பூவை அவள்விழியில் பொங்கிவிட்ட எண்ணமென்ன
..புதிதாய்த் துளிக்கின்ற நீர்த்துளியின் சாரல்கள்
பாவை கன்னத்தில் மெளனித்து இறங்குவதும்
..பார்வை வெகுதூரம் வானொட்டிப் பார்ப்பதுவும்
தேவை என்னவெனக் கேட்டாலும் கூறாமல்
..தென்னை மரமெனவே நிற்கின்ற நிலையதுவும்
நாவைத் திறந்துமொழி சொன்னால்தான் தெரியுமெனில்
.. நங்கை நிற்கின்றாள் நாயகனை உள்ளிருத்தி..
Bookmarks