-
11th April 2017, 09:52 PM
#1
Moderator
Diamond Hubber
நடிப்புக்கு பிரேக் கொடுத்த சுஜிதா!
குழந்தை நட்சத்திரமாக தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கியவர் சுஜிதா. அதன்பிறகு சீரியல்களில் லீடு ரோல்களில் கணவருக்காக, மகாராணி, மருதாணி, விளக்க வச்ச நேரத்திலே, மைதிலி, ஒரு கை ஓசை என பல சீரியல் களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு சீரியல்களிலும் பிசியாக நடித்து வந்த சுஜிதாவை கடந்த இரண்டு ஆண்டுகளாக சீரியல்களில் காண முடியவில்லை.
என்ன காரணம்? என்று சுஜிதாவைக் கேட்டால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் சீரியல்களில் நடிக்காமல் பிரேக் கொடுத்ததற்கு என் மகன்தான் காரணம். அவன் குழந்தையாக இருந்தபோது என்னை தேடமாட்டான். ஆனால் ஓரளவு விவரம் தெரிந்த பிறகு நான் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்று விரும்பினான். அதனால் அவனுக்காக இரண்டு வருடங்களாக சீரியல்களில் நடிக்கவிலை. தற்போது பிரீகேஜி படிக்கும் அவன், விரைவில் எல்கேஜி படிக்கப்போகிறான்.
அதனால், மீண்டும் நான் நடிக்க தயாராகி விட்டேன். ஏற்கனவே நடித்தது போன்று முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று கூறும் சுஜிதா, ஒரு அம்மாவாக இருந்து பாச உணர்வுகளை வெளிப்படுத்திய எனக்கு இப்போது செண்டிமென்ட் வேடங்களில் கிடைத்தால் உணர்வுப்பூர்வமாக நடித்து நேயர்களை உருக வைத்து விடுவேன் என்கிறார்.
நன்றி: தினதந்தி
-
11th April 2017 09:52 PM
# ADS
Circuit advertisement
-
10th May 2017, 05:37 AM
#2
Moderator
Diamond Hubber
டிவி நடிகர் பிரதீப் குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை
சுமங்கலி சீரியல் நாயகன் பிரதீப் கடந்த 3-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சி செய்தி தமிழ், தெலுங்கு சீரியல் வட்டார நடிகர் நடிகைகளை உறைய வைத்தது. இதனால் சென்னையில் உள்ள சின்னத்திரை வட்டாரங்களில் அனைவரும் கவலையான முகத்துடன் காணப்பட்டனர்.
மேலும், நடிகர் பிரதீப்பின் மரணம் தற்கொலை என்றபோதும், அவரது உடம்பில் காயங்கள் இருந்ததாக கூறப்பட்டதால், யாரேனும் அவரை கொலை செய்திருப்பார்களோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது உடலை போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தற்போது அவரை யாரும் கொலை செய்யவில்லை. தற்கொலைதான் என்று மருத்துவ பரிசோதனை முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதீப்பின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து அறிய, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் ஐதராபாத் போலீசார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். குறிப்பாக, பிரதீப்பின் மனைவியும், நடிகையுமான பாவனி ரெட்டியின் உறவினர் ஷெராவன் என்பவரும் அவர்களது வீட்டில் தங்கியிருந்ததால், பிரதீப்பின் தற்கொலையில் அவருக்கும் சம்பந்தம் இருக்குமோ என்கிற அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நன்றி: தினதந்தி
Bookmarks