அழகிய தமிழ் மகள்


கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகும் `அழகிய தமிழ் மகள்' நிகழ்ச்சியில், ராசிபுரத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது நடமாடும் கருணை இல்லத்தை நேரில் கண்டு நேயர்கள் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர்

கே.பி.முத்துக்குமார், `யமஹா' என்.பிரகாஷ் தயாரித்து, நடிகை ரோகிணி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், சாதனை பல படைத்து, புதியதோர் உலகம் செய்யும் பெண்மணிகள் அறிமுகம் செய்யப்படுகின்றனர். அந்த வரிசையில், தெருவோர குப்பை தொட்டிகளில் வீசி எறியப்படுகின்ற அனாதை குழந்தைகளை, தேடி எடுத்து சீராட்டி வளர்க்கும் மேரி என்ற தெய்வத்தாயை காணமுடிந்தது.

இதுபோன்ற அரும்பணி ஆற்றும் பெண்கள் பற்றிய அரிய தகவல்களைத் தரும் நிகழ்ச்சி என்பதாலேயே இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு அதிகம்

நன்றி: தினதந்தி