PDA

View Full Version : Cho-vin "EngE BraahmNan"? Jaya tv



Pages : 1 2 [3] 4

Shakthiprabha.
13th May 2009, 11:21 AM
Also, I request you to write about the "madisaar, priya's good news, saasthirigal meeting" scenes. :oops: I don't know how to write about madisaar, conceive matter :oops: :lol: not getting the right words :ashamed:

பிரியா தான் கருவுற்றிருப்பதை தன் மாமியாரிடம் மகிழ்வுடன் முதலில் பகிர்ந்து கொள்கிறாள். ஜாதி கட்டான மடிசார் கட்டிக்கொண்டு கோவிலுக்கு போக ஆவல் இருப்பதாக தெரிவிக்கிறாள். மனமெல்லாம் வெள்ளையாக சாம்புவின் மனைவி செல்லம்மாள் பேசுவதைக் கேட்க நன்றாக இருக்கிறது.

நேற்று எழுத விட்டுப்போன சில விஷயங்கள்
_______________________________________


"மாதங்களில் நான் மார்கழி" என்று கண்ணன் கூறுகிறான். தன்னை (இறையம்சத்தை) இருப்பவற்றுள் சிறந்தது எதுவோ அதுவாக கற்பித்துக்கொள்கிறான். அப்படி மார்கழி மாதத்தில் என்ன சிறப்பு?

இறைவனுக்கு உகந்த மாதம். தேவர்களுக்கு பிரியமான மாதம். சிறிதே நேரம் இறைவனை துதித்தாலும் பெரும் பேறு வந்துயர்த்தும் மாதம். அப்படிப்பட்ட மாதத்தில், இறைவழிபாட்டில் ஈடுபட வைக்க ஒரே வழி தான் உண்டு. சிறந்த மாதமான மார்கழியை இறைவனுக்கு அர்பணித்து அவன் துதி பாடுதலே அவ்வழி. அதற்கு நம் சொந்த விஷயங்கள், சௌகரியங்கள், நற்காரியங்களை எல்லாம் சற்றே தள்ளிப்போட்டு மற்ற
பதினோரு மாதங்களில் செய்துக்கொள்ளலாமே என்பதால் தான் மார்கழி மாதங்களில் நம் வீட்டு நற்காரியங்களை செய்யாமல் இறைவனின் துதியில் ஈடுபடச் செய்கிறார்கள்.

சோவின் இந்த விளக்கம் ஒப்புமைக்குறியதாக இருந்தது :clap: quite logical !


நாம் கேள்விபட்ட ஒன்று தான், "இருப்பதை வைத்து இன்புறு" எனும் தத்துவம். என்னிடம் என்ன இல்லை என்று நினைத்து துன்பத்தில் துவண்டால் ஒவ்வொரு தனிப்பட்ட ஜீவனுக்கும் துக்கம் சொல்லி மாளாது. இன்பமும் துன்பமும் மனத்தின் வெளிப்பாடே. நம்மிலிருந்து புறப்படும் உணர்வுகள். அந்த மனதை ஷாந்தமாக வைத்துக்கொண்டால், சுற்றுப்புற சூழலினால் வரும் இன்பம்/துன்பம் நம்மை அதிக அளவு பாதிக்காது.

ஆங்கிலத்தில் "count your blessings" என்று கூறுவார்கள். இத்தத்துவத்தை சுட்டிக்காட்டி சாம்பு பேசுகிறார். "குறைப்பட்டுக்கொள்ளாத மனிதன் ஏது! " இருந்தாலும் குறை இல்லாவிட்டாலும் குறை. எது இருந்தால் குறை? நம்மிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்று தெரியாமல் வருந்துவதே பெரிய குறை. நாம் சுகப்பட உலகில் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றனவே. "கூன் குருடு பேடு நீங்கி பிறத்தல் அரிது" என்ற பாடல் வரிகள் அழுத்தமாய் பதிந்த வரிகள். , கூன் குருடு பேடு நீங்கி இறைவன் அளித்திருக்கும் இந்த உடல் எத்தனை காரியங்களை செய்ய வல்லது! அதை அளித்த இறைவனை வணங்க வேண்டும். உண்ண உணவும், இருக்க இடமும், அன்பு கொண்ட உறவுகளும், நதியும், மலையும், நீரும், காற்றும், மலர்களும், மரங்களும், எத்தனை ஆனந்தங்கள்! எத்தனை அழகு! அற்புதங்கள்! எப்பேற்பட்ட கருணை வள்ளல் அவன்! இந்த எண்ணத்துடன் பல மஹான்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அனுபவித்து இறைவனின் கொடை உள்ளத்தை துதித்து பாடல் பாடியிருக்கிறார்கள்.

அசுர வேகத்துடன் செயல்படும் இவ்வுலகில் இன்றைக்கு நான் இதையெல்லாம் ரசித்து பார்க்கும் நிலையில் இல்லை. நேரம் போதவில்லை. நேரம் இருப்பினும், மனம் இருப்பதில்லை.

நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே!!

நம் வாழ்வில் நிறைந்திருக்கும் அழகை ரசிக்கவும், நிறைகளை அளக்கவும் நேரம் போதாமற் இருக்கும் போது குறைகளை நினைக்க நேரமேது?!



(வளரும்)

wrap07
13th May 2009, 03:10 PM
SP,

yes. nice explanation abt margazhi month/nature. pl continue your expert comments/thoughts :D

//I feel kambar jayaraman is excelling in his role.//

vr :clap:

aanaa
13th May 2009, 05:25 PM
நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே!!



(வளரும்)

:exactly:

aanaa
13th May 2009, 05:28 PM
May 11, 2009


thanks : Isainet.net - Prabhu

[html:5a0eb6d379] <div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13418516&vid=5049543&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8834/85344451.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13418516&vid=5049543&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8834/85344451.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:5a0eb6d379]

Shakthiprabha.
13th May 2009, 06:11 PM
விராஜனுக்கு நேற்றைய தொடரை பார்க்க முடியாமல் போனதால், நேற்றைய தொடருக்கான என் பதிவு

p.s: ஒரு குட்டி குறிப்பு :D பாடலில் (title song) வரும் பெண் சன்யாசி (நாதன் குலத்தை சபிப்பவள்) வேம்புவின் அக்காளாகவும் வருகிறார் போல :D
______

May 12th
________

பாகவதர் தன் முயற்சிக்காக மருத்துவச்சி ஹேமாவைக் கண்டு அஷோக்கைப்பற்றி எடுத்துரைக்க முயல்கிறார். விழலுக்கு இறைத்த நீராய் வீணாய் போனது அவர் தரப்பு பேச்சுக்கள். எள்ளிநகையாடி வழக்கம் போல் அதை ஏற்க மறுத்துவிடுகிறார் ஹேமா.

அஷோக்கிற்கு மயக்க ஊசி போட தயாராகிறார் ஹேமா. அதற்கு முன்பு இயந்திரங்கள் எல்லாம் சரியான இயக்கநிலையில் இருக்கின்றனவா என்று பார்த்துக்கொள்ளும்படி கூறுகிறான் அஷோக். அவனிடம் திடீரென ஒரு மாற்றம். அவனுள்ளிருந்து வேறொரு ஷக்தி பேசுவது போல் செயல்படுகிறான். ஏழு வருடங்கள் முன்பு சரியான இயந்திரம் தருவிக்கப்படாததால் மின் இணைப்புத் துண்டிக்க நேரிட்ட போது மித்ரா என்ற பணக்காரர் இறந்ததையும், அதைப் பற்றிய பேச்சு பிகார் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டதையும் நினைவுறுத்துகிறான். மித்ரா வீட்டவர்கள் இவரை கோர்டுக்கு இழுக்கவிருந்ததையும், ஹேமாவின் தந்தை பணம் பல செலவு செய்து அதை சரிகட்டியதையும் சுட்டிக்காட்டுகிறான்.

வெலவெலத்துப்போகிறார் ஹேமா.

நீங்கள் நினைப்பது சரி தான். அஷோக்கை அப்படிப் பேசச் செய்தது நாரதரின் செயல். ஹேமா நாதனிடம் எல்லோரும் சொல்லும் அதே வசனத்தை மிகுந்த மரியாதையுடன் தெரிவிக்கிறார். "சார் உங்க பையன் சாதாரண பிறவியல்ல. அவனுள்ள எதோ ஒரு அமானுஷ்ய சக்தி இருக்கிறது" என்று
வியக்கிறாள். எவருக்கும் தெரியாமல் போன தன் சரிதத்தை அவன் நினைவுக்கு கொணர்ந்ததாகச் சொல்கிறாள். ( Contradctory: Ashok says whole bihar was aware of the case and its history, how can it be unknown here in south, I am sure communication and its means weren't that bad seven years earlier. If the case was a popular one, then ashok recollecting its facts isn't any abnormal phenomenon. இயக்குனர் சற்றே கவனத்துடன்
இருந்திருக்க வேண்டுமோ? ) தன்னால் இனி அவனை நோயாளியாக இனி ஏற்க முடியாது என்று மறுத்துவிடுகிறார்.

(அப்பாடி !! போதும் அந்த பையனை விட்ருங்க :cry: :P :oops: )

வேம்புவுக்கு கிரி சம்பந்தம் விட்டுப்போனதில் வருத்தம் மிஞ்சியிருக்கிறது. முதலியார் பணம் கேட்டதன் நோக்கத்தை தெரிந்தபின் அவருக்கு சிறு நம்பிக்கை மீதம் துளிர் விடுகிறது. அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் செல்லம்மா சுப்புவிற்கும் அவர் அக்காளுக்கும் எடுத்துச் சொல்லப் போய் நன்கு மூக்கறுபட்டுத் திரும்புகிறாள். எந்த சூழலிலும் பொறுமை கடைபிடிக்கும் அவளது பாத்திரத்தின் குணம் மிகவும் பாராட்டத்தக்கது.

சாஸ்திரங்களும், நல்ல கருத்துக்களும் அறிந்த வைதீக பிராமணனுக்குத் தான் பரந்த நோக்கு இருக்க வேண்டும் என்று அவர் ஆதங்கம் மேலிட வேம்பு புலம்புகிறார்.

பண்டிதன் என்பவன் யார் என விளக்கும் பகவான் க்ருஷ்ணர், எவன் சமநோக்குடன் பிற உயிர்களை அணுகுகிறானோ, எவனுக்கு விஷால மனசும், மனித நேயமும் இருக்கிறதோ, எவன் ஜாதி ஒன்று தான் அது மனிதன் என்ற ஜாதி , ரூபங்கள் பலவாயினும் ஆன்மா ஒன்றே என உணர்கிறானோ அவனே பண்டிதன். பண்டிதன் என்பவன் ஞானி அல்ல. இங்கு வேம்பு சாஸ்திரகள் இதையெல்லாம் கற்றுக்கொண்டவர். அதை செயல்படுத்த எண்ணுகிறார். பண்டிதனும் கற்றுணர்ந்தவன், அவன் கற்றுணர்ந்த விஷயங்களை நிஜ வாழ்வில் பயின்றால் அதுவே பெறும் நிலைக்கு அவனை உயர்த்த வல்லது. வேம்பு சாஸ்த்ரிகளைப் போன்றவர்களும், தம் பரந்த நோக்கை நிஜ வாழ்வில் கடைப்பிடிக்க முயலுவதால், அம்முயற்சி
வெற்றி பெற்றால், என்றேனும் தம் நிலை உயர்த்தப் பெறுவர். ஞானி என்பது உயர்ந்த நிலை, எல்லோராலும் எளிதில் நினைக்கவும் வல்லாத நிலை என்பதை உணர வேண்டும்.

ஜாதிகள் ஒழித்தவனே உண்மையான பண்டிதன் என்பதை உணர்த்த நம் எல்லோருக்கும் தெரிந்த ஆதிஷங்கரர் கதையை மேற்கோள் காட்டுகின்றனர். ஆதிஷங்கரருக்கு தெரியாததல்ல, எனினும் இப்படிப்பட்ட பாடங்கள் இவரைப் போன்ற பெரிய மஹான்களால் சாமான்ய மக்களுக்கு விளங்கப்பெற வேண்டும் என்று இறை நடத்தும் செயல் எனக் கொள்ளலாம்.

ஆதிஷங்கரர் நடந்து கொண்டிருந்த ஒத்தையடிப் பாதையில்
எதிரே ஒரு சண்டாளன் (சண்டாளன் என்ற சொல்லுக்கு இழி பிறவி என்று கொள்ளக்கூடாது, மாமிசங்களை விற்று, புசித்து, உண்ணும் தாமஸ குணம் படைத்தவன் என்று வேண்டுமானால் கொள்ளலாம்). அவன் ரூபம் அழுக்குடன் இருந்தது. கையில் தோல் பை அதனுள் கள், தோளில் மாமிசத் துண்டங்களைத் தொங்க விட்டிருந்தான்.

"சற்றே விலகிக் கொள்" என்று ஷங்கரர் சொல்ல,

அவனோ "எதை விலகச் சொல்கிறாய்? இந்த ஆன்மாவையா அல்லது உடம்பையா? ஆன்மாவை என்றால், உன்னுள்ளும் என்னுள்ளும் நிறைந்திருக்கும் அது ஒன்றே என கூறியவனே நீ தான். அப்படியில்லாமல் இந்த உடம்பை விலகச் சொல்கிறாயா? உன் உடம்பும் என் உடம்பும் அன்னம் என்ற உணவினாலான சதைப் பிண்டங்களல்லவா? உன்னுள் ஓடும் அதே இரத்தம், சதை, தசையல்லவா என்னுள்ளும்? உணவினாலான இதை விலகச் சொல்கிறாயா? " எனக் கேட்கிறான்.

மேலும் கூறுகிறான்....

"கங்கையில் தெரியும் சந்திர பிம்பமும், அழுக்கு நீரில் தென்படும் பிம்பமும் வெவ்வேறு ஆகுமோ? பொன்குடமேயானலும், மண்குடமேயானாலும், அதனுள் இருக்கும் காற்றுக்கு வேறுபாடு உண்டோ?" என்கிறான்.

உடனே தன் தவறை உணார்ந்த ஷங்கரர், அவனையே தன் குரு என ஏற்றதாக கூறுவர். அத்தருணத்தில் இயற்றப்பட்டது மனீஷ பஞ்சரத்தினம் என்ற ஐந்து ஸ்லோகங்கள்.

அடக்க மாட்டாமல் நினைவில் ஆடியது எனக்கு மிகவும் பிடித்த பாரதியின் பாடலொன்று ...

காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் இடமெங்கும் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம்

- பாரதியார்

இவரின் கவிதைகள் எந்நேரத்திலும் பொருந்தி வருகிறதே! :bow:

(வளரும்)

_______

( நாளை மீண்டும் விராஜன் தொடர்வார் )

Shakthiprabha.
13th May 2009, 06:22 PM
//I feel kambar jayaraman is excelling in his role.//



Shankar,

Every single person in this serial, I feel, is contributing his/her best :bow: They gel so perfectly with their respective roles.

aanaa
13th May 2009, 11:24 PM
காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் இடமெங்கும் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம்

- பாரதியார்


(வளரும்)

_______

( நாளை மீண்டும் விராஜன் தொடர்வார் )



:ty:

viraajan
13th May 2009, 11:37 PM
Thanks Shankar :bow:

Thanks SP akka :)

aanaa
14th May 2009, 04:56 AM
May 12, 2009


[html:e90951132f] <div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13443616&vid=5059829&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8861/85436478.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13443616&vid=5059829&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8861/85436478.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:e90951132f]

aanaa
14th May 2009, 04:56 AM
May 12, 2009


- but 2 posting ..?

mm


[html:61f2835bd5] <div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13436118&vid=5056945&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8854/85409833.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13436118&vid=5056945&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8854/85409833.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:61f2835bd5]

viraajan
14th May 2009, 03:22 PM
May 13 2009.

Part 1:

ஆஷோக்கிற்கு சிகிச்சை அளிப்பதாய் உறுதியளித்த இரண்டு மருத்துவர்களும், தற்போது முடியாது என்று கைவிரித்துவிட, எரிச்சலாகிறார் நாதன். அவனுக்கு வியாதியும் இல்லை, விரக்தியும் இல்லை. யோகாபிமானம் மட்டும் ச்ற்றே இல்லை என்றும், வாழ்க்கை மீதும், மனிதர்களின் மீதும் பற்றுதலை உண்டாக்கிவிட்டால், அஷோக் நிலமை மாறிவிடும் என்று வசு கூற, ஆக, இவன் சந்யாசியாகவும் இல்லாமல், சக மனிதரைப் போலவும் இல்லை, "திரிசங்கு சொர்கம்" என்கிறார் நாதன்.

--
"திரிசங்கு சொர்கம்" என்றால் என்ன என்று தயாரிப்பாளர் கேட்க, சோ அதற்கு விளக்கம் அளிக்கிறார். (Folks, I will try to search for this story in net and post it soon. In case i dont get it, akka please help :cry2: )
--

கோவிலுக்கு போவது, பூஜை செய்வது என எதிலும் குறைவில்லை, இருப்பினும் தம் ப்ரார்த்தனைகள் பகவான் செவிகளுக்கு எட்டவில்லை என்றும், பகவானுக்கு ஒரு Hearing Aid தேவைப் படுகிறது என்றும், வசு நகைச்சுவை கலந்து தன் வேதனையை வெளிப்படுதுகிறாள். அதற்கு "சாஸ்திரிகள் தான் அந்த Hearing Aid என்றும், நம் ப்ரார்த்தனைகளை பகவான் செவிகளுக்கு எட்டச் செய்வது இவர்கள் தான் என்று சாஸ்திரிகளை பர்த்து நாதன் கூற, சாஸ்திரிகள் முகத்தில் மட்டும் அல்ல மலர்ச்சி, நம் முகத்திலும் தான் :)

---

Note: Giri's parents eloped and married! :)

கிரி (கிருபவின் நண்பன்), ஸ்லோக புத்தகங்கள் விற்கும் தாத்தாவை காண்கிறான். தான் அவரிடம் புத்தகங்கள் வாங்கி இருப்பதை நினைவுப்படுத்தி, அவரை தன் இல்லத்திற்கு அழைத்து செல்கிறான். அவரைப் பார்த்த மாத்திரதில் அதிர்ச்சி அடைகிறாள் அவன் அம்மா. காரணம், அவர் வேறு யாருமில்லை, அவளின் சொந்த அப்பா தான். இத சற்றும் எதிர்ப்பார்க்கத கிரி, இத்தனை நாளும் வயது காரணமாக அவரை தாத்தா என்று அழைத்ததையும், இன்று அவர் தான் அவனின் சொந்த தாத்தா என்ற உண்மை தெரிந்ததும், நெகிழ்கிறான்.

கிரியின் அப்பா வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன் நடந்ததை மனதில் வைத்துக்க்கொண்டு, கிரியின் தாத்தாவை அவமதிப்பார், என்று நாம் யூகித்துக்கொண்டிருக்க, அவரோ, தன்னை ஆசிர்வதிக்குமாறு வேன்டுகிறார். திருமணதின் போது கிடைக்காமல் போன ஆசிர்வதம் இப்போது கிடைக்கட்டும் என்று கூறுகிறார். ச்ந்தோஷம் ஒரு புறம் குற்ற உணர்ச்சி மறுபுறம் என தாத்தாவின் முகபாவம் கனகச்சிதம்.

இளையவளின் பேச்சைக் கேட்டு இவர்கள் கல்யாணத்தை ஒதுக்கியதாகவும், பின் இளயவளே இவரின் சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வாங்கிக்கொண்டு விட்டாள் என்றும், அவளின் மூலமாக வந்த பிள்ளைகள் எஞ்சி இருந்த சொத்தையும் வாங்கிக்கொண்டு தன்னை ஒதுக்கி விட்டாதாகவும், கூறி தன் குமுறலை அழுகையாக வெளிப்படுதுகிறார் தாத்தா. அன்று இவர்களுக்கு செய்த பாவம் மொத்தமும் தன்னையே திருப்பி தாக்கி விட்டதாக கூரி அழுகிறார். அதனை மறுத்து பேசும் கிரியின் அப்பா, பெற்றவரின் மனதை ரணமாக்கி விட்டு, அவரின் பெண்ணை திருமணம் செய்துக்கொண்டது மட்டும் எப்படி சரியாகும் என்று கூறி தன் குற்ற உணர்ச்சியையும் வெளிப்படுதுகிறார். நடந்தஹை மறந்து, இனி தங்களுடனே சேர்ந்து இருக்குமாறு தாத்தாவை கேட்டுக்கொள்கிறார் அப்பா. தன் விருப்பமும் அது தான் என்று கூறி சம்மதிக்கிறார் தாத்தா.

அன்றே உங்கள் திருமணத்திற்கு சம்மதித்து சந்தோஷமாக இருந்திருக்கலாம் என்று எண்ணி வருத்தப்படும் தாத்தாவை, "Past is an outdated cheque, future is a post dated cheque but present is the hot cash" என்று கிரியின் அப்பா கூற, கிரி தன் பங்குக்கு, வாழ்க்கை என்பது ஒரு Cone Ice cream அது உருகிவிடும் முன், நாம் அதனை அனுபவித்துவிடவேன்டும் என்கிறான். அதற்கு, எல்லா ice cream'um உருகிப்போய், வெறும் empty cone-ஆகத்தான் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன் என்று வருதத்துடன் பதிலளிக்கிறார் தாத்தா. "We will fill the empty cone " தாத்தா என்று கிரி கூற, "with more and more ice creams" என்று கூறி முடிக்கிறார் கிரியின் அப்பா.

viraajan
14th May 2009, 04:16 PM
May 13: Part 2:

வேலைக்கு சென்று திரும்பும் நீலகண்டணை, வாசலில் வழிமறித்து, அவரிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேன்டும் என்று கூறுகிறார் பாகவதர். பாகவதரை வெறுத்து ஒதுக்கும் நீலகண்டன், வழக்கம் போல், அவருக்கு செவி சாய்க்காமல் செல்கிறார். வலுக்கட்டாயமக நீலகண்டனை நிறுத்தி, அஷோக்கிற்கு சிகிச்சை அளிக்க முன் வ்ந்த மருத்துவர்கள் இருவரும் இப்போது முடியாது என்று கூறியதை சொல்லி சந்தோஷப்படுகிறார். எரிச்சலாகும் நீ.க , மருத்துவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போனதை நினைத்து நாங்கள் வருத்ததில் இருக்கிறோம், உமக்கு சந்தோஷமா இருக்கா?" என்று வசை பாடுகிறார்.

அஷோக் extraordinary person என்பதை இப்பொழுதாவது புரிந்துக்கொள்ளுங்கள் என்கிறார் பாகவதர். நீ.க கோபத்தில், தான் முட்டாள்களோடு பேசுவதில்லை என்று கூறி வீட்டிற்குள் விரைகிறார். பாகவதர் அவரை விடுவதாய் இல்லை. ஆனால் நான் பேசுவேன் என்று பின் தொடர்ந்து வீட்டிற்குள் செல்கிறார். பாகவதரின் இச்செயலால் எரிச்சலாகும் நீ.க பாகவதர் தன் வீட்டிற்குள் வந்தது தனக்கு பிடிக்கவில்லை என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிடுகிறார். "எனக்கும் மரியாதை, சுய கவுரவம் எல்லாம் உண்டு. உம்ம மாதிரி நானும் எல்லாத்தையும் பார்ப்பவன் தான்" என்று கூறும் பாகவதரிடம், எதற்காக தன்னை பின் தொடர்ந்து வீட்டிற்குள் வந்தீர்கள் என்று கேட்கிறார் நீலகண்டன். அதற்கு, தானாக வரவில்லை என்றும், ஏதொ ஒரு சக்தி தான் தன்னை உள்ளே அழைத்து வந்ததாக கூறுகிறார் பாகவதர். இதற்கு விளக்கம் கேட்கும் நீலகண்டனிடம் "ஒரு வேளை நீர் மாற வேன்டிய நேரம் வந்து விட்டதோ என்னவோ. உமக்கு ஒண்ணு தெரியுமா. இந்த வாழ்க்கையே Opposite அச்சாணியைக்கொண்டுதான் சக்கரமாய் சுற்றுகிறது. Good என்றால் evil இருக்கும், பகல் எனில் இரவு இருக்கும், கோபம் எனில் சாந்தம் இருக்கும். இத்தனை நாள் கடவுள் இல்லை'னு சொல்லிண்டு இருந்தேள், சக்கரம் சுற்ற தொடங்கிவிட்டது.. அடுத்த நிலை, கடவுள் இருக்கார்'னு சொல்லப்போறேள். எந்த அஷோக்கப் பாத்து பைத்தியம், சித்த ப்ரம்மை பிடித்தவன்'னு சொன்னேளோ, அந்த அஷோக்கே உமக்கு குருவாகி கண்ணை திறக்க போகிறான், உம்முடைய அறியாமையை அழிப்பான், அவன் யாரென்று உலகத்துக்கு அறிவிக்கும் சமயம் வரும், அப்பொழுது அவன் யாரென்று உமக்கு தெரியும், நீர் யார் என்றும் உமக்கு புரியும்" என்று கூறுகிறார். எல்லாவற்றிற்கும் பதில் பேசும் நீலகண்டனிடமிருந்து இதற்கு பதில் இல்லை. முகதில் கலவரம். "தொடரும்" என்ற எழுத்துக்கள் தோன்றுகின்றன. ம்ம்...பொறுத்திருந்து பார்ப்போம்.

viraajan
14th May 2009, 04:16 PM
Akka, as usual first 5 mins miss pannittEn :oops: help pls :bow:

viraajan
14th May 2009, 04:26 PM
thAthA'va samaadhanappadutha use pannina "cheque", "ice cream" dialogues konjam cliche'va irundhalum, the way they have expressed it on the screen was thoroughly enjoyable. :)

Nilagandan's reaction to bagawathar's speech was stunning. :clap:

As usual, bagawathar did his part so well :bow:

Why does the composer use "nenjinile nenjinile" tune in the BGM when Bagawathar followed Nilagandan. :confused2: Inappropriate music for the scene. :oops:

And,

I got reminded of Anbu Kathir when Bhagavathar spoke about the concept of Duality!! :)

aanaa
14th May 2009, 05:19 PM
May12: Part 2:

வேலைக்கு சென்று திரும்பும் நீலகண்டணை,
.

:ty:

improved lot

keep up

viraajan
14th May 2009, 05:22 PM
Encouraging. Thanks aana :bow:

aanaa
15th May 2009, 07:13 AM
May 13, 2009


[html:790ecb488e] <div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13453542&vid=5063834&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8871/85473579.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13453542&vid=5063834&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8871/85473579.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:790ecb488e]

viraajan
15th May 2009, 10:03 AM
May 13, 2009


sorry - I will wait

Hi Aana, that was May 13. I typed it wrongly :oops:

Both the parts are from May 13 episode :)

viraajan
15th May 2009, 03:45 PM
May 14.

Part I:

அஷோக்கை குணப்படுத்த தான் ஒரு யோசனை கூற விழைவதாக கோமதி மாமி நாதனிடம் தெரிவிக்கிறார். நாதனும் செவி சாய்க்கிறார். (அந்த யோசனை என்னவென்று பின்னர் தெரிய வரும் :) ). மாமி யோசனை கூற, நதனுக்கு அந்த யோசனை சரி என்று படுகிறது. வசுவிற்கோ அது பிடிக்கவில்லை. மாமியின் யோசனை சரி இல்லை என்று அதனை நிராகரிக்க, நாதனோ அது தான் சரி என்று தீர்மானமாக கூறிவிடுகிறார். வேறு வழியின்றி வசுவும் சம்மதிக்கிறாள். ஆனால், "அவரை" நேரில் சென்று சந்திக்காமல், ஒரு கடிதத்தில் விபரத்தை எழுதி அனுப்புமாறு கோருகிறாள். நாதனும் சம்மதிக்கிறார். கடிதம் எழுதப்பட்டு மாமி மூலமாக "அவருக்கு" அனுப்பி வைக்கப்படுகிறது.

அவர் வேறு யாரும் இல்லை. நீலகண்டன் தான். நாதன் நேரில் வராமல், தொலைப்பேசியிலும் தொடர்பு கொள்ளாமல், கடிதம் மூலமாக தொடர்பு கொண்டிருப்பது, நீலகண்டனுக்கு சற்றே அதிர்ச்சியைக் கொடுக்கிறது. கடிதத்தைப் படிக்கிறார். சற்றே கலக்கமாகிறார். மறூக்கவும் முடியாமல், சரி என்று ஒப்புக்கொள்ளவும் முடியாமல் குழம்பிப் போகிறார். இருப்பினும் நாதன் இதுவரை உதவி என்று தன்னை நாடியதில்லை, இது தான் முதல் முறை என்பதால், சரி என்று ஒப்புக்கொள்கிறார்.

நீலகண்டனின் மகளான உமா மீது அஷோகிற்கு நல்ல மதிப்பு இருப்பதல், அவள் நினைதால் இவனை மாற்ற முடியும். எனவே, உமாவை அஷோக்குடன் பழக விடுவதன் மூலம் அஷோக்கின் போக்கை மாற்ற்லாம் என்பது தான் கோமதி மாமியின் யோசனை. இந்த உதவியைத் தான் கடிதம் மூலமாக கேட்டு அனுப்பினார் நாதன்.

அஷோக் வீட்டிற்கு வருகிறாள் உமா.

நாதன் பேசத்துவங்குகிறார். "Psychiatric treatment-ஆல் அஷோக்கிற்கு எந்த பிரயோஜனமும் இல்லை, சொல்லப்போனால், அந்த மருதுவத் துறைக்கே அவன் ஒரு சவாலக இருக்கிறான். மற்ற வியாதி என்றால், ஒரு முறை சரி வரவில்லை என்றால், வேரு ஒரு முறையைக் கையாளலாம். Allopathy இல்லை என்றால், ஆயுர்வேதம், யுனானி என பல முறைகள் இருக்கின்றன. ஆனால், அஷோகிற்கு ஏற்பட்டு இருக்கும் இந்த நிலையை சரி செய்ய இவை எல்லாம் உதவாது. அவன் ஆன்மீகத்தில் மூழ்கிக்கொண்டு இருக்கிறான். அவன் மீட்க உன்னால் மட்டுமே முடியும். அவனுக்கு உன் மீது அளவற்ற பற்று இருப்பது உண்மை. நீ நினைத்தால் அவனை மாற்ற முடியும்." என்று கூற, உடனே சம்மதம் தெரிவிக்கிறாள் உமா.

அவள் செய்யும் இந்த உதவிக்கு கைமாறாக என்ன கேட்டலும் தருவதாக தெரிவிக்கிறார் நாதன். அஷோக்கை முழுமையாக மாற்றி விட்டால், அவனையே தனக்கு வாழ்க்கை துணையாக தர வேன்டுகிறாள். சற்றும் அதிர்ச்சியாகாத நாதன், அஷோக்கிற்கு புனர்ஜென்மம் கொடுக்க்க போகும் அவளை விட வேறு யாரும் சிறந்த துணையாக இருக்க முடியாது என்று கூறி, முழு சம்மதம் தெரிவிக்கிறார். சந்தோஷத்தில் திளைக்கிறாள்... முழு திருப்தியுடன் விடை பெறுகிறாள் உமா.

அவள் சென்றபின், பூகம்பமாய் வெடிக்கிறாள் வசு. அஷோக்கை மாற்றி, தன் பிள்ளையாக திருப்பித் தர கேட்டால், அதற்கு பதிலாக அவனையே விலையாக கேட்கிறாள், என்று கொதித்தெழுகிறாள். எப்படியும் ஏதோ ஒரு பெண்ணைத் தான் மணமுடித்து வைக்க போகிறோம், அது இவளாக இருந்தால் என்ன? என்று நாதன் கேட்க, தன் பிள்ளை இப்படியே இருந்தாலும் பரவாயில்லை, இந்த திருமணம் நடக்காது என்று திட்தவட்டமாக மறுத்து விடுகிறாள் வசு.

வீட்டிற்கு திரும்பும் உமா நடந்ததைஇ கூறி, தன் விருப்பத்தையும் தெரிவிக்கிறாள். அதிர்ச்சியாகும் குயிலி, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறாள். தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, நாதன் இந்த விஷயத்தைக் நீலகண்டனிடம் கூறி, அவரின் சம்மதத்தைக் கேட்கிறார். அதற்கு பதில் ஏதும் தராமல், பிறகு பேசிக்கொள்ளலாம் என்று கூறிவிடுகிறார்.

நீலகண்டனும் செய்வதறியாது தவிக்கிறார். முதலில் அஷோக்கின் நிலமை சரி ஆகட்டும், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கிறார்.

aanaa
16th May 2009, 02:34 AM
எவ்வளவு முன்னேறி விட்டீர்கள்

italic/ different color

keep up

aanaa
16th May 2009, 05:45 AM
May 14, 2009


thanks to ISAITAMILNET - Prabhu


[html:d0a3118ede]<div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13473489&vid=5071865&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8894/85546916.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13473489&vid=5071865&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8894/85546916.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:d0a3118ede]

viraajan
16th May 2009, 10:00 AM
எவ்வளவு முன்னேறி விட்டீர்கள்

italic/ different color

keep up

Thanks. :bow:

Credits goes to SP akka :bow:

aanaa
17th May 2009, 05:52 PM
May 15, 209


Thanks to ISAITAMILNET - Prabhu



[html:495fdefea2]<div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13489203&vid=5079469&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8909/85604515.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13489203&vid=5079469&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8909/85604515.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:495fdefea2]

viraajan
20th May 2009, 02:06 PM
Hi aana,

Thanks for sharing the videos here. :ty:

I'm not sure if i would be able to write regularly. I'm a kinda busy with some personal works and studies too.

Whenever I get time, i would sure visit hub and this thread.

Thanks, :D

Shakthiprabha.
20th May 2009, 02:21 PM
May 15th முதல் தொடரை நானே மீண்டும் தொடர்கிறேன்.

( விராஜனுக்கு நேரம் கிடைத்தாலோ அல்லது மறுபடி எழுதும் ஆர்வம் எழுந்தாலோ, தயங்காமல் என்னிடம் தெரிவித்தால், அவரையே மீண்டும் தொடரச் செய்து விலகிக் கொள்வேன். )

இதுநாள் வரை தொடரை சிறப்புற எழுதி வந்த விராஜனுக்கு மீண்டும் என் நன்றி.

Shakthiprabha.
20th May 2009, 03:43 PM
May 15th
________

உமா அசோக்கிடம் நெருங்கிப் பழக முயற்சி எடுக்கிறாள். அவள் முயற்சிகள் அனைத்தும் அவன் எத்தனை தூரம் ஆசைகளைக் கடந்தவன் எனப் பறைசாற்றுகிறது. அவளோ அவன் குறைந்த பட்ச ஆவலைத் தூண்டவேண்டும் என்ற எண்ணத்தில் காதல் வாரத்தைகளும், நட்பின் வார்த்தைகள் பேச எத்தனிக்கிறாள். அதையெல்லாம் தாண்டிய நிலையில் இருக்கும் அவனுக்கோ பேசும் அனைத்தையும் இறைவனுடன் ஒப்பிட்டு பேசுகிறான். பஞ்ச இந்திரியங்களை அடக்கி ஆள்வதே மனிதனின் தலையாயக் கடமை. அவ்வாறு இல்லாது போனால் இந்திரயங்களுக்கு நாம் அடிமைப் பட்டு விடுவோம் என்கிறான்.

இதையே ஸ்லோகமாகக் குறிப்பிடும் ஆதிஷங்கரர், பஞ்சேந்திரியங்களை ஆளாது போனல் நேரும் கதியை கூறுகிறார். பஞ்ச (ஐந்து) இந்திரியங்கள் (literally speaking machinery) ஆகப்பட்டது முறையே காது, கண், வாய், நுகரச் செய்யும் நாசி, ஸ்பரிசம் என்ப்படுபவையாம்.

சங்கின் ஓசையை காதால் கேட்டு வேடன் இருக்கும் இடம் தேடி ஓடும் மானும்,

பள்ளம் தோண்டி, இலை-ஓலைகளால் மூடி, இன்னொரு பக்கத்தில் பிடி எனும் பெண்யானையை நிற்கச்செய்து, பெண் யானையின் ஸ்பரச இன்பத்தை நினைத்தபடி ஓடி வந்து வீழ்ந்து விடும் யானையும்,

விளக்கின் பளபளப்பைக் கண்டு மயங்கி வீழும் விட்டில் பூச்சியும்

தூண்டிலில் கோர்க்கப்பட்டிருக்கும் புழுவை நினைந்து வகையாய் மாட்டிக் கொள்ளும் மீனும்

நறுமணத்தை நுகர்ந்து, அதில் மயங்கி, ஆபத்தை அறியாது உறங்கும் வண்டை மூடிக்கொண்டு விடும் பூவும், அதில் இறக்கும் வண்டையும் விட....பரிதாபத்துக்குறியவன் மனிதன். ஏனெனில் அவன், ஐந்து இந்திரியங்களாலும், நாளும் மயக்கமுற்று, அழிவின் பாதையில் ஓடிக்கொண்டே இருக்கிறான்.


"நீ ஏன் எல்லோரையும் போல் இருப்பதில்லை" என்று அங்கலாய்க்கிறாள் உமா.

உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளும் தனித்துவம் வாய்ந்தவை. ஒரு மலரைப் போல் வேறொன்று இருப்பதில்லை, ஒரு மனிதனைப் போல் இன்னொருவன் இருப்பதில்லை. அப்படி இருந்துவிட்டால் வாழ்வின் சுவாரஸ்யமே குறைந்துவிடும் என்று பதிலளிக்கிறான். திருமண பந்தங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் ஆர்வம் இல்லையெனக் கூறுகிறான். இப்படி உலக இன்பததை துறந்தவர்கள் இறைவனின்
படைப்பையும் அதன் சுவாரஸ்யத்தையும் அழகையும் ரசிக்க மறந்தவர்கள் ஆக மாட்டார்கள். அவர்களும் இறைவனின் படைப்புக்களை, நதியை, கடலை, பூவை, பொருளை, ரசிக்கிறார்கள். பெண்களின் அழகையும் கூட ரசித்து வியக்கிறார்கள். நமக்கு அவர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம். ரசிக்கப்படும் நதியையோ, பூவையோ, மரங்களையோ அவர்கள் சொந்தம் கொண்டாடுவதில்லை. சொந்தம் கொண்டாட வேண்டும் என்ற ஆசையும் இருப்பதில்லை. ஆசை வேறு, ரசிப்புத்தன்மை வேறு. ஒரு அழகிய பெண் என்றால் இறைவனின் படைப்பை ரசிக்கலாம். அந்த அழகும் அதைச் சுமக்கும் பெண்ணும் தனக்கு சொந்தமாக வேண்டும் என்ற எண்ணம் வரும் போது அவர்கள் சாதாரண மானிடர்கள் ஆகிவிடுகின்றனர். ரசிக்கும் பொருளை சொந்தம் கொண்டாட நினைக்கும் போதே அவர்கள் ஆசைக்கு உட்படுகிறார்கள்.


திருமணம் என்பதை நம் முன்னோர்களும் சமூகமும், க்ருஹஸ்தாஸ்ரமம் என்ற பெயரில் வழங்கி வந்திருக்கிறனர். இறைவனை அடைய அதை ஒரு பாலமாக, நடுத்தன்மை நிலையாக கருத வேண்டும். அதிலேயே நின்று விட்டாலோ, இறைவனை அடைதல் முடியாது போய்விடும். தனக்கு அப்படிப்பட்ட ஒரு பாலம் தேவையில்லை என்றும் அதை முன் ஜன்மங்களில் தான் கடந்து விட்டதாகவும் அஷோக் மறுத்துப்பேசுகிறான். அப்படியே எனக்கு ஒரு துணை தேவை என்று இறை நினைத்தால், அதை அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம், யோகமோ போகமோ, ராமக்ருஷ்ணரைப் போல, இச்சைகளைக் கடந்த கோரகும்பரை போல தான் வாழ நினைப்பதாகக் கூறி என உமாவின் அத்தனைப் பேச்சுக்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறான்.

ரிஷிகளுக்கு பத்தினிகள் இருந்ததாக புராணங்களும் சங்ககாலத்து ஏடுகளும் கூறுகின்றன. ரிஷிகள் என்பவர்களை சந்நியாசிகளிலினின்று வேறுபடுத்திப்பார்க்கவேண்டும். ரிஷிகள் சந்நியாசிகள் அல்ல. அவர்கள் வேதங்களை கேட்டு, உணர்ந்து பிறர்க்கு சொன்னார்கள், அதன் படி வாழ்ந்தார்கள். விஸ்வாமித்ரர், வசிஷ்டர் முதலியவர்கள் பிரம்ம ரிஷி. அதே போல் ராஜ ரிஷிகள் சிலர் உண்டு. ஜனகர் ராஜ ரிஷியாக வழங்கப்பட்டது வேறு சிலருக்கு பொறாமையை உண்டு பண்ணியது. ஒருமுறை அவரின் குரு, ஜனகரின் பெருமையை பிறருக்கு புரிய வைக்க, சிறு நாடகமாடினார். "மிதிலை நகரம் பற்றி எரிகிறது" எனக் கூவினார். கூவிய மாத்திரத்தில், அனைத்து சிஷ்யர்களும், தங்களுக்கென இருந்த சிறு உடமைகளைக் காக்க ஓடோடி விட்டனர். ஜனகரோ அமைதியாக அதே இடத்தில் அமர்ந்தவாறு, தன் கடமையை தொடர்ந்திருந்தார். "என்னுடையதென்று எது இருக்கிறது? எனக்கென்று உடைமை ஏதும் இல்லை" என்று அமைதியாய் பதிலளித்தார். அரண்மணையே பற்றி எரிகிறது என்ற பொழுதிலும், தன் உடைமை எனக் கருதாது பற்றற்று செயல்படும் அவர் நிலையை பிறர் புரிந்து கொள்ள இச்சம்பவம் ஏதுவாக இருந்தது.

(வளரும்)

Shakthiprabha.
20th May 2009, 03:59 PM
பி.கு: சாதாரணமானவன் அல்ல என்று தெரிந்த ஒரு ஆண்மகனிடம், உமா உரையாடும் போக்கு shows lack of maturity in her character's part. When shez the person who thoroughly understand, that, ashok is no ordinary person who can be carried away with normal talks like park or beach or cinema or her rolling big beautiful eyes or grin. She should have intelligently resorted to other means.

First what she should seek is his "ATTENTION" and should create a sense of "indispensable" feel of her absense in him. For that, she should go in his own way or path, talk things which he likes.

Such things may generally work for normal person, when the character in question is an extra-ordinary one, it gets even more difficult. To talk MUNDANE things and expect him to take a note of her is utterly stupid.

I personally feel this 'uma-ashok' syndrome in the story is quite unwanted .

Shakthiprabha.
20th May 2009, 06:09 PM
May 18th
________

மருத்துவர்கள் மார்கபந்துவும் ஹம்ஸாவும் தங்கள் மரியாதையைத் தெரிவித்து, அஷோக்கை தங்கள் குருவாக இருக்க வேண்டுகின்றனர். அவனோ, தனி மனிதனுள் இருக்கும் இறைவனை கண்டுணர்ந்து அவனை தியானித்தலே சிறந்தது எனக் கூறுகிறான். எதிர்காலமென்றும் கடந்த காலமென்றும் ஏதும் இல்லை. நிகழ்கால மணித்துளிகளே சத்தியமானது. யுகங்களாகவும், ஆண்டுகளாகவும், பிரித்து நொடிகள் என கூறுகட்டி இருக்கும் நேரம் பிரிக்க முடியாத ஒன்று. அதன் இருப்பு ஒன்றே உண்மை. இருப்பு நிலையில் உள்ள அந்தந்த வினாடிகளே நிச்சயமானவை. மற்றெல்லாம் இல்லாத ஒன்று. காலம் எனும் சொல் காலவரையற்றது. கணிக்க முடியாதது. இந்நிலையில் இருந்து இறைவனை உணர்ந்த யோகிகள் பலர். அப்படிப்பட்ட யோகிகளும் ஞானிகளும் மேதைகளை விட பன்மடங்கு உயர்ந்தவர்கள். அவர்களால் இரமணரைப் போல் உயர்நிலை இருப்பில் இருந்து கொண்டு தங்களை இயக்க முடியும். ரமணர் அறுவை சிகிச்சையின் போதும் கூட உயிர்நிலையில் தன் பிரக்ஞையை இருத்திக்கொண்டு உடல் பிரக்ஞையை கடந்த நிலையில் இருந்தது பலரும் அறிந்ததே.

மனோவியாதி முதல் பல கொடிய நோய்களும் பணம் படைத்தவனையே தாக்குகின்றது. ஏனெனில் பணம் படைத்தவன் பணத்திற்காக பறக்கிறான். அது தேவைக்கு அதிகமாக இருந்து விட்டாலோ இன்ன பிற கவலைகள். அதை சேர்த்து வைப்பதும், பாதுகாப்பதும் இதயத்தின் பலகீனத்தை அதிகரிக்கிறது. பணம் சேர்ப்பது குற்றமா என்றால். இல்லை. பின் எதனால் வியாதி வருகின்றது?

அளவுக்கு அதிகமாக எதின் மேலும் பிரியம் வைப்பதே வியாதிக்கு வித்து. பிரியம் என்பது பற்றைக் குறிக்கிறது. பற்றின்றி பணம் சேர்ப்பதோ, பிற கடமைகளைச் செய்யும் மனிதனை வியாதி அண்டுவதில்லை. அவனிடம் பற்று இல்லாத போது மனம் ஒரு நிலைபட்டு இறைவனின் தியானமும் சித்திக்கிறது.

பற்று ஆசைக்கு வித்திடுகிறது. ஆசை நிறைவேறாத போது கோபமும் வருத்தமும் பெருகுகிறது. வெறி அதிகரிக்கிறது. நல்ல நினைவுகள் அழிந்து புத்தி நாசம் ஆகிறது என்று கீதை உரைக்கிறது.



Chapter 2 - Verses 62 & 63



dhyayatho vishayaan pumsa: sangks theshu upajayathe |
sangaath sanjayathe kaamah kamaath krodha abhijayathe ||

krodhaath bhavathi sammoha: sammohaath smruthi vibramah: |
smruthi bramshaadh bhudhinaso budhinashath praNashyathi ||




ஒருவன் உலகியல் சார்ந்த விஷயங்களில் ஈடுபடும் போது, சிந்திக்கும் போது, அவனுக்கு அதன்பாற் பற்று ஏற்படுகின்றது. பற்றிலிருந்து ஆசையும், ஆசையின் காரணமாய் கோபமும் உண்டாகிறது.

கோபம் கொண்டாலோ மதிமயக்கம் தோன்றி நினைவாற்றல் தடுமாறுகிறது. நினைவாற்றல் குன்றிய நிலையில் பகுத்தறியும் தன்மை குறைவதால் மீண்டும் அவனுக்கு புலன்களின் பாலும் உலகியல் நாட்டதிலும் அறிவு தடுமாறி அழிவு நிலை ஏற்படுகின்றது.



"என்னுடைய" என்ற பற்று அகன்று விட்டால் துன்பம் அத்தனையும் அகன்று விடும். ஞானியும் பொருளின் மேல்ஆனந்தம் கொள்கிறான். பொருட்களை வியக்கிறான், உபயோகிக்கிறான், ஈட்டுகிறான், அடைகிறான். ஆனால் அவனிடம் அந்த பொருளின் மேல் ஆசை இருப்பதில்லை. அது இருந்த போதும் ஆனந்தம் கொள்கிறான். இல்லாது பொயினும் ஆனந்தம் மட்டுபடுவதில்லை. "அன்றலர்ந்த தாமரை போல்" ராமன் காட்டுக்குச் சென்றதைப் போல. நமக்கு தெரியாதவனின் இறப்பு நம்மை எத்தனை அளவு பாதிக்கிறதோ, அதே அளவு தெரிந்தவனின் இறப்பும் பாதித்தால், அதே அளவே நமக்கு வேண்டியவனின் இறப்பும் பாதித்தால், பிறவிப் பெருங்கடல் நீந்தி விட்ட ஞானியின் பட்டியலில் நம்மையும் சேர்த்துக்கொள்ளலாம்.

பத்ம வியூகத்தைப் பற்றியும் அது தொடர்பான மஹாபாரதக் கதையும் சோவும் தயாரிப்பாளரும் பகிர்ந்து கொண்டனர். நம் வாழ்வில் வரும் பந்தங்களும் பற்றும் கூட பத்ம வியூகம் தான். நம்மால் சுலபமாய் உடைத்து நுழைந்துவிட முடிகிறது. இப்படிப்பட்ட பற்றில் பத்ம வியூகத்தில் மாட்டிய அற்ப மானிடராய் வெளி வரவும் வழியின்று நாம் வாழ்ந்து மடிந்தும் போகிறோம்.

(வளரும்)

Shakthiprabha.
20th May 2009, 06:27 PM
May 19th
_______

எழுத முக்கியத்துவம் வாய்ந்த அளவு இன்றைய பகுதியில் ஒன்றும் இல்லை.

ஜெயந்தியின் அம்மா சுப்பு, கிரியின் தாத்தா வீட்டிற்கு மிகவும் கடமைப்பட்டவர்களாய் வளர்ந்திருந்தது தெரிய வந்ததும், நெகிழ்ந்து போகும் சுப்பு, ஜெயந்தியை கிரிக்கே திருமணம் செய்துவிக்க மனமார ஒப்புக்கொள்கிறாள். வசுமதி, தனக்கு உமாவின் வருகையும், அவள் அஷோக்கிடம் காட்டும் ஈடுபாடும் தனக்குப் பிடிக்கவில்லை என்பதை உமாவிடமே வெளிப்படையாய் தெரிவிக்கிறாள். இதையறிந்து உமா மௌனமாக வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறாள்.

'ஆயிரம்-பொய் சொல்லி ஒரு திருமணம் செய்யலாம்' என்பது உலகாய பழமொழி. ('ஆயிரம் முறை போய் சொல்லி' என்ற மாற்றுக் கருத்தும் உபதேசமும் நிறைய கேட்டாகி விட்டது ) சத்தியமே சிறந்தது. சத்தியத்தை பேசுவதே உத்தமம். சத்தியத்தையும் இதமாக, மனம் புண்படாமல் பேச வேண்டும். மனம் புண்படக்கூடாது என பொய் பேசுவது சரியில்லை என ஹிதோபதேசத்திலும், ஹிந்து தர்மத்திலும் குறிப்பிட்டிருப்பதை சோ நினைவு கூர்ந்தார்.

*மனம் புண்படக்கூடாது என பொய் பேசுவது சரியில்லை* என்றால்....

'பொய்மையும் வாய்மை இடத்தே
புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்' - என்ற குறள் தர்மத்திற்கு புறம்பானதா?

(வளரும்)

viraajan
20th May 2009, 07:23 PM
:clap: SP akka...

:bow: :bow:

aanaa
21st May 2009, 02:32 AM
Hi aana,

Thanks for sharing the videos here. :ty:

I'm not sure if i would be able to write regularly. I'm a kinda busy with some personal works and studies too.

Whenever I get time, i would sure visit hub and this thread.

Thanks, :D

good luck in studies

keep in touch
keep writing

thanks

aanaa
21st May 2009, 02:33 AM
May 15th முதல் தொடரை நானே மீண்டும் தொடர்கிறேன்.

( விராஜனுக்கு நேரம் கிடைத்தாலோ அல்லது மறுபடி எழுதும் ஆர்வம் எழுந்தாலோ, தயங்காமல் என்னிடம் தெரிவித்தால், அவரையே மீண்டும் தொடரச் செய்து விலகிக் கொள்வேன். )

இதுநாள் வரை தொடரை சிறப்புற எழுதி வந்த விராஜனுக்கு மீண்டும் என் நன்றி.


கை கொடுத்து உதவியமைக்கு நன்றி

aanaa
21st May 2009, 02:35 AM
May 18th
________
எதிர்காலமென்றும் கடந்த காலமென்றும் ஏதும் இல்லை. நிகழ்கால மணித்துளிகளே சத்தியமானது. யுகங்களாகவும், ஆண்டுகளாகவும், பிரித்து நொடிகள் என கூறுகட்டி இருக்கும் நேரம் பிரிக்க முடியாத ஒன்று. அதன் இருப்பு ஒன்றே உண்மை. இருப்பு நிலையில் உள்ள அந்தந்த வினாடிகளே நிச்சயமானவை. மற்றெல்லாம் இல்லாத ஒன்று.

(வளரும்)

:clap:
:ty:

aanaa
21st May 2009, 02:36 AM
May 15th முதல் தொடரை நானே மீண்டும் தொடர்கிறேன்.

May 19th
_______


*மனம் புண்படக்கூடாது என பொய் பேசுவது சரியில்லை* என்றால்....

'பொய்மையும் வாய்மை இடத்தே
புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்' - என்ற குறள் தர்மத்திற்கு புறம்பானதா?

(வளரும்).

அரிச்சந்திரன் வாழ்க்கை .....

aanaa
21st May 2009, 02:38 AM
May 15th முதல் தொடரை நானே மீண்டும் தொடர்கிறேன்.

( விராஜனுக்கு நேரம் கிடைத்தாலோ அல்லது மறுபடி எழுதும் ஆர்வம் எழுந்தாலோ, தயங்காமல் என்னிடம் தெரிவித்தால், அவரையே மீண்டும் தொடரச் செய்து விலகிக் கொள்வேன். )

இதுநாள் வரை தொடரை சிறப்புற எழுதி வந்த விராஜனுக்கு மீண்டும் என் நன்றி.
முற்றும் துறநத புத்தர்கூட முனிவராக ஆசைப் பட்டார்

aanaa
21st May 2009, 02:49 AM
May 18, 2009

[html:dc9250ae57] <div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13569992&vid=5119103&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8994/85907170.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13569992&vid=5119103&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8994/85907170.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:dc9250ae57]

viraajan
21st May 2009, 10:09 AM
good luck in studies

keep in touch
keep writing

thanks

Thanks aana. :bow:

Shakthiprabha.
21st May 2009, 12:16 PM
May 15th முதல் தொடரை நானே மீண்டும் தொடர்கிறேன்.

( விராஜனுக்கு நேரம் கிடைத்தாலோ அல்லது மறுபடி எழுதும் ஆர்வம் எழுந்தாலோ, தயங்காமல் என்னிடம் தெரிவித்தால், அவரையே மீண்டும் தொடரச் செய்து விலகிக் கொள்வேன். )

இதுநாள் வரை தொடரை சிறப்புற எழுதி வந்த விராஜனுக்கு மீண்டும் என் நன்றி.

அரிச்சந்திரன் வாழ்க்கை .....



May 15th முதல் தொடரை நானே மீண்டும் தொடர்கிறேன்.

( விராஜனுக்கு நேரம் கிடைத்தாலோ அல்லது மறுபடி எழுதும் ஆர்வம் எழுந்தாலோ, தயங்காமல் என்னிடம் தெரிவித்தால், அவரையே மீண்டும் தொடரச் செய்து விலகிக் கொள்வேன். )

இதுநாள் வரை தொடரை சிறப்புற எழுதி வந்த விராஜனுக்கு மீண்டும் என் நன்றி.
முற்றும் துறநத புத்தர்கூட முனிவராக ஆசைப் பட்டார்

புரியவில்லை ஆனா. I think uve quoted something else whilst u need to have quoted some other thing :)

Shakthiprabha.
21st May 2009, 02:23 PM
May 20th
________

சுப்பு மனமார கிரி-ஜெயந்தி திருமணத்தை செய்யவிருப்பதாய் செல்லமாளிடம் பகிர்ந்து கொள்கிறாள். மனம் விசித்திரமானது. ஜாதியும் மதமும் இனமும் மொழியும் என பல்வேறு பேதங்களால் குறுகிவிட்ட நமக்கு, மனம் இசைந்து விட்டால், மனம் விஸ்தாரம் அடைந்து, நன்றியால், இறையுணர்வால், அன்பால், காதலால், மனித நேயத்தால் கட்டுண்டால், அங்கு வித்தியாசங்களும் பேதங்களும் பறந்தோடிவிடுகின்றன.

வசுமதியின் வார்த்தைகளால் உமா மிகுந்த மனவருத்ததிற்கும் கோபத்திற்கும் ஆளாகி துக்கம் தாளாமல் அழுகிறாள். அஷோக் உமா வீட்டிற்கு அடிக்கடி வராததை உணர்ந்து அதன் காரணமும் கண்டறிகிறான். அன்பை பொழிய பலவகையில் ஜீவன்கள் பிரயத்தனப்படுகின்றது. அவரவர்க்கு தெரிந்த விதத்தில் அவரவர்கள் பிறரிடம் அன்பு செலுத்துகின்றனர். அன்பு என்பதை செலுத்த விடாமல் செய்ய எந்த உயிர்க்கும் உரிமை இல்லை
என்கிறான். அவன் தாய் வீணே பயம் கொள்கிறாள் என்றும் எல்லாமே பரப்பிரம்மத்தினின்று தோன்றியவையே என்கிறான். அதை புரிந்து கொள்ள அங்கு யாருக்கும் சாத்தியப்படவில்லை.

பரப்பிரம்மம் என்ற அந்த வஸ்து ஒன்றே முழுமையானது என்று பல வேத வியாக்கியானங்களில் கேட்டிருக்கிறோம். அந்த வஸ்துவை எவன் ஒருவன் அறிந்தவனாக நினைக்கிறானோ அவன் அறிந்தானல்லன். எவன் ஒருவன் அறியாதவன் என்று நினைக்கிறானோ அவன் அறியாதவனும் அல்லன். எவன் ஒருவன் அதை அறிந்தும் அறியாததுமாக உணர்கிறானோ அவனே அதை சரியாய் புரிந்து கொண்டவன் ஆகிறான். இந்த பரப்பிரம்மத்திலிருந்தே இறைவனும், மானிடரும், ஜடமும், பொருட்களும், மற்ற எல்லாமும் தோன்றியது.

அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் என்கிறான் அஷோக். பரப்பிரம்மத்திலிருந்தே நாம் அனைவரும் தோன்றியுள்ளோம். அதுவே முழுமை. நாம் ஒன்றெனக் கலக்கும் போதும் பரப்பிரம்மத்தில் கலக்கின்றோம். அதனின்று எடுத்தாலும் அது குறைவதில்லை. அதனிலேயே போய் முடிந்தாலும் அது அதிகமாவது இல்லை. ஆதி-அந்தம், அளவு, காலம் என்ற வரையரைக்கு அப்பாற்பட்டது அது.

ஈசாவாஸ்ய உபநிஷதத்தில் பிரம்மத்தின் ஸ்வரூபத்தை பற்றிய விளக்கங்கள் சில இடங்களில் வருகிறது. இதைத் தவிர இன்ன பல நூல்களும் இதனை சற்றே விளக்க முற்பட்டிருக்கின்றன. சற்றே என்று சொல்வதன் காரணம் பிரம்மம் என்பது விளக்க முடியாத ஒன்று. பரப்பிரம்மத்தை எல்லைகளுக்கு உட்பட்டு மொழிகளால் கட்டுண்டு விளக்க ஏதுவாகாதது. உணர்வினாலும் கூட கட்டுக்குள் கொணர்ந்திட முடியாதது.

பிரம்மமே வித்யை அதுவே அவித்யை, பிரம்மம்மே சத்தியம் அத்வே மாயை. பிரம்மமே உலகம் அதுவே ஆன்மா. எல்லாமாகவும் உள்ளது, எல்லாவற்றிலும் உள்ளது. எதனின் உள்ளும் உள்ளது. எதனின் புறமும் கூட அதுவே ஆகிறது.

Poornamadah Poornamidam
Poornaath Poornam Udachyathe
Poornasya Poornamaadaaya
Poornameva Vasishyathe.

ஓம் பூரணமத: பூர்ணமிதம்
பூர்ணாத் பூர்ணம் உதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய
பூர்ணமேவா வசிஷ்யதே

அங்கே இருப்பது பூர்ணம். இங்கேயும் பூர்ணமே. பூர்ணத்திலிருந்து பூரணம் உண்டாகியது. பூர்ணத்திலிருந்து பூர்ணத்தை பிரித்தால், எடுத்தால், மிஞ்சி இருப்பதும் பூர்ணம்.

(வளரும்)

aanaa
21st May 2009, 08:56 PM
May 19th
_______


*மனம் புண்படக்கூடாது என பொய் பேசுவது சரியில்லை* என்றால்....

'பொய்மையும் வாய்மை இடத்தே
புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்' - என்ற குறள் தர்மத்திற்கு புறம்பானதா?

(வளரும்)
should be this

aanaa
21st May 2009, 08:59 PM
May 20th
________
.

பரப்பிரம்மம் என்ற அந்த வஸ்து ஒன்றே முழுமையானது என்று பல வேத வியாக்கியானங்களில் கேட்டிருக்கிறோம். அந்த வஸ்துவை எவன் ஒருவன் அறிந்தவனாக நினைக்கிறானோ அவன் அறிந்தானல்லன். எவன் ஒருவன் அறியாதவன் என்று நினைக்கிறானோ அவன் அறியாதவனும் அல்லன். எவன் ஒருவன் அதை அறிந்தும் அறியாததுமாக உணர்கிறானோ அவனே அதை சரியாய் புரிந்து கொண்டவன் ஆகிறான். இந்த பரப்பிரம்மத்திலிருந்தே இறைவனும், மானிடரும், ஜடமும், பொருட்களும், மற்ற எல்லாமும் தோன்றியது.


(வளரும்)

:ty:


விசு'வின் வசனம் போல் உள்ளது.
:-)

Shakthiprabha
21st May 2009, 10:08 PM
விசு'வின் வசனம் போல் உள்ளது.
:-)

:D yeah, thats the plight of one who TRIES to understand :)

aanaa
22nd May 2009, 04:57 AM
Tuesday - May 19, 2009


Thanks to ISAITAMILNET - Prahu

[html:6083ccda98] <div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13548479&vid=5108969&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8972/85831265.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13548479&vid=5108969&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8972/85831265.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:6083ccda98]

aanaa
22nd May 2009, 04:59 AM
Wednesday -May 20, 2009


Thanks to ISAITAMILNET - Prabhu


[html:682ed216f9]<div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13569992&vid=5119103&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8994/85907170.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13569992&vid=5119103&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8994/85907170.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:682ed216f9]

anbu_kathir
22nd May 2009, 12:36 PM
ஜனகர் ராஜ ரிஷியாக வழங்கப்பட்டது வேறு சிலருக்கு பொறாமையை உண்டு பண்ணியது. ஒருமுறை அவரின் குரு, ஜனகரின் பெருமையை பிறருக்கு புரிய வைக்க, சிறு நாடகமாடினார். "மிதிலை நகரம் பற்றி எரிகிறது" எனக் கூவினார். கூவிய மாத்திரத்தில், அனைத்து சிஷ்யர்களும், தங்களுக்கென இருந்த சிறு உடமைகளைக் காக்க ஓடோடி விட்டனர். ஜனகரோ அமைதியாக அதே இடத்தில் அமர்ந்தவாறு, தன் கடமையை தொடர்ந்திருந்தார். "என்னுடையதென்று எது இருக்கிறது? எனக்கென்று உடைமை ஏதும் இல்லை" என்று அமைதியாய் பதிலளித்தார். அரண்மணையே பற்றி எரிகிறது என்ற பொழுதிலும், தன் உடைமை எனக் கருதாது பற்றற்று செயல்படும் அவர் நிலையை பிறர் புரிந்து கொள்ள இச்சம்பவம் ஏதுவாக இருந்தது.


Janaka :bow:... his conversations with Sage Yagnavalkya became the Brhad-aaranyaka upanishad. His 'coming to light' guided by Sage Ashtavakra became the Ashtavakra geetha.

To people of the modern (and ancient) times who have questioned the veracity of the claims made by the sages (detachment etc etc).. and the plausibility of living such a life, Janaka is the number one mythological reference (OK maybe number two.. Krishna is number one :D .. if we subtract his 'super-human' deeds). Present day (or recent past) references are not well known I guess.. maybe Shri Atmananda would fall in this category...

Love and Light.

aanaa
24th May 2009, 07:28 AM
:ty:

aanaa
24th May 2009, 08:00 PM
deleted

Shakthiprabha
25th May 2009, 01:03 PM
May 21st
________

உமா அஷோக்கிடம் தன் பிரியத்தை வெளிப்படுத்துகிறாள். பொன் உருக்கப்படுவது போல், மனமும் பக்குவப்படுவதற்கு சோதனைக்கு உள்ளாக்கப்படும். ஆன்மாவைக் கட்டுக்குள் அடக்கி ஒவ்வொரு முறையும் நாம் மேலெழும் போது, புடம் போட்ட பொன் போன்று மாசுகள் களையப்பட்டு விடுகின்றோம். அன்பின் மற்றொரு வகையான வெளிப்பாடே காதல். உலகில் பொதுவாய் இருவகையான அன்பைக் காணலாம். நாம் கண்டுவரும் அனைத்து வகை அன்பும், எதிர்பார்த்து பிறர் நம்மிடம் செலுத்தும் அன்பாகும். வெறொரு வகை அன்பு உண்டு. அது உயர்ந்த வகை அன்பு. எதிர்பார்ப்பு ஏதுமின்றி சூரியன் தன் கிரணங்களை உயிர்கள் அனைத்திற்கும் ஊட்டுவது போல், அன்பை மழையாய் கருணையாய் காதலாய் செலுத்துவது. அன்னைத் தெரெஸாவின் அன்பு இப்பேற்பட்ட வகை. உலகில் இப்படி அன்பு செலுத்தியவர்களை விரல் விட்டு
எண்ணிவிடலாம்.

ப்ருஹதாரண்ய உபநிஷதத்தில் யக்ஞவல்கியர் மைத்ரேயியிடம் இவ்வாறு கூறுகிறார்: 'அன்பின் ஆழத்தில் நோக்கின், மனையாள் தன் மணாளனை அவனுக்காகவென்று அன்பு செலுத்துவதில்லை. அவள் தன் சுகத்திற்காகவும், சந்தோஷம், பாதுகாப்பு, முதலியவை அவனிடமிருந்து கிடைக்கப் பெறுவதினாலும் தான் அன்பு சுரக்கிறது. அதே போல் கணவனாகப்பட்ட மணாளனும் தன் மனையாளிடம் அவளால் தனக்கு கிடைக்கப்பெறும் இல்லற சுகத்திற்கும், அன்பின் வெளிப்பட்டிற்குமே அவன் அன்பு பதிலுக்கு வெளிப்படுகிறது. பெற்றோர் பிள்ளைகளிடம் செலுத்தும் அன்பும், வேறு எந்த வகையான அன்பும் இவ்வகையில் அடங்கி விடும்' என்கிறார். எதிர்பார்ப்பும் ஆசையும், இல்லாத அன்பு காண்பது வெகு அரிது.

அஷோக் சராசரியாய் நடமாடும் பொருட்டு உமாவை தூது விடுவது அவனுக்கு விஸ்வாமித்ரர்-மேனகையை நினைவு படுத்துகிறது. பலருக்கும் தெரிந்த கதை என்பதால் அதை தாண்டிச் சென்று விடுகிறேன். தெரியாத ஒரே தகவல். மேனகை நடனமாடி மயக்கவில்லையாம். அவள் நீராடிக்கொண்டிருந்ததை கண்ட விஸ்வாமித்ரருக்கு அவள் பால் காதல் மேலிட, அந்தக் காதல் ஷாகுந்தலை வரை கொண்டு போய் விட்டது. விஸ்வாமித்ரர் தவமியற்றுவதற்கும் அதை நொடியில் வீணக்குவதற்கும் பேர் போனவர். எப்பேற்பட்ட மஹான் அவர்! காயத்ரி மந்திரத்தை நமக்கு வழங்கியவர். உக்கிரமான தவங்கள் புரியவல்லவர். ராஜாவாக இருந்ததால் யுத்த சாஸ்திரம் கற்றவர். அவர் பெருமை சொல்லி மாளாது. எனினும் மஹா கோபம் கொண்டவர் அஹங்காரம் மேலிடும் போதெல்லாம் அவர் சாபமிட்டு விட்டு, தன் தபோவலிமையை குறைத்து கொண்டு விடுவதாக புராணம் கூறுகிறது. தன்னை நம்பி வந்த த்ரிசங்குவிற்கு சொர்க்கம் வழங்கி இவரல்லவோ தவமியற்றிய பலனை துறந்து மீண்டும் தவம் மேற்கொண்டார்! மறுபடி மேனகை. அழகில் மயங்கி மீண்டும் வேதாள மரம் ஏறி வருடங்கள் வியர்த்தமாகின. அடடா அந்தோ பரிதாபம் என்று
தோன்றுகிறதல்லவா!

இதை விட பரிதாப நிலையில் நாம் இன்றைக்கு இருக்கின்றோம். எப்பொழுதோ தெரியாமல் செய்யும் ஒரு சில நல்ல கர்மாக்களை, பலன்களையெல்லாம் க்ஷண நேர கோபத்திலும், ஆத்திரத்திலும், பொறாமையிலும், வீண் வாத விவாதங்களிலும் செலுத்திவிடுகின்றோம். முடிவுறாத பிறப்பு-இறப்பு தளைகளிலிருந்து விடுபட இன்னும் எத்தனை எத்தனை படிகள் ஏறவேண்டியுள்ளது என்ற யோசனையே ஆயாசமாக உள்ளது.

அஷோக்கிடம் உனக்கும் உமாவிற்கும் திருமணத்திற்கு நாள் பார்க்கலாமா என்று வசுமதி எரிச்சலாய் கேட்க, அவனோ "அப்படி ஒரு கர்மா பாக்கி இருந்தால் அதை யாரால் தடுக்க முடியும்" என்று கூறிவிடுகிறான் :shock: :|


நீலகண்டனிடம் சாம்பு விவாதிக்கும் விஷயங்கள் சுவாரஸ்யமாக இருந்தது. வார்த்தைகளுக்கு ஏன் எண்ணங்களுக்கே அலைகளும் வண்ணங்களும் அதிர்வுகளும் உண்டு. அப்போது மந்திரங்களுக்கும் அதிர்வுகள் ( say postive vibes) இருக்கும் சாத்தியம் அதிகம் இருக்கிறது. நீர் இத்தகைய அதிர்வுகளை மின் அலைகளை தேக்கிக்கொள்ளும் தன்மை வாய்ந்தது என்பது விஞ்ஞானமே ஒப்புக்கொண்ட ஒன்று. கங்கை போன்ற நீர்நிலைகள் அதிகமான புண்ய ஸ்தலங்களையும் அங்கு ஸ்தாபிக்கப்பட்ட கோவில்களையும் தொட்டு வருவதால் அங்கு ஒலிக்கும் மந்திரங்களை தேக்கி வைக்கும் தன்மை வாய்ந்தது. இதற்கு பதில் சொல்ல முடியாது நீலகண்டன் மௌனம் சாதிக்கிறார்.

அடுத்து அவர்கள் இறைவடிவங்களின் வாஹனங்களைப் பற்றி பேசினார்கள். இறைவடிவங்களே ஒருவகையான symbolism என்று தான் சொல்ல வேண்டும். அவர்களின் வாஹங்களும் அவ்வாறே. துர்கை, காளி போன்ற உக்கிர வடிவங்கள் personification of good over evil. உக்கிர வடிவம் கொண்டு தீய ஷக்திகளை அழிப்பதாக மரபு. அதே போல் க்ருஷ்ணனின் குழல் இறைவனின் அழைப்பு என்றும், அதற்கு மயங்கி அவன் வசம் செல்லும் ஜீவாத்மாக்களே பசுக்கள் என்றும் பேசப்படுவதுண்டு. பிள்ளையாரின் வடிவம் வினோதமாக இருந்தாலும் அதனுள் உறையும் தாத்பர்யம் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது. நல்ல விஷயங்களை கேட்க வேண்டி பெரிய காதும், அதைக் சிந்திக்க பெரிய தலையும் உடைத்தாம். நாம் வாழ்வில் சந்திக்கும் சுகமான அல்லது சுகமற்ற அனுபவங்களை ஜீரணிக்கும் பெரிய தொந்தி (man shouldn't be perturbed by those but digest these and still stay able and fit) தும்பிக்கை வினோதமான ஒரு இயந்திரமாக செயல்படுவதை குறிக்கிறது. தும்பிக்கையால் பெரிய மரங்களை தகர்த்த முடியும். சிறு ஊசியையும் எடுக்க முடியும். மனிதனும் அவ்வாறு ஆன்மீகத்திலும் இல்லறத்திலும், (pondering on subtle and gross realities and experiences) ஈடுப்படத் தகுந்தவன் என்பதை குறிக்கும். சரி இவ்வளவு பெரிய சரீரத்திற்கு எப்படி மூஞ்சூறு வாஹனமாகியது? இதுவும் கூட குறிப்பாலுணர்த்தும் தாத்பர்யமே. மூஞ்சுறு அலைபாயும் தன்மை வாய்ந்தது. நம் மனதைப் போல. எதைக் கண்டாலும் அதை அறிந்து, ஆவலுற்று, ஆசையுறும் மனது மூஞ்சுறுவைப் போன்றது. அதை புத்தியால் (பிள்ளையார்) அடக்கி ஆளவேண்டும் என வலியுறுத்துதே நோக்கம்.

அதே போல் மயில், கர்வம் அஹங்காரத்தைக் குறிக்கும். முருகன் அதை ஆள்வதும் குறிப்பாலுணர்த்தும் செயலே. இதையெல்லாம் பேசி முடித்து, (தேடுவோம்) என்று போட்ட பிறகு, "நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே, நாணங்கள் என் கண்ணிலே" என்ற பாடலின் பின்னணி இசை வாசிக்கப்பட்டதை தவிர்த்திருக்கலாம்.

(வளரும்)

Shakthiprabha
25th May 2009, 01:30 PM
May 22nd
________

இன்றைய தொடரில் எழுத முக்கியமான விஷயம் ஏதுமில்லை. நாதனின் மனவருத்தத்தை தாளாது வசுமதி, தானே உமாவை பெண் கேட்டு விட துணிகிறாள். பர்வதம் இந்த சம்பந்தத்தை தட்டி கழித்துவிடுவாள் என்ற நம்பிக்கையின் பேரில் ஒப்புக்கு பெண் கேட்கிறாள். நீலகண்டனுக்கும் பர்வதத்திற்கும் இந்த வரனின் துளியும் மகிழ்ச்சி இல்லை. உமா மட்டும் பிடிவாதமாய் அஷொக்கைத் தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாய் அறிவித்து விடுகிறாள்.

வசுமதிக்கு நாதன் மேல் இருக்கும் பிரியம் அழகாக எடுத்துக்காட்டியிருந்தனர். அவள் தன் தோழியின் துணையுடன் எப்படி தந்திரம் செய்து நிலைமையை சமாளிக்கிறாள் என்ற பேச்சின் நடுவே கைகேயியின் குணம் அலசப்பட்டது. நம் வாழ்வில் சந்திக்கும் நபர்கள் எல்லோருமே நல்ல/தீய
குணங்களின் சேர்க்கையே. சதவிகித மாற்றம் மட்டுமே ஒருவனை நல்லவன் என்ற அடையாள முத்திரையுடன் அறிமுகப்படுத்துகிறது. கைகேயி மிகவும் நல்லவள், அவள் கூனியின் போதனையால் தன் வசம் இழந்து செயல்பட்டாள் என்றே நாம் படித்திருக்கிறோம். இவர்கள் கூறிய தகவல்கள்
புதிதாய் இருந்தன.

கூனி கைகேயியிடம் பேசும் போது " உன் நிலைமையை யோசித்துப் பார், உன் பிரிய ராமன் நாட்டை ஆண்டால், சக்களத்தியான கோசலையின் கரம் உயர்ந்து விடும். நீ எப்படியெல்லாம் அவளை இழித்து பேசியிருக்கிறாய்! எப்படி எல்லாம் துன்புறுத்தி பழித்திருக்கிறாய், உன் நிலைமை இனி என்னவாகும் என்று யோசி" என்று கூறுகிறாளாம். ஆக கைகேயி, கர்வமும், பொறாமையும், இன்ன பிற குணங்களும் கொண்ட சாதாரண மங்கையாகவே சித்தரிக்கப்படுகிறாள். கைகேயி தசரதனின் ஆசை மனைவி. மற்ற ராணிகளை விட அழகு மிகுந்தவள் என்ற கர்வம் அவளுக்கு இருந்ததாகக் கூறுகின்றனர். (இதுநாள் வரை கைகேயியின் பேரில் பிறரைக் காட்டிலும் தனி விருப்பம் கொண்டிருந்தேன் :( . இந்த தகவல் சற்றே என்னை வருத்தமுறச் செய்தது. என் பிரிய கைகேயி என் மனதின் ஆசனத்திலிருந்து சற்றே வீழ்ந்து விட்டாள் :| )

இன்னொன்றும் நாம் யோசிக்க வேண்டும். மனதை அடக்கி ஆள முடியதவர்கள் நல்லவர்களாக சந்தர்ப்ப வசத்தால் முத்திரை குத்தப்படுகின்றனர். சந்தர்பங்கள் வேறு வகையாய் செயல் படும் போது, அவர்கள் தங்கள் இச்சைக்கும் ஆசைக்கும் செவி சாய்க்க, மனம் குடைசாய்ந்து விடுகிறது. கூனி எத்தனை முறை ஓதினாலும், மனதை அடக்கிய நல்ல மனிதனோ, அல்லது நல்லது இன்னவென்று வரையறுத்து அதன்படி செயல்படும் கொள்கை மிகுந்தவனையோ தகர்க்க முடியாது. Someone who can be toppled by just wrong advices aren't actually strong in their principles. அவர்கள் கடக்க வேண்டிய தூரத்தை இது காட்டுகிறது.


(வளரும்)

aanaa
25th May 2009, 05:45 PM
[tscii:f421104319]
May 21st
________
. நாம் வாழ்வில் சந்திக்கும் சுகமான அல்லது சுகமற்ற அனுபவங்களை ஜீரணிக்கும் பெரிய தொந்தி (man shouldn't be perturbed by those but digest these and still stay able and fit) தும்பிக்கை வினோதமான ஒரு இயந்திரமாக செயல்படுவதை குறிக்கிறது. தும்பிக்கையால் பெரிய மரங்களை தகர்த்த முடியும். சிறு ஊசியையும் எடுக்க முடியும். மனிதனும் அவ்வாறு ஆன்மீகத்திலும் இல்லறத்திலும், (pondering on subtle and gross realities and experiences)
(வளரும்)

:ty:

மூஷிக வாகனம்

கணபதியின் வாகனம், மூஷிகம் எனும் மூஞ்சூறு. கஜமுகாசுரனுடன் கணேசர் போரிட்டபோது, அசுரன் பெருச்சாளியாக மாறி எதிர்த்தான். கணபதி அவனுடைய பகை உணர்வை மாற்றி அவனை தன்
வாகனமாக ஆக்கிகொண்டார்.
பெருச்சாளி எதையும் குடைந்து வழி ஏற்படுத்திக் கொள்ளும். குண்டலினி யோகத்திலும், மூலாதாரத்தை அடைய வழி ஏற்படுத்தும் ஒரு ஆற்றலாகவே மூஷிகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலாதாரரான கணபதிக்கு மூஷிக வாகனம் அமைந்ததும் இதனால்தான் எனலாம்.

ரிஷப வாகனம்.

அமுதைப் பிறருக்குத் தந்துவிட்டு ஆலகால நஞ்சை உண்ட
சிவபெருமான், மாளிகைகளை விடுத்து, மயானத்தில் வாழ்பவன்.
இப்படித் தன்னலமற்ற தியாகராஜனாக விளங்குகிறான் ஈசன்.
காளை மாடுகள் வயல் வெளிகளில் ஓயாது உழைத்து உற்பத்தியான
தானியங்களின் பயனை நமக்கு அளித்துவிட்டு,
நாம் ஒதுக்கும் உமி, தவிடு, தோல்,
வைக்கோல் முதலிய பகுதிகளையே தன் உணவாகக் கொண்டு மகிழ்கிறது.
உழைப்பும் தியாக உள்ளமுமே இறைவனின் அத்யந்த விருப்பம். இதனை உணர்த்தவே சிவனும்
சக்தியும் காளை வாகனத்தை விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளனர்

மயில் வாகனம்.

முருகனை எதிர்த்துப் போரிட்ட சூரன் இறுதியில்
சேவலும் மயிலுமாகி முருகனின் கொடியிலும்,
வாகனமாகவும் நீங்காத இடம் பிடித்தான்.
சூரனோடு போரிடச் சென்றபோது முருகனின் வாகனமாக
இருந்த மயில் அண்ணன் கணபதியால் அருளப்பட்டது
என்றும் புராணங்கள் கூறுகின்றன.
மயில் தோகை விரித்தாடும் போது’ஓம்’கார வடிவில்
காட்சி தரும். தான் பிரணவத்தின் வடிவானவன் என்பதை
உணர்த்தவும் முருகன் மயிலைத் தன்
வாகனமாகக் கொண்டிருக்கிறான்.

ஆட்டுக்கிடா வாகனம்

நாரதர் நிகழ்த்திய ஒரு வேள்வியில் தவறான மந்திரங்கள்
உச்சாடனம் செய்ததால் யாக குண்டத்திலிருந்து மூர்க்கமான ஒரு ஆட்டுக்
கிடா வெளிவந்து உயிர்களுக்கு ஊறு செய்தது. முருகன் வீரபாகுவை அனுப்பி அந்த
ஆட்டுக்கிடாவை அடக்கி தன்னிடம் கொணரச் செய்தார். பின், அதன் மீது அமர்ந்து வலம்
வந்து தம் ஆற்றலைக் காட்டினார். ஆடு, அறியாமையின் சின்னமாகும்.
கடவுள் திருமுன்னர் அறியாமை அடங்குகிறது என்பதே இவ்வாகனத்தின் உட்கருத்து.
ஆட்டுக்கிடா வாகனம் முருகனுக்கே உரிய சிறப்பு வாகனம்.

நாக வாகனம் (சேஷ வாகனம்)

நாகம் (பாம்பு) விநாயகருக்கு உதர பந்தனம் என்னும் அரைஞாண் கயிறாகவும்,
சிவனுக்கு ஆபரணமாகவும், திருமாலுக்குப் பள்லிகொள்ளும்
சயனமாகவும், முருகனுடைய மயிலின் காலில் பந்தனமாகவும் விளங்குகிறது.
அம்பிகை உமையவளின் சிறுவிரல் மோதிரமாகத்திகழும் நாகமே,
சிறப்பு நாட்களில் வாகனமாகிறது.
மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தி,
சுருண்டு மண்டலமிட்டுப் படுத்திருக்கும் பாம்பு போலத் தோன்றும்.
குண்டலினி சக்தியாக இருந்து மனிதனின் உறங்கும் ஆற்றல்களை மேல்
நிலைக்கு உயர்த்திடும் அம்பிகைக்கு அந்தப் பாம்பே வாகனமாகவும் ஆகிறது.
அம்பிகைக்கும் சிவனுக்கும் வாகனமாகும் போது நாக வாகனம் என்றும் திருமாலுக்கு வாகனமாகும்
போது சேஷவாகனம் என்றும் பெயர் பெறும்.

ஹம்ஸ வாகனம்.

கலைமகளின் சிறப்பு வாகனமாகிய அன்னப் பறவையை ‘ஹம்ஸம்’ என்பர்.அன்னப் பறவை ,
நீரை நீக்கிப் பாலை மட்டும் பருகும் திறமை படைத்தது.
அதுபோல் சான்றோர்கள் பொய்யான உலகியல் விஷயங்களை விடுத்து மெய்ப் பொருளாகிய
கடவுளையே நாடித் தேடிப் பற்றிக் கொள்வார்கள். மேலும் சில மந்திரங்களை ‘ஹம்ஸ
மந்திரங்கள்’ என்றும் குறிப்பிடுவார்கள்.
அம்மந்திரங்களின் உட்பொருளாய் விளங்குபவள் அம்பிகை.
அவளை உணர்ந்த சான்றோர்களை’பரம ஹம்ஸர்கள்’ என்று அழைப்பார்கள்.
அத்தகைய சான்றோர்களின் உள்ளத்தில் இருப்பவள் என்பதை உணர்த்தவே
அம்பிகை ஹம்ச வாகனத்தில் பவனி வருகிறாள்..

கருட வாகனம்

விஷ்னு ஆலய விழாக்களில் கருட சேவை மிகவும் முக்கியமானது.
வைணவ நெறியில் கருடனை கருடாழ்வார் என்றும், பெரிய திருவடி என்றும்
சிறப்பித்துக் கூறுவர்.
பறவைகளில் வலிமையும்,கூர்மையும் உடையது கருடன்.
பட்சி ராஜன் என்று அழைக்கப்படுகிறான்.
நீண்ட தொலைவு பறந்து செல்லக்கூடியவன்.
பாம்பின் விஷத்தை இறக்கும் ஆற்றல் கருடனின் இறகு வீசும்
காற்றுக்கு உண்டாம். இராம இலக்குமணர்கள் மீது எய்யப்பட்ட நாக பாசக்
கட்டுகளை, கருடனின் காற்று அறுத்தது. பாம்பு தீண்டி இறந்த தில்லைவாழ் அந்தணச் சிறுவன்,
கம்பர் தமது ராமாயணத்திலுள்ள நாக பாசப்படலத்தைப் படித்தவுடன் உயிர்
பெற்று எழுந்தான் என்றும் கூறுவர். அத்தகைய ஆற்றல் மிக்க கருடனை,
காக்கும் கடவுளாகிய திருமால் தமது ஊர்தியாகக் கொண்டுள்ளார்.

குதிரை வாகனம்

அம்பிகை தனது பாச ஆயுதத்திலிருந்து தோற்றுவித்த சக்தி,’பரிஊர்வாள்’
என்று பொருள்படும். ‘அச்வாரூடா தேவி’ எவராலும் வெல்லப்படாத,
வெல்ல முடியாத ‘அபராஜிதம்’ என்ற குதிரை, அச்வாரூடாவின் வாகனமாயிற்று.
இவள், அம்பிகையின் குதிரைப்படையின் தலைவியாவள். எண்ணற்ற ஆசைகளே குதிரைப்படையாகும்.
அவற்றை நன்னெறிப் படுத்தும் மனமே அச்வாரூடா என்ற குதிரைப் படைத் தலைவி. மாணிக்கவாசகருக்காக
சிவபெருமான் குதிரை வணிகராகக் கோலங்கொண்டார். அப்போது ஈசன் குதிரை மீது ஆரோகணித்தார்.
அந்தக் கோலத்தில் சிவபெருமானை, ’அச்வாரூடமூர்த்தி’ என்பர். பாமரர் ‘குதிரைச்சாமி’ என்பர்.
கள்ளழகர் சித்திரா பௌர்ணமி நன்னாளில் கம்பீரமாய் பூப்பல்லக்கினின்று மிறங்கி தங்கக்
குதிரையில் ஆரோகணித்து வைகை நதியின் வட கரைவழியே இறங்கி அன்பர்களின் வொவ்வொரு
மண்டகப்படியிலும் அருள் பாலித்து, ராமராயர் மண்டகப்படியில் வட்ட வடிவாய் நீர் பாய்ச்சும்
கள்ளர்களின் நீர் பிரயோகம் ஏற்று வைகை வழியே சென்று, வண்டியூரில் சில மண்டகப் படிகளில் அருள் பாலித்து,
துலுக்கச்சி நாச்சியார் மண்டகப்படிவரைசென்று அழகர் கோயிலுக்கு மீளவும் செல்ல வரும் காட்சிகண்கொளாத ஒன்றாகும்.
அந்தக் குதிரை மீதேறி வரும் மாயோன் ஆறு மாத காலம் தேவியை நினைந்து
தவமியற்றி வெளியே மண்டபத்தில் தங்கி அருள்பாலிக்கும் தன்மை வேறெங்கும் காணக்
கிடைக்காததாகும்.

காமதேனு வாகனம்.

காமதேனுவின் உடலில் அனைத்து தேவ சக்திகளும் இடங்கொண்டுள்ளன என்பது ஐதீகம்.
சத்வகுணம் என்ற மென்மையான நல்லியல்புகளைக் கொண்டது பசு. காமதேனு விரும்பிய அனைத்தையும்
அளிக்கும் ஆற்றல் உடையது. அனைத்து தேவர்களையும் தனது மேலாண்மையால் கட்டுப் படுத்துபவள் அம்பிகை.
அடியார்களின் விருப்பங்களை அவள் நிறைவேற்றி வைக்கிறாள்.
இக்கருத்தை உணர்த்தவே அம்பிகை, காமதேனுவையும் ஊர்தியாகக் கொண்டிருக்கிறாள்.

கஜவாகனம்

அம்பிகை பண்டன் என்ற அசுரனுடன் போர்தொடுக்கப் புறப்பட்டாள். அப்போது தன்னுடைய
அங்குசத்திலிருந்து ஒரு சக்தியைத் தோற்றுவித்தாள். குரோதம் மற்றும் ஞானத்தின்
வடிவான அங்குசத்திலிருந்து தோன்றிய அச்சக்தியை,’ஸம்பத்கரி’ என்று அழைத்தனர்.
இவளே அம்பிகையின் யானைப் படையின் தலைவி.
’ரணக்கோலம்’என்ற யானையே இவளுக்கு வாகனமாயிற்று.
மயில் போன்று, யானையும் தன் முகப்புத் தோற்றத்தால் ஓம் என்ற பிரணவத்தை நினவுபடுத்துகிறது.
சிவன், திருமால், முருகன், அம்பிகை, அய்யனார் போன்ற பல கடவுளருக்கு யானை வாகனம் உண்டு.

காக்கை வாகனம்.

காக்கை சனிபகவான்னின் சிறப்பு வாகனம். திரு நள்ளாறில் சனிப்பெயர்ச்சி நாட்களில் பொன் காக்கை
வாகனத்தில் சனிபகவான் உலாவரும் உற்சவம் நடைபெறுகிறது.
காக்கையிடம் ஒற்றுமைக் குணம் உண்டு. அது பேதம் பார்ப்பதில்லை.
அதே போல், அதன் செயல்களுக்காக அதனை விரும்புவோரும் உண்டு. வெறுப்பவறும் உண்டு.
போற்றலும் தூற்றலும் இரண்டுமே காகத்திற்கு உண்டு.
சனி பகவானுக்கும் அப்படித்தான். அவரைப் போல் கொடுப்பவரும் இல்லை;
கெடுப்பவரும் இல்லை என்று போற்றல் தூற்றல் இரண்டுமே உண்டு. சனி பகவான் அவர்
பார்வையால் மக்களுக்கு கஷ்டம் கொடுத்து பக்குவம் அடையச் செய்கிறார். பிறகு செல்வங்களை
வாரி வழங்குகிறார். பிறருக்கு உதவுபவனை பெருந்துன்பம் அணுகாது என்பதை உணர்தும் விதமாகவே சனி
பகவான் காகத்தைத் தன் வாகனமாகக் கொண்டுள்ளார்.

சிம்ம வாகனம்.

சிங்கம் அம்பிகைக்கு உரிய சிறப்பு வாகனமாகும். ‘சிங்கத்திலேறிச் சிரித்தெவையும் காத்திடுவாள்’
என்கிறார் பாரதியார். தனது கர்ஜனையினாலேயே அனைத்தையும் அடக்கியாளும் திறமையும், கம்பீரமும்,
யாரும் எளிதில் அண்ட முடியாத வீரமும் உடையது சிம்மம். அதே நேரத்தில் தருமம் தவறாதது.
பசியில்லாத வேளையில் வீணாக வேட்டையாடி பிற உயிர்களை மாய்க்காது.
அம்பிகை, தனது மேலாண்மை மற்றும் தருமம் தவறாத இயல்பு ஆகியவற்றை உணர்த்திடவே சிங்க வாகனத்தில் பவனி வருகிறாள்.
முருகன் சூரனைத் தமக்கு வாகனமாக்கிக் கொண்டார் அல்லவா? அதே போல சூரனின் தம்பி சிங்கமுகனை சிம்ம
வாகனமாக்கித் தன் தாயிடம் அளித்துவிட்டார் முருகன். அம்பிகை அமரும் ஆசனமும் ஸ்ரீமத் சிம்மாசனம்
என்றே போற்றப்படுகிறது.துர்க்கை முதலான சக்திகளின் சிம்ம வாகனம் சிறப்பு வாகனமாக விளங்குகிறது.

புலி வாகனம்.

ஐம்புலன்களும் சீறிப்பாயும் அடங்காத புலியைப் போன்றவை.
பிரம்மச்சரியால் அப்புலிக¨ளௌம் வெற்றி காணமுடியும்.
மணிகண்டன், தன் தாயின் தலைவலி தீர புலிப்பால் வேண்டும்
என்று சொல்லப்பட்டதற்காக வம்புலியை அடக்கி அதன் மீது ஆரோகணித்துவந்தார்.
பிரம்மச்சாரியான ஐயப்பன், புலி வாகனத்தில் ஏறிவந்து அடங்காப் புலன்களை அடக்கும் நெறியினை உணர்த்தினார்.


[/tscii:f421104319]

aanaa
25th May 2009, 05:47 PM
May 22nd
________

இன்றைய தொடரில் எழுத முக்கியமான விஷயம் ஏதுமில்லை. .


(வளரும்)

:ty: SP

aanaa
25th May 2009, 05:50 PM
May 21-2009




thanks to IsaiTamil.net - Prabhu



[html:a395ead261] <div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13588386&vid=5127720&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9012/85974775.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13588386&vid=5127720&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9012/85974775.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:a395ead261]

aanaa
25th May 2009, 05:50 PM
Friday May 22, 2009


thanks to IsaiTamilNet - Prahu


[html:6c099e1a57]
<div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13607642&vid=5136648&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9031/86046882.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13607642&vid=5136648&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9031/86046882.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:6c099e1a57]

Shakthiprabha
25th May 2009, 06:51 PM
[tscii:7d731ab42a]

மூஷிக வாகனம்

பெருச்சாளி எதையும் குடைந்து வழி ஏற்படுத்திக் கொள்ளும். குண்டலினி யோகத்திலும், மூலாதாரத்தை அடைய வழி ஏற்படுத்தும் ஒரு ஆற்றலாகவே மூஷிகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


ரிஷப வாகனம்.

காளை மாடுகள் வயல் வெளிகளில் ஓயாது உழைத்து உற்பத்தியான தானியங்களின் பயனை நமக்கு அளித்துவிட்டு,
நாம் ஒதுக்கும் உமி, தவிடு, தோல், வைக்கோல் முதலிய பகுதிகளையே தன் உணவாகக் கொண்டு மகிழ்கிறது.
உழைப்பும் தியாக உள்ளமுமே இறைவனின் அத்யந்த விருப்பம். இதனை உணர்த்தவே சிவனும் சக்தியும் காளை வாகனத்தை விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளனர்

மயில் வாகனம்.

மயில் தோகை விரித்தாடும் போது’ஓம்’கார வடிவில்
காட்சி தரும். தான் பிரணவத்தின் வடிவானவன் என்பதை
உணர்த்தவும் முருகன் மயிலைத் தன் வாகனமாகக் கொண்டிருக்கிறான்.

ஆட்டுக்கிடா வாகனம்

ஆடு, அறியாமையின் சின்னமாகும். கடவுள் திருமுன்னர் அறியாமை அடங்குகிறது என்பதே இவ்வாகனத்தின் உட்கருத்து. ஆட்டுக்கிடா வாகனம் முருகனுக்கே உரிய சிறப்பு வாகனம்.

நாக வாகனம் (சேஷ வாகனம்)

மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தி,
சுருண்டு மண்டலமிட்டுப் படுத்திருக்கும் பாம்பு போலத் தோன்றும். குண்டலினி சக்தியாக இருந்து மனிதனின் உறங்கும் ஆற்றல்களை மேல் நிலைக்கு உயர்த்திடும் அம்பிகைக்கு அந்தப் பாம்பே வாகனமாகவும் ஆகிறது.

ஹம்ஸ வாகனம்.

கலைமகளின் சிறப்பு வாகனமாகிய அன்னப் பறவையை ‘ஹம்ஸம்’ என்பர்.அன்னப் பறவை ,
நீரை நீக்கிப் பாலை மட்டும் பருகும் திறமை படைத்தது.
அதுபோல் சான்றோர்கள் பொய்யான உலகியல் விஷயங்களை விடுத்து மெய்ப் பொருளாகிய கடவுளையே நாடித் தேடிப் பற்றிக் கொள்வார்கள்.

கருட வாகனம்

அத்தகைய ஆற்றல் மிக்க கருடனை, காக்கும் கடவுளாகிய திருமால் தமது ஊர்தியாகக் கொண்டுள்ளார்.

குதிரை வாகனம்

எண்ணற்ற ஆசைகளே குதிரைப்படையாகும். அவற்றை நன்னெறிப் படுத்தும் மனமே அச்வாரூடா என்ற குதிரைப் படைத் தலைவி.

காமதேனு வாகனம்.

காமதேனுவின் உடலில் அனைத்து தேவ சக்திகளும் இடங்கொண்டுள்ளன என்பது ஐதீகம். சத்வகுணம் என்ற மென்மையான நல்லியல்புகளைக் கொண்டது பசு. அடியார்களின் விருப்பங்களை அவள் நிறைவேற்றி வைக்கிறாள். இக்கருத்தை உணர்த்தவே அம்பிகை, காமதேனுவையும் ஊர்தியாகக் கொண்டிருக்கிறாள்.

கஜவாகனம்

மயில் போன்று, யானையும் தன் முகப்புத் தோற்றத்தால் ஓம் என்ற பிரணவத்தை நினவுபடுத்துகிறது.


காக்கை வாகனம்.

காக்கையிடம் ஒற்றுமைக் குணம் உண்டு. அது பேதம் பார்ப்பதில்லை. அதே போல், அதன் செயல்களுக்காக அதனை விரும்புவோரும் உண்டு. வெறுப்பவறும் உண்டு.
போற்றலும் தூற்றலும் இரண்டுமே காகத்திற்கு உண்டு.
சனி பகவானுக்கும் அப்படித்தான்.

சிம்ம வாகனம்.

தனது கர்ஜனையினாலேயே அனைத்தையும் அடக்கியாளும் திறமையும், கம்பீரமும், யாரும் எளிதில் அண்ட முடியாத வீரமும் உடையது சிம்மம். அதே நேரத்தில் தருமம் தவறாதது.
பசியில்லாத வேளையில் வீணாக வேட்டையாடி பிற உயிர்களை மாய்க்காது. அம்பிகை, தனது மேலாண்மை மற்றும் தருமம் தவறாத இயல்பு ஆகியவற்றை உணர்த்திடவே சிங்க வாகனத்தில் பவனி வருகிறாள்.

புலி வாகனம்.

ஐம்புலன்களும் சீறிப்பாயும் அடங்காத புலியைப் போன்றவை.
பிரம்மச்சாரியான ஐயப்பன், புலி வாகனத்தில் ஏறிவந்து அடங்காப் புலன்களை அடக்கும் நெறியினை உணர்த்தினார்.




தெரியாத பல விஷயங்கள் தெரிவித்துள்ளீர்கள். மிக்க நன்றி. தங்களின் தமிழ் வன்மை வியக்க வைக்கிறது :ty: :clap: [/tscii:7d731ab42a]

aanaa
26th May 2009, 03:27 AM
[tscii:80145e3ec7][quote=aanaa]
தெரியாத பல விஷயங்கள் தெரிவித்துள்ளீர்கள். மிக்க நன்றி. தங்களின் தமிழ் வன்மை வியக்க வைக்கிறது :ty: :clap: [/tscii:80145e3ec7]

தமிழின் மீது உள்ள பற்றுதலினால்தான் "அ" என கை ஒப்பமிடுகின்றேன்.

தமிழ் எனது தாய் மொழி
பல ஆண்டுகளாக -தமிழ் அனுபவம்.

Shakthiprabha
26th May 2009, 04:27 PM
may 25th

உமாவின் மனதில் தீப்பொறியாய் இருந்த ஆசையை கொழுந்துவிட்டெரியும் நெருப்பாக மாற்றியது பெற்றோர்களின் பொறுப்பு எனச் சாடுகிறான் அஷோக். ஆசைகளின் வித்து சிறியதாய் முளைக்கும் போதே கிள்ளி எறிந்து விடுதல் எளிது. வளர்ந்து விருக்ஷமாகிய பின், அதனை தகர்த்தெறிதல் பிரயத்தனத்திற்குறிய விஷயம். கேடு கெட்ட ஆசைகளோ தவறான எண்ணங்களோ முளையிலே கிள்ளி விடுவது நலம். இதையொத்த பழமொழி தான் "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா" . ஆசைகளின் வீர்யம் அதிகரிக்க அதனை அடைந்து விடும் எண்ணம் மேலிடும். அடையாமற் போகும் போது ரௌத்திரம், வருத்தம் அதிகரிக்கும். அதே ரௌத்திரம் தான் உமாவின் போக்கிலும் நேற்றைய தொடரில் காணப்பட்டது.

மனம் என்பது அடி காணமுடியாத மந்திரப்பை. குப்பைகளை நிரப்ப நிரப்ப அத்தனையும் விழுங்கி, அடியில் பத்திரமாய்ப் புதைத்து, புதிய குப்பைக்கு தயாராகி விடும். ஆனாலும் குப்பைகளால் நிரப்பப்படும் வரையில் மனம் அழுக்கு நிரம்பியதாகவே இருக்கும். எண்ணங்களே குப்பை என்றால் எண்ணங்களற்ற நிலையே அறிவு நிலை. எண்ணங்கள் ஆக்கபூர்வமாகவும் நல்லனவாகவும் இருப்பின், குப்பைகளை களைய பயன்படும். ஊறு விளைவிக்காது. மற்றபடி நல்ல எண்ணங்களைக்கும் அப்பாற்பட்டு மனம் என்ற இயந்திரமே இல்லாமல் போகும் நிலையே அறிவு நிலை என்பது விளக்கம். தன்னை சுற்றி நடப்பவைகளைப் பற்றி அஷோக் தெரிந்து வைத்துக்கொள்ளவில்லை. இதையெல்லாம் தெரிந்து என்ன செய்யப் போகிறேன்? என்கிறான். குப்பைகளை மேலும் சேர்ப்பதில் மட்டுமே இந்த தகவல்கள் பயன்படும் என்னும் வேதாந்த கருத்து. இக்கருத்தின் ஆழம் அனைவருக்கும் புரிந்து விடுவதில்லை.

பால்ய விவாஹம் பற்றிய பலர் கூறக்கேட்கும் ஒரே காரணம், பருவமடையாத சிறு வயதில் விவாஹம் நடை பெறும் போது, புதிய வீட்டுப் பழக்க வழக்கங்கள் எளிதில் பதிந்து விடும். அது மட்டுமன்றி, இவளே(இவனே) தன் இல்லறத்துணை என்று தெரிந்து இருப்பதால், வேறு இடங்களில் மனதை அலைபாய விடும் நேரமும் முயற்சியும் மிச்சம். பள்ளித் தோழி தோழனாக பழகி வருவதால், அன்பும் காதலும் ஆழமாக பிறக்கும் வாய்ப்பு அதிகம், இப்படியெல்லாம் பல வாதங்கள் செய்தாலும், பால்ய விவாஹத்தின் நல்ல நோக்கங்களை எடுத்து முன் வைத்தாலும், இன்றைய காலகட்டத்திற்கு பால்ய விவாஹம் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. இதனால் விளைந்த கேடுகளும் அதிகம். நேற்று பேசப்பட்ட விஷயம் இது. இதைப் பற்றிய விவாதமோ விளக்கமோ கூட தேவையற்றது என்பது என் எண்ணம்.

(கதையின் சுவாரஸ்யத்திற்கு ஆனா இடும் சுட்டியை சொடுக்குங்கள்)

(வளரும்)

//mods, I wish therez a "justify" function for articles :| //

aanaa
26th May 2009, 05:17 PM
may 25th



(கதையின் சுவாரஸ்யத்திற்கு ஆனா இடும் சுட்டியை சொடுக்குங்கள்)

(வளரும்)

//mods, I wish therez a "justify" function for articles :| //

:ty:

aanaa
26th May 2009, 05:22 PM
May 25, 2009


thanks - IsaiTamilNet - Prabhu

[html:78d03af843] <div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13652994&vid=5160160&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9083/86226990.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13652994&vid=5160160&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9083/86226990.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:78d03af843]

Shakthiprabha
27th May 2009, 04:13 PM
may 26th

விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் பெருமை நாமெல்லோரும் அறிந்ததே. ஜகத் பிரபுவாம் அந்த பரப்பிரம்மனே நாரணயனாய் நம்மை காத்து ரக்ஷிக்கிறான். அவனை எத்தனை துதி பாடினாலும் போதுமானதாகாது. அவன் ரூபத்தை நிலையை குணங்களை எத்தனை கூறினாலும் பக்தர்களுக்கு அலுப்பதில்லை. அவனை நாமாக்களால் கட்டுப் படுத்த முடியாது. அவன் குணங்கள் அபரீமிதமானவை. அலாதி. எண்ணில் அடங்காதவை. அவற்றை தொகுத்து குறைந்தபட்ச சஹஸ்ரத்தில் அடக்கியது தான் விஷ்ணு சஹஸ்ரநாமம். சஹஸ்ரம் என்றால் ஆயிரம் என்று பொருள். அவனைப் ஆயிரம் நாமாவைக் கொண்டு துதிப்பதே விஷ்ணு சஹஸ்ர நாமம்.

பீஷ்மர் முட்படுக்கையில் இருந்த போது எல்லாம் அறிந்த அந்த மஹானிடம் சாஸ்த்ரங்கள் கேட்டறிந்தாராம் தர்மபுத்திரர். சகல சௌபாக்கியங்களும் தரக்கூடியதான ஒரு விஷயத்தை சொல்லுங்கள். வாழ்வின் அல்லல் நீங்கி நல்லது நடக்க, சகல சௌபாக்கியங்களும் தர வல்லது எதுவோ அதைப் பற்றி கூறுங்கள் என்று யுதிஷ்டிரர் கேட்ட போது பீஷ்மர் நாரணனே காக்கவல்லான். அவனின் ஆயிரம் நாமாக்களே
அத்தனை சம்பத்துக்களையும் தர வல்லது என்று உபதேசித்தது தான் விஷ்ணு சஹஸ்ர நாமம். இதை தமிழிலும் பல ஆழ்வார்கள் பின்னாளில் உபதேசித்தருளினார்கள். இது யாராலும் இயற்றப்படவில்லை. வியாசர் உணர்ந்து கண்டெடுத்து கூறியதாக சொல்லப்படுகிறது. ஆதிஷங்கரரும் ஸ்ரீபராசர பட்டரும் மேலும் பலரும் சஹஸ்ர நாமத்திற்கு உரை எழுதியுள்ளார்கள்.

ஒவ்வொரு நாமாக்களையும் நாம் மேலோட்டமாய் படித்து எளிதில் எடைபொட்டு விட முடியாது. ஆழ்ந்த அர்த்தம் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் புதைந்திருக்கிறது.

அவனை "அப்ரமேயன்" என்ற நாமத்தால் விளக்குகிறோம். அப்ரமேயா என்றால் சொற்களால் விளங்கிக்கொள்ள முடியாதவன் (முடியாத வஸ்து). வருணைனைக்கும் சொற்களுக்கும் அப்பாற்பட்டு நிற்கும் அனுபவம் அவன். என்ற பொருளில் வரும். ஒவ்வொரு நாமத்திற்கும் அர்த்தம் பண்ணிக்கொண்டு வந்தால், வேத வித்தான பிரம்மத்தை விளக்க முற்பட்டிருப்பதைக் இருப்பதைக் காணலாம்.

எங்கள் வீடுகளிலெல்லாம் ஒரு காரியம் நடைபெறும் முன்போ, குறிப்பாக பிரயாணம் மேற்கொள்ளும் போதோ அல்லது தினம் வெளியே கிளம்பும் போதும்

வநமாலீ கதீசார்ங்கீ சங்கீ சக்ரி சநந்தகீ
ஸ்ரீமாந் நாராயணோ விஷ்ணு வாசுதேவோபிரக்ஷது...

என்ற ஸ்லோகம் சொல்லச் சொல்வார்கள்.

மேலும் பார்வதி சிவனிடம், எந்த நாமாவைச் சொன்னால் அனைத்து நாமாக்களைச் சொன்ன பலன் கிட்டும்? என்று கேட்கிறாளாம், அதற்கு சிவன்,

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம ததுல்யம் ராம நாம வரானனே

என்கிறார். நாமங்களிலெல்லாம் உயர்ந்தது ராமநாமம். அதை ஜபிப்பது சஹஸ்ரத்தையும் ஜபித்ததற்கு ஒப்பாகும் என்று பொருள். நாம உச்சாடனங்களும், ஜபங்களும் கடமைக்காக உச்சரிகாமல் பக்தியும் அன்பும் மேலிட ஜபிப்பதால் பலன் அதிகம் கிட்டும்.

அதன் பிறகு "வேறு ஏதேனும் உண்டா" என்று யுதிஷ்டிரன் கேட்க, பீஷ்மர் இன்னொரு மந்திரம் சொன்னாராம். இது அதிகம் பயன்பாட்டில் இல்லாத ஒன்று என்றும் பாகவதத்தில் இந்த ஸ்லோகம் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் சோ கூறினார். இம்மந்திரத்தில் பகவானைத் தவிர ரிஷிகள் சித்தர்கள் என பலருக்கும் வந்தனம் செலுத்துகிறோம்

( I couldn't find the mantra online :( I tried to post the mantra as much as I can follow, however I do remember certain ppl do say this as an end note after reciting sahasra naama)

நம வசிஷ்டாய மஹாவ்ரதாய
பராசரம் வேதநிதிம் நமஸ்யே
நமோஸ்து அனந்தாய மஹோரகாய
நமோஸ்து சித்தேதி இஹ க்ஷேப்யஹ
நமோஸ்து ரிஷிப்ய பரமம் பரேஷாம்
தேவேஷு தேவம் நமசிவாய
சஹஸ்ர நாமய ஜனார்தனாய

என்று வருமாம்.

கிரியின் தந்தை வழி சொந்தங்களை கதையில் புகுத்தியிருக்கிறார்கள். அவர்களின் ஆத்ம நண்பராய் வைஷ்ணவ வேடத்தில் சார்யார் என்ற கதாபாத்திரம் ஏற்று டெல்லி கணேஷ் அறிமுகப்படுத்தப்பட்டார். சீர்த்திருத்தம் என்ற பெயரில் ஜாதிக் கட்டுப்பாட்டை மீறுவது பற்றி கிரியின் பெரியப்பாவான நடேச முதலியாரின் அதிருப்தியும், அதை சாரியார் மறுத்து எடுத்துக்கூறுவது போல் சம்பாஷணை இருந்தது. நேற்று புகுத்தப்பட்ட கதாபாத்திரங்களில் மனம் இன்னும் லயிக்கவில்லை. இத்தனைக்கும் டெல்லி கணேஷ் போன்ற நல்ல கலைஞர்கள்! "சாந்தா காரம், சாரதா ஸ்வீட், சரசா காபி" பழைஈஈய தூர்தர்ஷன் தொலைக்காட்சி தொடரில் (சோவின் நாடகம்) நாம் கேட்டு விட்ட படியால், ரசிக்க முடியவில்லை. உமாவின் பிடிவாதத்தை தளர்த்த அஷோக் உதவியை நீலகண்டன் நாடுகிறார் அதை மறுத்து விடுகின்றனர் வசுமதி-நாதன் தம்பதியர்

(வளரும்)

aanaa
28th May 2009, 02:28 AM
:ty:

aanaa
29th May 2009, 12:27 AM
Tuesday May 26,2009


Thanks to IsaiTamilNet - Prabhu



[html:92f36ecdb9] <div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13669654&vid=5168128&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9105/86291260.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13669654&vid=5168128&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9105/86291260.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:92f36ecdb9]

Shakthiprabha
1st June 2009, 01:56 PM
May 27th
________

கிரியின் பெரியப்பா நடேச முதலியாரும் சார்யாரும் (டெல்லி கணேஷ்) ஆப்த நண்பர்கள். பேச்சின் போக்கின் ஜாதி பேதங்களைப் பற்றி தன் கருத்தையும் அசைக்க முடியாத நம்பிக்கையையும், பிடிப்பையும் முதலியார் முன் வைக்க, அதற்கு சார்யார் தம் போக்கில் சிறு திருத்தம் கொண்டு வர எண்ணுகிறார்.

திருமலை நள்ளான் சக்கரவர்த்தி என்று வைணவத்தில் ஒரு பகுதியினர் உண்டு. அதன் தோற்றத்தின் காரணம், வைணவர் ஒருவர் கீழ் ஜாதியினர் ஒருவரின் இறுதிக் கடனை முன்னின்று தாம் நடத்த, அதன் பின் தோன்றிய கிளை தான். இப்பகுதியினர். இந்திய அரசியல் வரலாற்றில் தம் தடத்தை பதித்த, இன்றைக்கும் நாம் மரியாதையுடன் நினைந்து மகிழும் சி. ராஜகோபாலாச்சாரி எனும் ராஜாஜி இவ்வழித் தோன்றலே. அவரின் இராமாயண மஹாபாரத மொழிப்பெயர்ப்புகள் இன்றும் தமிழில் முன்னிடத்தில் விளங்கி வருகிறது.


ஜாதிகளைத் தாண்டிய மனித நேயத்தின் அடிப்படையில் எல்லோரும் ஒர் குலம், எல்லோரும் ஒன்றே என்பதை வலியுறுத்த கண்ணப்ப நாயனார் கதைகள் முதல் பல கதைகளில் இறைவன் நேரே உணர்த்தியதும், குறிப்பாலுணர்த்தியதும் உண்டு. அப்படிப்பட்ட இன்னொருக் கதை தான் பெரிய நம்பியின் கதை.

மாறநேர நம்பி என்பவர் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர். பெரிய நம்பி உயர்குலத்தோன். மாறநேரியின் இறப்பிற்கு பெரிய நம்பி ஈமக் கடன்களை செய்தார். அதனால் அவர் தம் ஜாதியிலிருந்து விலக்கப்பட்டு கடுமையாய் நடத்தப்பட்டார். அவர் இருக்கும் தெருவழியே ரங்கநாதரின் தேர்வீதி உலா வந்து கொண்டிருந்தது. அது பெரியநம்பியின் தெருவிலும் வலம் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது பெரியநம்பியின் பெண், அத்தூழையம்மை மனையின் வீசப்பட்டிருந்த முட்செடிகளையெல்லாம் கடந்து வந்து, ரங்கநாதரின் தேர் முன், 'ஜாதிபேதங்களையெல்லாம் கடந்தவன் நீ, மாடு மேய்க்கும் குலத்தோரை சமமாய் நடத்தியவன் நீ. உன் போலவே ஜாதிபேதங்களை பாராத நடந்த எங்களுக்கு நிகழும் அநீதிக்கு ஒரு தீர்ப்பு சொல்லாது இந்த தேர் இங்கிருந்து நகராது' என ஆணையிட்டு கதறுகிறாள். அதன் பின், எவ்வளவு பேர் வலிந்து இழுத்தும், போராடியும் தேர் நகர மறுக்கிறது. தம் தவறை உணர்ந்து, பெரிய நம்பியை அர்ச்சகர் தோளில் சுமந்து கொண்டு தேரில் அமர்த்திய பின்னரே தேர் நகர்ந்ததாக சரித்திரம் கூறுகிறது. பல சம்பவங்களை இதனை வலியிருத்த நிகழ்ந்தவண்ணம் இருக்கும்.

அப்படியெனில் சாஸ்திர சம்பிரதாயங்களே வேண்டாமே, எல்லாவற்றையும் தளர்த்தி விடலாம், அது தான் எழுச்சி, அது தான் மறுமலர்ச்சி என பேசுவதும் தேவையற்றது. ஜாதிக்கட்டுப்பாடுகளும், ஒழுக்கங்களும், சாஸ்திர சம்பிரதாயங்களும் தேவை தான். எல்லாமே தளர்த்தி விட்டால், பின் ஒழுக்கம் கட்டுப்பாடு தளர்ந்து மனிதன் 'எப்படியும் வாழலாம்' என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவான். இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளெல்லாம் ஒழுக்கத்திற்காகவும், வழிவகுக்கும் பொருட்டும், அர்த்தமுள்ளதாக படைக்கப்பட்ட ஒன்று. அதை மீறுவது சிறந்ததன்று. "எல்லோரும் மனித ஜாதி" என்ற நிலை, மனதால் பிறரை வித்தியாசமின்றி நடத்தும் நிலை, பலருக்கு சரி வருவதில்லை. அது ஞானமார்கத்தின் பால் செல்லும் மனிதர்களுக்கு சொல்லப்பட்டது. அந்த நிலையில் இல்லாத ஒருவர் அப்படிப்பட்ட சிந்தனையை புகுத்திக்கொண்டு ஒழுக்கக்கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்ளுதல் வாழும் வகைக்கு ஊறு விளைவிக்கும்.

உமா ஏதோ தெளிவற்ற நிலையில் தவிப்பது போலவும் அவளுக்கு தன் உதவி தேவை என்றும் அஷோக்கிற்கு உள்ளுணர்வு தோன்றுகிறது. அதை அலட்சியப்படுத்தி அவனை சிறைவைக்கிறாள் வசுமதி. ஆனால் அஷோக் உமாவுடன் உரையாடுகிறான். நடந்தது என்ன? எப்படி நடந்தது? அஷோக் உரு-தாங்கி, உமாவிடம் உரையாடுவது எது? அஷோக் தெருவில் நடந்து செல்வதை பார்த்த சமையல் மாமி, அதே சமயத்தில் வீட்டிலும் கட்டப்பட்டிருப்பதை பார்த்து குழம்பிப் போகிறாள்.



(வளரும்)

viraajan
1st June 2009, 02:10 PM
:clap: :ty: SP akka :)

Cho's explanation for Vishnu Saharsanamam was superb :bow:

Waterloo
1st June 2009, 02:33 PM
The Director has smartly inserted the " Saathirangal sonnadhillai " drama theme into Enge Brahmanan ! From now, we can expect some interesting scenes with Delhi Ganesh who will undergo acid test on how broadminded he is actually when it comes to his own matters.

Very good narration by Sakthiprabha . Keep it up . I am one of those slient readers & admireres of this thread !

aanaa
1st June 2009, 05:40 PM
May 27th
________


(வளரும்)

:ty:

aanaa
1st June 2009, 05:45 PM
May 27- 2009



thanks to IsaiTamilNet - Prabhu


[html:e29ca58f94]<div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13687244&vid=5176120&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9122/86355143.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13687244&vid=5176120&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9122/86355143.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:e29ca58f94]

Shakthiprabha
1st June 2009, 06:21 PM
Thanks, waterloo, vr and aana.

Waterloo,

That bit of info was very interesting. Thankyou. I am eager to wait n watch . :)

Shakthiprabha
1st June 2009, 06:21 PM
May 28th
_______


"நாமொன்று நினைத்தாலும் தெய்வம் ஒன்று நினைக்கும்" என்பார்கள். தெய்வம் என்றால் இறைத்தீர்ப்பு. 'விதி' என்றும் சொல்வதும் இதைத்தான். இதன் வீர்யம் அதிகமாக இருக்கும் போது, நம் தனிப்பட்ட வைராக்கியத்தால் பெரிதும் சாதித்து விட முடியாது. இதைத் தான் அஷோக் உமாவிடம் எடுத்துரைக்கிறான். விதியை வெல்ல போதிய அளவு நம் வைராக்கியத்தாலும் சித்தத்தாலும் முடியாத போது, அதனுடன் எதிர்த்து விளையாடி என்ன பயன்? அதை பகைத்து, அதனுடன் மல்லுக்கு நின்று ஆவது என்ன? நம்மை நாமே வருத்திக்கொள்வது மட்டுமே கண்ட பலனாய் இருக்கக்கூடும்.

நம் வாழ்வில் பிடிக்காத ஒன்று நடக்கிறது, அதை நம்மால் தடுத்து நிறுத்தும் வலிமையில்லை என்றால் என் செய்வது, அதனுடன் மோதுவதை விடுத்து, அதனுடன் இயைந்து, ஒப்பி வாழ்வதே சிறந்தது. "When u dont get what u love, love what u get" என்ற ஆங்கில பழமொழியும் இதையே நினைவுறுத்துகிறது. ACCEPTING life as offered, is the best remedy to live a meaningful life.

இன்னொரு பெரிய கேள்வி. நாம் ஏன் அலுத்துக்கொள்கிறோம்? தன்னிரக்கத்தில் மூழ்குகிறோம் என்றால், we try to hide and bury our inefficiency to accept life, under the pretext of pain. நாளாவட்டத்தில் அந்த வலியில் வாழப்பழகிக் கொண்டுவிடுகிறோம். அந்த வலியை நேசிக்கத் துவங்குகிறோம். நம் சோதனைகளுக்கும் முயலாமை, இயலாமை போன்ற எல்லா ஆமைகளுக்கும், வெகு சௌகரியமாக இந்த வலியை பழியாக்கி, இலக்காக்கி அதை சுட்டிக்காட்டி நாம் தப்பித்துக்கொண்டு விடுகிறோம்.

விதி என்பது என்ன என்றால், நிர்ணயிக்கப்பட்ட விஷயம். எது நிர்ணயிக்கிறது? (இதற்கு விடை பலவகையில் ஆராயலாம், திரியின் நோக்கம் மாறுபட்டு விடும்). ஆனாலும் நம்மால் ஆட்டுவிக்கமுடியாத ஒன்றை விதி மாற்றி அமைத்தால், எந்த மனிதனும், படை, பலம், புத்தியுடன் கூடிய எவனும் தடுமாறிவிடுகிறான். இவையெல்லாம் ஏன் நம் புத்திக்கு எட்டுவதில்லை? புரிபடுவதில்லை? நம் புத்திக்கும் அறிவுக்கும் புலப்படாத, புரியப்படாத விஷயங்கள் பல உள்ளன. அதை ஒப்புக்கொள்வதே புத்தியின் முதல் வெற்றிப்படி. அறிவுக்கு எட்டாத விஷ்யங்கள் தினம் நம் வாழ்விலும் நடந்து கொண்டிருக்கிறது.

ஒருவன் ஜெயிக்கவேண்டுமெனில் இன்னொருவன் மட்டுபட வேண்டும். ஒருவனின் ஜெயித்தல், இன்னொருவனின் தோல்வியால் தான் நிகழ்கிறது. ஏன் இன்னொருவன் தோற்கிறான். அவனுக்கு புத்தி மட்டு, அல்லது நேரம் சரியில்லை. ஏன் புத்தி மட்டு? ஏன் நேரம் சரியில்லை? ஏன் ஒருவன் உச்சாணிக்கொம்பில் உட்கார, இன்னொருவன் கீழே தூசிதட்டுகிறான்? இவையெல்லாம் நம்மை மீறிய விஷயங்கள். Therez always a controversy here as to why things happen? Is it destiny or Is it choice! Again thats a different topic by itself. I suppose we can safely conclude destiny and choice are inter-twined so closely, that its difficult to see them apart.

அதெல்லாம் சரி. அஷோக் எப்படி வீட்டிலும் இருந்திருக்கிறான் - உமாவுடனும் பேசிக்கொண்டிருந்தான்? பாகவதர் எப்படி அஷோக்கிடம் தோட்டத்தில் பேசினார் - அதே நேரம் காஞ்சீபுரத்திலும் இருந்தார்? இதுவும் நமக்குப் புலப்படாத விஷயம் அல்லது இறைச்செயல் எனக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட அதிசயங்கள் பல மஹான்கள் வாழ்வில் நிகழ்ந்துள்ளன. அவர்களும் நிகழ்த்தியுள்ளார்கள். பரமாச்சார்யாரைப் பற்றிய சுயம் அனுபவம் ஒன்றை பகிர்ந்து விளக்கத்திற்கு அப்பாற்பட்ட இவ்விஷயத்தை முடித்தார் சோ.

நீலகண்டன் அஷோக் புகழைப்பாடிக்கொண்டு மிகுந்த நன்றி தெரிவித்துப் போகிறார். உமா திருமணத்திற்கு சம்மதித்து விட்டதாக கூறுகிறார். வசுமதியும் நாதனும் அசோக் எப்படி சென்று வந்தான் என்று புரியாது திகைத்து நிற்கின்றனர். சார்யாரை சந்திக்கும் அஷோக் வைணவத்தின் பேரில்
தனக்குள்ள ஈடுபாட்டை எடுத்துக்கூறி தன்னை வழி நடத்துமாறு கேட்டுக்கொள்கிறான். தமக்கொரு சிஷ்யன் கிடைத்த மகிழ்ச்சியில் திளைக்கிறார் சாரியார்.

(வளரும்)

Shakthiprabha
1st June 2009, 07:41 PM
May 29th
________

அஷோக்கிடம் ராம்ஜி (உமாவின் தம்பி) தன் நன்றியைத் தெரிவிக்க வருகிறான். வந்திருந்தது நான் என்றே உமா நினைக்கட்டும், அது நான் அல்ல என்று தெரிந்தால், அவள் மீண்டும் குழப்பத்திற்கு ஆளாக நேரிடும் என்கிறான் அஷோக். அதாவது உண்மையை மறைத்தல். பல நூல்களும் நற்பண்பினை எடுத்துறைக்கும் நன்னெறிப் புத்தகங்களும் உண்மையை மறைத்தல், பொய் உரைத்ததற்கு ஈடாகும் என்று கூறுகிறது.

ஆனாலும்...

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்

என்னும் குறளுக்கு விளக்கமே தேவையில்லை. பொய்யையோ, அல்லது உண்மையை மறைத்தலையோ அலசும் போது, அதன் நோக்கத்தையும் சேர்ந்து அலச வேண்டும். தன்னலமற்று, பிறர் நலனுக்காக பொய் உரைக்கப்பட்டிருப்பின், அது உண்மைக்கு சமம் என்பதே சான்றோர் வாக்கு.

இராமாயணத்திலிருந்து சில உதாரணங்களை எடுக்கலாம். சுமந்திரர் தேர் ஓட்டிச் சென்ற போது துக்கம் தாளாமல் தசரதர் அழுது தேரை நிறுத்தச் சொல்லி கதற, ராமனோ, தேரை செலுத்த ஆணையிடுகிறான். தந்தை கேள்வி வினவினால், உங்கள் காதுகளுக்கு அவரிடம் கூக்குரல் சத்தம் எட்டவில்லை என்று கூறிவிடுங்கள் என சுமந்திரரிடம் கூறுகிறான். இதுவும் பொய் தான், அதன் நோக்கம், தசரதரின் வாக்கு காப்பாற்றப்பட
வேண்டும் என்பதே.

அதே போன்று, பரதன் மீண்டும் ராமரை அரசாள அழைக்கும் போது, தசரதன் கைகேயியிடம் அவள் ஈன்றெடுக்கும் பிள்ளைக்கே பட்டாபிஷேகம் செய்விப்பதாய் வாக்கு கொடுத்திருந்தார் என்று பொய்யுரைக்கிறான். பரதனை சமாதானப்படுத்தி நாடு அனுப்ப வேறுவழியின்று பொய்யுரைக்க
நேரிடுகிறது.

ராமனைப்பற்றியே ஏன் பேசுகிறோம் என்றால், மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்று நியதிப்படி வாழ்ந்தவன் அவன். கண்ணனைப் பற்றி இங்கு பேச இயலாது. அவன் செய்கைகளை அதனால் தான் "லீலைகள்" என்று சொல்லிவிடுகிறோம் :D . ராமன் மனிதனாய் வாழ்ந்தான். கண்ணனோ இறைவனாய் தீர்ப்பு கூறினான்.


ராமனின் வாழ்வை முன்னுதாரணமாய் வைத்து நாம் நம் செய்கைகளை செப்பனிட்டுக்கொள்ள வேண்டும். அப்பேற்பட்ட ராமனும் ஓரிரு தருணங்களில் பொய்யுரைத்திருப்பதை அலசுதல் அதன் நோக்கத்தை புரிந்து செயல் பட உதவுகிறது.

ராமன் செய்கைகளில் உறுத்தும் இன்னொன்று வாலியை மறைந்து நின்று கொன்றது. இதை அறவே மறுக்கின்றன வேறு சில நூல்கள். கமபனும் துளசிதாசரும் ராமாயணத்தை பக்திததும்ப கற்பனாஷக்தியை புகுத்தி எழுதினர். வால்மீகி ராமாயணம் நடந்ததை அப்படியே எடுத்துரைக்கும் புத்தகம். அதில் ராமன் மறைந்து நின்று கொன்றதாய் கூறப்படவில்லை. "எத்தனை வலிந்து சண்டையிட்டும் ராமனின் பாணம் முன் ஒன்றும் செய்ய முடியவில்லை" என்று அழுது புரளும் தாரா முன் வான்ரங்கள் கூறின என செய்யுள் வருகிறது. "யுத்தத்தில் நான் உன்னை வீழ்த்தினேன்" என்கிறான் ராமன். யுத்தநீதிப்படி பார்த்தால், இவற்றை இரு கோணங்களில் அலசலாம். வாலி முதலானோரை மிருகம் என்ற ஜாதியில் சேர்த்தால், மிருகத்தை ராஜா வேட்டையாடிக் கொல்வது என்பது நிகழ்வதே. அவர்களை மனிதர்களாய் பாவித்தால், தம்பி மனைவியை களவாடியவன் என்பதால் அவனுக்கு எத்தகைய தண்டனையும் அரசன் வழங்கலாம் என்பது சட்டம்.

சார்யார் அஷோக்கின் அழைப்பை ஏற்று அவன் வீடு வருகிறார். யோக வாசிஷ்டம் போன்ற உயர்ந்த ஆன்ம விளக்கங்களை படிக்கும் அவனை உயர்த்திப்பேசுகிறார். வைணவர்கள் ஏன் மற்ற கோவில்கள் வருவதில்லை, மற்ற தெய்வங்களைத் தொழுவதில்லை என்பதற்கு விளக்குகிறார். நாரணன் ஒருவனே எல்லாம் வல்ல ஒரே கடவுள் என்ற உயர்ந்த நிலையில் அவனை வைப்பதால், அவனைத் தவிர இன்ன பிற தேவதைகளைத் தொழுதால், பக்தியின் அடர்த்தி குன்றிவிடும் என்றும், சிரத்தை மட்டுப்பட்டு விடும் என்றும் அவர்கள் தொழுவதில்லை என்று காரணம் கூறுகிறார். (பல வைணவர்கள் இதே காரணம் கூற நானும் கேட்டிருக்கிறேன்) இவர்களை "வீர வைணவர்கள்" என்று அழைப்பது வழக்கம். அதனாலேயே நவக்ரஹங்களின் சன்னிதியும் வைணவக்கோவில்களில் இருப்பதில்லை. நவக்கிரஹங்கள் பெருமாளை வழிபடுவதால், நாம் நேரடியாக பெருமாளிடம் பக்தி செலுத்தும் போது தனியாய் இன்ன பிற தெய்வங்களை வணங்க வேண்டிய அவசியத்தை அவர்கள் வலியுறுத்தவில்லை. எனினும் எண்ணிவிடக்கூடிய ஓரிரெண்டு வைணவக் கோவில்களில் நவக்கிரஹங்களை ஸ்தாபித்திருக்கிறார்கள்.

பொதுவாகவே வைணவன் தன்னை "அடியேன்/தாசன்" என்றெல்லாம் அழைத்துக்கொள்வார்கள். அஃதாவது பிறரிடம் பேசும் போது அவர்கள் இச்சொற்களை அடிக்கடி பயன் படுத்துவர்.

வைணவன் வலியுறுத்துவது த்வைதம். அதாவது இறைவன் எல்லாம் வல்லவன். நீ அவன் ஆணைப்படி செயல்படுத்தப்படுகிறாய். இதன் அடிப்படையில் வைணவர்களுக்கு பக்தி மார்கமும், பக்தியில் ஈடுபாடும், தன்னை தாழ்த்தி, இறையை உயர்த்தும் பண்பும் உண்டு.

சைவர்கள் அல்லது சிவனை வழிபடுவோர் வலியுறுத்துவது "அ-த்வைதம்" அதாவது இரண்டற்ற நிலை. நீயே அது. அதுவே நீ என்ற நிலை. இதனால் அவர்கள் போக்கு ஞான மார்கமாக அமைவது இயற்கை.

பி.கு: சிறு வயது முதல் எனக்கு வைணவத்தை பின்பற்றும் பலர் நண்பர்களாய் அல்லது பழக்கமானவர்களாய் இருந்திருக்கின்றனர். சிறியோர் முதல் பெரியோர் வரை பெரும்பாலும் "தாசன்/அடியேன்" என்ற சொல்லை பேச்சில் அடிக்கடி பயன்படுத்துவர். I thought it was psudo-humility, infact I used to find it too irritating. முதன் முறையாக எனக்கு விளக்கம் கிடைத்தது. Now I see, where it comes :bow:

(வளரும்)

viraajan
1st June 2009, 07:50 PM
:ty: SP akka :bow:



பி.கு: சிறு வயது முதல் எனக்கு வைணவத்தை பின்பற்றும் பலர் நண்பர்களாய் அல்லது பழக்கமானவர்களாய் இருந்திருக்கின்றனர். சிறியோர் முதல் பெரியோர் வரை பெரும்பாலும் "தாசன்/அடியேன்" என்ற சொல்லை பேச்சில் அடிக்கடி பயன்படுத்துவர். I thought it was psudo-humility, infact I used to find it too irritating. முதன் முறையாக எனக்கு விளக்கம் கிடைத்தது. Now I see, where it comes :bow:

(வளரும்)

:cool2:

aanaa
2nd June 2009, 02:32 AM
May 28th
_______


:ty: SP

"நாமொன்று நினைத்தாலும் தெய்வம் ஒன்று நினைக்கும்" என்பார்கள்.
(வளரும்)

நாம் நினைத்தபடிதான் வாழ்க்கை அமைகின்றது.
எது தேவையோ -ஆசைப் பட்டதல்ல...-அது கிடைகின்றது.

aanaa
2nd June 2009, 02:35 AM
May 28- 2009


Thanks to IsaiTamil Net- Prabhu

[html:70a7267ba7]<div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13715235&vid=5188872&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9149/86457297.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13715235&vid=5188872&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9149/86457297.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:70a7267ba7]

aanaa
2nd June 2009, 02:37 AM
May 29- 2009



Thanks to IsaiTamil Net- Prabhu


[html:4c2c84ae9b] <div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13723097&vid=5192628&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9159/86486784.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13723097&vid=5192628&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9159/86486784.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:4c2c84ae9b]

Shakthiprabha
3rd June 2009, 02:53 PM
01-06-09

பொதுவாகவே மரங்களை வெட்டினால், சுற்றுப்புறச் சூழலின் மாசு அதிகரிப்பதாய் இன்றைய கண்டு பிடிப்பு. அதனாலேயே செடி கொடிகளை மரங்களை பாதுகாப்பது அவசியம். நம் சுவாசத்திற்கு ஏதுவாய் பிராண வாயுவை வழங்கும் எல்லா மரங்களும் செடிகளும் புனிதமானவையே. மற்ற மிருகங்களை மதித்தாலும் பசு எப்படி ஹிந்து வழிபாடுகளில் புனிதமாக கருதப்படுகிறதோ, அதே போல் எல்லா மரங்களும் புனிதமானவையாய் இருப்பினும், அவற்றில் சில மரங்கள் / செடிகளை நாம் வணங்குகிறோம். உதாரணம்: அரச மரம், வேப்பமரம். மஞ்சள் செடி. இவற்றின் காற்று பட்டாலோ அல்லது இலைகள / கிழங்குகளை உட்கொண்டாலோ உபயோகித்தாலோ வியாதிகள் குணமாவதாக மருத்துவப்பலன்கள் கூறுகின்றன. அதே போல் துளசி. துளசியின் மருத்துவப்பலன் இன்றைக்கு உலகமே ஒப்புக்கொண்ட விஷயம். கொடும் வியாதியான, புற்று நோயைக் கூட மட்டுப்படுத்த வல்லது.

துளசிச் செடியை நம் வீடுகளில் புனிதமாகக் கருதி, வழிபட்டு வருகின்றோம். துளசி என்பவள் விஷ்ணுவிற்கு பிரீதியானவள். எதனால்? அவள் லக்ஷ்மியின் அவதாரம் என்பதால். இதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்ய கதை இருக்கிறதாம். தேவி பாகவதத்தில் இதைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. தேவதா ஷக்திகளுக்குள் எப்பொழுதேனும் வாக்குவாதம் நேர்ந்தால், அவற்றின் விளைவும் அதிக நன்மை பயப்பதாகவோ
அல்லது சாபத்தில் கொண்டு விடுவதாகவோ இருந்து விடும். அவர்கள் ஷக்தி சாமான்யமானதல்ல என்பதால், விளைவுச் செயல்களுக்கு வீர்யம் அதிகம். கங்கை-ஸரஸ்வதி-லக்ஷ்மி மூவரும் வாக்குவாதம் செய்த போது கோபத்தின் உச்சத்தில் சரஸ்வதி லக்ஷ்மியை பூமியில் செடியாகிவிட சாபமிட்டுவிட்டாள். மிச்சம் இருந்த இருவரும் மேலும் வாதத்தைத் தொடர, அவர்கள் கங்கை நதியாகவும், சரஸ்வதி நதியாகவும் உருவெடுக்க நேர்ந்தது. லக்ஷ்மிக்கு ஆறுதலளிக்கும் விஷ்ணு, 'தர்மத்வஜனின் மகளாய் அவதரித்து, ஷங்கசூடனை மணந்து, பின் துளசிச் செடியாய் உருவெடுத்து மீண்டும் வைகுந்தம் வருவாய்' எனக் கூறி அருள்கிறார்.

இவ்வுலக நடைமுறைப்பலங்களைத் தவிர, பரத்திலும் நமக்குச் சிறப்பை சேர்க்க வல்லது துளசி. துளசியின் குச்சியைக் கொண்டு விளக்கேற்றினால், ஆயிரம் விளக்கேற்றிய பலன் உண்டாம். அதே போல் துளசியை பசையாய் உடம்பில் பூசி விஷ்ணுவை வழிபட்டால், ஆயிரம் முறை பூஜை செய்ததற்கு சமம் என்று சொல்கிறார்கள். மேலும், இறந்தவனை எரிக்கும் முன், பூதவுடலுடன், துளசியையும் சேர்த்து க்ரியை செய்தால், அவன் வைகுந்தம் செல்வது திண்ணம்.

பசுவை தெய்வமாய் வழிபடும் நாமே, எப்படி அதன் பாலை உண்கிறோம்? அதற்கு செய்யும் கொடுமையல்லவா இது? அதன் பாலை உண்பது மாமிசம் உண்பதற்கு ஒப்பா என்ற கேள்விகள் எழலாம். இரத்தம் சம்பந்தப்படாத எந்த உணவும் மாமிசம் அல்ல என்கின்றனர். மேலும், பசுவிற்கு தேவைக்கு அதிகமாக பால் சுரக்கும். கன்று கரந்தது போக மீதம் பாலை மனிதன் உபயோகிப்பதால், அதனை வதை செய்வதற்கு ஒப்பாகாது.

இரண்டே வரிகளில் முக்கியக் கதை: உமாவிற்கு ரமேஷ் என்ற வாலிபனுடன் திருமணம் நிச்சயம் செய்கிறார்கள். ஜெயந்திக்கும் அவள் மாமியாருக்கும் மனக்கசப்பு நிலவி வருவதை சுப்பு வருத்ததுடன் தெரிவிக்க, பிரியா ஜெயந்தி மாமியாருடன் பேசி, நிலைமையை சகஜமாக்குகிறாள்.

பி.கு: ரமேஷின் தாயாக நடிக்கும் (!) பெண் ரொம்ப சுமார். ஏகத்திற்கு முகத்தில் உணர்ச்சி கோப்பளிக்கிறது. "இருங்கோ மாமி வரேன்" போன்ற இரண்டணா வசனத்திற்குக் கூட பரதநாட்டியம் ஆடுகிறார். குயிலியே தேவலை! நடிப்பு என்றால் என்ன என்பதை "நீலகண்டனாக நடிக்கும் கோபு" விடம் எல்லோருமே பாடம் கற்கலாம்.

அப்புறம் கிரியின் அம்மா! :evil: இரண்டாம் வகுப்பு மாண்வி மேடை ஏறினால் எப்படி ஒப்பிப்பாளோ அப்படி ஒப்பிக்கிறார்கள். இதற்கு வசனத்தை படித்து விடலாம் :mad:

கோபுவிற்கு அடுத்த மார்க் நளினிக்குத் தான். கச்சிதமான நடிப்பு. அஷோக்-காக நடிக்கும் அஃசர் பாத்திரமாகவே மாறி விட்டான் :clap:


(வளரும்)

Shakthiprabha
3rd June 2009, 04:18 PM
02-06-09

வைணவ சம்பிரதாயங்களைப் பற்றி அஷோக் சார்யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறான். முறையே ஹிந்து மதத்தில் பெரிய அளவில் போற்றப்படும் முப்பெரும் தத்துவங்கள், அத்வைதம், த்வைதம் மற்றும் விசிஷ்ட அத்வைதம் என்பன. இவை மூன்றும் வேதங்களையோ வேதத்தின் வித்தான உட்பொருளையோ மாறுபடுத்தவில்லை. கோணங்கள் மற்றுமே மாறுபடுகின்றன. அத்வைதம் என்பது இரண்டல்லாத ஒன்றே
என்று ஓதுவது, த்வைதம் பிரம்மமும் ஜீவனும் வெவ்வேறு என்று குறிப்பிடுகிறது. விசிஷ்ட அத்வைதமோ, நீயும் பிரம்மமும் ஒன்று தான், ஆனால், சில நிபந்தனைகளின் பேரில் என்ற தகுதி வாதம் வைக்கிறது. முறையே ஷங்கரர், மாத்வாச்சார்யர், ராமானுஜர் அத்வைத, த்வைத, விசிஷ்ட அத்வைதங்களை நிலைநிறுத்தினர். அதாவது மீண்டும் வலியுறுத்தினர். இவர்கள் காலத்தின் முன்பும், இக்கருத்துக்கள் வழங்கப்பட்டு வந்தவையே. த்வைத கருத்துக்களை பின்பற்றி வரும் வைணவர்களுக்கு, பஞ்ச சம்ஸ்காரம் என்ற ஐவகை கர்மாக்கள் உண்டாம்.

*முதலாவதாக சங்கு சக்கரத்தை தம் உடலில் பொரித்துக்கொள்வது
*இரண்டாவதாக நாராயணனின் பனிரெண்டு நாமாக்களை குறிக்கும் வகையில் பனிரெண்டு இடங்களில் திருமண் (துளசி மாடத்து மண்) காப்பு இட்டுக்கொள்வது.
*மூன்றாவதாக 'தாசன்' என்ற பெயரை தம் பெயருடன் சேர்த்துக்கொள்வது
*நான்காகவதாக 'த்ரயம்-அஷ்டாக்ஷரம்' என்ற மூன்று மந்திரங்களை உபதேசம் பெறுவது. அவையாவன:
"ஓம் நமோ நாராயண
"ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே
"ஸ்ரீமதே நாரயணாய நமஹ"
*ஐந்தாவதாக நாரயணனை வழிபடும் ஆராதனை முறைகளை முறையே குருவிடம் கற்றுப் பெற வேண்டும்.

சார்ம மந்திரமான கீதை மந்திரமும் உபதேசம் பெற வேண்டும். அம்மந்திரம் பின் வருமாறு:

"சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷூச: "

கீதையில் க்ருஷ்ணன் அர்ஜுனனிடம் கருணை கொண்டு கூறுகிறார் " எல்லா தர்மங்களையும் விடுத்து என் ஒருவனை ஷரணம் அடைவாய். உன்னை எல்லா பாபங்களிலினின்றும் நான் காக்கிறேன்".

இதனை மேல் நிறுத்திப்பார்த்தால் த்வைதத்தின் முக்கிய பண்பு ஷரணாகதி. இறைவனே என்னைக் காக்க வேண்டும் என்ற பரிபூர்ண நம்பிக்கை. அவனை தன்னின்று வேறாய், உயர்த்திப் பார்ப்பது. அப்படி வரும் வைணவ சம்பிரதாயத்தில் வடகலை தென்கலை என்ற இருவேறு பிரிவுகளும் உண்டு. இதில் தென்கலை வைணவத்தினர், மர்ஜாயன நியாயப்படி இறைவனிடம் ஷரணாகதி அடைகின்றனர். பூனை எவ்வாறு தன் குட்டியை தானே கவ்விக்கொண்டு போய் காக்கிறதோ, அப்படி இறைவன் உயிர்களை படைத்து, அவனே அவற்றை பரிபாலிக்கிறான். நாம் ஒன்றும் செய்யாவிட்டாலும் கூட காப்பது அவன் கடன் என்ற நம்பிக்கை. சும்மாயிருந்தாலும், நம்பிக்கையற்று இருந்தாலும் முயற்சி கூட எடுக்காவிட்டாலும் காப்பது அவன் கடமை என்கின்றனர்.

வடகலை வைணவத்தினர், மர்கட நியாயப்படி ஷரணாகதி அடைகின்றனர். பகவானை விடாபிடியாக பக்தன் பிடித்துக்கொள்ள வேண்டும். பிடித்துக்கொள்ளாவிடில் இறைவனின் கருணை அவனுக்கு கிட்டுவதில்லை. பிடித்துக்கொண்ட பின்னரே இறைவனின் அருட்கரங்கள் நம்மைக் காக்கின்றன என்பது அவர்கள் நம்பிக்கை. The faith here is one has to call upon god, then god comes to his rescue, how can he rescue you, when u aren't even inclined to invite him?

(வளரும்)

viraajan
3rd June 2009, 06:00 PM
02-06-09

*முதலாவதாக சங்கு சக்கரத்தை தம் உடலில் பொரித்துக்கொள்வது
*இரண்டாவதாக நாராயணனின் பனிரெண்டு நாமாக்களை குறிக்கும் வகையில் பனிரெண்டு இடங்களில் திருமண் (துளசி மாடத்து மண்) காப்பு இட்டுக்கொள்வது.
*மூன்றாவதாக 'தாசன்' என்ற பெயரை தம் பெயருடன் சேர்த்துக்கொள்வது
*நான்காகவதாக 'த்ரயம்-அஷ்டாக்ஷரம்' என்ற மூன்று மந்திரங்களை உபதேசம் பெறுவது. அவையாவன:
"ஓம் நமோ நாராயண
"ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே
"ஸ்ரீமதே நாரயணாய நமஹ"
*ஐந்தாவதாக நாரயணனை வழிபடும் ஆராதனை முறைகளை முறையே குருவிடம் கற்றுப் பெற வேண்டும்.

சார்ம மந்திரமான கீதை மந்திரமும் உபதேசம் பெற வேண்டும். அம்மந்திரம் பின் வருமாறு:

"சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷூச: "

கீதையில் க்ருஷ்ணன் அர்ஜுனனிடம் கருணை கொண்டு கூறுகிறார் " எல்லா தர்மங்களையும் விடுத்து என் ஒருவனை ஷரணம் அடைவாய். உன்னை எல்லா பாபங்களிலினின்றும் நான் காக்கிறேன்".


Thanks ka :D

1st one (highlighted in bold) is Samashanam. What about BharanyAsam? :roll: You have any idea? Why is it not in the list? :oops:


நாம் ஒன்றும் செய்யாவிட்டாலும் கூட காப்பது அவன் கடன் என்ற நம்பிக்கை. சும்மாயிருந்தாலும், நம்பிக்கையற்று இருந்தாலும் முயற்சி கூட எடுக்காவிட்டாலும் காப்பது அவன் கடமை என்கின்றனர்.

வடகலை வைணவத்தினர், மர்கட நியாயப்படி ஷரணாகதி அடைகின்றனர். பகவானை விடாபிடியாக பக்தன் பிடித்துக்கொள்ள வேண்டும். பிடித்துக்கொள்ளாவிடில் இறைவனின் கருணை அவனுக்கு கிட்டுவதில்லை. பிடித்துக்கொண்ட பின்னரே இறைவனின் அருட்கரங்கள் நம்மைக் காக்கின்றன என்பது அவர்கள் நம்பிக்கை. The faith here is one has to call upon god, then god comes to his rescue, how can he rescue you, when u aren't even inclined to invite him?

Same religion. Two different faiths. :) Just cannot understand why is it so! :oops: :(

viraajan
3rd June 2009, 06:04 PM
01-06-09

பி.கு: ரமேஷின் தாயாக நடிக்கும் (!) பெண் ரொம்ப சுமார். ஏகத்திற்கு முகத்தில் உணர்ச்சி கோப்பளிக்கிறது. "இருங்கோ மாமி வரேன்" போன்ற இரண்டணா வசனத்திற்குக் கூட பரதநாட்டியம் ஆடுகிறார். குயிலியே தேவலை! நடிப்பு என்றால் என்ன என்பதை "நீலகண்டனாக நடிக்கும் கோபு" விடம் எல்லோருமே பாடம் கற்கலாம்.

அப்புறம் கிரியின் அம்மா! :evil: இரண்டாம் வகுப்பு மாண்வி மேடை ஏறினால் எப்படி ஒப்பிப்பாளோ அப்படி ஒப்பிக்கிறார்கள். இதற்கு வசனத்தை படித்து விடலாம் :mad:

கோபுவிற்கு அடுத்த மார்க் நளினிக்குத் தான். கச்சிதமான நடிப்பு. அஷோக்-காக நடிக்கும் அஃசர் பாத்திரமாகவே மாறி விட்டான் :clap:

(வளரும்)

Exactly. Just cannot stand her expressions :banghead:

Neelagandan, Ashok, Nathan, Nalini, Maid mami, Uma - :clap: They are all doing their parts well. :bow: Especially Neelagandan. He just plays it with left hand. :clap:

Pathetic show by giri's mom and ramesh's mom. :evil:

Shakthiprabha
3rd June 2009, 06:04 PM
VR,

I aint sure about samashanam and baranyaasam, infact, if you can , please let us know more about these :)

I dont think we need to analyse them as two different school of thoughts. Each person is diff based on their own traits, nature. Whatever is best suited to ur nature and understanding, u tend to form , pave your own path. Ultimately the goal is same.

Shakthiprabha
3rd June 2009, 06:08 PM
Neelagandan, Ashok, Nathan, Nalini, Maid mami, Uma - :clap: They are all doing their parts well. :bow: Especially Neelagandan. He just plays it with left hand. :clap:

I would even count out MAID MAAMI, rest are perfect.

Ashok, neelakantan, nalini, nadhan, uma :thumbsup:


Pathetic show by giri's mom and ramesh's mom. :evil:

:cry: :sigh2:

viraajan
3rd June 2009, 06:17 PM
VR,

I aint sure about samashanam and baranyaasam, infact, if you can , please let us know more about these :)

The one which has been told in 1st point is SamAshanam. Engraving (I'm not sure if i'm using the right word. Like Stamping) the symbols Sangu and Chakram on our shoulders. This has to be done only by the guru "Jeeyar" :)

Next stage is BharanyAsam. Again, only Jeeyar can perform this process. This is more like Mantra Upadesam. Only those who have undergone Samashanam process are eligible for this. But restrictions for people who undergo "BharanyAsam" are very high. They should not eat outside (in hotels or in other houses). They can only have fruits, vegetables, water and milk outside. They should not eat vegetables like onion, garlic, drumstick and so on. Few more conditions are there :)

Reason for BharanyAsam: It is believed that if one does "BharanyAsam", all his sins are nullified in this birth itself and he will not take births anymore. He is given "MOtcham". :bow:

Let me check with my uncle and explain in detail. :)


I dont think we need to analyse them as two different school of thoughts. Each person is diff based on their own traits, nature. Whatever is suited to ur nature and understanding, u tend to form , pave your own path. Ultimately the goal is same.

Thanks ka :ty:

Shakthiprabha
3rd June 2009, 06:19 PM
Interesting vr :) do let us know more. Ive heard few known people talk about these things esp about the rules to be followed :)

viraajan
3rd June 2009, 06:21 PM
Another interesting fact:

During the "BharanyAsam" process, the person will be asked to fall at Jeeyar's feet. He should do this continuously until Jeeyar asks to stop. This may go on for hours :shock: It's believed that, he will ask us to stop only when Perumal nods his head i.e "Uththaravu".

viraajan
3rd June 2009, 06:22 PM
Interesting vr :) do let us know more. Ive heard few known people talk about these things esp about the rules to be followed :)

:cool2:

Will update you all soon!!! :)

Shakthiprabha
3rd June 2009, 06:31 PM
Another interesting fact:

During the "BharanyAsam" process, the person will be asked to fall at Jeeyar's feet. He should do this continuously until Jeeyar asks to stop. This may go on for hours :shock: It's believed that, he will ask us to stop only when Perumal nods his head i.e "Uththaravu".

:shock: :|

viraajan
3rd June 2009, 06:44 PM
Another interesting fact:

During the "BharanyAsam" process, the person will be asked to fall at Jeeyar's feet. He should do this continuously until Jeeyar asks to stop. This may go on for hours :shock: It's believed that, he will ask us to stop only when Perumal nods his head i.e "Uththaravu".

:shock: :|

I'm sorry. One small correction!! :oops:

The person does not fall at Jeeyar's feet. The person and Jeeyar together fall at perumal sannidhi. :oops:

Belief: Aacharyan (Jeeyar) takes all our sin. :cry2:

Shakthiprabha
3rd June 2009, 06:48 PM
hmm :)

aanaa
4th June 2009, 12:16 AM
Thank you SP

aanaa
4th June 2009, 12:25 AM
June 01, 2009


Thanks to IsaiTamilNet - Prabhu

[html:8f922357e1]<div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13763593&vid=5212589&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9205/86649176.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13763593&vid=5212589&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9205/86649176.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:8f922357e1]

aanaa
4th June 2009, 12:29 AM
June 02, 2009


Thanks to IsaiTamilNet - Prabhu

[html:0816e3fc26]<div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13783034&vid=5221239&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9228/86724642.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13783034&vid=5221239&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9228/86724642.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:0816e3fc26]

viraajan
5th June 2009, 02:13 PM
தென்கலை, வடகலை - இந்த இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் மட்டம் தட்டி பேசுவதில் வல்லவர்கள்.

காஞ்சிபுரத்தில் ஒரு கோயிலில், யானைக்கு பட்டை போடுவதா, நாமம் போடுவதா என்ற ப்ரச்னை எழுந்தது அனைவரும் அறிந்ததே.

ஆனால் புதிதாய் கட்டப்பட்டு வரும் எத்தனையோ பெருமாள் கோயில்களில் வடகலை நாமம் போடுவதா, தென்கலை நாமம் போடுவதா என்ற பிரச்னை இன்னமும் எழுந்து கொண்டுதான் இருக்கிறது என்பது வேதனையான விஷயம். :(

Shakthiprabha
5th June 2009, 02:38 PM
vr,



தென்கலை, வடகலை - இந்த இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் மட்டம் தட்டி பேசுவதில் வல்லவர்கள்.

andha kovil yaanaikku enna naamam potta enna! podatti enna! viboothi potta enna! veruma vitta enna :lol2: ???!?!?


Its not new with thenkalai vadakalai alone. Its prevelant amidst,

* athiest- theists
* advaitha-dwaita-other philosoical schools
* vadama, vathima, bruhacharanam sects
* mudhaliyar, chettiyar, brahmins,other sects
* hindus muslims, sikhs, christians
* north india - south india
* india , pakistan
* racisms black-white

Does it ever stop? To belittle others in the name of sects or caste or creed or race?

Any given member of "a" sect feels he is superior to "b" sect. Its sad such differentiation and ego of superiority follows even when in spiritual enquiry, leave alone religious discrimination of forgettign the goal and catch the path. Like IVe mentioned in another thread, its similar to holding the leaves and forgetting the root.

But,

This is the way world would function. This is the way its designed to function. We have to live with it :)

Unless one is a yogin who is UNAFFECTED by these or lives a secluded life (theoritically or practically)

viraajan
5th June 2009, 02:47 PM
Yeah I agree with you akka. It's there everywhere. This kinda ego is prevalent in every field. :)

But the reason why I quoted this here is,

Vadakalai, Thenkalai - they both belong to same religion, they follow same god, but still the fight exists. :(

Yes, in Iyer vadama, vathima sections. they do have similar fights. :(

Shakthiprabha
5th June 2009, 02:52 PM
////Vadakalai, Thenkalai - they both belong to same religion, they follow same god, but still the fight exists////

Fights nnu solla mudiyathu vr, its
*nee periyavana naan periyavana?
*en karuthu usandhadha un karuthu usandhadha?
*Am I superior in knowledge or are u superior in knowledge?

Its there even in our very house!... orE veedu...orE religion, orE cult, orE analogy and beliefs (almost) irunthaalum...analyse and see. Dont 2 brothers fight? naan usathiya nee usathiya? even 2 kids... say 3 year olds? bommai enakku unakku! naan sonnathu thaan right, nee solrathu thappu!...

it goes on n on. It happens right from INDIVIDUAL to INDIVIDUAL, then a bigger clan of sect, religion, country, race... (anything else?)

Mind/ego plays the maaya, and NO being can escape the falter unless he is beyond these.

viraajan
5th June 2009, 02:58 PM
Andha Ego clash, superior feeling - idha thaan i referred as fights :oops:

In our area, once upon a time, this ego clash turned into real fight (not violence) :oops: The group of people who put their heart and soul in building a perumal temple had to step out of the temple after being insulted so much :cry2:

Shakthiprabha
5th June 2009, 09:05 PM
[tscii:2a725d37f8]03-06-09
________


சமஸ்க்ருதம் தேவ மொழி / தெய்வ மொழி என்று சொல்வதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. எல்லா மொழியுமே உயர்ந்த மொழிகள் தாம். எல்லா மொழியிலும் உயர்ந்த இலக்கியங்கள் புனையப்பட்டிருக்கின்றன. மொழி என்பது உணர்வுகளை எண்ணங்களை வெளிப்படுத்தும் சாதனம் என்பதைத் தாண்டி உயிரினும் மேலாக மதிப்பதற்கு இது தான் காரணம். கலைகளை இலக்கியங்களை கருத்துக்களை அவரவர் தாய் மொழியில் அறியும் பொழுது, புரியும் பொழுது, மொழி உயர்ந்த இடத்தில் அமர்த்தப்படுகிறது. அப்புறம் சமஸ்க்ருதத்திற்கு மட்டும் ஏன் தேவ மொழி என்று பெயராம்?

தேவர்களை கீர்வாணர் என்று விளிப்பதுண்டு. அவர்களால் பேசப்படும் சமஸ்க்ருதத்திற்கும் கைர்வாணி என்ற பெயர் உண்டு. தேவ ரகசியங்களும் மனிதனுக்கு சொல்லப்பட்ட மொழி சமஸ்க்ருதம். வேதங்கள் உபநிஷதங்கள் ப்ரம்ம ஞானங்கள், பாகவதம், கீதை முதலியவை உணர்த்தப்பட்ட மொழி சமஸ்க்ருதம். சமஸ்க்ருதம் என்றால் நன்றாக சொல்லப்பட்டது என்று பொருளாம். பேசு தொனிகள் அத்தனையும் எழுத்தில் வந்து விடுவதால், ஒவ்வொரு அசைவிற்கும் அக்ஷரத்திற்கும் மாத்திரைக்கும் எழுத்து வடிவம் உண்டு. இந்த சிறப்பு பல மொழிகளில் இல்லை (IF I am not wrong, I supp, hindi also has its script intact with the way its pronounced :? I dont know about any other language and my knowledge is limited).

இவ்வாறாக ஹிந்து மதத்திற்குறிய ஸ்லோகங்களும் பலவும் சமஸ்ருதத்திலேயே சொல்லப்பட்டிருப்பதால், யாகங்கள் யக்ஞங்களுக்கு சமஸ்க்ருதம் ஏதுவான மொழியாய் திகழ்கிறது. ஸ்லோகங்கள் சொல்லப்படும் போது த்வனி மாறினால் அர்த்தங்கள் மாறுபடும். அதனால் அதை திரும்பச் சொல்லவும் சரியான மொழியாய் சமஸ்க்ருதமே திகழ்கிறது. இருப்பினும், தாய்மொழியில் ஒருவனுக்கு இருக்கும் வன்மையோ புரிதலோ உணர்வோ மகிழ்ச்சியோ மற்ற மொழி பேசும் போது மட்டுப்படுகிறது.

இதனாலேயே சம்ஸ்க்ருதத்தைத் தவிர தாய்மொழி கற்பதும் அதைப் படித்து உணர்வதும் மிகவும் அவசியமாகிறது. அதன் மூலம் சமஸ்க்ருதத்தில் சொல்லப்பட்டிருக்கும் பொருள் இன்னமும் உணர்வு பூர்வமாய் அறிவு பூர்வமாய் விளங்கும் வாய்ப்பு உண்டு. அதே போல் தாய்மொழி மட்டும் கற்றுக்கொண்டு சமஸ்க்ருதத்தை கற்காமல் இருப்பதால் நட்டம் அதிகம். உயர்வான பல இலக்கியங்கள் உண்மைகள் கருத்துக்கள் விளங்காமலே போய்விடும்.

நம் தாய்மொழியாம் தமிழிலும் உயர்ந்த பக்தி இலக்கியங்கள் மெத்த நிரம்பியுள்ளன. திவ்யப்பிரபந்தம், தேவாரம், திருவாசகம் போன்ற உயர்ந்த நூல்கள் அரிய கருத்துக்களை, ஞானத்தை, பக்தியை முன் வைக்கிறது.

பாரதி தம் கவிதையில் தமிழையும் சமஸ்க்ருதத்தையும் ஒன்றாய் உயர்த்தியதாய் கவிதை வருகிறது.

“ஆதிசிவன் பெற்றுவிட்டான் என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே
நிறைமேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்.

மூன்று குலத்தமிழ் மன்னர் என்னை
மூண்ட நல்லன்பொடு நித்தம் வளர்த்தார்.
ஆன்ற மொழிகளினுள்ளே உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்”

வேதத்தை மதித்த தமிழ்நாடு என்பதாலேயே பாரதி "வேதம் நிறைந்த தமிழ்நாடு" என்று பாடியுள்ளான். கல்வெட்டுக்களில் சிலது சமஸ்க்ருதத்தில் அரசர்கள் புகழ் பாடுவதையும், அவர்கள் சரித்திரம் சொல்வதையும் காணலாம். திருவள்ளுவர் பல இடங்களில் வேதம் சொல்லும் கருத்துக்களுக்கு ஒப்பு குறள் வழங்கியுள்ளார். மஹாபாரதப்போர் காலத்திலும் கூட பாண்டியனும், சோழனும் பாண்டவர்களுக்காக போரிட்ட செய்தி வரலாறு உண்டு. பல தமிழ் மன்னர்கள் யாகங்களும் வேள்விகளும் செய்ததாகவும், யாகம் செய்தவர்களைக் காத்ததாகவும் வரலாறு கூறுகிறது. பெருஞ்சோற்று ஊதியன் என்ற பெயர் சேரலாதன் என்ற சேர மன்னனுக்கு உண்டாம். அவன் மஹாபாரதப் போரில் இரு தரப்புப் படையினருக்கும் உணவு வழங்கியதால் இது காரணப்பெயர் ஆகியது.

சமஸ்க்ருதத்தில் அந்தந்த தேவதைக்குறிய ஸ்லோகங்கள் பல இருப்பினும் கோவில்களிலோ வீடுகளில்லோ பூஜைகளுக்குப் பின் பொதுவான மந்த்ரம் ஒன்றைச் சொல்வது வழக்கம். இம்மந்திரம் எல்லார் நன்மையின் பொருட்டும் உலக நன்மையின் பொருட்டும் ஓதப்படுவது. இந்த ஸ்லோகம் தைத்ரிய உபநிஷதத்தில் வருகிறது. இதன் பொருளைப் பற்றி நேற்றைய தொடரில் விளக்கினார்கள்.

"மித்ரதேவனும், வருணனும், இந்திரனும், அரியமானும், நன்மை புரியட்டும். நான் விஷ்ணுவை, ப்ரம்மனை, வணங்குகிறேன். எம்மையும் எமது ஆச்சார்யரையும் காப்பாற்றுவாயாக. வாயுதேவனே உன்னையே நான் பிரம்மமாக நினைக்கிறேன். உன்னையே சத்தியமாகவும் ருதமாக காண்கிறேன். எல்லோர் / (உலக) நன்மைக்காகவும் வணங்குகிறேன்."

ஷம்னோ மித்ரஸ்யம் வருண:
ஷம்னோ பவத்வர்யமான்
ஷம்ன இந்த்ரோ ப்ருஹஸ்பதி:
ஷம்னோ விஷ்ணு ருருக்ரமஹ:
நமோ ப்ரம்மணே
நமஸ்தே வாயு
த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி.
த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி
ருதம் வதிஷ்யாமி
சத்யம் வதிஷ்யாமி
தன்மாமவது தத்வக்தாரமவது
அவதுமாம்
அவதுவக்தாரம்
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி:

{மித்ரன் என்பவன் பகலுக்கு அதிபதி
வருணன் இரவுக்கு அதிபதி
இந்திரன் வலிமைக்கு அதிபதி
அரியமான் சூரியனின் தேவன் - எனக் கருதப்படுகிறார்கள். }

(வளரும்)
[/tscii:2a725d37f8]

viraajan
5th June 2009, 09:21 PM
:ty: Sp akka :)

Shakthiprabha
5th June 2009, 09:58 PM
04-06-09

மெல்ல மெல்ல வலை பின்னப்பட்டு எல்லா கதாபாத்திரங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்துயிருக்கிறார்கள். நடேச முதலியாரின் இரண்டாவது பெண் ஷோபனா வையாபுரியின் மகன் பெருமாளைக் காதலிக்கிறாள். ஜாதிவிட்டு ஜாதி கல்யாணத்தை நடேச முதலியார் எதிர்க்கிறார். இது தொடர்பாக முதலில் வையாபுரியைப் பார்த்துப் பேச சார்யார் விழைகிறார்.

உமாவின் வருங்கால கணவனாக வரவிருக்கும் ரமேஷ், முறைப்படி திருமணம் செய்விப்பதற்கு முன்பே திருமணத்தை பதிவு செய்ய ஆவன செய்கிறான். அதற்கு சற்றே குழப்பத்துடன் நீலகண்டன் தம்பதியர் உடன்படுகின்றனர். உமா திருமண விஷயத்தில் அபிப்பிராயம் பெற நாதனை நாடுகிறார் நீலகண்டன். நல்ல காரியங்கள் பேச வரும் போது தடை சொல்வது பெரும்பாலும் நடவாது. முன்பொரு பகுதியில் இக்ஷிணி தேவதைகளைப் பற்றி குறிப்பிட்டிருந்ததைப் போல், எண்ணங்களுக்கும் சொல்லுக்கு பலம் அதிகம். அதனாலேயே "நல்லதை நினை, நல்லதையே பேசு" என்று வலியுறுத்திகிறார்கள். நல்ல விஷயங்கள் பேச வரும் போது அல்லதாக பேசுவதை அபசகுனமாக கருதுகிறார்கள். நல்ல வாக்கு பிறருக்கு மகிழ்ச்சி தரக்கூடும் என்பதால் நல்லது நடக்குமா நடக்காதா, சரியா தவறா என்றெல்லாம் ஆராயாமலே பேசுவிடுகிறோம். உடல் நலம் குன்றிய ஒருவரிடம், அவர் மரணப்படுக்கையிலும் "நீ பூரண குணம் பெறுவாய்" என்று ஆறுதல் வழங்குவதும் இவ்வகையைச் சார்ந்தது. ரமேஷின் போக்கும் செய்கையும் திருப்தியாக இல்லை என்பதை பலர் உணர்ந்திருப்பார்கள். (நிறைய சினிமா பர்த்தாகிவிட்டது!!) என்ன நடக்கிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

சார்யாருடன் அஷோக் வேதபாடசாலைக்குச் செல்கிறான். அந்த சூழலும் இருப்பும் அவனுக்கு மிகவும் பிடித்துப்போகிறது. ஷங்கர் என்ற வேதபாடசாலை மாணவனை நண்பனாகப் பெறுகிறான். அவன் உயர் அதிகாரி ஒருவரின் மகன் என்பதை நாதனாலோ வசுமதியாலோ எளிதில் ஜீரணிக்க முடியவில்லை. இளம் வாலிபன் வேதம் கற்கிறான் என்றால், "உங்கப்பா எங்க குருக்களா இருக்கார்? அனாதையா? வைதீக பிராமணரா? வசதி போதாதவனா" போன்ற "அய்யோ-பாவ" தொனியில் கேள்விகள் இன்றைய காலகட்டத்தில் பலரின் மனதிலும் எழும்புகிறது. வேறு துறைகளைக்கு கல்விகற்க செல்வதால் வருமானம் ஈட்ட முடிகிறது, இத்துறையில் வருமானம் குறைவு, பொது அங்கீகாரமும் மரியாதை மதிப்பும் குறைந்து விட்டது என்பதாலேயே பலரும் ஒதுக்கி வரும் நிலைக்கு இன்றைக்கு வேதம் தளர்ந்து நிற்கிறது வேதனைக்குறியது.

(வளரும்)

aanaa
5th June 2009, 10:52 PM
[tscii:0e9642672a]03-06-09
________

ஸ்லோகங்கள் சொல்லப்படும் போது த்வனி மாறினால் அர்த்தங்கள் மாறுபடும்.

...

திவ்யப்பிரபந்தம், தேவாரம், திருவாசகம் போன்ற உயர்ந்த நூல்கள் அரிய கருத்துக்களை, ஞானத்தை, பக்தியை முன் வைக்கிறது.

(வளரும்)
[/tscii:0e9642672a]

:ty: SP

aanaa
5th June 2009, 10:53 PM
04-06-09

மெல்ல மெல்ல வலை பின்னப்பட்டு எல்லா கதாபாத்திரங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்துயிருக்கிறார்கள்.

(வளரும்)

again
:ty: SP

aanaa
5th June 2009, 10:53 PM
Shakthiprabha
Senior Hubber


Joined: 21 May 2009
Posts: 565
Location: Vagabond


what happened ????

aanaa
5th June 2009, 10:55 PM
June 03, 2009



Thanks for IsaiTamilNet - Prabhu




[html:86227606c4]<div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13802388&vid=5229307&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9247/86796208.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13802388&vid=5229307&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9247/86796208.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:86227606c4]

aanaa
5th June 2009, 10:56 PM
June 04-2009


Thanks for IsaiTamilNet -- Prabhu


[html:06a177968c] <div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13819910&vid=5235923&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9266/86856532.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13819910&vid=5235923&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9266/86856532.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:06a177968c]

aanaa
7th June 2009, 07:06 PM
ஒரு மாறுதலுக்காக
சிவனின் 108 நாமங்கள்:

[html:4f242ee461]<div align="center"><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/OwrZ8aJBcyA&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/OwrZ8aJBcyA&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object></div>[/html:4f242ee461]

Shakthiprabha
8th June 2009, 10:43 AM
ஒரு மாறுதலுக்காக
சிவனின் 108 நாமங்கள்:



:ty: :bow:




Shakthiprabha
Senior Hubber


Joined: 21 May 2009
Posts: 565
Location: Vagabond


what happened ????

Hehe! simply recreated my id. :D

Shakthiprabha
8th June 2009, 11:44 AM
05-06-09

பெண்கள் பலவீனமானவர்களா? என்ற கேள்விக்கு நம்மில் பலரும், "ஆம்" எனச் சொல்லக்கூடும். உடல்-பலம் மட்டு பட்டவர்கள் என்ற அர்த்தத்தில் அமையும் பதிலது. இன்னும் சிலரோ, பெண்களுக்குப் பொறுமை அதிகம், சோதனைகளை எளிதில் ஜீரணித்து மீண்டு எழும் மனவலிமை அதிகம் படைத்தவர்கள் என்றும் கூறுவர். அதனால் பெண்கள் உடலால் பலவீனமானவர்களாக இருப்பினும் உண்மையில் அதிகம் மனோபலம் உள்ளவர்கள் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

இருப்பினும் பீஷ்மர் தர்மருக்கு உபதேசித்த மொழிகளில் பெண்களை எப்படி கையாள்வது என்று பேசும் போது, பெண்கள் பலவீனமானவர்கள் என்று கூறுகிறாராம். எப்படிப்பட்ட பலவீனம்? மனவலிமையில் மட்டுப்பட்டவர்கள். ஆசை அதிகம் அமையப்பெறுவதால் அடக்க ஆள முடியாதவர்கள். நன்றி உணர்வு இயல்பிலேயே அதிகம் இருக்கப்பெறாதவர்கள். எளிதில் உணர்ச்சிக்கு அடிமையாகக் கூடியவர்கள் அதனால் அவர்களை காப்பது அவசியம். அவர்கள் மனதை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். அவர்களை கோபித்தோ அடக்கியோ ஆளாமல் அன்பால் ஆளப்பட வேண்டியவர்கள். (here comes the grand idea of keeping one's spouse happy! and satisfying all her needs n fancies!)

எல்லா பெண்களும் அப்படியல்ல. பொதுப்படையாக முடிவு கட்டிவிட முடியாது. சத்துவ குணம் படைத்த பெண்டிர் இருக்கவும் செய்கிறார்கள், இருப்பினும் பெண்கள் அதிக சதவிகிதம் மேற் சொன்ன வகையில் அடங்கியவர்கள்.

இதை விளக்கும் வகையில் தேவஷர்மா எனும் ரிஷியின் கதையை பீஷ்மர் கூறுகிறார். தேவஷர்மாவின் மனைவி ருசி மிகவும் அழகானவள். அவள் அழகில் இந்திரன் மயங்கியிருப்பதால், தேவஷர்மா குடிலில் இல்லாத நேரம் பார்த்து இந்திரன் ருசியின் பலவீனத்தை பயன்படுத்தி ஆசையை கிளறி விடக்கூடும் என்று அபிப்ராயப்படுவதால், தம் சிஷ்யனான விபுலனை ருசியை பாதுகாக்கும் படி கூறுகிறார். விபுலன் ருசியின் உடலில் புகுந்து, இந்திரன் வரும் போது, ருசி விரட்டுவதைப் போல் விரட்டிவிடுகிறான். இந்திரனும், விபுலன் ருசியின் உடலில் புகுந்து விட்டதால் இனி தன் ஆசை நிறைவேறாது என்று புரிந்து கொண்டு சென்று விடுகிறானாம். ருசியின் உடலில் புகுந்ததை தேவஷர்மாவிடம் முதலில் விபுலன் மறைக்கிறான். பின் அவர் அதைக் கண்டுணர்ந்து, உன் எண்ணம் நல்லனவாக இருப்பதால், உன்னை நான் மன்னித்தேன், இனி உண்மையை மறைக்கும் பாவத்தை செய்யதே என்று எச்சரிக்கிறார். மேற்சொன்னக் கதையை தர்மருக்கு பீஷ்மர் பகிர்ந்து, பெண்கள் பலவீனங்கள் அதிகம் உள்ளவர்கள் என்பதை எடுத்துரைக்கிறாராம்.

அஷோக் அவ்வப்பொழுது வேதபாடசாலைக்கு சென்று வருகிறான். அவனுக்கு ஷங்கருக்கும் நட்பு மலரத்துவங்குகிறது. சாம்பு சாஸ்திரிகள் வேதம் தழைக்கவும், ஏழை மாணவர்கள் வேதம், சமஸ்க்ருதம் கற்கவும் நிலைமைக்கு மீறி உதவுவதையும், பாடுபடுவதையும் கேட்டு நெகிழ்ந்து போகிறான்
அஷோக்.

அனைத்து வகைக் கல்விக்கும் பாடசாலைகள் தேவைக்கு அதிகமாகவே இருந்தாலும், வேதம் கற்க வேதபாடசாலைகள் அதிகம் நிறுவப்படுவதில்லை என்று சாம்பு சாஸ்த்ரிகள் மனம் வருத்தப்படுகிறார். "தடாகம் இல்லை என்பதால் தாகம் எடுக்காமல் இருக்குமா? தாகம் எடுப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்" என்று அவர் கூறுவது அக்ஷர லக்ஷம் பெறும். kudos to script writer :clap:

(வளரும்)

பி.கு: I fail to understand why kuyili char and even nadhan or anyone else at times estimate ashok as some DUMB person who fail to posses even normal intelligence. They are supposedly to have enough sense to understand that he was a rank holder (even in practical academics) in university and doesn't talk nonsense when ppl are around. "அந்த அசடுக்கு கையெழுத்து போட தெரியுமா" dialogue is way too much to estimate someone who is not in someone else's mental arena or frame of mind. When things which are spoken by a particular person is NOT IN SOMEONE's reach they can be eccentric but not dumb. If kuyili char fails to understaznd the diff, Its surprising she is religious and belives god :?

aanaa
8th June 2009, 09:20 PM
05-06-09

பெண்கள் பலவீனமானவர்களா? .

-----
தேவஷர்மாவின் மனைவி ருசி மிகவும் அழகானவள்
......

-----
kudos to script writer :clap:

(வளரும்)

?



:ty:

aanaa
8th June 2009, 09:27 PM
June 05- 2009




Thanks to IsaiTamilNet - Prabhu




[html:4854b3e73c]<div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13847036&vid=5247284&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9293/86957313.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13847036&vid=5247284&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9293/86957313.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:4854b3e73c]

Shakthiprabha
10th June 2009, 10:52 AM
08-06-09

தொன்று தொட்ட காலம் முதல் இன்று வரை, இடைவிடாது கேட்கப்பட்ட கேள்வி, கேட்கப்படும் கேள்வி பிராமணன் என்பவன் யார் என்பது தான். இத்தொடரின் நாயகன் வசிஷ்டனும் கூட, மாயையை மீண்டும் உடுத்திக்கொண்டு உலகிற்கு பிராமணன் என்றால் யார் என்ற விடையளிக்கவே தோன்றியிருக்கிறான். அப்படிப்பட்ட முக்கியக் கேள்வியா இது? என்றால், "ஆம்" என்பது தான் பதில்.

பிரம்மத்தை துதிப்பவன் எப்பேற்பட்டவன், எத்தகைய குணங்களை உடையவன். அவன் அருகதை என்ன, அவனின் அறிவு எப்படிப்பட்டது என்பதை உணர இக்கேள்வி மீண்டும் மீண்டும் ஒலிக்கப்படுகிறது. ஏனெனில் இப்படிப்பட்ட மனிதன் பிரம்மத்தை உணர முடிந்தவன், நுகர்ந்தவன் என்பதால் அவனை உயர்த்துகின்றனர். அவன் இறையறிவு பெறுகிறான் என்பதால் அவனை ஆசனத்தில் அமர்த்துகின்றனர். அவ்வப்பொழுது மங்கப்பட்ட அறிவு மயங்கி தவறான முடிவுக்கு வருகிறது. வர்ண முறையை பிறப்பினால் அறிந்து கொள்கிறது. இது பிறப்பினால் வருவதல்ல, என்று வலியுறுத்தப்பட்டாலும், ஜாதி என்ற போர்வை சமூகத்தில் அடர்ந்து போர்த்தப்பட்டுள்ளதால் உண்மை விளக்கம் தெளிவு பெறுவது பலராலும் முடியாமல் போகிறது.

உண்மையான பிராமணன் என்பதைப் போல் உண்மையான க்ஷத்ரியன் யார், வைசியன் யார் என்றெல்லாம் ஆராய்ந்தால் அவரவர் தொழில் தர்மப்படியும், இயல்பினாலேயே அவர்களுக்குறிய குணாதிசயங்களைக் கொண்டும், ஈடுபாடுகளை நிலைநிறுத்தியும் அறியப்படவேண்டியது.

மஹாபாரதத்தில் பல இடங்களில் "யார் பிராமணன்" என்ற கேள்வி எழுகிறது. i.e. எழுப்பப்படுகிறது. அதற்கு தக்க பதிலும் உரைக்கப்படுகிறது. யக்க்ஷ ப்ரஷ்னத்தில் யக்ஷனாக தோன்றி தர்மதேவன், யுதிஷ்டிரனை தொடர் கேள்விகள் கேட்கிறான்.

அக்கேள்விகளுள் ஒன்று "எவன் பிராமணன்"

அதற்கு யுதிஷ்டிரனும் " எவன் ஒருவன் ஒழுக்கம் தவறாது, இருக்கிறானோ, இந்த்ரியங்களை அடக்கி ஆள்பவனாய் இருக்கிறானோ, அவனுடைய ஆர்வம் பிரம்ம ஞானத்தில் நிலையாய் இருக்கிறதோ அவன் பிராமணன், அவன் பிறப்பினால் அறியப்படுபவன் அல்ல" என பதிலளிக்கிறான்.

அதே போல் நகுஷன் என்பவன் மலைப்பாம்பின் வடிவில் பீமனை பற்றிவிடுகிறான். அவனிடம் கேட்கப்படும் கேள்வி "பிராமணனை எப்படி அறிவாய்" பீமனும் சொல்வதாவது: "எவனிடம் பொறுமை, ஒழுக்கம், இரக்கம், தவம், உண்மை, தயாள குணம் இருக்கிறதோ அவனை பிராமணனாக அறியலாம்" காலத்தின் போக்கில் (ஆதி காலம் முதல்) வர்ணக்கலப்பு அவ்வபொழுது ஏற்பட்டு விடும். ச்வதர்மங்கள் கலந்து விடும். அதனால் பிறப்பினால் ஒருவனின் வர்ணம் நிர்ணயிக்க முடியாதது என்பதே கண்கூடு. என்கிறது மஹாபாரதம்.

கீதையில் கண்ணன் கூறுவதும் இதற்கு சான்று.


"சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஷ:
தஸ்ய கர்தாரம் அபி மாம் வித்யாகர்தாரம் அவ்யயம்"

chathurvarNyam maya srushtam guna karma vibhagasha:
thasya karthaaram api maam viththyakarthaaram avyayam

It was me who created the four varnas and their jobs as per a being's nature and activities. Me being the creator of these divisions, one should still understand that I am the non-performer and the unchangeable. (the division is hence based on nature and their attitude and not by birth, can be quite clearly understood)

நான்கு வர்ணங்களை உருவாக்கியவன் நானே. ஒருவனின் குணத்திற்கும் கர்மத்திற்கும் செயலுக்கும் ஏற்றவாறு நான் உருவாக்கினேன். அவற்றை நான் படைத்திருப்பினும், நான் செயலற்றவன், அழிவற்றவன் என்று உணர்.

எத்தனை பேசினாலும் படித்தாலும், புரிந்துணர்ந்தாலும், விழலுக்கு இறைத்த நீராய் சில நேரங்களில் மனதில் மாயை குடிகொண்டு விடுகிறது. அதே போல் உலகில் புரிந்துணர்ந்த பேர்கள் மத்தியிலேயே பிறப்பினால் நாமே வகுத்துக்கொள்ளும் ஜாதியை விட்டொழிக்க முடிவதில்லை. தாழ்ந்த வகுப்பு என்ற நாமே நிர்ணயிக்கும் வகுப்பில் ஒருவன் பிறந்தானென்றால், அவனின் மதிப்பு மட்டுப்படுத்தப்படுகிறது வேதனைக்குறிய விஷயம்.

ராமானுஜரிடம் தாழ்ந்த வகுப்பில் பிறந்ததால் தாழ்ச்சியாகக் கருந்தப்படுகிறான் "உறங்காவிழி தாசன்" எனும் சீடன். ராமானுஜர் அவனின் பெருமையை தயாள குணத்தை, கொடைத்தன்மையை ஞானத்தை செயலால் மற்றோருக்கு எடுத்துணர்த்தியதாக சொல்வதுண்டு. அந்நாளிலேயே ஆலயத்தில் தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவர்களை உள்ளே அனுமதிக்குமாறு செய்து ஹரிஜனப்பிரவேசம் செய்தார். நடைமுறை வாழ்வில், ஞானிகள் அல்லாத சாதாரண பிரஜைகளிடையே இந்த ஞானத்தை வளர்க்க உதவியவர் இராமனுஜர்.

ஜாதி எப்படி உருவாகிறது என்று நடேச முதலியாருக்கு டாக்டர் சொல்வது ரசிக்க முடிந்தது. மருத்துவர்கள் மருத்துவர்களுடனேயே சம்பந்தம் செய்து கொண்டிருந்தால், வக்கீல்கள் வக்கீல்களுடனேயே தொடர்பு வைத்திருந்தால் மெதுவாக வக்கீல் ஜாதி, மருத்துவ ஜாதி என்று உருவாகி விடும். அப்படித்தான் பல காலமாக, பிறப்பினால் இன்ன ஜாதி என்று முடிவு செய்து, பிறப்பினால் அதே ஜாதியைச் சேர்ந்த ஒருவருடனேயே தொடர்பு வைத்திருந்து ஜாதி பேதங்களை வளர்த்து விட்டிருக்கக்கூடும் என்பது வரவேற்கக்கூடிய sensible கருத்து.

நடேச முதலியார் ஜாதி விட்டு திருமணம் செய்ய முடியாது என பிடிவாதமாக இருக்கிறார். மன்றமய்யத்து நண்பர் "waterloo" கூறியது போல் சார்யாரை பரிக்ஷிக்க, டாக்டர் சாரியாரின் குழந்தையும் வையாபுரியும் குழந்தையும் பல வருடங்களுக்கு முன் பிரசவத்தின் போது மாற்றப்பட்டுவிட்டது என்று உணர்த்துகிறார். அதைக் கேட்டு சற்றே தளர்ந்துவிடுகிறார் சார்யார்.

(வளரும்)

Shakthiprabha
10th June 2009, 12:07 PM
09-06-09

உமாவின் பதிவுத்திருமணம் குறித்த காட்சிகள் அதிகம் இருந்தன. ரமேஷ் விளையாட்டு போல் அவனுக்கு அஷோக் மீதிருந்த அதிருப்தியை வெளியிடுகிறான். அவளை கண்காணிக்கப்போவதாகக் கூறுகிறான். அடடா இவன் திருமணத்திற்கு முன்பே என்னை சந்தேகிக்கிறானே என நினைக்கிறாள் உமா. (உமாவின் வீட்டாரைத் தவிர ஏறக்குறைய நேயர்கள் உட்பட எல்லோருக்கும் ரமேஷ் கதாபாத்திரம் ஏதோ தில்லுமுல்லு என்று புரிந்து விட்டது)

யேசுவின் பனிரெண்டு பிரதம சீடர்களுள் ஒருவர் தாமஸ். இயேசு உயர்த்தெழுந்தார் என்பதை அவர் நம்ப மறுத்துவிட்டாரம். அதன் பின் யேசுவை கண்டு தொட்டு உணர்ந்து பின்னரே அவர் உயிர்த்தெழுந்தார் என நம்பினார். இயேசுவும், "நீ என்னை பார்த்ததால் நம்பினாய், என்னை பார்க்காமலேயே நான் இறைத் தூதன் என்பதை நம்பியவன் புனிதமடைந்தவன்" என்கிறார் என பைபிள் கூறுகிறது.

http://www.reformedonline.com/view/reformedonline/9convincingthomas.htm

(do check out the link, its interesting)

அஷோக்கிற்கு உமாவின் திருமணம் ஜாதகம் பாராமல் நிச்சயிக்கப்பட்ட விஷயம் ஏனோ நெருடுகிறது. ஜாதகங்கள் பெரியதாய் உண்மையைக் கூறிவிடும் வாய்ப்பு இல்லை என்பது போல் சோ-வின் உரையாடல் அமைந்திருந்தது. எல்லாவற்றையுமே கணிக்க முடிந்துவிட்டால், ஜோதிடர்களே இறை ஆகிவிடக்கூடும் அல்லவா!!?! துல்லியமான பிறப்பு நேரம் நாழிகை, ஜாதகம் கணித்தவரின் திறன் முதலியவை பொருத்தே ஜாதகத்தின் தரம் அமையும். இதனால் ஜாதகத்தை ஒரு பொருட்டாக கருதாமல் திருமணம் செய்யலாம் என்பது சில சாராரின் கருத்து. ஜோதிடத்தில் கரைகண்ட பெரிய ஜோதிடர்களுக்கும் கூட அவரவர் இறுதி நிலைகள், இறப்பு முதலியவைகள் கண்களுக்கு மறைக்கப்பட்டு விடும் என்று கூறுவர். அதே போல் இன்னொருவரின் ஆயுள் பற்றிய கணிப்பும் எளிதில் சொல்லிவிட இயலாதது.

(வளாரும்)

aanaa
10th June 2009, 05:49 PM
08-06-09
அக்கேள்விகளுள் ஒன்று "எவன் பிராமணன்"

அதற்கு யுதிஷ்டிரனும் " எவன் ஒருவன் ஒழுக்கம் தவறாது, இருக்கிறானோ, இந்தியங்களை அடக்கி ஆள்பவனாய் இருக்கிறானோ, அவனுடைய ஆர்வம் பிரம்ம ஞானத்தில் நிலையாய் இருக்கிறதோ அவன் பிராமணன், அவன் பிறப்பினால் அறியப்படுபவன் அல்ல" என பதிலளிக்கிறான்.

(வளரும்)[/quote]

:ty:

aanaa
10th June 2009, 05:50 PM
09-06-09


http://www.reformedonline.com/view/reformedonline/9convincingthomas.htm

(do check out the link, its interesting)



(வளாரும்)

:exactly: :cool2:

:ty:

aanaa
10th June 2009, 05:59 PM
June 08 -2009



Thanks to IsaiTamilNet - Prabhu



[html:f5b0dd4e4c] <div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13889808&vid=5265181&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9337/87121907.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13889808&vid=5265181&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9337/87121907.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:f5b0dd4e4c]

aanaa
10th June 2009, 06:00 PM
June - 09 - 09



Thanks to IsaiTamilNet - Prabhu




[html:fb16ff11e6]<div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13891505&vid=5265885&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9338/87128392.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13891505&vid=5265885&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9338/87128392[/html:fb16ff11e6].jpeg&embed=1" ></embed></object>
</div>

Shakthiprabha
15th June 2009, 12:46 PM
[tscii:3c0021140b]10-06-09

திருமயிலையில் சித்திரக்குளத்தருகே விளங்கும் பழங்காலக் கோவில்களுள் ஒன்று கேசவபெருமாள் கோவில். பெருமாளுக்கு கேசவன் என்ற பெயர் வர பல காரணங்கள் கூறப்படுகின்றன. கேசி என்ற அரக்கனை க்ருஷ்ணன் கொன்றவன். அதனால் அவன் கேசவன் என்று கொண்டாடப்படுகிறான். கம்சனின் ஆணைப்படி கேசி கண்ணனை அழிக்க குதிரை உரு கொண்டு தாக்குகிறான், இறுதியில் சம்ஹாரம் செய்யப்படுகிறான். பிருந்தாவனத்தில் இருக்கும் இந்த இடம் "கேசி கடம்" என்ற பெயரில் வழங்கப்படுகிறது. கேசவனைக் கொன்ற பின், அக்குளத்தில் முங்கி கண்ணன் குளித்ததாக ஐதீகம்.

மயிலையில் இருக்கும் கேசவ பெருமாளுக்கு வேறு ஒரு சரிதை சொல்வதுண்டு. இதில் குடிகொண்டுள்ள பெருமாளை ஆதிகேசவன் என்று அழைப்பர். முன்காலத்தில் மயிலாப்பூருக்கு மயூரபுரி பட்டிணம் என்று பெயர். பிருகு என்ற முனிவரின் யாகத்தை மது என்ற அரக்கன் அழிக்க முற்பட்டான். அவர் மஹாவிஷ்ணுவின் உதவியை நாடினார். யக்ஞத்திலிருந்து, விஷ்ணு லக்ஷ்மியுடன் தோன்றி அரக்கனை வதம் செய்தார். யக்ஞத்திலிருந்து தோன்றிய மஹாபுருஷன், நவரத்தினங்கள் பதித்த மகுடத்தை அணிந்திருந்தார், அவரின் கருமையான அடர்ந்த கேசம் ஜொலித்ததாம். அதனால் அவருக்கு கேசவன் என்று பெயர் என்பது இன்னொரு கருத்து. இங்கு தாயாராக மயூரவல்லி வீற்றிருக்கிறார்.


http://www.harekrsna.com/philosophy/associates/demons/vrindaban/kesi.htm

http://www.dinamalar.com/anmegamnews_detail.asp?News_id=1274&cls=row3&ncat=HIN&ncat1=WRI

http://chennaionline.com/Religion/Temples/April09/02Aadhi-Kesava-Perumal-Temple.aspx

ஆழ்வார்களின் ஒருவரான பேயாழ்வாருக்கு இங்கு சன்னிதி இருக்கிறது. பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் மூவருக்கும் மஹாவிஷ்ணு தரிசனம் கொடுத்ததாக புராணம் கூறுகிறது. மஹாவிஷ்ணுவைக் கண்ட பொய்கையாழ்வார் கடலையே எண்ணையாக வரித்து சூரியனை விளக்காக்கி துதிக்கிறார். பூதத்தாழ்வாரும் அன்பையே விளக்காக வைத்து இறை ஆர்வத்தை நெய்யாக்கி இறைவனை துதிக்கிறார். அதன் பின்னர், பேயாழ்வாருக்கு தரிசனம் தெரிகிறது. இவர் கேசவபெருமாள் கோவில் கிணற்றில் பிறந்தார் என வரலாறு கூறுகிறது.

"திரு கண்டேன் பொன் மேனி கண்டேன்
நிகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன்
செருக்கிளரும் பொன்னாழி கண்டேன்
புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று"

என்று திருவந்தாதி பாடுகிறார்.

http://azhvaar.wordpress.com/category/uncategorized/

கேசவ பெருமாள் கோவில் திருவத்தூரிலும் இருக்கிறது. இங்குள்ள தாயார் மரகதவல்லி. இறைவனாம் திருமால், கேசன் கேசி என்ற அரக்கர்களை வென்ற பின் இங்கு எழுந்தருளியதாக ஸ்தல புராணம் சொல்கிறது. கேசி என்ற அரக்கன் தாமிரபரணி ஆறாக ஓடுகிறான். அவனை ஒடுக்கி வென்று கேசவ பெருமாள் என்ற பெயருடன் இங்கு மஹாவிஷ்ணு திகழ்கிறார். விஷ்ணுவிற்கும் கேசிக்கும் நடக்கும் போரை சிவன் பனிரெண்டு உருவங்கள் தாங்கி கண்டு, பின் கேசவனை வழிபட்டதாகவும் கூறுகின்றனர்.

http://www.templenet.com/Tamilnadu/df087.html

ஆலயங்களின் சிறப்பும் சரித்திரமும் ஸ்தலபுராணமும் கேட்கத் திகட்டாதவை. ஆலய தரிசனம் ஒன்றே மன அமைதியைத் தரவல்லது என்றால் ஆலயத்தை நிறுவுதல் அதை விட சிறந்தது அதை போல் பன்படங்கு சிறந்தது ஒருவனுக்கு எழுத்தறிவித்தல்.

நம் உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. இப்பூதங்களைக் குளிர்வித்தல் புண்ய காரியம். அதாவது உடற்பசி போக்குதல், கண்ணுக்கு /செவிக்கு விருந்து, இவையெல்லாம் உடலை சாந்திப்படுத்தக்கூடியது. அடுத்தது மனம். மனம் என்னும் இந்திரியத்தை அமைதியைக் கொண்டு சாந்தப்படுத்தலாம். ஆலயம் செல்வதோ, இறை வழிபாடோ, இறை நம்பிக்கை அற்ற பொதுவானதொரு நற்சிந்தனையோ கூட மனதை சாந்தி படுத்த போதுமானது. உடலைக் காட்டிலும் மனம் சூட்சுமம் என்றால், மனதைக் கட்டிலும் அறிவு சூட்சுமம். அந்த அறிவுக்கு கல்வி அவசியம். கல்வி என்றால் இங்கு உயர்ந்த ஞானத்தை புகட்டக்கூடிய கல்வி என்று பொருள் கொள்ள வேண்டும். ஆகவே தான் அறிவை சுடர் விட்டு எரியச்செய்யும் கல்விக்கு மேலும் உயர்ந்த இடம். இதைச் சுட்டிக்காட்டி பாரதியாரின் கவிதைகளுள் சில ஞானத்தின் இருப்பிடமான சரஸ்வதி தேவியை பாடியுள்ளது.

”வீடுதோறும் கலையின் விளக்கம்
வீதிதோறும் இரண்டொரு பள்ளி
நாடு முழுதும் உள்ளன ஊர்கள்
நகர்களெங்கும் பலப்பல பள்ளி”

என பள்ளியின் பெருமையைப் பாடியுள்ளார். மேலும் ஒரு படி சென்று அவரே, புண்ணியம் யாவிலும் சிறந்தது எழுத்தறிவித்தலே ஆகும் என்கிறார்.

"இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்,
இனிய நீர்த்தண் சுனைகள் அமைத்தல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி,
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்"

மேலே உள்ள கவிதையில் பேசப்படுவது பலன் பொருள் எதிர்பாராது ஒருவருக்கேனும் அறிவை ஊட்டுவது. பலன்/பொருள் எதிர்பார்த்தே இருந்தாலும் கூட, அறிவை ஊட்டும் ஆசிரியர் பணி, உயர்ந்ததாக இன்றும் கருதப்படுகிறது.

பஞ்ச கர்மங்களாக ஐந்து கர்மங்கள் மனிதனுக்கு விதிக்கப்பட்டுள்ளன. இதைப்பற்றி முந்தைய தொடர் ஒன்றில் ஏற்கனவே விவாதிருந்தனர். பஞ்ச கர்மங்களாக

"தேவ யக்ஞம்" : தேவர்களின் ப்ரீதிக்காக ஆற்றப்படும் யாகங்கள் யக்ஞங்கள் தொண்டுகள், பூஜைகள். யக்ஞம் என்றால் நெய் ஆஹுதி வளர்த்து என்று மட்டும் பொருள் கொள்ளல் வேண்டாம். தேவர்களின் பிரியத்திற்காக நம்மால் முடிந்த ஸ்தோதிரங்கள் சொல்லி துதி பாடுவதும் இவ்வகையைச் சேரும்.

"மனுஷ்ய யக்ஞம்" : இன்வார்த்தைகள் பேசுதல், பிறரை வாக்கால், மனதால், செயலால், துன்புறுத்தாமை, விருந்தோம்பல் முதலியன அடக்கம்.

"பித்ரு யக்ஞம்" : பித்ருக்களுக்கான கடன், அமாவாசை தர்பணங்கள், திதிகள் முதலியன

"ப்ரம்ம யக்ஞம்" : பிரம்ம ஞானத்தை நோக்கிய பயணங்கள், வேதம் கற்றல், அதை பிறருக்கு கற்பித்தல், பிரம்ம ஞானத்தை பிறருக்கு எடுத்துரைத்தல்.

"பூத யக்ஞம்" : என்ற ஐந்தாவது கர்மம், தெரியாமல் செய்த ஹிம்ஸைகளுக்கு பிராயச்சித்தமாக செய்யப்படுவது. வாயில்லா ஜீவன்களுக்கு உணவிடுதல் இதில் அடக்கம். நம் அன்றாட வாழ்வில், நம் ஜீவனத்திற்காக பல நுண்ணுயிர்கள், பூச்சிகள் முதலியன கொல்லப்படுகின்றன. நம் மூச்சுக்காற்றில் பல கிருமிகள் மடிகின்றன. நம் ஆரோக்கிய வாழ்விற்காக நம்முள்ளும் புறமும் வாழும் பல கிருமிகளை நாசம் செய்கிறோம். நடக்கும் போது சிறிய உரு கொண்ட பூச்சிகள் கொல்லப்படுகின்றன. நம் பசிக்காக வெட்டப்படும் மரங்கள், செடிகள், காய்கள் கனிகளில் உள்ள நுண்ணுயிர்கள் அழிக்கப்படுகின்றன. இவற்றிற்காக செய்யும் பிராயச்சித்த கர்மாவாக பூத யக்ஞம் செய்யப்படுகிறது.

ஜைன மதத்தை சேர்ந்த துறவிகள் தாம் செல்லும் பாதையை பெருக்கி சுத்தப்படுத்திக்கொண்டும், தம் மூச்சுக்காற்றின் வழியாக நுண்ணுயிர்கள் கிருமிகளை சுவாசித்து அதை அழிக்காது இருக்க, சுவாச உரை ஒன்றும் அணிந்து கொள்கின்றனர்.

(வளரும்)[/tscii:3c0021140b]

Shakthiprabha
15th June 2009, 02:12 PM
11-06-09

சாம்பு சாஸ்த்ரிகளுக்கு வேதபாடசாலை நிறுவ மிகுந்த ஆர்வம் இருக்கிறது. ஆர்வம் இருந்தும் என்ன பயன் அதற்கு உரிய பணபலம் அவரிடம் இல்லை. உலகில் பல உன்னத காரியங்கள் தனியொரு மனிதனால் நிறைவேற்றப்படுவதில்லை. தனிமனிதனின் பின் பலர் இருந்து ஒத்துழைத்து நற்காரியங்கள் பெரும் அளவில் நிறைவேற்றப்படுகிறது.

(couldn't help remembering kannathasan's beautiful verses

"பணம் இருக்கும் மனிதனிடம் மனம் இருப்பதில்லை,
மனம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை" )


ஆலயம் நிறுவவோ கல்லூரிகள் பள்ளிகள் உருவாக்கவோ எளிதில் எவருக்கும் ஆசை எழும்புவதில்லை. மனம் கொண்ட ஒருவனிடம் பணம் இருப்பினும், அதனைத் தூண்டும் ஊந்துகோலாய் இன்னொருவன் செயல் படுகிறான். அதனை வழி நடத்துகிறான் மற்றொருவன். பலர் முன்னின்று பணம், உழைப்பு, சிந்தனை முதலியவற்றால் பாடுபடுகின்றனர். அதன் பின்னரே முழுமையாக ஆலயமோ பள்ளியோ கல்லூரியோ உருபெறுகிறது. அன்னை தெரசா ஆசிரமம் துவங்க நினைத்த போது அவரிடம் இருந்தது ஐந்து ரூபாய் மட்டுமே. சிலரின் உயர்ந்த நோக்கங்களின் பின்னால், ஆசைகளின் பின்னால் தெய்வ சித்தம் துணை நிற்கிறது. அது காரியங்களை எளிதில் நடத்திக்கொடுக்கிறது.

அதனால் சாம்பு சாஸ்த்ரிகளின் வேதபாடசாலை கட்டுவது முடவன் கொம்புதேனுக்கு ஆசைப்படுவது போல் என்று எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. மனிதனின் முயற்சியுடன் தெய்வ ஷக்தியின் ஊந்துதலும் சேர்ந்து கொண்டால், முடியாததும் நடவாததும் கூட நடந்துவிடும். வாய்ப்பும் வெற்றியும் கனிந்து வரும். சாம்பு சாஸ்த்ரிகளின் வேதபாடசாலை நிறுவும் பணிக்கு அஷோக் தன் முழு உழைப்பையும் ஊக்கத்தையும் ஊட்டுகிறான். ப்ரியாவின் தந்தையும் சாம்புசாஸ்த்ரியின் சம்பந்தியுமான ஜட்ஜ் ஜகன்னாதன் வேதபாடசாலை நிறுவும் பணிக்கு நிதி சேர்க்கும் பணியை ஏற்றுக்கொள்கிறார். பெரிய மனிதர்கள் என்று சொல்லப்படும் (creamy layered) பணம் படைத்தவர்கள் பணியில் இறங்கிவிட்டால், தடைகள் பல நீங்கிவிடும். தன் மகன் பணிந்து கேட்டுக்கொண்டபோது பணம் கொடுத்து உதவ மறுக்கும் நாதன் கூட, பின்னர் பெரிய மனிதர்கள் பலர் கொடை வழங்கியுள்ளதாய் கேள்வியுற்று தன் கௌரவத்திற்கு இழுக்கு வாராது பணம் வழங்கிவிடுகிறார்.

தங்களின் ஆயுளுக்குப் பிறகு செல்வங்கள் அனைத்தையும் அஷோக் வேதபாடசாலை நிறுவுவதில் திருப்பப்போவதாய் சொல்வதைக்கேட்டதும் மனம் உடைந்து போகின்றனர் நாதன் தம்பதியர். "சொத்துக்களை வேறு உலகத்திற்கு எடுத்துச்செல்ல முடிந்தால் எவனும் சொந்த மகன் மகள்களுக்கு எழுதி வைக்க மாட்டான்" என்கிறார் நாதன். மிகச் சரியான வார்த்தைகள். ஒவ்வொருவரும் அதிகம் நேசிப்பது தன்னைத் தான். அதன் பின்னர் வருவதே மனைவி மக்களிடம் செலுத்தப்படும் அன்பும் கூட. பிருகதாரண்யக உபநிஷதம் கூறுவது கசப்பான மறுக்க முடியாத உண்மை. " 'எனக்காக' என் மனைவி/ கணவன் அன்பு செலுத்தப்படுகிறான். 'எனக்காக' என் மக்கள் என்னால் அன்புசெலுத்தப்படுகிறார்கள். "என்"னைத் திருப்திப்படுத்தாவிட்டால் என் அன்பு அகன்று விடும் ". இது தான் "சுயம்" அகலாத ஆத்மாவின் அடிப்படைத் தத்துவம்.

"இறப்பு" என்ற வார்த்தை அஷோக்கை கலவரப்படுத்தாததைக் கண்டு வருந்துகிறாள் வசுமதி. "நான் ஹாலில் இருந்து அடுத்த ரூம் போனா, நான் காணாம போய்ட்டதா நினைச்சு நீங்க அழுவேளா"? என்கிறான் அஷோக். நம்மில் பலரால், ஏன் தொண்ணூறு சதவிகிதம் மக்களால் அஷோக்கைப் போல் சலனமற்று இருக்க முடியாது. ஞானத்தை ஊட்டும் புத்தகங்கள் படித்தும், அதைத் தேடி ஓடி இளைத்தாலும் கூட, நமக்கென வரும்போது சலனங்கள் விடுபடுவதில்லை. ஏனெனில், ஞானத்தை புத்தகத்தில் படிக்கிறோம். அதை புரிந்து கொள்ள பிரயத்தனப்படுகிறோம். ஆனால் இன்னமும் முழுமையாய் உணர்ந்து கொள்ளவில்லை. ஞானியைப் பற்றி பேச முடியும், விவாதிக்க முடியும், ஞானத் தன்மையைப் பற்றி படிக்க முடியும், ஞானியைப் போல் நடிக்கக் கூட முடியும், ஆனால் அவனைப் போல் நடத்தல் அத்தனை சுலபமாக சாத்தியப்படுவதில்லை. கீதையில் கண்ணன் அர்ஜூனனைப் பார்த்து "நீ ஞானியைப் போல் உயர்ந்த வார்த்தைகள் பேசுகிறாய்! ஆனாலும் இப்படி சலனப்படுகிறாயே" என்று கேலிக்கிறான்.



CHAPTER 2 VERSE 11/12/13


ashochyaan anvashochah: tvam pragyavaadhan cha baashase
gathasoona agathaasooncha na anushochanthi panditha ||

na tu eva aham jaathu na asam na tvam na ime janadhipaaha
nacha eva na bhavishyamaha sarvevayam athah param ||

dehino-asmin yatha dehe kaumaram youvanam jaraa
thatha dehanthara prapthir dheera: thathra na muhyathi ||



The Lord spoke

"You speak wise words, yet you grieve for what is not worthy.
Learned men do not worry about people the dead or living"

Never was it that, at any particular point of time did you exist, nor I ,
nor these kings. Never at any particular point of time, we would
stop existing

Just as body goes thro childhood, youth and oldage, so does
the soul transmigrate from one body to another. A realised
soul, would not be baffled because of these.


பகவான் பின்வருமாறு கூறினார்.

அறிவுமிக்க சொற்களை கூறும் நீயே வருந்த தேவையற்றதற்கு
வருந்துகிறாய். இருப்பவர்களுக்கோ இறந்தவர்களுக்கோ ஞானிகள்
வருந்துவதில்லை.

நானோ நீயோ இந்த அரசர்களோ எப்பொழுதும் இருந்ததுமில்லை.
இனி இல்லாமல் போகப்போவதும் இல்லை.

இந்த உடல் எவ்வாறு பால்யம், பருவம், மூப்பு என்பதை கடந்து செல்கிறதோ,
அவ்வாறே ஆன்மாவும் ஒரு சரீரத்தை விடுத்து வேறொன்றிற்குள் புகுகிறது.
எல்லாம் அறிந்த ஒருவன் இதைப் பற்றி குழம்பி வருந்துவதில்லை.

(வளரும்)

Shakthiprabha
15th June 2009, 04:54 PM
12.06.09

யாகத்திற்கும் யக்ஞத்திற்கும் செலவழித்தலை விட தான தர்மங்கள் செய்தல் உயர்ந்த காரியம். பாலையும் நெய்யையும் கற்சிலைக்கு அபிஷேகம் செய்வித்தலை விடவும், ஆஹுதிக்கு நெய் சொரிதலை விடவும் ஏழையின் பசிக்கு உணவளித்தால் அதன் உபயோகம் பன்மடங்கு, என்று சில நேரங்களில் நம்மில் பலருக்கு தோன்றலாம்.

அதற்கு விடையாய் பஞ்ச கர்மாக்கள் மனிதனுக்கு விதிக்கப்பட்டுள்ளதாய் கூறுவதையே மீண்டும் வலியுறுத்துகிறார் சோ. அக்கர்மங்களில் தானம் தர்மம் செய்தல் உயர்ந்த பண்பு, புண்ய காரியமாகவும், பலனை எதிர்பார்த்து செய்தாலும் கூட பலன் தர வல்லது என்றும் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. அப்படிப்பட்ட தான தர்மங்கள், மனுஷனுக்கு செய்யும் போது, அது மனுஷ கர்மாவாக பாவிக்கப்படுகிறது. தேய்வத்திற்கும்
தேவர்களுக்கும் செய்யப்படவேண்டிய கர்மா, யக்ஞங்கள் யாகங்கள் மூலம் நிறைவேற்றப்படுகின்றன.

திருமூலர் தம் திருமந்திரத்தில்

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.

எனக்கூறுகிறார்.

எல்லோருக்கும் விதிக்கப்பட்டுள்ள கர்மங்கள் இறைவனுக்கு அளிக்க ஒரு இலை. கீதையில் கண்ணன் "பக்தியுடன் எனக்கு ஒரு பழமாவது, ஒரு பூவாவது, ஒரு இலையாவது அர்பணி" என்கிறான். இறைவனுக்குறிய கர்மாவைப் போல் வாயில்லா ஜீவன்களுக்கு சிறிது உணவளிப்பதும் நமது கடமை. இதுவே பூத யக்ஞமாக கூறப்படுவது. தினம் செய்யப்பட வேண்டிய கர்மாக்களில் இன்னொன்று நாம் உண்ணும் உணவை பகிர்ந்து ஒரு பிடி உணவாவது இன்னொருவனுக்கு அளித்து உண்ண வேண்டியது. இதுவே தான தர்மங்களாக விரிவடையும் மனுஷ்ய கர்மா அல்லது யாகம். இதையும் தாண்டி இன்னொன்றும் செய்ய வெண்டுமாம், அது, பிறருக்கு இதம் தரும்படி நம் பேச்சும் செயலும் அமைவது ஆகும்.

மனுஷ்ய யக்ஞம் செய்வதால் தேவர்களுக்குறிய கடமைகளை செய்ய வேண்டாம் என புறம் தள்ளக்கூடாது. தேவ கார்யங்கள் நடை பெறுவதால், பூமியில் செழிப்பும், சுபீக்ஷமும், நம்மைச் சுற்றியுள்ள அதிர்வாற்றல் இணக்கத்திற்குறியதாகவும் அமைகின்றன (we call it, inducing postive vibes).

கண்ணுக்கு அல்லது புலன்களுக்கு எட்டாத / அப்பாற்பட்ட விஷயமாக இருப்பதால் நம்பிக்கை குறைந்துவிடுகிறது. சில செயல்களுக்கு விஞ்ஞான விளக்கங்கள் கொடுத்து நம்மை நாமே சாந்தப்படுத்திக் கொள்கிறோம். விஞ்ஞானத்திற்கு விளங்காத விஷயங்களை, "மூடநம்பிக்கைகளாக" முத்திரை குத்தி ஒதுக்கி வைத்துவிடுகிறோம்.

பரிசேஷனம் செய்வது ஒரு சில சாரார் கடமையாக செய்து வருகின்றனர். அதற்கு விஞ்ஞான விளக்கங்கள் கண்டு பிடித்து, தங்களின் reasoning ability குறித்து பெருமை படுகின்றனர். பரிசேஷனம் என்பது "ஆபோஜனம், பிராணஹுத்தி, உத்தராபோஜனம்" என்று மூன்று பகுதியாக செய்யப்படுகிறது. மந்திரங்கள் பிராணன், அபானன், துவங்கி பிரம்மத்தில் முடித்து அர்பணிக்கபடுகிறது. உண்டு முடித்த பின்பு உத்தரபோஜனம் செய்து பரிசேஷனத்தை முடிக்கவேண்டும். (இப்படி யாரேனும் செய்கிறார்களா என்னும் கேள்விக்குறியே வேண்டாம். வைதீகம் செய்வோர்கள் சிலரைத் தவிர, வேதத்தில் நாட்டம் கொண்டுள்ள வெகு சிலரைத் தவிர மீதி யாரும் செய்வதில்லை. )

தோர்பிக்கரணம் என்னும் தோப்புக்கரணம் போடுவது முதற்கொண்டு, நமஸ்காரம் செய்வது வரை எல்லாவற்றிற்கும் விஞ்ஞான அடிப்படையும் இருந்தால் நம்மை நாமே "அறிவாளிகள்" என்று மெச்சிக் கொள்கிறோம். "நம்பிக்கை"யின் அடிப்படையில் செய்யப்பட வேண்டியவைகளுக்கும் விஞ்ஞான விளக்கங்கள் தேவைப்படுவதால், நம்பிக்கையே அடிப்பட்டுப்போகிறது.

இரண்டு மூன்று நாட்களாக நடந்த கதையின் சுருக்கம்:

சார்யார் தனக்கென்று வரும் போது நியாய தர்மங்கள் மாறுபட்டு ரத்தபாசத்தால் பேதலிக்கிறார். சாம்பு சாஸ்திரிகளின் வேதபாடசாலை எழுப்பும் பிரயத்தனங்கள் ஜோராய் நடைபெறுகிறது. தர்ம கர்மாக்களுக்கு பணம் உதவி தன் பிராயச்சித்தத்திற்கு வழி தேட வையாபுரி நினைத்தாலும், நல்ல
காரியங்களுக்கு வையாபுரியிடமிருந்து பணம் வாங்க மறுத்துவிடுகிறான் அஷோக். நடேச முதலியாரிடம் உறவை ஒட்ட வைக்க முற்பட்டு, ஜெயந்தி தோற்றுப்போகிறாள். ஆனாலும் அவர் மகள் ஷோபனாவுடன், ஜெயந்தி/கிரி குடும்பத்தினர் உறவை புதுப்பித்துக்கொள்கின்றனர். ரமேஷுக்கு நீரில் கண்டம் என்று கண்டறிந்த உமா மிகவும் கவலைக்கொள்கிறாள். ரமேஷை "ம்ருத்யுஞ்சய மஹாமந்திரம்" ஜபிக்க சொல்கிறான் அஷோக்.

(வளரும்)

aanaa
15th June 2009, 06:18 PM
12.06.09

(வளரும்)

:ty:

aanaa
15th June 2009, 06:24 PM
June 10 - 3009



Thanks to isaiTamilNEt - Prabhu


[html:192df87d8e] <div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13911789&vid=5274413&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9361/87206937.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13911789&vid=5274413&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9361/87206937.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:192df87d8e]

aanaa
15th June 2009, 06:27 PM
June 11 -2009



Thanks to IsaiTamilNet -- Prabhu


[html:56582b5877] <div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13931920&vid=5281892&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9378/87275797.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13931920&vid=5281892&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9378/87275797.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:56582b5877]

aanaa
15th June 2009, 06:29 PM
June 12- 2009



Thanks to IsaiTamilNet - Prabhu



[html:e9d6686c03] <div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13948000&vid=5288113&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9394/87333224.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13948000&vid=5288113&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9394/87333224.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:e9d6686c03]

Shakthiprabha
18th June 2009, 01:35 PM
15-06-09

தானம் தர்மம் என்பதன் சிறப்பென்ன? தர்மம் செய்தலே உயர்ந்தது என்றாலும் எப்படிப்பட்ட தர்மத்திற்கு தலைவணங்கவேண்டும் என்றால், எவன் ஒருவன் தன் இருப்பிற்கு மீறி, தன்னை ஷக்தியைத் தாண்டி தர்மம் செய்கிறானோ அவன் செய்யும் தர்மத்தின் விலை மதிப்பிட முடியாதது. தனிமனிதன் தன்னிடம் இருக்கும் தனத்தைப் பொருத்தே தானம் செய்கிறான். தனக்கும் சேமித்து வைக்காது பிறருக்கு தானம் வழங்கும் கொடை குணம் இன்றைக்கெல்லாம் தேடினாலும் தென்படுவதில்லை. தானத்தின் சிறப்பை மஹாபாரதத்தின் கிளைக்கதை நன்று உரைக்கிறது.

போரில் வெற்றியடைந்து உலகத்தோரும் வானத்தோரும் வியக்க அஸ்வமேத யாகம் நடத்துகிறான் யுதிஷ்டிரன். உலகமே போற்றும் யாகத்தில் குறைவின்றி தான தர்மங்கள் நடைபெறுகின்றன. அவ்விடத்தில் குறுக்கும் நெடுக்குமாக கீரிப்பிள்ளை ஓடுகிறது. அதன் ஒரு பக்கம் மட்டும் தகதகவென தங்கமாய் ஜொலிக்கிறது. இவர்கள் நடத்தும் தர்மங்களை பொருட்டாகவே மதிக்காது அது மேலும் கூறுகிறதாம்

"ஏழை பிராமணன் ஒருவன் தர்ம விதிப்படி வாழ்பவன். தனக்கென மறுநாளுக்கேனும் சேர்த்துவைக்காத உண்மை அந்தணன். பிட்சை எடுத்த உணவை உண்ணும் தருவாயில், முனிவன் ஒருவன் விருந்தினனாக வந்துவிடுகிறான். தன் பசியை பொருட்படுத்தாது தனக்கென சமைத்த உணவை முனிவனுக்கு கொடுத்துவிடுகிறான். முனிவனுக்கு போதவில்லை. உடனே பிராமணனின் மனைவியும் தனக்கென இருக்கும் பங்கை கொடுத்துவிடுகிறாள். மேலும் பசித்த முனிவனுக்கு அந்தணனின் மகனும் மருமகளும் கூட தங்கள் உணவை கொடுத்து உபசரிக்கின்றனர். அடுத்த வேளைக்கும் கூட சேகரிப்பு இல்லாத நிலையிலும், பசியையும் வென்ற அவர்களின் தர்ம குணத்திற்கு ஈடு இணை ஏதும் உண்டோ என மகிழ்ந்து தர்மதேவன் அவர்களை அருளிச்செல்கிறான். அவ்விடத்திலுள்ள காற்று பட்டதால் என் உடல் தங்கமயமாய் ஆனது. அன்றையிலிருந்து என் இன்னொரு பக்க உடலையும் தங்கமாக்க நானும் அலைந்து கொண்டிருக்கிறேன். அவன் தர்மத்திற்கு இணையாய் இன்று வரை நான் கண்டதில்லை"

கோடி பொன் கொடுத்த யுதிஷ்டிரனின் தர்மத்தை விட, ஒரு வேளை உணவிட்ட அந்தணனின் தர்ம சிந்தனை பெரிது. தன்னலத்திற்கென எதுவுமே சேகரிக்காது இருப்பதை மொத்தமும் கொடுத்துவிடும் தர்மத்திற்கு இணை கூறுவிட முடியுமா?

தன் அடுத்த வேளையைப் பற்றி சிந்திக்காது, இருக்கும் நெல்லிக்கனியை ஆதிஷங்கரருக்கு வழங்கிய அம்மையாரின் தர்மசிந்தனைக்காக ஆதிஷங்கரர் பணிந்து இறைவனை வேண்டினார். தன்னலம் கருதாத ஒருவனிடம் இறைவனின் அருகாமை நிறைந்திருக்கும் என்பதற்கு இதுவே சான்று. லட்சம் லட்சமாய் பணத்தில் புரண்டாலும், காலம் நேரம் ஆணையிடும் போது அத்தனை லட்சத்தையும் மறு யோசனையின்றி தர்மம் செய்துவிட்டு, தன் இலக்கை புன்சிரிப்புடன் எவனால் தொடர முடிகிறதோ அவன் உயர்ந்த நிலையில் இருப்பவன்.

அப்படிப்பட்ட நிலையை ஒப்பிட முடியாவிட்டாலும் ஏழ்மைநிலையிலும் தன்னலம் தாண்டி வேதபாடசாலைக்கு பணம் தந்து உதவும் சாம்புசாஸ்த்ரிகளும் அவர் பார்யையும் வணங்குதற்குறியவர்களே.

(வளரும்)

viraajan
18th June 2009, 01:37 PM
i'm not watching it these days :(

Shakthiprabha
18th June 2009, 07:12 PM
16-06-09

இறையின் தத்துவத்தை நாம் ஒவ்வொருவரும் புரிதலுக்கு ஏற்ப ஒவ்வொரு விதமாக கையாள்கிறோம். இறையைத் தன்மைக்கு மனித உருவேற்றி அதனை பவ்யத்துடன் அணுகுவது ஒரு முறை என்றால், அவனையே பக்தியுடன் அணுகுவது இன்னொரு முறை. அதனையே பயத்தோடு அணுகுபவனும் உண்டு. நம் வாழ்வில் சந்திக்கும் நபர்களிடம் நாம் காண்பிக்கும் அன்பும், நாம் அவர்களை விளிக்கும் சொற்களும் நம் உறவின் ஆழத்தை பொருத்தே அமைகிறது.

இறைவனை தந்தை/தாய்/தோழன்/காதலன்/வேலைக்காரன் என பல உருவில் நெருங்கலாம். இறைத்தத்துவத்திடம் நமக்கிருக்கும் ஆழத்தையும் அன்பையும் பொருத்தே நம் உறவு அமைகிறது. திருமிழிசை ஆழ்வார் இறைவனுக்கு தொண்டாற்றும் கிழவிக்கு இளமையைக் கொடுத்தார். அவள் அழகில் மயங்கிய அரசன் தனக்கும் இளமை வேண்ட, ஆழ்வாரின் அதை சீடனே மறுத்துவிடுகிறான். அவனை நாடுகடத்திய விஷயம் கெட்டு திருமிழிசை ஆழ்வாரும் அவனுடன் புறப்படுகிறார். அப்பொழுது பாம்பின் படுக்கையில் இருக்கும் திருமாலையும் பார்த்து 'உனக்கு மட்டும் இங்கென்ன வேலை, வா என்னுடன்" என்று ஆணையிடுகிறாராம். அதை கெட்டு பெருமாளும் அவருடன் சென்று விட்டதால் அவருக்கு "சொன்னவண்ணம் செய்த பெருமாள்" என்ற திருநாமமும் வழங்கப்பெற்றது.

சுந்தரர் கடவுளை தூது அனுப்பினார். சிவன் பக்தருக்காக பிட்டுக்கு மண் சுமந்தார். பக்தர்களுக்காக இறைவன் செய்யாத விடயம் இல்லை. ஆனால் எப்படிப்பட்ட பக்தர்களுக்கு? என்பது கேள்வி.

இறைவன் நெருங்கியவன் ஆகிவிட்டான். ஒருமையில் விளிக்கும் தோழமை. ஏசும் உரிமை எல்லாம் பெற்று விட்டோம். அப்படியென்றால் அவனை உரிமையோடு கேட்கலாமே "எனக்கேன் இதைச் செய்தாய்?" "எனக்கேன் இதைச் செய்யவில்லை" "என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய்" என்று குமுறலாமே! அது பக்தியா என்றால்...இல்லை. முதிர்ச்சி அடைந்த பக்தியின் அடையாளம் அதுவல்ல. "எனக்கு எதை கொடுப்பது கொடுக்க மறுப்பது என்பது அவனுக்குத் தெரியும்" என்ற பற்றற்ற நிலையில் இறைவன் அளிக்கும் வாழ்வை அப்படியே ஏற்றுக்கொண்டுவிடுவது தான் பக்தியின் முற்றிய நிலை. இன்னும் சொல்லப்போனால் நம் வாழ்விற்கும் வளத்திற்கும் நாம் மட்டுமே பொறுப்பாளி. இறைவன் என்றொரு சுமைதாங்கி சுமக்கிறான் என்பதால் அவனிடம் நம் பாரத்தை போட்டு விட்டு, அவனை "ஏன் இதை மறுக்கிறாய், ஏன் இதை கொடுத்தாய்" என்று கேள்வி வேறு கேட்கிறோம்!

இப்படிப்பட்ட உயர்ந்த தத்துவத்தை அஷோக்கிற்கு உரைப்பது யார் என்று நினைக்கிறீர்கள்? சாக்ஷாத் சிங்காரம்!. வையாபுரியின் நட்பை அறுத்தெரிந்த சிங்காரம் தான் செய்த தவறுகளைக்காக வருந்துகிறான் "கடவுள் என்ன கார்ப்பரேஷன் ஆஃபீசரா?! கற்பூரத்தை கொளித்திட்டு இதைத்தா அதைத்தான்னு கெக்க" என்று செவ்விட்டில் அறைந்தாற்போல் கேட்கிறான்.

"நீ எதைக்கொடுக்கிறாயோ அதுவே உன் பிரசாதமாக ஏற்று வாழ்கிறேன்" என்று எந்த பக்தன் சொல்கிறானோ அவனுக்காக கட்டுப்பட்டு இறைவன் வருவான்.

செய்த தவறுகளுக்கெல்லாம் வருந்தும் சிங்காரம், "அந்த ஆதவனே என் இருண்ட மனத்திற்கு ஒளி தர முடியாதா! அவனால் என் பாவங்களைச் சுட்டெரிக்க முடியாதா!" எனக்கதறுகிறான். சிங்காரத்தின் பரிபூர்ண ஆத்மார்த்தமான அழைப்பு எங்கும் எதிரொலிக்கிறது. அப்பொழுது அஷோக் முதல் முறையாய் பிரம்ம உபதேசம் பெறுகிறான். சிங்காரத்தின் பரிபூர்ண அழைப்பில் மொத்த காயத்திரி மந்திரத்தின் அர்த்தம் வையமெங்கும் ஒலிப்பதை அஷோக் உணர்கிறான்.

பிரம்ம உபதேச மந்திரத்தை எவன் சொல்கிறான், எப்படி சொல்கிறான் என்பதல்ல, எத்தனை ஈடுபாட்டுடன் சொல்கிறான் என்பதை பொருத்தே உபதேசம் நடைபெறுகிறது.

"செங்கதிர் தேவனின் சிறந்த ஒளியில் தேய்கின்றோம்
அவன் எங்கள் அறிவினைத் தூண்டு நடத்துக"

(வளரும்)

aanaa
18th June 2009, 11:42 PM
15-06-09

தானம் தர்மம் என்பதன் சிறப்பென்ன?
(வளரும்)

:ty:

:2thumbsup:

nice avatar

aanaa
18th June 2009, 11:42 PM
16-06-09

"செங்கதிர் தேவனின் சிறந்த ஒளியில் தேய்கின்றோம்
அவன் எங்கள் அறிவினைத் தூண்டு நடத்துக"

(வளரும்)

:ty:

aanaa
18th June 2009, 11:50 PM
June 15- 2009

Part 1



Thanks to IsaiTamilNet - Prabhu


[html:682a4919c2] <div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=14005742&vid=5312183&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9458/87555440.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=14005742&vid=5312183&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9458/87555440.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:682a4919c2]

aanaa
18th June 2009, 11:53 PM
June 15- 2009

Part 2



Thanks to IsaiTamilNet - Prabhu




[html:0b6ec771b1]<div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=14006136&vid=5312336&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9459/87556669.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=14006136&vid=5312336&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9459/87556669.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:0b6ec771b1]

aanaa
18th June 2009, 11:55 PM
June 15- 2009

Part 3



Thanks to IsaiTamilNet - Prabhu


[html:ecc914edc5] <div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=14006178&vid=5312349&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9459/87556795.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=14006178&vid=5312349&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9459/87556795.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:ecc914edc5]

aanaa
18th June 2009, 11:55 PM
June 16- 2009




Thanks to IsaiTamilNet - Prabhu

[html:6169d94aad] <div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=14009654&vid=5313789&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9462/87568967.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=14009654&vid=5313789&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9462/87568967.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:6169d94aad]

aanaa
24th June 2009, 04:43 AM
SP...

knock ! knck!

aanaa
26th June 2009, 06:38 AM
SP யின் வருகைக்காக காத்திருந்தோம்......


காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீயிருந்து நான் அணச்சா நிம்மதி ஆகுமடி
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...ஆ...ஆ...

முக்குளிச்சு நான் எடுத்த முத்து சிப்பி நீதானே
முத்தெடுத்து நெஞ்சுக்குள்ளே பத்திரமா வச்சேனே
வச்சது இப்ப காணாம நானே தேடுறேன்
ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன்
நான் படிக்கும் மோகனமே நான் படைச்ச சீதனமே
தேன் வடிச்ச பாத்திரமே தென் மதுரப் பூச்சரமே
கண்டது என்னாச்சு கண்ணீரில் நின்னாச்சு

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி

நீரு நிலம் நாலு பக்கம் நான் திரும்பி பார்த்தாலும்
அந்த பக்கம் இந்த பக்கம் அத்தனையும் நீயாகும்
நெஞ்சுக்குள்ள நீங்காம நீதான் வாழுற
நாடியில சூடேத்தி நீதான் வாட்டுற
ஆலையிட்ட செங்கரும்பா ஆட்டுகிற என் மனச
யார விட்டு தூது சொல்லி நானறிவேன் உன் மனச
நெஞ்சமும் புண்ணாச்சு காரணம் கண்ணாச்சு

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீயிருந்து நான் அணச்சா நிம்மதி ஆகுமடி
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி

aanaa
26th June 2009, 06:40 AM
June 17- 09



thanks to IsaiTamilNet prabhu

[html:fa65d65286] <div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=14026992&vid=5320442&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9478/87629450.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=14026992&vid=5320442&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9478/87629450.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:fa65d65286]

aanaa
26th June 2009, 06:42 AM
June 18, 2009


Thanks to IsaiTamilNet - Prabhu



[html:c318bd23a5]<div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=14047956&vid=5328714&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9501/87705107.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=14047956&vid=5328714&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9501/87705107.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:c318bd23a5]

aanaa
26th June 2009, 06:44 AM
June 19, 2009


Thanks to IsaiTamilNet - Prabhu



[html:10ee68e4a5]<div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=14067090&vid=5336350&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9521/87776076.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=14067090&vid=5336350&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9521/87776076.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:10ee68e4a5]

aanaa
26th June 2009, 06:47 AM
June 22, 2009



Thanks to IsaiamilNEt - Prabhu


[html:842e4cac67] <div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=14104526&vid=5352163&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9561/87919773.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=14104526&vid=5352163&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9561/87919773.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:842e4cac67]

aanaa
26th June 2009, 06:52 AM
June 23, 2009


Thanks to IsaiTamilNet - Prabhu


[html:a31ea748a9]<div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=14125563&vid=5360735&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9585/87995824.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=14125563&vid=5360735&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9585/87995824.jpeg&embed=1" ></embed></object>
</div>

[/html:a31ea748a9]

aanaa
26th June 2009, 07:00 AM
June 24, 2009


Thanks to IsaiTamilNet - Prabhu


[html:ce22d955fa]<div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=14146965&vid=5369351&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9607/88070976.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=14146965&vid=5369351&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9607/88070976.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:ce22d955fa]

aanaa
26th June 2009, 07:02 AM
June 25, 2009


Thanks to IsaiTamilNet - Prabhu


[html:6c9e9d6b92] <div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=14160559&vid=5374657&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9619/88118665.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=14160559&vid=5374657&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9619/88118665.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:6c9e9d6b92]

Shakthiprabha
26th June 2009, 09:40 PM
SP யின் வருகைக்காக காத்திருந்தோம்......


காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி

சில தவிர்க்க முடியாத காரணங்களால் மய்யத்திற்கு வர இயலவில்லை நண்பர்களே. மன்னியுங்கள் :(

எனக்குப் பிடித்த இந்த அருமைப் பாடலை எனக்கே சமர்ப்த்தமைக்கு நன்றி :P

Shakthiprabha
26th June 2009, 09:41 PM
:clap: :bow: :respects:

நல்ல விஷயங்களை கேட்கவும் தெரிந்துணரவும் வாய்ப்பளித்த
சோ ராமசாமிக்கு கோடான கோடி நன்றிகள்.

இன்றைய பகுதியுடன் இத்தொடர் முடிந்தாலும் என் ஆயுள் உள்ளவரை தாக்கத்தை ஏற்படுத்துகிற ஒன்றாக 'சோ' கூறிய விஷயங்கள் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.

தொடர் முடிந்திருந்தாலும் மனதை விட்டென்றுமே அகலாது பசுமரத்தாணியாய் பதிந்திருக்கும்.

(வரும் திங்கள் / செவ்வாய்க்குள் தொடரைப் பற்றிய பதிவுகளை நானும் முடித்துவிடுகிறேன்)

அன்புடன்,
ஷக்தி

Shakthiprabha
26th June 2009, 10:52 PM
17-06-09

மனிதனின் வாழ்கை விசித்திரமானது. சில விஷயங்கள் நம் புலனறிவுக்கு எட்டாதது. ஏன் தனிமனிதனின் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள்? ஒருவன் உயர்ந்து நிற்க, இன்னொருவன் தாழ்ந்து சீரழிகிறேனே? பணத்தின் செழிப்பில் சிலர் சுக ஜீவனம் செய்ய, வறுமையில் சிலர் வதுங்குகின்றனரே? ஏன்? எதனால்? எப்படி சாத்தியம்? முடிவில்லாக் கேள்விகளுக்கு ஒரே பதில் மட்டுமே இருக்க முடியும்.

சிற்றறிவுக்கு எட்டாத விஷயங்கள் ஏனைய, பிரபஞ்ச ரகஸ்யங்களாக எங்கும் நிரம்பிக் கிடக்கிறது என்பதை தன்னடக்கத்துடன் ஒப்புக்கொள்வது ஒன்று தான் சாத்தியம். அதை "விதி" என்று ஒதுக்கி வைத்து நொந்துக்கொள்ளலாம். அல்லது சிந்தைக்கெட்டாத ஷக்தி என்று உயர்த்தி வைத்து வணங்கலாம். இல்லையெனில் புரியாத பொருளின் செயல்பாட்டுமுறை என்று விவாதிக்கலாம்.

எதுவாக இருப்பினும், அதன் முன், மனிதன் பலமிழந்து நிற்கிறான் என்பது உண்மை. அவனால் அதை வெல்ல முடியவில்லை. விஞ்ஞானம் அதன் முன் தோற்றுவிடுகிறது. எத்தனை பலம் கொண்டு போராடினாலும் அதை தவிர்க்கமுடியவில்லை.

கௌதமி என்பவள் தர்ம நெறிப்படி வாழ்கை நடத்துபவள். அவள் புதல்வனை பாம்பு கடித்து விடுகிறது. அவள்பால் உயர்ந்த மரியாதையும் கொண்ட அர்ஜுனகா என்ற வேடனுக்கு மிகுந்த கோபம் உண்டாகிறது. 'நீ எப்பேற்பட்டவள்! உனக்கா இப்படி ஒரு கதி நேர வேண்டும். எல்லாம் பாம்பு செய்த வினை' என நொந்துக் கொள்கிறான். பாம்பைக் கொல்ல முற்படுகிறான். பாம்போ தான் எவ்வாறு காரண கர்த்தாவாக முடியும் என வாதிடுகிறது. 'யமனின் உத்தரவின் பேரிலல்லவா நான் இயங்கினேன். நான் எப்படி பொறுப்பாவேன்.' என மறுத்துரைக்கிறது. யமனோ 'இது காலதேவனின் ஆணையன்றோ?! அவர் இட்ட கட்டளையை கடமையாக்கிச் செய்பவனே நான்' என்கிறான். 'அவரவர் கர்ம வினைக்கேற்ப பலன் அமைகிறது. அவனவனே தன் விதியை, வாழ்வை, நிர்ணயித்துக்கொள்ள இதற்கு நான் எப்படி கர்தாவாக முடியும்' என்கிறானாம் காலதேவன்.

அவனவன் வாழ்வுக்கும், நடவுக்கும், இருப்புக்கும் அவனவனே பொறுப்பு, அவனவனே கர்த்தா. விதை விதைத்தவனே அதன் பலனை அனுபவிப்பான் என்பதே ஒப்புக்கொள்ளக்கூடிய கருத்தாய் இருக்கிறது.


மஹாபாரத ச்லோகங்களில் அதன் முடிவில் வரும் ச்லோகம், ஜீவனின் சாரம்சத்தை விளக்குவதாய் அமைகிறது.

"ஆயிரமாயிரம் ஆடவரும், பெண்டிரும், பந்துக்களும், மித்ரர்களும், மாதாக்களும், புத்ரர்களும் இம்மண்ணில் இருந்தனர், இருக்கின்றனர், முடிவுறாத இழையாக தொடர்ந்த வண்ணம் இன்னும் வந்து கொண்டே இருப்பர். மனதுக்கு ஒவ்வாத வருத்தமுறச் செய்யும் சம்பவங்களும் நிகழ்வுகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கும். பயமுறுத்தும் நிகழ்வுகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். இவற்றினுள் மூழ்கி தொலைந்து போகின்றவர்கள் அஞ்ஞானிகள். ஞானியோ சலனமற்றத் தெளிவுடன் தன் பயணத்தைத் தொடர்வான்."

கடவுள் நமக்கு நாமே வித்திட்டுக்கொண்ட கர்மங்களைக் கழிக்க பொறுமையை வழங்கியருள்கிறான். அவனை நொந்து கொள்வதில் என்ன பயன்!?

(வளரும்)

aanaa
27th June 2009, 03:38 AM
17-06-09

கடவுள் நமக்கு நாமே வித்திட்டுக்கொண்ட கர்மங்களைக் கழிக்க பொறுமையை வழங்கியருள்கிறான். அவனை நொந்து கொள்வதில் என்ன பயன்!?

(வளரும்)


:yes:

aanaa
27th June 2009, 03:40 AM
17-06-09

அவனவன் வாழ்வுக்கும், நடவுக்கும், இருப்புக்கும் அவனவனே பொறுப்பு, அவனவனே கர்த்தா. விதை விதைத்தவனே அதன் பலனை அனுபவிப்பான் என்பதே ஒப்புக்கொள்ளக்கூடிய கருத்தாய் இருக்கிறது.

(வளரும்)

:thumbsup:

:exactly:

aanaa
27th June 2009, 03:46 AM
june 26 - 2009


Thanks to IsaiTamilNet - Prabhu

[html:3cb0141db9]<div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=14179858&vid=5381813&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9639/88185653.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=14179858&vid=5381813&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9639/88185653.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:3cb0141db9]

aanaa
27th June 2009, 06:01 AM
:clap: :bow: :respects:

நல்ல விஷயங்களை கேட்கவும் தெரிந்துணரவும் வாய்ப்பளித்த
சோ ராமசாமிக்கு கோடான கோடி நன்றிகள்.

அன்புடன்,
ஷக்தி

எவ்வளவு அழகாக, சுருக்கமாக
நல்ல விடயத்தை 100+ எப்பிசோட் ( தமிழ் =?) முடித்துள்ளார்

திருச்செல்வம் -தொல்காப்பியன் - இங்கு பாடம் எடுத்தால் ......

Shakthiprabha
29th June 2009, 01:45 PM
18.06.09

மரணம் தவிர்க்க முடியாதது. கீதையில் கண்ணன்,

'பிறந்த எவனுக்கும் மரணம் உண்டு
மரணித்தவனுக்கு மீண்டும் பிறப்பும் உண்டு' என்கிறார்.

அசுரர்கள் சிலர் மரணமற்ற இருப்பை நோக்கி தவமியற்றி இறுதியில் தோல்வியே கண்டனர். மரணம் என்பது இயற்கையின் தன்மை, அதன் இன்றியமையாத செயல்பாடு. மரணத்தை ஜெயிப்பதோ வெல்வதோ இயற்கைக்கு எதிராக புறம்பாக செயல்பட நினைப்பது. அது நடவாத காரியம். (யோகிகள் அடையும் மரணமில்லா அமரத்துவம் வேறு) இது தெரிந்தும் மனிதனுக்கு மரண பயம் பீடிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் மரண பயம் அவனை விட்டு விலகுவதே இல்லை. என்றைக்கேனும் மூப்பு எய்தி மடியப்போகும் உடல் என்றாலும் கூட, அது சுலபமாக இலகுவான விடுதலையாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். ருத்ரனாகிய பரமேச்வரனுக்கு ம்ருத்யுஞ்ஜயன் என்ற இன்னொரு பெயர் உண்டு. ம்ருத்யு என்ற மரணத்தை வென்றவன் என்று பொருள். அவனை நோக்கி துதிப்பது ம்ருத்யுஞ்ஜய மந்திரம். இந்த மந்திரத்தை ஜபிப்பதால் அகால மரணம் நேராது, மரண பயம் விலகும், மரணம் இலகுவாக இருக்கும் என்பது நம்பிக்கை மட்டுமல்ல சத்தியமும் கூட.

இதைத் தான் அஷோக் ரமேஷை ஜபிக்க சொல்லியிருந்தான். ரமேஷ் நீரலையில் சிக்குண்டு உயிரிழந்தான் என்னும் செய்தி உமாவைத் தவிர ஏனையோரை கலக்குகிறது. அவன் ஜாதகத்தை மீண்டும் பரிசீலிக்கும் ஜோதிடர், அவனுக்கு மரணம் சம்பவிக்கும் வாய்ப்பு இல்லை எனவும், உமாவின் மாங்கல்ய ஸ்தானம் வலுவாக இருப்பதால், ரமேஷ் உயிருடன் இருக்கும் சாத்தியக்கூறு அதிகம் என்றும் கூறுகிறார்.

சிலர் மரணத்தில் வாயில் வரை பயணித்து மீண்டு புனர்ஜன்மம் எடுத்து வருவர். அதை "சுக்ராச்சார்யார் செயல்" என்று சொல்வதுண்டு. அசுர குரு சுக்கிராச்சார்யார் இறந்தவனைக் கூட பிழைக்க வைத்து விடுவார் என்கிறது புராணம். சுக்ராச்சார்யாரின் மகள் தேவயானி ப்ருஹஸ்பதியின் மகன் கசனிடம் தன் மனதை பறிகொடுக்கிறாள். அவனோ தேவர்களின் வெற்றியின் பொருட்டு சுக்ராச்சார்யாரிடம் "ம்ருக சஞ்ஜீவினி" மந்திரத்தை கற்க வந்தவன். 'ம்ருக சஞ்சீவினி' மந்திரம் இறந்தவனை பிழைக்க வைக்கும் மந்திரம். அசுரர்களுக்கு கசனின் எண்ணம் புரிந்து விடுவதால், அவனை கொல்ல பல முறை முயன்று தோற்கின்றனர். இறுதியில், கசன் இறந்தவுடன் அவன் உடலை உடன் எரித்து, உணவில் கலந்து சுக்ராச்சார்யாருக்கு கொடுத்துவிடுகின்றனர். கசன் இறந்தான் என்ற செய்தி தேவயானியை மிகுந்த சோகத்தில் ஆழ்த்த, அவள் பொருட்டு சஞ்சீவினி மந்திரத்தை வயிற்றிலிருந்த கசனுக்கு உபதேசிக்கிறார். அவன் வயிற்றைக் கிழித்து வெளியே வந்து மீண்டும் மந்திர பிரயோகம் செய்து சுக்ராச்சார்யாரை உயிர்ப்பிக்கிறான் என்பது கதை.

புராணக் கதைகளும் இதிஹாச கதைகளுக்கும் சான்றுகள் மிகக் குறைவு. வழிவழியாய் செவி வழியாய் வந்த செய்திகள். கல்வெட்டுக்களில் ஏடுகளில் படித்து பரப்பப்பட்ட கதைகள், கருத்துக்கள். சில நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய 'வரலாறு' நம் நம்பிகைக்கு பாத்திரமாவதைப் போல், புராணங்கள் தற்கால நவீன தலைமுறையின் நம்பிக்கைக்கும் மதிப்பிற்கும் உட்படுவதில்லை. நூற்றாண்டுகள் முன்பு நடந்தவைகளின் சான்று அழியாமல் இருப்பதால், நம்பிக்கை வைப்பது எளிதாகிறது. இறைத் தத்துவத்தின் பால் உள்ள நம்பிக்கை சான்று இல்லாததால் தளர்ந்து ஆத்திகவாதத்தை தழுவுவதைப் போல், புராணக் கதைகளுக்கு சான்றிதழ் வழங்கமுடியாததால், அவற்றை நாம் புறக்கணிக்க முற்படுகிறோம்.


மரணத்தை தள்ளி வைத்து தாற்காலிகமாக மீண்டவர்கள் கதைகள் நிறைய உண்டு. அதே போல் மீண்டு வருகிறான் ரமேஷ். தனக்கென வரும்போது நம்பிக்கைகளின் தீவிரம் மாறுபடும். ரமேஷுக்கு சம்பவித்தது போல் பகுத்தறியவே முடியாத நிகழ்வுகள் நிறைய உண்டு. நம்மை மீறிய ஷக்தி இருக்கத்தான் செய்கிறது என்று ஞானம் பெறுகிறார் நீலகண்டன். ஆத்திக மாற்றம், நீலகண்டனை அதீத தன்னடக்கத்திலும், பக்தியிலும் ஆழ்த்துகிறது.

பிரம்மோபதேசம் பூர்ணத்துவம் பெற்றதால், உண்மையான பிராமணனுக்குறிய தகுதிகளைத் தேடி அலைகிறான் அஷோக். அப்படிப்பட்ட தகுதிகளை யாரிடம் இருக்கிறது என கண்டுணரத் துடிக்கிறான். அவன் தேடலின் விடை பாகவதராக இருக்கலாம் என நினைக்கிறான். பாகவதரின் பதில் அவனை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

"இக்காலத்தில் யாரால் பிராமணனுக்குறிய விதிமுறைக்கு உட்பட்டு முழுமையான பிராமணனாக ஒளிர முடியும். அப்படி இருப்பது மிகவும் கடினம்" என்கிறார். "அவரவர் மனோ நிலையையும், அறிவையும், குணத்தையும் கொண்டு பிராமணானுக்குறிய குணாதிசயத்தில் சிலவற்றை கடைபிடிக்கின்றவர்களைக் காணலாம்"

அப்படியெனில் முழுமையான பிராமணன் அகப்படுவது கடினமா? திரும்பிய திசையெங்கும் பாதி பிராமணர்களும், கால் பிராமணர்களும், அரைக்கால் பிராமணர்களும் நிரம்பியிருந்தால் அவர்களை எப்படி அழைப்பது? ஜாதியால் பிராமணன் என்ற தகுதியை வைத்துக்கொண்டு, வேறு தகுதி சிறிதும் இல்லாது தம்மைத் தாமே பிராமணன் என ஏன் பறைசாற்றிக்கொள்கின்றனர்? அஷோக்கின் கேள்விகள் ஈட்டியாய் பாய்கிறது. ஒளிவு மறைவின்றி, உளமாற உண்மையை ஒப்புக்கொள்ளும் தைரியம் பலருக்கு இருப்பதில்லை.

"பிராமணத்துவம் பித்ருக்கள் சொத்தா? பிராமண நிலை வழிவழியாக மூதாதையர்கள் மூலமா கிடைக்கிறது? இப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் பிராமணரா" - சுரீரென உரைக்கும் அஷோக் எடுத்துரைக்கும் உண்மைகள்.

வேதம் படித்தவர் பாகவதர். ஷாஸ்திரங்கள் எல்லாம் கற்றவர். பூணூல் போட்டவர், சிகை வைத்திருப்பவர், சந்தியாவந்தனம் செய்பவர், த்வைத-அத்துவைத நிலைகளைப் பற்றி புத்தகத்தில் படித்துள்ளவர். இறுதியில் ஒப்புக்கொண்டு விடுகிறார்.

"நான் பிராமணன் இல்லை, நீ தேடும் பிராமணன் நான் இல்லை"

உபநிஷத்துக்களிலும் வேதங்களிலும் மற்ற உயர்ந்த கருத்துக்களை உள்ளடக்கிய எல்லா புத்தங்களிலும் நான்கே நான்கு வர்ணங்களைத் தான் குறிப்பிட்டிருக்கின்றனர். இன்றைக்கு இருக்கும் நூறு ஜாதிகளின் குறிப்பு அங்கு இல்லை. இதிலிருந்து அப்புத்தகங்கள் குறிப்பிட்டுள்ளவை வர்ண பாகுபாடுகளேயன்றி ஜாதி பாகுபாடுகள் அல்ல என்பது தெளிவாகிறது.

பூணல் போட்டால் பிராமண நிலை வந்துவிடுமா? அவ்வளவு எளிதான நிலையா அது?! எத்தனைப் பக்குவம் பெற்றிருக்கவேண்டும் பிராமணனாக வாழ்வதற்கு! பூணல் போட்டதாலும், ஜாதியினால் பிராமணக் குலத்தில் தோன்றியதாலும் ஒருவன் பிராமணன் ஆகின்றான் என்றால் இப்புவியில் தர்மமும், மகிழ்ச்சியும் நிரம்பி, பூவுலகே தேவலோகமாகிவிடாதா?! அப்படிப்பட்டவனை, அப்படிப்பட்டவர்களை உலகமே கொண்டாடுமே! அப்படிப்பட்ட உயர்ந்த வாழ்கையா வாழ்கிறான் இக்காலத்தில் பிராமணனாக தன்னை நினைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு ஜாதி-பிராமணனும்?!?

பாகவதரைப் போல் ஒன்றிரண்டு வேதங்களை ஓரளவு படித்து, ஏதோ ஒருவகைக் கோணத்தில் சுமாராக புரிந்து கொண்டு, தம்மைத் தாமே பண்டிதர்கள் மேதாவிகள் என்று நினைப்பவர்கள் நிறைய பேர் உண்டு. அதே போல் ஏனைய கல்விகளுள் சிலவற்றை அல்லது ஒன்றே ஒன்றை தெரிந்து வைத்துக்கொண்டு, தம்மைப்போல் அறிவு ஜீவிகள் புவியில் நடமாடவே இல்லை என்று பலர் இறுமாந்திருக்கின்றனர். கற்றது கைமண்ணின் அளவு கல்லாத்தோ, பிரபஞ்சத்தின் மடங்கு!

பொதுவாக தொலைக்காட்சித் தொடர்களிலும், திரைப்படங்களிலும், புராணங்களிலும் நகைச்சுவைப் பாத்திரமாகவோ கலகம் மூட்டுபவராகவோ மட்டுமே சித்தரிக்கப்படும் நாரதர் அதி மேதாவி. பல சாஸ்திரங்கள், கல்விகளைக் கற்றுணர்ந்தவர். ஞானி. அவருக்கு தெரியாதது கிடையாது. எனினும், தனக்கு தெரியாததை உபதேசம் பெற எண்ணினார். ஸ்கந்தனின் அம்சமான சநத்குமாரரை அணுகுகிறார்.

"தங்களுக்கு என்னென்ன தெரியும்" என வினவுகிறார் சநத்குமாரர்.

"எனக்கு வேதங்களும், புராணங்களும், இதிஹாசங்களும், இலக்கணங்களும், சகுன சாஸ்திரங்களும், இன்னும் எண்ணற்ற ஏனைய பல சாஸ்திரங்களும் தெரியும்."

"இத்தனை பெயர்களைக் கூறுகிறீர்களே, இவையெல்லாம் ஞானமா? இவையா அறிவு? உண்மை அறிவுன் முன், ஞானத்தின் முன் இவையெல்லாம் வெறும் பெயரளவுச் சொற்கள்" என்கிறார் சநத்குமாரர்.

அவருக்கே அப்படிப்பட்ட நிலைமை என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்? எனக்கு சகலமும் தெரியும்" என்ற மமதை கொள்ள எள்ளளவும் அருகதையற்றவர்கள். உண்மையான அறிவாளி இருப்பதே கடினம், அப்படியே இருந்தால் என்றால், அவன் தன்னை அறிவாளி என பறைசாற்றிக்கொள்வதில்லை.

(வளரும்)

sankara1970
29th June 2009, 04:34 PM
The serial is eye opener for many brahmins as well as others who believe in god, rituals, etc.
or not.
Though many of us know only those perform brahmin's duties are regarded as brahmins, when it is said thro' the media it is great indeed.

We have to appreciate the producer of this serial as well as Cho's team.

Similar attempt should be made on Hinduism.

aanaa
30th June 2009, 04:48 AM
18.06.09

மரணம் தவிர்க்க முடியாதது. கீதையில் கண்ணன்,

'பிறந்த எவனுக்கும் மரணம் உண்டு
மரணித்தவனுக்கு மீண்டும் பிறப்பும் உண்டு' என்கிறார்.


(வளரும்)


இதை உணர்ந்தாலே போதும்
பிரச்சனையே இல்லாமல் வாழ்க்கை

Shakthiprabha
1st July 2009, 05:06 PM
19 -06-09

ஜோசியம் ஜாதகங்கள் பொய்த்து போகின்றன. ஒரு காரணம் ஜாதகமே சரியாக கணிக்கப்படாதது அல்லது ஜோதிட சாஸ்திரத்தை நன்கு அறியாத ஒருவரிடம் கணிப்பது. இன்னொன்று சரியான பிறப்பு நேரம் குறிக்கப்படாதது. இவையெல்லாம் தாண்டி, ஜாதகரின் நேரம், ஜோசியரின் நேரம் நன்றாக அமைந்திருந்தால், இறையருளும் கூடிவந்தால் சரியான கணிப்பைப் பேற முடியும்.

ராமரின் பட்டாபிஷேகத்திற்கு வசிஷ்டர் நாள் குறித்ததாக சில நூல்கள் இயம்புகின்றன. "வசிஷ்டரின் கணிப்பே தவறாகிவிட்டிருக்கிறதே" என்று ஒரு சிலர் அங்கலாய்க்க, நாள் குறித்தது வசிஷ்டரே அல்ல என்கின்றனர் வேறொரு சாரார். தசரதனுக்கு தன் முடிவு நெருங்கிவிட்டதைப் போன்ற உணர்வு தோன்றிக்கொண்டே இருந்தன. சகுனங்களும், நாட்டுக்கு ஏதோ கேடு விளையப்போவதை உணர்த்தியவண்ணம் இருந்தன. இதனால் அவனே தனக்கு பிறகு அரசாளப்போகும் மகனுக்கு யுவராஜன் பட்டம் கட்ட தீர்மானித்தான். சபையைக் கூட்டி, தன் கருத்தை பகிர்ந்தவுடன், அங்கிருந்த அத்தனைப் பெருமக்களும், பெரியோரும் மெத்த மகிழ்ச்சியடைந்து குதூகலிக்கிறார்கள். 'என்னுடைய ஆட்சி அத்துணை மோசமானதா விடிவை எண்ணி மகிழ்வது போல் உள்ளதே' வினவுகிறான் தசரதன். அவையோர்களும் ராமனின் உயரிய குணங்களையும், சத்தியம், தர்மம் தவறாமை போன்ற நன்நெறிகள் நிரம்பப்பெற்றுப்பதால் அதையெல்லாம் எண்ணி வரப்போகும் நல்லாட்சிக்காக மகிழ்வதாக கூறுகின்றனராம். இப்பதிலை கெட்டு மிகுந்த திருப்தியுடன், தசரதனே நாள் குறித்துவிட்டு, பின்னர் ஒப்புக்காக பெரியோரைக் கேட்கிறான் என்பது இன்னொரு தரப்பு வாதம்.

அப்படியே வசிஷ்டர் நாள் குறித்துக்கொடுத்தார் என்றே வைத்துக்கொண்டாலும், ராமனின் பட்டாபிஷேகம் தடைபட்டதால் தானே ராமாயணமே நிகழ்ந்தது! அதனால் எத்தனை நன்மைகள் விளைந்தன! நல்லோர்களைக் காத்து அரக்கர்களையும் அசுரர்களையும் வதம் செய்ததும் நன்மை தான். நல்லனவை நிலைநாட்ட நான் யுகங்கள் தோறும் தோன்றுவேன் என்கிறார் பகவான். ராமன் மனிதனாகத் தானெ வாழ்ந்தான் அவனை ஏன் அவதாரப் புருஷன் என தூக்கி வைக்கிறோம்? இருப்பவற்றுள் சிறந்தது எதுவோ அதன் மூலம் தன் முழு வெளிப்பாட்டை வெளிப்படுத்துகிறது இறைத் தத்துவம். "மனிதர்களில் நான் மன்னன்" என்கிறான் க்ருஷ்ணன். சிறந்த மன்னனின் கவனத்தில் பாதுகாப்பில் அத்தனை மனிதர்களும் அடங்கிவிடுகின்றனர். அத்தனை மனிதர்களையும் அவன் பரிபாலிக்கிறான். அவர்களின் பிரதிநிதியாய் இவன் விளங்குகிறான். "பறவைகளில் நான் கருடன், நதிகளில் நான் கங்கை, யஷர்களில் நான் யமன்" என்றெல்லாம் கூறுபவன், மந்திரங்களில் "நானே ஓம்காரம்" என்கிறான்.

அத்தனை மந்திரங்களும் 'ஓம்காரத்தில்' அடங்கிவிடுகிறது. மந்திரங்களின் பிரதிநிதியாய் ஓம்காரம் விளங்குகிறது. அனைவருக்கும் தெரிந்த விளக்கம் தான், ஓம் என்பதன் கூற்று "அ-கார, உ-கார ம-கார" ஷப்தங்கள்.

'அ'காரம் என்பது விழிப்பு நிலையான படைத்தலை, அதன் ஆரம்பத்தை உணர்த்துகிறது. "அ" என்று ஆரம்பிக்கிறது ஏறக்குறைய உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும்.

"உ"காரம் காப்பதைக் குறிக்கிறது. தொடர்தலை, வளர்த்தலை, பரிபாலித்தலை குறிக்கிறது. கனவு நிலையின் பிரதிபலிப்பு

"ம" காரம் ஆழ்ந்த நித்திரைக்கு ஒப்பான அழிவு நிலையை காட்டுகிறது.

அத்தனைக்கும் அப்பாற்பட்ட இன்னொரு நிலை "துரீய" நிலை.


துரிய*ம் என்றால் என்ன*? அந்த* பெய*ர் எதை குறிக்கிற*து? அந்த* நிலை என்ன*? அது எந்த நிலை என்று சொல்வ*தை விட* அது எந்த* நிலையெல்லாம் இல்லை என்று சொல்வ*து சுல*ப*ம். நாம் விழித்திருக்கும்போது உண*ரும் நிலை அல்ல*; தூங்கும்போது க*னாக்காணும்போது உண*ரும் நிலை அல்ல*; க*ன*வே இல்லாது ஆழ்ந்துற*ங்கும் நிலையும் அல்ல*. இந்த* மூன்று நிலையில் மாறி மாறி பய*ணிப்ப*வ*ர*து நிலை எதுவோ அதுதான் அந்த* நிலை.

அதை அறியும்போது மாத்திர*மே அது அதுதான் என்று புரியும். அங்கு ம*ன*மில்லாதாத*ல் சொல்லும் பொருளும் அதை குறிக்க* உத*வாது. அத*னால்தான் அறிந்த*வ*ரால் அதை சொல்ல* முடிவ*தில்லை. அதை சொல்ல* முடியும் என்று சொல்ப*வ*ர் அதை அறிய*வில்லை என* அறிய*லாம். கார*ண*ம் அந்நிலையை அடைந்த*வ*ர் திரும்ப* உட*ல் உண*ர்வுக்கு திரும்பும்போது முத*லில் அடையும் திகைப்பே அதுதான். என்ன*வென்று த*ன*க்குத்தானே கூட* எந்த* சொல்லாலும் அதை விளக்க* முடியாம*ல், அந்த* உண*ர்வை எண்ண* முடியாம*ல் திகைப்பார். ஆக*வே அறிந்த*வ*ர் இந்த* விஷ*யத்தில் மாத்திர*ம் மௌனியாகிறார். இப்ப*டி மௌனியாகிற*வரே முனிவ*ர் என*ப்ப*டும் நிலையை அடைந்த*வ*ராவ*ர்.

துரிய*ம் என்றே சொல்லிற்கே நான்காவ*து ப*குதி என்றுதான் பெய*ர். ஜாக்ர*த் எனும் சொல்லான* விழிப்பு நிலைக்கு விள*க்க*மாக* அந்த* பெய*ர் இருப்ப*தை காணுங்க*ள். ஜாக்ர*ம் என்றால் விழிப்பு. ஸ்வ*ப்ன* எனும் நிலை க*ன*வு நிலை. ஸ்வ*ப் என்றால் தூக்க*ம். அதிலிருந்து வ*ந்த* சொல் ஸ்வ*ப்ன*ம். சுஷூப்தி என்ப*து மூன்றாவ*து சிலை. ஷூப் என்றால் முடிவு. சுஷூப் 'ந*ன்றாக* முடிந்த' என்று பொருள். சுஷூப்தி என்றால் தூக்க* நிலை ந*ன்றாக முடிந்து கடந்த நிலை.இதுவும் அந்த* நிலையின் த*ன்மையை வைத்தே இருக்கும் சொல்.ஆனால் துரிய*த்திற்கு என்ன* பொருள் என்றால் நான்காவ*து நிலை. இங்கே நிலையை சொல்லாலும் பொருளாலும் குறிக்க* முடியாததால், இத*ன் பெய*ரையே நான்காவ*து நிலை என்று வைத்து விட்டார்க*ள்.


http://aaththigam.blogspot.com/2008/10/16.html

(நன்றி)

மாண்டுக்ய உபநிஷத் "ஓம்கார ஏவதம் சர்வம்" என்கிறது. எல்லாம் ஓம்காரத்தில் ஒலிகளே. நடந்தது, நடப்பது எல்லாமே ஓம்காரத்தில் அடக்கம். அவற்றைக் கடந்து நிற்பதும் அந்த ஓம்காரமே என்கிறது ஹிந்து மதம். ஹிந்து மதம் என்றால் ஹிந்துக்களின் மதம் என்று இன்றைக்கு எல்லோராலும் பொருளுணரப்பட்டாலும், ஹிந்து மதம் பெயரற்றது என ஏடுகளைப் புரட்டி நாம் அறியலாம். மதம் என்றால் சிந்தனை/நம்பிக்கை. 'சிந்து சமவெளி நாகரீகத்தை'த் தழுவிய மனிதர்களுக்கும் அவர்களின் நம்பிக்கைகளுக்கும் கொள்கைகளுக்கும் சிந்து நாகரீகம் என பிற்காலத்தில் பெயர்சூட்டப்பட்டு, பின் 'ஹிந்து / ஹிந்துத்துவம்' என மருவியது. மதத்திற்கென தனி பெயர் இல்லை. ஏன் இல்லை? ஹிந்து மதத்திற்கு 'மூலம்' கண்டுணர முடிவதில்லை.

அதனால் இதற்கு "சனாதன தர்மம்" எனப் பெயர். 'சனாதனம்' என்றால் தொன்று தொட்ட காலம் முதல் வழங்கு வந்த தர்ம நெறிகள். சனாதன தர்ம முறைகள் மட்டுமே இருந்து வந்த காலத்தில், பிறவொன்று அதற்கு ஒப்பாக / கூட்டாக இல்லாததால், தானே தனித்து தழைத்து வந்ததால், அதற்கு தனியொரு பெயர் தேவையிருக்கவில்லை. உலகெங்கும் உள்ள வரலாற்றுக் கல்வெட்டுக்களும், ஒட்டிக்கொண்டிருக்கும் பழக்கவழக்கங்களும், புழங்கிவரும் மொழிச்சொற்களுமே சான்று. எஹிப்து நாட்டில் "மித்ர வருண சாக்ஷியாக" என்று கி.மு 1300 முன்னாலே உரைக்கும் கல்வெட்டைக் காணலாம். மெக்சிகோ நாட்டில் நவராத்திரி நாட்களில் "ராம்-சீதா" என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது என்று தெரியவந்துள்ளது மேலும் அந்நாட்டில் சில இடங்களில் விநாயக விக்கிரஹங்கள் கண்டெடுக்கபட்டது. விஷு பண்டிகைக் காலத்தில், தெற்கு அமெரிக்காவில் ஆண்டிய மலைப்பகுதி பழங்குடியினர் "இன்காஸ்" என்ற பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

http://en.wikipedia.org/wiki/Inca_religion
http://www.myperu.org/fiestas_festivals_peru.html

உபநிஷதத்தில், ஆதாம் ஏவாள் கதைகளை நினைவூட்டும் வகையில், "ஜீவாத்மாவாக வரிக்கப்பட்ட ஒரு பறவை பழத்தைக் (ஜீவ ரசத்தை / உலக இன்பத்தை) களிக்க, அதை பார்த்து கொண்டு சாட்சியாக நிற்கிறதாம் பரமாத்மாவாக வரிக்கப்பட்ட இன்னொரு பறவை." சனாதன தர்மத்தின் சனாதனத்திற்கு எண்ணற்ற சாட்சிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

'ஆயிரம் உண்டிங்கு ஜாதி' என்றான் பாரதி. மனிதன் கூட்டம் கூட்டமாக தம்மை சிறு சிறு பிரிவுகளாக்கிக் கொண்டு, அதன் பொருட்டு, சண்டையிட்டு பேதம் வளர்த்து வாழ்கையின் உயரிய நோக்கங்களினின்று பிறழிப் போகின்றனர். எத்தனை பாடங்களும் படிப்பினையும் பெற்றாலும் ஜாதி த்வேஷங்கள் வேறூன்றி விட்ட நிலையில் நமக்கென வரும் போதும் கூட நம்மால் வேறுபாடுகளை எளிதில் களைந்து விட முடிவதில்லை.
இதையெல்லாம் பட்டுத் தெரிந்து, பின் தெளிகிறார் நடேச முதலியார். அவர் மகளுக்கும் சார்யாரின் மகனுக்கும் இருவரின் பரிபூர்ண சம்மதத்துடன் திருமணம் இனிது நடக்கிறது. வையாபுரியும் அவர் மகன் பெருமாளும், விபத்தில் இறக்க நேரிட, சார்யார் தான் பெரும் தவறு செய்துவிட்டதை உணர்கிறார். பெருமாளை தன் சொந்த மகனாக வரித்து அவனுக்கு ஈமைக் கடன் செய்து தன் மனதின் அழுக்காறு களைய பரிஹாரம் தேடுகிறார்.

(வளரும்)

aanaa
1st July 2009, 07:22 PM
19 -06-09

'அ'காரம் என்பது விழிப்பு நிலையான படைத்தலை, அதன் ஆரம்பத்தை உணர்த்துகிறது. "அ" என்று ஆரம்பிக்கிறது ஏறக்குறைய உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும்.

"உ"காரம் காப்பதைக் குறிக்கிறது. தொடர்தலை, வளர்த்தலை, பரிபாலித்தலை குறிக்கிறது. கனவு நிலையின் பிரதிபலிப்பு

"ம" காரம் ஆழ்ந்த நித்திரைக்கு ஒப்பான அழிவு நிலையை காட்டுகிறது.


(வளரும்)

:clap:

மேற்கோள்களுடன் உதவியமைக்கும்

:ty:

Shakthiprabha
1st July 2009, 11:34 PM
22-06-09


திருநீறின் மஹிமையைக் கூறும் சம்பவம் மதுரையில் நடைபெற்றது. மதுரையை ஆண்டுகொண்டிருந்த நெடுமாற பாண்டியனுக்கு சமணமதத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டதால், அவன் சமணத்தை தழுவியிருந்தான். சைவர்களான அவன் மனைவி மங்கையர்கரசிக்கும் அமைச்சர் குலச்சிறையார் இதில் பெரும் வருத்தம். சமண்த்துறவிகள் மதபேதத்தாலும் மதியிழந்து, மன்னனின் சம்மதத்துடன், திருஞானசம்பந்தருக்கு தீ வைத்துவிடுகின்றனர். 'அவன் இட்ட தீ அவனையே சென்று மெல்லத் தாக்கட்டும்' என்று ஞானசம்பந்தர் தீயின் தாக்கத்தை பாண்டியனுக்கே திருப்பிவிடுகிறார்.

"செய்யனே திருவாலவாய் மேவிய
ஐய்யனே அஞ்சலென்றருள் செய்யெனைப்
பொய்ய ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பையவே சென்று பாண்டியர்காகவே"

மன்னனின் மனைவியும் அமைச்சரும், மிகுந்த சிவபக்தர்கள் என்பதால், இரங்கி, தீயை மெல்லத் தாக்கப் பணித்தாராம் சம்பந்தர். தீயின் வெப்பம் மெல்ல உடலில் பரவ, அதன் தாக்க்த்தை தாளாது மன்னன் துடிக்க, சமணர்கள் செய்த எவ்வித மந்திரங்களும் சிகிச்சைகளும் பலனளிக்கவில்லை. மங்கையர்க்கரசி, குலசேகர பாண்டியன் அழைப்பின் பேரில் சம்பந்தர் ஆஜராகி, மன்னனை குணப்படுத்துகிறார். மந்திரம்
ஜபித்து திருநீறு பூசி குணமடையச் செய்கிறார்.

"
மந்திரமாவதும் நீறு வானவர் மேலதும் நீறு
சுந்தரமாவதும் நீறு துதிக்கப்படுவதும் நீறு
தந்திரமாவதும் நீறு சமயத்தில் உள்ளதும் நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே."

என்ற திருநீற்றுப்பதிகத்தை பாடுகிறார்.

சமணர்களுக்கு சைவத்தின் மீதும் சம்பந்தர் மீதும் விரோதம் இருந்தபடியால், அவர் குணமானதை மந்திர தந்திர விஷயம் என்று ஒதுக்கி விட்டு, தங்களோடு வாதமிட அழைப்பு விடுக்கின்றனர். அனல்வாதம் புனல்வாதம் என்ற இருவாத முறைகளிலும் முறையே மந்திரம் ஓதப்பட்ட ஏடுகளை தீயிலும் நீரிலும் இட்டாலும், எந்த ஏடு எரியாமல், மூழ்காமல் நிற்கிறதோ அவர்கள் வென்றதாக கருதப்படவேண்டும், என்பது நிபந்தனை. சம்பந்தர் அனைத்திலும் வெற்றி பெற்றுவிடுகிறார். சமணர்கள் சிலர் மதம் மாறுகின்றனர். வேறு சிலர் கழுவில் ஏறி உயிர்த் துறக்கின்றனர் என்று சரித்தரம் அழுத்தமாக நடந்தவற்றை எடுத்துரைக்கிறது.

அத்தகைய மகிமை வாய்ந்ததாம் திருநீறு. பக்தியுடன் அணிவோருக்கு நல்லருள் கிட்டும் என்பது திண்ணம். இதை அறிந்த நமது நீலகண்டன், திருநீறு சகிதம் தம் தோற்றத்தில் பெருமாற்றம் கொணர்ந்து கோவில் குளங்களை தரிசித்து பக்தியில் திளைக்கிறார். சாம்பு சாஸ்த்ரிகள் போன்ற பெரியோர்களை மதித்து அவர்கள் ஆசியும் பெற்று வியக்கத்தடும் ஆத்திகனாக மாறிவிடுகிறார்.

அஷோக்கின் பயணம் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. கிரியின் தந்தை சிகாமணி சத்தியத்தை கடைபிடிப்பவர் எனக் கூறக்கேட்டு, அவரை சந்திக்கிறான் அஷோக். பிறப்பால் எந்த ஜாதியில் பிறக்கிறான் என்பது சர்ச்சைக்குறிய விஷயமே அல்ல. தன் ஒழுக்கத்தால் நடத்தையால் எவனும் எந்த வர்ணத்திற்கும் மாற முடியும் என்று சாஸ்திர நூல்களும் குறிப்பிடுகின்றன. சூத்திரன் என்ற வர்ண முறையைச் சேர்ந்தவனும் கூட பிராமணன் ஆகலாம். சூத்திரனுக்குறிய அடையாளங்கள், அவன் பிறருக்கு தன் உடலால், உழைப்பால் சேவை செய்பவன். உடலுழைப்பை ஏனையோருக்கு வழங்குபவன் சூத்திரன் என்று பொதுவாக அறியப்படுகிறது. அதே போல் பிராமண வர்ண முறையை (ஜாதி அல்ல) சேர்ந்தவனும் தன் தேர்வினால், சுத்திர வர்ண முறையை தழுவி வாழலாம். வாழ்வின் முறையை நாம் ஒவ்வொருவரும் மாற்றி அமைத்துக்கொண்டே தொடர்கிறோம். விச்வாமித்ரன் என்ற க்ஷத்ரியன், பிராமணனாக மாறி, காயத்ரி மந்திரத்தை உலகுக்கே உபதேசித்து, பிராமணீயத்திற்கு பாதை வகுத்தார். கசப்பு கடைக்காரன் உண்மையான பிராமணனாக வாழ்ந்த கதையின் குறிப்பை முன்பே கண்டோம். சத்யகாம ஜாபலி உயர்ந்த பிராமணன். அதனால் அஷோக் சிகாமணியே தான் தேடும் உண்மை பிராமணனாக இருக்கக்கூடும் என்று நினைத்து அவரை நாடுகிறான்.

ஒருவனை பிராமணனாக தேர்வு செய்யும் விதிமுறைகளைப் மீண்டும் நினைவு கூர்வோம்.

மனசை அடக்கி, இந்திரியங்களை ஜெயித்து, தவம், பொறுமை, ஞானம், கருணை, சத்தியம் முதலியவை இருக்கப்பெற்றவன் பிராமணன்.

பிராமணன் என்பவன் தானாக அவனுக்கு கிடைக்கும் உணவையே உட்கொள்ள வேண்டும். வயலில் எரியப்பட்டதை பொறுக்கி எடுத்து பொங்கித் திங்கலாம். யாசித்துப் பெறலாம், 'உஞ்சவிருத்தி' செய்து உணவைப் பெறலாம்.

இப்படிப்பட்ட கடினமான பாதையை, வைராக்கியம், சத்தியம், பக்தி, ஆசையின்மை என்ற ஊர்திகளைக் கொண்டு கடக்கவேண்டும்.

பொறாமையின்மை, ஞானம் போன்ற ஷக்திகளே இந்த இவ்வூர்திகளுக்கு உரமிடும் குணங்கள்.

"சத்தியத்தை மட்டுமே ஒரளவு கடைபிடிக்கும் நான் எப்படி பிராமணன் ஆவேன்?" என்று மறுக்கிறார் சிகாமணி. ஒருவேளை, அவர் வாழும் முறை என்றேனும் அவரை உயர்வின் வழிக்கும், உண்மையின் அருகாமைக்கும் படிப்படியாக இட்டுச் செல்லலாம்.

And miles to go before I sleep,
And miles to go before I sleep.

(வளரும்)

aanaa
2nd July 2009, 06:24 AM
22-06-09

"சத்தியத்தை மட்டுமே ஒரளவு கடைபிடிக்கும் நான் எப்படி பிராமணன் ஆவேன்?" என்று மறுக்கிறார் சிகாமணி. ஒருவேளை, அவர் வாழும் முறை என்றேனும் அவரை உயர்வின் வழிக்கும், உண்மையின் அருகாமைக்கும் படிப்படியாக இட்டுச் செல்லலாம்.

And miles to go before I sleep,
And miles to go before I sleep.

(வளரும்)

:ty:

:clap:

Shakthiprabha
2nd July 2009, 04:06 PM
23-06-09

'வேதம் கற்றால் அவன் பிராமணன் ஆகிவிடுவானா?' என வினவுகிறது நம் உள்ளுணர்வு.

சாஸ்திரங்களுக்கும் வேதத்திற்கும் என்ன வித்தியாசம்? சாஸ்திரங்கள் புவியில் வாழும் வழிமுறைகளையும் விதிகளையும் லோக வாழ்வுக்கு தேவையான அறிவையும் பிரிவுகளாய் எடுத்துறைக்கிறது. வேதமோ பரம்பொருளை நோக்கி நாம் செய்யும் பயணம். சாஸ்திரங்கள் தெரிந்ததால் அவன் இறையை உணர்ந்திருக்கிறான் என்றோ, உயர்ந்தை இலக்கை நோக்கி அடி எடுத்து வைத்துள்ளான் என்ற எண்ணமோ பெரும்பாலும் தவறானது. வேதம் கற்றிருந்தால் மட்டுமே ஒருவனின் அறிவை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லக்கூடிய அறிவாகக் கொள்ளலாம்.

வேதங்கள் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களாய் பிரிவாகியுள்ளது.

இவற்றில் ரிக் வேதம் மந்திர பாகமாகவும் சூக்தங்களாகவும் உள்ளது. யஜுர் வேதம் யாகங்களின் மந்திரமாகவும், சாமம் இசையோடு கூடியதாகவும், அதர்வணம் யந்திர தந்திர அடிப்படைகளை விளக்குவதாகவும் விளங்குகின்றன. ரிக் வேதம் செய்யுள் நடையோடும், யஜுர் வேதம் உரை நடையின்
வழியிலும், சாம வேதம் கானம்/பாடல்களாகவும் எழுதப்பட்டு ஓதப் பட்டு வந்தன.


பொதுவாக ரிக்வேதம் 10 மண்டலங்களாகவும், 10415 ரிக்குகள் உடையதாகவும், 1029 சூக்தங்கள் உடையதாகவும் சிறந்து காணப்பெறுகின்றது. கடவுள் ஒருவரே! அவரே தலைவர், அவரே பலராக ஆகின்றார் என்பன ரிக் வேதத்தின் சாரமாகும்.

http://tamilvishai.com/home/?p=1306


யஜுர் வேதம் யாகங்கள் செய்யும் முறைகளை விளக்குக்குவதாக அமைந்துள்ளது.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D_%E0% AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

சாம வேதம் பாடல்களின் வடிவில், ஒலிவடிவில் இறைவனைப் போற்றித் துதிக்கும் வேத ஒலிகள். வேதங்களின் நான் "சாம வேதம்" என்கிறான் கீதையில் கண்ணன். சாம வேதம் ஓம்காரத்தின் சாரம்சமாக கருதப்படுகிறது.


http://www.iloveindia.com/literature/sanskrit/vedas/sama-veda.html

அதர்வண வேதம் மந்திர யந்திர தந்திரங்களும், விஞ்ஞான கருத்துக்களும், உலகியல் ஆரோக்யத்திற்கும் வளமான வாழ்வுக்கு தேவையான அறிவும் அதர்வன வேதத்தில் தரப்பட்டிருக்கிறது. தற்காலத்தில் இது அதிகம் வழக்கில் இல்லை.

http://www.dalsabzi.com/enlight_info/atharva_veda.htm

ஒவ்வொரு வேதமும் நான்கு பாகங்களாக பிரிக்கப்படலாம். 'சம்ஹிதை' என்பது மந்திர பாகம், 'ப்ரம்மணம்' என்பது யாகம் செய்யும் முறைகள், 'ஆரண்யகம்' யாகத்தின் அர்த்தங்களையும், அதன் நோக்கத்தையும் விரிவுபடுத்துகிறது. இறுதியாக வேதத்தின் ஒரு பகுதியான "உபநிஷதம்" .

வேதங்களின் அந்தமே 'வேதாந்தம்' . அதுவே பரம்பொருள். ரிஷிகள் உணர்ந்து உபதேசித்தது உபநிஷதம். ஆன்மீகத் தேடலுக்கு வழிகாட்டி. "நான் யார்" என்ற மையக் கேள்வியும், "ஜீவ - பரமாத்மா" பாகுபாடுகளும், பிரம்மத்தை அடையும் முறைகளும், ஆன்ம ஞானம் முதலியன பற்றிய விளக்கங்களும் உபநிஷதத்தின் முக்கிய கருத்துக்கள். மொத்தம் 108 உபநிடதங்கள் உள்ளன. அதில் பன்னிரெண்டை முக்கியமாக சொல்வதன் காரணம், ஷங்கரரும், ராமானுஜரும், மாத்வரும் இவற்றை பாதுகாத்து உரை எழுதியிருப்பதால், புரிதல் எளிதாகிறது. படிப்பதால் அன்றி, உணர்வதால், உணர்ந்து நடப்பதால் ஒருவன் உயர் கதி அடைகிறான்.

'வேதம் கற்றால் அவன் பிராமணன் ஆகிவிடுவானா?

இப்பொழுது பதிலும் தெளிவாகிறது. வேதம் கற்பதால் அவன் அறிவு மட்டுமே விருத்தியடைகிறது. வேதம் மனிதனுக்கு பாடம் புகட்டுகிறது. அது இலக்கு அல்ல. இலக்கை நோக்கி நம்மை இட்டுச் செல்லும் பாதை. கற்றத்தைத் தாண்டி வேதத்தை "உணர்ந்தால்" உணர்ந்து அதன்படி நடந்தால், அவன் பிராம்மண நிலைக்கு தன்னை தயார் படுத்திக்கொள்கிறான்.

அவனின் தன்மைகளில் சிலவற்றை முன்பு கண்டோம். மேலும் சில குணங்களும் அவசியமாகிறது.

பிராமணன் என்பவன் சமப்பார்வையுடையவனாக இருக்க வேண்டும். சமப்பார்வை என்பது மனித ஜாதிகளைக் குறிப்பிடுவதல்ல. அதற்கெல்லாம் அப்பாற்பட்டு நிற்பது. இரட்டைகளற்ற பார்வை. மரம், செடி, மிருகம், மனிதன் என்ற பேதமே அகன்று விடும் பார்வை. எல்லாம் ஒரே பொருளின் வெளிப்பாடுகள் என்ற பார்வை. மானம் அவமானம், விருப்பு வெறுப்பு, அற்ற நிலை.

நாளைக்கு என சேமித்து வைப்பவன் பிராமண நிலைக்கு தயார்படுத்திக்கொண்டவனில்லை. பொருளையோ பணத்தையோ சேமித்து வைத்தல் அவனுக்கு விதிக்கப்பட்ட இயல்பு அல்ல.

மேலும் அவனுக்கென கூறப்பட்டுள்ள ஷட்கர்மாக்களை (ஆறு) பற்றின்றி செய்பவனாக இருக்க வேண்டும்)

[ 1. வேதம் கற்பது கற்பிப்பது
2. யாகம் செய்வது செய்விப்பது
3. தானம் வாங்குவது (உடன்) கொடுப்பது ]

பிராமணன் ஒரு ஞானியைப் போல் வாழ வேண்டும். பிறகு ஞானிக்கும் (வர்ண)பிராமணனுக்கும் என்ன வித்தியாசம்? வர்ண முறைப்படி பிரம்மணீயத்தை தழுவியவனுக்கு கர்மாக்கள் உண்டு. பிராமணன் கர்மாக்களை பற்றற்ற உணர்வுடன் செய்வதால் அவன் ஞானியின் நிலையில் தன்னை இருத்திக்கொள்கிறான். ஞானியோ கர்மாக்கெல்லாம் அப்பாற்பட்டு வேதத்தின் கருப்பொருளின் பரம்பொருளின் அருகாமை நிலையில் நிற்பதால், அவனை கர்மாக்களும் கூட கட்டுப்படுத்துவதில்லை எனக் கொள்ளலாம்.

(வளரும்)


( PS: Explanation and on the diff between 'gnaani and a brahmin' is based on my undertanding and deduction. I am eager to know any wiser explanation. I shall then stand corrected. )

aanaa
2nd July 2009, 06:32 PM
23-06-09

வேதமோ பரம்பொருளை நோக்கி நாம் செய்யும் பயணம்.


கடவுள் ஒருவரே! அவரே தலைவர், அவரே பலராக ஆகின்றார் என்பன ரிக் வேதத்தின் சாரமாகும்.
(வளரும்)


( PS: Explanation and on the diff between 'gnaani and a brahmin' is based on my undertanding and deduction. I am eager to know any wiser explanation. I shall then stand corrected. )

:clap: :clap:

:exactly:

Shakthiprabha
2nd July 2009, 10:31 PM
24.06.09

ரமேஷ்-உமா கல்யாணம் இனிதே நடைபெறுகிறது.

கல்யாணச் சடங்குகள் தற்காலத்தின் வசதிக்கு ஏற்ப வெகுவாக குறைக்கப்பட்டுவிட்டாலும், சுருங்கப்பட்ட திருமணங்களிலும் கூட சில சம்பிரதாயங்கள் மாறாது கடைபிடித்து வருகிறோம். அவற்றில் ஒன்று மாலை மாற்றுதல். மணமான இருவர் மாலை மாற்றிக்கொள்வதன் அர்த்தம், அவர்கள் இனி இருவரல்ல, ஒருவரே என்று ஊரறிய சொல்லாமற் சொல்வது. என்னுடைய எல்லாம் இவளுக்கும் இவளுடையது எல்லாம் எனக்கும் சொந்தம் என்று உரைப்பதே மாலை மாற்றும் பழக்கத்தின் உள்ளர்த்தம். மேலும் 'என் மனநிலை இதுதான்' என மணமகன் மாலை சாற்றுகிறான். 'அதை நான் அப்படியே ஏற்கிறேன்' என்று மணமகள் மாலையை வாங்கிக் கொள்கிறாள் என்பது இன்னொரு அர்த்தமாம்.


சில வீட்டுத் திருமணங்களில் தாலி கட்டுதற்கு முன்பு, தலையில் நுகத்தடி நிறுத்துவது பழக்கம். மாடுகள் இரண்டும் சேர்ந்து வண்டியை சுமந்து கரைசேர்வது போல், புருஷனும் அவன் ஸ்த்ரீயுமாக இல்லறத்தை குடைசாயாது சமமாக நடத்தக் கடமைப்பட்டவர்கள் என்று பலர் கூறக் கேட்டிருக்கிறோம். இதுவும் பிற்காலத்தில் நடைமுறைக்கு ஒத்தவாறு சொல்லப்பட்ட கருத்து. நுகத்தடி வைப்பதற்கு வேறு அர்த்தமும் உண்டாம். அத்திரி மஹரிஷியின் மகள் அபலா, தோல்வியாதியால் அவதிப்படுகிறாள். அதனால் அவளுக்கு திருமணம் நடந்தேறவில்லை. அவள் இந்திரனை நோக்கி பிரார்த்திக்கிறாள். அவனும் அவள் பிரார்த்தனைக்கு இரங்கி, அவளுக்கு நுகத்தடியை வைத்து, மந்திரம் ஓதி, நீர் விடுகின்றான்.
உடனே அவள் வியாதி நீங்கி பூர்ண குண்மடைந்து இந்திரனையும் மணக்கிறாள். மணமகளாகப்பட்டவளும் நோய் நொடிகளுக்கு பலியாகாது சிரஞ்சீவியாக இருக்கக்கடவது என்று மந்திரம் சொல்லி நுகத்தடியின் மேல் நீர் விடுவது வழக்கமாகியது.

சமீபத்தில் திருமணம் செய்து வைக்கும் சாஸ்திரிகள் பலர் திருமண சடங்கில் சப்தபதியின் முக்கியத்துவத்தை உரைக்கின்றனர். திருமணம் தாலிகட்டுவதுடன் முடிந்துவிடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், தாலிகட்டிவிட்டதால் இருவர் கணவன் மனைவியாக ஒப்புக்கொள்ளப்படுவதில்லை. சப்தபதி என்ற சடங்கே திருமணத்தை பூர்த்தி செய்கிறது. 'தாலி' என்ற வழக்கமே பிற்பாடு தோன்றப்பட்டது என்று பலர் கூறுகின்றனர். 'பொன்' சேமித்தல் தம்பதியரின் அவசர-அவசிய காலகட்டங்களில் சேமிப்பாக இருக்க உதவும் என்பதால் தாலி வழக்கம் பின்னாளில் ஏற்படுத்தப்பட்டதாய் இருக்கலாம். ஆனாலும், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்திலும் சௌந்தர்ய லஹரியிலும் அம்பாள் திருமாங்கல்யம் அணிந்திருபதாய் பாஷணைகள் இருக்கின்றன. சௌந்தர்ய லஹரியில் , அம்பாள் கழுத்தில் மாங்கல்யமாக மூன்று நூல்கள் மூன்று ரேகைகளாக இருக்கின்றன என்று ஆபஸ்தம்ப சூத்திரத்தில் இருக்கின்றதாம். அதனால் 'தாலி' பற்றிய சர்ச்சைக்கு விளக்கம் தெளிவாகக் கூறுவது கடினம். அடுத்து சப்தபதியைப் பார்ப்போம்.

சப்தபதி என்றால் 'ஏழு அடிகள்' என்று பொருள். ஒரு ஆடவனும் பெண்ணும் சப்தபதி எடுத்துவைத்தால் அவர்கள் நண்பர்கள் ஆகின்றனர். ஏழு அடிகளை ஒன்றாக எடுத்து வைப்பதன் மூலம் அவர்களின் தோழமை உறவு கொண்டாடப்படுகின்றது. யமனுடன் ஏழு அடிகள் சாவித்திரி எடுத்து வைத்ததனால், அவளை விலகச் சொல்லும் யமனிடம், சப்தபதி உன்னுடன் நடந்ததனால் "நீ என் நண்பன், நட்பின் பெயரிலாவது என் மணாளனை மீட்டுக் கொடு' என்று சாவித்திரி கேட்கிறாள்.

'ஏழடிகள் நடந்ததனால் நீ என்னுடன் நடந்ததனால் இன்று முதல் நீ என் தோழி,
நான் வானம் என்றால் நீ பூமி
நான் மனம் என்றால் நீ வாக்கு
எல்லோருடனும் அன்பு பூண்டு இல்லறத்தை இனிதாக்குவாயாக"

என்று அவன் கூறி அவளை தோழியாக ஏற்பதன் மூலம் மனையாளாகவும் ஏற்கிறான் என்பதே சப்தபதியின் உட்கருத்து.

உணவு நிறைவதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
உடல் வலிமை பெறுவதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
நல்ல காரியங்கள் நடைபெறுவதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
சுகத்தை அளிப்பதற்காக விஷ்ணு நம்மோடு வரட்டும்
பசுக்களையும் செல்வத்தையும் அளிப்பதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
நாட்டில் நல்ல பருவங்கள் தவறாது இருப்பதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
யாகங்களை செய்து வைக்கும் வாய்ப்பு கிட்டுவதற்காக விஷ்ணு நம்மோடு வரட்டும்

என்பது ஒவ்வொரு அடியிலும் சொல்லும் மந்திரங்களின் பொருள்.

அதற்கு பின் வரும் சம்பிரதாயங்கள் "அம்மி மிதிப்பதும் அருந்ததி பார்ப்பதும்". நேர காலங்கள் சரியாக அமையாது துன்பம் நேரும் போதும் அம்மியைப் போல் கலங்காது அவள் உடன் வரவேண்டும் என்பது அம்மி மிதப்பதன் அர்த்தம். அருந்ததி என்பவள் நட்சத்திரம். துருவனைப் போல் என்று அழியாது சிரஞ்ஜீவியாக திகழ்பவள். பதிவ்ரதா தர்மத்தை வழுவாது கடைபிடித்தவள். பத்தினிகளில் எல்லாம் உயர்ந்தவள். வசிஷ்டரின் மனைவி. சப்தரிஷிகளின் பத்தினிகளில் இவள் உயர்ந்தவளாக கொள்ளப்பட்டிருக்கிறாள். "வசிஷ்டரின் மனைவி அருந்ததி எப்படி பதிவ்ரதையோ அப்படியே நானும் ராமனை விட்டு பிரியாமல் இருபேன்" என்று சீதை கூறினாள். அருந்ததியை தரிசனம் செய்து 'இவளைப் போல் நீயும் இருப்பாயாக' என்று மணமகளுக்கு சொல்வது போன்ற நியாயம். (மணமகனுக்கு அறிவுரைகள் ஒன்றும் இல்லை போலும் :roll: )

தன் செய்கைகளினால் மிகுந்த வருத்தமடையும் சார்யார் பிரயாச்சித்தம் தேடுகின்றார்.

"ஆத்மைவ ஆத்மனோ பந்துஹு ஆத்மைவ ரிபுஹு ஆத்மனஹ" என்கிறது பகவத்கீதை.

ஜீவாத்மனுக்கு ஆத்மனே தோழன். நண்பன். அவனை உயர்த்தி விடுபவன். ஆத்மனுக்கு அவனே பகைவனும் கூட. ஒருவன் தன்னை உயர்த்திக் கொண்டால் ஆத்மன் நண்பனாக பணிபுரிந்து மேலே எழுப்பி விடுகிறது. மனசை ஜெயித்தபாடில்லை என்றால் அதுவே தனக்கு பகைவனாகவும் மாறும் வல்லமை படைத்தது. மனம் என்னும் இந்திரியத்தை கையாளத் தெரியாமல், தன்னைத் தானே அழித்துக்கொள்பவன் தனக்குத் தானே பகைவன் ஆகின்றான். தன்னைத் தானே ஜெயித்தவன் பரம்பொருளின் அருகாமையை அடைகிறான்.

சார்யாரின் மனமாற்றத்தையும் அவர் உயர்ந்த செய்கைகளையும் மெச்சும் டாக்டர், அவரையே உயர்ந்த பிராமணனாக கருதுவதாக அஷோக்கிடம் தெரிவிக்கிறார். "அவரே சிறந்த தென்கலை வைணவ பிராமணனுக்கு உதாரணம்" என்கிறார்.

தென்கலை வடகலை வைணவர்களின் பேதங்களை முன்பொரு அத்தியாயத்தில் கண்டிருந்தோம். நாராயணனே சகலமும், சர்வமும் என்பது இருவரும் ஒப்புக்கொள்ளும் கூற்று என்றாலும், கூட மொத்தமாக தென்கலை வடகலை வைணவர்களிடம் இருபத்தெட்டு அபிப்ராய பேதங்கள் இருக்கின்றனதாம்.

1. மர்ஜார மர்கட - பூனை தன் குட்டியை கவ்விக் காப்பதை போல் இறைவன் காக்கின்றான் என்பது மர்ஜார தென்கலை வாதம். குரங்குக்குட்டியைப் போல் தானே முயன்று தாயைப் பற்றிக்கொள்ளல் வேண்டும், அந்த சிறு முயற்சியேனும் ஜீவாத்மா மேற்கொண்டு அதன் பின் இறைவனிடம் நம்மை ஒப்புவித்து விடலாம் என்பது மர்கட வடகலை நியாயம்.

2. இலக்குமி தேவிக்கும் நாராயணனைப் போல் எல்லா வல்லமையும் பொருந்தப் பெற்றவள். மோக்ஷத்தையும் அளிக்கவல்லவள் என்கிறது தென்கலை. வடகலை இலக்குமி தேவியை நாரயாணனுக்கு சமமாய் பார்க்கவில்லை.

3. பக்தி அல்லது ஷரணாகதி இருந்தால் போதுமானது என்று வடகலை வலியுறுத்த, பக்தி மட்டுமே போதாது ஷரணாகதி அவசியம் என்பது மற்ற சாரார் கருத்து.

4. நாம் செய்யும் தவறுகளையும் பாபங்களையும் இறைவன் ஏற்றுக்கொள்கிறார் என்கிறது தென்கலை. பாவங்களை கடவுள் மன்னித்து புறம்தள்ளிவிடுகிறார் என்பது வடகலை கண்ணோட்டம்.

5. ஒருவன் துன்பத்தில் துவண்டால், இறைவனும் அவனுடன் சேர்ந்து துவள்கிறார் - தென்கலை இறைவன் இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டவர், அவர் துன்பத்தை விலக்கக்கூடியவர் - வடகலை.

6. சந்தியாவந்தனம் போன்ற நித்யகர்மாக்கள் அவசியமாக்குகிறது வடகலை. ஞான நிலை எய்திய ஒருவனுக்கு நித்யகர்மாக்கள் அவசியமில்லை
என்கிறது தென்கலை.


என்பன பொதுவாக நிலவும் சில பேதங்கள்.

(வளரும்)

aanaa
3rd July 2009, 11:24 PM
24.06.09

ரமேஷ்-உமா கல்யாணம் இனிதே நடைபெறுகிறது.

என்பன பொதுவாக நிலவும் சில பேதங்கள்.

(வளரும்)

பொறுமையக அனைத்தையும் எமக்காக நேரம் ஒதுக்கி எழுதியமைக்கு மிக்க நன்றி

:ty:

Shakthiprabha
7th July 2009, 01:06 PM
25.06.09

கோவில்கள் சிறப்பானவை. அதனை ஆகமவிதிப்படி உருவாக்கியிருந்தால் அதன் சிறப்பு பன்மடங்கு அதிகரிக்கிறது. ஆகமவிதி என்பது, கோவிலகள் அமைக்கும் முறைகளை, விதிகளை கூறுகிறது. அதனையொத்து கட்டப்படும் கோவில்களில் மென்மேலும் மெருகு கூடுகிறது. கோவில்களை எப்படிக் கட்டுவது, எவ்வகை நிலப்பரப்பை தேர்ந்தெடுப்பது, ஆலயங்களின் அளவு-அமைப்புகள், பூஜை விதிகள், அதற்கான காலங்கள், முதலியவை எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன. கோவிகள் கட்டுவதற்கு ஏற்ற இடம் அமைவதற்கு பல இடங்களில் "பூ(bhoo) பரிட்சை" நடத்தபட்டு, அதன் பின்னரே ஆலயங்கள் எழுப்பப்படுகின்றன. 'வாமதேவ பத்ததி'யை முன்னிருத்தி செய்வதாக கூறப்படுகிறது. இது சைவர்களின் 'சிவ-ஆகமம்'. (வைணவர்களுக்கு முறையே, 'வைகானசம், பஞ்சராத்ரம்' என்ற விதிமுறைகள் உள்ளன.)

சிவலிங்கத்தை மூன்று அங்கங்களாக பிரிக்கலாம். விஷ்ணு பாகம், ருத்ர பாகம், மற்றும் ஆவுடையாரில் தேவி பூஜிக்கப்படுகிறாள். ஆலயங்களில் பிரதிஷ்டை பல சமயங்களில் செய்யப்படுகின்றது.

ஆவர்த்தப் பிரதிஷ்டை என்பது முதல் பிரதிஷ்டையைக் குறிக்கிறது
அனாவர்த்தப் பிரதிஷ்டை பழுது ஏற்பட்டு புனர் நிர்மாணம் செய்யும் போது செய்யப்படும் பிரதிஷ்டை
புனர்-ஆவர்த்த பிரதிஷ்டை - சிறிய பழுதுகளை களைந்த பிறகு பிரதிஷ்டை செய்வது
அந்தரித பிரதிஷ்டை - பெரும் பாதிப்புக்களோ இழப்புக்களோ நேர்ந்து பின்னர் செய்யப்படும் பிரதிஷ்டை

சில ஆலயங்கள் மிகவும் ஷக்தி வாய்ந்ததாகவும், தொன்று தொட்டு நிலவி வருவதன் காரணமும், ஆகமவிதிப்படி அமைக்கப்பட்டதாக இருக்கலாம்.

இதையெல்லாம் தெரிந்து என்ன செய்யப்போகின்றோம்? ஆகம-விதி என்பது என்னவாய் இருந்தால் எனக்கென்ன? எவன் பிரமாணனாய் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் தான் என்ன!? என்ற கெள்வி எழலாம். 'நாம் தினமும் செய்யும் பல விஷயங்களால் நமக்கு விளையும் பயன் தான் என்ன' என்று சற்றே ஆராய்ந்தால், இப்படிப்பட்ட கேள்விகள் முன் நிற்காது. வரலாற்றுத் தகவல்கள் முதல், பொழுதுபோக்கு சமாசாரங்கள் தொட்டு, பொது அறிவு வரை, வெறும் தகவல்களைத் தெரிந்துக்கொண்டு என்ன பயன்? நம் வாழ்வில், உழைப்பினாலன்றி, யாதொரு மாற்றமும் தேவையற்ற தகவல்களைத் தெரிந்து வைத்துக்கொள்வதால் வந்து விடுவதில்லை.

ஒவ்வொரு மனிதனின் பிறப்பும், இறுதியான ஆன்ம இலக்கை நோக்கி ஓரடியேனும் எடுத்து வைப்பதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டது. அறிவுபூர்வமான விடைகள் பல விடயங்களுக்கு கிடைக்காது போயினும், ஆன்ம இலக்கை நோக்கி முயன்றுகொண்டிருப்பதே நம் ஒவ்வொருவரின் மறைமுக இலட்சியம் என்பது மறுக்க முடியாத உண்மை. நமக்குக் கிடைக்கும் சில தகவல்கள், பொக்கிஷங்களாகி வேகமாக இலட்சியத்தை நோக்கி நம்மையறியாமலே நகரச் செய்யக்கூடியது. மேலும், தற்காலத்தில் மிக அதிகமாக விளங்கி வரும், பிரிவுகளும், ஜாதி-மத-இனக் கலவரங்களும், மனிதர்கள் பாதை வழுவி, எத்துணை தூரம் சென்றுவிட்டனர் என்று உணர்த்துகிறது. ஆன்மீக அறிவு, பிரிவுகளைக் கடந்த மனித நேயத்தை உருவாக்க வல்லது. நமது பார்வையை குறைந்தபட்ச பேதங்கள் அகற்றி பார்க்கச்செய்ய வல்லது.



அஷோக்கின் தெடலின் விடை சார்யாரா என்பதை பார்ப்போம். இந்த நிலைக்கு தான் தகுதியானவனா என்ற பதில் சார்யாரே சொல்லிவிடுகிறார். சார்யார் ஈமக்க்ரியை செய்தது உயர்ந்த உன்னதமான செயலாக இருப்பினும். அச்செயல் எதனால் செய்யப்பட்டது? அதன் நோக்கம் என்ன? செய்கைக்குப் பின்னுள்ள காரணத்தை ஆழ்ந்து நோக்கினால், சார்யாரின் பிள்ளைப் பாசமும், தான் செய்து விட்ட பிழைக்கு மனம் வருந்தி, செய்யப்படும் பிராயச்சித்த கர்மாவாக இதைப் பார்க்க முடியும். பிராயச்சித்தங்கள் அனைத்தும் சுயநலத்திற்காக செய்வது. உன்னதமான செயலாக இருப்பினும் சுயநலம் என்ற போர்வை, அதனை மூடி மறைத்திருக்கின்றது.

{ பி.கு: சமூகசேவைக்கான ஸ்தாபனங்களை பல நிறுவி தொண்டுகள் புரியும் சாவித்திரி வைத்தி அவர்கள், யாருமற்று இறந்து விடும் வயது முதிர்ந்தோருக்கு இறுதிக் க்ரியை செய்வதையும் தங்களின் நிறுவனத்தின் பணிகளுள் ஒன்றாக செய்து வருகிறார். இச்சேவையைப் பாராட்டி ஆனந்தவிகடனில் சில வருடங்களுக்கு முன் இவரைப் பற்றிய செய்தி வந்திருந்தது.

http://kala-bn.sulekha.com/blog/post/2008/03/a-tribute-to-the-woman-i-respect-mrs-savithri-vaithi.htm }

என்னதான் வேண்டும் உண்மை பிராமணனுக்கு, என்றால், பிராமண ஜாதியில் பிறந்தவர்கள் செய்யும் சந்தியாவந்தனங்களும், வழிகாட்டியாக விளங்கும் படிப்பறிவான சாஸ்திர சம்பிரதாயங்களும் வேதங்களும், அங்க அடையாளாங்களும் மட்டும் உங்களை உண்மையான பிராமணன் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியை கொடுத்து விடுவதில்லை. படிப்பறிவினாலோ, அறிவினாலோ, புண்ய ஸ்தலங்களுக்கு செல்வதாலோ, ஆன்மீகச் சொற்பொழிவுகளைக் கேட்பதினாலோ வந்துவிடுவதில்லை. தெளிந்த அறிவோடும், ஆன்மீகச் சிந்தனையோடும், ஒவ்வொரு கணமும் வாழப்பழக வேண்டும். ஏட்டுச் சுரைக்காயாக அறிவு இருந்து பயனிலை. அதனை பயன்படுத்தி வாழ்ந்தாலே ஒரு மனிதன் பிரம்ம ஞானத்தை பெறும் நிலைக்கு மாணாக்கன் ஆகும் உயர்வினைப் பெறுகிறான். தன்னடக்கமும், விடாமுயற்சியும் (வீழ்ந்தாலும், மீண்டும் எழுந்து உயரத்தை எட்ட எத்தனிக்கும் ஆன்ம தாகம்), ஞானம், வைராக்கியம் பெற்றவன் இன்னிலைக்கு தன்னை உயர்த்திக்கொள்ள தகுதியாவனாகிறான் என்று உபநிடதம் கூறுகிறது.

நடந்து சோர்ந்து போகும் அஷோக், அடுத்து சாம்பு சாஸ்திரிகளிடம் வினா எழுப்புகிறான்?

'வைதீகக் காரியங்களைச் செய்வதினாலும், மந்திரங்கள் ஓதுவதாலும், அங்க அடையாளங்கள் சிலவற்றை கடைபிடிப்பதாலும், எப்படி நீர் பிராமணன் ஆகலாம்?' என்ற தர்க்கம் அவரை திக்குமுக்காடச் செய்கிறது.

'பணம் சேர்ப்பது' என்பதே பிராமணனுக்கு விதிக்கப்படாத கர்மா. பணத்திற்காக புரோகிதர்கள் வேதம் ஓதுவதும், யாகம் நடத்துவதும் செய்கின்றதால், 'விதிமீறல்' ஏற்படுகிறது. பிராமணனுக்கான கர்மவிதியே அடிபட்டுப்போகின்றது.

(அடுத்த பாகத்தில் முடியும்)

aanaa
8th July 2009, 02:34 AM
:ty: SP


25.06.09

'பணம் சேர்ப்பது' என்பதே பிராமணனுக்கு விதிக்கப்படாத கர்மா. பணத்திற்காக புரோகிதர்கள் வேதம் ஓதுவதும், யாகம் நடத்துவதும் செய்கின்றதால், 'விதிமீறல்' ஏற்படுகிறது. பிராமணனுக்கான கர்மவிதியே அடிபட்டுப்போகின்றது.



இங்கு - கனடா நாட்டில் - அது ஒரு மிகப்பெரிய - அளவுக்கதிகமான வருமானத்தைக் கொடுக்கும் - லாபகரமான - வரியற்ற- வியாபாரமாகச் செய்கின்றார்களே !!!

வருத்ததுடன்
:-(

anbu_kathir
8th July 2009, 10:11 AM
'பணம் சேர்ப்பது' என்பதே பிராமணனுக்கு விதிக்கப்படாத கர்மா. பணத்திற்காக புரோகிதர்கள் வேதம் ஓதுவதும், யாகம் நடத்துவதும் செய்கின்றதால், 'விதிமீறல்' ஏற்படுகிறது. பிராமணனுக்கான கர்மவிதியே அடிபட்டுப்போகின்றது.


When grhastha Brahmins themselves hesitate to give enough respect ( both materialistic and spiritual ) to those who are the mantra chanters of their clan ( Vaidikas ), then there is no point in not saving money for the future. This is a world that respects a white collar job more than that of the Vaidika. Therefore, everyone has to adapt.

There has been a dramatic change since independence in each of our lives. I somehow see no point in holding on to the external aspects of religion. The internal aspects, the soul of religion must of course be reconciled with the present lifestyle and the unique circumstances it provides.

Love and Light.

Shakthiprabha
9th July 2009, 06:27 PM
26.06.09

தேடலின் முடிவு தான் என்ன? இன்றளவும் 'உண்மை பிராமணன்' என்று சொல்லிக்கொள்ளும் நிலையில் எவரேனும் இருக்கின்றனரா? ஜாதிப் பெயரால் பிராமணன் என்று சொல்வதில் உயர்வென்ன தாழ்வென்ன? பிறப்பால் ஒரு ஜாதியில் பிறந்துவிட்டதாலேயே தம்மை உயர்த்திக்கொள்வது பேதைமை. வர்ண முறைப்படி இன்று பிராமணன் மட்டுமல்ல எவருமே வாழவில்லை என்பதே உண்மை.

பிராமணன் என்பவன் பிரம்ம ஞானத்தை தேடுபவன். அவன் ஒவ்வொரு காரியமும் அதனை நோக்கி அதன் பொருட்டே செய்யப்படும்.

க்ஷத்திரியன் என்றால் உலகை நாட்டை மக்களைக் காப்பவன். க்ஷத்ரம் என்றால் வலிமை. அதை சரியான வழியில் மட்டுமே பயன்படுத்தி முறையாக பாலிப்பவன் உண்மை க்ஷத்திரியன்.

வைசியன் என்பவன் நியாயமான முறையில் வாணிபம் தொழில் அல்லது விவசாயம் செய்து பொருளீட்டி வருபவன்.

சூத்திரன் என்பவன் பிறர் துன்பத்தை பொறுக்காதவன் என்று பொருளாம். அதனாலேயே அவனுக்கு சேவை செய்யும் மனப்பக்குவம் இயல்பில் அமைகிறது.

தற்கால மனிதர்களை எந்த பிரிவில் சேர்ப்பது? யார் சுயநலமற்று சிந்திக்கிறார்கள்?


"நீங்க பிராமணன் ன்னு சொல்ற அருகதை உங்களுக்கு இருக்கா?" சாம்புசாஸ்த்ரிகளை மட்டுமன்றி நம்மையும் சிந்திக்கவைக்கிறது. எத்தனை சிந்தித்தும் என்ன பயன்? இப்பூவுலகில் இன்றளவும் வாழ க்ருஹஸ்தனுக்கு வேறு வழிகள் உண்டோ? நாளைய சோற்றைத் தேடி, வாழ்வைத் தெடி, தனக்கென இல்லாவிடினும் பிள்ளைகளின் வளத்தைப் பெருக்க பந்தங்களால் கட்டுண்டு இயலாமையால் மீண்டும் மீண்டும் பணத்தை நோக்கியே நம் ஓட்டம் திசை திருப்பப்பட்டிருக்கிறது.

எனக்கென ஒரு குடிசை போதும், பிறர் நலனுக்காக பிரார்த்தனை செய்து வாழ்கை வாழ விரும்புகிறேன். நல்ல உள்ளங்களும், தானம் செய்பவர்களும் இல்லாமலா போய்விடுவார்கள். எனக்கு வேண்டியதெல்லாம் ஒரு பிடி சோறு, உடுத்த இரு மாற்றுத் துணிகள். இப்படி சிந்திக்கவும் சிலர் இருக்கின்றனர். ஆனாலும் அச்சிந்தனை கணநேரத்திற்கு மேல் நீடிப்பதில்லை. "என்னை பிராமணனாக இருக்க விட மாட்டார்கள்" என அழுகிறார் சாம்பு. நம் வாழ்வை நாம் நிர்ணயிக்க முடிவதில்லை. நமக்கென குடும்பம் இருக்கும் பொழுது பிணைப்பிலிருந்தும் பொறுப்பிலிருதும் விடுபட முடிவதில்லை. நம் பிள்ளைகளுக்கு வேதம் கற்பித்து, நெல் பொறுக்கி உண்ணவும் உஞ்ச விருத்தி செய்து வயிறு நிரப்பவும் சொல்லிக்கொடுக்க முடிவதில்லை. அப்படி பிறர் நலன் கருதி யாகமும், தவமும், பூஜைகளும் ஹோமங்களும் செய்து வாழ்ந்த நம் முன்னோர்களுக்கு அக்காலத்தில் மதிப்பு இருந்தது. முறைகளை க்ரமப்படி செய்து, அத்தனை உயிர்களின் உயர்வுக்கும் நல்வாழ்வுக்கும் வழி வகுத்தனர். உலக நலன் கருதினர். அனைவரும் உய்யவேண்டி தம் திறமையை, கல்வியை ஞானத்தை செலவிட்டனர். அப்படிப்பட்ட பிராமணனுக்கு உணவிடுதலை கர்மமாக செய்து வந்தனர். அவர்களுக்கு தானம் தருவதை பாக்கியமாகக் கருதினர்.

http://www.vhp-america.org/whatvhpa/sanghatanmantra.htm

இவை மட்டுமல்லாது, சமப்பார்வையும், தவமும், பொறுமையும், தானமும் சீலமும், இந்தியங்களை அடக்குதலும் அவர்கள் இயல்பாய் இருந்தன. இப்பேற்பட்ட மனநிலையும் குணமும் இன்றைக்கு யாரிடம் இருக்கிறது? ஒரு க்ருஹஸ்தனால் அப்படிப்பட்ட வாழ்கை வாழ்வது கடினம். சேமிப்பு சிறிதும் இன்றி, ஒருவன் வாழ முற்படுவானேயானால் அன்ன ஆகாரமின்றி தெருவில் நிற்கக் கடவான்.

உண்மை பிராமணாக இருக்க விடாமல் எது செய்கிறது? யார் காரணம்? "காலத்தின் கட்டாயங்கள் மாறி வருகிறது" என்பதே நமக்கு நாமே கூறிக்கொள்ளக்கூடிய சமாதானம். குறைந்தது 'இருக்க இடமும், உடுக்க உடையும் அடுத்த வேளைக்கு சோறும்' சேர்த்து வைக்கும் கட்டாயத்தில் நாம் எல்லோரும் இருக்கிறோம். சன்யாசம் வாங்கியவன் கூட இன்றைக்கு அடுத்த வேளைக்குறிய உணவேனும் செமிக்காமல் இருப்பதில்லை. எல்லாவற்றையும் பணமாக மட்டுமே பார்க்கிறோம், மாற்றுகிறோம், பெறுகிறோம். திறமையை, சேவையை, உழைப்பை, கல்வியை, நியாயத்தை, நீதியை, ஏன் அறிவைக் கூட விற்று பணமாய் மாற்றிக்கொள்கிறோம். அதுவும் சில நேரங்களில் நியாயங்களுக்கு உட்பட்டு, சிலநேரங்களில் அதையும் தாண்டி.

நாம் எல்லோரையும் இன்றைக்கு ஒரே வர்ணமாக ஒன்றுபடுத்திக்கொள்ளலாம். நாம் எல்லோரும் இன்று வைச்யர்களாக மட்டுமே வாழ்கிறோம் (நியாயமான பணம் ஈட்டினோமேயானால்) .

வசிஷ்டனாகப்பட்ட அஷோக் 'உண்மை பிராமணனை' இன்றும் தேடித் தேடி அலைகிறான். அவன் காலடித்தடங்கள் பூவுலகமெங்கும் 'எங்கே பிராமணன்' என்று ஒலித்தவண்ணம் இருக்கிறது. இன்று வரை அப்படிப்பட்டவன் தென்படவேயில்லை

(முற்றும்)

Shakthiprabha
9th July 2009, 06:46 PM
பொக்கிஷங்களாகக் கருதப்படும் பல விஷயங்களை நம்முடன் அலசி, நமக்கு சற்றே தெளிவூட்டி, நாத்திவாதிகளையும் சற்றே சிந்திக்கத் தூண்டிய சோ ராமசாமிக்கு என் கோடான கோடி நன்றிகள்.

இன்றுவரை இத்தொடரை என்னுடன் பகிர்ந்து படித்து வந்த அனைவருக்கும், நன்றிகள் பல.

என்னுடைய ஒவ்வொரு பதிவிற்கும் கருத்துரைத்து, குறைந்தபட்ச "நன்றி" என்ற ஒற்றைச் சொல்லாவது நவின்ற மட்டுறுத்துனர். "ஆனா" விற்கு என் பணிவான நன்றி.

தொலைக்காட்சித் தொடர் என்றால் அலறி ஓடும் என்னை 3 மாதங்கள் பார்க்கச் செய்த, "எங்கே பிராமணன்" குழுவினருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

பாத்திரமாகவே மனதில் பதிந்த, நளினி, டெல்லி குமார், கோபு, டெல்லி கணேஷ் மற்றும் உமாவாக நடித்த நடிகைக்கும் என் பாராட்டுக்கள்.

Last but not least....

அஷோக்காக நம் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பெற்றுவிட்ட அஃப்சருக்கு நான் ரசிகையாகி விட்டபடியால் "ரசிகர் மன்றம்" ஒன்று தொடங்கலாமா என்ற யோசனையில் இருக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஷக்தி.

aanaa
10th July 2009, 05:43 AM
26.06.09
(நியாயமான பணம் ஈட்டினோமேயானால்) .

வசிஷ்டனாகப் பட்ட அஷோக் 'உண்மை பிராமணனை' இன்றும் தேடித் தேடி அலைகிறான். அவன் காலடித்தடங்கள் பூவுலகமெங்கும் 'எங்கே பிராமணன்' என்று ஒலித்தவண்ணம் இருக்கிறது. இன்று வரை அப்படிப்பட்டவன் தென்படவேயில்லை

(முற்றும்)

:ty:

முழுத் தொடரையும் ரசித்து, லயித்து எம்மையும் அத்துடன் ஒன்ற வைத்தமைக்கு மிகக் கடமைப் பட்டுள்ளோம்

Shakthiprabha
10th July 2009, 10:58 AM
When grhastha Brahmins themselves hesitate to give enough respect ( both materialistic and spiritual ) to those who are the mantra chanters of their clan ( Vaidikas ), then there is no point in not saving money for the future. This is a world that respects a white collar job more than that of the Vaidika. Therefore, everyone has to adapt.

There has been a dramatic change since independence in each of our lives. I somehow see no point in holding on to the external aspects of religion. The internal aspects, the soul of religion must of course be reconciled with the present lifestyle and the unique circumstances it provides.

Love and Light.

I think what was meant to convey in this entire episode is, therez nothing extraordinary in any clan or caste in current scenario. Hence, it is but foolish to identify ourselves with the caste in which we are accidentally (or otherwise) born into.

kameshratnam
2nd August 2009, 09:25 AM
Well be ready for PArt 2

leosimha
4th August 2009, 03:16 PM
Well be ready for PArt 2

when is it going to be on air?

Shakthiprabha
4th August 2009, 03:17 PM
Well be ready for PArt 2

oh WHEN?

R.Latha
25th August 2009, 12:23 PM
enge bramanan engea konja nalaga kaanavillai. lakshmi praba kaivannam, direct panniya cho- ve indha alavukku solliyirupaaro ennavo, athileye ondri ezhuthiyirukkirar. ungal ezuthukkal melum thodara en vazhthukkal.

Shakthiprabha
25th August 2009, 12:34 PM
nandri latha :ty:

தொடர் முடிந்து விட்டது. :( innum sila naatkaL thodarndhirukalaam endrA thaNiyaa dhaagathai Erpaduthivittu sattena mudindhu vittathu.


lakshmi praba kaivannam

ஷக்திப்ரபா :)

Shakthiprabha
6th December 2009, 10:02 PM
"CHO - vin

'EngE brahmNan-II' is BACK WITH A BANG!

Words aren't enough to say how happy I am.

aanaa
6th December 2009, 11:51 PM
"CHO - vin

'EngE brahmNan-II' is BACK WITH A BANG!

Words aren't enough to say how happy I am.

please continue with your "kai vannam" . chance for another certificate.

anbu_kathir
7th December 2009, 09:35 AM
"CHO - vin

'EngE brahmNan-II' is BACK WITH A BANG!

Words aren't enough to say how happy I am.

Wow, seriously?? Any idea what the storyline is going to be like ??

Love and Light.

wrap07
7th December 2009, 04:13 PM
"CHO - vin

'EngE brahmNan-II' is BACK WITH A BANG!

Words aren't enough to say how happy I am.

i was thinking of you SP after this news :D
worth waiting.

viraajan
7th December 2009, 04:22 PM
:redjump: :bluejump:

Great news :yes:

I will not be able to watch :cry:

shakthi irukka kavalai yEn? :exactly:

Akka, jamaainga :yes:

aanaa
10th December 2009, 04:44 AM
[html:4fe11814e1] <div align="center">><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.46" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=17061131&vid=6571756&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/12865/98474552.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.46" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=17061131&vid=6571756&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/12865/98474552.jpeg&embed=1" ></embed></object></div>[/html:4fe11814e1]

aanaa
15th December 2009, 07:37 PM
serial started on Dec 14

so SP please continue with your kaivannam. Eagerly waiting

Shakthiprabha
15th December 2009, 07:42 PM
aana,

:ty: for the video updates. Gimme 2 days time. I shall start my updates regularly :)

suvai
16th December 2009, 07:24 AM
:clap: :clap: sp nga...tv serial paarkamaleye onga writings moolam....deep thoughts are provoked. Romba azhaga engal anaivarukaaga ezhuthiayamaiku miga miga nandri nga!....awaiting anxiously for more.:-)

Shakthiprabha
16th December 2009, 05:40 PM
மிக்க நன்றி சுவை :)

Shakthiprabha
16th December 2009, 05:43 PM
'முன்பு - விட்டகுறை வந்து தொட்டாச்சு!' என்னும் வரி ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்தைப்போல் என்னை மதிமயங்கச் செய்தது. அந்தக் கடற்கரை மணலில் அதே மாதிரி வெண்ணிலவில் இதற்கு முன் எத்தனையோ தடவை நான் உட்கார்ந்திருந்ததாகத் தோன்றியது.

முந்தைய பிறவிகளில் விட்ட குறைதான் இங்கே என்னைக் கொண்டு வந்து சேர்த்து இன்று இந்தக் கடற்கரை ஓரத்திலே உட்காரச் செய்திருக்கிறது என்றும் தோன்றியது கடலிலே ஆயிரமாயிரம் படகுகளும் கப்பல்களும் திடீரென்று காட்சி அளித்தன. கரையிலே கூட்டங் கூட்டமாக ஆடவரும் பெண்டிரும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். சற்றுத் தூரத்தில் உச்சியில் ரிஷபக் கொடிகளும் சிங்கக் கொடிகளும் உல்லாசமாகப் பறந்தன. இனிமை ததும்பிய இசைக் கருவிகளிலிருந்து எழுந்த சங்கீதம் நாற்புறமும் சூழ்ந்து போதையை உண்டாக்கிற்று. கண்ணுக்குத் தெரிந்த பாறைகளில் எல்லாம் சிற்பிகள் கையில் கல்லுளியை வைத்துக் கொண்டு வேலை செய்தார்கள். எங்கேயோ யாரோ காலில் கட்டிய சதங்கை ஒலிக்க நடனமாடிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.

சிறிது நேரத்துகெல்லாம் அந்த அகக் காட்சிகள் தெளிவடைந்தன. உருவங்களும் முகங்களும் இனந்திரியுமாறு எதிரே தோன்றின.

ஆயனரும் சிவகாமியும் மகேந்திர பல்லவரும் மாமல்லரும் பார்த்திபனும் விக்கிரமனும் அருள்மொழியும் குந்தவியும் பொன்னனும் வள்ளியும் கண்ணனும் கமலியும் புலிகேசியும் நாகநந்தியும் என்னுடைய மனக்கண் முன்னால் பவனி வந்தார்கள். அப்படிப் பவனி வந்தவர்கள் என் உள்ளத்திலேயே குடிபுகுந்துவிட்டார்கள்.

இவ்வளவு பாரத்தையும் ஏறக்குறைய பன்னிரண்டு வருஷகாலம் என் உள்ளத்தில் தாங்கிக் கொண்டிருந்தேன். 'சிவகாமியின் சபத'த்தில் கடைசிப் பாகம், கடைசி அத்தியாயம், கடைசி வரியை எழுதி 'முற்றும்' என்று கொட்டை எழுத்தில் போட்ட பிறகுதான் பன்னிரண்டு ஆண்டுகளாக நான் சுமந்துகொண்டிருந்த பாரம் என் அகத்திலிருந்து நீங்கியது.

மகேந்திரரும் மாமல்லரும் ஆயனரும் சிவகாமியும் பரஞ்சோதியும் பார்த்திபனும் விக்கிரமனும் குந்தவியும் மற்றும் சில கதாபாத்திரங்களும் என் நெஞ்சிலிருந்து கீழிறங்கி, 'போய் வருகிறோம்' என்று அருமையோடு சொல்லி விடைபெற்றுக் கொண்டு சென்றார்கள்.


எங்கேயோ படித்தது போல் இருக்கிறதா? என்ற கேள்விக்கே இடமின்றி தமிழகத்து இலக்கிய ரசிகர்களின் நெஞ்சத்தில் ஆழ அமர்ந்திட்ட எழுத்தல்லவா இது!! அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் முன்னுரையை வாசகர்கள் மறக்கவும் முடியுமா? சிவகாமியும் மாமல்லரும், நம் மனதில் ஆசனமிட்டு உட்கார்ந்ததோடு மட்டுமின்றி, நம்முள் இரண்டற கலந்துவிட்டதற்கு மேலே கூறிய ஒரு அமானுஷ்ய முன்னுரையும் காரணமாக இருக்கலாம் என திட்டவட்டமாய் எனக்கு பல முறை நினைத்ததுண்டு. அப்படி ஒரு ஷக்தி இந்த முன்ன்ரைக்கே உண்டு என்றால் கதையைப் பற்றி பேசவும் வார்த்தை உண்டோ?!

என்ன ஒரு உயிர்ப்புள்ள முன்னுரை! அமானுஷ்யமும் சரித்திரமும் கலந்து கண் முன் தீட்டப்பட்ட எப்பேர்பட்ட அருமையான ஓவியம்! எப்படி இல்லாமல் போகும்? எழுதியவர் கல்கி ஆயிற்றே.

இதே போல் சோவிற்கும் தன் கதாபாத்திரங்கள் பேசினால் எப்படியிருக்கும் என்ற ஆசையை, இரண்டாம் பாகம் ஆரம்பித்த அன்றே தீர்த்து நிம்மதி அடைந்தார். ஆம். ஆயனரும், சிவகாமியும், மாமலரும் போல் இங்கே வசுமதியும், நீலகண்டனும், சாம்புவும் கதாபாத்திரத்தினின்று எழும்பி உயிர்பெற்று இவர் முன் கேள்விகள் கேட்கின்றனர்.

"எனக்கு கேள்விகளை கேட்க மட்டும் தான் தெரியும்" என்ற நாகேஷ் வசனம் நினைவு வருகிறது. சோ-வுக்கும் ஏறக்குறைய அதே நிலை தான். கேள்விகளை மட்டும் கெட்டு விட்டு, அதற்கு உபாயம் சொல்லமலேயே கழண்டு கொண்டு போக முடியுமா? 'எங்கே பிராமணன்' என்ற தேடலுக்கு பதில் சொல்லுங்கள் என கதாபாத்திரங்கள் உறும.....

அய்யயோ அஃப்சரை விட்டுவிட்டு வேறு அஷோக்-கை கொண்டு வந்து விடுவார்களோ என்று "அஃப்சர் ரசிகமன்ற"த் தலைவி ஷக்திப்ரபா பயந்தவண்ணம்.....வேண்டாத தெய்வத்தையெல்லாம் வேண்ட.....அஃப்சரே அஷோக்காக மீண்டும் பாலை வார்த்து..இனி

இரண்டாம் பாகம் தொடர்கிறது.......

aanaa
16th December 2009, 08:34 PM
..இனி

இரண்டாம் பாகம் தொடர்கிறது.......


கேள்விகளை மட்டும் கெட்டு விட்டு,


ஆஹா..
தொடரட்டும் ...

Shakthiprabha
17th December 2009, 12:32 PM
dec 14th episode 1



உலகில் பாதிக்கும் மேற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வை நமக்குள்ளே தேடாமல் வெளியே தேடுவதால் முயற்சி தோல்வியடைவதோடு மட்டுமின்றி, எதிர்பார்ப்பு தரும் ஏமாற்றத்தால் மனவருத்தம் எஞ்சி நிற்கிறது. தத்துவக் கதைகள் பலவற்றிலும் சுட்டிகாட்டியது போலவே, தொலைத்த பொருளை தொலைத்த இடதில் அல்லவா தேட வேண்டும்? இக்கதையை பல முறை நாம் கேட்டுணர்ந்திருந்தாலும், நம் வாழ்வில் தொலைக்கும் சிறு சந்தோஷங்களைக் கூட நாம் வெளியே தேட முயற்சிக்கிறோம். அன்போ, அமைதியோ, இன்பமோ முதலில் நம் மனதில் கொணர்ந்தால், அதை பிறரிடம் பகிர்ந்து கொள்வதும் காணப்பெறுவதும் எளிதாகப் பெறும்.

நம் கதையில் நாயகன் அஷோக் "எங்கே பிராமணன்" என தேடித் தேடி எவருமே தென்படாததால் மனவருத்தம் கொண்டு துவண்டு விடுகிறான். ஏட்டில் சுட்டிக்காட்டிய பிராமணனுக்குறிய தகுதியும் வாழ்வு முறையும் இக்காலத்தில் எவரும் பின்பற்றுவதே இல்லாததால், அது தொலைந்தே விட்டதோ என்ற கவலை மேலிடுகிறது. அப்போது அவனைத்தேடி வருகிறார் ஒரு பெரியவர். அவர் கூறுவதும் இதைத் தான்.

"தொலைந்தவனை நீ உன்னுள் தேடு" என்கிறார். "உன்னிடதில் அவன் ஒளிந்திருக்கலாம், கஸ்தூரி தன்னிடமே வைத்திருந்தும் அதை அறியாத கஸ்தூரி மானைப் போல, நீயே உன்னுள் அவனை ஒளித்து வைத்திருக்கலாம். அப்படி ஒருவன் அகப்படவில்லையெனில், அவனை நீயே உன்னுள் செதுக்கு. எப்படி ஒரு வண்ணத்துப் பூச்சி தன்னை தானே செதுக்கி உருமாற்றிக்கொள்கிறதோ, மாற்றத்தை தன்னுள் தானே கொணர்கிறதோ, அப்படி நீயே மாற்றத்தை உன்னுள் கொண்டு வர வேண்டும். தேடுவதை நிறுத்து, தேடுவதை நிறுத்தினாலே தேடுவது கிடைக்கும்"

சென்ற பாகத்திலும் இதைத் தான் பார்த்தோம்.

'நான் யார்' போன்ற கேள்விகளுக்கு மட்டுமின்றி ஏனைய் பல கேள்விகளுக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வு நமக்குள் தேடினால் தென்படுவதே.

"ஒரு பிச்சைக்காரன் பாறையின் மேல் அமர்ந்து தினமும் பிச்சையெடுத்துக்கொண்டிருந்தான். பின்னர் ஒரு நாள் பாறையை தோண்டிய போது அங்கு புதையலே இருப்பது தெரிந்தது, அது தெரியாமலே, இத்தனை நாள் அவன் வெளியில் பிச்சை எடுத்திருக்கிறான், அது போலத்தான் வெளியே அமைதி தேடும் முயற்சி." என்று சென்ற பாகத்தில் வயோதிக வேடத்தில் வந்து நாரதர் கூறிய கதையை மீண்டும் நினைவு கோரலாம். இம்முறையும் இந்த உபதேசத்தை வயோதிக சன்யாசியின் வேடத்தில் வந்து நாரதரே சொல்வதாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இத்தொடரில் காட்டப்படும் கைலாயத்தை பார்த்தாலே நமக்கு எரிச்சலாய் வருகிறது. சிவன் வேடத்தில் வருபவர் நடிப்பால் நம்மைக் கொன்று விடுகிறார். "ஹ்ம்ம்", "ம்ம்ம்ம்" என்று சுருதி ஏற்ற இறக்கத்துடன் அவர் நாரதருக்கு செவி மடுப்பது எரிச்சலின் உச்ச கட்டம். கைலாய கூட்டத்தில் நாரதராக வருபவர்க்கு மட்டும் போனால் போகிறது என்று பாஸ் மார்க் தரலாம்.

aanaa
18th December 2009, 02:08 AM
dec 14th episode 1

இத்தொடரில் காட்டப்படும் கைலாயத்தை பார்த்தாலே நமக்கு எரிச்சலாய் வருகிறது. சிவன் வேடத்தில் வருபவர் நடிப்பால் நம்மைக் கொன்று விடுகிறார். "ஹ்ம்ம்", "ம்ம்ம்ம்" என்று சுருதி ஏற்ற இறக்கத்துடன் அவர் நாரதருக்கு செவி மடுப்பது எரிச்சலின் உச்ச கட்டம். கைலாய கூட்டத்தில் நாரதராக வருபவர்க்கு மட்டும் போனால் போகிறது என்று பாஸ் மார்க் தரலாம்.

:rotfl:

Shakthiprabha
18th December 2009, 03:59 PM
நேற்றைய தொடரை பார்க்க முடியவில்லை (கேபிள் தொடர்பு இல்லாததால்)

வார இறுதிக்குள் அல்லது திங்கட்கிழமைக்குள் அனைத்தையும் update செய்ய முயற்சிக்கிறேன்.

Shakthiprabha
21st December 2009, 11:06 AM
dec 15th and 16th (episode 2 and 3)
_____________________________

நம்மாழ்வார் இராமனின் அவதாரம் என்று சொல்லப்படுகிறது. "உள்ளே யாரையும் அனுமதியாதே" என்ற இராமனின் ஆணையை மீறி லக்ஷ்மணன், துர்வாச முனிவரின் கோபம் நாட்டையே சீரழித்து விடுமோ என அஞ்சி, அவரை மட்டும் அனுமதிக்கிறான். சொல் மீறி செயல்பட்டதால் புளியமரமாய் பிறப்பெடுப்பாய், என்று ராமன் லஷ்மணனை சபித்துவிடுகிறான். 'உன் மரத்தின் நிழலிலேயே நானும் வந்து இருப்பேன்' என்று இராமன் சொல்வதாக வால்மீகி ராமாயணத்தில் கூறப்படுகிறது. நம்மாழ்வார் சரித்திரத்தில், அவர் பிறப்பே அன்னாரின் தனித்துவத்தை சுட்டிக்காட்ட வல்லதாய் உள்ளது. பிறந்தது முதற்கொண்டு ஜீவன் மட்டுமே தாங்கி அசைவின்றி இருந்த குழந்தை, முதன் முதலில் அசைந்து நகர்ந்து சென்றது கோவிலின் அருகில் இருந்த ஸ்தலவிருஷமான புளியமரத்தடியிலே என்கிறது வரலாறு. ஆன்மதாகம் பெருக்கெடுத்து குருவை தேடி அலையும் மதுரகவி ஆழ்வாரின் சந்தேகத்தை நம்மாழ்வார் முதல் முதலில் திருவாய் திறந்து, தீர்த்து வைத்தார். சரீரத்தில் கட்டுண்ட ஆன்மாவின் கதியைப் பற்றி மதுரகவி ஆழ்வார் கேள்வி எழுப்ப அதற்கு
பதினாறு வயது நிரம்பிய பாலகனாம் நம்மாழ்வார் முதன்முதலாய் வாய்திறந்து பதிலுரைததாய், 'நம்மாழ்வார் சரித்திரம்' தெரிவிக்கிறது.


உரைக்க வல்லேன் அல்லேனுன்
உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன்நான்?
காதல் மையல் ஏறினேன்,
புரைப்பி லாத பரம்பரனே.
பொய்யி லாத பரஞ்சுடரே,
இரைத்து நல்ல மேன்மக்கள்
ஏத்த யானும் ஏத்தினேன்

என்பது நம்மாழ்வார் பாசுரம்.

உன் பெருமையிலும், கீர்த்திலும், மூழ்கி கிடக்கும் நான், உன் பெருமையை, சிறப்பை, தனித்துவத்தை எவ்வாறு கூறுவேன்? உன்னைப் பற்றி கூறும் திறமை எனக்கு இல்லை. உன்னிடம் கரைகாணா அன்பு கொண்டிருக்கிறேன், சத்தியமானவனே, உன்னை மேன்மக்களும் அறிஞர்களும் ஞானிகளும் துதி செய்ய, அவர்களுடன் சேர்ந்து, அவர்களைப் பார்த்து, அவர்களுள் ஒருவனாய் நானும் உன்னை துதிசெய்கிறேன். என்று தோராயமாய் பொருள் கொள்ளலாம்.

குற்றமற்றதாய் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை தனியொருவனாய், மானிட உருவில், ஒரு கட்டுண்ட ஜீவன் எவ்வாறு விளக்க முடியும்! பரம்பொருள் பெரும் கடல் என்றால் நாம் ஒரு துளியல்லவா, அதனின் குணங்களையும், நிர்குணங்களையும் தனியொருவனாய், தனியொரு துகளாய் சொல்லும் வல்லமை யாருக்கு உள? உயர்ந்தவர்களும் அறிஞர்களும் உன் புகழ் பாட, அந்த கோஷத்தில் நானும்
ஒரு துளியாய் கலந்து கொள்கிறேன் என்று சொல்வதாய் உணரலாம். துகளிலும் துகள் நான், உன் பெருமை நான் எவ்வாறு கூறுவேன் எனும் போதே, அஹங்காரம் அடிப்பட்டு போவதைக் காண முடியும். நம்மாழ்வார் ஆழ்வார்களில் முதன்மையானவராய் கருதப்படுகிறார்.

திருமங்கையாழ்வாரின் சரித்திரமும், தொண்டரடிப் பொடியாழ்வாரின் சரித்திரமும், நம் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. காரணம், சரித்திரம் படித்திராவிடினும் கூட, "திருவருட்செல்வர்" எனும் திரைப்படத்தில், நடிகர் திலகம் வாழ்ந்து காட்டிய கதாபாத்திரங்கள்.

திருமங்கையாழ்வாரை இறைவன் பணிசெய்ய முதலில் தூண்டுவது அவர் மனைவி. அதன் பின் அவர் இறைவனே கதியென கிடப்பதும், இறைவனினுக்கு ஆலயம் எழுப்ப, வலியோரிடம் திருடி பொருளீட்டுவதைக் கூட நியாயப்படுத்தியும் வந்திருக்கிறார். இறைவனும் இறைவியும் சாமான்யர்களாய் இவர் முன் பொருள் பறிகொடுத்து, பின் இவரின் அறிவீனத்திற்கு பாடம் புகட்டியதாய் கதை உண்டு.

கருமா முகிலுருவா கனலுருவா புனலுருவா
பெருமால் வரையுருவா பிறவுருவா நினதுருவா
திருமா மகள்மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அருமா கடலமுதே உனது அடியே சரணமே

என்று இவர் பாடிய பாசுரத்திற்கு,

கருமையான வண்ணம் (நீல) வண்ணம் உடையோனே! கனல் வடிவானவனே! நீர் வடிவானவனே! மலை மேனி உள்ளவனே, பல வடிவுகள் உள்ளவனே, மலர்மகள் வாழும் சிறுபுலியூரில் ஜல சயனதிதில் உறைபவனே! அருட்கடல் அமுதே! உன் அடியே ஷரணம். என்பது விளக்கம்.

விஷ்ணுவின் சிறந்த பக்தர் ஒருவர் இறைவனின் துதி மறந்து தேவதேவி எனும் தாசியின் மயக்கத்தில் கிடந்து, பின் மீண்ட கதை தான் விப்ரநாராயணர் தொடரடிப்பொடியாழ்வார் ஆன கதை. இறுதியில் இறைவன் இவர்களின் பழி அகற்றி, ஆட்கொள்கிறார். அதன் பின் தொடரடிபொடியாழ்வார் என பெயர் கொண்டு நிறைய பாசுரங்கள் பாடி இறைவனின் சேவையில் ஈடுபடுகிறார்.பழி அவரைச் சூழ்ந்து வாழ்வு இருண்டிருந்த பொழுது அவர் எழுதிய பாசுரம்:

ஊர் இலேன், காணி இல்லை, உறவு மற்று ஒருவர் இல்லை;
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன்; பரம மூர்த்தி!
காரொளி வண்ணனே! என் கண்ணனே! கதறுகின்றேன்;
ஆர் உளர் களைகண்? அம்மா! அரங்க மா நகருளானே!

எனகென்ன சொல்லிகொள்ள உறவோ, ஊரோ, நிலமோ நாதியோ இல்லாதவன். (எவ்வகை ஆதரவும் இல்லாதவன்) இப்பூவுலகில் பரம்பொருளே உன் பாதம் ஒன்றையே பற்றியிருக்கிறேன். உன் பாதம் ஒன்றே எனக்குத் துணை. கருமை நிறம் கொண்ட என் கண்ணனே! நான் கதறுகிறேன். அரங்க மா நகரத்தில் உறைபவனே என் குறை தீர்க்க யார் உளர்? என உருகுகிறார்
தொடரடிப்பொடியாழ்வார்.


இதெல்லாம் ஏன் திடீரென்று? என்றால், சார்யார் தனது மகனின் பொறுப்பற்ற நடத்தையைப் பற்றி கவலையோடு சிந்தித்தவண்ணம் பாசுரங்களை பாடி இறைவனிடன் குமுறுகிறார். அப்பாசுரங்களும் அதனின் ஆழ்ந்த விளக்கங்களும், அதனைத் தொடர்புடைய சில தகவல்களும் சோ அவர்களால் விளகப்பட்டன.

இன்றைய தொடரில் விவாகரத்து அதிகரித்து விட்டதைப் பற்றி சாம்புவும் வேம்புவும் பேசிக்கொள்வதாய் காட்சியிருந்தது. போன தலைமுறை வரை அமைந்திருந்த கூட்டுக்குடும்ப வாழ்வில், தம்பதிகளுக்குள் அவ்வப்போது எழும் சிறு சிறு சச்சரவுகளும் பெரியோர்களால் தீர்க்கப்பட்டுவிட்டதால், 'விவாகரத்து' என்பதே அதிகம் சிந்திக்கப்படாத விஷயமாய் இருந்தது. இன்றைக்கு இதே அறிவுரைகளை பணம் வாங்கிக்கொண்டு 'marriage counselling' என்ற பெயரில் மூன்றாம் மனிதர் தலையிட்டு சரி செய்ய முயல்கிறார் என அங்கலாய்க்கின்றனர். இதனைப் பற்றி சோ கருத்து தெரிவிக்கையில், பண்டைய காலத்திலும் விவாகரத்திற்கும் மறுமணத்திற்கும் விதவைத் திருமணங்களுக்கும் 'அர்த்த சாஸ்திரத்தில்' இடம் இருந்திருக்கிறது என்ற தகவலைப் பகிர்ந்து கொண்டார். விவாகரத்திற்கு இருதரப்பினரும் விண்ணப்பிக்க வேண்டும். i.e. divorce on mutual consent என்பது வழக்கத்தில் இருந்திருக்கிறது.

சகுனங்கள் கனவுகளைப் பற்றி அக்னி புராணத்தில் எழுதப்பட்டிருக்கிறது. சகுனங்கள் சில நேரம் ஆபத்தை உணர்த்துவதும் உணர்த்தாமல் போவதும் கூட கர்மவினைப் படியே நடைபெறுகிறது. கனவுகளைப் பற்றியும் இப்புராணத்தில் பேசப்பட்டிருக்கிறது.

இரவு காலத்தை 4 வகையாக பிரித்து

முதல் பாகத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்தில் பலிதம் இருக்குமென்றும்
இரண்டாம் பாகத்தில் கண்ட கனவு ஆறு மாதங்களில் பலிதம் இருக்கலாம்
மூன்றாம் பாகத்தில் கண்ட கனவு மூன்று மாதங்களில் பலிக்கலாம்
நான்காம் பாகத்தில் கண்ட கனவு பத்து அல்லது பதினைந்து நாட்களில் பலிக்கலாம் என்று புராணம் கூறுகிறது.

(பொதுவாக நமக்கு முதல், இரண்டு, மூன்றாம் பாக கனவுகள் மறந்து விடும் என்று நினைக்கிறேன்)

நளினி தனது கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். குயிலியின் பேச்சில் வழக்கம் போல, இயல்பை விட நாடகத்தன்மை அதிகம் தெரிகிறது.

aanaa
23rd December 2009, 01:15 AM
:ty:

தொடரட்டும்

Shakthiprabha
23rd December 2009, 12:46 PM
பகுதி 3/4
_________


கொள்கையில் பிடிப்பு நம்மில் ஏறக்குறைய அனைவருக்கும் அதி தீவிரமாய் இருப்பதில்லை. அரசியல்வாதிகள் கட்சி விட்டு கட்சி தாவுவதற்கும், கொள்கை மாற்றிக்கொள்வதற்கும் கேலிக்கும் நாம், நம் சொந்த விடயங்களில், எவ்வளவு முறை கொள்கையை விட்டுக்கொடுத்திருக்கிறோம் வளைந்து கொடுத்திருக்கிறோம் என்பதை நினைவு கொணர வேண்டும். "The only constant is change" என்பது பிரபல வழக்குமொழி மட்டுமல்ல, உண்மயாதும் கூட. பல பரிணாமங்களில், விகிதத்தில் நம் உடலில், உணர்வில், கொள்கைப் பிடிப்பில், சிந்தனையில் அறிவில் மாற்றம் நிகழ்ந்தவண்ணம் இருக்கும்.

அதனாலேயே உண்மையான ஆத்திகனோ உண்மையான நாத்திகனோ கிடைத்தற்கறியவன். நிறைய நாத்திகர்களிடமும், குறைந்தபட்ச நம்பிக்கை அவ்வப்பொழுதோ, அல்லது தன்னை மிஞ்சியதொரு ஷக்தியை எதிர்நோக்கும் போதோ, இழை போல் மெல்லியதாய் தலையெடுக்கும். அதே போல் உண்மை ஆத்திகன் என்று எவரும் இல்லை. சோதனை காலத்தில் "இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா" என்று துவளும் ஆத்திகர்கள் ஏராளம்.

மின்னஞ்சல் மூலம் வந்த மனதைத் தொட்ட கதை ஒன்று. அதனை தமிழாக்கம் செய்தால் சுவை குறைந்து விடுமோ என அஞ்சி, உங்களுக்காக அதை அப்படியே ஆங்கிலத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.





As drought continued for what seemed an eternity, a small community of farmers was in a quandary as to what to do. Rain was important to keep their crops healthy and sustain the towns people's way of life.

As the problem became more acute, a local pastor called a prayer meeting to ask for rain.

Many people arrived. The pastor greeted most of them as they filed in. As he walked to the front of the church to officially begin the meeting he noticed most people were chatting across the aisles and socializing with friends. When he reached the front his thoughts were on quieting the attendees and starting the meeting.

His eyes scanned the crowd as he asked for quiet. He noticed an eleven year-old girl sitting quietly in the front row. Her face was beaming with excitement. Next to her, poised and ready for use, was a bright red umbrella. The little girl's beauty and innocence made the pastor smile as he realized how much faith she possessed. No one else in the congregation had brought an umbrella.

All came to pray for rain, but the little girl had come expecting God to answer.

இக்கதையில் வரும் சிறுமியின் நம்பிக்கை, ஆத்திகன் நம்மவரில் எத்தனை பேருக்கு இறைவனிடம் இருக்கிறது? - சிந்திக்க வேண்டிய கேள்வி. சுத்த நாத்திகனாகவும் இல்லாமல், ஆத்திகனாகவும் இல்லாமல் நம் அறிவும் மனமும் பெண்டுலம் போல் இப்படியும் அப்படியும் ஆடிக்கொண்டிருக்கிறது. அதனால் தான் ஆத்திகன் நாத்திகன் ஆவதும், நாத்திகன் ஆத்திகன் ஆவதும் அடிக்கடி நடைபெறுகிறது.

நம்பிக்கை எத்தனை பரிசுத்தமாக இருக்கவேண்டும் என்பதற்கு குமரில பட்டரின் கதை சான்று. கர்ம யோகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள இவர், பௌத்த மதத்தை அறிந்து கொள்ள, தம்மை சீடனாக அறிமுகப்படுத்திக்கொண்டு பாடம் பயின்று வருகிறார். ஞானமார்க்கத்தின் வழியை பின்பற்றும் அவர்களால் வேதங்கள் நிந்திக்கப்படுவதை சகிக்க முடியாதவராய் கண்ணீர் உகுக்கிறார். இவரைப் பற்றிய உண்மை தெரிந்ததும் இவருக்கு தண்டனை விதிக்கும் வகையில் மலை உச்சியில் இருந்து குதிக்க ஆணையிடுகின்றனர். அப்போது அவர் "வேதம் உண்மையாய் இருந்தால் அது என்னைக் காக்கும்" என்று கூவிக்கொண்டே குதித்தும் அவருக்கு பெரியதாய் அடி ஏதும் படவில்லை. எனினும் கல்லடி பட்டு ஒரு கண் குருடானது. வேதம் உண்மையாய் இருந்தும் எனக்கேன் இந்த கதி? என்று அவர் நினைக்கையில் அசரீரி ஒலிக்கிறது "வேதம் உண்மையானால்" என்ற சிறு சந்தேகத்தை வைத்ததனால், உனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை" என்றது. சிறு இழையேனும் நம்பிக்கை இல்லாதிருந்தால், பக்தியின் பலன் முழுமையாக கிட்டாது என்பது தெள்ளத் தெளிவாகிறது.


http://www.statemaster.com/encyclopedia/Kumarila-Bhatta
http://www.kamakotimandali.com/blog/index.php?p=512&more=1&c=1&tb=1&pb=1

(diff versions of the same story)


வேதங்களின் முறைப்படி வர்ணரீதியாக ஒருவனும் பிராமணனே அல்ல என்று அஷோக் சொன்னதை பாகவதர் வித்தியாசமான கோணத்தில் நாதன் தம்பதியருக்கு விளக்குகிறார். அஷோக் செய்தது "நான் யார்" என்ற இலக்கை நோக்கிப் போவதற்கு ஒரு சிறு ஊந்துகோல், ஒவ்வொருவரும் தன்னைத் தானே பரீட்சை செய்து கொள்ள வேண்டிய ஆன்ம விசாரம். ஆன்ம விசாரத்தில் ஈடுபடுவதனால் ஒருவன் உசத்தி என்றோ, ஆன்மவிசாரத்தில் ஈடுபாடாததானால் இன்னொருவன் மட்டுபட்டிருக்கிறான் என்றோ நாம் தவறாக எண்ணிவிடக்கூடாது. கடவுளின் சாரம்சம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. ஆன்ம ஒளியை க்ரஹித்து வெளிக்கொணரும் ஒருவனின் ஜ்யோதி அதிகம் ப்ரகாசிக்கிறது. ஒளியின் தத்துவம் மாறுபாடாது இருக்க, அதை உள்வாங்கி ஒளிசிந்தும் தன்மை சிலருக்கு அதிகமுமாக இருக்கலாம். உயர்வும் தாழ்வும் கூட மாயையினால் நாமே கற்பித்துக் கொள்வது.

ஆன்மவிசாரத்தில் மட்டுமே ஈடுபட்டால் போதுமே, விதிக்கப்பட்ட சடங்குகளும் சம்பிரதாயங்களும் அவசியமா? என்று அனைவரும் நம்மை நாமே கேட்டுக்கொள்கிறோம். சடங்குகளும், சம்பிரதாயங்களும் தேவையற்றவை. அவையனைத்தும் ஆன்ம குணங்களுக்கு வழிகாட்டியாய் விளங்குபவை மட்டுமே. தர்ம தர்ம சாஸ்திரத்தில் நாற்பது வகை சமஸ்காரங்கள் செய்து எட்டு ஆன்ம குணங்களைப் பெறவேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி எட்டு ஆன்ம குணங்கள் ஏற்கனவே ஒருவன் பெறப்பெற்றிருந்தால் அவனுக்கு சமஸ்காரமும், சடங்கும் அவசியம் இல்லை.

அன்பு
ஷாந்தி (சகிப்புத் தன்மை / பொறுமை)
அனசூயை (பொறாமை இன்மை)
சௌச்சம் (சுத்தம்)
அனாயாசம் (பதட்டமோ படபடப்போ இன்றி செயல்படுதல், calm and composed)
மங்களம் (நற் சொற்களை, சிந்தனைகளை பேசுதல், செய்தல், அப்படி செய்து மற்றோரையும் தன்னுயிரையும் சந்தோஷமாக்குதல்)
அகார்பணம் (தன்னைத் தாழ்த்தி கொள்ளும் (அல்லது உயர்த்திக்கொள்ளும்?) கருமித் தனம் இல்லாதொழிதல் i.e absence of inferior or superior feelings about oneself)
அச்ப்ருஹம் (பற்று இன்மை)

ஆகிய எட்டு குணங்கள் உங்களுள் பின்னிப்பிணைந்திருக்கிறதா? அப்படியெனில் சடங்கும் சம்பிரதாயமும் உங்களுக்கு தேவையில்லை. நீங்கள் ஆன்மவிசாரத்தில் மட்டுமே கூட ஈடுபட தகுதிபெற்றவர் என்று கொள்ளலாம்.

aanaa
24th December 2009, 05:13 AM
:ty:

saradhaa_sn
24th December 2009, 06:57 PM
:2thumbsup: ஷக்திப்ரபா :clap: :clap: :clap:

Shakthiprabha
25th December 2009, 11:17 AM
நன்றி நன்றி சாரதா :bow: உங்களை மாதிரி எழுத்து ஜாம்பவான்கள் உற்சாகப்படுத்துவதே பெரிய சந்தோஷம் தான் :)

இன்னும் சிறிது நாட்கள் விடுமுறை காரணமாக கொஞ்சம் தாமதமாகவே பதிக்க நேரிடும். It shall try update much faster after jan 1st week.

Shakthiprabha
12th January 2010, 12:40 PM
Dear aana, and other readers ( if any :? ),

I extremely regret the delay caused. I wasn't in station, followed by lil ill health and couple of other issues. I hope I would be able to continue without much delay in near future.

இதுவரை நடந்த நிகழ்வுகளை கதைப் பகுதியாகவும் பின்னர், ஆன்மீக, மதம் சார்ந்த அலசல்களை / செய்திகளை தனித் தனி தொகுப்பாகவும் எழுதியிருக்கிறேன்.

I shall post them one after another.

Shakthiprabha
12th January 2010, 12:43 PM
(இதுவரை)

முக்கிய கதை பாகம் (11-01-10 வரை)
_______________________________

உமாவிற்கு சீமந்த ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. நாதனும் அவர் மனைவியும், வேறொரு கல்யாணத்தின் பொருட்டு மும்பை சென்றுவிடுவதால், அஷோக் மட்டுமாக சீமந்த விசேஷத்திற்கு செல்ல நேரிடுகிறது.

கர்ப்ப ஸ்த்ரீயின் வயிற்றில் இருக்கும் கரு, ஆணா பெண்ணா என, சரியாக உச்சரிக்கப்பட்ட மந்திர ஓசைக்கு அந்த சிசு அசைந்து கொடுக்கும் போதே கணக்கிட்டு விட முடியும். இதனைக் குறித்து அஷோக் பேச முற்படும் போது, நடத்தி வைத்த வேம்பு சாஸ்த்ரிகள் சீமந்த மந்திரத்தை சரியாக உச்சரிக்கவில்லை என்று சுட்டிக் காட்ட நேரிடுகிறது. வேம்பு சாஸ்த்ரிகளின் அஹம் ஏறிக் கொண்டு விட, சபைக்கு முன்னரே தம் தவறை சுட்டிக்காட்ட அஷோக்கிடம் சவால் விடுகிறார். பவ்யமாகவே அஷோக் அவர் தவறை சுட்டிக் காட்டிய போதும், மிகுந்த அவமானத்திற்கு உட்பட்டு, சாஸ்த்ரிகள் முகம் சிவந்து விடுகிறார்.

"'எங்கே பிராமணன்' என ஊரெங்கும் தேடும் நீ, பிறர் குற்றங்களை சுட்டிக் காட்டும் நீ, உன்னை உதாரண புருஷனாக்கி ஒரு சரியான பிராமண வாழ்கையை வாழ்ந்து காட்டு" என சவால் விடுகிறார்.

தன் இலக்கை நோக்கிச் முதல் அடியெடுத்து வைக்க திடீர் முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியேறுகிறான் அஷோக். சிறிது நாட்களுக்கு பிறகு ஒரு சுபயோக சுபதினத்தில், சிகை(குடுமி) வைத்துக்கொண்டு தன் பயணத்தின் முதல் கட்டத்தை துவக்கியவனாக ஆசீர்வாதம் பெற வருகிறான். நாதன் ஏகத்திற்கு கோபிக்கிறார். பிராமணனாக வாழும் வகைகளை அடுக்கும் அஷோகிடம், தானும் ஒரு சிறந்த பிராமணனாக வாழத் தவறியதில்லை, தானம் செய்ய சளைத்தவரில்லை என்று அவர் செய்த தானங்களை அடுக்குகிறார்.

"அப்போ என்னை யாருக்கு தானமா குடுக்க பொறேள்" என்று புன்னகைத்தபடி அஷோக் கேட்க,

"உன்னை வேதபாடசாலைக்கே தானமா குடுத்துட்டேன் போ" என பதிலுரைக்கிறார் நாதன்.

அதற்காகவே காத்திருந்த அஷோக், பெரியோர்களை நமஸ்கரித்து, பலரும் கூப்பிட்டும், அழுதும் தொழுதும் வேண்டியும் பின்னோடி வர, அதையெல்லாம் பொருட்படுத்தாது, சஞ்சமலமற்ற தெளிந்த மனத்துடன், தன் பயணத்தை தொடர்கிறான்.

துக்கம் மேலிட துடித்து போகின்றனர் நாதன் தம்பதிகள். தம் வசம் இழந்த நாதன், தங்கள் நிலைமைக்கு சமையல் மாமி முதல், பர்வதம் வரை பலரையும் காரணம் காட்டி குமுறுகிறார். இறுதியில் சாம்புவின் மனையில் இருப்பதை அறிந்து சற்றே நிம்மதி கொள்கின்றனர்.

வேம்பு சாஸ்த்ரிகள், பாகவதர் இருவரின் ஆசீர்வாதமும் பெற்ற அஷோக் இறுதியில் சாம்பு சாஸ்த்ரிகளை ஆசார்யனாக ஏற்கிறான். பிட்சை மேற்கொள்வது, குரு சேவை, வெத அத்யாயனம், என அதற்கென விதிக்கபட்ட கடின பாதையில் தன் பயணத்தைத் துவங்குகிறான்.

(தொடரும்)

Shakthiprabha
12th January 2010, 12:56 PM
பக்தன்
_____


துன்பம் வரும் போது விரக்தி மனநிலைக்கு தள்ளப்படும் நடுநிலை பக்தர்கள் பெரும்பாலும் நாத்திகர்கள் ஆவதில்லை. துன்பமுற்ற நேரம் இறைவனை நிந்திப்பது நம்மில் பலரும் செய்யக்கூடியது. இறைவனை நிந்திப்பது என்றால், இறைத்தத்துவத்தின் மேல் நம்பிக்கையற்ற நிலை, விரக்தி, நல்ல செயல்களிலும் தர்மங்களிலும் நம்பிக்கை குறைதல் போன்றவையும் அடக்கம்.

இந்திரஜித் மாயா-சீதாவை உருவாக்கி அவளை அழித்த போது வானர சேனைகள் செயலற்று நின்றுவிடுகின்றனர். இலக்குவனும் இராமனும் கூட இம்மாயையில் சிக்குண்டு மனம் வெம்பி விடுகின்றனர். அப்போது இலக்குவன் தர்மம் என்ற ஒன்று உலகில் இல்லவே இல்லை என்ற நம்பிக்கை இழந்து புலம்புகிறான். 'தர்மம் கடைபிடித்து நாம் கண்ட பலன் தான் என்ன!' என்று அரற்றுவதாய் சரித்திரம்..

விரக்தி நிலை பெரும்பாலும் நீடிப்பதில்லை. சொற்ப காலத்திற்கே ஆட்டுவிக்கும் பரிதவிப்பு நிலை. அதன் பின் உண்மை பக்தன் தன் நிலைக்கு திரும்புகிறான். அவன் ஒரு போதும் நாத்திகன் ஆகிவிடுவதில்லை. இது சாதாரண சாமான்ய நடுநிலை பக்தனின் நிலை என்றால், 'என்ன தலைவிதி' என்று நோகாத மனிதன் ஞானியின் நிலையில் உள்ளவன்.

துன்பம் நேரும் போதெல்லாம் துவண்டுவிடாது இறைவனையே பற்றியிருப்பவன் சிறந்த பக்தன். உயர்ந்தவன். உதாரண புருஷன். பல பக்தர்கள், மஹாபுருஷர்களின் கதையோ நாயன்மார்கள் ஆழ்வார்கள் கதையையோ அறிந்து தெளிந்து கொண்டோமேயானால் அவர்களின் வைராக்கியம் மனவுறுதி, பக்தி போன்றவை பொன்னைப் போல் ஜொலிப்பதைக் காணலாம்

திருநீலகண்ட நாயனார் என்பவர் 63 நாயன்மார்கள் எனப்படும் சிவனடியார்களில் ஒருவர். இவர் எட்டாம் நூறாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலிலும், சேக்கிழாரின் பெரிய புராணத்திலும் இவரைப் பற்றிய செய்திகள் அறியலாம்.

சிவபெருமானின் "திருநீலகண்டம்" என்ற திருநாமத்தை அடிக்கடி வழங்கிவந்ததால், திருநீலகண்ட-குயவனார் என்ற பெயர் வரக் காரணமாயிற்று. ஓடு செய்து அவற்றை அடியவர்களுக்கு இலவசமாக அளித்து வருவதை திருப்பணியாக செய்துவந்தார். சிறு குறையேனும் இல்லாத மனிதன் ஏது? அவரால் பெண்ணின்பத்தை துறக்க முடியாமற் போனது. இதனால் மனம் நொந்த அவரது இல்லத்தாள், "எம்மைத் தீண்டுவீராகில் திருநீலகண்டம்" எனக் கூறி தள்ளிவைக்கிறாள். "எம்மை" என்று கூறியதால் இனி எந்த பெண்டிரையும் யாம் தொட மாட்டொம் என உறுதி பூண்டு அதன் படி நடந்தும் வந்தார். மணவுறவு கொள்ளாமலே இருவரும் இளமை தொலைத்து முதுமையும் எய்தினர்.


ஒரு நாள், சிவனடியார் ஒருவர் திருநீலகண்டரை நாடி தமது திருவோட்டினை கொடுத்து, ஒப்பற்ற அந்த திருவோடு பொக்கிஷம் போன்றதென்றும் அதை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளுமாறும் விண்ணப்பித்து தம் பயணத்தைத் தொடர்ந்தார். சில நாட்கள் சென்று திரும்ப கேட்கும் போது, ஓடு தேடிப்பார்த்தும் தென்படவில்லை. வேறு தருவதாகவும், அதைவிடவும் நல்ல ஓடு தருவதாக வாக்களித்தும் சிவனடியார் மனம் சுருங்கி சினம் கொள்கிறார். திருநீலகண்டரே அதை கவர்ந்து கொண்டு தம்மிடம் பொய் பேசுவதாக கோபிக்கிறார்.

உன் மகனின் கையைப் பற்றி சத்தியம் செய் என்கிறார். மகன் இல்லை என்றால், மனைவியின் கை பற்றி குளத்தில் முங்கி சத்தியம் செய் எனக் கூறுகிறார். சிவனடியார் உடனே சபை கூட்டி வழக்கு தொடர்கிறார். நீர் செய்தது சரியென்றால் ஏன் சத்தியம் செய்ய தயங்குகிறீர்கள் என்று கேள்வி எழுப்பிகின்றனர் அவையோர். மனைவியை தீண்ட முடியாத காரணத்தை ஊர் அறிய உரைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். தடியொன்றின் ஒரு முனையை இவர் பிடித்தும், மறு முனையை மனைவியை பிடிக்கச் செய்து குளத்தில் முங்கி எழுகிறார்.

குளத்தில் முங்கி எழுந்த மாத்திரத்தில் அவர்கள் முதுமை நீங்கி இளமைத் தேகம் பெறுகின்றனர். சிவனடியார் மறைந்து அங்கே ஈசன் காட்சியளித்து புலனடக்கம் மிகுந்த அவர்களை வாழ்த்தி அருளியதாக வரலாறு கூறுகிறது.

நன்றி: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%A F%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_ %E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%A E%B0%E0%AF%8D

(for further reference on thiru-neelakanta nayanaar)

Shakthiprabha
12th January 2010, 01:37 PM
சீமந்தம்
______

பூணூல் விழாவிற்கும் மணவிழாவிற்கும் பொருந்துவது போலவே தற்காலத்தில் வைதீக முறைப்படி நடக்கும் எந்தவொரு நிகழ்ச்சியும் வழி வகுத்திட்ட முறைப்படி நடப்பதில்லை. அதன் சாரம்சமே அழிந்து படாடோபமும் வீண் விரயச் செலவுகளும் டாம்பீகமும் மிஞ்சி நிற்கிறது. தேவையற்ற பகட்டும், பணமும் இரைக்கபடுகிறதேயல்லாமல் வேத மந்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விழாவை செய்பவர்கள் வெகு சொற்பம். தம் வருமான ஷக்திக்கும் மீறி போலி கௌரவத்திற்காக இவ்விழாக்களுக்கு அதீதமாக செலவு செய்வது தேவையற்றது.

சமூக அந்தஸ்தை வெளிப்படுத்தும் பகட்டுக்கும முக்கியத்துவம் கொடுப்பதை விட முக்கியமானது நம் விழக்களை சிறப்பித்து கொடுக்கும் / நடத்தி கொடுக்கும் ஏனைய உதவியாளார்கள், மந்திரம் ஓதும் புரோஹிதர்கள், தொழிலாளர்கள் முதலியோர். அவர்கள் மனம் கோணாது இன்புறும் வகையில் அவர்களை மரியாதை செய்து திருப்தி படுத்தி அனுப்புதல் விசேஷங்களின் பலன்களை முழுமையாக்கும்.

சிறு அளவிலான மனைவிழாக்களாகட்டும் அல்லது பெரிய அளவிலான யாகம் செய்யும் பொழுது அதற்கு உதவிய கீழ் நிலைத் தொழிலாளிகள், யாக மண்டபத்தை அலங்கரித்தொர், என்று தம்மை ஈடுபடுத்திக் கொண்ட பலவேறு மக்களுக்கும் உகந்த மரியாதை செலுத்தப்படவேண்டும். அப்பொழுது தான் யாகமோ பூஜையோ நிறைவு பெறும். பலன் முழுமை பெறும். எந்த வித மகத்தான காரியங்கள் நடைபெறுவதற்கும் தொழிலாளிகளின் உதவியன்றி அணுவளவும் முடியாது. தொழிலாளர்களின் 'நடைமுறை அனுபவமே' கற்றறிந்த சாஸ்திர சம்பிரதாயங்களைக் காட்டிலும் உடன் கை கொடுப்பது.

சீமந்த சுபநிகழ்வின் போது மந்திரங்கள் தாய் சேய் நலத்திற்காகவும், பிறக்கும் பிறவி நல்ல பிறவியாக அமைவதற்கும், அப்படி பிறந்த பிறப்பு தன் உயர் லக்ஷியமாம் பிறப்பின் தளை அறுத்து வீடுபேற்றை அடைய வேண்டி வேத மந்திரங்கள் ஓதி வேள்வி செய்யப்படுகிறது.

பும்சவனம் என்பது பிள்ளை வரம் வேண்டி செய்யப்படும் சடங்கு. பிள்ளைக் குழந்தைகள் சந்ததிகள் என்று கருதப்படுவதால், பிள்ளை வரம் வேண்டுகின்றனர். கர்ப்பகால அறிகுறிகள் தெரியும் போதே பும்சவனம் செய்யப்படவேண்டும் என்பது நியதி. சில சாரார்களின் வழக்கப்படி, முள்ளம்பன்றியின் முள்ளினால் வகிடு எடுக்கப்படுகிறது. புத்தி கூர்மையுள்ள சிசு பிறக்கவேண்டும் என்பதற்காகவும், கர்பமுள்ள ஸ்த்ரீயை அழகு படுத்தி, சந்தோஷபடுத்தும் வகையில் வகிடு எடுத்து, தலை பூச்சூட்டி, அலங்கரித்தும் நடத்தப்படுகிறது. அவள் இன்புறும் வகையில் போற்றப்படுகிறாள். சந்தோஷம் மிகுந்து தெளிந்த மனத்துடன் அவள் இருத்தலே ஆரோக்கிய சிசுவிற்கு வழிவகுக்கும்.

முள்ளம்பன்றியின் முள் கொண்டு வகிடு எடுத்தல் பல இனத்தவரிடையே இருந்து வரும் பழக்கம். அவர்கள் கற்பிக்கும் காரணங்கள் வித்தியாசமாகவும் வெவ்வேறாகவும் இருக்கிறது. கொங்கிணி பேசும் சில இனத்தவரும் இப்பழக்கத்தை மேற்கொள்கின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம், முள்ளம்பன்றியின் முள்ளால் நன்கு (இரத்தம் வரும் அளவு) அழுத்தல் வேண்டும். அப்படி அழுத்தும் பொழுது கர்பஸ்த்ரீ வலி பொறுக்கிறாள். இது பேறு கால வலிக்கு ஒரு முன் அறிவிப்பைப் போல் அவளை தயார் படுத்துவதற்காக செய்யப்படுகிறதாம். :|

Shakthiprabha
12th January 2010, 01:48 PM
இறைவனுடனான உறவு
____________________

வைதீக காரியங்களில் சொல்லப்படும் மந்திரங்கள் சரியாகவும் முறையாகவும் சொல்லப்படுதல் அவசியம். அப்படி சொல்லப்படும் போது அந்த வார்த்தைகேயுறிய அதிர்வுகள் சரியாக அமைந்து நல்லன விளைவிக்க வல்லது. குறிப்பாக வேத மந்திரங்கள் இறைவனையோ இன்னபிற தேவதைகளையோ வேண்டி அழைத்தும், போற்றியும் சொல்லப்படுவதால், உச்சரிப்பு கவனம் வெகு முக்கியம். அது தவிர வேத மந்திரங்களுக்கென தொனியும் ஸ்வரங்களும் உண்டு. ஸ்வர பேதம் எதிர்மாறான விளைவுகளைக் கூட
ஏற்படுத்த வல்லது. வேதம் ஓதும் பொழுது,

* ஸ்வர பேதம்
* ராகமாக இழுத்து உச்சரித்தல்
* அவசரமாக மந்திரம் ஓதுதல் (குறில் நெடில் முறையாய் பிரயோகித்து அதற்கென உரிய காலக் கணக்கில் உச்சரிக்கவேண்டும்)
* அதீத அங்க அசைவுகளுடன் ஓதுதல்
* இயந்திரத்தனமான உச்சரிப்பு
* அர்த்தம் மாறும் வகையில் உச்சரித்தல்
* குரல் கம்மி பிசிருதல்

முதலியவை செய்யக்கூடாத ஆறு குற்றங்களாம்.

பகுதி ஒன்றில் சோ அவர்கள் த்வஷ்டா என்ற தேவதச்சனின் கதையை பகிர்ந்து கொண்டது அனைவரின் கவனத்திற்கும் வரலாம். இந்திரனைக் கொல்லும் மகனுக்காக வேள்வி நடத்தி, மந்திரஹீனத்தால் இந்திரனால் கொல்லப்படும் மகனையே வரமாகப் பெற்றான் என்பது கருத்தில் கொள்ள உகந்தது. வேதத்தை முறையாக கற்றாலேயன்றி உச்சரிப்பதை தவிர்ப்பது நலம்.

இவ்வளவு மெனக்கெட்டு ஸ்வர சுத்தியும் சரியான உச்சரிப்பும் சேர்ந்து இறைவனை துதி செய்து, நித்தியம் தியானம் செய்தால், முக்காலமும் நினைந்தால், நம் முயற்சி எல்லாம் திருவினையாகுமா? கேட்டதாலாம் கொடுப்பானா? என்றால் இல்லை. சில முயற்சிகள் லபிக்கலாம். வேறு சில முயற்சிகள் கர்மவிதிப்படி நடவாமலும் போகலாம். நம் கர்மவினைப்படி தான் வாழ்க்கை அமைகிறது. இறைவன் நமக்கு மன அமைதியும், துன்பம் வரும் பொழுது அதை எதிர்கொள்ளும் ஷக்தியும் தர வல்லவன். இறையருளும் பலனும் வெகு விரைவில் கிட்ட நம்மில் பலர் இன்னும் உதாரண பக்தனின் நிலைக்கு உயரவில்லை.

சில நிகழ்வுகளுக்கு மனிதனுக்கு அப்பாற்பட்ட ஷக்தியும் காரணமாய் இருந்து வந்திருக்கிறது. இறைவன் செயல் என்று இதைச் சொல்லுகிறோம். கும்பகர்ணன் நித்திய வாழ்வு வேண்டி கடும் பனி, குளிர், வெப்பத்தில் தவமியற்றி அதன் பின் வரம் கேட்கிறான். இவனுக்கு நித்திய வாழ்வளித்தால் மக்கள் நிலைமை பரிதவிக்கும் என்று கருணைக் கொண்டு சரஸ்வதி உட்புகுந்து அவன் நாப்பிழற்றுகிறாள். இறுதியில் அவன் "நித்திரை வாழ்வு" வேண்டி நின்றான். இதனை தெய்வ சங்கல்பம் என்று கூறாமல் வேறு என்னவென்று அழைப்பது? தெய்வம் சில நிகழ்வுகளை நிகழ்த்தும், வார்த்தைகளை உதிர்க்க வைக்கும்.


மனிதன் தான் எப்பேர்பட்ட சுயநலவாதி! தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள மட்டுமே இறைவனை நாடுகிறான். பரிபூர்ண அன்பு இல்லாது இறைவனிடம் தனக்கு வேண்டியவற்றை பேரம் பேசுகிறான்! வியாபாரம் நடத்துகிறான். இது எப்படி சரியாகும்?

க்ருஷ்ணன் கீதையில் தன்னை நான்கு வகையான பக்தர்கள் வணங்குகின்றனர் அவற்றுள் ஞானியே உயர்ந்தான் என்று கூறுகிறான். அப்படியெனில் மற்ற வகை பக்தர்கள் மட்டம் என்றில்லை. இறைவனிடத்து நம்பிக்கையற்று இருப்பதைக் காட்டிலும் அவனை நம்பி உச்சி குளிர்வித்து தமக்கு வேண்டியதை பேரம் பேசும் பக்தி ஒரு படி மேல்.

சதுர்விதா பஜந்தே மாம் ஜனா ஸுக்ருதினோ அர்ஜுன
ஆர்த்தோ ஜிக்ஞாஸுரர்தார்தீ ஞானீ ச பரதர்ஷப ||

(பகவத் கீதை)


என்னை நான்கு விதமான மக்கள் வணங்குகின்றனர். ஆசைகளின் ஆதிக்கம் மிகுந்தவன், துன்பத்தில் உழல்பவன், அறிவுத் தாகம் கொண்டு என்னை(தன்னை) அறிய முயல்பவன், அறிஞனாம் ஞானி. இவர்களுள் எனக்கு நான்கு பேரும் ப்ரியமானவர்கள் எனினும் அதில் ஞானி எனக்கு மிக அருகில் நிற்கிறான். என்னை அடைந்தவனாகிறான் என்கிறார்.


இறைவனிடம் பேரம் பேசும் வழியிலாவது அவனை நினைவது, அவனை நினையாமல் இருப்பதை விட மேலாம்.

Shakthiprabha
12th January 2010, 02:41 PM
சித்தி (pronouned as sidhdhi)
_____

சித்தர்களைப் பற்றியும் அவர்களின் விசேஷ சித்திகளைப் பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அஷ்டமா(மஹா) சித்திகள் வரப் பெற்றவர்கள். (யோக சித்திகள் எட்டு என ஹிந்து மதம் அறிவிக்கிறது) இறையை அறியும் தேடலில் சித்தி முதலில் கிடைக்கப் பெறும் என்று கூறுவர். பிறப்பின் உயர்ந்த நோக்கத்தில் இறையின் தேடலில் ஈடுபடும் ஒருவன் தனது பாதையில் சித்தியில் நின்றுவிடாது ஞானத்தை நோக்கி மேல் செல்ல வேண்டும். யோக சித்திகள் கிட்டியவுடன் நிறைவு பெற்றுவிட்டால் அவனின் பரிபூரணத்துவம் நிறைவு பெறுவதில்லை. சித்திகள் கர்வத்தை வளர்த்து விடக் கூடும் சாத்தியம் உண்டு. சித்திகள் வரப் பெற்றதும் அதிலேயே தம் தேடலை நிறுத்தி விடாமல், ஞானத்தை நோக்கி உயர்வதே சிறந்தது.

பரிபூர்ணத்துவம் பெற்ற நிலையில் சித்திகளை மனித குலம் உய்விப்பதற்காக உபயோகித்து பிறப்பின் நோக்கம் உணர்த்திய சித்தர்களும் பலர். பதினெண்சித்தர்கள் எனப் போற்றப்படுபவர்களில் சிவவாக்கியரும் ஒருவர். சித்தர்களில் தலை சிறந்தவராக கருதப்படுகிறார். உயிரற்ற உருவ வழிபாடுட்டு முறை, மூட நம்பிக்கை பலவற்றையும் இவர் தமது பாடல்களில் சாடியுள்ளார். அகத்தே தேடலைத் தொடராத, இயந்திரத்தனமான சமய வழிபாடுகளைப் பற்றி பாடல்களில் பாடியுள்ளார்.

நாலுவேதம் ஓதுவீர் ஞானப்பாதம் அறிகிலீர்!
பாலுள் நெய்கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்!
ஆலமுண்ட கண்டனார் அகத்துள்ளே இருக்கவே...
காலனென்று சொல்லுவீர் கனாவிலும் அஃதில்லையே!

வேதம் ஓதினாலும் நீங்கள் இறைவனை அறிதானில்லை, பாலுள் நெய்யைப் போன்று உம்முள் உரையும் அவனை நீங்கள் அறிந்தானில்லை என்ற கருத்து படி உயர்ந்த தத்துவத்தை உரைக்கும் பாடல்கள். இவர் ஆத்திகரா அல்லது நாத்திகவாதத்தை முன் மொழிந்தவரா என என்று இன்று வரை சர்ச்சைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.


நட்ட கல்லை தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணன்று சொல்லும் மந்திரம் ஏதடா!
நட்ட கல்லும் பேசுமோ..நாதன் உள்ளிருக்கையில்!
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!

என்ற பாடலில் இறைவனை உன்னுள் தேடு என்ற உயர்ந்த தத்துவம் உணர்த்த முயன்றுள்ளார். இறைவனை மறுத்தாரில்லை என்பது தெளிவாகிறது. உணவை சமைக்கும் பாத்திரமும் சட்டுவமுமா சுவை அறியும்? கல்லை கடவுளென்று நம்பும் அறிவீனனே அவன் உன்னுள்ளல்லவா இருக்கிறான்? என்கிறார். "அஹம் பிரமாஸ்மி" என்ற உபநிடத தத்துவத்தின் எளிய சாராம்சம்.

Shakthiprabha
12th January 2010, 03:42 PM
பிரம்மச்சர்யம்
____________


சில நூற்றாண்டுகள் முன்பு வரையும் கூட பிரம்மச்சரியம் பழவி வந்த வாழ்கை முறை. பிரம்மச்சர்யம் என்பது வேத அத்யாயனம் செய்யும் முறைகளும் அதற்கென கடைப்பிடிக்கும் ஒழுக்கக் கட்டுப்பாடுகளும் நிறைந்தது. பிரம்மம் என்ற உயர்ந்த லக்ஷியத்தை அடைவதற்கான முதல் படியாக இதைக் கருதலாம்.

இதனைப் பயில்பவர்களுக்கு விதிக்கப் பட்டிருக்கிற அகக் (மனக்) கட்டுப்பாடுகள் கடினம். அகக் கட்டுப்பாடுகளாக

* பெண்களிடம் பேசுவதை தவிர்த்தல்
* பிட்சையெடுத்து அந்த உணவையே உண்ணுதல் (பணிவு வளர்கிறது. அஹம் வெகுவாக அழிக்கப்படுகிறது)
* சத்தியம் பேசுதல்
* எப்பொழுதும் பகவத் சிந்தனையில் இருத்தல்

ஆகியவை சில விதிமுறைகள்.


"இனி நீ பிட்சை பெற்று உண்பாயாக" என்று உபநயன மந்திரமே கூறுகிறது.

இறைவனே திருவோடு ஏந்தி பிட்சை பெற்ற புராணம் உண்டு. கோபத்தில் சிவன் பிரம்மனின் தலையை பிடுங்கிவிட அந்தத் தலை அவரின் உள்ளங்கையில் திருவோடாக ஒட்டிக்கொண்டது. பார்வதிதேவியே அன்னபூரணி வடிவத்தில் பிட்சையிட்டு அவர் சாபத்திற்கு

விமோசனம் அளித்தாள் என்பது புராண கூற்று. பிட்சை எடுத்தல் இன்னொருவரிடம் இல்லாத ஒன்றிருக்கு யாசகம் பெறுதல். நம்மிடம் இல்லை என்று கையேந்தும் போது உயர்வு மனப்பான்மை அகலும், பணிவு ஊற்றெடுக்கும். பிட்சையளிப்பவள் மஹதேவியாம் அன்னபூரணியிடம் ஞானத்தை பிட்சையாக கேட்கிறார் ஆதிசங்கரர்.


அன்ன பூர்ணே ஸதா பூர்ணே சங்கர பிராண வல்லபே
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி

அன்னபூரணியே, பூரணத்துவம் நிறைந்தவளே ஷங்கரனினுக்கு உகந்தவளே அன்னையே பார்வதியே எனக்கு ஞானமும் வைராக்யம் பிட்சையாக கொடு. என்பது ஸ்லோகம்.


பிரம்மச்சர்யத்திற்கு புற கட்டுப்பாடுகளுக்காக,

* கட்டாந்தரையில் படுத்துறங்குதல் (சுகத்தை விட்டொழித்தல்)
* வாசனாதி திரவியங்களை தவிர்த்தல்
* சிகை (குடுமி) வைத்தல்

முதலியவை விதிக்கப்பட்டிருக்கின்றன.

பிரம்மச்சரியம் மிக கடினமான வாழ்கை முறையாக இருந்து வந்திருக்கிறது. புலனடக்கம் பிராதான பங்கு வகித்திருக்கிறது. பிரம்மச்சரியத்தை வேண்டி துவங்குபவன் சௌரம் என்னும் சிகை வைத்தலை மேற்கொள்கிறான் (தர்கால வழக்கில் குடுமி). தந்தையார் தமது மைந்தனுக்கு மந்திரங்கள் சொல்லி செய்யப்படுவது. அறிவும் செல்வமும் நிரம்பப் பெற இறைவனை வேண்டுகின்றனர். மந்தரங்கள் சரிவரச் சொல்லி பிரம்மச்சர்யத்தை முறையாக கடைபிடிப்பவன், தினமும் ஸ்நானம் செய்கையில் சிகை நீர் கொண்டு நரகத்தில் உழலும் ஜீவன்களுக்காக, உலக நன்மைக்காக மந்திரம் ஜபித்து பிரார்த்தனை செய்யவேண்டும் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

பிரம்மச்சரியம் எல்லா வர்ணத்தவருக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. பிரம்மசர்யம் முடிந்த பின் தொண்ணூறு சதவிகிதம் பேர் க்ருஹஸ்தாசிரமம் ஏற்று சிறந்த க்ருஹஸ்தனாக விளங்குகின்றனர். க்ருஹஸ்தாசிரமம் உயர்ந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. வெகு சொற்பம் பேர்கள் நைஷ்ட்கிக பிரம்மச்சாரியராய் (நித்திய பிரம்மாச்ச்சாரி) தொடர்கின்றனர். ஆதிசங்கரரைப் போல் சிலர் க்ருஹஸ்தாசிரமம் விடுத்து சன்யாசம் ஏற்கின்றனர். சன்யாசம் ஏற்பதற்கு பெற்றோரின் சம்மதம் மிக அவசியம். இறைவனே முதலை ரூபத்தில் தோன்றி அவர் தாயாரின் சம்மதம் பெற உதவினார் என்பது தெரிந்த கதை. மத்வாச்சார்யார் சன்னியாசம் மேற்கொள்ள பெற்றோர் மறுத்ததும், பின்னர் அவர் தந்தை நமஸ்கரித்து விண்ணப்பித்ததும், அதற்கு மத்வாசார்யார் "தந்தை நீர் வணங்கியதாலேயே நான் சன்யாசம் பெற்றேன்" என்று கூறி அவர்களுக்கும் இன்னொரு பிள்ளை பிறந்தவுடன் சன்யாசம் ஏற்பதும், முதல் பகுதியிலேயே நாம் பகிர்ந்து கொண்ட கதை. எல்லா விஷயங்களுக்கும் விதிவிலக்கு உண்டு. வரலாற்று சான்றுகளின் படி நரேந்திரர் சன்யாசம் பெறுவதற்கும் நைஷ்டிக பிரம்மச்சரியம் தொடர்வதற்கும் அவர்கள் வீட்டில் அனுமதி வழங்கப்படவில்லை எனினும் அவர் தம் பயணத்தை தொடர்ந்தார்.

Shakthiprabha
12th January 2010, 04:06 PM
கதோபநிஷத்
___________

spilt milk என்று சொல்வார்கள். நெல்லை அள்ளினாலும் அள்ளலாம் கொட்டிய சொல்லை அள்ள முடியாது. வார்த்தைகளை அளந்து பேசுவதைப் பற்றி படித்தும் கேட்டும் இருந்தாலும் அகக் கண்ணை கோபமோ வருத்தமோ மறைக்கும் பொழுது சூடாகவோ அல்லது தகாத வார்த்தைகளோ வந்து விழுகின்றன. விழுந்த வேகத்தில் அவசரச் புத்திக்கு வருந்துகிறோம். உதிர்த்த ஒரே ஒரு சொல்லால் இழந்த கதைகள், கணங்கள், உறவுகள், மனிதர்கள் பலப்பல. இப்படிபப்ட்ட அனுபவங்கள் எல்லோர் வாழ்விலும் நிரம்பியிருக்கும். அதிக பூஜா பலன் பெற்றவர்கள் உதிர்க்கும் சொற்கள் அவ்வப்பொழுது பலித்தும் விடும்.

நசிகேதஸ் தந்தை வாஜஸ்ரவஸ் மகத்தான யாகம் செய்கிறார். யாகத்தின் போது தானங்கள் வழங்கப்பட வேண்டும். தனது தந்தை உபயோகமற்ற வயது முதிர்ந்த மாடுகளை பேருக்கு தானம் செய்கின்றதை கண்ணுற்று அதைப் பொருக்காத நசிகேதஸ், சற்றே படிப்பனையூட்டும் வண்ணம் "என்னை எவருக்கு தானமாக வழங்கப்போகிறீர்கள்" எனக் கேட்கிறான். மீண்டும் மீண்டும் இதே கேள்விகளால் துளைத்ததும் பொறுமை இழந்த வாஜஸ்ரவஸ் "உன்னை யமனுக்கு தானமாக கொடுத்தேன்" எனச் சொல்ல உடன் யமலோகம் போகிறான் நசிகேதஸ். அவ்வளவு வலிமை வாய்ந்தவை உதிர்க்கும் சொற்கள்!

மூன்று நாட்கள் யமனைப் பார்க்க வாயிலில் காத்திருந்ததால் நல்லாத்மாவை காக்க வைத்ததன் பொருட்டு தன் தர்ம நியாயங்கள் அழிந்து விடுமோ என அஞ்சி நசிகேதஸுக்கு மூன்று வரங்கள் அளிக்கிறான் யமன்.

முதலாவதாக, தன் தந்தையின் மேன்மை உயரும் பொருட்டு வரம் கேட்கிறான்

இரண்டாவதாக, எவ்விதமான யாகங்களும் வேள்விகளும் ஸ்வர்கத்துக்கு இட்டுச்செல்லக்கூடியவை எனக் கேட்டு, அதனைச் செய்யும் முறைகள் மந்திரங்கள் வழிகள் தெரிந்து கொள்கிறான். நசிகேதஸின் அறிவு கூர்மையை மெச்சி யமன் மிகவும் மகிழ்ந்து, குளிர்ந்து, அவனுக்குப் பட்டங்கள் வழங்கி மாலைகள் அணிவித்து மகிழ்விக்கிறான்.

அடுத்ததாக, அவன் கேட்ட வரம் "மரணத்திற்கு பிறகு நிகழும் நிகழ்வு என்ன?" என்பது. மரணத்திற்குப் பின் இருப்பு நிலை தொடரும் என்ற கருத்தும் அதனை மறுக்கும் வண்ணம் மரணத்திற்கு பிறகு இருப்பு நிலை இல்லாதொழியும் என்ற எதிர்மறைக் கருத்தும் நிலவி வருகிறது. தயை கூர்ந்து மரணத்திற்கு பின் என்ன என்ற ரகசியத்தை சொல்லி அருளுங்கள் என்கிறான். திடுக்கிட்டு போகும் யமனோ பல யோகிகளும் முனிவர்களும் கூட சந்தேகிக்கும் கேள்வியை நீ கேட்டு விட்டாய். இந்த ரகசியத்தைத் தவிர வேறு என்னவேண்டுமானாலும் கேள் என்க் கூறி வேறு வகையிலெல்லாம் நசிகேதஸைத் திசைத் திருப்பப் பார்க்கிறான். தன் ஆர்வத்தின் தீவிரம் விட்டகலாத நசிகேதஸும் மீண்டும் அதனையே வற்புறுத்திக் கேட்க, யமன் சொல்லும் விளக்கங்களே "கதோ'பநிஷதமாக உருப்பெற்றது.

Shakthiprabha
12th January 2010, 04:19 PM
குரு க்ருபை
__________

ஆச்சார்யர்-குரு-வாத்தியார் என்போரின் பேதங்களை நாம் முன்பே கண்டிருக்கிறோம். அச்சார்யன் தம் போதனைப் படி நடந்து முன்னுதாரணமாக இருந்து வழிநடத்திச் செல்பவர். குரு அவரையும் ஒரு படி மேல். அவரையும் கடந்தவர். அவர் பார்வையாலேயே தம் போதனையை போதிப்பவர். i.e. நயன தீட்சை செய்யக்கூடியவர். ஸ்பரிசத்தால் தீட்சை தரவல்லவர். மானச தீட்சை தரும் சக்தி படைத்தவர்.

எல்லோருக்கும் தெரிந்த உதாரணக் கதையொன்றை முன்பே அலசியிருக்கிறோம்.



ஒரு முறை சிறந்த குரு ஒருவர் தம் சிஷ்யனுக்கு பரீட்சை வைத்தார். "நீ மாடும் மேயும் போது பாலைக் கறந்து உண்ணாதே" என்று உத்தரவிடுகிறார். அவன் பிட்சை எடுத்து உண்கிறான். "பிட்சை எடுக்காதே" என்கிறார். திடீரென ஒரு நாள் கிணற்றில் அவன் விழுந்துவிட்ட செய்தி எட்டுகிறது. "உங்கள் ஆணைப்படி நான் பிட்சை எடுக்காமல், எருக்கம்பூவை உண்டு வந்தேன், அதனால் என் பார்வை குன்றிவிட்டது, கண் தெரியாது
கிணற்றுள் விழுந்து விட்டேன்" என்றான். எப்பேற்பட்ட குரு பக்தி! என்று மெச்சி, அவனுக்காக அஸ்வினி தேவர்களிடம் வேண்டி பார்வை மீட்டுத் தந்து பின் ஞானமும் உபதேசித்தார்.

(முந்தைய பகுதியிலிருந்து).

"நீ சகல சாஸ்திரங்களையும் கற்றாவன் ஆவாய்" என்று சொன்ன மாத்திரத்தில் அவனுக்கு ஞானோபதேசம் கிடைத்துவிட்டது (குருவில் க்ருபையால்). குருவின் உபதேசம் அவ்வளவு ஷக்தி வாய்ந்தது.

உபதேசிக்கும் வகையில் இன்னொரு வகையும் உண்டு. எதிர்கேள்விகளால் ஞானத் தீ மூட்டி வழிநடத்தி செல்வர். ஸ்வேதகேதுவின் தகப்பனான உத்தாலகர் தம் மகனுக்கு கேள்விக் கணைகளாலேயே உபதேசம் நடத்துகிறார். ஆலமரத்து பழம் கொண்டு வரச் செய்கிறார்.

இதனைப் பிளந்து பார்த்தால் என்ன தெரிகிறது?

விதை!

"விதையை பிளந்து பார்த்தால் என்ன காண்கிறாய்?

சூட்சுமமான பெரிய ஆலமரமே விதைக்குள் இருக்கிறது!

(நீர் கொண்டு வரச் செய்கிறார். பின் உப்பிட சொல்கிறார். )

இப்போது அருந்தும் நீரில் உப்பு நடுவிலா, முதலிலா முடிவிலா உப்பு இருக்கிறது?

அதே போல் ஆன்மாவும் நீக்கமற எங்கும் வியாபித்திருக்கிறது என்று உதாரண விளக்கம் அளிக்கிறார். குறிப்பறிந்து பொருள் கொள்ளல் என்ற முறையில் கேள்விகளாலேயே ஆன்மவிளக்கம் உபதேசிக்கிறார்.

மனிதன் ஒருவனின் கண்ணைக் கட்டி பொருட்களை திருடிக்கொண்டு நடுக்காட்டில் விட்டுவ்ட்டால் அவன் எவ்வாறு திண்டாடி வழிதெரியாது தவிப்பானோ அப்படிப்பட்டது சம்சாரம். கர்மவினையை திருடனுக்கு ஒப்பிடலாம். ஆசை காமம் க்ரோதம் போன்ற குணங்கள் அவன் கண் மறைக்க வழி தெரியாது திண்டாடுகிறான். அப்படிபட்டவனுக்கு துணை கிடைத்து அவனை வழி சேர்ப்போனே குரு எனப்படுபவன்.

போலிகுருமார்கள் பற்றியே அதிகம் கேள்வியுற்று, குருகுலம், குருபக்தி என்பவற்றில் எல்லாம் நம்பிக்கை அற்ற நிலையில் நாம் இன்று இருக்கிறோம். எங்கும் எதிலும் போலிக்களைக் கண்டு சலித்து விட்ட நமக்கு, இறைவனை நாடும் பாதையிலும் போலிசாமியார்களைக் கண்டு நோகும் நிலை தான். அதனாலேயே இப்பாதையில் கால் வைக்க தயங்குபவர்கள் அதிகம்.

கலியுகம் தலைவிரித்தாடும் இக்காலகட்டத்தில் உட்கொள்ளும் உணவு முதல் மருந்துகள் வரை, மருத்துவர்கள் முதல், ஜோதிடர்கள் வரை எங்கும் போலிகள் அதிகமாகிவிட்டன. உறவினில், அன்பினில், வார்த்தைகளில், போலி தன்மை அதிகரித்து உண்மைகள் குறைந்துவருகின்றன. இக்கால கட்டத்திற்கேற்ப குருமார்களும் ஆசிரமங்களும் கூட சில தவறான நோக்கத்துடன் செயல்பட்டுவிடுவதால், இம்மார்க்கமே தவறு என்றோ இதில் செயல்படும் அனைவரும் வேடதாரிகள் என்றோ கூறிவிட இயலாது. போலிகளின் நடுவே நல்ல உணவும், மருந்தும், மருத்துவனும், அன்பும், உறவும் அவ்வப்போது தட்டுப் படுவதைப் போல் சிறந்த குருமார்களும் ஆச்சார்யர்களும் இன்றும் இருந்துவருகின்றனர். பல சன்மார்க ஆசிரமங்கள் உலகளாவிய முறையில் நிறைய சேவைகள் செய்த வண்ணம் உள்ளனர். இவர்களின் தன்னலமற்ற சேவை தொடர்ந்து வருகிறது.

"போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்" என விளம்பரம் செய்வது, தற்கால குருகுலம், குருமார்கள் ஆசிரமங்களுக்கும் சாலப் பொருந்தும்.

"போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள். போலிகளை நாடாதீர்கள்" உண்மையான குருவை எவ்விதம் கண்டு கொள்வது? பண்ட பதார்த்தங்களைப் போல் இதற்கென விதிமுறைகள் கிடையாது. உண்மையை பிரித்துணரும் பக்குவம் வளர்த்துக் கொள்வது தான் வழி. உண்மையான பக்தனுக்கு இது ஒரு பொருட்டே அல்ல. அவன் பிரித்துணரும் பகுத்தறிவு பெற்றவனாக இருப்பான். உண்மையான குருவை எளிதில் கண்டுணர்வான்.

aanaa
13th January 2010, 09:40 PM
:notworthy:
:clap:
:2thumbsup:


கலக்கிட்டீங்க SP

Shakthiprabha
19th January 2010, 04:16 PM
குருகுல வாசத்தின் அவசியத்தை இன்றைய காலகட்டத்தின் கட்டாயத்தின் பேரில் குறைத்து மதிப்பிட்டு விடுகிறோம். எதையும் ஆழமாகவும் முழுமையாகவும், பல கோணங்களிலும் யோசித்தால் அதன் அத்தியாவசியம் புரிந்துவிடும்.

காலை எழுந்தவுடன் படிப்பு என்றான் பாரதி. இப்பொழுது இருக்கும் பாட திட்டத்திற்கு காலை, மதியம், மாலை, என மூன்று வேளையும் பிள்ளைகளை படிக்க சொல்லி பெற்றோர்கள் உயிரை விட வேண்டியுள்ளது. அப்படி படிக்க சொல்லும் பொழுது மாணாக்கர்களுக்கு கவனம் அவசியமாகிறது. கவனிக்குறைவு நேர்ந்தால் பாடங்கள் மனத்தில் பசுமரத்து ஆணி போல் பதிவதில்லை. பின் மறந்தும் போகிறது. தொலைக்காட்சி, தொலைப்பேசி, வலையுலகம் இன்னும் எத்தனை உண்டோ அவ்வளவும் அவர்களை திசைதிருப்பும் சாதனங்கள். பரிட்சை என்றால் மனதை ஒருமுகப்படுத்தி தயார் செய்ய வெண்டியுள்ளது. இக்கால கல்விதிட்டத்திற்கே இப்படிப்பட்ட மனக்கட்டுபாடுகளும் ஒழுக்கமும் அவசியம் என்றால், பிரம்மச்சர்யம் பயிலச் செல்பவனுக்கோ, ஞானத்தை அடையும் முயற்சியில் இருப்பவனுக்கோ எவ்வளவு ஒழுக்கமும் கட்டுப்பாடும் அவசியம் என்பது வெளிச்சமாகிறது. அதனை வீட்டுச் சூழ்நிலை தருவதில்லை. சுற்றுப்புறச் சூழ்நிலை சற்றே மாறுபட்டாலும், அதெற்கென காத்திருந்த மனத்திற்கோ அலைபாய்வதற்கு வசதியாகிறது.

ஆகவே குருகுலவாசம் அவசியமானது. குருவினிடமே வாசம் செய்து பாடம் பயிலுதல். மாணாக்கன் பயில்வது வேதமும், ஒழுக்கமும் பாடமும் மட்டுமல்ல. குருமார்களின் வாழ்வு முறை, செயல்வழிபாடுகள், நெறிகள் என பலவும் கண்ணுற்று தெளிகிறான். அதனால் இங்கு குருவே ஆச்சார்யனாகவும் ஆகிறான். ( i.e. கற்பிப்பது போல் அவனும் நடந்து வழிநடத்திச் செல்கிறான்). குருவினிடத்தே வாசம் செய்வதால் மாணவனின் கவனம் பெரும் அளவு சிதறுவதில்லை. ஒருமுகமாக தன் இலக்கில் குறி வைத்து எட்டிப் பிடிக்கிறான். குருவிற்கு சிஷ்யன் செவைகள் பலவும் செய்யக் கடமைபட்டுள்ளான். வேதம் நெறி மட்டுமன்றி சங்கீதம் முதலிய கலைகளுக்கும் பண்டைய காலத்தில் குருகுல வாசம் இருந்து வந்திருக்கிறது. குருகுலவாசம் தோராயமாக 12 வருடகாலம் செய்யப்படும் என்கின்றனர். ஒவ்வொரு கலை அல்லது பிரிவிற்கு வெவ்வேறு குருவினிடத்து சென்று பயிலும் சுதந்திரம் இருக்கின்றது. குறிப்பிட்ட துறையில் அதிகம் பாண்டித்தியம் பெற்றிருக்கும் வேறொரு குருவிடம் அதனை கற்றுத் தெளியலாம்.

சிஷ்யர்களின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு குரு வகித்தாலும் சிஷ்யனின் சுயமான முயற்சி மற்றும் அவன் புத்தி-கூர்மையும் அதனை நிர்ணயிக்கிறது. பவ-பூதி எழுதிய உத்தர ராம சரிதத்தில், லவ- குசர்கள் வால்மீகி முனிவரிடம் பாடம் பயின்று வருகின்றனர். அவர்களுடன் கூட ஆத்ரேயி என்ற மாணவியும் படிக்கிறாள். அவளின் புத்திபலம் லவ-குசர்களுடன் போட்டியிட முடியவில்லை. அதனால் அவள் அந்த குருகுலத்தை விட்டு வேறு இடம் சென்று பயின்றாளாம். குருவிற்கு எல்லா மாணாக்கனும் ஒன்று. அவர் புத்தி கூர்மையுள்ளவனுக்கும் புத்தி மட்டுபட்டவனுக்கும் ஒரே பாடத்தை பயிற்றுவிக்கிறார். அவர் சொன்ன பாடங்களை எந்த அளவு உள்வாங்கி கிரஹித்துக்கொள்கிறான் என்பது மாணாக்கனைப் பொறுத்தது. இதனை உணர்த்தும் வகையில் ஆத்ரேயி "மண்ணாங்கட்டி எவ்வாறு சூரிய ஒளியை தன்னுள் வாங்கி உமிழ்வதில்லையோ மூடனின் அறிவும் அவ்வாறே. புத்தி கூர்மை மிகுந்த மாணாக்கனோ கதிர் வீச்சை உள்வாங்கி பிரதிபலிக்கும் ஸ்படிக மணியைப் போன்றவன்." என்கிறாள். மாணாக்கனின் உழைப்பு, சிரத்தை, எல்லாம் பொருத்தே அவன் உயர்வும் அமையும். சரியான குரு அமைந்துவிட்டாலோ அவனுக்கு நல்லதொரு வழிகாட்டி கிடைத்த பலன். வழிகாட்டிகள் குருமார்கள் என்பதாலேயே சிஷ்யன் செய்யும் பாபச்செயல்களுக்கும் குரு பொறுப்பாவான். மக்கள் செய்யும் பாபம் ராஜாவைவ் சாரும், ராஜாவின் பாபம் புரோஹிதரைச் சாரும், மனைவியின் பிழைகளுக்கு கணவன் பொறுப்பு அதே போல் சிஷ்யர்களின் ஒழுங்கீன நடத்தைகளுக்கு குரு பொறுப்பாளி என்பது பெரியோர் வாக்கு. இவர்கள் எல்லோரும் வழிகாட்டிகள். தவறான வழியில் செல்லும் தம் மக்களைத் திருத்தக் கடமைப் பட்டவர்கள்.

அப்பேர்பட்ட குருவினிடத்து, குரு ஸ்தானத்தில் இருப்பவர்களிடத்து அதிக மரியாதையும் பெறும் மதிப்பும் வைக்க வேண்டும். கொடிய நஞ்சுக்கு ஒப்புமையான விடயம் எது என்றால் குருவை அவமதித்தல் என்கிறார் ஷங்கராச்சார்யார். பிரம்மச்சர்யம் பயிற்றுவிக்கும் குரு "வித்யா-குரு". க்ருஹஸ்தன் ஆகாமல், சன்யாசம் ஏற்று அதன் பின் கிடைக்கும் குரு "தீக்ஷா-குரு"

Shakthiprabha
19th January 2010, 04:30 PM
நன்றி ஆனா :)

Just some talks off-beat....

Ashok tries to convince naLini, well not really convince but justify his act...for which she says

"உன் வாய் பேசறது என் வயித்துக்கு புரியலியேடா"

ரொம்ப நெகிழ்ச்சியான வசனம். நளினி ரொம்ப நன்றாக செய்திருக்கிறார். நாதன் கதாபாத்திரமும் சரி, வசுமதி பாத்திரமும் சரி, பிள்ளை பாசத்திற்கு ஏங்கும் அளவு அவர்களின் "கௌரவ" பங்கத்துக்கும் வருந்துகின்றனர்

"எப்ப்டின்னா எங்க க்ளப் ல தலை காட்டுவேன்...உங்க சர்கிள்-ல உங்க மதிப்பே போச்சு" என்று அங்கலாய்பதும் வலிக்கும் உண்மை. அஷோக் நாதன் அலுவலகம் வரும் பொழுது, அவனை ஒரு அவமானச் சின்னமாகத் தான் நாதன் முதலில் பார்க்கிறார் :) மனிதனின் "அஹம்" தான் எத்தனை விந்தையானது!!!!!

நாதனிடம் திட்டுவாங்கிய குயிலி திரும்ப அவர்களிடம் தொலைப்பேசியில் பேசும் பொழுது, பழித்து காட்டுவதும், முகத்தை சொடுக்குவதும் முதல் முறையாக ரசிக்கும்படி இருந்தது.

"தன் பிள்ளை கட்டாந்தரையில் படுக்கும் போது தனக்கு மெத்தை கேடா, தன் பிள்ளை பிக்ஷை எடுத்து உண்ணும் போது தனக்கு சோறு கேடா" என்று அங்கலாய்கிறாள் உன் அம்மா என்று நாதன் சொல்வதும் .... ஒரு அம்மாவின் ஸ்தானதில் இருந்து மிகுந்த வலியை தரக் கூடிய நிலைமை.

பி.கு 1 : சமையல் மாமி கதாபாத்திரம் வம்பு தும்புக்கு அலைவதாலும், தன் திருட்டையே மறந்து மன்னித்த (even due to selfish motive) வசுமதியைப் பற்றி புறம்-பேசுவதாலும், 'மட-மட-மட-மட' என கீழே சரிந்து 'தொபுகடீர்' என்று விழுந்தே விட்டது!!! (though some of her grievances and issues are kinda sad in a remote way)

பி.கு-2: I thought of VR and our conversations during samayal maami char's episodes. !

Shakthiprabha
19th January 2010, 07:49 PM
பெற்றவர்களின் சம்மதம் பெற்று சன்னியாசம் கொள்வதே முறை என்றாலும், ஆதிஷங்கரரின் தாயார் உட்பட எவருமே மனம் விரும்பி, மகிழ்வுடன் விடைகொடுக்கவில்லை. பேருக்கு சம்மதம் சொன்னவர்களும், வற்புறுத்தலின் பேரில் சம்மதம் சொன்னவர்களுமே அதிகம். இவ்வண்ணம் பெற்றோரையெல்லாம் புண்படுத்தி, வருத்ததில் ஆழ்த்தியானும் ஞானத்தைப் பெற வேண்டுமா?

இக்கேள்வியை சற்றே வேறு விதமாய் ஆராயலாம். நம் பிள்ளைகளுக்கு ஒரு துறையில் பிடிப்போ, ஆர்வமோ இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், இன்றைக்கெல்லாம் அவர்களின் உரிமையை நாம் தடுக்கிறோமா? அல்லது வெளிநாடு சென்று படித்துத் திரும்பவோ, அங்கேயே வேற்றுநாட்டு பிரஜையாகிவிட்டு தம் வருமானத்தையும், வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவோ நாம் சுதந்திரத்தை பறிக்கிறோமா? குறிப்பிட்ட ஒருவனுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ, அதன் படி செல்லுதல் அவனின் தனிப்பட்ட
உரிமை. அதைத் தடுக்க பெற்றோரே இன்று முன்வருவதில்லை. உலகாய விஷயங்களுக்கும் கல்விக்குமே இப்படியென்றால், உயர்ந்த படிப்பை, ஞானத்தை தேடிப் போகிற ஒருவனுக்கு அந்த உரிமை வழங்கப்பட வேண்டியது அவசியமாகிறதல்லவா?

பெற்ற மனம் தவித்தாலும், அழுதாலும் கூட தனிப்பட்ட இன்னொருவனின் ஆன்ம தாகத்தை, பிறப்பின் நோக்கத்தை, அதன் தொடர்புடைய தேடலை தடை போடுவது என்பது பெரும்பாலோரும் செய்யமாட்டாத ஒன்று. பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றுவதும் ஞானவழி முயல்வதும் உயர்ந்த கடமைகள். அவற்றை தடைபோடுவதோ ஆன்ம தாகத்திற்கு தடை விதிப்பதோ, பெருக்கெடுத்து ஓடும் ஆற்றை கைகளால் தடுப்பது போல.

தான் கண்டுணர்ந்த ஞானத்தை யக்ஞவல்க்யரிடம் தெளிய முற்படும் போது, 'மாதா பிதா குரு'வின் ஆசியுடன் என் பதிலை கூறத்துவங்குகிறேன் என்கிறார் ஜனகர். ஆகவே மூவரின் ஆசியும் தேவையானது. மூவரின் ஆசியுடன் இலக்கை நோக்கி அடி எடுத்து வைக்க வேண்டும். ஞானத்தின் தேடலுக்கு வீடோ, வீட்டிலிருக்கும் நபர்களோ, உறவுகளோ வழி-உபயம், விடை சொல்ல இயலாது. அதற்கு குரு வேண்டும்.

ஆன்ம வழி தொடரும் சீடனுக்கு பிக்ஷை கொடுப்பவர்கள் தாய்மார்கள். குரு தந்தை, சிஷ்யர்கள் பிள்ளைகள், அவன் அனுபவிக்கும் ஏகாந்த சுகமே இல்லறத் துணை. ஞானப் பாதையில் போகின்றவனுக்கு பந்தமும் சொந்தமும் பற்றும், பழுத்த பழம் மரத்தில் தங்காது நிலத்தில் விழுவது போல் அறுத்துக் கொண்டு விழுந்துவிடும். தேசிகனாகிய குருவே- திசையைக் காட்டுபவரே ஷரணம் எனச் செல்கிறான்.

anbu_kathir
20th January 2010, 09:55 AM
I am getting to see the show these days, so feeling lazy to read whatever you have posted, SP :D. Kudos to you for keeping up the good work :).

As for the show, I would like to see Ashok falter some time :D. Konjam aavudhu human-a kaamikkanum .. eppodhum vashistar-aagavE irundha eppadi ?? If he was indeed a sthitha-pragna like we are being shown, why go through the process of becoming a brahmin ? After all, a brahmin is not as high as a sthitha pragna.

I suspect Ashok (and cho sir himself) will lose the attempt of mindlessly carrying over the past to the present.

Apart from this concern, the show is going great guns with respect to acting, thathuvams and religious information.

Love and Light.

aanaa
20th January 2010, 11:57 PM
Thank you for the write up.
Keep up

Shakthiprabha
23rd January 2010, 06:49 PM
Thanks aana and prasad :)

/// If he was indeed a sthitha-pragna like we are being shown, why go through the process of becoming a brahmin ? After all, a brahmin is not as high as a sthitha pragna. ///

Prasad, Precisely my thought. I keep getting the question too. Having elavated and being a sthitha pragna that he is, why is he meticulously bothering to follow a brahmin way of life, is a million dolar question. But again probably the answer lies in the story's purpose. I.E. to search a true brahmin and to set an example (remainder) of who actually is a following the brahmin hood which is long forgotten.

Shakthiprabha
23rd January 2010, 06:51 PM
இப்படி இருக்க்க வேண்டும் இப்படி இருக்கக் கூடாது என்ற விதிமுறைகள் நம் மதத்தில் (எல்லா மதங்களிலும்) நிறைய உண்டு. அவற்றையெல்லாம் கடை பிடிக்கிறோமா எனபதே கேள்விக்குறி. விஞ்ஞானத்தின அடிப்படையில் மட்டுமே நம்பிக்கை வளர்கிறது. மற்ற புரியாத அல்லது புரிந்து கொள்ள இஷ்டப்படாத விஷயங்களை புறம் தள்ளிவிடுகிறோம். அவற்றை பைத்தியக்காரத்தனம் என்றோ மூட நம்பிக்கை என்றோ முத்திரைக் குத்தி மூலையில் அமரச் செய்துவிடுகிறோம். அவற்றுக்கென சில புராணக் கதைகளும், சான்றுகளும், குறிப்புகளும் ஒவ்வொரு மதத்திலும் இருக்கின்றன.

கோவில்களிக்குச் சென்றால் கூட இன்னென்ன முறையில் இப்படி நடக்க வேண்டும் என்ற நியதிகள் உண்டு. நடந்து கொள்ளும் முறைகளைப் பற்றியெல்லாம் நமக்கு அடிப்படை அறிவை புகட்டியிருக்கிறார்கள்.


கோவில்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்
________________________________________________

1. நீராடாமலும் கை கால்களை சுத்தி செய்யாமலும் சமயக்குறி இல்லாதும் செல்லக்கூடாது

2. பகவானுக்கு நேர் எதிர் வழியில் செல்லாது பக்கத்து வழியில் செல்ல வேண்டும்

3. விளக்கேற்றும் பொழுதும் விளக்கில்லாத போதும் செல்லக்கூடாது

4. புனித நீர்க்குடத்தை மூடாமலும், இறைவனின் நைவேத்தியத்தை மூடாமலும் வைக்கக் கூடாது

5. வேறு காரியங்களுக்கு வாங்கிய பொருளை பெருமாளுக்கு அர்பணிக்கக் கூடாது

6. நாராயண மந்திர உபதேசம் பெறாமல் ஆராதனம் செய்யக்கூடாது

7. மணமில்லாத மலர்களை சமர்ப்பித்தலாகாது

8. கோவிலுள் குப்பை கூளம் இடலாகாது

9. கோவிலுள் ஓடுதல், சிரித்தல், அதிர்ந்து நடத்தல், சினந்து பேசுதல், லாகிரி வஸ்துக்களை உபயோகித்தல், சூதாடல், தற்பெருமை பேசுதல், சமய ஏற்றத்தாழ்வு பேசுதல் கூடாது.

10. துளசியையும் மற்றைய பூக்களையும் நீர்கொண்டு அலம்பாமல் கோவிலுள் எடுத்துச் செல்லல் ஆகாது.

11. தரிசனம் முடிந்து திரும்பும் போது பகவானுக்கு முதுகுகாட்டி திரும்பக்கூடாது.

12. கோவிலுள் தீர்த்தம், சடாரி, துளசி, பிரசாதம் இவை பெறாமல் திரும்பக் கூடாது.

13. அர்ச்சகர்கள் தரும் குங்குமம் பிரசாதம் போன்றவற்றை கீழே சிந்தலாகாது.

14. ஆடம்பரமற்ற தன்மை முற்றிலும் வேண்டும்.

15. ஆமணக்கு எண்ணையை திரியிட்டு கோவில்களில் விளக்கு எரிக்கக் கூடாது.

http://www.tamilvu.org/slet/l4211/l4211pag.jsp?x=682 (நன்றி)

என்னிடம் 'விரத பூஜா விதானம்' முதல் பாகம் இருந்தது. அதில் கோவில்களில் பக்தர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பற்றி குறிப்பிட்டிருக்கும். அப்புத்தகம் பொன இடம் தெரியவில்லை :(


அதிர்ந்து நடத்தலே கூடாது என்று குறிப்பிட்டு, பிரதக்ஷணம் செய்து வலம் வரும் பொழுது எப்படி பவ்யமாக நடக்க வேண்டும் என்பதற்கு சான்றாக "நிறை மாத கர்பிணி ஒருத்தி தலையில் எண்ணைக் குடம் வைத்து, காலில் விலங்கு அணிந்திருந்தால்" எப்படி மெல்லமாக நடப்பாளோ அப்படி நடக்கவேண்டும் என்கின்றனர். இவையெல்லாம் ஒருமித்த கருத்துடனும், மனத்துடனும் இறைவனை நினைவதற்காக சொல்லப்பட்டது. கடமையே என்று வேகமாக மனம் ஈடுபாடின்றி ஓடுவதால் பயனில்லை என்று எடுத்துக்காட்டவே இப்படிப்பட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். கோவில் படியில் உட்கார்ந்த பிறகு வீடு திரும்ப வேண்டும் என்ற விதி முறை பலருக்கும் தெரிந்திருக்கும். சிவன் கோவிலுக்கு சென்றால், வழிபட்டு திரும்புகையில் சிறிது நேரம் உட்கார்ந்து வருவது ஏன்? மகாபலி போன்ற சிவ கணங்கள், கோவிலுக்கு வருபவர்களுக்கு துணையாக புறப்பட்டு வருகின்றனர். அவர்களை, கோவிலிலேயே இருக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அமர்வது; அத்துடன், சிவநாமம் சொல்ல வேண்டும் என்பதும் ஐதீகம். சிவ "ஆக்ஞ்ஜையை பரிபாலிப்பொராகிய நீங்கள் இனி சந்நிதி திரும்பலாம், நான் விடை பெற்றுக்கொள்கிறேன்" என்ற அர்த்தம் தொனிக்க மந்திரம் ஜபித்து பின் விடை பெற வேண்டும்.

கோவில்களின் ஸ்தல புராணம் அதன் பெருமையையும் சிறப்பையும் தனித்துவத்தையும் எடுத்துக்கூற வல்லது. புராதன கோவில்கள் பலவற்றிற்கும் சிறப்புமிக்க ஸ்தல புராணம் இருக்கிறது. ஸ்தல புராணம் உள்ள கோவில்களுக்கு விசேஷ பிரார்த்தனைக்காக செல்வதுண்டு. கிரஹ ஷாந்திக்கு சூர்யனார் கோவிலும் அந்தந்த க்ரஹங்களுக்கு தனிப்பட்ட கோவில்களும் நாம் கேள்விபட்டுள்ளோம். அவற்றில் சனிபகவானுக்காக ப்ரீதி ப்ரீதி செய்வதற்கு திருநள்ளாறு கோவில் பிரசித்தி பெற்றது. நள மஹராஜன் கலியினால் பீடிக்கப்பட்டு இங்கு வந்து வணங்கி நலம் கண்டதாய் சரித்திரம் உண்டு. இது சிவஸ்தலம் ஆகும். ஒரு முறை தேவேந்திரன் வாலாசுரனுடன் சண்டையிட்ட போது முசுகுந்தன் என்ற சக்கரவர்த்தியின் உதவியுடன் வாலாசுரனை வீழ்த்தி வெற்றியை நாடினான். அதற்குப் பரிசாக அவன் வணங்கும் சிவலிங்கத்தை கேட்கிறான் முசுகுந்தன். தேவேந்தரனும் தான் வணங்கும் சிவலிங்கத்தைப் போலவே ஆறு லிங்கம் தருவித்து கொடுத்துப் பார்க்கிறான். ஒவ்வொன்றை பரிசளிக்கும் போதும், இதுவல்ல நான் கேட்ட லிங்கம் என மறுத்துவிடுகிறான் முசுகுந்தன். வேறுவழியின்றி தேவேந்திரன் தான் வணங்கும் சிவலிங்கமே முசுகுந்தனுக்கு தரவேண்டியதாய்ப் போனது. அந்தச் சிவலிங்கம் இன்றும் திருவையாற்றில் உள்ளது. தருவித்து வழங்கிய மற்ற ஆறு லிங்கங்களும் வெவ்வேறு இடங்களில் உள்ளது. அவற்றில் ஒன்று திருநள்ளாரில் உள்ளதாம்.

திருநள்ளாற்றுக் கோவிலின் குளத்தை மண்டைக் குளம் என்று கூறுகின்றனர். பொய்க் கணக்கு எழுதி பிடிப்பட்ட கணக்கன், பால் வினியோகிக்கும் எளிய இடையன் மேல் பழி சுமத்தி தப்பிக்கப் பார்க்கிறான். இடையனை சிறையில் அடைக்கின்றனர். அவன் கனவில் சிவபெருமான் தோன்றி, கணக்கனை கோவிலில் வந்து சத்தியம் செய்யச் சொல்கிறார். அவ்வண்ணமே கணக்கன் மறுதினம் பொய்யுரைத்ததும், சிவன் சூலாயுதத்தால் அவன் தலையை கொய்ய, மண்டை உருண்டோடுகிறது. அதற்கு வழிவிட்டு நந்தியே சற்றே விலகிக்கொள்கிறதாம். அந்த மண்டை விழுந்த இடம் மண்டைக் குளம் என்று வழங்கப்பட்டு வருகிறதாம். இக்கோவிலில் சனிபகவானுக்கென தனி சந்நிதி இருக்கின்றது. வேறு கிரஹங்களுக்கு இல்லை. நளன் பூஜை செய்து தீபம் ஏற்றி வழிபட்ட இடமென சம்பந்தரும் தன் பாடலில் குறிப்பிட்டுள்ள பாடல் பெற்ற தளம்.

அந்தந்த க்ரஹங்களுக்கென நாயகர்களின் ப்ரீதி செய்தல் ஒருபுறம் இருந்தாலும், ஹனுமனை வேண்டினால் சனியின் பாதிப்பு மட்டுப்படும் என்ற கருத்தும் உண்டு. அவ்வாறே சங்கடம் நீங்க விநாயகனை வழிபடுதலும் பலர் செய்து வருகின்றனர். விக்னங்களை அறவே அறுப்பதால் விக்ன விநாயகன் என்று அவரை போற்றித் துதிக்கிறோம்.

ஒருமுறை விநாயகனின் பெருத்த வயிற்றை சந்திரன் கேலி செய்தான். கோபம் கொண்ட விநாயகன் அவன் மெருகும் அழகும் இனி தேய்ந்துப் போகக் கடவது என சபித்தார். மனம் வருந்தி சந்திரன் சதுர்த்தி அன்று விரதம் இருந்து தன் சங்கடத்தை போக்கிக்கொண்டதாகக் கூறுவர். சுக்லபட்ஷ சதுர்த்தியில் விரதம் இருந்து என்னை வழிபடுபவர்களின் கஷ்டங்களும் துன்பங்களும் நீங்கும் என திருவாய்மொழிந்தார்.இது நமக்குத் தெரிந்த சங்கட-ஹர (சங்கஷ்ட - ஹர) சதுர்த்தி கதை. கேள்விப்பட்ட கதையும் கூட.

சோ அவர்களின் விளக்கம் கேள்விப்படாத ஒன்றாக இருந்தது. விநாயக சதுர்த்தி வளர்பிறை சதுர்த்தியில் வருவதால் தேய்பிறை சதுர்த்திக்குறிய தேவதை, தனது தினத்தையும் சிறப்புறச் செய்யுமாறு வேண்டி கேட்டுக்கொண்டதாம். விநாயகரும் இனி தேய்பிறை சதுர்த்தியில் முறையாய் பூஜை செய்து விரதம் இருந்தால் சங்கடங்கள் நீங்கும் என்று அருள்மொழிந்தாராம்.

பல கதைகள் நமக்கு செவிவழிச் செல்வமாய் வந்தடைகிறது. சில கதைகள் புத்தகமார்கமாகவும் இன்றைக்கும் படித்து உணர்கிறோம். இனி வரும் நூற்றாண்டுகளில் எத்தனை பேர் இக்கதைகளை, மதக் கோட்பாடுகளை அதில் சொல்லப்பட்டிருக்கும் நன்மை தீமைகளை, ஏன் மந்திரங்களையும் கூட சரியாக ஒதப்போகிறார்கள் என்பது கேள்விக்குறி. அதிக அளவில் வாழ்ந்துவந்த புரோஹிதர்கள் /சாஸ்த்ரிகள் குடும்பங்கள் இன்று க்ஷீணித்து விட்டது. இருக்கும் சிலரும் கூட தம் பிள்ளைகளை வேறு துறையில் முன்னேற விரும்பி அனுப்பிவைக்கிறார்கள். இத்துறையில் வருமானம் குறைந்து கொண்டே வருவதே அதற்குக் காரணம். வருமானம் மட்டுமின்றி மதிப்பும் மரியாதையும் கூட மட்டுப்பட்டுத் தான் வருகிறது. இத்தனை இக்கட்டுகளையும் தாண்டி இன்றைக்கும் இத்தொழிலை விட்டுவிடாமல் ஒரளவுக்கேனும் பராமரித்து வரும் புரோஹிதர்கள் பாராட்டுக்குறியவர்கள். கல்யாணம் முதல் கருமாதி வரை இவர்களின் சேவை தேவைப் படுகிறது.

aanaa
23rd January 2010, 08:30 PM
என்னிடம் 'விரத பூஜா விதானம்' முதல் பாகம் இருந்தது. அதில் கோவில்களில் பக்தர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பற்றி குறிப்பிட்டிருக்கும். அப்புத்தகம் பொன இடம் தெரியவில்லை :(



ஊரில் இப்படி எத்தனையோ பொத்தகங்களைத் தொலத்துவிட்டேன் - வாங்கியவர்கள் திருப்பித் தருவதே இல்ல. :-(

Shakthiprabha
29th January 2010, 08:17 PM
aanaa,

Saddest part is, sometimes even we forget whom we have lent it to :| ...and yeah...they doint bother to return back :|

Shakthiprabha
29th January 2010, 08:17 PM
யோக முயற்சி
_____________


உலகில் ஒருவனைப்போல் இன்னொருவன் இருப்பதில்லை, ஒவ்வொருவரின் நம்பிக்கை, இலக்கு, ஆசை அபிலாஷைகளும் தனித்துவம் வாய்ந்தவை. இலக்குகள் வேறாக இருப்பதாலேயே அவரவர்களின் தனிப்பட்ட முயற்சியும் வெவ்வேறானவை. அதற்கென அவர்கள் மெனகெடும் விதமும் சிரத்தையும் வித்தியாசப்படும். ஒரே ஒரு அப்துல் கலாம், ஒரே ஒரு பில்கேட்ஸ் என முயற்சிப் படிகளில் ஏறி பதக்கம் பெற்றோரை சுட்டிக் காட்டிவிட முடியும். கோடானகோடி ஜனத்தொகையில் வெகு சொற்பம் மனிதர்கள் பெரிய இலட்சியத்திற்காக செயல்படுகின்றனர். அவற்றுள் வெகு செலரே லக்ஷியத்தை எட்டிப் பிடிக்கின்றனர். அவர்களுள் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே லக்ஷியத்தின் உச்சிக் கொம்பை எட்டிப் பிடிக்கிறார்கள். சாமான்ய நடப்புகளுக்கே இப்படியெனில், வாழ்வில் மிகப்பெரிய, உயர்ந்த லக்ஷியமாம், இறையை உணர்தல் என்பது எவ்வளவு கடினம் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. இதற்கு முயற்சிப்பவர்களே சொற்பம், வைராக்கியத்துடன் மேல் நடந்து செல்பவர்கள் மிகக் குறைவு அப்படி தொடர்ந்து தேடுபவர்களிலும் எவனோ ஒருவனே எட்டிப் பிடிக்கிறான். இதனை பகவான் க்ருஷ்ணன் கீதையில் குறிப்பிடுகிறான்.

மனுஷ்யாணாம் சஹஸ்ரேஷு கஸ்சித் யததி சித்தயே |
யததாமபி சித்தானாம் கஸ்சின் மாம் வேத்தி தத்வத: ||

ஆயிரக்கணக்கான மனிதர்களில் எவனோ ஒருவன் முயல்கிறான். அப்படி சித்தி அல்லது முழுமையைப் பெற முயற்சிப்பவர்களுள் எவனோ ஒருவனே என்னைப் பற்றிய உண்மை உணர்ந்தவன் ஆகிறான்.

எல்லோருக்கும் எல்லாமும் சித்தியடைவதில்லை. அதன் பொருட்டு உழைக்க, ஈடுபட மன/உடல் முதிர்ச்சியும் இடம் கொடுப்பதில்லை. ஒரு துறைகளில் வல்லுனர்களாய் இருப்பவர்கள், இன்னொன்றின் மேதாவிலாசத்திற்காக, சிரத்தையுடன் உழைப்பதும் வெகு அபூர்வம். ஆயிரமாயிரம் மனிதர்களில் இறைவனை நாடும் பாதை எவனோ ஒருவனே தேர்ந்தெடுக்கிறான். அப்படிப்பட்ட கடினமான பாதையில் ஒருவன் மனம் ஒன்றி ஈடுபடுவானேயானால், அவன் இலட்சியத்தை எட்டிப் பிடித்தாலும், அல்லது கை நழுவவிட்டாலும் கூட "முயற்சித்த" ஒரு காரணத்திற்காகவே உயர்வு பெறுவான். முயல்வதே வெற்றியின் முதல் படி, வெற்றிக்கு அடையாளம், தன்னம்பிக்கையின் அஸ்திவாரம், இவ்வாறெல்லாம் நடைமுறை வாழ்வில் நாம் மேற்கொள்ளும் சிறிய லக்ஷியங்களுக்கே சொல்லப்படுகிற விஷயம். இதுவே இறைவனைத் தேடும் மாபெரும் முயற்சிக்கும் உரித்தாகுகிறது.

கீதையில் அர்ஜுனைன் சந்தேகமும் இதுவே. 'ஒருவன் யோக முயற்சியில் ஈடுபடுகிறான். கர்மம் அல்லாமல் யோகம் பாதையை அவன் மனம் நாடுகிறது. அவன் சிரத்தையோடு துவங்குகிறான். அப்படி ஈடுபடுபவனுக்கு, யோகம் சித்திக்காமல் ஆகிவிடுமேயானால், அவன் யோக மார்கத்திலும் நில்லாமல், கர்ம மார்கத்தை விட்டும் விலகி இருக்க நேரிடுகிறது. அப்படிப்பட்டவனுக்கு என்ன கதி ஏற்படும்? சிதறிய மேகம் போல் சிதறுண்டு போகுமோ அவன் கதி?' என்று வினவுகிறான்.

கச்சிந்நோபயவிப்ரஷ்டஸ்சிந்நாப்ரமிவ நச்யதி।
அப்ரதிஷ்டோ மஹாபாஹோ விமூடோ ப்ரஹ்மண: பதி॥

என்கிறது ஸ்லோகம்.

அதற்கு பகவான்,

பார்த்த நைவேஹநாமுத்ர விநாசஸ்தஸ்ய வித்யதே |
நஹி கல்யாணக்ருத் கஸ்சித் துர்கதிம் தாத கச்சதி ||
ப்ராப்ய புண்யக்ருதம் லோகானுஷித்வா சாஸ்வதீ: ஸமா: |
சுசீனாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோ அபிஜாயதே||

நல்லது செய்யும் அவன் துன்பம் அடையவதில்லை. இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவனுக்கு அழிவில்லை. யோகத்தினின்று தவறியவன் நல்ல உலகத்தை அடைந்து பின் நல்ல அறம் வாழும் மனிதர்களின் குலத்தில் பிறப்பெடுப்பான். என்று தெளிவிக்கிறார். முயன்றாலே அதற்கு அப்பேர்ப்ட்ட கதி உண்டாம். முயற்சியில் வெற்றியோ தோல்வியோ பற்றி சிந்திக்காது, சிரத்தையுடன் முயன்றாலே போதுமானது என திருவாய்மொழிகிறார்.

சிரத்தையுடன் எதையுமே செய்ய வேண்டுமென்றால் அலைபாயும் மனதை கட்டுக்குள் வைக்க வேண்டும். இந்திரியங்களை குதிரைகளுடன் ஒப்பிட்டால் அங்கு மனதையே கடிவாளாமிட்டு இந்திரியங்களை கட்டுக்குள் வைக்க வேண்டும். நசிகேதஸிடம் யமன் கூறும் உபதேசத்தில், உடம்பைக் தேருக்கு ஒப்பிடுகிறார். அதை புத்தி எனும் தேரோட்டி, மனம் என்ற கடிவாளம் கொண்டு, இந்தியங்களாகிய குதிரைகளை,
உலக நடைமுறை விஷயங்கள் நிறைந்துள்ள பாதையில் சரிவர இயக்க வேண்டும். கடிவாளாமில்லாத குதிரை எப்படி தறிகெட்டு ஓடுமோ, அப்படி ஓடக்கூடிய சுபாவம் வாய்ந்தது இந்திரயங்கள். இந்திரியங்கள் அலையும் போதெல்லாம் புத்தி எனும் தேரோட்டி இயக்க வேண்டும். சிந்தனை சரியாக அமைந்துவிட்டாலே பாதி வெற்றி. சுயமாக ஆர்வம் இருந்தாலேயொழிய, கேட்டும், பார்த்தும், பிறர் கூறும் நல்லுரையாலும் வந்துவிடக்கூடியதல்ல ஆன்மவிசாரம். ஆன்மதேடல் மட்டுமன்றி, மனிதனின் தனிபட்ட முயற்சி, அபிப்ராய பேதங்கள், வெற்றி-தோல்விகள், நல்ல சிந்தனைகள், நல்லன அல்லாத செயல்கள் என பலவற்றிற்கும் மனிதனின் தனிப்பட்ட குணாதிசயங்களே பெரும் பங்கு வகிக்கின்றன. தனக்குத் தானே நண்பன் தனக்குத் தானே அவன் பகைவனும் ஆகிறான். இன்னொருவனுக்கு நல்லதும் கெட்டதும், அறிவுரைகளின் பேரில் சொல்லி வருவதில்லை. பெரும்பாலும் சுயமாய் அமைவதே அனைத்தும்.

தன்னில் பிறிது இல்லை தெய்வம் நெறி நிற்பில்
ஒன்றானும் தான் நெறி நில்லானேல் - தன்னை
இறைவனாய்ச் செய்வானும் தானே தான் தன்னைச்
சிறுவனா செய்வானும் தான்

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான் செய்த வினைப் பயன் துய்த்தலால்
தானே தனக்கு கரி

திருமூலரின் திருமந்திரம்.

aanaa
29th January 2010, 09:30 PM
:clap:
:ty:

mr_karthik
3rd February 2010, 07:50 PM
கோவில்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்
________________________________________________

9. கோவிலுள் ஓடுதல், சிரித்தல், அதிர்ந்து நடத்தல், சினந்து பேசுதல், லாகிரி வஸ்துக்களை உபயோகித்தல், சூதாடல், தற்பெருமை பேசுதல், சமய ஏற்றத்தாழ்வு பேசுதல் கூடாது.
These 'Bold Lettered' portions should be followed not only inside the temples, but in outside too. If so, we can get free from 75% of our problems.

Shakthiprabha
8th February 2010, 07:31 PM
true karthik. thanks for stopping by. :)

Shakthiprabha
8th February 2010, 07:34 PM
இன்றைக்கு நாம் பல்வேறு துறைகளில் காணாத முன்னேற்றமா? அவை எல்லாம் வேதகாலங்களில் இருந்ததா என்ன? இதற்கு பதில் தெரியாமலே, நம் நாட்டின் பொக்கிஷங்களைப் பற்றி அறியாமலே இருந்துவிட்டிருக்கிறோம். நவீன கண்பிடிப்புகளான பலவும் மிக முன்னரே இந்திய வல்லுனர்கள் பேசப்பட்டவை. ஆன்ம ஞானமும் விஞ்ஞானமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தே வளர்ந்து வந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஒன்றுடைய வளர்ச்சிக்கு மற்றொன்றும் கைகொடுத்து இணைந்தே வளர்ந்தது.

'பூஜ்யம்' என்ற அடிப்படை கணித அறிவே இந்தியமண்ணில் துவங்கியது. வேத காலத்திலேயே கணிதவல்லமை பெற்று விளங்கியது மெய்ஞான விஞ்ஞானத்தின் இருப்பிடமுமான நம் இந்திய நாடு. 5 BC இல் பிங்களா என்பவர் ஒன்றும் பூஜ்ஜியமும் வைத்து கணக்கிடும் 'பைனரி' கணித முறையை உபயோகித்திருக்கிறார் என்று தெரியவருகிறது. 476 CE ல் கேரள நாட்டில் ஆர்யபட்டா என்பவரோ கணிதவல்லுனராக மட்டுமின்றி வானவியல் நிபுணராகவும் திகழ்ந்திருக்கிறார். உலகம் உருண்டை என்றும் அது தன்னைத் தானே சுற்றி சூரியனையும் சுற்றி வருகிறது என்ற தத்துவத்தை முதலில் ஆணித்தரமாக உரைத்தவர் ஆர்யபட்டா. "பை" என்பதற்கு 3.1416 என்ற கணக்கை சொன்னதும் ஆர்யபட்டா.

பாஸ்காராச்சார்யா, ந்யூட்டன் கண்டுபிடிப்பிற்கு 500 நூற்றாண்டு முன்னரே புவியீர்ப்பு சக்தியை கண்டுணர்ந்தார்.

விஸ்வாமித்ர மஹரிஷியின் புதல்வரான ஆச்சார்யர் சுஷ்ருத், அறுவை சிகிச்சை முறைகளைப் பற்றி சுஷ்ருத் சம்ஹிதா என்ற நூலில் எழுதியிருக்கிறார்.

குஜராத்தில் கணட் என்ற ஆச்சார்யர் அணு / பரமாணு பற்றிய ஆராய்ச்சியின் முடிவில், உலகில் அனைத்தும் பரமாணுவால் உருவாக்கப்பட்டது, அது அழிவற்றதும், நிலையானதும் மட்டுமின்றி, நம் புலனறிவிற்கு அப்பாற்பட்டு நிற்கிறது என்றும் அறிவித்தார். அதன் குணாதிசயங்களை வர்ணித்துள்ளார். அணுவைப் பற்றியும் கம்பராமாயணத்தில் மற்றும் வால்மீகி ராமாயணத்தில் பேசப்பட்டிருக்கிறது. 'புஷ்பக விமானம்' என்று புராணக் கதைகளில் வரும் உபயோகங்கள் கூட, ஏறத்தாழ நம் நவீன விமானங்களுடன் ஒத்துப் போவதாய் அமைந்திருக்கிறது என்கிறார் சோ. ரசாயனம், ஆயுர்வேதம், என்று எல்லாத்துறையிலும் நம் முன்னோர்கள் கண்டு தெளிந்த விஷயங்கள் நிறைய.

யோகம் முதல் யாகம் வரை, அணு முதல், ஆன்ம வளர்ச்சி வரை கண்டும் உணர்ந்தும் இருந்தனர் நம் முன்னோர்கள். இத்தனை விஞ்ஞான வளர்ச்சிக்கு அப்பாலும் ஆன்ம வளர்ச்சியின் அருமை உணர்ந்து தெளிந்த பாதையில் நடந்திருந்தனர். இத்தனை வளர்ந்த நாகரீகம் இருந்தும், வேத வழிபடி வாழ்வு முறை பெருமளவு போற்றப்பட்டு வந்திருக்கிறது. இதனை புத்தகத்திலும் அச்சிலும் கொணராமல், உச்சரிப்பு தெளிவுடன் நேர்த்தியுடன், குருகுலத்தில் கற்று தேர்ந்து செவி வழியாய், உணர்ந்து ஓதி வந்திருக்கின்றனர். அதனை கடைபிடித்திருக்கின்றனர் என்றால் அந்த வாழ்வு முறையில் அறிவியலும் ஆன்மவியலும் கலந்தே இருந்திருக்கிறது என்பதை நான் உணரலாம்.

நம் ஹிந்து மதத்தில் காலத்தை யுகங்களாக பிரித்திருக்கிறோம். க்ருத யுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம், கடைசியாக கலியுகம். ஒவ்வொரு யுகமாக தர்மமும் 'சத்' சிந்தையும் குறைந்து கொண்டே வரும் பொழுது, நான்காவதாக தர்மம் க்ஷீணித்த நிலையில் பல காலங்கள் கடந்து தோன்றுகிறது கலியுகம். கலியுகத்தில் எல்லா கார்யங்களிலும் பாபமும் புண்யமும் கலந்தே இருக்கிறது.

பரிக்ஷீத் அரசன் பதவி ஏற்கும் நேரம் கலியுகம் ஆரம்பம் ஆகின்றது. எருது ஒன்றை ஒருவன் துன்புறுத்தி அடித்துக் கொண்டிருப்பதை அரசன் கவனிக்க நேருகிறது. அப்படி துன்புறுத்துபவனே கலிபுருஷன் எனவும், தர்மம் எருமை ரூபத்தில் அழிந்து கொண்டிருப்பதாகவும் உருவகப்படுத்துகின்றனர். பூமி பசு ரூபத்தில் இருக்கிறது. தர்மம் அழிவது தாங்காது அதுவும் கதறுகிறது. தர்மம் என்ற எருதோ ஒரே காலில் நிற்கிறதாம். மற்ற மூன்று காலகளும் ஊனமாகி அழிந்தே விட்டன.

நீ யார் உனக்கேன் இந்த கதி என்று பரிஷீத் அரசன் கேட்டதற்கு,

* தவம் என்ற கால் கர்வம் அதிகரித்ததால் அழிந்தது
* புனிதம் என்ற கால் எதிர்பாலோரின் முறையற்ற சங்கத்தால் அழிந்தது
* தயை என்பது புத்தி கெட்டு விட்டதால் போய்விட்டது
* உண்மை என்ற ஒரே காலில் நின்று கொண்டிருக்கிறேன். அதன் ஷக்தியும் குறைந்து கொண்டே வருகிறது என்று கதறிதாம் எருமை.

இக்கதிக்கு தள்ளிய கலி புருஷனை வெட்ட புறப்படுகிறான் பரிஷீத். கலி புருஷன் அவன் காலில் விழுந்து, என் கடமையை நான் நிறைவேற்றியே ஆக வேண்டும். நான் நிலைப்பதற்கு எனக்கு ஏதேனும் ஒரு இடம் கொடு என்று விண்ணப்பிக்கிறான்.

பரிஷீத் அரசனோ "எங்கு சூதாட்டம், குடி, முறையற்ற ஸ்த்ரீ (ஆடவன்) சேர்க்கை, ஹிம்சை, இருக்கிறதோ அங்கெல்லாம் நீ இருந்து கொள் என்கிறான். இன்னும் சிறிது இடம் கொடுக்க முறையிடுகிறான் கலிபுருஷன். "எங்கெலாம் தங்கம், வைரம், பொய், கர்வம், பணம், ஆடம்பரம் முதலியவை தலைதூக்கி இருக்கிறதோ, அங்கெல்லாம் நீ இருந்துகொள் என்கிறான். அஃதாவது இப்படிப்பட்ட இடங்களில் கலி புருஷனின் மோசமான பக்க-விளைவுகள் அதிகம் காணப்படும்.

கலிமுற்றிவிட்டது என்று கூறிக்கொள்கிறோம். கலி முற்றிவிட்டதால், எதிலும் பரிசுத்தம் இருப்பதில்லை. நிர்ணயிக்கபட்ட வாழ்வு முறையை கடைபிடிக்க முடிவதில்லை. வேறு ஏதும் வழியே இல்லையா? என்றால் சிறு துகள் அளவேனும் உயர்த்திக்கொள்ள வழி நாமே உருவாக்கிக்கொள்ளலாம்.

* தர்ம காரியங்கள் பேருக்காகவோ புகழுக்காகவோ மற்றும் 'பலன் எதிர்பாரமாலோ' செய்யலாம்.

* மருத்துவர்கள் வசதியற்ற நோயாளிகளுக்கு இலவச மருத்துவம் பார்கலாம்.

* சங்கீதக்காரர்கள் தர்மத்திற்காக சில நேரம் சங்கீதம் பாடி, அதில் வரும் வருமானத்தை தானம் செய்யலாம்.

* எழுத்தாளர்கள் நல்ல விஷயங்களை, சத் கார்யங்கள் பற்றிய அறிவைப் பற்றி எழுதி விழிப்புணர்வு வரச்செய்யலாம்.

* இவை ஏதும் முடியாவிட்டால் குறைந்த பட்சம் திருமூலரின் வாக்கு படி, பிறரிடம், முகம் கோணாத அகமலர்ச்சியோடு கூடிய இன்சொற்களையாவது வழங்கலாம்.

யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.

என்ற திருமூலர் மந்திரத்தை முன்பே கண்டோம்.

குறைந்தது இனியன பேசி, இனியன சிந்தித்தால் எல்லாமே இனியவை. நம் அகத்தையே பிரதிபலிக்குமல்லவா உலகமும்? அகம் இனியதாய் இருப்பின், புறமும் இனிதாய் காண்பதே இயல்பு. இக்கருத்தையொத்த அருமையானதொரு தமிழ்ப்பாடலை வசனக்

கவிதைத் தொகுப்பில் பாரதி எழுதியிருக்கிறார்.

இவ்வுலகம் இனியது
இதிலுள்ள வான் இனிமையுடைத்து;
காற்றும் இனிது.தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.
ஞாயிறு நன்று;திங்களும் நன்று.
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.
மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது.
கடல் இனிது, மலை இனிது காடு நன்று. ஆறுகள் இனியன.
உலோகமும்,மரமும், செடியும், கொடியும்,மலரும்,காயும்,கனியும் இனியன.
பறவைகள் இனிய.
ஊர்வனவும் நல்லன.
விலங்குகளெல்லாம் இனியவை,
நீர் வாழ்வனவும் நல்லன.
மனிதர் மிகவும் இனியர்.
ஆண் நன்று. பெண் இனிது. குழந்தை இன்பம்.
இளமை இனிது.முதுமை நன்று.
உயிர் நன்று.சாதல் இனிது.__

பாரதி இனியவர்.

நன்றி: (do check out the link for further ref / to know about priceless infos)

http://hubpages.com/hub/Ancient-Great-Indians

aanaa
8th February 2010, 10:21 PM
[b]யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.



நன்றி: (do check out the link for further ref / to know about priceless infos)

http://hubpages.com/hub/Ancient-Great-Indians

:ty:

Shakthiprabha
9th February 2010, 05:25 PM
புராண இதிஹாசங்களை நடந்தவற்றை நடந்தபடியே கொடுத்தவர்கள் சிலர் என்றால், இறைவன் பால் கொண்ட பக்தியின் காரணமாக பக்திரசத்தோடு கற்பனையும் சேர்ந்து எழுதியவர்கள் வேறு சிலர்.

பொதுவாக வால்மீகி ராமணயத்தில் ராமன் பல நல்ல குணங்கள் நிரம்பிய மேம்பட்ட மனிதனாக மட்டுமே பார்க்கபட்டிருக்கிறான். இறைவன் என்று ஏத்தி வைத்து பக்தியோடு படைக்கப்பட்ட கம்பர் அல்லது துளசிதாசரின் இராமாயணத்தில், கற்பனைவளமும் சேர்ந்து காவியமாக தீட்டப்பட்டது. வால்மீகி இராமாயணமே ஆதாரமாக கருதப்படுகிறாது. ப்ரம்மதேவன் அருளால் நடந்ததும் நடக்கவிருப்பதும் தெரிந்து வால்மீகி எழுதிய காவியம். ராமாயணத்தில் நிகழ்ந்ததாக சொல்லப்படும் சில சம்பவங்களை இவர்கள் கையாண்ட விதங்கள் அவரவரின் பக்திரசத்தையும், கவிதை நயத்தையும் வெளிப்படுத்துவதாய் அமைகிறது.

சீதையை இராவணன் முடியை பிடித்து இழுத்துக்கொண்டு போவதாய் எழுதியுள்ளார். கம்பருக்கு சீதையை இராவணன் தொட்டு அபகரித்தான் என்று எழுத மனம் வரவில்லை போலும், சீதையை தொடாமல், பூமியை தரையோடு பெயர்த்து எடுத்துப் போனான் என்று தீட்டியுள்ளார். இதற்கும் ஒரு படி மேலே செல்கிறார் துளசிதாசர். இராமனுக்கு நடக்கவிருப்பது முன்னமேதெரிந்ததால், சீதையை அக்னியின் இருப்பிடத்தில் ஒப்படைத்து விட்டு, மாயை அவள் இடத்தை நிரப்புகிறாள். இராவணன் அபகரித்தது மாயா சீதையை என்றே சொல்லியிருக்கிறார்.

கவிநயம் மிக்க கம்ப ராமாயணத்திலோ பக்தி நிரம்பிய துளசிதாசரின் ராமாயணத்திலோ கூட இன்றைக்கு நாம் பேசிக்கொண்டிருக்கும் "லக்ஷ்மண ரேகை" என்ற லக்ஷமண கோடு பற்றிய சிலாகிப்பு இல்லை. இது பற்றி ஆனந்த ராமாயணம் என்ற வேறொரு ராமாயண காப்பியத்தில் இருக்கலாம் என்றார் சோ. ராமாயணம் ஒன்றையே பலரும் பலவிதமாய் தங்கள் பக்தி அல்லது கற்பனைவளத்திற்கேற்ப நமக்கு தந்திருக்கின்றனர் என்றாலும், ஆதாரம் என்று இன்று வரை வால்மீகி ராமாயணமே பெரிதும் கருதப்படுகிறது.


ராமரை தெய்வம் என்று கருதி காவியங்கள் படைக்கப்பட்டதாலோ என்னவோ, கண்ணில் விளக்கெண்ணய் விட்டுக்கொண்டு, நாம் ராம அவதாரத்தையும், கண்ணன் அவதாரத்தின் இயல்பையும் தோண்டித் துருவி கேள்விக் கணைகளால் துளைக்கின்றோம். இறைவனே மனிதன் ரூபத்தில் என்றால், அவர் மறைந்திருந்து கொல்லலாமா? பத்தினியை அக்னியில் இறங்கச் சொல்லலாமா? வெண்ணை திருடலாமா? கபடநாடகம் ஆடலாமா? இன்னும் நிறைய குற்றச்சாட்டுகள். இறை தத்துவம் என்றால் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு நிற்க வேண்டும் என்ற நம் எண்ணத்தின் பேரில் வரும் ஏமாற்றங்கள்.

உண்மையில் இவர்கள் வாழ்கை முறையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன. அதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு, அவர்களின் ஓரிரண்டு முரண்பாடுகளை சுட்டிக்காட்டியே நாம் கற்கவேண்டிய நல்லனவைகளையும் விட்டு விடுகின்றோம். ஆட்டுவைக்கும் இறைவன் ஒரு முரண்பாடும் இன்றி காரண காரியத்துடனேயே ஆட்டுவிக்கிறான். நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் நடப்பும், நிகழ்ச்சியும் காரண காரியம் இன்றி நடப்பதில்லை. ஒரு துளி துகள் வழியே உலகத்தை தரிசிக்கும் நமக்கு முழுமையான காட்சி கிடைக்காத வரையில் பலவிஷயங்கள் சிற்றறிவிற்கு எட்டுவதில்லை.

ராமனின் குணாதிசயங்களை அலசும் பலரும் போனால் போகிறது என்று விட்டு வைக்கும் ஒரு விஷயம் ராமனும் சில இடங்களில் பொய் கூறியிருக்கிறான் என்பது. சுமந்திரன் தேரை ஓட்டிக்கொண்டு போகும் நேரம், அயோத்தியே கலங்கி நிற்கிறது, தசரதரோ துக்கம் தாளாமல் தேரை நிறுத்த சொல்லி குரலெழுப்புகிறார். அதை கேட்ட ராமன், 'தேரை நிறுத்தாது ஓட்டிக்கொண்டு போ என்று ஆணையிடுகிறார். பின்னால் இதுபற்றி அரசர் கேட்க நேரிட்டால், உங்கள் குரல் என் காதில் விழவில்லை' என்று சொல்லிவிடும்படி பணிக்கிறார். இங்கு கூறப்படுவதும் பொய் தான். ஆனால் சொல்லப்பட்ட பொயானது மேன்மையான விஷயத்திற்காக (சாமான்ய விஷயமோ, லௌக்கீக விஷயத்திற்காகவோ அல்லாமல்) சொல்லப்படும் போது, அது வாய்மைக்கு சமமாகிறது. தசரதர் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டியது மகனின் கடமை. அவர் வார்த்தை பொய்க்கக்கூடாது என்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இதனையொட்டி நடக்கும் மற்றொரு சம்பவத்திலும் பரதனை அனுப்பிவிக்கும் பொருட்டு, கைகேயிக்கு திருமணத்தில் போதே அவள் மகனே அரசாளும் வரம் தசரதன் கொடுத்தான் எனவே தந்தையின் சொல் காப்பாற்றப்படவேண்டும் என்ற நோக்கத்திற்காக பரதனே மீண்டும் நாடு திரும்பி அரசாள வேண்டும் என்று ஆறுதல் கூறி அனுப்பிவைக்கிறான். கைகேயிக்கு திருமணத்தின் போது எந்த வரமும் கொடுக்கப்படவில்லை. இது பற்றி கைகேயியோ வசிஷ்டரோ, சுமந்திரரோ, வால்மீகியோ ஏன் மந்திரையோ கூட சொல்லவில்லை ஆனால் ராமன் சொல்வதாக புராணம் கூறுகிறது.

கொடுத்த வாக்கை காப்பாற்றுதல் அதி முக்கியமான கர்மா. வாக்கை காப்பாற்றுவது தவத்திற்கு ஈடாகும். உயிர் கொடுத்தேனும் வாக்கை காப்பாற்றியவர்கள் பலர், தசரதர் உட்பட. வாக்கு காப்பாற்றப்படவேண்டிய கடமையை நினைவூட்டும் பொருட்டு கைகேயி 'உயர் குலத்திலும் நல்ல பிறப்பிலும் பிறந்த நீங்கள் நல்ல ஒழுக்கம் நிரம்பிய நீங்கள், அதனை தக்கவைக்கும் பொருட்டு, மேன்மையடைச்செய்யும் கடமையாக உங்கள் வாக்கை காப்பாற்றிக்கொள்ளுங்கள்' என்று தசரதனை எச்சரிக்கிறாள். 'சொன்ன சொல் தவறாமை' என்னும் உயரிய பண்பை கடைப்பிடிப்பது பல வியக்கத்தக்க பயன்களையும் பலன்களையும் தரவல்லது.

இறைவன் மனித உடல் தாங்கி வரும் பொழுது அவனும் அவற்றிற்கேற்ப பலாபலன்களையும், துக்க சுகங்களையும் அனுபவிக்க கடமைப் பட்டிருக்கிறான். உலக மாதாவாகிய சீதை பிராட்டியே மண்ணுலகில் தோன்றிய போது அனுசூயாவிடம் பாடம் பெற்றாள். அதுவும் எப்பேற்பட்ட பாடம்? நல்ல மனையாளுக்கான அடிப்படை குணங்கள் பற்றிய பாடமாம். அத்திரி மஹரிஷியின் பத்தினி அனுசூயா மிக அறிவும் தேஜஸும் மேன்மையும் நிரம்பப் பெற்றவள். பிராட்டிக்கு தெரியாத விஷயமா என்ன! எனினும் சிறு பெண்ணுக்கேயுறிய அடக்கத்துடன் கேட்டுக்கொள்கிறாள். 'புருஷன் சொல்பேச்சு கேட்டு நடப்பவளே நல்ல மனையாள். அவன் கெட்டவனோ, நல்லவனோ, காம இச்சை கொண்டவனோ, ஏழ்மையில் உழல்பவனாயினும், பணம் நிரம்பியவனாக இருப்பினும், அவன் சொல்பேச்சு கேட்டு நடப்பதே உயரிய பண்பு. கணவனே உயர்ந்த தெய்வம். ஆர்ய ( மேன்மையான, மரியாதைக்குறிய என்பது அர்த்தம், இது எந்த வகுப்பினரையும் குறிக்கும் சொல் அல்ல. தற்காலத்தில் இது தவறாக பயன்படுத்த படுகிறது) ஸ்வபாவம் நிரம்பிய பெண்களுக்கு புருஷன் சொல் உயர் வேதம். அது அல்லாத பெண்கள் காமத்தில் (காமம் என்றால் ஆசை, இச்சை என்று பொருள், காமம் என்னும் பாலியல் இச்சை மட்டும் குறிக்கும் சொல் அல்ல ) உழல்பவர்களாக, கணவனை அடக்கி ஆளும் ஸ்வபாவம்
கொண்டவர்களாக இருப்பவர்கள். அப்படிபட்டவர்கள் தீய வழியில் பயணிப்பவர்கள், சொல்பேச்சு கேட்டு நடப்பதில் இருக்கும் நன்மை தீமைகளை அவர்கள் அறிய மாட்டார்கள்' என்கிறாள்.

அனுசூயை சொன்னதற்கு ஒரு படி மேல் சென்று, புருஷனைத் தொடர்ந்து காட்டிற்கே சென்று சொந்த சுக துக்கங்களை கைவிட்ட மனையாள் சீதை.

புராணக் கதைகளின் மூலம் நாம் கற்கும் சில பாடங்கள் தற்காலத்திற்கு எந்த அளவு பொருந்தும் என்று சொல்வதற்கில்லை. எனினும், குடும்பத்தில் சுமூக சூழல் நிலவ, சச்சரவுகளை வாக்குவாதங்களை அதிகரிக்காமல் அனுசரித்து போதல் நலம். இது இயல்பாய் பெண்களுக்கு எளிதில் அமைந்து விடக்கூடிய சுபாவம். விட்டுக்கொடுத்து வாழப் பழகுவதால் இறுதியில் அமைதியும், இன்பமும் வெற்றியும் எங்கும் நிரம்பியிருக்கும்.

Shakthiprabha
11th February 2010, 01:27 PM
உடல் அநித்தியம், ஆன்மா நித்தியம், உடலானது உயிர் தங்கும் கூடு. 'கூடுவிட்டு கூடு பாய்தல்' பெரிய சித்தர்களால் ஞானிகளால் செய்யக்கூடிய சித்திகளுள் ஒன்று. இன்னொருவரின் உடல் தாங்கி நின்ற போதும், ஆன்மா வேறுபடுவதால் (நிற்க: ஆன்மா வேறுபடாது என்றாலும், தனிப்பட்ட கர்ம பதிவுகளைத் தாங்கிய ஜீவ-ஆத்மா என்று கொள்ளலாம்) நடை உடை பாவனை குணம் முதலியவை வேறுபடுவதால் தங்கியிருப்பது வேறு ஒரு ஆன்மா என்று கண்டுகொள்ளலாம்.

"கூடுவிட்டு கூடு பாய்தல்" முக்கியமாக சித்தர்கள் வரலாற்றில் சர்வசாதாரணமாய் சுட்டிக்காட்டப்படும். ஆதிஷங்கரர் இதே முறையை கையாண்டு, விடையுணர்ந்து நிபந்தனையில் வென்ற சரித்திரம் அனைவரும் அறிந்ததே. பாம்பாட்டி சித்தரும் கூடுவிட்டு கூடு பாய்ந்து சில ஞான உபதேசங்களை உபதேசித்தார். சித்தர்கள் இச்சித்தியை உயர்ந்த நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தினர் என்பது நினவில் கொள்ளத்தக்கது.

பெயருக்கேற்றார் போல் பாம்பாட்டி சித்தர், பாம்பை பிடிப்பது, படமெடுத்து ஆடச் செய்வது, அவைகளில் விஷத்தை சேமித்து விற்பது இதையே தொழிலாகக் கொண்டிருந்தார். பாம்புடன் பழகுவதால் அவருக்கு விஷமுறிவு மூலிகைகளெல்லாம் அத்துபடி. அவ்வூரில் பாம்பு கடிக்கு சிறந்த வைத்தியராகவும் திகழ்ந்தார். பாம்புகளைப் பற்றிய ஆராய்ச்சியிலும் இறங்கினார். மருதமலைப் பகுதியில் விஷவைத்திய ஆய்வுக் கூடம் ஒன்றும் துவங்கினார்.

ஒரு சமயம் நவரத்தின பாம்பு ஒன்று மருதமலைப் பகுதியில் வசிப்பதாகவும், அதன் நஞ்சு மிகப்பெரிய சித்து வித்தைகளைச் செய்யும் திறன் கொண்டது என்றதால் அதனை பிடிது விட உறுதிபூண்டு மருதமலைக் காட்டிற்கு சென்றார். இவர் தேடும் பணியில் மும்முரமாக இருக்கும் தருவாயில், பலத்த சிரிப்பொலியுடன் பிரகாச உருவம் தாங்கி சட்டை-முனி சித்தர் பாம்பாட்டி சித்தர் முன் தோன்றினார்.

இவர் பாம்பை தேடுவதைப் பார்த்து சிரித்தபடி, "நவரத்தின பாம்பை நீயே உனக்குள் வைத்துக்கொண்டு வெளியே தேடுகிறாயே இது பயனற்ற செயல்தானே" என்றார்.

"மிகுந்த உல்லாசத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு பாம்பு உன் உடலுக்குள் குடியிருக்கிறது (பாம்பாக உருவகப்படுத்துவது உறங்கிக்கொண்டிருக்கும் குண்டலினி ஷக்தியை) , உன் உடலில் மட்டுமன்றி எல்லோர் உடலிலும் குடியிருக்கிறது, உன் உடம்புக்குள் இருக்கும் அப்பாம்பை ஆட்டுவிப்பவன் தான் அறிவாளி. அதனை அடக்கி ஆளக்கூடியவர்கள் தான் சிறப்பு மிக்க சித்தர்கள் எனவே வெளியில் இருக்கும் அந்தப்பாம்பை விட்டு விட்டு, உன்னுள் இருக்கும் இந்தப்பாம்பை அடக்க வழி தேடு" என்று அருள் கூர்ந்தார். மேலும், 'இறைவனை உணர்ந்து பாடுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும், குண்டலினி விழித்து எழும், தியானம் சித்திக்கும்ம். மனிதனுள் இறைவனைக் காணும் ரகசியம் இதுவே' என்கிறார்.

பாம்பாட்டி சித்தர் பக்குவம் அடைந்து இனி இப்பாதையை விட்டு விலகாத யோகம் பயில்வேன் என்று உறுதிபூண்கிறார்.

"அப்பொழுதும் நீ பாம்புகளை பிடித்துக்கொண்டிருந்தாய், இப்பொழுதும் சூட்சுமமான பாம்புகளை பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளாய் எனவே நீ இப்பொழுதும் பாம்பாட்டி தான்" என்று அருளி மறைந்தார் சட்டை முனி சித்தர்

ஒரு ஊரில் இறந்து போன மன்னனைச் சுற்றி மனைவி சுற்றத்தார் அழுது புலம்பிக்கொண்டிருந்தனர். கொடுங்கோலாட்சி புரிந்த தீய நடத்தை கொண்டிருந்தவன் மன்னன். அப்படியும் மக்கள் அவன் மேல் வைத்த பாசம் ஆச்சரியம் தந்தது. அவனை நல்லவனாக்கி நடமாடவிட்டு, நல்ல உபதேசம் செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து, தன் உடலை பத்திரப்படுத்திவிட்டு, இறந்து போன பாம்பு ஒன்றை அரசன் உடலில் விசிறியடிக்கிறார். மக்கள் எல்லோரும் பீதியுடன் விலக அரசி மட்டும் உடலை விட்டு நகராது நிற்கிறார். அதன் பின் அரசன் உடலில் சித்தர் புகுந்து கொண்டார்.

பாம்பு தான் அரசனை கொன்றுவிட்டது என்று அதனை அடிக்க மக்கள் புறப்படுகின்றனர். அரசன் உடல் தாங்கி எழுத சித்தர் "செத்த பாம்பை ஏன் அடிக்கிறீர்கள்? என்று அதனை தடவி கொடுத்து " பாம்பே நான் எழுந்து விட்டேன், நீயும் எழுந்திரு" என்றார்.

ஆடு பாம்பே என்று பாம்பை ஆட்டுவித்து தத்துவங்கள் நிரம்ப பாடல் பாடுகிறார். அரசிக்கு வந்திருப்பது வேறு ஒரு நபர் என்ற
சந்தேகம் உதித்தது.

நாடுநகர் வீடு மாடு நற்பொருள் எல்லாம்
நடுவன் வரும்போது நாடிவருமோ
கூடுபோன பின்பு அவற்றால் கொள்பயன் என்னே?
கூத்தன் பதங்குறித்தி நின்று ஆடு பாம்பே


முக்கனியும் சக்கரையும் மோதகங்களும்
முதிர்சுவை பண்டங்களும் முந்தி உண்ட வாய்
மிக்க உயிர் போன பின்பு மண்ணை விழுங்க
மெய்யாக கண்டோமென்று ஆடு பாம்பே

(பாடல் எளிமையாய் இருக்கிறது. self explanatory ) செல்வமும், புகழும், படை பலமும், இறப்பும் காலனும் தேடி வரும் போதும் கூட வருமோ? கூடு விட்டே ஆவி பொனால் அவற்றின் பயன் தான் என்ன என்று ஆடு பாம்பே (கூத்தன் பதம்: ? இங்கு சிவனை அவனின் புகழைக் குறிக்கிறதா அல்லது சிற்றறிவு கொண்டு கூத்தாடும் மாநதரைக் குறிக்கிறதா எனத் தெரியவில்லை...any takers? )

முக்கனி சக்கரை பத்து வகை பட்சணங்கள் உண்ட வாய், இப்போது மண்ணைக் கவ்வும் நிலை குறித்து, உடலின் நிலையற்ற தன்மை நினைந்து எழுதாடு பாம்பே என்பது குத்துமதிப்பான விளக்கம்.

I cant help recollecting adhi shankara's similar tone when he says

மா குரு தன ஜன யௌவன கர்வம் ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம்
மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா


ஞான உபதேசங்கள் தொடர்ந்து பாடிய வண்ணமிருக்கிறார். அதன் பின் சந்தேகம் உதித்த அரசிக்கும் தான் யார் என்று கூறி நல்லுபதேசம் செய்து மீண்டும் தன் உடல் கொண்டார். பல அறிவுரைகளும் தத்துவ உபதேசங்களும் செய்த வண்ணம் தன் வாழ்நாள் தொடர்ந்தார். தேடிப்போய் உபதேசித்தும் இந்த அறிவிலி மக்கள் திருந்துவதில்லையே என்று வருந்திய் சித்தர், யார் கண்ணிலும் படாமல் மறைந்தார்.



திருமூலர் என்ற சித்தரும் கூடுவிட்டு கூடுபாய்ந்ததாக சொல்லப்படுகிறது. திருமூலர் கைலாய பரம்பரையை சேர்ந்தவர். சித்தர்களில் முதன்மையானவராக கருதப்படுகிறார்.

அந்தணர்கள் வாழும் சாத்தனூரில் தொன்று தொட்டு ஆனிரை மேய்க்கும் குடியிற் பிறந்த ஆயனனாகிய மூலன் பசுக்கள் மேய்த்து வந்தான். அவன் வாழ்நாள் முடிந்த வினையால் உயிர் நீங்கி நிலத்தில் வீழ்ந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றி கதறி வருந்தின. இதனைக் கண்ட திருமூலர் பசுக்களுக்காக மனம் நெகிழ்ந்து அவன் உடல் கொண்டார். பசுக்களை மேய்த்து தத்தம் இடத்தில் அனுப்பிய பின், தனித்து நின்று கொண்டிருந்த திருமூலரை மூலன் மனைவி கண்ணுற்றாள். விரும்பி வீடு அழைக்கும் அவளுக்கு தான் மூலன் அல்ல என்றும் அவன் விதி முடிந்து இறந்து விட்டான் என்ற உண்மை திருமூலர் கூறியும் உரைத்தபாடில்லை. தன் கணவனுக்கு புத்தி தடுமாறியதென்று ஊரைக் கூவி அழைத்து, அவனை தன்னுடன் இருக்குமாறு அறிவுரை வழங்கச் செய்கிறாள். தன்னுடலைத் தேடி அதனுள் புகுந்து உண்மையை உணர்த்தி இவ்வுடலை செய்யலற்றதாக்கி தன்னை யார் என்று நிரூபித்தார். உண்மை உணர்ந்த சான்றோர் மூலன் மனைவியைத் தேற்றி அவளை வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர்.

அதன் பின் அவருக்கு எங்கு தேடியும் தன் பழைய உடல் தென்படவில்லை. மூலன் உடலிலேயே நிரந்தரமாகத் தங்கி விட நேரிடுகிறது. உலகத்தோர் உய்யும் பொருட்டு க்ரியை, ஞானம், சரியை, யோகம் என்று நால்வகை நன்னெறிகளும் விளங்கும் திருமந்திரம் என்னும் நூல் வழியாக ஓர் ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்கள் வழங்கியுள்ளார். பின்னர் இந்நூல் நிறைவுற்றதும் மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இறைவன் திருவடி அடைந்தார்.


ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நென்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே

- திருமந்திரம்.

உயிர்கள் அனைத்தும் ஒன்றே குலம் ஒருவனே இறைவன், என்று நினைப்பவருக்கு மரணமில்லை i.e. அவர்கள் இறவாத்தன்மை அடைந்து விடுகின்றனர். இந்த எண்ணத்தில் நீர் நிலைபெற்று நின்றால் அதுவே முக்திக்கு வழி. வேறில்லை என்பது தோராயமான பொருள்.


(நன்றி: சி.எஸ் முருகேசன் அவர்கள் எழுதிய பதினெண் சித்தர் வரலாறு )

(தொடரும்)

aanaa
11th February 2010, 07:30 PM
:ty:

தொடருங்கள்..

R.Latha
12th February 2010, 01:23 PM
shakthi prabha [ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நென்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே

- திருமந்திரம். ]
madam thodarathum ungal pani. mikka magilchi.thooya thamil ennai meisilirkka vaikkiradhu. indrum thooya thamil keatpathai anu anuvaaga anubavithu type pannivigirirgal. :clap:

Shakthiprabha
17th February 2010, 02:15 PM
Latha madam,
nandri :ty:


இதுவரை (கதை)

உமா பெண் குழந்தையை ஈன்றெடுக்கிறாள். நாதன் தம்பதி ராசி கருதி வேறு வீடு மாற்றுகின்றனர். பைராகி ஒருவள் வீடு தேடி வந்து ஆசி வழங்கி, வசுமதியை அன்னதானம் செய்யுமாறு உபதேசிக்கிறாள்.


அஷோக் வேதம் கற்பதும், குருகுல வாசம் செய்வதும், பிட்சை பெற்று உண்பதும், அவனது வாழ்க்கை முறையும் எல்லோருக்கும் பழகிவிடுகிறது. இனி கேள்வி கேட்டோ புத்தி சொல்லியோ பலன் இல்லை என உணர்ந்து படிப்படியாக அவன் தாய் தந்தை உட்பட அனைவரும் வேறுவழியின்றி ஏற்றுக் கொண்டுவிடுகின்றனர். உலகின் வித்தியாசமான முயற்சிகள், தனிமனித சாதனைகள், போராட்டங்கள் துவக்கங்கள் அனைத்துமே ஏதிர்ப்பு, ஏளனம் முதலிய படிகளை சந்தித்த பின்பே ஏற்பு நிலைக்கு ஏற்றப்படுகிறது.

சாம்பு வீட்டின் முன் நாரத முனிவர் சிவ பக்தராக தோன்றி, அஷோக் சாதாரணன் அல்ல என்று கூறி, அவன் சீலமும், மேன்மையும் விரைவில் உலகெங்கும் பரவும் நாள் வந்ததெனக் கூறுகிறார்.

ஏழைகளுக்கும் இல்லாதவர்களுக்கும் வீடு வீடாக சென்று பொருட்கள் சேகரித்து உதவுகிறான். வேதம் பாராயணமும் முறையான வேத கல்வியும் படிப்படியாக குறைந்து கொண்டு வருவதை எண்ணி, வீடுவீடாக சென்று வேதம் ஓத ஒரு பிள்ளையை அனுப்ப வேண்டிக்கொண்டு தானே கற்று தருவதாகக் கூறுகிறான். அவன் செல்லும் இடமெங்கும் தோல்வியே மிஞ்சுகிறது.

திருத்தம்: முன்பு பகிர்ந்து கொண்ட முசுகுந்தன் கதையில் ( http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=12650&postdays=0&postorder=asc&start=705 ) 'லிங்கம்' கொடுக்கப்பட்டதாக கூறியது தவறு. "மூர்த்தி" என்று இருக்க வேண்டும். சிங்கப்பூரிலிருந்து ஒரு வாசகர் சுட்டிக்காடியதன் பேரில், தவறு நேர்ந்ததற்கு திருத்தம் கூறப்பட்டது.

(தொடரும்)

Shakthiprabha
17th February 2010, 02:21 PM
(பிரதோஷம் பற்றிய பதிவை பிரதோஷம் அன்றே எழுதி பதிக்க ஆவலாய் இருந்தேன். என்னால் முடியவில்லை. இன்றேனும் பதிக்க முடிந்தது மகிழ்ச்சி)

____________


பிரதோஷம் என்றால் சந்தியாக்காலம். சூரியம் அஸ்தமிக்கும் நேரம் பிரதோஷ காலம். பாற்கடலை கடைந்து அமுதம் பெற விழைகின்றனர் அசுரர்களும் தேவர்களும். வாசுகி எனும் பாமப்யே கயிறாகக் கொண்டு மந்திர மலையில் மத்தாக்கி பெரும் பாற்கடலைக் கடைகின்றனர். அமுதின் ஊடே நஞ்சும் எழும்ப, வாசுகி என்ற பாம்பு கக்கிய விஷமும் சேர்ந்து கொண்டு எங்கும் கடும் விஷம் கருமையாய் எழும்பி நின்றது. அஞ்சிய தேவர்களும் அசுரர்களுக்கும் ஈஸ்வரன் கருணை உள்ளம் கொண்டு அபயம் அளித்தார். தம் தொண்டர் சுந்தரரை விட்டு விஷம் கொணரச் செய்தார். சிவன் அதனை உட்கொண்ட பின்னர், சற்றே கலங்கிய பார்வதி, சிவனின் தொண்டையில் அழுத்தி விஷத்தை கீழறங்காமல் செய்து விடுகிறாள். திருநீலகண்டன் ஆகிய ஈசனின் கருணை உள்ளத்தை போற்றித் துதித்து சகல ஜீவராசிகளும் வழிபட்ட அந்த நேரம் பிரதோஷ நேரம்.

சகலரையும் காத்து நின்ற ஈசன் மனம் குளிர்ந்து அனைவரின் பயமும் வருத்தமும் போக நந்தி பெரிய ரூபம் எடுத்து நிற்க அதன் கொம்பின் நடுவே ஆனந்த நடனம் புரிகின்றார். இதன் பொருட்டே பிரதோஷ காலத்தில் நந்தியின் கொம்பின் வழியே இறைவனை

தரிசிப்பது சாலச் சிறந்தது. வளர்பிறை / தேய்பிறையின் பதிமூன்றாம் நாள் பிரதோஷமாக பாவிக்கப்படுகிறது. சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் மூன்றரை நாழிகையும் அஸ்தமனம் ஆன பின் மூன்றரை நாழிகையும் பிரதோஷ காலம். இந்நேரத்தில் ஈஸ்வர தியானத்தில் இருப்பது சிறந்தது.

பிரதோஷம் என்பது ஒடுங்கும் நேரம் என்ற கோணத்திலும் பார்க்கப்படுகிறது. ஜீவராசிகள் தங்கள் கூட்டுக்குள் அமிழ்ந்து அடங்கும் நேரம். பிரதோஷத்தை, நித்திய ப்ரதோஷம், பக்ஷப் ப்ரதோஷம், மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம், பிரளய பிரதோஷம் என்று பலவாக வகைப் படுத்துகின்றனர்.

நித்திய ப்ரதோஷம் என்பது தினமும் சந்தியா நேரத்தில் சிவனை வணங்கி அவன் தியானத்தில் இருப்பது.
பட்சப் பிரதோஷம்: சுக்லபட்ச(வளர்பிறை) சதுர்த்தி பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.
மாதப் பிரதோஷம்: க்ருஷ்ணபக்ஷ (தேய்பிறை) திரயோதசியில் பிரதோஷம் அனுஷ்திப்பது
மஹா பிரதோஷம்: க்ருஷ்ணபக்ஷ திரயோதசி சனிக்கிழமை அன்று வந்தால் அன்று மஹா பிரதோஷம்
பிரளய பிரதோஷம் மஹா பிரளய காலத்தில் அண்டசராசங்களும் அழிந்து அனைத்தும் சிவனிடம் ஒடுங்கும் நேரம், பிரளய பிரதோஷம்.

பிரதோஷத்தின்போது து அப்பிரதக்ஷிணமாகவும் பின்னர் பிரதஷிணமாகவும் மாறி மாறி மூன்று முறை (பொதுவாகவே சிவனை மூன்று முறை வலம் வருதல் சிறப்பு) வலம் வருவது சோமசூத்திர வலம் வருதல் எனப்படுகிறது. இது பிரதோஷ காலத்திலோ அல்லது எந்த நாளிலும் கூட செய்வது உத்தமம்.

சிந்தையும் நித்தியம் அஸ்தமனத்தின் போது ஈஸ்வரனை தியானித்தல் மிக நல்ல சித்தியும், அமைதியும் கிட்ட வழிவகுக்கும். அண்டங்களை அழித்தலை (இங்கே கூட்டுக்குள் ஒடுக்குதல் என்று கொள்ளவேண்டும்) அல்லவா சிவனின் பிரதான தர்மம். பிரளயத்தில் அனைத்து ஜீவராசிகளையும் தன்னுள் ஏற்று பின்னர் மீண்டும் தோன்றச் செய்கிறார் சர்வேஸ்வரன். அப்படிப்பட்டவனை வணங்கி அவன் கருணை பெறுதல் வீடுபேறு எய்த சுலபமான வழி.

Shakthiprabha
17th February 2010, 03:34 PM
சூரியனும் சந்திரனும் பூமியும் ஒரே கோட்டில் நின்றால் அது கிரஹணம். நம் ஜாதகத்தில் நவ கிரஹங்களும் சாயா கிரஹங்களான ராகு கேது உட்பட ஒன்பதும் கிரஹ நிலைகள், athan வீர்யம், வீழ்ச்சி, உச்சம், பார்வை என பலவும் கணிக்கப்பட்டிருக்கும்.

அண்டவெளியில் என்னவெல்லாம் நிகழ்கிறதோ அது ஜீவராசிக்குள்ளும் நிகழும் என்று கூறுவதுண்டு. இதன் அடிப்படையிலேயே நம் ஜோசிய ஜாதக கணிப்புகள் அமைந்துள்ளன. எங்கோ எதிலோ அண்டத்தில் நிகழும் நிகழ்வுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்றால், அங்கு பெரிய (macro) அளவில் நிகழும் அனைத்தும் ஒவ்வொறு சிறு ஜீவராசியின் உள்ளும் சிறு அளவில் நிகழ்கிறது என்கின்றனர். "பிண்டத்துள் அண்டம்" என்பதே ஆன்மீக தத்துவமும். வேளியே வெளி ஆராய்ச்சியில் இறங்கி விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பும், தன்னுள் இறங்கி ஆராயும் ஞானமும் எங்கோ எப்படியோ பின்னிப்பிணைவதே இறைத் தத்துவதின் ஆணிவேர்.

அப்படி இருக்கையில், கிரஹண நிகழ்வுகள் நம்முள்ளும் சிறிய அல்லது பெரிய மாற்றத்தை தற்காலிகமாக உண்டுபண்ணலாம். (அல்லது பண்ணாமலும் போகலாம்). கிரஹண நேரங்களில் இறைவனை தியானித்தலே சிறப்பு. மற்றபடி கிரஹண நேரத்தில் பிள்ளை பிறந்தால் அது குற்றம் ஆகாது. கிரஹண நேரத்தில் இன்புற்று இருந்து கர்பம் தரித்தால் அப்படிப்பட்ட சிசுவிற்கு தோஷம் இருப்பதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் தாண்டி கர்மவினை கடுமையாக இருந்தால் ஜோதிடமும் ஜாதகமும் அதை சுட்டிக்காட்ட வல்லவை. எப்பேர்பட்ட பரிகாரமும் அதனை தடுக்க முடியாமற் போகலாம்.

கணித மேதை பாஸ்கராச்சார்யாரின் வாழ்வில் நடந்ததே இதற்கு சான்று. அவரின் பெண் லீலாவதிக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதை அறிந்து, அதனை தடுக்கும் பொருட்டு, பல ஆராய்ச்சிக்கு பின்னர், குறிப்பிட்ட நேரத்தில் திருமணம் நிகழ திட்டமிட்டிருந்தார். அக்கணத்தில் திருமணம் நிகழ்ந்தால் மாங்கல்யம் பலம் பெறும் என்று கணித்து அதன் படி திருமண ஏற்பாடுகள் நடைபெற்று திருமணமும் குறிப்பிட்ட நேரத்தில் முடிந்தது. ஆனாலும் லீலாவதியின் கணவன் இறந்து விடுகிறான். எங்கேயோ தவறு நேர்ந்திவிட்டிருக்கிறது புரிந்தது. கடிகா / கடிகை என்பது அக்காலத்தில் நேரம் கணிக்க உதவிய கருவி. அதன் அருகில் எட்டிப்பார்த்து விளையாடிக் கொண்டிருந்த லீலாவதியின் மூக்குத்தி கடிகையினுள் விழுந்து விட கடிகையின் நேர கணிப்பு குழம்பி, தவறாகி விடுகிறது. மனித முயற்சிக்கு மேற்பட்ட கர்மவினை தான் இறுதியில் வாழ்வை வழிநடத்திச் செல்கிறது!

நம் வினையே நம்மை ஆட்டுவிக்கிறது. நம் வினையை நம் ஜாதகத்திலும், துணைவன் / துணைவியின் ஜாதகமும் மேலும் நமக்கு பிறந்த குழந்தைகளின் ஜாதகமும் சுட்டிக்காட்ட வல்லவை. பிறந்த குழந்தை நம் வினையை சுட்டிக்காட்டுகிறது. அல்லது நம் வினைக்கேற்ப சிசு பிறக்கின்றது. அது பிறந்த வேளையால் நாம் உயர்வதும் தாழ்வதும் இல்லை. அதனால் யாரையும் இராசி இல்லாதவர்கள் என்றோ அல்லது மிகுந்த ராசிக்காரர்கள் என்றோ அபிப்ராயப் படுவது அறிவீனம். அவரவர்களின் உயர்வும் தாழ்வும் அவரவரின் கர்மாவைப் பொருத்தே அமைகிறது. வினைப்பயனை வெல்லக்கூடியது பிரார்த்தனையும் இறைவன் அருளும் மட்டுமே. வினை கடுமையாக இருந்தால், மகத்தான பிரார்த்தனையும், அருளும் வேதனையை மட்டுப்படுத்த செய்யலாமேயன்றி அகற்றுவது மிகவும் கடினம். கடும் வினையின் காரணமாக பிரார்த்தனை செய்யும் மனநிலையும் இயல்பும் கூட இல்லாமல் போகலாம்.

Shakthiprabha
17th February 2010, 04:16 PM
ஒவ்வொரு சிந்தனையுமே அலைளை எழுப்ப வல்லது. சிந்தனை மட்டுமன்றி செயல், வார்த்தைகள் என அனைத்திற்கும் அலைவடிவம் உண்டு. அது சுற்றுப்புறத்தை பாதிக்கின்றது.

ஆதிஷங்கரர் மண்டல மிஸ்ரரைத் தேடி வருகிறார். மண்டல மிஸ்ரர் சிறந்த கர்ம யோகி. அவர் வீட்டிற்கு வழிகேட்டு வரும் ஆதிஷங்கரரை "எந்த வீட்டில் கிளிகள் "ஸ்வதப்ரமாணம் பரத ப்ரமாணம்" பொன்ற விஷயங்களை அலசுகின்றதோ அதுவே அவர் வீடு என்று காண்க" என்று வழிகாட்டுகின்றனர் மக்கள்.

{ ஸ்வதப்ராமணம் என்றால் அதுவே தன்னை சுயமாக விளக்கிக்கொள்வது (it is self explanatory) பரதப்ரமாணம் என்றால் வேறொரு வஸ்து அதனை விளக்குவது (needs another object to throw light ) (I did search for more explanation on these, I could not find any. If anyone finds any link to explain these plz share it here. thankyou) }

அதாவது அங்குள்ள கிளிகள் கூட மேதாவிலாசத்துடன் விளங்குகிறது. பெரிய தத்துவங்களை ஆராய்கிறது. ஏனென்றால், அங்கு பேசப்படும் பேச்சும், எண்ண ஒலி அலைகளும் உயர்வான விஷயத்தை ஊக்குவிப்பதாய் அமைகிறது. இதன் காரணத்தை யொட்டியே நல்லதை கேட்டு பேசி செய்ய வேண்டும் என்று வேண்டப்படுகிறது. வீட்டில் தொலைககாட்சி பார்க்கலாம். அதே நேரத்தை வேறு விதமாக பயன்படுத்தி நல்லவற்றை பேசி படிப்பது உத்தமம். உபன்யாசம் கேட்பது சிறந்தது. அங்கு சொல்லப்படும் கதை நம் மனதில் சாதகமான அலைகளை எழுப்பவல்லது. தற்கால மனிதனின் குணநிலைக்கேற்ப பாகவதர்களும் கற்பனையை, ஸ்லோகங்களை, சாஹித்தியத்தை, பாடல்களை ஊடே சேர்த்து சுவையாக உபன்யாசம் செய்கின்றனர். நடுநடுவே ஆங்கிலம் கலந்து ஜனரஞ்சகம் ஆக்கப்படுகிறது. கலை இன்னும் அழியப்படாமல் நிறைய இடங்களில் தற்காலத்திற்கேற்ப ஒப்பனையுடன் தொடரப்பட்டுதான் வருகிறாது. ஆனாலும் இன்று நமக்கெல்லாம் இவற்றை கேட்பதற்கு நேரம் ஒழிவதில்லை. ஒதுக்குவதில்லை. சொற்பொழிவின் ஊடே சில நேரங்களில் நம் சந்தேகங்களுக்கோ அல்லது பிரச்சனைகளுக்கோ கூட தீர்வு கிடைக்கலாம்.

இது போன்ற கலைகளை அழியவிடாமல் வளரவிட வேண்டும். என்னைப் பொருத்த வரை கோவில்களில் கூட உபன்யாசங்கள் குறைந்து வருவதாக நினைக்கிறேன். ஆனால் அதை ஈடு செய்யும் வகையில், தொலைக்காட்சியில் காலை / மாலை வேளைகளில் சில சானல்கள் உபயாச சொற்பொழிவுகளை ஒளிபரப்புகின்றனர். ஆன்மீகம் / பஜனை / சமய வழிபாடுகள் இவற்றை மட்டுமே ஒளிபரப்பும் சானல்களும் உண்டு. அவ்வப்பொழுது கண்டு கேட்டு பயன் பெறலாம்.

Shakthiprabha
17th February 2010, 05:52 PM
"ஏற்பது இகழ்ச்சி" என்கிறார் அவ்வை. இரந்துண்டு வாழ்தல் என்பது இகழ்ச்சியாக கருதப்படுகிறது. ஒவ்வொருவரின் மரண பயத்தையும் மிஞ்சி நிற்கிறது பிறரிடம் நாம் கடன் பட்டு விடுவோமோ, அவர்கள் தயவை எதிர்பார்த்து வாழ நேரிடுமோ என்ற பயம். அதற்காகத் தானே பணமும் சேமிப்பும்!

"இறைவனே உன்னிடம் மாறாத பக்தி, பிறரிடம் கை ஏந்தாத வாழ்வு, அனாயாசமான (எளிதான) மரணம்" இவற்றைத் தவிர வேறேன்ன வேண்டும்!

அனாயாசேன மரணம்
வினாதைன்யேன ஜீவனம்
தேஹிமே க்ருபயா சம்போ
த்வை பக்திம் அசஞ்சலாம்

இரந்து வாழும் நிலையல்லவா பிரம்மச்சரியத்தின் கடமை. பிக்ஷை பெறுதல் என்பதே இங்கு எப்படி மேன்மையாக்கப்படுகிறது? என்றால்...

பிட்சை உண்டு வாழ்தல் பிரம்மச்சரியத்தின் கடமை. அவன் தன் கடமையை கர்மயோகியாகச் செய்யும் பொழுது அது உயர்வுக்கே வழிவகுக்கும். உஞ்சவ்ருத்தியும் பிட்சையும் ஒன்றுக்கு ஒன்று வித்தியாசப்பட்டவை. உஞ்சவிருத்தி பிரம்மாச்சாரியின் கடமை இல்லை. அது பிராமணனின் கடமை. போர் அடிக்கும் இடத்திலோ அங்கு இல்லாத பொழுது கடை வீதியில் சிதறிக்கிடைக்கும் நெல்லை எடுத்து உண்பதே உஞ்சவ்ருத்தி. உஞ்சவிருத்தி செய்பவர்கள் வேறு எவரிடமும் உணவை வாங்கிக்கொள்ளுதல் கூடாது.

தானம் வாங்கலாம். முந்தைய காலத்தில் மூதாதையர்களுக்குறிய கடனை / காரியத்தை செய்யும் பொழுது அங்கே பிராமணன் ஒருவனுக்கு தானம் கொடுப்பது வழக்கம். தானம் எப்படி வாங்க வேண்டும் கொடுக்க வேண்டும் என்பது சாஸ்திரப்படி தெரிந்து கொண்டு வாங்கிக்கொள்ளுதல் நலம். உதாரணத்திற்கு பசு தானம் வாங்கினால் லக்ஷம் முறை காயத்ரி மந்திரம் சொன்னால் வாங்கியவனின் சுமை குறையும். தானம் பெறுபவனின் தலையில் மிகப்பெரிய சுமை இறக்கி வைக்கப்படும். தானம் கொடுப்பவனின் பாதி பாபங்களும் வாங்குபவனுக்கு போய் சேரும். இதெல்லாம் தான மனப்பான்மையோடு செய்யப்படும் உண்மையான தானத்திற்கு பொருந்தும். தானம் என்பது பிச்சையிடுவதல்ல, தானம் என்பது அன்பளிப்பு அல்ல.

தானம் கொடுப்பதற்கு பரந்த மனசு முக்கியம். பணம் இருப்பதோ இல்லாததோ இங்கு பொருட்டு அல்ல. உன்னிடம் என்ன இருக்கிறதோ அதை கொடு. தானம் கொடுக்கும் பாவத்துடன் கொடு. தானம் கொடுக்கும் பொழுது

* சிரத்தையுடன் கொடுக்கவேண்டும்
* பயத்துடன் கொடுக்க வேண்டும் (பவ்யம் / அடக்கம் என்று கொள்ளலாம்)
* வெட்கத்துடன் கொடுக்க வேண்டும் ('இது என்ன பெரிய தானம்' என்ற கூச்சம் நிரம்பியிருக்க வேண்டும்)
* சந்தோஷத்திடனும் முகமலர்ச்சியுடனும் கொடுக்க வேண்டும்.
* தானம் கொடுப்பதன் அருமை பெருமைகளை அறிந்து கொடுக்க வேண்டும்.

இப்படிப்பட்ட தானத்தை ஏற்பவனுக்கு நிச்சயம் அதன் பலன் சுமை கூடும். அப்போது அவன் தானம் ஏற்றதற்கு பரிஹாரம் செய்து கொள்ளுதல் நலம். தானத்தின் சிறப்பை விளக்கும் பல கதைகள் பலரும் அறிந்ததே. கீரிப்பிள்ளை பிராமணன் ஒருவனை தானத்தை உயர்வாகப் பேசிய கதை நமக்குத் தெரியும். அதுவே சிறந்த தானத்திற்கு உதாரணம். எது இருக்கிறதோ அதையும் இழக்க மனம் துணிந்தால் அதுவே தானம்.

ரந்திதேவன் என்ற ஒரு அரசன். அவன் நாட்டில் பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. அரசனும் மக்களுக்காக வருந்தி உணவருந்தாமல் இருந்தான். மக்கள் மனம் வருந்தி, அரசனே மக்களை வழிகாட்ட வேண்டியவன், அவன் உண்ணாவிட்டால் எப்படி சாத்தியப்படும் என்று எடுத்துக்கூறி அவனை உணவருந்தச் செய்தனர். மிகுந்த வற்புறுத்தலின் பேரில் அவன் முதல் கவளம் உண்ணும் போது வேறொருவன் பசி பொருக்காது பிச்சை கேட்கிறான். அரசனும் சிறிது உணவை தானம் வழங்குகிறார். திரும்பவும் உண்ண முற்படுகிறான் இப்பொழுது பசி பிச்சை கேட்டு இன்னொருவன். இப்படியே அனைத்து உணவையும் தானம் வழங்கிவிட்டு பசிக்கு கொஞ்சமேனும் நீர் அருந்த நினைக்கிறான். அதையும் ஒருவன் இரந்து கேட்க, நீரையும் தானம் வழங்கி விடுகிறான். அதன் பின் இறைவன் கருணை உள்ளம் கொண்டு அவனையும் அவன் நாட்டு மக்களையும் அருள்வதாக புராணக் கதை கூறுகிறது. இறை தரிசனம் பெற்ற அவன் "அஷ்ட சித்திகள் வேண்டேன், பிறவா வரம் வேண்டேன், உலகில் உள்ள துன்பம் அனைத்தும் எனக்கே வந்து சேரட்டும்" என்று கேட்டுக்கொள்கிறானாம். அப்பேர்பட்ட கருணை உள்ளம் கொண்டவன்!

"நான் இருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன் - இன்னும்
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்"

(ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா)

aanaa
17th February 2010, 06:46 PM
"
(ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா)


:clap: பலமுறை .....
கோவையான சரளமான எழுத்துகளுக்கும் :ty:

Shakthiprabha
17th February 2010, 06:53 PM
nandri nandri. I wish I am more regular :ashamed: thanks again.

Shakthiprabha
19th February 2010, 12:17 PM
காலகாலமாக நாம் போற்றி வரும் புராண இதிஹாசங்கள், வேத மந்திரங்கள், உபநிஷதுக்கள் இவற்றுள் நமக்கு தெரிந்தவை சில. தெரியாதவை கணக்கற்றவை. ரிக், யஜூர், அத்ர்வன, சாம வேதங்களாக இன்றைக்கு நான்கு வேத மந்திரங்களை அடிப்படையாகக் கொண்டு நம் மதம் வழங்கி வருகிறது. ஆனால் வேதமோ மொத்தம் நான்கு மட்டுமல்ல. கணக்கிலடங்காதவை. எண்ண எண்ண குறையாதவை. எத்தனை வேதங்கள் என்று கண்டுணர முடியாதவை. இறைவனைப் போல் முடிவற்றவை. சாமான்யனின் புரிதலுக்கும் புலனறிவுக்கும் அப்பாற்பட்டவை.

"அனந்தாவை வேதானாம்" என்று வேதமே குறிப்பிடுகிறது. இதில் நான்கே நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள். வேதங்களை ரிஷிகள் உணர்ந்தனர். ஞானிகளால் "உணரப்பட்டவை", கற்றுக்கொடுக்கப்பட்டவை அல்ல. அதனாலேயே இம்மந்திரங்களை ஓதுவது மட்டுமே சிறந்தது - குரு மந்திரம் ஓதும் பொழுது அதனை கேட்டே தெளிவுற்று மாணாக்கன் ஓதினான். வேத மந்திரங்களை எழுதி கற்பித்தல் முறையாக கருதப்படவில்லை. ஒலி நீட்சி , i.e. குறில் நெடில் முதலியவை மிகுந்த கவனத்துடன் ஓதவேண்டும் என்பதால், தானாக எழுதி படித்தலை விட குருவின் மேற்பார்வையின் கீழ் ஓதுதலே சரியென உணர்ந்து அவ்வழியே பின்பற்றப்பட்டது. வேதங்களை சரிவர கற்றுணர கிட்டத்தட்ட பனிரெண்டு வருட காலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தற்காலத்தில் நாம் வேதமந்திரங்களை அல்லது வேதத்தின் ஒரு பகுதியான ருத்ரம் சமகம் முதிலிய மந்திரங்களை ஒலிநாடாக்களில் பதிவு செய்து, வீட்டில் மந்திர ஓலியை நிரம்பச் செய்கிறோம். இது மிகவும் உன்னதமானது என்று கூறிவிட முடியாது என்கிறார் சோ. மந்திரங்களை சரியாக பயின்ற ஒருவர் நேரடியாக ஓதுவதே மிக்க நலன் விளைவிக்கக் கூடியது. மேலும் வேத மந்திரங்கள் ஒலிக்கும் இடங்களில் மற்ற சப்தங்கள் ஒடுங்கி இருத்தல் சிறப்பு. காலத்திற்கேற்ப நாம் நம்மை மாற்றிக்கொண்டு விட்டாலும், இவ்வழக்கத்தை ஒப்புக்கொண்டு விட்டாலும், இவ்வழி பின்பற்றினால் பயனோ பலனோ முழுமை பெறுவதில்லை.

(நம் மனதின் அரற்றல்....On the other hand...இன்றைக்கு ஒலிநாடாவிலேனும் மந்திர ஒலிகள் பரவிக்கொண்டிருப்பது சற்றே ஆறுதல் அளிக்கக்கூடியதாகவே படுகிறது. ஒலிகளுக்கு அலை வடிவும் உண்டு எனும் பொழுது, அது பதிவுநாடாவிலிருது வருவதாக இருந்தாலும், நன்மை உண்டு பண்ணும் ஒலியலைகள் எழும்பியவண்ணம் இருக்கும் என்றும் கொள்ளலாம்)

பரத்வாஜ மஹரிஷிக்கு ப்ரம்மன் முன்னூறு வருட கெடு கொடுத்து வேதம் முழுவதையும் அறிந்து வரச் சொல்கிறான். முன்னூறு வருடம் முடிந்த பின், இந்திரன் அவர் முன் தோன்ற, பரத்வாஜ முனிவரோ "இன்னும் நூறு வருடம் கொடுத்தாலும் அதை வேதத்தை உணரும் பொருட்டே செலவிடுவேன். தெரிந்து கொள்ள வேண்டியதோ மிக அதிகம்" என்கிறார். அங்குள்ள சில மலைகளை சுட்டிக்காண்பித்து அவற்றை வேதம் என்று உருவகப்படுத்தினால் 'நீங்கள் தெரிந்து கொண்டதோ இவ்வளவே' என்று ஒரு பிடி மண் அளந்து காட்டுகிறான். வேதத்தை முழுவதுமாய் தெரிந்து கொள்வது இயலாத காரியம். அவை முடிவற்றவை கணகற்றவை என்று இந்திரன் சொன்னது புராணக் கதை.

தொலைந்த பொக்கிஷங்கள் பலவற்றில் திவ்ய ப்ரந்தமும் ஒன்று. வெவ்வேறு ஆழ்வார்களால் இயற்றப்பட்ட திவ்யப்ரபந்தம் முதலில் கிடைக்காமலே இருந்தது. நாதமுனிவர் என்பவரே, தொலைந்த பிரபந்தங்களை மக்களுக்கு சேர்பிக்க மனம் கொண்டு அவற்றில் சிலவற்றை தேடி நம்மிடம் கொணர்ந்தார். அவையே நாலாயிரம் திவ்யப்ரபந்தமாக வழங்கப்படுகிறது. தமிழில் ஆழ்வார்கள் பலர் தமக்கு தெரிந்த வேதத்தை முன்னிறுத்தி அதனையொட்டி பாடல்கள் புனைந்துள்ளனர். நம்மாழ்வாரின் பல பாடல்கள் வேதங்களின் சாராம்சத்தை விளக்குகிறது. அவர் எழுதிய திருவாய்மொழியை ஆதாரமாக வைத்தே இராமானுஜர் வைணவ விளக்கங்களையும் நியதிகளை வகுத்ததாக அபிப்ராயப்படுகின்றனர்.

anbu_kathir
19th February 2010, 12:43 PM
{ ஸ்வதப்ராமணம் என்றால் அதுவே தன்னை சுயமாக விளக்கிக்கொள்வது (it is self explanatory) பரதப்ரமாணம் என்றால் வேறொரு வஸ்து அதனை விளக்குவது (needs another object to throw light ) (I did search for more explanation on these, I could not find any. If anyone finds any link to explain these plz share it here. thankyou) }


AFAIK, this self-luminous thing referes to the Atman-Brahman (both being equivalent in Advaita), that which is itself Light. The proper metaphor for this, across most early civilizations was the Sun, which shines of its own light.

The non-self-luminous objects are those of the 3 states of existence - waking, dream and deep sleep (in deep sleep of course there are no external objects; but that one says "I was sleeping" after waking up does imply the experience of deep sleep by the "I"). The metaphor for these (all forms in Life) was the moon, which shone by reflecting the Sun's rays and which waxed and waned (therefore symbolizing birth-death cycle) unlike the sun.

Love and Light.

aanaa
20th February 2010, 12:18 AM
(நம் மனதின் அரற்றல்....On the other hand...இன்றைக்கு ஒலிநாடாவிலேனும் மந்திர ஒலிகள் பரவிக்கொண்டிருப்பது சற்றே ஆறுதல் அளிக்கக்கூடியதாகவே படுகிறது. ஒலிகளுக்கு அலை வடிவும் உண்டு எனும் பொழுது, அது பதிவுநாடாவிலிருது வருவதாக இருந்தாலும், நன்மை உண்டு பண்ணும் ஒலியலைகள் எழும்பியவண்ணம் இருக்கும் என்றும் கொள்ளலாம்)
.

:ty: :notworthy:

Shakthiprabha
20th February 2010, 12:20 AM
:bow: :ty: prasad.

I also was relecting about "rishigaL uNarnthanar" part.

Can we come up with something like it was all over space and the frequency of an evolved being could tune up to those vedhas?

also,

reg deepsleep,

the awareness is MISSING when we are actually in deep sleep...then how can we call thta existence ( in present tense?)

u can take up in some other thread or pm me, if it sounds out of bounds for this thread :)

anbu_kathir
20th February 2010, 09:48 AM
I also was relecting about "rishigaL uNarnthanar" part.

Can we come up with something like it was all over space and the frequency of an evolved being could tune up to those vedhas?


The cosmic microwave background, which is known to be present everywhere in the universe, is a good metaphor for this, yes. But one cannot presuppose that a physical quantity actually exists to signify the 'waves of realization'.

My contention to myself is always that the effects of realization might or might not be reflected on the physical level. While people might claim things like alpha, beta,gamma delta waves in the brain, becoming acutely perceptive, etc etc to be indicators of spiritual realization, I think those are less important; they might not really be the case for every realized soul.

Realization itself remains 'really real', the physical world is the superposition which is unnecessary. As many have said, man is not a physical being having a spiritual experience, rather a spiritual being having a physical experience. Not that this has anything to do with viewing science inferiorly.



reg deepsleep,

the awareness is MISSING when we are actually in deep sleep...then how can we call thta existence ( in present tense?)



Awareness itself is present, but awareness of any particular object of the waking/dream states is absent. My metaphor for this is Brahma being rolled up into Vishnu's navel (as in Ananthapadmanaabha), although this might not be very accurate. Vishnu (equivalent to Atman) remains asleep (although in 'aware' sleep or Yoga-nidra). Creation is not happening, it remains only as latent potential (as Brahma who has sunk back into the navel).

Love and Light.

wrap07
22nd February 2010, 04:55 PM
nicely articulated SP. :D
thanks :notworthy:
& enlightening discussions.

Shakthiprabha
22nd February 2010, 09:11 PM
The cosmic microwave background, which is known to be present everywhere in the universe, is a good metaphor for this, yes. But one cannot presuppose that a physical quantity actually exists to signify the 'waves of realization'.

My contention to myself is always that the effects of realization might or might not be reflected on the physical level. While people might claim things like alpha, beta,gamma delta waves in the brain, becoming acutely perceptive, etc etc to be indicators of spiritual realization, I think those are less important; they might not really be the case for every realized soul.

I did not understand what u said prasad. :( Physical level? I assume the rishigaL need not have been born here in physical plane. They could have realised it with sukshma gnaana or whatever (after the cosmic creation) without being present in physical plane...and later when they brought down the knowledge in earth plane, they just had to recollect it now that it is inherent in them... (I lack the right knowledge here, and hence am not too confident on either the understanding or the term :) )


Realization itself remains 'really real', the physical world is the superposition which is unnecessary. As many have said, man is not a physical being having a spiritual experience, rather a spiritual being having a physical experience. Not that this has anything to do with viewing science inferiorly.

:thumbsup: rightly said. :ty:


this might not be very accurate. Vishnu (equivalent to Atman) remains asleep (although in 'aware' sleep or Yoga-nidra). Creation is not happening, it remains only as latent potential (as Brahma who has sunk back into the navel).

:ty: wonderful. I also happen enjoy and agree a lot with our pradeep's explanation and his sakthi foundation website. (few also goes beyond my head though )

thankyou. :)

shankar,

thankyou :)

anbu_kathir
23rd February 2010, 10:27 AM
I did not understand what u said prasad. :( Physical level? I assume the rishigaL need not have been born here in physical plane. They could have realised it with sukshma gnaana or whatever (after the cosmic creation) without being present in physical plane...and later when they brought down the knowledge in earth plane, they just had to recollect it now that it is inherent in them... (I lack the right knowledge here, and hence am not too confident on either the understanding or the term :) )


What I meant was was that such metaphysical explanations are metaphors. They might be just as valid as physical reality, but again, not more than physical reality either. "Aandaavan podigira kanakku" , " God works in mysterious ways", "siththan pOkku sivan pOkku", etc. appadinnu palabEr sollirukkaanga. As I wonder about it, I always think that the Gods are real, Creation is real, rishis, shruthi, etc. are real only so much (and just as much) as I, as a sentient being, am real.

If my identity with a self (a separate self) is lost (which I think is what realization is), so too all these metaphors and connotations will have sunk back into the original undivided whole, which is the only actual reality there is. The same thing happens with the myths and metaphysical explanations in any other religion (there are quite a large number of them).

This explanation of mine to myself sort of serves to keep me somewhat grounded, and not to be overtly attached to the 'superiority of the Hindu way' (it might very well be superior, but it serves a purpose for me and so I believe it :D).


Love and Light.

Shakthiprabha
23rd February 2010, 10:38 AM
Thankyou :) lol I get what u say :D


If my identity with a self (a separate self) is lost (which I think is what realization is), so too all these metaphors and connotations will have sunk back into the original undivided whole, which is the only actual reality there is.

:) :) thankyou.

Shakthiprabha
24th February 2010, 03:33 PM
ஒவ்வொரு பழக்கவழக்கங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால் சுவாரஸ்ய கதை, நிகழ்வு அல்லது நியதி கோர்க்கப்பட்டிருக்கும். ஜோதிட சாஸ்திரத்தைப் போலவே நம்பிக்கையுடன் பின்பற்றப்படுவது வாஸ்து சாஸ்திரம். வாஸ்து சாஸ்திர வல்லுனர்களை நாடி வீட்டிற்கு ஹோமமும் ஷாந்தியும் செய்த பின்னரே குடிபெயரும் பழக்கம் பலரிடம் நிலவி வருகிறது.

ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ளபடி வாஸ்தோத்வன் எனப்படும் வாஸ்து அதிபதி ஈஸ்வரனின் அம்சம். அவன் கருணா மூர்த்தி. நல்லன எல்லாம் நடத்திக்கொடுப்பவன். அவனை வேண்டியும் அவன் அருளை துதி பாடும் ஸ்தோத்திரங்கள் உள்ளன, எனினும், வாஸ்து புருஷனைப் பற்றி ஆகம சாஸ்திரத்தில் வேறு விதமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவன் கொடூரம் நிறைந்தவன், அவனுக்கு ஷாந்தி செய்து திருப்தி செய்யவிட்டால், நம்மை ஆட்டுவிக்கக் கூடியவன் என்பது இன்னொரு நம்பிக்கை.

அரக்கனை அழிக்க தேவர்கள் சிவபெருமானை வேண்டி நிற்க, அவரின் வியர்வை துளியிலிருந்து தோன்றியவன் வாஸ்து புருஷன் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது. அரக்கனை அழித்த பின்பும் அவன் குரூரம் கட்டுக்குள் அடங்காமல் போக, சிவன் அவனை தன் காலடியில் அமிழ்த்தி, அஹம் அழிக்கிறான். வாஸ்து புருஷன் சிவனிடம் தஞ்சம் புகுந்த பிறகு, மனிதர்களுக்கு நிறைவும், செல்வமும் அருளி நிற்கும் வாஸ்து அதிபதியாக்கி பூமிக்கு அனுப்பப்படுகிறான். அவனை வணங்கி நிற்போருக்கு அருள் பாலிக்கிறான் என்று கூறுகிறது.

இன்னொரு சாராரின் கருத்து படி வாஸ்து புருஷன் கட்டுக்கடங்காமல் போன போது தேவர்கள் பலரும் அவனை அமுக்கி வீழ்த்தியதாகவும், அவன் உடம்பின் ஒவ்வொரு பாகத்துக்கும் ஒவ்வொரு தேவன் அதிபதியாகி அமுக்கியதால் அந்தந்த பாங்கங்களை அந்த தேவதைகளைக் கொண்டு குறிப்பிடுகின்றனர். தன் தோல்வியை வேண்டி நின்ற அவனுக்கு வருடத்தில் எட்டு நாட்கள் முழித்திருக்கும் வரமும் அதிலும் பிரத்தியேகமாக சில மணிகளே அவன் முழித்திருப்பான் என்று வரமருள்கின்றனர். வாஸ்து புருஷனின் அருளை சம்பாதிக்காதவர்களை அவன் பலவாறாக சோதனைக்கு ஆட்படுத்துகிறான் என்பது நம்பிக்கை. வாஸ்து புருஷனின் தலை - கிழக்கு நோக்கி ஈசான்ய மூலையிலும், கால் - தென் மேற்கு மூலையிலும் அமைந்திருக்கிறது. இவனை திருப்தி படுத்திய பின்னரே கட்டிட வேலைகளைத் துவக்கி எந்தெந்த இடங்கள் எந்தெந்த திசை நோக்கி இருக்க வேண்டுமோ அப்படி அமைத்தால் சுபீஷம் நிலவுவதாக கருத்து.

தேவலோகத்தில் கட்டிட கலையில் நிபுணராக அதிபதியாக கருதப்படும் மயனே தேர்ந்த வாஸ்து சாஸ்திர நிபுணன் என்பதால் அவனே வாஸ்து புருஷனாக பாவிக்கப்படுகிறான் என்றும் வேறு கோணமும் உண்டு.


கட்டிடங்களின் கட்டமைப்புகளை சாஸ்திரமாக வழங்கி வருவது சைனாவிலும் feng shui என்ற பெயரில் கடைபிடிக்கபடுகிறது. விஞ்ஞான முறைப்படியான விளங்கங்களுடன், வானவியல் சாஸ்திரத்தின் தொடர்போடு அலசி ஆராய்ந்து, பாஸிடிவ் அதிர்வுகள் அலைகளை வரவேற்க வல்லதாய் அமைத்துக் கொள்கிறார்கள். சிரிக்கும் புத்தர் சிலையோ, மீன் தொட்டியோ சரியான் இடத்தில் வைக்கப்பட்டால் சுபீஷம் தரும் என்பதும் இவ்வழக்கத்தின் நம்பிக்கை. வாஸ்து சாஸ்திரமும், feng shui-ம் நிறைய இடங்களில் சற்றே வேறுபடுகிறது.


எது எப்படியாயினும், நம் சுற்றுப்புற சுழலின் அமைதிக்காக சிறு பிரார்த்தனையுடன் கட்டிட வேலைகளைத் துவங்கி, எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளே எல்லா சாஸ்திரங்களிலும் அவற்றின் அதிபதியாகவும் விளங்குகிறான் என்ற தெளிந்த அறிவுடனும் பணிவுடனும், குடிபெயர்ந்த பின்பும், தினமும் கூட இறைவழிபாட்டை மேற்கொண்டால், இல்லமும், சுற்றுப்புறமும், இன்பமாய் அமைத்திட எளிது.

aanaa
24th February 2010, 07:13 PM
:ty: SP

Shakthiprabha
2nd March 2010, 06:29 PM
"போன ஜன்மத்து பாவம் / கர்மா" போன்ற சொற்றொடர்களை பயன்படுத்துபவர்கள் அறிவிலிகள். இவற்றில் நம்பிக்கைகள் உடையவர்ளாக நாம் இருக்கும் பட்சத்தில் நம்மை பத்தாம்பசலிகளாக பாவிக்கும் நிலைமையே பெரும்பாலும் இன்றைய விஞ்ஞான சமுதாயத்தின் மேதாவிலாசத்தில் மிளிர்கிறது. இவை ஒரு புறமிருக்க, அவரவர் கர்மவினையின் பேரிலே கூட பலருக்கும் நம்பிக்கை இருப்பதில்லை, இதில் முன்னோர்கள் செய்த பாவம் நம்மை தாக்கும் என்பதெல்லாம் ஆதாரமற்றவை என்று புறம் தள்ளிவிடுகிறார்கள்.

கர்மவினை என்பதன் பேரில் நம்பிக்கை வைத்தாலும் கூட அவனவன் செய்த கர்மவினை (நம்பினோருக்கு) அவனை மட்டுமல்லவா பாதிக்க வல்லது? இதில் முன்னோருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?

கர்ம பலாபலன்களில் ஓரளவு நம்பிக்கை கொண்ட பலராலும் நம்பப்படும் விஷயம் ஒன்றுள்ளது. ஒருவன் வீட்டு உப்பைத் தின்றால் (உணவு உண்டால்) அவனுக்கு நாம் கடன் பட்டிருக்கிறோம் என்ற நம்பிக்கை. கர்மா என்பதே கொடுக்கல்-வாங்கல் கணக்கு தான். முன்னோர்கள் விஷயத்தை எடுத்துக்கொண்டால், அவர்களின் உதிரம், உடல், மரபணுக்கள் அத்தனையும் அவர்கள் நமக்கு வழங்கியிருக்கிறார்கள். அவர்கள் தம் உதிரத்தில், பங்கு கொடுத்திருக்கிறார்கள். (அல்லது நாம், நம் கர்மாவினால் அதில் பங்கு எடுத்துக்கொண்டோம்) அவர்கள் வளர்த்து விட்ட அன்னை தந்தை நமக்கு சோறூட்டுகிறார்கள். அவர்கள் அசையும் அசையா சொத்துக்களில் பங்கு கேட்கிறோம். அவற்றை ஆண்டு அனுபவிக்கிறோம். அதே போல் அவர்கள் சம்பாதித்த வினைகளிலும் நமக்கு பங்கு உண்டு.

முன்னோர்களின் சாபம் நம்மை பாதிக்க வல்லது. முன்னோர்களுக்கு கொடுக்கபட்ட சாபமும் அவர்களின் காலத்தில் பலிதம் பெறவில்லையென்றால் நம்மை வந்தடையும் சாத்தியக் கூறுகள் உண்டு. சாபங்களோ வாழ்த்துக்களோ பலித்து விடுவதும் கூட "எவர் வாயினிலிருந்து அது புறப்படுகிறது" என்பதை பொருத்து அமையும். சாதாரண மனிதன் சொல்லும் பயனற்ற சொற்களுக்கு வலிமை அதிகம் இராது. சற்றே மேன்மையுடைவனோ, அல்லது சுத்தமான ஆன்மாவின் வாயிலிருந்து வரும் சொற்களுக்கு இன்னும் வலிமை அதிகம். இறைவனுக்கு ஒப்பானவர்களோ ரிஷிகளோ, தபஸ்விகளோ சொல்லும் சொற்களுக்கு அதிர்வுகளும் அடர்த்தியும் அதிகம்.

தபஸ்விகளோ, பரிசுத்தமானவர்களோ சொற்களை உதிர்த்துத் தான் சாபம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேன்மையானவர்கள் பலரும் மன்னிக்கும் மறக்கும் தன்மை படைத்தவர்கள். எனினும், அவர்கள் சற்றே மனவேதனை அடைந்தாலும் அவர்களின் எண்ண அலைகளுக்கு அதற்கு அதீத ஷக்தி உண்டு.

ரிஷிகளும் தபஸ்விகளும் சதா சாபம் கொடுப்பதே வேலையாக்கிக் கொண்டு கொந்தளிக்கும் மனதுடன் இருப்பவர்கள் அல்ல. பல நேரங்களிலும் பலரும் அமைதியும் ஷாந்தமும், மன்னிக்கும் கருணை உள்ளமும் கொண்டவர்களாகத் திகழ்ந்தனர். சமீகரின் மன இயல்பு இதற்கு சிறந்த சான்று. பரிஷீத் மஹராஜாவின் ஆட்சி காலத்திலே கலியுகம் துவங்கியதாக பேசப்படுகிறது. பரிஷித், பன்றி வேட்டையாடி அதனை துரத்தியபடியே காட்டினுள் சமீகர் என்ற மஹரிஷியின் குடிலுக்குள் செல்கிறார். சமீகர் சிறந்த தபஸ்வி. அன்றைய தினம் அவர் மௌன விரதம் அனுஷ்த்திருந்தார். பேச்சு கொடுக்கும் தன்னிடம் பதிலுரைக்காதிருந்த மஹரிஷியின் மௌனத்தை அஹங்காரமாக தவறாக எண்ணி வெம்புகிறார் ராஜா. பல முறை பேசியும் முனிவரோ அமைதியாய் இருக்கவே, கோபம் மேலிட்ட பரிஷித், செத்த பாம்பு ஒன்றை சமீகரின் கழுத்தில் மாலையாய் தொங்க விட்டு விட்டு தன் கோபத்தை வெளிப்படுத்துகிறார். இதனை அரிந்த சமீகரின் மகன் கடும் கோபம் கொண்டு பாம்பினால் தீண்டபட்டு மன்னர் இறக்க வேண்டும் என்று சாபம் இட்டுவிடுகிறான்.

ரிஷியின் மௌனத்தின் காரணத்தை தெரிந்து கொண்ட ராஜா, மிகவும் மனம் வருந்தி, தனக்கு இச்சாபம் சரியானதே என்று பலவாறு மனம் வெம்புகிறான். நல்ல குணம் நிரம்பப் பெற்ற அப்பேர்பட்ட மஹராஜாவும் கடும் கோபம் கொண்ட க்ஷண நேரத்தில் தவறிழைத்து விடுகிறான். முனிவரோ இவருக்கும் ஒருபடி மேல் அல்லவா! தபஸ்வி ஆயிற்றே! சமீகரோ தம் மகனை கூப்பிட்டு பலவாறு கடிந்து கொள்கிறார். ராஜா என்பவனின் இறப்பு பிரஜைகளை பாதிக்கும். பரிஷித்தைப் போல் மிகவும் நல்ல அரசனாக இருந்து விட்டால் அவன் இழப்பு பலருக்கும் ஈடுசெய்ய முடியாதது. தபஸ்வியாகப் பெற்றவர்கள் கோபத்தை அடக்கத் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். இல்லையெனில் தபஸ்வி என்று சொல்லிக்கொள்வதிலோ ரிஷி, ஞானி என்று சொல்லிக்கொள்வதிலோ ஒரு பயனும் இல்லை. மன்னிக்கும் குணம் அற்றவனும், முன் கோபம் கொள்பவனும் செய்யும் தபஸ் வீணாய் போவது கண்கூடு.

விஸ்வாமித்ரர் தம் கோபத்தால் பல முறை தபஸின் பலனை இழந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ராஜஸ குணம் நிரம்பப் பெற்றவர். ஒவ்வொரு முறை அவரின் அஹங்காரம் தலைதூக்கும் போதெல்லாம் சபித்து விடுகிறார். இதனால் அவர் பலவருடம் சேமித்து வைத்த ஷ்ரேயஸும் தபஸும் அதன் பலனும் வீணாய் போக, மீண்டும் கடும்தவம் இயற்றும்படி ஆகிறது. வலிமைக் கூடிய தபஸ்விகளின் சாபத்திற்கும் மன வருத்தத்திற்கும் மிக அதிக வீர்யம் உண்டு.

உயர்ந்த ஆன்மாக்களை பணிந்து அவர்களை மரியாதை செய்து தம் வாழ்நாளைக் கழிக்கும் ஒருவனுக்கு அதன் அருமை பெருமை தெரியாத மனையாளோ மக்களோ வாய்த்தால் அவன் பாடு வருந்தற்குறியது. ராமானுஜரின் சரித்திரம் ஒரு பாடமாய் அமைகிறது. திருக்கச்சி நம்பி என்ற ஒருவரை தம் குருவாய் ஏற்க ராமானுஜரின் மனம் வெகுவாக விரும்பியது. அவரோ ராமானுஜருக்கென வேறு ஒரு குரு வாய்ப்பார் என்று சொல்லிவிடுகிறார். நம்பியின் அருளுக்காக ஏங்கும் ராமானுஜர், அவரை வீட்டுக்கு உணவு உண்ண அழைத்து, அவர் உண்ட மீதத்தை உண்டு அதன் பலனைப் பெற எண்ணுகிறார். ராமானுஜர் கோவிலுக்கு சென்று வருவதற்குள் நம்பி வீடு வந்து உணவும் உண்டு வேறு காரியமாக விடைபெற்று சென்று விடுகிறார். வீட்டில் ராமானுஜரின் மனைவி, நம்பி உண்ட இலையை தீண்டத் தகாத ஒருவனுக்கு கொடுக்கப்படும் மரியாதையுடன் கழியை கொண்டு தள்ளிவிடுகிறாள். மனம் மிகவும் வருந்திய ராமானுஜர் மனைவிக்கு அறிவு புகட்டி இனிமேலும் அப்படி செய்யல் ஆகாது என்று கேட்டுக் கொள்கிறாள். குரங்கு புத்தி மனதை அவ்வளவு எளிதில் அறிவுரையின் பேரில் மாற்ற முடியுமா? அவரவர்கள் உதிரத்தில் இருக்கும் அஹங்காரமும், குணநலனும் தொடர்ந்து வந்தபாடாகவே இருக்கும். மனதை அடக்க சாமான்யன் வாழ்கை வாழும் ஒருவனுக்கு சாத்தியம் அல்ல. மீண்டும் ஒரு முறை ஏழை விஷ்ணு பக்தனை உணவு இல்லை என்று விரட்டியடிக்கிறாள். மறுபடியும் ராமானுஜர் புத்தி கூறி இப்படி செய்யாதே என்று வேண்டிக்கொள்கிறார். அதன் பின் பெரியநம்பி என்பவரை தம் குருவாக ஏற்கிறார். அவரும் அவர் பத்தினியுமாய் இராமானுஜர் வீட்டிலேயே தங்கியிருக்கின்றனர். இதற்கெல்லாம் பெரிதும் உடன்படாவிட்டாலும் வேறு வழியின்றி வாழ்ந்து வந்த ராமானுஜரின் மனைவிக்கு, சிறு சம்பவம் கூட எரியும் கொள்ளியை மேலும் சீண்டி சண்டையில் முடித்து விடும்படி வாய்க்கிறது. பெரியநம்பியின் மனைவி சண்டையை வலுக்காமல் பதிலேதும் கூறாமல் இருக்கிறாள். பெரியநம்பியும் அவர் மனைவியும் மௌனமாய் வீட்டை விட்டு வெளியேறி விடுகின்றனர். காரணம் அறிந்த ராமானுஜரின் மனம் மிகவும் பாடுபடுகிறது. அவர் மனைவியை ஏதோ ஒரு காரணம் சொல்லியோ சொல்லாமலோ பிறந்தகம் அனுப்பிவிட்டு நேரே கோவிலுக்குச் சென்று சன்யாசம் ஏற்கிறார். "கூறாமல் சன்னியாசம் கொள்" என்பது இது தான் போலும். ஒத்த கருத்துள்ள தம்பதியாக இராவிட்டால், இருவரின் குறிக்கோளும் வெவ்வேறாக இருந்தால், குணநலன் பொருந்தாமல் இருந்தால், இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணிப்பதே நல்லது.


மனிதர்களும் தேவர்களும் ஒருவருக்கு ஒருவர் திருப்தி செய்து வாழ்கையை வாழ்வது இயற்கை அமைத்த நியதி. யக்ஞங்கள் மூலம் தேவர்களை மனிதன் திருப்தி செய்வதும், அவர்கள் சுபீக்ஷம், மழை மூலமாக பூமியை குளிர்வித்து மனிதனை திருப்தி செய்வதும் பொருந்தும். இது செய்யாத போது தேவர்களின் சாபம் பூமியைப் பீடித்து இயற்கை வளம் அற்றுப் போகிறது. இப்படியெல்லாம் செய்தும் கூட தொடர்ந்து தர்மம் தோற்றும் அதர்மம் தழைத்திருக்கும்படியும் நேரிட்டால் பூமியின் அதர்மத்தின் பாரம் தாங்காது அழிவு ஏற்படுகிறது. அவ்வப்பொழுதெல்லாம் இறைவன் அவதரிக்கிறான் என்பது ஹிந்து மதம் அல்லாது வேறு பல மதங்களின் நம்பிக்கையும் கூட. 'அதர்மம் அழித்து தர்மத்தை காக்க நான் யுகம் தோறும் தோன்றுவேன்' என்று இறைவன் கூறுகிறான். சில அவதாரங்களுக்கு வேறு பல காரணமும் உண்டு. விஷ்ணுவை பிருகு முனிவர் சபித்து விடுகிறார். சாபம் மனிதனை மட்டும் பீடிக்கும் விஷயம் அல்ல. சாபம் என்றால் "கோபத்தில் உதிர்த்த சொல்". எவர் வாயிலிருந்து புறப்படுகிறது என்பதைப் பொருத்து சாபத்தின் மகத்துவம் மாறுபடும். பெரிய முனிவரின் சாபம், பிரபஞ்சத்தில் பலரும் உணரும்படியான பெரிய சக்தியாகி, இராம அவதாரமாக உருவெடுத்தது. தேவாசுர போரின் போது அசுரர்களுக்கு பிருகு மஹரிஷியின் மனைவி தம் தபஸின் பலனால் ஷக்தி வழங்குகிறாள். அதனால் கோபமுற்ற விஷ்ணு அவளை சக்ராயுதத்தால் சம்ஹாரம் செய்து விடுகிறார். இதனால் துணுகுற்ற பிருகு மஹரிஷி, பூமியில் பிறந்து மனைவியின் பிரிவால் அவதியுறுமாறு கோபத்தில் சொற்களை உதிர்த்து விடுகிறார். பெரிய மஹரிஷியின் சாபதிற்கும் கட்டுப்பட்டு அதர்மம் அழித்து தர்மம் தழைக்கவுமாய் இராமாவதாரம் தோன்றியது.

aanaa
2nd March 2010, 11:12 PM
"

கர்மா என்பதே கொடுக்கல்-வாங்கல் கணக்கு தான்.


:clap:

:ty:

leosimha
3rd March 2010, 04:10 PM
was this subject paabamum saabamum discussed on March 2nd? :?

Shakthiprabha
3rd March 2010, 04:16 PM
was this subject paabamum saabamum discussed on March 2nd? :?


No. I compile and write related messages in some acceptable heading. It was spoken in bits n pieces over a period of one week or more :)

I supp stories of raamanujar and parikshith was discussed sometime around feb end on diffdrent days :)

Shakthiprabha
4th March 2010, 12:22 PM
போதும் என்ற மனமே பொன் மனம். போதும் என்ற எண்ணம் வராத வரை, நாம் தொடர்ந்து ஏதோ ஒன்றிற்காக போராடிக் கொண்டே இருக்கின்றோம். எத்தனை கிடைத்தாலும் திருப்தி பெறுவதில்லை. இன்னும் இன்னும்...இன்னும் இன்னும்... பெயரா? புகழா? பணமா? அந்தஸ்தா? இன்னும் சிந்தையை குளிர்விக்கும் அத்தனை வஸ்துவும் போதும் என்று நாம் நினைக்காத வரை நீண்டு கொண்டே போகிறது. எங்கே முற்று புள்ளி வைக்க வேண்டும்? அடி முடி காணாது நீளும் ஆசைகளுக்கு போதும் என்ற மனம் எப்பொழுதுமே வராது, நாமாக அதை அடக்காத வரை. அளவான இருவேளை சோறு, உடுக்க இரு துணி. படுக்க இடம். இவை போதும் சாதகனுக்கு.

ஆனால் பிள்ளை குட்டி ஆகிறது. பாதுகாப்பு, வீடு கட்ட வேண்டும். படிக்க வைக்க வேண்டும். பணம் வேண்டும். பணம் என்று வந்தவுடன் போதும் என்ற எண்ணம் என்றுமே வருவதில்லை. அவனை விட நான் பணபலம் பெற வேண்டும். அவனுக்கு இரண்டு என்றால் எனக்கு நான்கு... நீண்டு கொண்டே போகிறது. பணத்தோடு புகழ் / படை பலமும் வேண்டும். ஆள் அந்தஸ்து அவனுக்கு கௌரவத்தைக் கொடுக்கிறது. எப்படிப்பட்ட அந்தஸ்து என்பது ஆளவிட முடியாதது. சாதாரணமானவனுக்கு ஜில்லா பணக்காரன் ஆகவேண்டும் என்பது லக்ஷியம். அப்புறம் பரப்பளவு அதிகரித்துக்கொண்டே போகிறது. கடைசியில் ஹிட்லரைப் போல் உலகை ஆட்டுவிக்க எண்ணுகிறான். தரணையை ஆண்டவன் அண்ட சராசரத்தையும் ஆள எண்ணுகிறான்.

* ராஜாக்கள் ராஜ்ஜியத்தை பெருக்கிக் கொண்டதெல்லாம் "போதும்" என்ற மனம் இல்லாததால் தான்.

* சாதரணர்கள் ஆகிய நாம் இன்னும் இரண்டு வீடு கட்டிக்கொண்டு பிள்ளைகளுக்காக சேர்த்து, அவர்கள் சௌகரியம்.... பேரன் பேத்திகளுக்காக மீண்டும் பணம்....இதுவும் "போதும்" என்ற மனம் இல்லாததால் தான்.

* ஒவ்வொரு இலக்கும் லக்ஷியமும் கூட நம்மை உயர்த்திக்கொள்ள நாம் பிரயத்தனப்படுவது. நம் புகழுக்காக, பேருக்காக, உயர்வுக்காக. அந்தஸ்துக்காக.

* இதையும் தாண்டி ஒருவன் உலக நன்மைக்காக வாழ்கிறான் என்றால் (அப்படி வாழ்பவர்கள் மிக மிக குறைந்து வருகிறது) அங்கும் அவர்களின் மனதில் மூலையில் ஒரு இடம் "அங்கீகாரம்" எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டிருக்கிறது.

"போதும்" என்பது "எவ்வளவு பெரிய நிலை எய்தினாலும்" சாத்தியப்படுவதில்லை. போதும் என்ற மனம் உண்மையான ஞானிக்கு சித்திக்கிறது. எனக்கு இது போதும். இவ்வளவு இருக்கும் போது கிடைக்கும் திருப்தி தான் மிக அதிக அளவில் கிட்டிய போதும் கிடைக்கிறது. ஆக மகிழ்ச்சி மனத்தில் இருக்கிறது. "போதும்" என்ற நிறைகின்ற மனத்தில். இப்படிப்பட்டவனின் மனம் கட்டுக்குள் நிற்கிறது. அவன் உதிர்க்கும் சொற்களும் கூட கட்டுக்குள் நிற்கிறது.

ஒரு கலந்துரையாடலில் இருவகையானோர் பேசாது மௌனம் காப்பார். ஒன்று, தனக்கு எதுவுமே தெரியாத புரியாத மூடன், இன்னொன்று, எல்லாம் அறிந்ததால், அங்கு பேச எதுவுமே இல்லை என்ற நிலையில் ஞானி. இருவரும் பார்வைக்கு ஒன்று. செயலில் ஒன்று. ஆனால் அறிவில் இருவேறு துருவங்கள்.

போதும் என்ற நிறைந்த மனத்தின் தன்மையை எடுத்திருக்கும் பட்டினத்தார் பாடல்:


உடை கோவணம் உண்டு
உறங்கப் புறந்திண்ணையுண்டு
உணவிங்கு அடைகாய் இலையுண்டு
அருந்த தண்ணீர் உண்டு
அருந்துணைக்கே விடையேறும் ஈசர் திருநாமம் உண்டு
இந்த மேதினியில்,
வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே?

உணவுண்டு. உடையுண்டு. உறங்க திண்ணையுண்டு. நீர் உண்டு. வாயால் உரைப்பதற்கு தித்திக்கும் இறைவன் திருநாமம் உண்டு. வேறு என்ன வேண்டும்!! என்கிறார்.

அப்படியே ஒருவன் போதுமென்ற மனம் கொண்ட ஞானியாய் வாழ்ந்தாலும் அவனை பாடாய் படுத்த எத்தனை பேர்! ஆபுத்திரனுக்கு வராத சோதனையா? இறைவனை அடைய முற்படுவோர், முதலில் இறைவனை "அன்னமயமாய்" பார்கிறார். அன்னத்திலிருந்தே யக்ஞம். அதனின்று மழை. மழை கொணருவது பயிர். பயிரால் உயிர். ஆக உயிர்க்கு ஜீவ நாடி அன்னம். முதலில் பிரம்மத்தை ஜீவ நாடியான அன்னமாய் பார்க்கிறான். உணர்கிறான்.

அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்,
அஹம் அன்னாதோஹம் அஹம் அன்னாதோஹம் அஹமன்னாத:

நானே அன்னம். அன்னத்தை நுகர்பவன் நானே. என்கிறது ஸ்லோகம்.

அன்னத்தை த்வேஷிக்காதே என்று உபதேசித்தலில் துவங்கி, அன்னம் வழங்கும் இறைவனை லக்ஷ்மி ரூபமாய் காண்கிறோம். அன்னத்தை தனியே உண்பது சிறப்பன்று. பிறருக்கும் வழங்கி பின் உண்ண வேண்டும். பக்தர்கள் பலர் முன்னாளில் அடியார் ஒருவருக்கேனும் அன்னம் வழங்கிவிட்டே உணவு உண்பதை வழக்கமாகக் கொணடிருந்தனர். ஆபுத்திரனும் அப்படித்தான். யாரிந்த ஆபுத்திரன் ? பெற்றோர் நிர்கதியாக்கிவிட ஆவினால் (பசுவினால்) காக்கபட்டவர் வளர்க்கபட்டவர். அதனால் ஆபுத்திரன் என்று பெயர் வந்தது. அவர் பிக்ஷை எடுத்து ஜீவனம் நடத்துகிறார். கிடைத்த பிக்ஷையில் பசியையும் பொருட்படுத்தாது ஊனமுற்றவர்களுக்கும் நோயுற்றவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் வழங்குகிறார். இதனால் மனம் மகிழ்ந்து சரஸ்வதி தேவி அவருக்கு அள்ளக் குறையாத அக்ஷய பாத்திரத்தை வழங்குகிறாள். இது கிடைத்ததும் அவர் மிகவும் மகிழ்ந்து வாரி வாரி வழங்கிறார். தேவேந்திரன் இவரின் மனப்பக்குவத்தைக் கண்டு வரம் கொடுக்க எண்ணுகிறான்.

"தன்னிடம் இருப்பதே போதும், வேறென்ன வரம் வேண்டும்" என போதுமென்ற மனதோடு வரத்தையும் மறுத்துவிடுகிறார். இந்திரனுக்கு அஹங்காரம் குட்டுப்படுகிறது. உடனே அவர் கோபம் கொண்டு அந்நாடெங்கும் சுபீஷம் உண்டாக்குகிறார். ஆபுத்திரனுக்கு கொடுப்பதற்கு இருந்தாலும், எங்கும் சுபீஷம் நிலவுவதால் வாங்குவதற்கு யாருமே இல்லாமல் ஆகிவிடுகின்றது. இன்னொருவருக்கு கொடுக்க முடியாததால் அவரும் அன்னம் உண்ணாமலேயே இருக்கிறார். வேறு ஒரு நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்று கப்பலில் வந்த பிரயாணிகள் கூற அவர்களுக்கு உணவளிக்க பிரயாணிகளுடன் அந்நாடு நொக்கி புறப்படுகிறார். நடுவே ஒரு தீவில் களைப்பாற மீண்டும் பிரயாணிகள் கப்பலேறிய போது ஆபுத்திரனை மறந்துவிட்டு கப்பல் புறப்படுகிறது. தன்னந்தனி தீவில் மக்கள் யாருமின்றி, அன்னம் கொடுக்க ஒருவரும் இல்லாததால், அக்ஷய பாத்திரத்தை ஜலத்தில் விட்டு விட்டு, தானும் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தார். அமுதசுரபி என்று பெயர்பெற்ற இப்பாத்திரமே மணிமேகலையில் கையில் கிடைத்ததாக கூறப்படுகிறது. போதும் என்ற உயர்ந்த குணம் உடையவனுக்கும் கூட எப்பேர்பட்ட சோதனை!

aanaa
5th March 2010, 02:04 AM
போதும் என்ற மனமே பொன் மனம்.
போதும் என்ற நிறைந்த மனத்தின் தன்மையை எடுத்திருக்கும் பட்டினத்தார் பாடல்:


உடை கோவணம் உண்டு
உறங்கப் புறந்திண்ணையுண்டு
உணவிங்கு அடைகாய் இலையுண்டு
அருந்த தண்ணீர் உண்டு
அருந்துணைக்கே விடையேறும் ஈசர் திருநாமம் உண்டு
இந்த மேதினியில்,
வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே?

!

:ty:

:exactly:

Shakthiprabha
9th March 2010, 03:17 PM
திருவிளக்கு மிகப்புனிதமாகக் கருதப்படுகிறது. நல்ல காரியங்கள் எது நடந்தாலும் விளக்கு ஏற்றுவதை நல்ல சகுனமாக பாவிக்கிறோம். விளக்கை அகமாக பாவித்து அங்கு ஞான ஒளி ஏற்படுவதை உணர்த்துவதாகவும் கொள்ளலாம். விளக்கு சுற்றுபுறத்தை சுத்திகரிக்கவும் செய்கிறது. அகத்தில் இருள் அகற்றி, ஞானத்தை, விவேகத்தை வழங்கும் விளக்கை வழிபட்டு ஸ்தோத்திரம் பல உண்டு. விளக்கேற்ற கற்பூரத்தை திருத்தி திரியாய் செய்து உபயோகிக்கலாம். வெறும் துணியை திரியாக்கியும், உபயோகிக்கலாம் அல்லது துணியில் சந்தனம் தடவி திரியாய் உபயோகப்படுத்தலாம். பஞ்சுத் திரியில் ஏற்றிய விளக்கும் விசேஷம். விளக்கை எந்த நேய் கொண்டு ஏற்றினால் சிறப்பு என்று மறை நூல்கள் குறிப்பிடுகின்றன.

காரம்பசுவின் நெய் கொண்டு ஏற்றும் விளக்கே மிகச் சிறப்புடையகும். உடல் கருப்பாகவும் மடி வெளுப்பாகவும் இருக்கும் பசுவை காரம்பசு என்று கண்டுணரலாம். அதற்கடுத்தபடியாக பசுநெய் கொண்டு விளக்கேற்றலாம். ஆட்டு நெய் கொண்டு விளக்கேற்றுவதும் சிறப்பு. இறுதியாக நல்லெண்ணை விளக்கு சிறப்பிக்கப்படுகிறது. வெப்பம் எண்ணையோ ஆமணக்கு எண்ணையோ எருமை நெய்யிலோ ஏற்றுவது உசிதம் அல்ல. ஒவ்வொரு தெய்வத்திற்கும் வெவ்வேறு நெய்/எண்ணை உசிதம்.

தினசரி வீட்டு வழிபாடுகள் முதல் கோவில் வழிபாடு வரை, விளக்கு இல்லாமல் துவங்குவதில்லை, விளக்கு இல்லாமல் முற்றுபெறுவதும் இல்லை. மின் விளக்கெல்லாம் வந்த பிற்பாடும் பசு நெய், எண்ணை விளக்குகள் ஏற்றினால் தான் திருவிழாக்களும் மங்கல நிகழ்ச்சிகளும் நிறைவு பெறுகிறது. தீபாவளி, கார்த்திகை தீபம் என்று தீபத்திற்கு சிறப்பாய் திருநாளின் பேரில் போற்றிக் கொண்டாடுகிறோம். தீபம் மேல் நோக்கியே இருப்பதால், நம் வாழ்வின் நோக்கமும் உயர்வும் லக்ஷியமும் கூட மேல் நோக்கி உயர்ந்த எண்ணங்களால் இருக்க வேண்டும் என்று பாடம் புகட்டுகிறது திருவிளக்கு.

திருமூலரின் திருமந்திரம், ஐம்புலன்களை வென்றோர் அப்புலன்களையே விளக்காக்கி வழிபடுவதை உணர்த்துகிறது. நம் உடம்பே ஆலயம் என்றால், அங்கு புலனடக்கம் செய்த ஞானி அப்புலன்களையே விளக்காக்கி இறைவனை வழிபடுகிறான். புலன்களை இவ்வாறு ஞானத்தால் எரித்து விடுகிறான் (not in literal sense) என்றும் கொள்ளலாம்.

உள்ளம் பெருங்கோவில்
ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
ஐம்புலன்களும் காலா மணிவிளக்கு

விளக்கு பூஜைகளிலும் தினம் வீடுகளிலும் படிக்கப்படும் திருவிளக்கு அகவல் /ஸ்லோகம் படிக்க

http://shankaranar.blogspot.com/2009/08/16.html சுட்டுக.

நன்றி.

aanaa
9th March 2010, 08:19 PM
திருவிளக்கு

விளக்கு பூஜைகளிலும் தினம் வீடுகளிலும் படிக்கப்படும் திருவிளக்கு அகவல் /ஸ்லோகம் படிக்க

http://shankaranar.blogspot.com/2009/08/16.html சுட்டுக.

நன்றி.


:ty:


also
http://www3.sympatico.ca/s.thiru/aum04.html#02

PARAMASHIVAN
10th March 2010, 06:00 PM
SP ka

Good Work, enEiunthu intha info ellam post panureenga?

I used to watch the entire serial.. but now by the time, I reach home the serial is almost over, have missed couple of serials...

Part 1 was more interesting thaan part 2

Shakthiprabha
12th March 2010, 11:22 PM
நன்றி ரகு. :) Info is based on what cho says in the serial. I just coin it with few of my own words to make it a complete article. I suppose I find both he parts equally interesting :)

Shakthiprabha
12th March 2010, 11:27 PM
அனுமனை இறையம்சமாக வழிபடும் பக்தர்கள் பலர். ஆலயங்களின் அருகாமையில் அல்லது ஆலய வழிபாட்டுக்கு செல்லும் பொழுது குரங்குகள் கண்ணில் பட்டாலும் அனுமன் அம்சம் என்று பயபக்தியோடு நினைத்துக்கொள்பவர்களும் உண்டு. பெரும்பாலும் அப்போது நமக்கு இருக்கும் மனநிலையே இதற்கு காரணம். மற்ற காட்டுக் குரங்குகளுக்கோ அல்லது மற்ற நேரத்தில் தென்படும் குரங்குகளுக்கு அந்த மரியாதை கிடைப்பதில்லை. கேள்வி இங்கே என்னவென்றால், அனுமனோ, வாலி, சுக்ரீவர் கூட்டதவர்களோ (சற்றே அறிவு முதிர்ச்சி எய்திய) குரங்குகளா? பரிணாம நிலையில் அறிவு முதிர்ச்சி எய்திய குரங்கு மனிதனுக்கு முதல் கட்ட நிலை.

இங்கு கூறப்படும் சுக்ரீவ வாலிகள் குரங்கினின வரிசைகளின் பரிணாம வளர்ச்சியை கடந்த நிலையில் இருப்பதைப் படித்து தெரிந்து கொள்கிறோம். சுக்ரீவன் வாலி போன்றோர் மெத்தப் படித்தவர்கள். அவர்கள் பராக்ரமமும், அறிவு முதிர்ச்சியும், சிந்தனையும் மனிதனுக்கு ஒப்பாக கருதக்கூடியது. பலவித சாஸ்திரங்கள் அறிந்தவர்கள் எனவும், அவர்களால் கட்டப்பட்ட கட்டிடங்களும் அரண்மணைகளும் அற்புதமென வியக்கும் வண்ணம் அமைந்திருந்ததாக இதிஹாச வரலாறு எடுத்துரைக்கிறது. இவர்களை "வானரங்கள்" என்று கூறுவதே முறையாம். வானரங்களை பொதுவாக குரங்குகள் என்றே நாம் நினைத்தாலும், ராமாயணம் நடந்தது த்ரேதா யுகத்தில், அந்த யுகத்தில் வானரர்களும் இத்துணை மெத்த அறிவுடையவர்களாக இருந்திருக்கின்றனர். சாதாரண குரங்குகள் என்று நினைத்து விடாமல், அவர்களை வானரங்கள் என்று விசேஷமாய் பிரித்துப் பார்ப்பதே தகும்.

மேலும் ஜாம்பவான் ஹனுமனின் பராக்ரமத்தை எடுத்துரைக்கையில் "ஹனுமனே நீ சாமான்யன் அல்ல, ராம லக்ஷ்மணர்களுக்கு சமமான தேஜஸைப் பெற்றவன்" என்கிறார். ஹனுமன் வாயு பகவானுக்கு அஞ்சனைக்கும் பிறந்தவர். ஹனுமன் புகழுரைக்கும் வாயு பகவான், "ஹனுமன் பெரிய வீரன், சிறந்த அறிவாளி, எனக்கு நிகரானவன்" என்று வாய்மொழிகிறார்.

ஹனுமனை வணங்கும் ஸ்லோகம்:


"அசாத்யம் சாதக ஸ்வாமின்
அசாத்யம் தவ கிம் வத
ராம தூத க்ருபா சிந்தோ
மத் கார்யம் சாதய ப்ரபோ"

"சாத்யம் மீறிய அரிய செயல்களை செய்யும் இறைவனே, உங்களுக்கு செய்ய முடியாததென ஏதேனும் உண்டோ?! ராமனின் தூதனே கருணை கொண்டு என் கார்யத்தை சாதிக்க அருள் புரியுங்கள் ப்ரபோ" என்பது தோராயமான அர்த்தம்.

நம்மில் சிலருக்கு இறைவன் இருக்கின்றானா என்றே சந்தேகம் வருகின்றது. கண்ணுக்கு புலப்படாத வஸ்து என்பதால் நம்புவது சாத்தியமாவதில்லை. மேலும், நமக்கு சாதகமான காரியம் நடைபெறாவிட்டால், கோபம் கொண்டு இறைவனை சந்தேகிக்கிறோம். உலகில் நடைபெறும் பல அதர்மங்களும் கொடூரங்களும் இன்னல்களும் வக்ரங்களும் பல்கிவிட்ட நிலையில் சந்தேகம் இன்னும் வலுவடைகிறது. இறைவன் என்ற தத்துவமோ, அல்லது எதுவுமோ கூட, நம்பினாலேயொழிய நமக்கு கிட்டுவதில்லை. சந்தேகம் என்பது நம்மை சாதிக்க விடாது செய்யும் வியாதி. சந்தேகம் எவர் மீது விழுந்தாலும், நம் திறமை மீதே அமைந்துவிட்டாலும் கூட அதனால் பாதகமே அதிகம் விளைகிறது. நம்பத் தகுந்த விஷயங்களை நம்புவதால், சாதாரண நம்பிக்கை தாண்டிய, "பரிபூரணமாக" நம்பிக்கை வைப்பதால் அரிய விஷயங்களை கிடைக்கப் பெறலாம். விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் பலவும், நாம் நம்ப மறுத்த ஒன்றை அவர்கள் நம்பியதால் நிகழ்ந்த வினோதங்கள்.

"சந்தேகம் கேட்டையே விளைவிக்கும்" என்ற கருத்தை வலியுறுத்த பீஷ்மரும் யுதிஷ்டிரரருக்கு சிறு கதையின் மூலம் படிப்பிக்கிறார்.


காட்டில் ஒரு நரி, சிறந்த நற்குணங்களும், தர்ம சிந்தனையும், ஒப்பற்ற அறிவும் கூடியதாய் வாழ்ந்து வருகிறது. மற்ற மிருகங்களுக்கும் படிப்பினை போதிக்கிறது. "ஒருவனின் குணம் அவன் இருக்கும் இடத்தை பொருத்து அமைவதில்லை. அவனின் அறிவும் மனமுமே நிர்ணயிக்கிறது. ஒரு ஆசிரமத்தில் கொலை நிகழ்ந்துவிட்டதால், ஆசிரமம் புனிதம் என்பதால், கொலை பாபம் வந்து சேராது இருக்குமா?" என்றெல்லாம் வியாக்கியானம் செய்கிறது. இதனை கேட்ட புலி மிகவும் புகழ்ந்து நரிக்கு அமைச்சர் பதவியை வழங்குகிறது. நரி முதலில் மறுக்கிறது "ஸ்திரமற்ற ராஜாவின் புத்தி, பின்னாளில் சந்தேகத்தின் பேரில் மாறக்கூடும், எனக்கு பதவி வேண்டாம்" என்கிறது. புலியோ நரியை போல் அறிவாளியை கண்டதில்லை, சந்தேகத்துக்கு இடமின்றி நரி அமைச்சர் பதவியை ஏற்கவேண்டும் என்று வற்புறுத்த நரி பதவி ஏற்கிறது.

நாளடைவில் மற்ற மிருகங்கள் நரியிடத்து பொறாமை கொண்டு அதன் பேரில் பொய்யாய் களங்கம் கற்பிக்கின்றனர். புலி அதனை நம்பி கோபம் கொள்கிறது. நரியோ, அமைதியாய், "உன் குணம் சந்தேகத்திற்கு உட்பட்டது என்று தெரியும்" என்று அமைதியாய் பதவியை விட்டு அகல்கிறது. புலி பின்னர் உண்மை உணர்ந்து தன் தவறை நொந்து மன்னிப்புக் கேட்டும், நரி மீண்டும் பதவி ஏற்க மறுத்து புலிக்கு நல்லாசி கூறி புத்திமதி வழங்கிவிட்டு, மற்ற மிருகங்களை விட்டு ஒதுங்கி தவ வாழ்கையை மேற்கொள்கிறது.

பஞ்சதந்திரக் கதையைப் போலவே இருக்கும் இக்கதையின் மூலம் பொறாமை என்னும் அழுக்கை களைவது சுலமபல்ல என்று புரிகிறது.

* கெட்ட நடத்தையுடையவன் நல்லவனை பார்த்து பொறாமை கொள்கிறான்.
* முட்டாள் பண்டிதனை பார்த்து பொறாமை கொள்கிறான்.
* இல்லாதவனுக்கு இருப்பவனிடத்து பொறாமை.

அழுக்காறு என்று சொல்லப்படும் ஒழிக்கவேண்டிய ஆறு அடிப்படை குணங்களின் (காமம், க்ரோதம், மோஹம், லோபம், மதம், மாத்ஸர்யம்) வேறுபட்ட வெளிப்பாடே பொறாமை. பொறாமையினால் தெளிந்த சிந்தை குழம்பி மனவருத்தமும் விரோதமும் வளர்கிறது. தெரிந்தோ தெரியாமலோ நம் நட்பு கொள்ளும் நபருடன், "கடும்" விரோதம் வளர்ந்து விட்டால் அதை இனி தொடர்வது உசிதமா என்ற யுதிஷ்டிரரின் கேள்விக்கும் பீஷ்மர் பதில் அளிக்கிறார்.


ஒரு ராஜாவின் அரண்மணையில் விசேஷ ஞானம் பொருந்திய குருவியும் அவருடன் நட்புடன் பாராட்டியபடி வளர்ந்து வருகிறது. நாளடைவில் ராஜாவிற்கு மகன் பிறக்கிறான். குருவிக்கும் குஞ்சு பிறக்கிறது. இளவரசனும் இளம் குருவியும் அவர்கள் பெற்றோரைப் போலவே நட்பு பாராட்டி விளையாடி வருகின்றனர். ஒரு சமயம், அவசர புத்தி காரணமாக குருவிக் குஞ்சுவின் கழுத்தை நெரித்து, இளவரசன் கொன்று விடுகிறான். கடும் கோபம் கொண்ட குருவி, இளவரசனின் இரு கண்ணையும் நோண்டி புண்படுத்திவிடுகிறது. முதலில் ராஜா கோபம் கொண்டு வெகுண்டாலும், தவறு இளவரசன் பேரிலும் இருப்பதால் குருவியை மன்னித்து விடுகிறார். குருவி வேறு இடம் பறந்து செல்ல எத்தனிக்கிறது. ராஜாவோ இரு சாராரும் மறந்து, மன்னித்து விடுவொம், அதனால் இங்கேயே தங்கிவிடு என்று கூறுகிறார். அதனை மறுத்து குருவி, "கடும் விரோதம் வளர்ந்த இடத்தில், இருப்பது உசிதம் அல்ல. சில தீங்குகள் எளிதில் மன்னிக்கப்படுவதும் இல்லை. அதன் பாதிப்பு அடங்குவதும் இல்லை. ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்தித்தால் மனக் கசப்பும் வருத்தமும் மேலிடும், அத்தகைய உறவில் சுமூகம் இருப்பதில்லை. எனவே என்னை போகவிடு" என்று சொல்லி பறந்து விட்டது.

விரோதத்தை மன்னித்து விடுவதே உசிதம் என்றாலும் கூட எப்படிப்பட்ட விரோதம் என்பதை ஆராய்ந்து உறவின் பலமோ முறிவோ ஏற்படுகிறது.

aanaa
13th March 2010, 04:09 AM
அனுமனை இறையம்சமாக.

வழமைபோல :ty:

அனுமான் - சிவனின் அவதாரம் என வட இந்தியர்களும் - மகாபாரதமும் கூறுகின்றனவே :roll: :confused2:

Shakthiprabha
15th March 2010, 10:25 AM
[tscii:72ac7e517a]

அனுமனை இறையம்சமாக.

வழமைபோல :ty:

அனுமான் - சிவனின் அவதாரம் என வட இந்தியர்களும் - மகாபாரதமும் கூறுகின்றனவே :roll: :confused2:

ஆமாம் ஆனா, சிவனின் அவதாரமாகவே அஞ்சனைக்கு பிறந்ததாக சொல்லப்படுகிறாது. ( வாயுபுத்ரன் என்று நாம் நம்புவதையும் கூட வேறு அர்த்தம் கொண்டு விளக்குகின்றனர். ) இராவண வதத்திற்கு துணை போக அச்சமயம் இறைவனின் பல அம்சங்களும் மண்ணில் தோன்றியனவாம். ஆதி-சேஷன் இலக்குவனாகவும் சிவன் ஹனுமனாகவும் அவதரித்ததாக கூறிகின்றனர்.

http://www.mypurohith.com/Rituals/Hanuman_Pooja1.asp

Shri Hanumaanji is known to be the incarnation of Lord Shiva. It is believed that when Lord Vishnu took birth, in the form of Ram to vanish, the greatest demon king Ravan, the other Gods also born in monkey and bear races to help him. God Sheshnag and Lord Shiva incarnated as Lakshman and Hanuman respectively.

Vanar-Raj kesari was the father of Shri Hanumanji, and his mother’s name was Anjana alias Anjani. Kesari was a Vanar-king, as such he is called Vanar-Raj. He had no child, hence his wife Anjana, observed self-mortification to have a child, she menaced herself, worshipping Lord Shiva to be booned for a son. Lord Shiva fulfilled her desire and He himself took birth in the form of her son Shri Hanuman. The God of winds, Pawan Dev also blessed Anjana to have a great son unparalleled in strength and wisdom. Hence the son of Anjana is also called Pawan-Putra and Vayu-Putra.

___________

The story of the birth of Hanuman goes thus: Vrihaspati had an attendant called Punjikasthala, who was cursed to assume the form of a female monkey — a curse that could only be nullified if she would give birth to an incarnation of Lord Shiva. Reborn as Anjana, she performed intense austerities to please Shiva, who finally granted her the boon that would cure her of the curse.

When Agni, the god of fire, gave Dasharath, the king of Ayodhya, a bowl of sacred dessert to share among his wives so they may have divine children, an eagle snatched a part of the pudding and dropped it where Anjana was meditating, and Pavana, the god of wind delivered the drop to her outstretched hands. After she took the divine dessert, she gave birth to Hanuman. Thus Lord Shiva incarnated as a monkey, and was born as Hanuman to Anjana, by the blessings of Pavana, who thus became Hanuman's godfather.


http://hinduism.about.com/od/lordhanuman/a/hanuman.htm[/tscii:72ac7e517a]

aanaa
16th March 2010, 04:50 AM
wow SP
:ty: