INBAM ENGAE.?... Sudhaama Ka-Vidhai Thodar.!!!
.
இன்பம் எங்கே.?... விவாத மேடை!!!
படைப்பாளி இறைவனுக்கும், படைப்பு மனிதனுக்கும் இடையே....
...கற்பனை உரையாடல்... கேள்வி-பதில்.!!!
சுதாமா கண்ட... அனுபவ விஞ்ஞான-ஞானம்.!!!
தற்காலத்திற்குத் தக்க "மானிட வாழ்-நெறி".!!!
...எளிய நடை கவிதைத்-தொடர்.!!!
முன் குறிப்பு: யாப்பு-இலக்கண வரம்பிற்கு உட்பட்டது அல்ல.
யான் பெற்ற இன்பம் இவ்வையம் பெறுக.!
யாதும் ஊரே யாவரும் கேளிர்.!!!
வாழ்க்கை-அனுபவம்.. வழுக்கைத்-தலையனுக்கு...
...இறைவன் வழங்கிய... தங்கச்-சீப்பு.!
தமிழ்-கூறும் நல்லுலகோரே,
வணக்கம். உலகார்ந்த பரந்த மானிட-நோக்கிலே, வாழ்க்கை-அனுபவம் என்னும் ஈடிணையற்ற முன்னோடிப்-பாடம் ஓர் சுரங்கம்.
வாழ்க்கையில் சூடுபட்டு உணர்ந்தோர், பின்னர் தம்மைத்தாமே நொந்து வருந்தி...
...ஐயோ இறைவா, அறியாமையாலோ, தடுமாற்றத்தாலோ, குழப்பத்தாலோ நான் செய்த தவறுகளால் தான், நானும் எனது குடும்பத்தோரும் வீணே கஷ்டப்பட்டோம். உயர் பண்பு, நல்லொழுக்கம் அறிவிருந்தும், தூய நோக்கம் இருந்தும் தவறான முடிவுகள் எடுத்தோம்.
இறைவா, நான் கற்ற அனுபவ வாழ்க்கைப்-பாடம், என்னோடு மடிந்துவிடக்-கூடாது.
மேலும், நான் எடுத்த நல்ல முடிவுகள் அணுகுமுறைகளால் நான் பெற்ற வெற்றி இன்பங்கள் தந்த அனுபவ பாடமும் என்னோடு மடிந்துவிடக்கூடாது என்று கருதுகிறேன்.
ஆம். "யான் பெற்ற இன்பம் இவ்வையம் பெறுக"... என்னும் அற-நெறியே தமிழ்ப்பண்பு அல்லவோ.?
எனவே தற்கால இளைஞர்களுக்கும் சிந்தனை தூண்டும் வகையிலே பயன்படட்டும் என்று கருதியே, கடந்த கால எழுபது ஆண்டு அனுபவ-ஞானத்தை உங்களுக்கு இனிய தமிழ்-விருந்தாய் படைக்கிறேன்
அன்பர்களே, உங்களுக்கு நான் புத்திமதி சொல்ல வரவில்லை. நீங்கள் நல்ல அறிவாளிகள். உங்களுக்குத் தக்க வழிமுறை நெறியை உங்களாலேயே தேர்ந்து-எடுத்து முடிவு எடுக்க முடியும் என்றே நம்புகிறேன்.
ஆகவே சிந்தியுங்கள்.!!! அது ஒன்றே எனது நோக்கம்.
உங்கள் அவரவர்க்கு ஏற்றதாய் தோற்றும் கருத்துக்களை மட்டுமே ஏற்றுப் பயன் அடைந்து ஓங்கி வாழுங்கள்.
அன்பர்களே, இது குறித்து உங்களது கருத்துக்களை வரவேற்கிறேன். கூறுங்கள் மனம் திறந்து.!...
...தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ.!
கேள்விகள் சந்தேகங்களையும் கேடகலாம். மறுமொழி விடை-விளக்கம் வழங்கவும் ஆவலாய் உள்ளேன்.
நீங்கள் யாவரும் இனிதே வெற்றி மிக வாழ்ந்து ஓங்க நல்வாழ்த்துக்கள்.!!!
உங்கள் அன்பன்
சுதாமா (ஆ-சிறியன்.!)
.