ஆண்களை சீரியல் பார்க்க வைத்தது நான்தான்! - நாகினி மெளனிராய்




பாலிவுட் திரையுலகில் சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகை களும் பரபரப்பு வளையத்திற்குள் சிக்கிக்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில், இந்தியில் உருவாகி தமிழில் நாகினி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வரும் நாகினி சீரியலில் நாயகியாக நடித்துள்ள மெளனிராயும் பரபரப்பாக பேசப்படும் நடிகையாகியிருக்கிறார்


.காரணம், சீரியல்களில் குடும்பப்பாங்காக நடித்து வரும் அவர், நிஜத்தில் பயங்கர மாடர்ன் பெண். அதோடு, தான் பிகினி உடையணிந்து நீந்திக்குளிக்கும் போட்டோக்களையும் இணையதளங்களில் வெளியிட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார். அதன்காரணமாக, நாகினி சீரியல் இந்தியில் வெளியானபோது பெண்களை விட ஆண்கள்தான் அந்த சீரியலை வெகுவாக ரசித்தார்களாம். இதை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள மெளனிராய், மற்ற நடி கைகள் பெண்களை சீரியல் பார்க்க இழுத்தனர். ஆனால் நான்தான், பெருவாரியான ஆண்களையும் சீரியல் பார்க்க வைத்தேன். இந்த பெருமைக்குரிய ஒரே நடிகை நான் மட்டுமே என்று கூறியுள்ளார்.

நன்றி: தினதந்தி