-
11th April 2017, 09:52 PM
#1
Moderator
Diamond Hubber
நடிப்புக்கு பிரேக் கொடுத்த சுஜிதா!
குழந்தை நட்சத்திரமாக தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கியவர் சுஜிதா. அதன்பிறகு சீரியல்களில் லீடு ரோல்களில் கணவருக்காக, மகாராணி, மருதாணி, விளக்க வச்ச நேரத்திலே, மைதிலி, ஒரு கை ஓசை என பல சீரியல் களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு சீரியல்களிலும் பிசியாக நடித்து வந்த சுஜிதாவை கடந்த இரண்டு ஆண்டுகளாக சீரியல்களில் காண முடியவில்லை.
என்ன காரணம்? என்று சுஜிதாவைக் கேட்டால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் சீரியல்களில் நடிக்காமல் பிரேக் கொடுத்ததற்கு என் மகன்தான் காரணம். அவன் குழந்தையாக இருந்தபோது என்னை தேடமாட்டான். ஆனால் ஓரளவு விவரம் தெரிந்த பிறகு நான் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்று விரும்பினான். அதனால் அவனுக்காக இரண்டு வருடங்களாக சீரியல்களில் நடிக்கவிலை. தற்போது பிரீகேஜி படிக்கும் அவன், விரைவில் எல்கேஜி படிக்கப்போகிறான்.
அதனால், மீண்டும் நான் நடிக்க தயாராகி விட்டேன். ஏற்கனவே நடித்தது போன்று முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று கூறும் சுஜிதா, ஒரு அம்மாவாக இருந்து பாச உணர்வுகளை வெளிப்படுத்திய எனக்கு இப்போது செண்டிமென்ட் வேடங்களில் கிடைத்தால் உணர்வுப்பூர்வமாக நடித்து நேயர்களை உருக வைத்து விடுவேன் என்கிறார்.
நன்றி: தினதந்தி
-
11th April 2017 09:52 PM
# ADS
Circuit advertisement
-
4th March 2017, 06:09 AM
#2
Moderator
Diamond Hubber
முழுநேர சினிமா நடிகையாகும் திவ்யதர்ஷினி
சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளினி டி.டி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. நம்பர்-ஒன் தொகுப்பாளினியும் அவர்தான். பொது மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிற வரும் அவர்தான். தற்போது திவ்யதர்ஷினி சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார்
சினிமா அவருக்கு புதிதில்லை. 1990ம் ஆண்டு சுபயாத்ரா என்ற மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ஜூலி கணபதி, நளதமயந்தி, விசில் படங்களில் நடித்தார். சரோஜா படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார்.
தற்போது தனுஷ் இயக்கி, தயாரித்து, நடிக்கும் பவர்பாண்டி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். சிறப்பு தோற்றம்தான் என்றாலும் கதையின் திருப்புமுனை கேரக்டரில் நடிக்கிறார். "திவ்யதர்ஷினி சூப்பராக நடிக்கிறார். அவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும்" என்று தனுஷ் அவரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.
இதனால் திவ்யதர்ஷினிக்கு சினிமாவில் தொடர்ந்து நடிக்கும் எண்ணம் வந்திருக்கிறது. கதாநாயகியாக இல்லாமல் கதைக்கு முக்கித்துவம் வாய்ந்த கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதற்காக கதைகள் கேட்டு வருகிறார். வருகிற ஏப்ரல் 14ந் தேதி பவர் பாண்டி வெளிவருகிறது. அதன் பிறகே புதிய படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. படங்களில் நடித்தாலும் சின்னத்திரையில் அவரது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
நன்றி: தினமலர்
-
11th April 2017, 09:07 PM
#3
Moderator
Diamond Hubber
பரத நாட்டியத்தில் புகழ்பெற்று வரும் சீரியல் நடிகை ஜெயஸ்ரீ!
பல சீரியல்களில் மாறுட்ட கேரக்டர்களில் நடித்தவர் ஜெயஸ்ரீ. தற்போது ரம்யா கிருஷ்ணனின் வம்சம் தொடரில் ரோஜா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இதுதவிர பரத நாட்டிய நிகழ்ச்சிகளும் பிசியாக நடத்தி வருகிறார் ஜெயஸ்ரீ.
அதுகுறித்து அவர் கூறுகையில், நான் சிறிய வயதில் இருந்தே பரத நாட்டியம் பயிலத் தொடங்கி விட்டேன். என் அம்மா லட்சுமிராவ் பரத நாட்டிய கலைஞர் என்பதால் எனது ஐந்தாவது வயதிலேயே அரங்கேற்றம் நடத்தி விட்டார். அதனால் பள்ளியில் படித்த காலத்திலேயே பரத நாட்டிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தேன். அது இப்போதுவரை தொடர்கிறது.
சீரியல்களில் நடிப்பது போக மீதமுள்ள நேரத்தை பரத நாட்டியத்திற்கு பயன்படுத்தி வருகிறேன். தமிழ்நாடு மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறேன். அனைத்து தரப்பினரும் பரத நாட்டியத்தை ரசிக்க வேண்டும் என்பதற்காக வள்ளி கல்யாணம் போன்ற ஆன்மீக கதைகளை மையப்படுத்தும் நடன நிகழ்ச்சிகளை அதிகமாக நடத்துகிறேன். நான் சீரியல்களிலும் நடித்து பிரபலமாகியிருப்பதால், நடனமாட செல்லும் இடங்களில் எனக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். பரத நாட்டியத்தில் நல்ல பெயரும், புகழும் கிடைக்கிறது.
அந்த வகையில், இதுவரை 1500 பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தி விட்டேன். நான் கற்ற இந்த கலையை மற்றவர்களை ரசிக்க வைப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், எனது கணவரான சீரியல் நடிகர் ஈஸ்வரும் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார். அதனால், எதிர்காலத்தில பரத நாட்டிய நிகழ்ச்சியினை இன்னும் பிரமாண்டமாக நடத்தவும் திட்டமிட்டிருக்கிறேன் என்கிறார் சீரியல் நடிகை ஜெயஸ்ரீ.
நன்றி: தினதந்தி
-
11th April 2017, 09:17 PM
#4
Moderator
Diamond Hubber
பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற ரம்யா -
சின்னத்திரை தொகுப்பாளினி, ரேடியோ ஜாக்கி, திரைப்பட நடிகை என பன்முகம் கொண்டவர் ரம்யா. அவரது இன்னொரு புதியமுகம் தற்போது பளு தூக்கும் வீராங்கணை. கடுமையான பயிற்சிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வீராங்கணையாகியிருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த மாநில அளவிலான 5வது பளு தூக்கும் போட்டியில் மூன்றவாது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். அடுத்த போட்டியில் தங்கம் வெல்வேன் என்ற அப்போது அவர் கூறியிருந்தார்.
அதன்படி தற்போது சென்னை கோட்டூர்புரத்தில் நடந்து வரும் மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் 70 கிலோ, 75 கிலோ, மற்றும் 80 கிலோ பிரிவில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் ரம்யா அடுத்து மும்பையில் நடைபெறும் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
நன்றி: தினதந்தி
-
11th April 2017, 09:50 PM
#5
Moderator
Diamond Hubber
யூ டியூப் சேனலில் கலக்கும் ஸ்ரீரஞ்சனி
விஜய் டி.வியிலும், புதுயுகம் சேனலிலும் நிகழ்ச்சி தொகுப்பு, நடனம் என்று கலக்கிக் கொண்டிருந்தவர் ஸ்ரீரஞ்சனி. கல்யாணம் முதல் காதல் வரை ஹீரோ அமித் பார்கவை காதலித்து திருமணம் செய்து கொண்டபிறகு சத்தமின்றி சின்னத்தரையிலிருந்து ஒதுங்கி விட்டார்.
ஆனால் மீடியாவின் இன்னொரு தளத்தில் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கிறார். மெட்ராஸ் சென்ட்ரல் என்ற யூ டியூப் சேனலில் ரீல் அந்து போச்சு என்ற காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு செம ரெஸ்பான்ஸ். இதுதவிர வெளிவரும் படங்களை விமர்சிக்கிறார். டுவிட்டர் பேஸ்புக் மூலம் திரைப்படங்களை புரமோட் செய்கிறார். இதற்கெல்லாம் காதல் கணவர் மிகவும் ஒத்துழைக்கிறாராம்.
கணவர் அமீத் பார்கவ் தற்போது கர்ஜனை என்ற படத்தில் நடித்து வருகிறார். கணவர் நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்கும் யோசனையிலும் இருக்கிறார் ஸ்ரீரஞ்சனி. டெக்னாலஜி வளரும்போது நாமும் அப்டேட் ஆகிக்கணும். ஒரே இடத்துல நிற்ககூடாது என்கிறார் ஸ்ரீரஞ்சனி.
நன்றி: தினதந்தி
-
10th May 2017, 05:34 AM
#6
Moderator
Diamond Hubber
சின்னத்திரைக்கு டாடா காட்டிய நாகினி மெளனிராய்
கடந்த பத்து ஆண்டுகளாக இந்தி சேனல்களில் டிவி தொடர், ஸ்டேஜ் ஷோக்களில் பங்கேற்று வந்தவர் மெளனிராய். குறிப்பாக பாலிவுட் சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரையில் கவர்ச்சிகரமாக தோன்றி கலக்கியவர் மெளனிராய். அவர் இந்தியில் நடித்த நாகினி சீரியல், தமிழிலும் ஒளிபரப்பாகி நாகினிராயை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. இந்த சீரியலின் இரண்டாம் பாகம் அடுத்து தமிழில் டப்பாகி வெளியாகும் நிலையில், அடுத்தபடியாக நாகினி தொடரில் மூன்றாம் பாகம் இந்தியில் படமாக்கப்படுகிறது.
ஆனால், நாகினி தொடரின் முதல் இரண்டு பாகங்களில் நடித்த மெளனிராய், மூன்றாம் பாகத்தில் நடிக்கவில்லை. காரணம், இந்தியில் நடிகர் சல்மான்கான் தயாரிக்கும் ஒரு படத்தில் மெளனிராய்க்கு கதாநாயகி வேடம் கிடைத்துள்ளது. அந்த படத்தில் நாயகனாக சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை முன்பே முடிந்து விட்டதால், நாகினி மூன்றாம் பாகத்தில் நடிக்க தனக்கு அழைப்பு வருவதற்கு முன்பே, தான் சினிமாவில் என்ட்ரி கொடுக்கப் போவதை சொல்லி சீரியலில் இருந்து விலகிக்கொண்டுள்ளாராம் மெளனிராய்.
நன்றி: தினதந்தி
-
10th May 2017, 05:43 AM
#7
Moderator
Diamond Hubber
விபத்தில் உயிரிழந்தது நானில்லை : நடிகை ரேகா விளக்கம்
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நடந்த சாலை விபத்தில் சின்னத்திரை நடிகை ரீகா சிந்து மரணம். பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த பொழுது, விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்தார்.
இதற்கிடையே விபத்தில் உயிரிழந்தது தெய்வ மகள் சீரியல் அண்ணியார் நடிகை காயத்ரி ரேகா என தகவல் பரவியது. இதனால் சினி உலகம் பரபரப்பானது. இதனையடுத்து விபத்தில் உயிரிழந்தது தான் இல்லை என ரேகா விளக்கம் அளித்துள்ளார். <br><br>வாட்ஸ்ஆப் வீடியோ மூலம் காயத்ரி ரேகா அளித்துள்ள விளக்கத்தில், கடவுள் அருளால் நான் நலமுடன் உள்ளேன். விபத்தில் சிக்கி உயிரிழந்தது வேறு சிந்து ரேகாவாக இருக்கலாம். நான் எனது குடும்பத்துடன் நலமாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
கார் விபத்தில் சின்னத்திரை நடிகை மர்ம மரணம்
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்புகுட்டை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கார் கட்டுபாட்டை இழந்து விபத்துகுள்ளானது. இதில் பெங்களூருவைச் சேர்ந்த டிவி துணை நடிகை ரீகா சிந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். காரில் அவருடன் வந்த மூன்று பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.<br><br>பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்த போது, அதிகாலையில் சாலையின் தடுப்பு சுவரின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் ரீகாவுடன் வந்த அவரது தோழி மற்றும் 2 ஆண் நண்பர்களும் தப்பி ஓடி உள்ளனர். இதனால் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக ரீகாவின் குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
<hr>
அனைவரும் சீட்பெல்ட் அணிந்திருந்த போது ரீகா மட்டும் எப்படி காரில் இருந்து வெளியே வீசப்பட்டார் எனவும், விபத்து என்றால் உடன் வந்தவர்கள் சம்பவ இடத்தில் இருந்து ஓடியது ஏன் எனவும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த வாரம், சந்தீப்குமார் என்ற சின்னத்திரை நடிகர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ரீகாவும் மர்மமான முறையில் இறந்துள்ளது சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி: தினதந்தி
-
10th May 2017, 05:57 AM
#8
Moderator
Diamond Hubber
மீண்டும் சின்னத்திரையில் ரோகினி
நடிகை ரோகினி தென்னிந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். அதுமட்டுமல்ல ஆவணப்பட இயக்குனர், குறும்பட இயக்குனர், திரைப்பட இயக்குனர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், சமூக ஆர்வலர் என பல முகங்களை கொண்டவர். கங்கா என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் கால் பதித்தார். அதன்பிறகு கேள்விகள் ஆயிரம், அழகிய தமிழ் மகள், ரோகினியின் பாக்ஸ் ஆபீஸ், கேள்வி நேரம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
>தற்போது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு வந்திருக்கிறார். லைட்ஸ் கேமரா ஆக்ஷ்ன் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார். இது சினிமா தொடர்பான நிகழ்ச்சி. சினிமா செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பேட்டி என கலவையாக ஒளிபரப்பாகிறது. நேற்று (30ந்தேதி) ஒளிபரப்பை தொடங்கிய இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகிறது. வார நாட்களில் மறு ஒளிபரப்பாகும்.
நன்றி: தினதந்தி
-
10th May 2017, 06:00 AM
#9
Moderator
Diamond Hubber
ஆங்கிலத்தில் பேசவே ஆடியோ விழாவுக்கு அழைத்தனர் - பாவனா
சினிமா படங்களின் ஆடியோ விழாக்களுக்கு சின்னத்திரையில் இருந்து ரம்யா, அஞ்சனா போன்ற தொகுப்பாளினிகள்தான் சமீபகாலமாக பங்கேற்று வருகிறார்கள். ஆனால், சிலதினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஏன்டா தலையில எண்ண வைக்கல படத்தின் ஆடியோ விழாவுக்கு எதிர்பாராதவிதமாக விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் வந்திருந்தார்.
அப்போது அவரை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். அதையடுத்து பேசிய பாவனா பாலகிருஷ்ணன், நான் இதுவரை எந்த சினிமா படங்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதில்லை. இந்த நிகழ்ச்சிக்கு திடீரென்று அழைத்தபோது என்னை எதற்காக அழைக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு, இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அதனால் ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்க வேண்டியுள்ளது. அதன்காரணமாகத்தான் உங்களை அழைத்தோம் என்று சொன்னார். நான் இந்த ஆடியோ விழாவிற்குள் வந்தது இப்படித்தான் என்று கூறிய பாவனா, தமிழ், ஆங்கிலம் என மாறி மாறி தொகுத்து வழங்கினார்.
நன்றி: தினதந்தி
-
10th May 2017, 06:04 AM
#10
Moderator
Diamond Hubber
டிடிக்கு போட்டியாக சுஹாசினியை களம் இறக்குகிறது ஜீ தமிழ்
விஜய் டி.வியின் நட்சத்திர நிகழ்ச்சியான காப்பி வித்த டிடி ரொம்பவே பாப்புலர். திரைப்பட நட்சத்திரங்கள் டிடி நடத்தும் நிகழ்ச்சியென்றால் மறுப்பேதும் சொல்லாமல் செல்வார்கள். அந்த அளவிற்கு டிடி நட்சத்திரங்கள் மத்தியில் பிரபலம். மற்றும் செல்லப்பிள்ளை. தற்போது புதிய பொலிவுடன் சில மாற்றங்களுடன் அதே நிகழ்ச்சி அன்புடன் டிடி என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.<br>இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழ் சேனல் வீக்கெண்ட் ஸ்டார் என்ற நிகழ்ச்சியை இன்று முதல் (ஏப்ரல் 30) ஒளிபரப்புகிறது. இது ஒவ்பொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை இரவு 8 மணக்கு ஒளிபரப்பாகும். வார நாளில் மறு ஒளிபரப்பாகும். இதனை சுஹாசினி தொகுத்து வழங்குகிறார். திரைப்பட நட்சத்திரங்களை ஜாலியாக பேட்டி எடுக்கும் அதே நிகழ்ச்சிதான் இதுவும். எந்த மாதிரியான அம்சங்கள் புதிதாக இருக்கும் என்பது நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது தெரியும்.
இந்த நிகழ்ச்சி குறித்து சுஹாசினி கூறியிருப்பதாவது: நிறைய சேனல்களில் நிறைய பேர் செலிபிரிட்டி சாட் ஷோ பண்றாங்க. அதையே நாமும் பண்ணணுமானுன்னு யோசித்தேன். ஆனால் அவர்கள் நம்முடன் பேசுகிற அந்த கொஞ்ச நேரத்தில் அவர்களோடு வாழ்க்கையையே திரும்பி பார்க்கிறது அற்புதமாக இருக்கும். அதனால் பண்ணலாமேன்னு தோணிச்ச்சு. பண்ண முடிவு பண்ணிட்டேன். எனக்கு எல்லா செலிபிரிட்டியும் தெரியும். ஆனால் அவுங்க பர்சனல் பற்றி தெரியாது. தெரிஞ்சுக்குவோம். அவுங்க என்னோட பேசுவாங்க. என்கிறார் சுஹாசினி.
நன்றி: தினதந்தி
Bookmarks