரசிகர்களின் நெஞ்சில் இந்த மூவரும் குடி கொண்டு விட்டனர். குறிப்பாக சசிகுமார் மற்றும் ஸ்ரீகாந்த். இன்னும் சொல்லப் போனால் நாம் சசிகுமாரைப் பற்றி நிறைய விவாதிக்க வேண்டும். சமயம் வரும்போது என் எண்ணத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.
தெய்வீக ராகங்கள் பகுதி பகுதியாக அருமையாக அமைந்த படம். மூன்று கதாநாயகிகளி் இன்னொருவர் உழைக்கும் கரங்களில் கந்தனுக்கு மாலையி்ட்டாள் பாடலில் நடித்த பவானி. மற்றொருவர் சரியாக நினைவில்லமை. பாவை நீ மல்லிகை பாடலை ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம், மற்றும் ஓடுவது அழகு ரதம் என்ற பாடலை ஜாலி ஆப்ரஹாம் எஸ்.ஜானகி, பாடியிருப்பா. வாணி ஜெயராம் கங்கா யமுனா சரஸ்வதி என்ற ஹாலோவின் பாடலையும் பச்சை மோகினி மகராஜா என்ற பாடலையும் பாடியிருப்பார். தயாரிப்பாளர் - ஆச்சி சினி ஆர்ட்ஸ்
வசனம் இயக்கம் - ஏ. வீரப்பன்
மற்றபடி தங்களுடைய அனைத்து விமரிசனங்களும் நேர்மையாக உள்ளன. பாராட்டுக்கள்.
ராகவேந்திரன்