Thread started by kalnayak on 28th January 2015 04:50 PM
நண்பர்களே, நண்பர்களே!!!
தமிழ் இலக்கிய வரிசையில் கவிதை எழுத ஆர்வம் கொள்பவர்களுக்காக ஒரு புதிய திரி இது. இது போன்ற திரியை (அதாவது கவிதையை மட்டுமே எழுதுவதற்கான திரியை) நான் காணவில்லை இங்கே. அதணால் இந்த புதிய திரி. பல திரிகளிலும் பலரும் கவிதை எழுதுகிறார்கள். அவைகளை, அவர்களை ஒருங்கிணைப்பதற்கே*இத்திரி. உங்கள் கவிதை எழுதும் திறனை இங்கே பறை சாற்றுங்கள். என்ன வழக்கம் போல் ஒரே ஒரு வேண்டுகோள் எல்லோரும் இணக்கமாக சென்றிட மாறுபட்ட கருத்துககளை வலிந்து திணிக்காதீர்கள். நல்ல தலைப்பு உங்களால் தேர்ந்தெடுக்கப்படுவதே.
இதோ எனது முதற்கவிதை, கணித வார்த்தைகளை கொண்டு:
சதுரங்க போட்டியில் பலவிதமாய் காய்களை பெருக்கி
அவைகளை கட்டங்களில் முன்னேற்றிச்செல்லும் விதி வகுத்து
எதிரியின் காய்களை வகைவகையாய் பின்னாமாக்கும் முறைசாற்றி
நீட்டிய வேளையுடன் நிறுத்தாமல் இழுத்தடிக்கும் போதினிலே
அகல மறுக்கின்றார் அவனியுலோர் முடிவு தெரிவதற்கு
காய்களை கழித்தாயிற்று, கூட்டமாய் கட்டங்களை இழந்துமாயிற்று
திறங்களை கனமாய் பெறவேதம் சிப்பாயை முன்னேற்றுகிறார்
எக்கணமும் ஒருவர் வெல்லக்கூடுமில்லையேல் இருவரும் சமமாவர்
எவர் வெல்வர் என அறிய காத்திருப்போம், முடிவிலி எவருமிலர்.
நீங்களும் உங்கள் கற்பனை குதிரையின் சிறகை தட்டுங்களேன்.
-
From: kalnayak
on 8th June 2015 12:51 PM
[Full View]
கிறுக்கண்ணா,
அருமை. அருமை. இப்படித்தான் எழுதணும் பெருசு பெருசா, அழகு அழகா. நல்ல விஷயத்தை தெளிவா சொல்லனும்னா எப்படி வேணுமென்றாலும் சொல்லலாம்.
-
From: kalnayak
on 8th June 2015 12:54 PM
[Full View]
சி.க.,
நிறைய, நிறைய கவிதைகள் எழுதியதற்கு நன்றிகள். ஆனால் போதும் என்றுமட்டும் சொல்லிவிடுவேன் என்று எதிர்பார்க்காதீர்கள். ஷண்முகனையும், எழுமலையானையும் சிந்துப்பாவில் அழைத்தது அருமை. அருமை.
-
From: chinnakkannan
on 15th February 2016 11:08 AM
[Full View]
வினோதினி..
**********************
(முன்பு மரத்தடி.காமில் எழுதியது..2004 இன்று அகப்பட்டது)
********
*********************
கமலா ராமச்சந்திரன்:
*********************
பிறந்த போது கண்கள் மட்டும்
உருட்டி உருட்டி விழித்துப் பார்க்க
உடலோ பூஞ்சை ஒருகை அகலம்
எடுத்துக் காட்டிய நர்ஸோ சொன்னாள்
கவலைப் படாதே கூடிய சீக்கிரம்
நல்ல உணவில் உடம்பு தேறும்
***
பார்த்துக் கொள்ள ஊரில் இருந்து
வந்த அம்மா அவளைப் பார்த்து
என்னடீ இப்படி தவளைக் குட்டியை
பெத்துப் போட்டு இருக்கே' சொல்லி
எடுத்துக் கொண்டே கொஞ்சினாள் நன்றாய்
***
வேலை பாதி நிறுத்தியே வந்த
ராமுவின் முகத்தில் திமிறும் சிரிப்பு
என்னோட ஏஞ்சல் எவ்ளோ அழகு
தாங்க்ஸ்டீ கமலா' கன்னந் தட்ட
வெளிறிய முகத்தில் வெளிறிச் சிரித்து
'என்ன கொஞ்சம் கருப்புதான் இல்ல'
'வாயை மூடு நீமட்டும் அழகோ..
குழந்தை எப்படி முழிக்குது பாரு'
சீறிய வாறே அடக்கினர் என்னை..
என்ன நினைத்ததோ ஏது நினைத்ததோ
கண்கள் மூடி சிரித்தது அதுவும்
***
திருமண மாகிப் பத்து வருடம்
தவமாய்க் கிடந்து கோவில் டாக்டர்
சாமியார் ஜோஸ்யம் விரதம் எதையும்
விட்டு வைக்காமல் இருந்ததில் வந்த
அத்திப் பூவிற்கு அழகுக் குட்டிக்கு
என்ன பேரை வைக்கலாம் என்று
பலப்பல யோசனை செய்த பின்னால்
அவரும் சொன்னார் வினோதினி என்று
எனக்கும் பெயரது பிடித்து விட்டது..
***
குட்டி ராட்சசி அப்பா செல்லம்
கொஞ்சம் கூட மதிக்கலை என்னை
வளர வளர பிடிவாதம் கோபம்
மிஞ்சினால் அழுகை கண்மட்டும் சிரிக்கும்
வாயும் நீளம் நாக்கும் நீளம்
காரம் வேண்டும் உப்பும் வேண்டும்
இனிப்பா வேண்டாம் என்ன அம்மாநீ
எனக்குப் பிடிச்சதைப் பண்ணித் தாயேன்..
***
இன்றும் கூட எங்களுக் குள்ளே
குடுமிப் பிடியாய் அடிதடி சண்டை
அழகாய்ப் பாலை ஊற்றிப் பிசைந்து
ஒருதுளி மோரை விட்டுப் பின்னர்
நல்ல மாவடு இரண்டை வைத்தால்
சாதமா வேண்டாம் போர்ம்மா நீதான்
***
இருப்பது என்னவோ கால்ஜாண் வயிறு
இதிலே பாதியும் வைத்து விடுவாய்
சும்மா சும்மா தோசை வருமா
இன்னிக்கு மட்டும் சாப்பிடு கண்ணே
கொஞ்சி குழைந்து பாக்ஸில் வைத்து
புத்தகம் எல்லாம் பையில் வைத்து
டாட்டா பைபை செல்லக் குட்டி
என்றே சொல்ல குட்டியும் திரும்பி
அதிசய மாக கன்னத்தில் ஒன்று
கொடுத்து விட்டு ஓடி விட்டாள்..
மிச்சம் மட்டும் கொண்டு வந்தால்
மாலை அவளுக்கு அடிதான் தருவேன்..
***************
ராமச் சந்திரன்
***************
பக்கத்தில் உள்ள மில்லில் எனக்கு
இயந்திரம் இயக்கும் அறுவை வேலை
ஏதோ வாழ்க்கை ஓடுது தன்னால்
என்று இருந்த வாழ்வில் அழகாய்
வசந்தம் போலே வானவில் போலே
பளிச்சென மின்னும் நட்சத் திரமாய்
வினோதினி பிறந்தாள் வண்ணக் கலவையாய்
***
சின்னக் குட்டி செல்லக் குட்டி
என்னை மாற்றிய வெல்லக் கட்டி
ஒருகணம் கன்னத்தில் அழுத்தமாய் முத்தம்
கொடுத்துக் கொஞ்சுவாள் பின்னர் நன்றாய்க்
கிள்ளியும் விட்டு சாரிப்பா என்பாள்..
போடி போடி கறுப்பி என்று
சமயத்தில் இவளும் சீண்டி விட்டால்
நீதான் கறுப்பு பாட்டி கறுப்பு
அப்பா நானா அட்டைக் கறுப்பு
என்றே கேட்டால் இல்லை கண்ணே
நீகொஞ்சம் சிவப்பில் சற்றே கம்மி
போப்பா என்றே கோபம் கொண்டு
பெரிய மனுஷியாய் முகத்தைத் தூக்கிப்
பேச மாட்டாள் பின்னர் அவளைத்
தூக்கிக் கொஞ்சி பலப்பல விதமாய்
சமாதான வார்த்தை சொல்ல வேண்டும்..
***
அன்றொரு நாளில் எனக்கோ தலைவலி
வேலை சீக்கிரம் முடித்து வந்தால்
இவளைக் காணோம் வினுமட்டும் வீட்டில்
அப்பா அப்பா என்னப்பா ஆச்சு
முகமே னப்பா வாடி இருக்கு
அம்மா எங்கே செல்லக் குட்டி
பக்கத்து வீட்டு மாமி கூட
எங்கோ போனாள் அப்பா உனக்கு
தலைவலி யாப்பா இந்தா தைலம்
தலையைக் கொஞ்சம் பிடிச்சு விடட்டுமா
படபட வார்த்தைகள் துள்ளி வந்திட
முகமோ உம்மென மாறி நின்றிட
எனது தலைவலி போயே போச்சு..
***
நேற்றுக் கூட ஆசைப் பட்டு
பென்சில் பாக்ஸ்தான் வேண்டும் என்றாள்
அழகாய் யானை வரைந்த பெட்டி
வாங்கிக் கொடுத்து அவளிடம் மெல்ல
பத்திர மாக வச்சிரு செல்லம்
எப்படி யும்இதை தொலைக்கக் கூடாது
என்றே சும்மா சொல்லி வைத்தேன்
குட்டியும் தீவிர முகத்துடன் என்னிடம்
சரியெனச் சொல்லி முத்தமும் கொடுத்தாள்..
(..தொடரும்..)
-
From: chinnakkannan
on 15th February 2016 11:10 AM
[Full View]
வினோதினி...தொடர்ச்சி..
**
************
வினோதினி..
************
இந்த அம்மா எப்பவும் மோசம்
அடிக்கடி சாதம் வைக்கிறாள் லஞ்ச்க்கு
பக்கத்து வீட்டு ராகுல் எல்லாம்
எப்பவும் புதுசாய் கொண்டுதான் வர்றான்
நேத்த்க்கு கூட கொஞ்சம் போண்டா
கொடுத்தான் நானும் தோசை தந்தேன்.
அப்பா கொடுத்த பென்சில் பெட்டி
அடடா அழகு.. அந்த யானை
ஹிஹி சொல்லிச் சிரிப்பதாய் இருக்கு
இன்னும் ஏதோ வாங்கணும்னு நினச்சேன்
மறந்து போச்சு அச்சோ முதல்கிளாஸ்
மீசை வச்ச மல்லிகா டீச்சர்
அம்மா கேட்டால் அடிப்பாள் அடியே
அப்படி எல்லாம் சொல்லப் படாது
ஏன்மா லேசா இருக்கே அவர்க்கு
சிரித்துத் தலையில் குட்டியும் விடுவாள்..
***
ஹோம்வொர்க் எல்லாம் பண்ணி விட்டேன்
டீச்சர் வேற என்னவோ சொன்னாள்
ஏண்டா கோபு அதுதான் என்ன..
இந்தக் கணக்கும் தலையைக் குழப்புது
***
அதுசரி அங்கே மேலே என்ன
ஹையா நெருப்பு என்னது இப்படி
சடசட வென்றே கூரையில் போகுது..
பயந்த நாங்கள் எழுந்து ஓடி
வாசல் பக்கம் முட்டி மோத
என்னது இந்தக் கதவு திறக்கலை
பதறி அழுதே பலப்பல குரல்கள்
உதவி உதவி என்றே கத்த
உள்ளே சூடு அய்யோ எரியுதே..
கோபு சொல்றான் கத்தா தேன்னு
நீட்டி அவனது கையைப் பிடித்தேன்
மோதிய மோதலா யாரோ திறந்தாரா..
ஏதும் தெரியலை தெரிந்து தான்என்ன
நாங்கள் எல்லாம் ஒண்ணாய் வெளியில்
போவதற் காக கத்தியே முந்த
வெளியில் மாடிப் படியில் இன்னும்
மத்த கிளாஸின் பசங்களின் கூட்டம்
அப்பா ஒருவழி நானும் வெளியில்
வந்தாச்சு என்றே நினைத்தால் அய்யோ
என்னோட ஆனை பென்சில் பாக்ஸ்தான்
அப்பா கேட்டா திட்டு வாளே
போகா தேடீ கோபி சொன்னான்
ம்ம் மாட்டேன்..அப்பா சொன்னா
என்றே சொல்லி கையை உதறி
மறுபடி மோதி கிளாஸிக்குள் போனால்
ஒரேயடி யாகப் புகையும் நெருப்பும்
புக்ஸீம் பாக்ஸீம் சிதறி இருக்க
ஹையா அங்கென் பென்சில் பாக்ஸே
வேகமாய் ஓடி எடுக்க அச்சச்சோ
என்னது இப்படிக் கூரை விழுதே..
அம்மா..அப்பா...அய்யோ..ஆஆ..
*********************
ஜெயஸ்ரீ சேஷாசலம்..
*********************
இறைவன் ஒருவன் இருக்கின் றானா..
எதற்காக இப்படி இவ்வளவு உயிரை
ஒரேயடி யாக எடுத்து இருக்கணும்
எண்பதுக்கும் மேலே சின்னப் பிஞ்சுகள்
பொசுங்கி நொறுங்கிய அவலம் என்னே..
பேசி முடித்து விழியைத் துடைக்க
காமெரா மேனோ கட்பணணி விட்டான்..
***
எனக்கு வேலை டிவியில் செய்திகள்
சுடச்சுட நடக்கும் இடத்தில் எடுக்கணும்
பலப்பல விபத்துகள் பலப்பல தேர்தல்கள்
பலப்பல ஊழல்கள் பலப்பல நிகழ்வுகள்
எல்லா வற்றையும் கண்டே மனமும்
மரத்துப் போய்த்தான் ஓடுது பொழுது
***
திரும்பிப் பார்த்தால் அமுதம் அஜயன்
ஹல்லோ அஜயா என்ன இங்கே..
சரிசரி எல்லாம் ரிப்போர்ட் எடுத்தாயா
எனிதிங்க் ஸ்பெஷலா சொல்லுப்பா எனக்கும்
கையில் என்ன ஹைக்கூவா கொண்டா
வெள்ளை மனங்கள்.. கறுப்பு உடல்களாய்..
வண்ணப் படங்களில்... அபாரம் அஜயா..
அங்கே பாரேன் அழுதே வறண்டு
அந்த மூலையில் அமரும் தம்பதி..
ஆஸ்பிட்டல் வாசம் குடலைப் புரட்டுது
வாவா போய்த்தான் விஷயம் கேட்போம்..
***
மேடம் நான் தான் இந்த டீவி..
உங்கள் துயரைச் சொல்ல முடியுமா..
கணவன் சொன்னான்: எங்கள் பொக்கிஷம்
கறுப்புத் தங்கம்; வீட்டின் ராணி..
காற்றில் கருகிக் கரைந்தே விட்டாள்
பெயரும் வினோதம் செய்யும் லீலைகள்
எல்லாம் வினோதம் இப்போ பார்த்தால்
கறுப்பாய்க் கருகிக் கரைந்ததும் வினோதம்..
***
விம்மல் அடுக்கிப் பேசிச் செல்ல
'உங்கள் நஷ்டம் பெரிதெனத் தெரியும்
சிலபல லட்சம் ஈடாம் சொன்னார்..'
'பணத்தை நானே உங்களுக்குத் தருவேன்
எங்கள் சின்னக் குட்டியைத் தாங்கள்.."
வெடித்தாள் மனைவி; கணவனோ சொன்னான்
அந்தப் பணந்தான் எங்களுக்கு வேண்டும்..
***
அடடே இதுவோர் ஸ்கூப்நியூஸ் ஆச்சே..
சொல்லுங்கள் ராமு உங்கள் எண்ணம்..
இந்தப் பணத்தை இந்தப் பள்ளிக்கு
கொடுப்பேன் நன்றாய் மறுபடி கட்ட..
இன்னும் பலவாய் பள்ளிகள் உண்டு
'நோநோ ராமு மேலிடம் இப்போ
எல்லாப் பள்ளிக்கும் கடுமை விதிகள்
போட்டு இருக்கு கவலை வேண்டா.."
***
'இனிமேல் என்ன கவலை வாழ்வில்
இருக்கும் பிடிப்போ கருகிப் போச்சு
உங்களுக் கென்ன இதுவோர் செய்தி
அடுத்த விபத்தில் இதுவொரு கோப்பு
எத்தனை விதிகள் போட்டால் என்ன
மறுபடி இதுபோல் பள்ளிகள் முளைக்கும்
விதியை மீறி விதியை அழைக்கும்..
இந்தக் காயம் எங்கள் வாழ்வில்
முழுதும் முழுதும் வலித்தே இருக்கும்..
இன்னும் ராமு ஏதெதோ சொல்ல..
***
மெல்லத் திரும்பி காமிரா மேனிடம்
'நிறுத்துப்பா அப்புறம் வம்பாப் போயிடும்
எதுக்கும் ஒண்ணுசெய் இந்தாள் பேச்சை
வெட்டி விட்டுடு' என்றே சொல்லி
திரும்பி ராமு கமலா விடமே
நன்றி நவின்று இடம்விட் டகன்றேன்..
(முற்றும்)
-
From: chinnakkannan
on 15th February 2016 11:19 AM
[Full View]
ஒரு முதியவளின் படுக்கையறை..
** (2005 இல் எழுதியது)
மூத்த பேரன் மடியில் தலையும்
இடதுகை விரல்கள் ரவிக்கையில் நுழைத்தும்
கண்கள் கொஞ்சம் இறுக்கவே மூடி
நன்றாய்த் தூக்கம் போட்டு விட்டாச்சு..
இரண்டாம் பேரனோ அவளது மடியில்
டிவி சீரியல் வெறித்துப் பார்த்தே
கொஞ்சம் கொஞ்சமாய் இமைகள் மூட..
பத்தரை வாக்கில் முழுவதும் முடிய
அவளும் டிவியை படக்கென அணைக்க
மெஞ்ஞ மெஞ்ஞேஎன இருந்த அவனும்
எதுவும் சொல்லத் தோன்றாமல் சற்றே
வாரப் புத்தகம் எடுத்துப் புரட்ட..
அவளும் எழுந்து சின்னதை உள்ளே
விட்டுவிட்டு வந்து பெரியதை வாங்கி
உள்ளே நுழைகையில் ஒருவிழிப் பார்வை
அவனிடம் வீச படக்கென புத்தகம்
ஹாலில் இருந்த மேஜையில் வீசி
சட்டென அவளுடன் அறையுள் நுழைய..
கதவு கொஞ்சம் கொஞ்சம் மெல்லமாய்
பின்னர் சற்றே வேகமாய் மூட..
ஆச்சு இனிமேல் உறங்கி எழுந்து
காலை வேலை பார்த்திட வேண்டும்
இருப்பது ஒருஹால் ஸிங்கிள் பெட்ரூம்..
ஹால்தான் எனது இருப்பிடம் இரவில்..
மெல்லப் படுக்கையை உதறி விரித்து
தலையணை கொஞ்சம் சரியாய் வைத்து
மெல்ல எழுந்து விளக்கை அணைத்து
மெல்ல நடந்து படுக்கையில் தலையை
வைத்தால் உள்ளே மெல்லமாய்க் குரல்கள்..
என்னைப் பற்றி ஏதும் பேச்சா..
இல்லை சின்னவன் முழித்தழ றானா....
என்ன வாழ்க்கை என்றே தெரியலை
அவரும் போய்த்தான் வருடங்க ளாச்சு..
பேரன் பேத்திகள் பார்த்து விட்டாச்சு..
இப்போது இருப்பவன் என்னுடைய சின்னவன்
கடைசியாப் பிறந்த நல்லவன் என்னை
நன்றாய் வைத்துப் பார்த்துக் கொள்கிறான்..
மற்றவை எல்லாம் அவரவர் மனைவிகள்
முந்தானை பிடித்தே சென்றுதான் விட்டார்..
என்ன கொஞ்சம் பேசவே மாட்டான்
காலையில் ஆபீஸ் கிளம்பினான் என்றால்
இரவில்தான் வேலை முடித்து வர்றான்..
இந்தப் பெண்ணும் என்னுடைய உறவுதான்..
ஆரம் பத்தில் சரியாய் இருந்தாள்..
மூத்ததைப் பெத்த ஒருவரு டத்தில்
சின்னது வந்ததும் நிறையவே மாற்றம்..
ம் யாரைச் சொல்ல யாரை நோக..
சத்தம் கேக்குதே குழந்தை அழறதோ..
மேலே ·பேனும் மெல்லமாய்ச்சுற்றுது..
இந்த மாம்பலக் கொசுக்கள் மோசம்..
ஸ்ஸ் அப்பா.. என்னகடி கடிக்குது..
ஓடோ மோஸ்தான் தடவிக்க வேணும்..
சீரியல் பெண்ணின் கணவன் நாளை
சம்சாரத் துடன் சேர்ந்திடு வானா..
ஓஓ அடடா.. மாத்திரை மறந்தேன்..
எங்கே தண்ணீர்.. குடித்தே முழுங்கலாம்..
கொஞ்சம் கைகால் படபடன்னு வருது..
தெரியலை டாக்டரிடம் பிபி சொல்லணும்..
இந்த பாழாப் போன மனுஷன்
என்னை விட்டு சீக்கிரம் போகுமா..
மூணு பிள்ளை ரெண்டு பொண்ணு..
வயணமாப் பெத்து வளத்துவிட் டாச்சு..
வளத்த கடாக்களும் மாரில்பாஞ் சாச்சு..
எப்போ காலம் வருமென நானும்..
இருந்துதான் பாக்கேன்.. ஒண்ணும் காணோம்..
ம்ம்நாளைக்கு என்ன என்ன செய்யணும்..
மூத்தவள் பெண்ணுக்கு பளஸ்டூ எக்ஸாம்
போனில் பேசி விஷ்ஷ¤ம் பண்ணனும்..
பண்ணலை என்றால் மறுநாள் திட்டுவாள்
பெரியவன் பையனுக்கு பர்த்டேன்னு நினைக்கேன்..
காலண்டரைக் கொஞ்சம் புரட்டிப் பாக்கணும்
ரெண்டாம் காஸ்க்கு இவளை விட்டு
போன்பண்ணச் சொல்லணும் இவளது அம்மா
உடம்பு தேவலை ஆச்சா என்றே
அவளுக்கும் போன்பண்ணிக் கேக்கணும் அப்புறம்..
துபாயில் இருக்கும் சின்னப் பெண்ணிடம்
கொஞ்சம் பேசணும் நாளும் ஆச்சு..
இவனுக்குக் காலையில் தக்காளிக் கொத்சு..
வெண்டைக் காயில் வதக்கல், சீரா
மிளகு ரசமும் தேங்காய்த் துகையலும்
செய்யணும் ஏனோ தூக்கமும் வரலை..
கண்கள் இறுக்க மூடிக் கொஞ்சம்
ராமா ராமா சொல்ல லாமா..
ராமா ராமா ராமா ராமா..
சுற்றிச் சுற்றி நினைவுகள் மயங்க..
மெல்லத் தூக்கம் வந்துவிட் டாச்சு..!
( நன்றி மரத்தடி.காம்)
-
From: kalnayak
on 15th November 2016 09:47 PM
[Full View]
வந்துவிட்டேன் கல்நாயக், அப்படியே வந்துட்டேன்னு சொல்ல மாட்டேன். எல்லோருக்கும் வணக்கம் சொல்ல மட்டுமே வந்துவிட்டேன் நான். விரைவில் முன்போல் எழுத வரக்கூடும். பார்க்கலாம்.
-
From: chinnakkannan
on 4th December 2016 10:35 PM
[Full View]
vaanga kal nayak. sowkiyamaa.. aarambikklaamaa kacheriyai
-
From: kalnayak
on 29th August 2018 02:06 PM
[Full View]
Hi everybody!!!!
Hi Everybody,
This is Kalnayak. Hope everybody is doing great.
Chinnakkannan, Eppidi irukkeenga. Innum inge ezhuthareengalaa?
-
From: kalnayak
on 2nd January 2019 11:56 PM
[Full View]
Hi everybody,
Sorry I am not able to access all these pages smoothly. There is always problem in accessing some of these pages. Hope everybody is doing fine.
-
From: kalnayak
on 16th June 2019 10:30 PM
[Full View]
Hi Everybody,
Please let me know, how to access other pages without any issues. I am not able to access any other thread. How do you access?