-
28th October 2015, 02:36 PM
#1
Senior Member
Senior Hubber
அனுபவம் தலைப்பில் நீயும்
..அழகுறச் சொல்லு மேலும்
பனுவலோ பாவோ பின்னும்
..பாங்குடன் உரையோ ஏதும்
நுணுக்கமாய்ச் சொல்லு அங்கே
...நூதனப் புதுமை காட்டி
அனுதினம் நினைக்கும் வண்ணம்
..ஆய்ந்துதான் சொல்லென் றீர்நீர்
ஆழ்ந்து கொஞ்சம் யோசித்தால்
..அழகாம் மனிதன் நடத்துகின்ற
வாழ்வில் தினமும் தினம்தோறும்
..வாகாய்ப் பலவாய் அனுபவம்தான்
சுற்றம் சூழல் சிந்தனைகள்
..சூறா வளியாய்த் திருப்பங்கள்
மற்றும் இன்னும் பலவாறாய்
,...மாற்றம் தருமே அனுபவமே..
பல்வித அனுபவம் படப்படத்தான்
..பக்குவ நெஞ்சமும் தான்வருமே
நல்விதம் அல்விதம் எனவேதான்
.. நாளிலும் கிடைக்கும் அவையன்றோ
சொல்வதை கிடைப்பதைச் சிந்தையுள்ளே
..தொக்கியே வைத்துப் பாடத்தைக்
கற்றிடக் கடவுளும் தென்படுவார்
..கண்ணனின் தாசனும் சொன்னதன்றோ..
//கண்ண தாசனின் கவிதை பிறப்பினில் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் என ஆரம்பித்து..கடைசியில் அனுபவத்தால் தான் அமைவது வாழ்வெனில் ஆண்டவனே நீ ஏனெனக் கேட்டேன்
ஆண்டவன் எந்தன் அருகினில் வந்து அனுபவமே தான் நானெனச் சொன்னான் என வரும்..அதைஇங்கு பயன் படுத்தியிருக்கிறேன்//
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th October 2015 02:36 PM
# ADS
Circuit advertisement
Bookmarks