சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் கல்யாணி!


சினிமா-சின்னத்திரைகளில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியவர் கல்யாணி. ஒருகட்டத்தில் சீரியல் நாயகியாகவும், தொகுப்பாளினியாகவும் வலம் வந்து கொண்டிருந்தார். அண்ணாமலை, தாயுமானவன், ஆண்டாள் அழகர் ஆகிய சீரியல்களும், சூப்பர் மாம், பீச் கேர்ள் என அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளும் கல்யாணியை பிரபலப்படுத்தின. இந்நிலையில், கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் செட்டிலாகிவிட்ட கல்யாணி, ஒரு வரு டத்திற்கு பிறகு மீண்டும் மீடியாவில் என்ட்ரி கொடுக்க சென்னை வந்திருக்கிறார்.


இதுகுறித்து கல்யாணி கூறுகையில், விஜய் டிவியில் வெளியான ஆண்டாள் அழகர் தொடரில் நடித்த பிறகு திருமணம் செய்து கொண்டேன். ஒரு வருடம் கழித்து மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க வந்திருக்கிறேன். அதையடுத்து சிலர், சீரியல்களில் நடிக்க கதை சொன்னார்கள். ஆனால் அந்த சீரியல்களில் நடிக்க நான் ஒத்துக்கொள்ளவில்லை. காரணம், ரீ-என்ட்ரியில் நல்ல அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால் தொடர்ந்து நல்ல கதைகளுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறேன். முக்கியமாக சிறிய வேடமாக இல்லாமல் லீடு ரோல்களை எதிர்பார்க்கிறேன்.

அதேபோல், நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கவும் ஆர்வமாக இருக்கிறேன். ஏற்கனவே பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருப்பதால், சில சேனல்களில் தொடர்பு கொண்டு வருகிறேன். அதனால் கூடிய சீக்கிரமே சீரியல் நடிகையாக, தொகுப்பாளினியாக மீண்டும் நான் பிசியாகி விடுவேன் என்கிறார் கல்யாணி.



நன்றி: தினதந்தி