-
30th November 2016, 08:15 PM
#591
Moderator
Diamond Hubber
காதலரை திருமணம் செய்கிறார் ப்ரியா
விஜய் டி.வியின் நட்சத்திர தொடரான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ப்ரியா. அமித் பார்கவ், ப்ரியா ஜோடி சரவணன், மீனாட்சி ஜோடி போன்று புகழ்பெற்று வந்தது. இந்த ஜோடி பொருத்தத்திற்காகவே சீரிலை பார்த்தார்கள்.
இந்த நிலையில் ப்ரியா தான் காதலித்து வரும் ராஜவேல் என்பவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம். ராஜவேல் ஆஸ்திரேலியாவில் பணியாற்றுகிறார். திருமணத்துக்கு பிறகு ஆஸ்திரிரேலியாவில் செட்டிலாகவும் ப்ரியா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ப்ரியா தொடரிலிருந்து விலகி விட்டாராம். திருமணம் செய்து கொண்டாலும் தொடர்ந்து நடிக்கலாமே என்ற சேனல் தரப்பும் சொல்லி வருகிறதாம். இறுதியான முடிவை ப்ரியா இன்னும் எடுக்கவில்லை என்கிறார்கள்.
நன்றி: தினமலர்
-
30th November 2016 08:15 PM
# ADS
Circuit advertisement
-
16th December 2016, 08:17 PM
#592
Moderator
Diamond Hubber
தெலுங்கு சீரியல்களில் பிசியான நளினி!
தமிழில் சின்ன பாப்பா பெரிய பாப்பா, மடிப்பாக்கம் மாதவன் உள்பட சில தொடர்களில் நடித்து வந்த நளினி, தெலுங்கு சீரியல்களிலும் பிசியாக நடித்து வந்தார். அதனால் ஒருகட்டத்தில் ஆந்திராவிலேயே வீடு பிடித்து செட்டிலாகி விட்ட அவர், தமிழ் சீரியல்களில் நடிக்கும்போதுமட்டும் சென்னைக்கு வந்து சென்றார். தற்போது ஜீ தமிழ் சேனலில் வெளியாகும் டார்லிங் டார்லிங் -என்ற தொடரில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தெலுங்கில் நளினி மாமியார் வேடத்தில் நடிக்கும் ஒரு தொடரில் அவரை மையமாக வைத்தே கதை உருவாகியிருக்கிறதாம். ஏற்கனவே அவர் நடித்த தொடர்களில் அவரது கேரக்டர் அங்கு பெரிய அளவில் ரீச்சாகியிருப்பதால், குடும்பப் பெண்கள் மத்தியில் நளினிக்கு பெரிய ரசிகை வட்டமே உள்ளதாம்.
இதனால் இப்போது நடிக்கும் தொடருக்கு பிறகு தெலுங்கு சீரியல் உலகில் இன்னும் பெரிய நடிகையாகி விடுவாராம் நளினி. அதனால் தற்போது தமிழை விட தெலுங்கில் நடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டி வரும் நளினிக்கு, தெலுங்கு படங்களிலும்கூட கேரக்டர்கள் கிடைத்து வருகிறதாம். இருப்பினும், தமிழ் நாட்டையும் மறந்து விடக்கூடாது என்பதற்காக, ஏதேனும் ஒரு தொடரில் முகம் காட்டிக்கொண்டிருக்கவும் திட்டமிட்டுள்ளாராம் நளினி.
நன்றி: தினமலர்
-
4th January 2017, 03:10 AM
#593
Moderator
Diamond Hubber
நடிகைகள் உடையை பற்றி யோசிக்காமல் நல்ல கதையை யோசிங்கள்: சுராஜுக்கு டிடி கோரிக்கை
கத்திச் சண்டை படத்தின் இயக்குனர் சுராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் "கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகைகள் ஆடையை குறைத்துதான் நடிக்க வேண்டும். நடிப்பு திறமையை காட்ட டி.வி.சீரியலில் நடிக்கட்டும்" என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. நயன்தாரா, "நடிகைகள் என்ன காட்சி பொம்மைகளா" என்று கொதித்தார். "சுராஜ் அனைத்து பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார் தமன்னா. விஷாலும், சுராஜ் பேட்டிக்கு கண்டனம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சுராஜ் மன்னிப்பு கேட்டார்.
இந்த நிலையில் சின்னத்திரை தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தனது டுவிட்டரில் எழுயிருப்பதாவது: சுராஜின் பேட்டி வருத்தமளிப்பதாக இருந்தது. பெண்களின் சார்பாகவும், அவர்களின் உரிமைக்காகவும் குரல்கொடுத்த நயன்தாராவுக்கும், தமன்னாவுக்கும் பாராட்டுகளும், நன்றிகளும். இயக்குனர் சுராஜ் நடிகைகளின் ஆடையை எப்படி குறைக்கலாம் என்று யோசிப்பதை விட்டுவிட்டு நல்ல கதையை யோசிக்கலாம்.
இவ்வாறு டிடி எழுதியிருக்கிறார்.
நன்றி: தினமலர்
-
4th January 2017, 03:14 AM
#594
Moderator
Diamond Hubber
2016ல் சின்னத்திரைக்கு வந்த சினிமா நட்சத்திரங்கள்
ஒரு காலத்தில் சின்னத்திரையில் நடிப்பது, தொகுப்பாளினியாக இருப்பது தகுதி குறைவாகவும், மார்க்கெட் குறைந்தவர்களின் வேலையாகவும் பார்க்கப்பட்டது. ஆனால் ராதிகா, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், தேவயானி, ரோஜா போன்றவர்கள் சினிமாவுக்கு ஈடாக சின்னத்திரையிலும், பணத்தையும் புகழையும் சம்பாதித்தார்கள். அதன்பின் தைரியமாக சின்னத்திரைக்கு நடிகைகள் வர ஆரம்பித்தார்கள்.
இந்த ஆண்டு சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்தவர்களில் முக்கியமானவர் சினேகா. பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட பிறகு விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருந்த சினேகா, இப்போது ஜீ தமிழ் சேனலில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக இருக்கிறார். இதே நிகழ்ச்சியின் மூலம் பொய் சொல்லப்போறோம், கோவா, கோ படங்களில் நடித்த பியா, சிவா மனசுல சக்தி, மதுரை சம்பவம் படங்களில் நடித்த அனுயா ஆகியோர் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்கள்
அடுத்தவர் சதா, ஷங்கர் இயக்கத்தில் விக்ரமுடன் அந்நியன் படத்தில் நடித்தவர். ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்போது விஜய் டி.வியில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றுகிறார். பாபநாசம் படத்தின் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த கவுதமி இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக பணியாற்றுகிறார்.
நன்றி: தினமலர்
-
4th January 2017, 03:23 AM
#595
Moderator
Diamond Hubber
படிப்பில் ஆர்வம் காட்டும் பவித்ரா
தொகுப்பாளினியாக அறிமுகமானவர் பவித்ரா. ரியலாட்டி ஷோ ஸ்பெஷலிஸ்ட் என்றும் பெயர் எடுத்தவர். ஆனால் தற்போது சீரியல் நடிகையாகியிருக்கிறார். விஜய் டி.வியில் சரவணன் மீனாட்சி, ஜீ தமிழ் சேனலில் மெல்ல திறந்தது கதவு தொடர்களில் நடித்து வருகிறார்.
தொகுப்பாளினி, நடிகை என இந்த இரண்டுக்கும் நடுவில் படிப்பையும் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது எம்.பி.ஏ இறுதியாண்டு படித்து வரும் பவித்ரா. அடுத்து எம்.பில் பட்டதுக்காக ஆராய்ச்சியில் இறங்கப்போகிறார். "ஒரே நேரத்தில் இரண்டு சீரியல்களில் நடித்தாலும் இரண்டிலும் வித்தியாசமான கேரக்டர்கள். சரவணன் மீனாட்சியில் ராஜி என்கிற மாற்றுத் திறனாளி பெண்ணாக நடிக்கிறேன். வெளியில் சென்றால் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு நிஜமாகவே நீங்க மாற்றுத் திறனாளி இல்லையே என்று கேட்கிறார்கள். இதுதான் என் நடிப்புக்கு கிடைத்த வெற்றி. மெல்ல திறந்தது கதவு தொடரில் தெனாவெட்டான அல்ட்ரா மார்டன் பொண்ணு. இரண்டையும் சவாலா எடுத்துக்கிட்டு பண்றேன். மற்றபடி படிப்பு என்கிறது என்னோட ட்ரீம். அதை என்றைக்கும் விட மாட்டேன். நிறைய படிக்கணும், நிறைய நடிக்கணும் இதுதான் என்னோட ஆசை" என்கிறார் பவித்ரா.
நன்றி: தினமலர்
-
4th January 2017, 03:33 AM
#596
Moderator
Diamond Hubber
நாகினி இயக்குனருடன் சுதா சந்திரன் மோதல்
பிரபல இந்தி தொடரான நாகின் தற்போது நாகினி என்ற பெயரில் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்தியில் நாகின் தொடரின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் படப்பிடிப்புகளும் மும்முரமாக நடந்து வருகிறது. மவுனி ராய் இரண்டாம் பாகத்திலும் நாகினியாக நடிக்கிறார். அர்ஜுன் பிலானி, ஆதா கான், ஆகியோருடன் சுதாசந்திரனும் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பில் நடிகை சுதாசந்திரனுக்கும் இயக்குனர் குஷால் ஜவேரிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அனைவருக்கும் அவர்களுக்கான வசனம் முதலிலேயே கொடுக்கப்பட்டு விடும். அதனை அவர்கள் வீட்டில் மனப்பாடம் செய்துவிட்டு வரவேண்டும். ஸ்பாட்டில் நடிப்பு மட்டுமே சொல்லித் தரப்படும். ஆனால் சுதா சந்திரன் வீட்டில் மனப்பாடம் செய்ய வேண்டிய வசனத்தை ஸ்பாட்டில் மனப்பாடம் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இயக்குனர் "எப்போதும் ஸ்கிரிப்டும் கையுமாக இருந்தால் எப்படி?" என்று கோபித்துக் கொண்டுள்ளார். அதற்கு சுதா சுந்திரன் "சூட்டிங் ஸ்பாட்டில் ஸ்கிரிப்டை கையில் வைத்திருக்காமல் பீர் பாட்டிலையா வைத்திருப்பார்கள்?" என்று திருப்பி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாகி படப்பிடிப்பு தடைபட்டது.
>"குஷால் ஜவேரி இயக்கினால் நான் நடிக்க மாட்டேன். அவருக்கு நான் நடிப்பது பிடிக்கவில்லை. வேண்டுமானால் வேறு யாரையாவது நடிக்க வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிய சுதா சந்திரனை தயாரிப்பார்கள் சமாதானப்படுத்தி உள்ளனர். "இயக்குனர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே நடிப்பேன்" என்று கூறியுள்ளார். இயக்குனர் "நான் என் கடமையை செய்தேன். அதற்கு எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார். ஒரு வழியாக இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர். அரை நாள் படப்பிடிப்பு தடைபட்டு மீண்டும் நடந்திருக்கிறது. இப்போதைக்கு சமானதானம் ஆனாலும் சுதா சந்திரன் எப்போது வேண்டுமானாலும் தொடரில் இருந்து விலகலாம் என்கிறார்கள்
நன்றி: தினமலர்
-
22nd January 2017, 09:18 PM
#597
Moderator
Diamond Hubber
சீரியல் இயக்குனர் ஆனார் சுந்தர்.சி
முறைமாமன் படத்தில் தொடங்கி, அரண்மனை இரண்டாம் பாகம் வரை 30-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருக்கிறார் சுந்தர்.சி. உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கிரி அவற்றில் சில வெற்றிப்படங்கள்.
இயக்குனராக இருந்தவர் தலைநகரம் படத்தின் மூலம் நடிகரானார். வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், முரட்டுகாளை அரண்மனை உள்பட 15 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். தற்போது சங்கமித்ரா என்ற பிரமாண்ட பட்ஜெட் படத்தை 3 மொழிகளில் இயக்க ஆயத்தமாகி வருகிறார்
.இதற்கிடையில் அவர் சின்னத்திரை சீரியல் இயக்குனராகியிருக்கிறார். அவரது முதல் படைப்பு நந்தினி. அரண்மனை படத்தின் சாயலில் தயாராகும் பேண்டசி தொடர். வருகிற 22ந் தேதி முதல் ஒளிப்பாகிறது. திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரை தயாரிப்பது குஷ்ப சுந்தரின் அவ்னி சினி மேக்கர்ஸ் நிறுவனம்.
நன்றி: தினமலர்
-
22nd January 2017, 09:21 PM
#598
Moderator
Diamond Hubber
தொழில் அதிபர் தோனியை மணக்கிறார் மேக்னா நாயர்
குழந்தை நட்சத்திரமாக விளம்பர படங்களில் நடித்து அதன்பிறகு மலையாள சின்னத்திரை நடிகை ஆனவர் மேக்னா நாயர். மலையாளத்தில் பல சீரியல்களில் நடித்து விட்டு தற்போது தமிழில் தெய்வம் தந்த வீடு தொடரில் சீதாவாக நடிக்கிறார். இதே சீரியலின் மலையாள வெர்ஷனான சந்தனமழா தொடரிலும் மேக்னா நடித்து வருகிறார். கயல் படத்தில் ஆனந்தியின் தோழியாக நடித்தவர் அதன் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை.
மேக்னா தொழில் அதிபர் தோனியை திருமணம் செய்ய இருக்கிறார். மலையாள தொடர் ஒன்றில் உடன் நடித்த நடிகையின் அண்ணன் தோனி. நீண்ட நாட்களாக காதலித்து வந்தவர்கள் இப்போது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். வருகிற ஏப்ரல் 22ந் தேதி கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் நிச்சயதார்த்தம் நடக்கிறது. திருமணம் 30ந் தேதி திருச்சூரில் நடக்கிறது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலும் நடிக்க முடிவு செய்திருக்கிறார் மேக்னா.
நன்றி: தினமலர்
-
8th February 2017, 02:33 AM
#599
Moderator
Diamond Hubber
கேரவனுக்குள் சமையல் செய்யும் ரம்யா கிருஷ்ணன்!
ஆம்பள, பாகுபலி படங்களைத் தொடர்ந்து மீண்டும் பாகுபலி-2, சபாஷ் நாயுடு ஆகிய படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன். அதோடு, வம்சம் என்ற சீரியலை தயாரித்து அதில் சக்தி, அர்ச்சனா என்ற இரண்டுவிதமான வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், வம்சம் சீரியல் ஸ்பாட்டில் சில நாட்களில் தானே சமைத்து அதை யூனிட்டில் உள்ள நடிகர் நடிகைகளுக்கு கொடுத்தும் அசத்துகிறாராம் ரம்யா கிருஷ்ணன்.
இதுகுறித்து வம்சம் சீரியல் குழுவினர் கூறுகையில், ரம்யா கிருஷ்ணன் மேடம் ஸ்பாட்டிற்குள் வந்தாலே ஜாலியாக இருக்கும். அனைவரிடமும் கலகலப்பாக காமெடியாக பேசுவார். இதனால் ரம்யா மேடம் ஸ்பாட்டிற்கு எப்போது வருவார் என்று அனைவருமே காத்திருப்பார்கள். அதோடு, சில நாட்களில் கேரவனுக்குள்ளேயே அவர் சமைக்கத் தொடங்கி விடுவார். கிச்சன் கில்லாடியான அவர், நான்வெஜ், வெஜிடேரியன் என சமையல் செய்து அதை யூனிட்டில் நடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு கொடுப்பார். அவரது சமையல் ரொம்ப டேஸ்டியாக இருக் கும் என்பதால் அவர் சமைத்ததை சாப்பிட அனைவரும் ஆர்வமாக இருப்போம் என்கிறார்கள்.
நன்றி: தினமலர்
-
8th February 2017, 02:38 AM
#600
Moderator
Diamond Hubber
சுதா சந்திரனுக்கு பதிலாக கலக்கும் ரூபாஸ்ரீ
90ளில் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்தவர் ரூபாஸ்ரீ. எங்க வீட்டு வேலன், இதய நாயகன், பொண்டாட்டியே தெய்வம், டூயட், எல்லாமே என் ராசதான் படங்களில் நடித்தார். சினிமாவில் மார்க்கெட் குறைந்ததும் சின்னத்திரைக்கு வந்தார்.
அம்பிகை தொடர் மூலம் சீரியல் நடிகை ஆனார். மைடியர் பூதம், அகல்யா, உதிரிப்பூக்கள், வாணி ராணி உள்பட பல சீரியல்களில் நடித்தவர். தற்போது விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் தெய்வம் தந்த வீடு தொடரில் நடித்து வருகிறார். தெய்வம் தந்த வீடு தொடரில் இருந்து சுதா சந்திரன் விலகிய பிறகு அந்த கேரக்டரில் ரூபாஸ்ரீ நடிக்கிறார், இதற்கு முன்பக தெய்வம் தந்த வீடு தொடரின் மலையாள வெர்ஷனான சந்தனமழாவில் நடித்தார். இப்போது அதே கேரக்டரை தமிழில் நடிக்கிறார்.
20 படங்களில் ஹீரோயினாக நடித்தவர், 10க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் நடித்து முடித்து விட்டார். சுதா சந்திரன் இடத்தை மிக எளிதாக பிடித்துவிட்டார். தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் நடிக்கும் அழகான மாமியார். அடுத்து சினிமாவிலும் குணச்சித்திர ரோலில் தலை காட்ட இருக்கிறார்.
நன்றி: தினமலர்
Bookmarks