-
11th January 2015, 07:45 PM
#11
Senior Member
Senior Hubber
பெருமூச்சு சிறுமூச்சு விட்டு விட்டே
…பெரியவளும் ஓடிவந்தாள் என்னைக் கட்டி
விறுவிறுப்பாய் முகமாற்றம் செய்த வாறே
…வேகத்தில் சொல்லிவிட்டாள் குற்றந் தன்னை
சிறுபெண்ணும் முகங்கோணி நெருங்கி வந்தாள்
..தீர்க்கமாகத் தமக்கைபொய் சொன்னாள் என்றே
துறுதுறுத்த கண்களிலே நீரும் ஓட..
..துன்பத்தில் அவள்சொலவும் எடுத்தேன் தூக்கி
பெரியவளே வாயிங்கே எனக்கூப் பிட்டால்
..பிகுபலவும் செய்தவண்ணம் வந்தாள் பின்னர்
தெரியும்ப்பா எப்போதும் குட்டிப் பெண்ணைக்
..திகட்டாமல் சீராட்டிச் செல்வீர் என்று
சிரித்தேன்நான் மனக்கவலை மறந்து போக
…சின்னவளே பெரியவளே நீங்கள் எந்தன்
பிரியாத விழிகளன்றோ சொல்லும் போதில்
…பிரியமான மனைவிகேட்டாள் நாந்தான் யாராம்..?!
-
11th January 2015 07:45 PM
# ADS
Circuit advertisement
Bookmarks