Results 1 to 10 of 13

Thread: சந்தோஷமே வருக வருக..

Hybrid View

  1. #1
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சந்தோஷமே வ்ருக வருக..

    இடர் களையும் பதிகம்

    பத்தாம் பாடல்

    *

    *
    பத்தாம் பாடல்

    “தேவதையைக்கண்டேன்காதலில்விழுந்தேன்
    என்உயிருடன்கலந்துவிட்டாள்.
    நெஞ்சுக்குள்நுழைந்தாள்மூச்சினில்நிறைந்தாள்
    என்முகவரிமாற்றிவைத்தாள்.”

    “என்ன ஆச்சு திடீர்னு..”

    “ச்சும்மா பாடக்கூடாதா மன்ச்சு”

    “பாடு..அதுக்குன்னு இடம்லாம் இருக்கோன்னோ..இங்க என்ன ஈசனைப் பத்திப் பேசறச்சே..யாராக்கும் அந்த ஏஞ்சல்..பக்கத்து ஃப்ளாட் தமன்னா மாமியா..உன் வீட்டுக்காரிக்குத் தெரியுமா”

    “ச் நீயே மாமின்னு சொல்லிட்டு இப்படிக் கேட்டா என்ன அர்த்தம்..இருந்தாலும் தாங்க்யூ”

    “எதுக்கு”

    “ஸீ ஆங்கிலத்தில ஏஞ்சல் நா தேவதை.. இல்லியோ.. தமிழ்லயும் ஒரு வார்த்தை இருக்கு துஞ்சல் உனக்குத் தெரியுமோ..ஹா ஆஆவ்..

    ”துஞ்சல்னு சொல்றச்சயே கொட்டாவி விடற.. சரி.. துஞ்சல் நா தூக்கம்..ஓ..இந்தப் பாட்டில வந்துருக்கா”

    “எஸ்.. இதுல மட்டுமில்லை இன்னொரு பதிகத்துலயும் வருது..

    துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும்
    நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
    வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
    றஞ்ச வுதைத்தன அஞ்செழுத்துமே.

    நமசிவாயன்னு என்ற ஐந்தெழுத்துக்களை தூக்கம் வரும் போதும் தூக்கமில்லாத பொழுதிலும் மனம் கசிந்துருகி போற்றவேண்டும். பல வழிகளிலும் திரியும் மனத்தைக் கட்டுப்படித்தி இறைவனையே நினைத்து அவனது திருத்தாள்களை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை இறுதியில் கவரவந்த காலதேவனிடமிருந்து மீட்டுத் தந்தது அந்த ஐந்தெழுத்தே ஆகும்

    சரி.. இப்ப என்ன செய்யலாம்..பாட்டுக்குள்ள போகலாமா..

    ஓ.கே..

    *


    வெஞ்சொற்றஞ் சொல்லாக்கி நின்றவேட மிலாச்சமணும்
    தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார்
    துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திர நின்னடியே
    நெஞ்சில்வைப் பாரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
    *

    திரு நெடுங்களமேவிய இறைவனே.. எனை ஆட்கொண்ட ஈசனே
    மனதிற்கும் உடலுக்கும் காயம் விளைக்கக் கூடிய தீய கொடுமையான சொற்களையே தம் சொற்களாக்கிக் கொண்டு தாங்கள் கொண்ட வேடத்திற்குப் பொருந்தாமல் இருக்கும் சமணரும் நற்சார்பில்லாத புத்தர்களும் வேதம் சொல்லும் உண்மைப்பொருளை ஒருபொழுதும் உணராதவர்கள்..அவர்களை விடுத்து அழியாத புகழைக் கொண்ட வேதங்களால் போற்றப்படும் இறைவனின் திருவடியை நெஞ்சிலெண்ணி வாழும் அடியவர்களின் துயரங்களைப் போக்குவாயாக

    *

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •