-
24th March 2009, 01:10 PM
#11
Senior Member
Seasoned Hubber
சீரியலுக்கென்றே தனி சேனல் வர வாய்ப்பு'
சினிமாவில் சாதிக்க வேண்டும் என வந்த பலருக்கு சீரியல்கள்தான் அரவணைப்பாக உள்ளன. சீரியல்களின் தாக்கம் மக்களிடம் வெகுவாகப் பரவி வருகிறது என்கிறார் ‘விழுதுகள்' சந்தானம்.
சிறு வயதில் இருந்தே நடிப்புதான் எனக்கு எல்லாம். பெரிய நடிகனாக வேண்டும் என்ற ஆசைதான் என்னையும் நடிகனாக்கி விட்டது. அந்தக் காலத்தில் மேடை நாடகத்தில் தொடங்கிய என் நடிப்பு ஆர்வம் இன்று அன்றாட சீரியல்கள் வரை வந்து நிற்கிறது. காலத்துக்கு ஏற்றவாறு இடம் மாறிவிட்டதே தவிர ஆர்வம் மாறவில்லை.
டி.டி. தொலைக்காட்சியில் வந்த விழுதுகள்தான் என் முதல் சீரியல். அந்த சீரியலில் எனது கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. அதிலிருந்து ‘விழுதுகள்' சந்தானம் ஆகிவிட்டேன்.
முதன் முதலில் தமிழில் தயாரிக்கப்பட்ட சீரியலில் நடித்தவன் என்ற பெருமை எனக்கு உண்டு. அந்த சீரியலை தமிழ் சினிமாவின் பழம் பெரும் இயக்குநர் பீம்சிங் மகன் கோபி இயக்கியிருந்தார்.
இதுவரை 50-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்தாகி விட்டது. பாலசந்தர், சிஜே.பாஸ்கர் என பல இயக்குநர்களிடம் பணிபுரிந்தாகி விட்டது. அவ்வப்போது சில படங்களிலும் நடித்தேன். நாடகங்கள் மீது இருந்த ஆர்வம் சினிமா மீது இல்லை.
இப்போது நிறைய சேனல்கள் வந்து விட்டன. ஒரு காலத்தில் டி.டி.யைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாது. ஆனால், இப்போது நிலைமை வேறு. காமெடி, இசை என ஒவ்வொன்றுக்கும் ஒரு சேனல் வந்து விட்டது. விரைவில் சீரியலுக்கென்று ஒரு சேனல் வந்தாலும் வரலாம்.
சீரியல்களில் நடிப்பதற்கு நடிகர்கள் போதவில்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. அந்த அளவுக்கு சீரியல் உலகம் பிஸியாகிவிட்டது. ஒரு நடிகையை மையமாக வைத்து 4 அல்லது 5 சீரியல்கள் போய்க் கொண்டு இருக்கின்றன. நடிகர்களின் வாழ்க்கையை சீரியல்கள் தற்போது மாற்றிவிட்டது.
இப்போது நிறைய பேர் சிறு வயதிலே சீரியலுக்கு வந்து விடுகிறார்கள். இது ஆரோக்கியமானதா, இல்லையா என்பதைப் பற்றி யோசிக்க யாருக்கும் நேரம் இல்லை.
‘மகள்', ‘திருமதி செல்வம்', ‘நாணல்', ‘பந்தம்', ‘கோலங்கள்' உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறேன். அனைத்திலும் நல்ல கேரக்டர்கள். அவை எனக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தால் சரி என்றார்.
-
24th March 2009 01:10 PM
# ADS
Circuit advertisement
Bookmarks