PDA

View Full Version : pala suvaik kavithaikaL.



Pages : 1 [2]

bis_mala
23rd March 2012, 11:46 AM
இப்பாடலைச் சற்றே அணுக்கமாக ஆராய்வோம்:

ஆடவர் = ஆண்மக்கள் ( வாழுமிடம், )
நாடு ஆகு(ம்) ஒன்றோ = அரசாட்சியும் ஒழுங்கு முறைகளும் உள்ள நாடு என்ற ஓர் இடமானாலும், காடு ஆகு(ம்) ஒன்றோ = அவை யாவுமற்ற காடு எனப்படும் ஓர் இடமானாலும், அவல் ஆகு(ம்) ஒன்றோ = பள்ளத்தாக்கு எனப்படும் தாழ்வு இடமானாலும், மிகை ஆகு(ம்) ஒன்றோ - நிலம் உயர்ந்து நிற்கும் மலைப்பாங்கான இடமானாலும்,
(அவ்வவ்விடங்களில் அவ்வாடவர்கள்,) எவ்வழி நல்லவர் =எந்த முறையில் நல்லவர்கள் என்றாலும், அவ்வழி நல்லை = அம்முறையில் உலகமாகிய நீயும் நல்லதாகவே இருக்கின்றாய், வாழிய நிலனே = உலகமே, நீ வாழ்க! என்றபடி.

bis_mala
2nd April 2012, 12:18 PM
இனி வாயிலான் தேவனார் என்னும் சங்கப் புலவர் பாடிய ஒரு சிறு பாடலை நுகர்வோம்.

மழைவிளை யாடும் குன்றுசேர் சிறுகுடிக்
கறவை கன்று வயிற் படரப் புறவிற்
பாசிலை முல்லை ஆசில் வான்பூச்
செவ்வான் செவ்வி கொண்டன்று
உய்யேன் போல்வல் தோழி யானே,

குறு. 108

இது தலைவி தோழிக்குக் கூறியது பற்றிய பாடல்.

அருஞ்சொற் பொருள்: சிறுகுடி = சிற்றூர்.
கறவை = கன்றையுடைய பசு. கன்றுவயின் = கன்றினிடம். புறவு = முல்லை நிலம். பாசிலை = -பச்சை இலை. ஆசு = குற்றம். ஆசில்-
ஆசு இல்= குற்றமற்ற. வான் பூ = வெண்ணிறப்பூக்கள். செவ்வான் - சிவந்த வானம். கொண்டன்று = அழகு கொண்டது.

யான் உய்யேன் = நான் இனி வாழமாட்டேன். (நான் அவரை நம்பித் தொலைந்தேன் என்பது). போல்வல்= போலும். தோழி யானே என்றபடி.



வருவேன் என்று சொல்லிச் சென்று, வாராது போன தலைவர்களை நினைத்துத் தலைவியர் வடித்த கண்ணீர்ப் பாடல்களில் இதுவும் ஒன்று.

காதல் எண்ணாதார் சாதலைத் தழுவவேண்டாமே...


காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்

இது மகாகவி பாரதியின் வரிகளல்லவா?

பாடல் புரிந்திருக்கும், அதன் அழகு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இதுபற்றி நாம் பின் உரையாடுவோம்.

bis_mala
2nd April 2012, 05:53 PM
மேற்கண்ட பாடலைப் பாடிய புலவர் பற்றி:


இதைப் பாடிய நல்லிசைப் புலவர்தம்
இயற்பெயர் தேவன் என்பதுபோலும். உயர்வுப் பன்மையில் தேவனார் என்றனர். வாயிலான் என்பதென்ன என்பது ஆய்வுக்குரியது. இதனை வாய்+இலான் என்று பிரித்தால் எப்போதும் அதிகம் பேசாமல் அடக்கமாகவே இருந்தவர் என்பதற்காக ஏற்பட்ட பெயரா என்று தெரியவில்லை. ஊமையானவர் என்று பொருள் கொள்ள இயலவில்லை. வாயில்+ஆன் என்று பிரித்து வாயில் காப்போரின் தேவன் அல்லது தலைவர் என்று கொள்வதில் உள்ள தடை என்னவெனின், வாயிலான் என்பது ஒருமை வடிவில் இருப்பதே. இத்துறையில் ஆய்வு மேற்கொள்வோருக்கு இதை விட்டுவிடுவோம்.

bis_mala
2nd April 2012, 06:57 PM
மேற்கண்ட பாடலைப் பாடிய ......

இப்பாடலின் கருத்தினைப் பார்ப்போம்:

குன்றுகளில் மழை வந்து விளையாடத் தொடங்கிவிட்டது. மழை விளையாடும் குன்று என்பது அருமையான சொல்லாட்சி. ஆகவே இது மாரி காலம். தலைவி வாழ்வது இக் குன்று சார்ந்த ஒரு சிற்றூரில் தான். அங்குள்ள கறவைப் பசு(க்கள்) தம் கன்று(களை) நோக்கிச் செல்கின்றன. அவை தம் கன்றுகள்பால் எத்துணை அன்பு உடையவை.இதுபோன்ற அன்பினை தலைவி தலைவனிடம் எதிர்பார்க்க முடியவில்லை. அவன் தலைவியை நாடி வரவில்லையே! முல்லைச் செடிகளில் பச்சைப் பசேலென்று இலைகள். முல்லைப்பூக்களோ, தம் வெண்மையினால் வானத்தின் செம்மையை எதிர்கொள்கின்றன. அழகுக்கு அழகாக அன்றோ இருக்கின்றது! முல்லையைப் போல் வெள்ளை உள்ளத்துடன் காத்திருக்கும் தலைவியை நோக்கி, செவ்வானம் போல் தலைவன் வந்து எதிர் நிற்கவில்லை. அந்த முல்லைக்குக் கொடுத்துவைத்தது தலைவிக்கு இல்லை.

மாரி காலம் வருவதற்குள் வந்துவிடுவேன்! கறவைப் பசுக்கள் கன்றுகட்குப் பாலூட்டுமுன் நான் வந்து உனக்குக் காதல் அமுதூட்டுவேன்! வெண்முல்லை செவ்வானைச் செவ்வி காணுமுன் நான் வந்துவிடுவேன்!....என்றெல்லாம் உறுதிகளை அள்ளி வீசியவன், அப்பருவகாலம் வந்துவிட்டது, அவன் எங்கே? நான் தொலைந்தேன் தோழீ! தொலைந்தேன்... என்று தலைவி........


தலைவியின் உள்ளம் முல்லைபோல் வெண்மை, தலைவனிடம் தான் செவ்வானம்போல் செம்மை இல்லை. செம்மை = நேர்மை.

இப்போது பாடலை இன்னொருமுறை பாடிமகிழுங்கள்.

bis_mala
9th April 2012, 04:34 PM
.............



உங்களுக்கு முத்தொள்ளாயிரத்திலிருந்து இன்னொரு இனிய பாடல், இதோ:

மருப்பு ஊசியாக மறங்கனல்வேல் மன்னர்
உருத்தகு மார்பு ஓலையாக --- திருத்தக்க
வையகம் எல்லாம் எமது என்று எழுதுமே
மொய்யிலைவேல் மாறன் களிறு.

மருப்பு = யானைத்தந்தம். மறம்= வீரம்.
கனல் = ( தீபோலக்) கனல் (வீசும்.)

வேல்மன்னர் - வேலெடுத்துப் போரில் ஈடுபட்ட மன்னர்.

உருத்தகு மார்பு =உருவத்திற்குத் தகுந்த மார்பு, என்றால் விரிந்த மார்பு.

ஓலையாக - எழுத்தைப் பதிவு செய்யும் பொருளாக,

திருத்தக்க -உயர்வு தங்கிய. வையகம் = உலகு.

எல்லாம் எமது = யாவும் எம்முடையது.
மொய்யிலைவேல் =இலை மொய்வேல்: இலைபோன்ற வேலின் குத்தும்பகுதி. கூரிய வேலை யுடைய என்பது.
மாறன் = பாண்டியன். களிறு = யானை.

Will discuss after you have digested the stanza.

bis_mala
11th April 2012, 11:28 AM
உங்களுக்கு முத்தொள்ளாயிரத்திலிருந்து .....................the stanza.


"மருப்பு ........... மாறன் களிறு."

வேல் என்ற ஆயுதத்தை நோக்கினால்,
அதன் கூரிய பகுதியில் ஓர் இலை இருப்பதைப்போன்ற வடிவம் இருக்கும். இதனைத்தான் "இலை மொய்க்கும் வேல்" என்கிறார் புலவர். மொய்த்தல் என்ற சொல் இங்கு பாநயம் சேர்க்கின்றது.

பாண்டிய மன்னனின் யானை, போர்க்களத்தில் என்ன செய்துகொண்டிருந்தது? இந்த உலகமெல்லாம் எங்களுடையது என்று எழுதிக்கொண்டிருந்தது. போரில் ஓர் இடைவேளைபோல் ஏற்பட்டு, பாண்டிய மன்னன் ஓய்ந்திருந்த போதும் அவன்றன் யானை ஓய்ந்திருந்ததா என்றால் அதுதான் இல்லை. யானை தொடர்ந்து போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு , தன் தந்தத்தினால் (/தந்தங்களினால்) எழுதிக்கொண்டு இருந்தது.

எங்கே? பகை மன்னவர்தம் மார்பைக் கீறி அந்த வாக்கியத்தை எழுதிக்கொண்டிருந்தது! அதன் தந்தம்தான் ( /தந்தங்கள்தாம்) அதன் எழுதுகோல்.

இந்தப் பகை மன்னவர்கள்,வீரத்தில் சளைத்தவர்களா என்றால் இல்லை. அவர்களும் வீரக்கனல் வீசும் வேல்களை ஏந்தி வந்தவர்கள்தாம். இத்தகு பெரு வீரர்களுடன் தான் பாண்டியனும் போர்செய்துகொண்டிருந்தான்.

பாண்டியன் கோழை யல்லன். அவன் எதிரிகளும் கோழையர் அல்லர். அந்த யானையும் ஒன்றும் கோழையன்று. எங்கும் வீரக்கனல்.

பகை மன்னரின் வீரம், அவர்கள் வேலின்மேலும் அவர்கள் அகன்ற மார்பின்மேலும் ஏற்றிக் கூறப்படுகிறது; போரில், வெற்றியின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த பாண்டியனைக்கூட, அவ்வளவு வீரக்கனலைப் பெய்து வரணிக்கவில்லை புலவர்.
வீரர்களை வென்றவன் தான் பெருவீரன். இதைப் புலவர் நன்றாக உணர்ந்திருந்தார்.

புலவரின் புலமை யாது என்பதற்கு இவை எல்லாம் சான்றுகள். வெறும் எதுகை மோனைகளைப் பெய்து எழுதுவது, யார்வேண்டுமானாலும் எழுதலாம். அது கவிதையும் ஆகாது. அதை எழுதியவரும் நல்லிசைப் புலவர் ஆகிவிடமாட்டார்.

bis_mala
19th April 2012, 08:14 AM
கன்னிக் காவலும் கடியிற் காவலும்
தன்னுறு கணவன் சாவுறின் காவலும்
நிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணாது
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா
பெண்டிர்தம் குடியிற் பிறந்தாள் அல்லள்

உதயகுமாரன் அம்பலம் புக்க காதை ௯அ - ௰2
மணிமேகலை.

கன்னிக் காவலும் கடியிற் காவலும் - கன்னியாய், அதாவது திருமணத்தின் முன் பெண்டிருக்குப் பெற்றோரும் மற்றோரும் அளிக்கும் பாதுகாவலும், அதற்கடுத்துத் திருமணம் நிகழ்ந்தபின் அவர்கட்குக் கணவன்மாரும் அவர்கள் நலம் கருதிய ஏனையோரும் அளிக்கும் பாதுகாவலும்;

தன்னுறு கணவன் சாவுறின் காவலும் - கணவன் இறந்து கைம்பெண்ணான பின் உறவினரும் ஏனையோருமளிக்கும் காவலும்;


நிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணாது - கற்பு நெறி வழாமல் காத்துக்கொண்டு அடுத்தவர்கள் குறையேதும் காணாத படிக்கு, (1)

கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா - கணவன் இருந்தாலும் இறந்துவிட்டாலும் அவனையன்றித் தெய்வத்தையும் தொழாமல்;

இவ்வரிகளையும் இனிவரும் சிலவற்றையும் தொடர்ந்து காண்போம்.

will edit later

Note: (1) பிறர் பிறர்க் காணாது - பிறர் கைம்பெண்ணைக் காணாத படி என்றும் உரைப்பர்.

bis_mala
19th April 2012, 12:49 PM
Refer to previous post and continue:

மணிமேகலை புத்தமதக் காப்பியம் என்பர். எனினும்
தெய்வம் தொழாமல் கணவனைத் தொழுக என்று புத்த மத நூல்கள் கூறியதாகத் தெரியவில்லை.(1) இது எங்ஙனமாயினும், கணவனைப் போற்றுவது தமிழர் கொள்கை, இன்னும் சொல்வதாயின் இந்துமத நெறியென்று பின்னர் பெயர் குறிப்பித்த நம் நெறியினர் போற்றிய கொள்கை என்பதே சரியானது என்று கூறலாம். மணிமேகலை பாடிய சாத்தனாருக்கு இது மிகவும் பிடித்த கொள்கை ஆதலின், இதனையே கூறிய வள்ளுவ நாயனாரையும் சாத்தனார் பிறிதோரிடத்துப் "பொய்யில்(லாத) புலவன்" என்று பாராட்டியமையும் ஈண்டு நினைவில் நிறுத்தற் குரியதாம்.

நாடகத் தொழிலுடையார் தனியொரு வகுப்பினராய் முற்காலம் தொட்டு இன்றுகாறு மிருத்தலை அறியலாம். அதற்கு இலக்கியச் சான்றுகள் மிகப்பல. இவ்வரிகளும் அதையே காட்டுவதுடன், கற்பு நெறியிலும் மணவாழ்வு மேற்கொள்ளுதலிலும் கைம்பெண்மைநெறியிலும் அவர்கள் நெகிழ்வுடையார் என்று குமுகாயம் கருதியதையும் மணிமேகலை படம்பிடித்து முன்வைக்கின்றது.

கற்புநெறி தவறாது போற்றிய வகுப்பினரிடைத் தோன்றிய கண்ணகிக்கு, அந்நெறியின்கண்ணே நிற்றல் எளிதாம்; அங்ஙனம் போற்றாதாரிடைத் தோன்றிய மணிமேகலைக்கு அது கடினமன்றோ! செயற்கரிய செய்வார் பெரியர் என்றபடி, மணிமேகலை கற்பென்னும் வெற்பேறி நின்றதைப் போற்றிடவே ஆசிரியர் சாத்தனார் இங்ஙனம்
பாடிச் சென்றுள்ளார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாம் என்பது.

Note: (1) If you have evidence in Buddhist literature on this point, please post the references here. I think this is Tamil and Hindu culture based. I have not found anything to the contrary in my reading and studies.

bis_mala
20th July 2012, 08:07 AM
சங்கப் புலவர் கொல்லன் அழிசியார் " பனிப்புதல்"

பனிப்புதல் இவர்ந்த பைங்கொடி அவரைத்
கிளிவா யொப்பின் ஒளிவிடு பன்மலர்
வெருக்குப்பல் உருவின் முல்லையொடு கஞல,
வாடை வந்ததன் தலையும் நோய் பொரக்
கண்டிசின் வாழி தோழி தெண்டிரைக்
கடலாழ் கலத்திற் றோன்றி
மாலை மறையுமவர் மணிநெடுங் குன்றே.

கொல்லன் அழிசியார், குறுந்தொகை 240.

இவ்வழகிய பாடற்பொருளை இனி நோக்குவோம்.



அருஞ்சொற்பொருள்

புதல் - புதர். பனிப்புதல்: பனிப்பொழிவின் காரணமாக மிகக் குளிர்ந்துவிட்ட புதர் இவர்ந்த = பற்றி ஏறிய. பைங்கொடி அவரை = பசுமையான அவரைக் கொடி. கிளிவாய் ஒப்பின் = கிளியின் அலகினை ஒத்த.
ஒளிவிடு பன்மலர் = ஒளிவிடுகின்ற பல மலர்கள்.
வெருக்குப்பல் = காட்டுப் பூனையின் பல். உருவின் = உருவத்தை ஒத்த. முல்லை - முல்லைமலர். கஞல = செறிய. வாடை = வடக்குத் திசையினின்றும் வீசும் குளிர்காற்று. பொர = வருத்த. தெண்டிரை = தெண் - திரை, தெளிந்த அலைகள்,
கடல் ஆழ் - கடலில் மூழ்கும்.

தெள் - தெளி - தெளிவு.

தெள் - தெள்ளு, தெள்ளுதமிழ்.
தெள் - தெள்ளத் தெளிந்த (மரபுத் தொடர்.)


தெள்+மை = தெண்மை.= தெளிவு.
தெண்மை+ திரை= தெண் திரை = தெண்டிரை.

தொடரும்

bis_mala
21st July 2012, 07:00 PM
சங்கப் புலவர் கொல்லன் அழிசியார் " பனிப்புதல்"

.................................................. ................
இவ்வழகிய பாடற்பொருளை இனி நோக்குவோம்.

[B]

இனிப் பாடலின் முழுப்பொருளையும் காண்போம்.


குளிர்ந்த புதரில் பற்றி ஏறியுயர்ந்த அவரைப் பசுங்கொடி கிளியலகினை ஒத்த ஒளிவீசுகின்ற பல மலர்களைத் தாங்கி நிற்கிறது. வடக்கிலிருந்து வாடைக் காற்று (குளிர்காற்று) வீச, காட்டுப் பூனையின் பல்போன்ற முல்லை மலர்கள் அவரைப் பூக்களுடன் சென்று செறிகின்றன. இயற்கையில் இவை இங்ஙனம் கலந்துறவாடவே, எதிர் தோன்றும் மலையில் வாழும் காதலன் அருகில் இல்லாமையால், தலைவியைப் பிரிவுத்துயர் வருத்துகிறது. போகட்டும், அவருடைய அழகிய ஒளிசெய்யும் சிறு மலையையாவது பார்த்துக்கொண்டே துயரை ஆற்றிக்கொண்டு இருந்துவிடலாம் என்றால் மாலை வந்துவிட்டது. கடலில் கலம் மூழ்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆடி ஆடி உள்ளிறங்கி மூழ்குதல் போல, மலையும் இருள் கூடக்கூட மறைந்துவிடும்.

தோழி, அவர் வாழ்க,நீயும் யாவரும் வாழ்க! இனி நான் எதைப் பார்த்து ஆற்றுவேன்? காதலெனும் நோயுடன் அன்றோ நான் போராடிக்கொண்டிருக்கிறேன்.....


more detailed expln at http://sivamaalaa.blogspot.com/

bis_mala
30th August 2012, 08:57 AM
பாரதியாரின் கவிதை பற்றி எடுத்தியம்ப தனித் திரிகள் இங்கு உண்டு. ஆனாலும் பலசுவைக் கவிதைகளையும் நாம் நுகர்ந்து வருவதனால், அவருடைய கவிதை ஒன்றிரண்டை அவ்வப்போது தொட்டிணைத்துக்கொள்வதில் தவறொன்றும் இல்லையென்றே கருதுகின்றேன்.

நாம் இன்று படித்தின்புறும் அவர் வரிகள் இவை:

நீலத் திரைக்கடல் ஓரத்திலே -- நின்று
நித்தம் தவம்செய்த குமரிஎல்லை -- வட
மாலவன் குன்றம் இவற்றிடையே -- புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு.

இந்த வரிகளுக்கு நகைச்சுவை அரசு என்று பெரும்புகழ் வாய்ந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் வரைந்திருந்த சில விளக்க வரிகள்,இலக்கிய நோட்டம் என்னும் தகுதிக்கு நன்கு ஏற்புடையன என்னலாம்.

அவ்வரிகள் இவை:

தொடரும்.

bis_mala
30th August 2012, 06:36 PM
continued from the last post:

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நாம் யோகசாலிகள்தான். தமிழென்றாலே இனிமை என்பது பொருள். தமிழில் சில வார்த்தைகளுக்கு இரும்பைக் காந்தம் இழுக்கும் தன்மைபோன்ற சக்தியுண்டு. இது கற்பனையல்ல. கடைந்தெடுத்த அனுபவ உண்மை.

"மண்டி" என்ற சாதாரண வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வார்த்தையில் விசேஷமாக ஒரு சக்தியோ கவர்ச்சியோ இருப்பதாகத் தோன்ற வில்லை அல்லவா? சிறந்த கலைஞர்கள் இவ்வார்த்தையைக் கையாண்டு எத்தனை ஆச்சர்யகரமான அற்புத சக்தியை ஏற்படுத்தி விடுகிறார்களென்பதைப் பாருங்கள்.

பாரதியார் பாடலொன்றில் ("புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு" ) புகழ் மண்டிக் கிடக்கிறதாம். புகழானது கொழித்து, கொப்பளித்து, உறைந்து, ஊறித் ததும்பி எங்கும் பரந்து நிரம்பிக் கிடக்கிறதாம். இந்த ஒரு வார்த்தை கவிதையில் ஜீவகளையைப் படம்பிடித்துப் படிப்போர் கருத்தைப் பரவசமாக்குகிரது. இன்னும் பல உதாரணங்கள் காட்டலாம்.

என். எஸ். கிருஷ்ணன். கட்டுரை. ஜூன் 1952,

bis_mala
2nd November 2012, 06:47 PM
தொல்காப்பியம் என்பது ஓர் இலக்கண நூல். உண்மையில் அது இலக்கியம் அன்று. எனினும் அதில் கூறப்பட்ட பெரும்பாலானவை இன்று நடைமுறையில் இல்லை. நன்கு படித்தவர் பேச்சிலும் எழுத்திலும் கூட இல்லை. ஆகவே அங்குக் கூறப்பட்டவை பலவும் வரலாற்று அறிவுக்கு ஊட்டம் தருவது, இலக்கியச் சுவை நல்குவது என்று வைத்துக்கொள்ளவேண்டும். அதைப் படித்தால் நம் தமிழறிவு மேம்படும் என்றும் சொல்லலாம்.

இப்போது நாம் ஒரு தொல்காப்பிய நூற்பாவைப் படித்து இன்புறுவோம். அதற்குமுன், ஒரு சில சிறு கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

"என்று சொன்னார்கள் படித்தவர்கள்" என்று எழுதாமல். "என்மனார் புலவர்" என்று எழுதினால், அவர் எந்தப் புலவர் என்றுதான் உங்களுக்குக் கேட்கத் தோன்றும். என்மன் + ஆர் என்பது, என்னும்+அன்+ஆர் என்பதன் சுருக்கமென்பது ஆய்வுக்குரியது. இக்காலத்தில் "என்பார் புலவர்", "என்ப (புலவர்)," என்று எழுத அமையும்,

தொல்காப்பியனாருக்குப் பிடித்த நடை: " என்மனார் புலவர்" என்பதுதான். மன் என்று ஓர் இடைச்சொல்லும் இருக்கிறதென்பர்.

அது இசை நிறைவுக்காக என்+மன்+ ஆர் என்று நீட்டம் பெறுகிறது, "என்ப புலவர்" என்றால் நூற்பா ஓசை குன்றுவது தெரிகிறது. இப்போது இதை நான் ஆராயவில்லை.

நீங்கள் இங்கு புகுந்து ஆய்வு செய்யலாம்.
You may compare these and others you come across in your own readings:

என்+உம்+அன்+ஆர்= # என்னும்+அன்+ஆர் = என்+ம்+அன்+ஆர் = என்மனார்.

என்+உம்+ஆர் (இதில் அன் இல்லை)= என்+உ+ஆர் = என்னுவார்> என்(னு)வார் > என்பார். வ- ப திரிபு.

அல்லது ப தான் முந்தி, வ பேச்சுத் திரிபு என்று வாத்தியார்கள் வாதிடலாம்.
வேறு விளக்கங்களும் உண்டாயினும், பின் காண்போம்.

பாடலைக் காண்போமா?

அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் எனோர் பக்கமும்
.................................................. ..........................
அனைநிலை வகையோடு ஆங்கெழு வகையில்
தொகை நிலை பெற்றது என்மனார் புலவர் "
(தொல். புறத்திணையியல், 75)

என்ற வரிகளைப் பற்றிப் பேசுவோம்.


இப்பாவின் மூலம் நமக்குத் தெரியவருவது என்னவென்றால், பார்ப்பன மக்கள் அறுவகைப் பட்டு நின்றது, மரபுவழியாக வந்தது அன்று என்பதுதான். அரசருக்கும் ஏனோருக்கும் மரபு கூறப்படுகிறது. பார்ப்பன மக்கட்கு அது புது நிலையாகும்.

நச்சினார்க்கினியர் கருத்துப்படி இந்த நூற்பா துறைப்படுத்திக் கூறமுடியாத பரப்பு உடைய செய்கை(கள்) பலவற்றைத் தொகுத்து ஒவ்வொன்றாகக் குறித்து மொத்தம் ஏழுவகையாக்கிக் கூறுவதனால் ஒரு சிறப்பிலக்கணத்தை வாகைத் திணைக்குப் பொதுவகையால் கூறுகின்றது. இவற்றுள் மூன்று மட்டும் மேலே எடுத்துக்காட்டினேன்.


அறுவகைச் செய்கைகள் ஆவன, ஏற்றல், ஈதல், ஓதல், வேட்டல், ஓதுவித்தல் வேட்பித்தல் என்பன. இவை பார்ப்புச் செயல்கள்.

ஓதுதலுக்கு நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டுவது; கல்விபயில்தல் பற்றிய நாலடியார் பாடலொன்றை. நாலடி. 14:2. கல்விபோல் சிறந்தது யாதுமில்லை என்பது இப்பாடலின் கருத்தாக இருப்பதால், இஃது யாவர்க்கும் உரியது என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார். இந்த ஓதல் செய்கையில், பார்ப்பனருக்கோ அரசருக்கோ சிறப்பாகக் கூறத்தக்கது ஒன்றுமில்லை.

தொடர்வோம்.

Note

என்மனார் புலவர் என்பதை வாக்கியமாக விரித்து எழுதினால்:

என் உம் அன் ஆர் புலவர் = என்னும் அன்னார் புலவர் = என்று சொல்லும் அவர்கள் புலவர்கள்.

இதைச்சுருக்கினால்:

என்னும் அன்னார் புலவர் = என்னுமன்னார் புலவர் = என்(னு)ம(ன்)னார் புலவர் = என்மனார் புலவர் என்று அழகாகச் சுருங்கிவிடுகிறதே.....இங்கு (னு) (ன்) முதலியவை மறைந்தால் போதுமல்லவா?

இப்படிப் பலவாறு எழுதி விளையாடி மகிழுங்கள்.

vAkai or vAkaith thiNai in ancient poems: theme of a conqueror wearing a chaplet of sirissa flowers and celebrating his victory over royal enemies; or a. theme in which the members of any group of persons exalt their characteristic attainments; also good behaviour.

பக்கம் - கூறு, மக்கள் தொகுதி, பகுதி. ( பகு+அம் = பக்கம் ). This need not necessarily refer to any physical segregation of people. These are divisions conceptualised based on activities, useful in writing poems.

bis_mala
3rd November 2012, 11:52 AM
தொல்காப்பியம் என்பது ஓர் இலக்கண நூல்................
மேல் இடுகையின் தொடர்ச்சி:

பக்கம் என்பதற்குப் பொருள்


அறுவகைப் பட்ட பார்ப்பியற் கூறும் என்று பாடாமல், பார்ப்பனப் பக்கமும் என்று ஆசிரியர் தொல்காப்பியனார் பாடுவதால், இது சற்று பொருள் விரிவு உடையதாகி, பார்ப்பனர் அவரல்லாதாரின் பெண்களை மணந்து பிறந்த பிள்ளைகளையும் உள்ளடக்கும் என்பது நச்சினார்க்கினியர் கருத்து. பார்ப்பனரும் அவர்கள்தம் பக்கத்திலிருக்கும் அவர்கள் கலப்புடையவரும் என்று உரையாசிரியர் பொருள் கொள்கிறார். நச்சினார்க்கினியர் காலத்தில் புலவோர் இங்ஙனம் பொருள்கொண்டனர் போலும். இக்கலப்புப் பிறப்பினரும் பார்ப்பு போலவே அவர்களுக்குரிய செய்கைகள் சிலவற்றை தம் தொழிலில் மேற்கொண்டுவந்தனராம்.இருப்பினும் முழுப்பார்ப்புகள் போல் இவ்வரைப் பார்ப்புகள் செயல்பட இயலவில்லை என்று தெரிகிறது. அரைப்பார்ப்புகளுக்கும் நூலும் சிகையும் உண்டென்பர். பின் (after some decades or centuries ) அவர்கள் பார்ப்பியலுள் முழுமையாய்ப் புகுந்திருப்பர்.

அதாவது ஒரு புலவர் ஒரு கலப்புப் பார்ப்பனனைப் புகழ்ந்து பாடினாலும் அது பார்ப்பன வாகையின்பாற் படுவதே என்பது பொருளிலக்கணம்.பாடலுக்குத் திணை துறை காண்பது எப்படி என்ற கேள்விக்கு இங்கு பதில் உள்ளது. சாதிப்பாகுபாடுகள் செய்து விதி இயற்றுவது இதன் நோக்கமன்று.

மேலும் புலவர் பிறர் இங்ஙனம் கூறினர் என்று , தொல்காப்பியனார் நழுவிக்கொள்கிறார். என்மனார் புலவர் என்றால் அதுதான் பொருள்.

தொடரும்.

Note: Tolkappiyam itself might have been amended for application to new social conditions by succeeding generations of teachers for their students. There was no control copy and few possessed anything in writing at the time of teaching and learning. That is why, it is right to say that the term vaaththiyaar came from vaay (mouth). The student learnt by heart what the teacher was reciting. This interpretation of relevant Tolkappiyam stanza here is "as it is".

bis_mala
3rd November 2012, 03:52 PM
மேல் இடுகையின் தொடர்ச்சி:

பக்கம் என்பதற்குப் பொருள் ( தொடர்ச்சி: )

பக்கம் என்ற சொல்லையே அரசர்க்கும் பயன்படுத்தியுள்ளார் தொல்காப்பியனார். பார்ப்பனர்க்குப் போலவே, அரசர் தம் நிலையில் இல்லாத பிறர்வீட்டிற் பெண்கொண்டு அதன் பயனாய்த் தோன்றிய பிள்ளைகட்கும் அரச குலத்தினர் போல் சில செய்கைகள் / நடவடிக்கைகள் ஒப்புடையனவாய் இருக்கும். இப்பிள்ளைகள் புகழ் எய்தியவிடத்து அவர்கள் மேலெழுந்தபாட்டும் அரசவாகையின் பாற்படுவதே ஆகும். பக்கம் என்ற சொல் இதையே குறிப்பதாம்.

இருமூன்று மரபின் ஏனையோர் அனைவருக்கும். பக்கம் என்றசொல்லே வருதலால் இங்ஙனமே அவர்க்கு அன்னியர் ஆவாரையும் ஆங்கு உள்ளடக்க வேண்டும். அவர்களில் எவரையும் புகழ்ந்து புலவர் இயற்றிய பாட்டும் வாகைத்திணையுள் அடங்கும் என்றவாறு. Nothing is said by the commentators about marriage between these castes and their children.

அனை நிலை = அனைய நிலை. அந்நிலை, அத்தகைய நிலை. இது சுட்டு.
This chUththiram in Tolkappiyam seems quite messy. It probably was a later update with insertions.


will edit later as necessary, There is some bug here and it keeps saying I am not logged in. edit difficult,

bis_mala
4th November 2012, 12:04 PM
............

மேலிடுகையின் தொடர்ச்சி.

இதில் அறுவகைப்பட்ட என்ற தொடருக்கு யாது பொருள்? ஒவ்வொரு பார்ப்பனனும் தம் பொருளீட்டும் தொழிலில் ஆறுவகையான செய்கைகளில் அல்லது சொல்லப்பட்ட ஆறில் ஒன்றிலிருந்து ஆறுவரையிலுமான எண்ணிக்கையுள்ள செய்கைகளில் ஒன்றிலோ அதனின் மேற்பட்டவற்றிலோ ஈடுபட்டிருந்தான் என்று பொருள். மடைப்பள்ளியில் வேலை செய்வோன் இவற்றுள் எதைச் செய்தான் என்று கேட்கக் கூடாது. ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் தட்சிணை பெற்றான் என்றால்,"ஏற்றல்" எனும் செய்கையைப் புரிந்தான் என்று வைத்துக்கொள்ளவேண்டியதுதான். (1/6),

அரசன் நீங்கலான ஏனையோருக்கும் பார்ப்பனனைப்போல் ஆறு செய்கைகளே சொல்லப்பட்டன.
ஆனால் ஏனையோர் மரபுவழியில் ஆறு செய்கைகள் செய்துவந்தனர். ஆகவே பார்ப்பனருக்கு ஒரு நூற்பாவை ஒதுக்கிவிட்டு, அரசர் -பிறருக்கெல்லாம் இன்னொரு நூற்பாவைப் போட்டிருக்கலாம்.தொல்காப்பியம், ஏன் எல்லாவற்றையும் ஒன்றாக்கியது என்று தெரியவில்லை.

நிற்க இவர்களில் யார் செயற்கரிய செய்து வெற்றி பெற்றாலும் வாகைத்திணை தான். ஆறு செய்கைகள் புரிவார் ஆயினும் ஐந்து புரிவாராயினும் அதேதான். வாகையென்பது அவன் பொருளீட்டுத் தொழில் யாது என்பதைப் பொறுத்ததில்லை. பின் ஏன் ஆறு செய்கையுடையார், ஐந்து செய்கையுடையார் என்றெல்லாம் விதந்து ஓதவேண்டும் நம் தொல்காப்பியர் என்பதும் இதில் எழும் கேள்வியாகும்.

மேலும், ஒருவன் தன் தொழிலில் செய்வது, மரபுவழிப் பட்டதாயிருந்தால் என்ன, அல்லாததாய் இருந்தால் என்ன என்பதும் அடுத்த கேள்வியாகும்! எப்படியாயினும் வாகை தானே?

வரலாற்றை நாம் உணரவேண்டும் என்பதற்காகவே தொல்காப்பியர் வேண்டாத விடயங்களையெல்லாம் நூற்பாவில் புகுத்தி நமக்கு உதவி செய்திருக்கிறார் என்கிறீர்களா?

அரசனுக்கு மட்டும்தான் வாகை! பிறருக்கு இல்லையென்று கலகங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த நாட்களிலே நம் தொல்காப்பியர் தம் நூலை இயற்றினாரோ? நிலைமையைச் சரிக்கட்ட இப்படி ஒரு சூத்திரம் எழுதவேன்டியதாயிற்றோ?

உங்கள் கருத்துக்களையும் இவண் பதியலாமே!

If any typos, will correct when I have the time. Pl self rectify and read until then.

bis_mala
4th November 2012, 01:59 PM
மேலிடுகையின் தொடர்ச்சி.

நிற்க. ஏன் தொல்காப்பியனார் அந்தணர் என்னாது " பார்ப்பன" என்ற சொல்லைப் பெய்து பாடியுள்ளார் (அவர் பாடியது என்று வைத்துக்கொள்வோம் ) என்றும் கேட்கவேண்டும்

யாரைப் போய்க் கேட்பது? அந்தணர் என்று போட்டிருந்தால், " அறுவகைப் பட்ட அந்தணர் பக்கமும்" என்று முதலிலும் மூன்றாவதிலும் அகரமே வந்து மோனையழகு மோர்குழம்புபோல் சுவை மிக்கு நின்றிருக்கும். இதைத் தொல்காப்பியம் செய்யவில்லை யாதலால், பார்ப்பனர் என்பதும் அந்தணர் என்பதும் நுட்ப வேறுபாடு உடைய சொற்கள் என்று தெரிகிறது. ஆனால் பதிற்றுப் பத்தில் : "ஆறுபுரிந்தொழுகும் அறம்புரி அந்தணர்" என்று வந்துள்ளது. ஆகவே குறிப்பிட்ட தொல்காப்பிய நூற்பா எழுந்த காலத்தில் இரு சொற்களும் சற்று வேறுபட்ட பொருள் உடையனவாய் இருந்தனவாதல் தெளிவு. அந்தணர் என்போர் அறவோர் (தட்சிணை கேட்காதவர்கள் என்க.) ஒன்றுக்குத் தக்க இணை எதிர்பார்ப்பவர்கள் - தக்க இணை - தக்கிணை - தட்சிணை - அதைத் தொழிலாய் மேற்கொண்டோர். பிற்காலத்து இவ்வேறுபாடு ஒழிந்துவிட்டதெனலாம். பொருளிலக்கணத்தில் "அந்தணர் வாகை" என்று வழங்கப்படவில்லை தொல்காப்பியக் காலத்தில்.


heavy rains, internet too slow, any fault will edit later! Just enjoy whatever has come through to you,

bis_mala
15th February 2013, 05:00 PM
பல சுவைக் கவிதைகளில் வெகுகாலமாக ஏதும் எழுதவில்லை. இத்திரியை மீட்டெழுப்பும் முகத்தான் ஒரு கவிதையை இப்போது கண்டு இன்புறுவோம்.

அந்தக் கவிதை:

"என்னைச்
சுற்றிப் பறந்த வண்டே சும்மா நீ போகாதே
புத்தம்புது மலரின் தேனைச்
சுவைத்துப் போவாயே!

இன்பக் கனவை ஏனோ கலைக்கிறாய்
அன்புக் கயிறிதுதான் அறுக்க
ஆரா;லும் ஆகாதையா!"

இவை பாரதிதாசனின் வரிகள் என்று தெரிகிறது.

இதில் ஒரு பொருள்முரண் அழகைக் கவிஞர் புகுத்தியுள்ளார், முதல் வரியில் "தேனைச் சுவைத்துவிட்டுப் போய்விடு" என்று வண்டைப் பார்த்து மலர் (பெண்) சொல்கின்றது.நான் புத்தம்புது மலர் என்றுவேறு மலர் பேசிற்று.

அடுத்த வரியில், நீ எங்கும் போய்விட முடியாது, என்பால் ஓர் அன்புக் கயிறு உன்னைப் பிணித்துவிட்டது, தேனைச் சுவைத்தபின் போய்ப்பாரேன் என்கிறது,மலர், மிகுந்த மனத்திடத்துடன். அன்புக் கயிற்றால் ஏற்பட்ட தைரியமே அது.

வெளியிலுள்ள யாரும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது என்ற திடமும் பூவிடம் இருக்கிறது.

சுவைத்துவிட்டுப் போவாய், ஆனால் நீ போவதெங்கே, நான் தான் உன்னைக் கட்டிப்போட்டுவிட்டேனே என்பதே இதிலுள்ளமுரணழகு.

திருமணத்தில் கட்டப்பெறுவது தாலிக்கயிறு.பூ இங்கு வண்டுக்குக் கட்டுவது அன்புக்கயிறு.

மணமகன் தாலிக்கயிற்றைக் கட்டினால், மணமகள் அன்புக்கயிற்றை அவனுக்குக் கட்டுகிறாள்.

bis_mala
29th July 2013, 11:03 PM
கம்ப நாடனின் இராமாயணம் பாடப்பெறு முன்னரே தமிழர் இராம சரிதையை நன்கறிந்திருந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.தமிழில் இராமாயணங்களும் இருந்தன என்று தெரிகிறது. அந்த முழு நூல்களும் கிடைக்காவிடினும், சில செய்யுள்கள் உரையாசிரியர்களால் மேற்கோள்களாகக் கிடைத்துள்ளன. அப்படிக் கிட்டியவற்றுள் ஒரு செய்யுளை இப்போது காண்போம்.


“மேலது வானத்து மூவா நகரும்
கீழது நாகர் நாடும் புடையன
திசைகாப் பாளர் தேயக் குறும்பும்
கொள்ளை சாற்றிக் கவர்ந்துமுன் தந்த
பல்வேறு விழுநிதி எல்லாம் அவ்வழிக்
கண்நுதல் வானவன் காதலின் இருந்த
குன்(று)ஏந்து தடக்கை அனைத்தும் தொழிலுறத்
தோலாத் துப்பின் தாள்நிழல் வாழ்க்கை
வலம்படு மள்ளர்க்கு வீசி வகுத்தனன்
மாலை வெண்குடை அரக்கர் கோவே.

இங்கு அரக்கர் கோ என்றது இராவணனை. தோல்வியறியாத போர்த் திறனுடைய அவனது அடி நிழலில் தங்கள் வாழ்க்கையை அமைத்துகொண்ட போர்மறவரோ பலராவர். தான் வென்ற விழு நிதியம் பலவற்றையும் அவன்
அவர்கட்குப் பகிர்ந்து அளித்தான். அரக்கர் கோவாயினும் இரக்க குணம் படைத்தவனே அவன்.

கம்பரில்போல் விருத்தச் செய்யுளாய் இல்லாமல் இஃது ஆசிரியத்தால் பாடப்பட்டுள்ளது. கம்பர்காலத்தில் ஆசிரியம் அருகிவிட்டதென்பர்.

bis_mala
31st July 2013, 09:47 PM
continued

மேலது வானத்து மூவா நகரும்
கீழது நாகர் நாடும் புடையன

என்ற வரிகளை வாசித்துணர்வோம். மேலது வானத்து என்பதை வானத்து மேலது என்று மாற்றிக்கொள்ளவேண்டும். மூவா என்றால் மூப்பு அல்லது பழமை அக்டையாத, என்றும் பொருள் கூறலாம். புதுப்பிக்கப் படாத எந்த நகரும் பழமை அடைதல் இயற்கை. இங்கு தெய்வ நகர்பற்றிக் கூறுவதால், "இது காலத்தால் மாற்றமே அடையாத" என்று கொள்ளலாம்.

மூ என்பது மூன்று என்ற எண்னையும் குறிக்கலாம். எனவே, மூவாம் = மூன்றாகும் என்று கொள்வதிலும் தவறில்லை. மூ ஆகும் = மூவாகும் = மூவாம் = மூவா என்று வரக்காணலாம். மூன்று நகர்களில், ஒன்று பூமியிலும், மற்றொன்று வானிலும் இன்னொன்று இறைவனுடைய இருப்பிடத்திலும் இருப்பதாகக் கூறுவர். இம்மூன்றும் வானத்து நகரங்களே ( aerial cities) என்று புலவர் கருதியிருக்கலாம்.
தொடரும்.

Notes


மூன்று நகரங்கள் பற்றிய தொன்மக் கதை எக்காலத்தது, இப்பாடல் எக்காலத்தது என்று தெரிந்தாலன்றி, இவ்வரியின் பொருளை இடரின்றி உரைத்தலியலாது.

மூவா - மூப்படைதல் இல்லாத என்று முடித்தல் எளிது.

மூ ஆ நகர் என்று பிரித்து, "ஆ நகர்" வினைத்தொகை என்று கொள்ளலும் ஒன்று.

bis_mala
3rd August 2013, 12:47 PM
continued

"கீழது நாகர் நாடும் புடையன" என்ற வரியைப் படித்தறிவோம்.

கீழது என்றது, இங்கு மேலது என்பதற்கு முரணாக வந்து அழகு தருகிறது. சரி, மேலது வானமென்றால், கீழது யாது? பாதாளமோ? இல்லை! இராவணன் ஆண்ட இடத்துக்குப் பக்கத்தில் நாக நாடு இருந்தது என்பது கருத்து. கீழது = வானத்தின் கீழ் அருகில் என்று பொருள் படும். புடை = பக்கம் என்று கூறுக. இங்கு "புடையன" என்று தொளிவுறப் பன்மையில் கூறியதால், வானத்து மூவா நகரும் கீழிலங்கிய நாகர் நாடும் பக்கமிருந்தன என்று பொருள்.

தொடரும்.

bis_mala
3rd August 2013, 02:20 PM
continued.....

இனி, வேறொரு விதமாகவும் சொல்வதற்கு இடமிருக்கிறது? அது என்ன? மேல் என்பது மேற்றிசை அல்லது மேற்குத் திசையையும் குறிக்கலாம். வானவர் என்று தமிழர்களால் கருதப்பட்ட சிற(வ)ந்த நிறமுடைய மக்களின் (அல்லது தேவர்களின்) நகரமும் பக்கம்தான் என்பதுதான் அது. எனினும் அது நகரம் மட்டுமே! பாடலாசிரியர் அதை நாடு என்று சொல்லவில்லை. நாடில்லாத நகரம். ம்! சிங்கப்பூர் மாதிரி. ஆசிரியர் சொல்லாததை யெல்லாம் இல்லாதது என்று எடுத்துக்கொள்வதிலும் இடர் ஏற்படலாம். சரி, நாகருடையது நாடு; நகரமன்று. சற்று விரிந்து பரந்தது, -- நகரத்துடன் ஒப்பிடும்போது.

அதேபோல், நாகர் கீழை நாட்டவர் என்பதும் பெறப்படும்.யார் அவர்கள்? நாகர் என்ற பெயர்தான் பின் நாயர் என்று திரிந்துவிட்டது என்பது ஓர் ஆராய்ச்சிக் கருத்து. நாகங்களை வணங்கியதனால் அப்பெயர் எய்தினர் என்றனர். அதுவன்று! நயத்தல் என்பதன் அடியாகப் பிறந்த சொல்லே நாயரென்பது, நாகர் என்பது வேறு என்கிறது இன்னோர் ஆய்வு. நய+அர் = நாயர். முதனிலை நீண்டதென்பர். நாயக் என்ற சங்கத வடிவமும் வந்து குழம்புகிறது ! நாகரென்பார் மஞ்சள் நிறத்தவர், மங்கோலிய வழியினர் என்பதும் கூறுவதுண்டு. இராவணாதிகளைத்தாம் கேட்டறியவேண்டும். இப்போதுதான் நாகாலாந்து இருக்கின்றதே.... அங்குபோய்ப் பார்த்தால்..! அந்த நாகர்தாம் இந்த நாகரோ? ஆய்வு செய்யுங்கள்.

ஆக நாம் பாடலில் அறியவேண்டியது, நாக நாடு இராவண தேயத்திற்குப் பக்கத்தில் என்பதுதான். எனவே மேலது கீழது என்பன மேற்றிசை கீழ்த்திசை (West and East ) குறித்தனவாகவுமிருக்கலாம்.

to be continued...

bis_mala
4th August 2013, 04:55 PM
continued.....

திசைகாப் பாளர் தேயக் குறும்பும்
கொள்ளை சாற்றிக் கவர்ந்துமுன் தந்த
பல்வேறு விழுநிதி எல்லாம்



எத்திசைக்குத் திரும்பினாலும் அத்திசையில் ஆங்கிருக்கும் செல்வங்களையும் காப்பதற்குரிய பிறவற்றையும் காத்து நிற்போரைத் திசைகாப்பாளர் என்று பாடலாசிரியர் குறிக்கின்றார். அவ்விடங்களை வெற்றிகொள்ள நினைப்போன் யாராயினும் இத் திசை காப்பாளரை அழிக்கவேண்டும். இல்லையேல் அவண் உள்ள செல்வங்களை எப்படி எடுத்துக்கொள்வது?

இதைப் புலவர் "திசைகாப்பாளர் குறும்பும் தேய" என்ற சொற்களால் தெரிவிக்கின்றார். திசைகாப்பாளர் தேய, அவர்களின் குறும்பும் (வல்லமையும்) தேய என்று விரித்துக்கொள்ளவும்.

கொள்ளை சாற்றி - போர் முரசறைந்து. கொள்ளை என்பதால் இது வெற்றிபெற்ற போர் என்பதாம். வெற்றி பெற்றாலே பகையரசர் நிதியைக் கொண்டுவர முடியுமென்பதால்.

"அப்படிக் கொண்டுவந்த செல்வங்களையெல்லாம்" என்பார், "கவர்ந்து முன் தந்த
பல்வேறு விழுநிதி எல்லாம்" என்றார்.

விழு நிதி = செல்வம். இருப்பில் உள்ள செல்வமே நிதி எனப்படுவது.

தொடரும்.

bis_mala
4th August 2013, 07:21 PM
continued...

திசைகாப்பாளர் யார்?


எண்டிசைகளையும் காத்து நிற்போர் மானிடர்களா? ஆசிரியர் வேறு குறிப்புகள் ஏதும் தந்துள்ளாரா? என்று வினவலாம். அரக்கர்கோ முரசறைந்து அவர்கள் வல்லமை அழியுமாறு படை நடத்தினான் என்பதால், மானிடர்களாய் இருக்கலாம். ஆங்காங்கு ஆட்சி செலுத்தும் நாட்டுக்குரியோரைக் குறித்ததாகலாம். ஆனால் திசைக்கொரு காவல் தெய்வம் இருப்பதாகப் பரவலாகப் பண்டைய மக்கள் நம்பினர். சீனர், கம்போடியர், சாவகத்தார், வியட் நாமியர், இந்தியர் என அனைவரிடத்தும் இத்தகைய நம்பிக்கை இருந்திருக்கிறது. எனவே, திசைகாப்பாளர் என்பது இத்தேவதைகளைக் குறித்ததாகவும் கொள்ளற்கு இடமுண்டு.

தேவதைகளாயின், அவர்களை முற்றாக அழித்துவிடுதல் இயலுமோ? ஆகவே, ஆசிரியர் கவனமாக : "குறும்பும் தேய" என்கிறார். அவர்களின் வல்லமையைக் குறைத்து இடர் ஏதும் செய்யாமல் செய்துவிடின் அதுவே இயல்வதாகும் என்று தோன்றுகிறது. "தேய" என்பதற்கு அழிக்க என்று உரைப்பதில் தவறில்லை யாயினும், "குறைய" என்பதே மிகுபொருத்தம் என்று தோன்றுகிறது.

bis_mala
16th August 2013, 06:40 PM
continued from last post.

திசை காப்பாளர் பற்றிக்கண்டோம். திசைகள் நான்கு. இவற்றினுட்பட்ட திசைகளையும் சேர்த்து எண்திசை எனவும் படும். எண்டிசை என்று புணர்ச்சிபெறும் சொல் இதுவாகும். இனி, மேல் - கீழ் அதாவது வானம் பூமி (பாதாளம்) இவற்றின் திசைகளையும் சேர்த்து, திசைக்கொரு காப்பாளர் இருக்கின்றார் என்று கூறப்படுதலும் உண்டு. இவற்றின் விவரத்தை தொன்ம நூல்களில் காணலாம்.

திசைத்தேவர்களின் வல்லமை தேய்வுறவே. ஆங்காங்கு ஆட்சிசெய்துகொண்டிருப்போரின் வல்லமையும் அதற்கொப்பத் தேய்ந்து, இராவணன் போறிட்டவிடத்தெல்லாம் வெற்றியை ஈட்டி, விழு நிதியங்களைக் கொணர்ந்தான்.

"வலம்படு மள்ளர்க்கு வீசி வகுத்தனன்"

வலிமைவாய்ந்த தம் வீரர்களுக்கு இராவணன் இந்த நிதியையெல்லாம் வகுத்து, விரைந்து அளித்தான் என்பது இதன் பொருள். வீசி என்பது விரைவையும் மேலும் அவனுக்கு இனி அவை வேண்டாதவை என்பதையும் தெளிவாக உணர்த்துகின்ற சொல்லாகும். வகுத்தான் என்ற சொல் அவர்களில் யாவருக்கும் பங்கு கிடைக்குமாறு அந்நிகழ்வு நடந்தேறியது என்பதைத் தெரிவிக்கின்றது.

தொடரும்.

bis_mala
17th August 2013, 07:11 PM
continued.

இராவணன் சிவப்பற்றாளன் (சிவ பக்தன்) என்பது இராமயணம் சிறிதறிந்தோரும் அறிந்து வைத்துள்ள செய்தியாகும். இப்பாடலும் இதையே தெரிவிக்கின்றது.

கண்நுதல் வானவன் காதலின் இருந்த

என்ற வரி அவன்றன் சிவப்பற்றினை எடுத்தியம்புகின்றது. கண்ணுதல் வானவன் என்பது நெற்றிக்கண் தேவன் என்று பொருள்தரும், மூன்றாவது கண்ணை நெற்றியில் உடையோன் சிவன்.

இப்பற்றும் திண்ணிய பற்றாதலின் "காதல்" என்கின்றார். சிவனைக் காதலித்துக் கிடந்த இராவணன் சீதைபால் ஏன் விருப்பம் கொள்ளவேண்டும்? சீதையைக் கடத்திக் கொண்டு வைத்திருந்தது ஓர் அரசியல் நடவடிக்கைபோன்றது. சீதாப்பிராட்டியை அவன் தொட்டானில்லை.

தொடரும்.

bis_mala
19th August 2013, 09:33 AM
cont:d from last post

இருந்த என்ற சொல்லும் மிக்க ஆழமான கருத்துடையதாகும். சிவனைத் தேடி இராவணன் அலையவில்லை. சிவக்காதலினால் ஒரே இடத்தில் சீரிய கூரிய எண்ணங்களின் நிலைநிறுத்தத்தினால் அசைவற்று ஆழ்ந்தமர்ந்ததையே இச்சொல்லாட்சி நம்முன் கொணர்கிறது.


மாலை வெண்குடை அரக்கர் கோவே என்பது:

இராவணன் அரசவையில் (தர்பாரில் ) மாலை அணிந்து வெண்குடையின் கீழ் அமர்ந்து தனது அலுவல்களை கவனிக்கும் பழக்கமுடையவன் என்பது தெரிகிறது. இது மன்னர் பிறரும் பின்பற்றிய முறைதான். இராவணன் அரக்கர்கோ என்ப்பட்டாலும் அவன் பிராமண மன்னன் தான்.

அவனை அரக்க பிராமணன் (அல்லது பிரம்ம ராட்சஸன்) என்றாலும், ராட்சஸனானது அவன் செயல்களாலா அல்லது பிறப்பினாலா என்று தீர்மானிப்பது கடினம். செயல்களால் என்று கூறின் பிறப்பினால் என்று வாதிடுவர்.


தொடரும்.

bis_mala
19th August 2013, 04:46 PM
continued from last post

"குன்(று)ஏந்து தடக்கை அனைத்தும் தொழிலுற"

இஃது இராவணன் கைவலிமையைக் குறிப்பிடுகிறது. அவனுடைய வலிமை வாய்ந்த கைகள் ஒரு குன்றினையும் ஏந்தும் வலிமை வாய்ந்தன என்கிறார் இவ்வாசிரியர். தடக்கை - வலிமை வாய்ந்த கைகள். இராவணன் பல கரங்களை உடையவன்.

விழு நிதியத்தைப் பங்கிட்டுக் கொடுத்துக்கொண்டிருக்கையில், அவனது அத்தனை கைகளும் அவ்வேலையில் முற்றும் ஆழ்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தன.

தொழிலுற = செயல்பட, வேலைசெய்ய.

இவ்வழகிய பழம்பாடல் இப்போது நன்கு புரிவதுடன். இத்தகு பாடல்களை படித்தின்புறுவதற்கு நம் நேயர்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமையும் என்று நம்புவோம்.

0-0-0-0-0

bis_mala
21st August 2013, 09:37 PM
பல சுவைக் கவிதைகளில் இப்போது ஓர் அழகிய இனிய பாடலைப் பதிவுசெய்வோம். இப்பாடலை எழுதிய கவிஞர் , இசைமேதை பாப நாசம் சிவன் என்று அறிகிறோம்.

அன்னையும் தந்தையும் தானே --- பாரில்
அண்டசரா சரம் கண்கண்ட தெய்வம்;

தாயினும் கோயிலிங் கேது -- ஈன்ற
தந்தைசொல் மிக்கதோர் மந்திரமேது;
சேயின் கடன் அன்னை தொண்டு -- புண்ணிய
தீர்த்தமும் மூர்த்தி ஸ்தலமும் இதிலுண்டு!

தாயுடன் தந்தையின் பாதம் --- என்றும்
தலை வணங் காதவன் நாள்தவறாமல்
கோயிலில் சென்றென்ன காண்பான் --- நந்த
கோபாலன் வேண்டும் வரம்தருவானோ?

பொன்னுடன் ஒண்பொருள் பூமி ---- பெண்டிர்
புத்திரரும் புகழ் இத்தரை வாழ்வு,
அன்னை பிதாவின்றி ஏது -- மரம்
ஆயின் விதையின்றிக் காய்கனி ஏது!

bis_mala
22nd August 2013, 09:51 AM
நாலடியார் அல்லது நாலடிநானூறு என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்.


மற்றறிவாம் நல்வினை யாமிளையம் என்னாது
கைத்துண்டாம் போதே கரவா தறஞ்செய்க
முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு.

இந்தப் பாடல் என்ன சொல்கிற தென்பது உங்களுக்குத் தெரிந்தால் இங்கு பதிவுசெய்யுங்கள்.

bis_mala
22nd August 2013, 05:49 PM
மற்றறிவாம் நல்வினை யாமிளையம் என்னாது

யாமிளையம் - நான் இன்னும் இளைய வயதினன் தானே!

மற்றறிவாம் நல்வினை - (இப்போதே எனக்கு ஏன் இந்த நல்வினை (தீவினை) பற்றிய ஆராய்ச்சி! ) நேரம் வரும்போது அதுபற்றிக் கவனிப்பேன்! தெரிந்துகொள்வேன்.

என்னாது - என்றெல்லாம் சொல்லிக்கொண்டிராமல்.....

இதுதான் முதல்வரியின் பொருள். மற்ற வரிகள் புரிந்திருக்கும்....

பொறுத்திருந்தால், புரிந்துகொண்டவர் யாரென்று அறிந்து இன்புறலாமல்லவா!

bis_mala
23rd August 2013, 04:18 PM
மேற்கண்ட நாலடிப் பாட்டில் அடுத்த வரிக்கு என்ன பொருள் என்று நினைக்கிறீர்கள்?

கைத்துண்டாம் போதே கரவா தறஞ்செய்க

அதாவது கை துண்டானபோதே உடனே அறஞ்செய்க என்றா சொல்கிறார்கள்?

என்னதான் பொருள் ?

தொடரும்

bis_mala
24th August 2013, 05:56 PM
To save space and time, the rest of the explanation of this poem is given at

http://sivamaalaa.blogspot.com/

Pl see post dated 24.8.2013, entitled: "Fun with Naladiyar".

bis_mala
18th September 2013, 05:03 PM
சிந்து பைரவி - ஆதி


கருணை தெய்வமே கற்பகமே
காண வேண்டும் உன் தன் பொற்பதமே (என் கருணை)

உறுதுணையாக என் உள்ளத்தில் அமர்ந்தாய்
உனையன்றி வேறே யாரோ என் தாய் (கருணை)

ஆனந்த வாழ்வு அளித்திடல் வேண்டும்
அன்னையே என் மேல் இரங்கிடல் வேண்டும்
நாளும் உன்னை தொழுதிடல் வேண்டும்
நலமுடன் வாழ அருளல் வேண்டும் (கருணை)

bis_mala
23rd September 2013, 07:42 PM
வருபொருள் உரைக்கும் வல்லபம் பெறில் என்?
மண்ணிடை விண்ணிடை மறைந்த
பெரு ரகசியங்கள் யாவையும் உணரும்
பெருமையும் ஞானமும்பெறிலென்;
பருவதம் எடுத்துப் பந்தென ஆடும்
பத்தியும் சித்தியும் பெறிலென்
பரவனுகூல திருட்டியென் றுரைக்கும்
பண்புறும் அன்பிலை எனிலே.

இது மனோன்மணீயம் சுந்தரனாரின் பாடல். அன்பின் அகநிலை அல்லது அறவுள்ளம் என்ற தலைப்பில் வெளியிடப் பட்ட கவிதைகளில் இரண்டாம் பாடல். அன்பின் முதன்மையை வலியுறுத்துவதாகும்.

விளக்கம் தொடரும்

bis_mala
28th September 2013, 05:41 AM
விளக்கம் (ref poem above)

பருவதம் : மலை. பருவதம் எடுத்துப் பந்தென ஆடும் * : உலகை ஆட்டிப் படைக்கும்; பத்தி : இறைப்பற்று. சித்தி : தவ வலிமையால் அல்லது இறைப்பற்றாண்மையால் பெற்ற இயல்பு கடந்த ஆற்றல்கள். பரவனுகூல திருட்டி: எங்கும் எதிலும் நன்மையே காண்பது.

Read more on this at http://sivamaalaa.blogspot.com/

bis_mala
1st October 2013, 04:05 PM
ஆசிய ஜோதி, உமர்கய்யாம் பாடல்கள் முதலியன அளித்து தமிழிலக்கியத்தை மேலும் வளப்படுத்திய கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின் ஓர் அழகிய பாடல். ஏழை எளிய மக்களையும் தொழிலாள உடன்பிறப்புக்களையும் உள்ளத்தில் கொண்டு அவர் பாடியது:

பாடு படுவோர்க்கே--- இந்தப்
பாரிடம் சொந்தமையா;
காடு திருத்தி நல்ல--- நாடு
காண்பது அவரல்லவோ

மனம் திரியாமல்---காலை
மாலை எப்பொழுதும்
குனிந்து வேலை--- செய்வோர்
கும்பி கொதிக்கலாமோ

கோடி கோடியாக---நீங்கள்
குவித்திடும் லாபம்
வாடும் எம்மக்கள்---உண்ணா
வயிற்றுச் சோறல்லவோ

வாழ வேண்டுமெனில்---தொழில்கள்
வளர வேண்டுமையா
ஏழை என்றொருவன்---உலகில்
இருக்க லாகாதையா ( பாடுபடுவோர்க்கே)
"