-
6th February 2015, 11:49 AM
#11
Senior Member
Senior Hubber
வெங்காய சாம்பாரை விரல்தொட்டுப் பக்குவத்தில்
..வித்தகமாய் வைத்திடுவாள் அம்மாவும் அக்காலம்
தங்கமெனத் தகதகக்கும் சாம்பாரில் வெண்டைக்காய்
..தங்கையவள் போட்டிடுவாள் பெருஞ்சுவையாய் அக்காலம்
சங்கமிக்கும் பலகாய்கள் தாளகக் குழம்பினிலே
…சகோதரியும் தான்செய்வார் அருஞ்சுவையில் அக்காலம்
பங்கமிலை சொல்வதற்கு மனைவியவள் சாம்பாரும்
..பல்சுவையே என்றுமனம் நினைத்திடுமே இக்காலம்!..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th February 2015 11:49 AM
# ADS
Circuit advertisement
Bookmarks