-
20th May 2012, 06:12 PM
#1
Senior Member
Diamond Hubber
ஊர் ஏரியில்
நீர் ஆடியில்
முகம் திருத்தும்
கருவேல மரங்கள்
கடும் கோடைகளில்
கண்ணாடி உடைகையில்
தலைவெட்டிக் கொள்கின்றன.
--- அழகிய பெரியவன்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
20th May 2012 06:12 PM
# ADS
Circuit advertisement
-
21st May 2012, 12:59 AM
#2
Senior Member
Diamond Hubber
குழந்தைகள் என்றால்...
குழந்தைகளென்றால் கடவுளுக்கு ரொம்பப் பிடிக்குமாம்
குழந்தைக்கு அதைப் பற்றி என்ன?
கடவுள் எப்போதும் குழந்தைகளோடு இருக்கிறாராம்
குழந்தைக்கு அதைப் பற்றி என்ன?
அண்டத்திலேயே பெரிய சிம்மாசனம் கடவுளுடையதுதானாம்
குழந்தைக்கு அதைப் பற்றி என்ன?
கடவுள் அதிலேவந்து குந்தியிருகாதப்போ
குழந்தைகள் அதிலே ஏறி உட்கார்ந்து நடிக்குமாம்
கடவுளுக்கு அதைப் பற்றி என்ன?
சமயங்களில் குழந்தைகள் அதிலே சிறுநீரும் பெய்துவிடுமாம்
கடவுளுக்கு அதைப் பற்றி என்ன?
-- தேவதேவன்
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
21st May 2012, 08:09 AM
#3
Senior Member
Diamond Hubber
தனியாக இல்லை
சாலையின் ஓரத்தில்
தன்னந்தனியே வீழ்பவன்
யாரோ ஒருவன்
தன்னைத் தொட்டுத் தூக்கும்போது
நினைக்கிறான்
தான் தனியாக இல்லை
என்று
சாலையின் ஓரத்தில் வீழும்
யாரோ ஒருவனைத்
தொட்டுத் தூக்கும்
யாரோ ஒருவன்
நினைக்கிறான்
தான் தனியாக இல்லை
என்று
-- மனுஷ்ய புத்திரன்
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
21st May 2012, 08:37 AM
#4
Senior Member
Diamond Hubber
பாலை
பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல்.
என் பாதம் பதித்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல் தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒரு பிடி நிலம்.
--- பிரமிள்
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
21st May 2012, 08:47 AM
#5
Senior Member
Diamond Hubber
என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!
-- நகுலன்
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
21st May 2012, 11:17 PM
#6
Senior Member
Seasoned Hubber
only kavidhai???? appadina vidu jut than
-
22nd May 2012, 08:20 AM
#7
Senior Member
Diamond Hubber
San_K
கவிதை மட்டுமே அல்ல! எதுவேணாலும் கொண்டுவாருங்கள்! படித்து இன்புறுகிறோம்!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
31st May 2012, 01:57 PM
#8
Senior Member
Seasoned Hubber
என் பெயர் - மருதாயி
- இன்குலாப்
ஆன்ற தமிழ்ச் சான்றோரே!
தொல்காப்பியம்
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
வளையாபதி
குண்டலகேசி
கம்ப இராமாயணம்
பொயபுராணம்
மறந்து விட்டேன் -
திருக்குறள்
எல்லாவற்றிலும் சுட்டப்பட்டவள் நான்
தாய்மொழி - தமிழ்
பெயர் - மருதாயி
தொழில் - பரத்தை
என்னைக் கடைமகள் எனலாம்..
மதுரையைக் கொளுத்திய
கற்பரசியே -
தலையாய கற்பினள் அல்லள்!
உங்கள்
மூத்த தமிழ் அளவுகோலில்..
கற்புத் தோன்றிய அன்றைக்கே
நானும் தோன்றிவிட்டேன் !
அய்யா
ஆன்ற தமிழ்ச் சான்றோரே!
என்னிடம் முதலில் வந்தவன்
உங்கள் கொள்ளுப் பாட்டன்..
இப்பொழுது
வந்து போனவன்
கொள்ளுப் பேரன்!
என்றாலும்
பாட்டன் எதிர்பார்த்தான் பாட்டியிடம்
"பெய்யெனப் பெய்ய"
தன் சடலம் எயும் போது
உடன்வேக..
பாட்டி ஒருபோதும்
பாட்டனிடம் கேட்கவில்லை
"பெய்யெனச் சொல்லுக
உடன் வேக"
இருக்கையில் சில சமயங்களிலும்
போகையில் சில சமயங்களிலும்
பாட்டி
தன் தங்கையைத் தாரமாக்குவாள்
இல்லாவிடினும் இவன் மேய்வான்..
பத்தினியைப் பறிகொடுத்த
பாட்டனுக்கு
மச்சினியைக் கைப்பிடித்த
ஆறுதல்..
இல்லத்தரசி இருக்க என்னிடம் வந்தவனுக்கும்
மனைவி இருக்க மச்சினியைப் பிடித்தவனுக்கும்
ஒரு கீறலும் இல்லை கற்பில்..
தமிழ்க் குடும்பம் புனிதமானது!
தமிழ்ச் சமூகம் காலகாலமாய்க்
கற்புடையது.!
விரும்பியவனைச் சேர்வது
கற்பாகாது.
கட்டியவனை ஒப்புவதுதான்
கற்பாகும்..
கட்டியவன் முகமன்றி
வேறு முகம் கூடாது
காண.
கட்டியவன் நிழலன்றி
வேறு நிழலில்லை
பட.
அய்யா! அன்றதமிழ்ச் சான்றோரே!
கற்பரசி நினையாவிடினும்
கண்டவன் அவளை நினைத்தால்
அவள் கற்புக்கரசி ஆகமாட்டாள்..
கற்புடைப் பெண்டிர் பிறர் நெஞ்சு புகார்..
தமிழ்நாட்டுக் குரங்கும் மீனும்
கற்புடையவைதாம்.
கைம்மை உய்யாக் காமர் மந்தி
ஓங்குமலை அடுக்கத்துப்
பாய்ந்து
உயிர் செகுக்கும்.
தன்கணவன்மீன் அல்லாத
வேறு ஆண்மீனைத் தொடநேர்ந்த
மனைவிமீனை
வெட்கம் பிடுங்கித் தின்னும்..
தற்கொலை செய்ததோ
என்னவோ
தண்ணீல்..
உடன் கட்டை ஏறிய
பத்தினிப் பெண்ணைப்
பாராட்டாத
தமிழ் எழுத்தில்லை.
பொயார் எழுத்தைத் தவிர.
பாவாடையும் சேலையுந்தான்
தமிழ்ப் பண்பாடு..
சுதாரும் பேண்டும்
கவர்ச்சிக் கண்றாவி!
மொபட் ஓட்ட பேண்டுதான் வசதியா?
மொபட் ஓட்டாதே..
படைநடை பயிலாதே..
தமிழ்ப் பெண் அடக்கமானவள்..
ஆறடிக் கூந்தல் இன்னுமோர்
அடையாளம்.
கூந்தல்வார நேரமில்லையா?
மூக்கடைப்பு நோய்த் தொலலையா?
கூந்தலைக் குறைக்காதே
தமிழ் குறைந்து போய்விடும்!
ஒருவனுக்கு உண்மையாய்
இருப்பதே தமிழ்க் கற்பு..
அவன் கல்லானாலும் மண்ணானாலும்
கட்டியவள் ஏற்கெனவே கன்னிதானா
என்று எதிர்பார்ப்பதே
தமிழ் மரபு நியாயம்..
தமிழர் அனைவரும் உறுதி கொள்ளலாம்.
இங்கிலாந்து நடத்திய
கன்னிமைச் சோதனையை
இல்லறம் தொடங்குவோன்..
நடத்திப் பார்க்கலாம்
தேறினால் மட்டுந்தான்
பண்பாடு தேறும்..
தமிழ்க் குடும்பம் புனிதமானது..
அய்யா ஆன்றதமிழ்ச் சான்றோரே!
உங்கள் பண்பாட்டை நீங்கள் பிடித்த
காலகாலமாய் நானும் நடக்கிறேன்
கற்புத் தோன்றிய அன்றைக்கே
நானும் தோன்றிவிட்டேன் -
தாய்மொழி - தமிழ்
பெயர் - மருதாயி
தொழில் - பரத்தை !
M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....
இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!
டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!
"The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."
-
31st May 2012, 08:24 PM
#9
Moderator
Diamond Hubber
"ஒருவருக்கொருவர்
விசாரிப்புகளால்
விசால மடைகிறோம்
சுமைகளை மறந்து
சுகமடைகிறோம்
கடனழுத்தியும்
இடைவெளி வருத்தியும்
களைக்கவிடாமல்
காத்து வருவதே
ஞாயிறுதான்"
சுட்டதுதான் .. அசல் மறந்து விட்டது
Last edited by aanaa; 31st May 2012 at 08:27 PM.
"அன்பே சிவம்.
-
19th September 2012, 06:30 PM
#10
Senior Member
Seasoned Hubber
-
.
Ǣ¢,
ɢ
,
𧼡.
Š…
Ţ
Ǣ .
и
'Š…Ģ
θ
š ۼ'
ȡ.
,
ȢŢ
ɢ .
' ѡĸ
á¢'
ɸ ʧ Ӹ Ţ.
Š…, Ţ
ɡ
,
¢.
Ҿ
.
ȡ...
-
("ý šš" - Ţ ̾¢Ģ)
Last edited by geno; 19th September 2012 at 06:45 PM.
M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....
இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!
டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!
"The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."
Bookmarks