Results 1 to 10 of 126

Thread: கவிதை எழுதுவோம் வாருங்கள்.

Threaded View

  1. #28
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஓமானில் ஒரு கற்பனை ஓட்டல் கட்டிப் பார்த்தேன்!
    *
    ஓமானில் உள்ளவொரு ஓட்டல் – அங்கே
    …ஓயாமல் கிடைத்திடுமே நல்லமிள கூட்டல்!
    ராமா வெனச்சொல்லி பாட்டி – அதை
    …டக்கெனவே செய்திடுவாள் பல்சுவைகள் கூட்டி

    உளுந்திலே செய்திட்ட வடையாம் – அதில்
    ..உழுதபடி நின்றிருக்கும் சாம்பாரும் மடையாம்
    கிளுகிளுப் பாககுலோப் ஜாமூன் – கண்கள்
    சிமிட்டவே ஆசைகள் பொங்கிடும் ஆமென்!.

    மல்லிகைப் பூச்சாயல் இட்லி – உடன்
    ..மங்கையின் இதழ்வண்ணக் காரத்தில் சட்னி
    விள்ளவே கண்டிருப்பார் எல்லாம் – பின்னர்
    …வேகமாய் உள்செல்ல போய்விடும் பட்(டி)னி..!

    ஆசையாய் இளநங்கை போலே – நன்கு
    ..ஆர்ப்பாட்ட மில்லாத முறுவலில் தோசை
    ஓசைகள் கேட்டிடும் பாரு – எண்ணெய்
    ..விட்டிட நாவிலே ஊறிடும் ஜோரு..

    பாஷைகள் வேண்டாமே இதற்கு – அந்த
    ..பாதுஷா இனிப்பினில் சொர்க்கமே எதற்கு
    காசுபணம் பார்த்திடவும் கண்டோம் – நல்ல
    …கானத்தின் இனிமைபோல் சுவைகள்பல தின்றோம்.!

    ஓமானில் நல்லவொரு ஓட்டல் – அதில்
    ..உண்டவர்கள் மனதிலே நல்லசீ ராட்டல்..
    ஏமாற்றம் எக்காலம் வாரா- அதன்
    ..ஆறாத சுவைபோல எவ்விடமும் வாரா

    **
    Last edited by chinnakkannan; 5th June 2015 at 11:41 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •