-
9th January 2015, 08:35 AM
#1
Senior Member
Platinum Hubber
நெஞ்சில் கபம்
கொடியதோர் சாபம்
உலுக்கும் இருமல்
நாட்டு காட்டு மருந்து
அனைத்தும் முயன்றும்
இல்லையோர் பலன்
சாவின் விளிம்பில்
ஊசலாடும் உயிர்
கொல்லாமல் கொல்லும்
கொடியதோர் வதை
உச்சி வான் ஓசோன்
உடம்புக்கு நல்லதாம்
தரையில் உலாவுவது
இப்படி வாட்டுமாம்
பனி வாடை காத்து
பக்குவமாய் இருந்து
தப்ப முடியவில்லை
மூப்புடன் கைகோர்த்து
மார்கழி இளிக்கிறது
மூச்சிரைத்தே சாவதல்ல
என் இறப்பின் கனவு
மதியை வெல்லும் விதியே
ஏன் என்னை சோதிக்கிறாய்
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
9th January 2015 08:35 AM
# ADS
Circuit advertisement
-
9th January 2015, 01:42 PM
#2
Senior Member
Senior Hubber
சோதிக்கிறாய் சுடரேந்திய சேல்விழிகளைக் கொண்டே
மேதினியில் மென்மூச்செலாம் குளிர்தென்றலாய் ஆக்கி
சேதிசொலும் உணர்வைநிதம் செழிப்பாய்க்கலைத் திங்கே
வாதியென வாதம்பல புரிகின்றனை அழகே
-
9th January 2015, 04:43 PM
#3
Senior Member
Platinum Hubber
அழகே தன்னை அறியாது
காண்பவரே பாக்கியசாலி
முழுதாய் ரசிக்கவல்லார்
சால சிறந்ததும் அதுவே
தன் அழகில் சொக்கியவன்
கண்ணெடுக்காமல் ஏங்கி
உருகியே செத்தொழிந்தான்
கருத்துள்ள கதை தான்
இறைந்து கிடக்கு அழகு
பக்குவமாய் பருகப் பழகு
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
9th January 2015, 06:42 PM
#4
Senior Member
Senior Hubber
பழகு எனச்சொன்னீர் பக்குவமாய் நயந்தே
அழகாய்க் கவித்துவமாய் அங்கே – நலத்துடனே
பேசினேன் அப்பா பெரிதாய்ப் பயனில்லை
ஏசுகிறார் என்கணவர் ஆம்..
-
10th January 2015, 10:46 AM
#5
Senior Member
Platinum Hubber
ஆம் என்றால் ஆமாம்தானா
இல்லையென்றால் இல்லைதானா
வஞ்சியரின் வார்த்தையிலே
அர்த்தமும் அகராதியும்
வேறென்ற விபரமறிவான்
அனுபவசாலி ஆண்பிள்ளை
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
10th January 2015, 11:50 AM
#6
Senior Member
Senior Hubber
ஆண்பிள்ளை வேண்டு மென்று
..அரசினைச் சுற்றி ச்சுற்றி
வீண்பேச்சுப் போல நெஞ்சில்
..வியத்தகு ஆசை கொண்டு
ஊண்முழுதும் விரதம் மங்கை
..ஒட்டியே செய்த காலம்
வேண்டாமல் போயே போச்சு..
..பெண்வரம் கேட்க லாச்சு
-
10th January 2015, 04:56 PM
#7
Senior Member
Platinum Hubber
கேட்கலாச்சு குத்தல் பேச்சு
மாமியும் நாத்தியும் பிசாசு
குறை சொல்வர் மூச்சுக்கு மூச்சு
வாய்த்தது களிமண்ணாய் ஆச்சு
மொத்தமாய் நிம்மதி போச்சு
வந்தவளுக்கு வயசுமாச்சு
வாழாமலே வெந்துபோயாச்சு
வீணாகுமோ அவள் பெருமூச்சு
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
11th January 2015, 07:45 PM
#8
Senior Member
Senior Hubber
பெருமூச்சு சிறுமூச்சு விட்டு விட்டே
…பெரியவளும் ஓடிவந்தாள் என்னைக் கட்டி
விறுவிறுப்பாய் முகமாற்றம் செய்த வாறே
…வேகத்தில் சொல்லிவிட்டாள் குற்றந் தன்னை
சிறுபெண்ணும் முகங்கோணி நெருங்கி வந்தாள்
..தீர்க்கமாகத் தமக்கைபொய் சொன்னாள் என்றே
துறுதுறுத்த கண்களிலே நீரும் ஓட..
..துன்பத்தில் அவள்சொலவும் எடுத்தேன் தூக்கி
பெரியவளே வாயிங்கே எனக்கூப் பிட்டால்
..பிகுபலவும் செய்தவண்ணம் வந்தாள் பின்னர்
தெரியும்ப்பா எப்போதும் குட்டிப் பெண்ணைக்
..திகட்டாமல் சீராட்டிச் செல்வீர் என்று
சிரித்தேன்நான் மனக்கவலை மறந்து போக
…சின்னவளே பெரியவளே நீங்கள் எந்தன்
பிரியாத விழிகளன்றோ சொல்லும் போதில்
…பிரியமான மனைவிகேட்டாள் நாந்தான் யாராம்..?!
-
12th January 2015, 10:31 AM
#9
Senior Member
Platinum Hubber
யாராம் வெல்வது
சக்தியா சிவனா
சிவனென்பது கதை
நம்புபவன் பேதை
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
12th January 2015, 08:24 PM
#10
Senior Member
Senior Hubber
பேதை எனச்சொல்வீர் பல்விதமாய் என்னிடத்தில்
..பெண்ணே நீயின்னும் வளரத்தான் இல்லையென
வாதை வாலிபத்தில் வாட்டாமல் இருந்திடுமோ
..வஞ்சி உன்னிடமே மையலது கொண்டதுவும்
போதை நெஞ்சினிலே நீர்கொள்ள வேண்டாமே
..பொறுமை மிகக்கொண்டு என்னழகை என்படிப்பை
சீதை போல்குணத்தை எந்தந்தை செல்வத்தை
..சிந்தை கொண்டிடுவீர் சொல்லிடுவீர் பதிலைத்தான்..
பதிலைத்தான் கேட்கின்றாய் அழகாக பாவாய்..
..பார்த்தவிழி மூடாத பேரழகுப் பெண்ணே
நதியைப்போல் நங்கையுந்தன் உடலோடும் நாணம்
..நன்றாகத் தெரிகிறது உன்வார்த்தை தன்னில்
விதிசெய்த கோலமெனச் சொல்லத்தான் செய்வேன்
..விழிமீனால் பேசுகின்ற உன்னிடமே பெண்ணே
மதிவதனங் கொண்டவொரு மங்கையிடம் முன்பே
..மனதைநான் கொடுத்துவிட்டேன் மன்னிப்பாய் பெண்ணே..
Bookmarks