-
29th September 2015, 08:39 AM
#12
Junior Member
Veteran Hubber
தொடர் - 3.
காங்கிரஸ் கட்சியில் பிளவு :
பிரிட்டிஷார் ஆட்சியில் பிராமணர் அல்லாதோர், முக்கியமாக ஒடுக்கப்பட்டவர்கள் சிறுக சிறுகவேனும் தலை தூக்கி மதிப்பு பெற்று வருவதும்,, பாதிரியார் உதவியினால் கல்வித் துறையில் ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேற்றமடைந்து வருவதும், ஆங்கிலக் கல்வியின் பயனாக நாட்டிலே மத உணச்சியும் குருட்டு நம்பிக்கைகளும் குறைந்து வருவதும், அந்த வைதீக அரசியல் வாதிகளுக்கு மிக்க அச்சத்தை உண்டு பண்ணின. பிராமணியத்துக்கு இந்து மதமே அரணாக இருந்து வருவதனால் இந்து மதாபிமானம் குன்றினால் பிராமணீ யம் ஒழிவது திண்ணம் என்று அவர்கள் உணர்ந்தனர். மதத்தையும்,, சுவர்க்க நரகங்களையும் காட்டி மக்களை ஏய்க்க முடியாத நிலை ஏற்படவே, தேசியத்தை காட்டி ஏய்க்க எண்ணம் கொண்டனர். எனவே, பிரிட்டிஷ் அரசாங்கம் மீது பாமர மக்களுக்கு துவேஷத்தையும், வெறுப்பையும் உண்டு பண்ணும் வழிகளை தேடலாயினர்.
இந்திய செல்வத்தை கொள்ளையடிப்பதும், இந்தியக் கலைகளையும் நாகரீகத்தையும் அழிப்பதே பிரிட்டிஷாரின் நோக்கம் என்றும், இந்தியக் கைத்தொழில்கள் மறைந்ததற்கும், இந்தியா வறுமை நாடனதற்கும் பிரிட்டிஷாரே காரணமென்றும், பிரிட்டிஷாரை ஒட்டி சுயராஜ்ஜியம் ஸ்தாபித்தாலே இந்தியா காப்பாற்றப்படும் என்றும் அவர்கள் விஷமப் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த முயற்சி ஆரம் பத்தில் பலனளிக்க வில்லையென்றாலும், காலப்போக்கில் அவர்கள் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் தலைவர்களும், ஆரம்பத்தில் இதற்கு செவி சாய்க்க வில்லை என்றாலும், நாளடைவில் மிதவாதிகள் அல்லாதோர் எண்ணிக்கை காங்கிரஸ் கட்சியில் பெருகலாயிற்று. பால கங்காதர திலகர் தலைமையில், அவர்கள் 1907ல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், காங்கிரஸ் கட்சியை கைப்பற்ற முயன்றனர். அம்முயற்சி பலிக்க வில்லை. அன்று தொட்டு, காங்கிரஸ் கட்சியில் பிளவு உண்டாயிற்று.
தொடரும் ....
Last edited by makkal thilagam mgr; 29th September 2015 at 08:42 AM.
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
Bookmarks