-
17th January 2009, 09:42 PM
#11
Moderator
Diamond Hubber
இப்படியும்...
ஏழு வருட போராட்டத்திற்கு பின் பிரபல டிவியில் சீரியலுக்கு ஸ்லாட் வாங்கியவர் `நாட்டியப் பேரொளி' பெயர் கொண்ட பெண் தயாரிப்பாளர். அதில் கதாநாயகியாக நடிக்க ரம்யமான நடிகையை அவரே விரும்பி அழைத்து வந்தார். நடிகை அப்போது பெரியதிரையில் இருந்து ஒய்வு பெற்றிருந்தார். `சின்னத்திரையில் முதன்முதலாக' என்ற அடைமொழியுடன் நடிக்க வந்தார். அப்படி வந்ததும்வராததுமாக தனது தங்கையையும் தயாரிப்பாளரின் மகளையும் தயாரிப்பாளராக்க கேட்டுக் கொண்டார். அதுவும் நடந்தது.
இங்குதான் வினை ஆரம்பித்தது. தயாரிப்பாளர் என்ற முறையில் கதையிலும், மற்ற நடிகர்களின் காட்சியிலும் கத்திரி போட வலியுறுத்தினார், நடிகை. இதற்கிடையே தனக்கேயுரிய அனுபவத்தில் நூற்று ஐம்பது எபிசோடுகளைக் கடந்து சீரியலை மக்கள் மனதில் இடம்பிடிக்க வைத்தார், தயாரிப்பாளர்.
சீரியல் வளர்ச்சியில் தயாரிப்பாளர் இப்படி கவனமாக இருந்த நேரத்தில் மொத்த டீமையும் தனதாக்கிக் கொண்டு விட்டார், ரம்யம். நடிகையின் பேராசைக்கு தன் உழைப்பும் விரயமானதில் நொந்து போனார், தயாரிப்பாளர். சீனியர் தயாரிப்பாளருக்கே இப்படி ஒரு நிலையா என்று சின்னத்திரை வட்டாரம் அதிர்ச்சியடித்து கிடக்கிறது.
நடிக்க அழைப்பின்றி வீட்டில் இருந்த நடிகையை சீரியலுக்கு அழைத்து வந்த தயாரிப்பாளருக்கு நாமம்! என்னன்னு சொல்றது!
thanks - dailythanthi
-
17th January 2009 09:42 PM
# ADS
Circuit advertisement
Bookmarks