காலம் இவ்வாறு மாறும் என
கனவிலும் நினைக்கவில்லை
நேரில் பார்க்க இயலாத சொந்தம்
யாரும் நெருங்க முடியாத பந்தம்
தனிமையில் அவல நிலை
கண்ணீரில் அவளின் நிழல்
கவசம் முகத்தில் கவலை மனதில்
இனி வீழ்வேனோ இல்லை மீள்வேனோ
நம்பிக்கையின் விளிம்பில் நான்
விடிவு காலமே விரைந்தோடி வருவாயா
முடிவு மாற்றியே விடியலைத் தருவாயா