-
16th August 2008, 09:16 AM
#1
Moderator
Diamond Hubber
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா எனும் புதிய தேடலை விஜய் டி.வி. தொடங்கி உள்ளது. முதற்கட்ட தேர்வு திருச்சி, கோவை, மற்றும் மதுரையில் கடந்த வாரங்களில் நடந்து முடிந்தது. திருச்சி மாநகரத்தில் இருந்து 23 நபர்களும், கோவையிலிருந்து 27 நபர்களும், மதுரையிலிருந்து 20 நபர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். நாளை (சனி) சென்னையில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.
நடனத்தில் விருப்பமானவர்கள் 16 முதல் 35 வயது வரை நிரம்பிய ஆண்/பெண் இந்த நேர்முகத் தேர்வில் பங்கு பெறலாம்.
எந்த ஸ்டைலாக இருந்தாலும் நன்றாக நடனமாடுபவர்கள் ஒரு ஆடியோ சி.டி.யில் பாடலை பதிவு செய்து இந்த நேர்முகத் தேர் வில் பங்கு பெறலாம். வேப்பேரி, டவுட்டன் கொர்ரி பள்ளி எதிரில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் இந்த தேர்வு நடைபெறுகிறது.
முதலில் வரும் 100 பேருக்கு மட்டுமே போட்டியில் கலந்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும். நடனத்தில் திறமைசாலிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் நடன திறமையை நிரூபிக்கலாம்
வரும் 21-ந் தேதி முதல் வியாழன், வெள்ளி, இரவு 9 மணிக்கு உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சி விஜய் டி.வி.யில் ஒளி பரப்பாக உள்ளது
-
16th August 2008 09:16 AM
# ADS
Circuit advertisement
Bookmarks