தொகுப்பாளினியானார் பிக்பாஸ் ஜூலி


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பங்கேற்று புகழ் பெற்றவர் ஜூலி. இதில் இவருக்கு கிடைத்த பெயரும், புகழும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் அமுங்கி விட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் எல்லோருடனும் சகஜமாய் இருந்த ஜூலில பின்னர் பொய் பேசுகிறார், நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதிலும் ஓவியா விஷயத்தில் இவரது பெயர் மேலும் மங்கியது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.


ஆனால், அவைகள் எல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தன்னை அந்த போட்டியில் நிலை நிறுத்தி கொள்ள சிலரோடு சேர்ந்து கொண்டு அப்படி அவர் செய்ய வேண்டியதாகி இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின்னர் தான் தன் மீதான தவறுகளை உணர்ந்து கொள்ள தொடங்கியிருக்கிறார்.


இந்நிலையில் சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதன்பின்னர் சில டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இப்போது தொகுப்பாளியாக களமிறங்கியுள்ளார்.


கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக வருகிறது. இதன் 6வது சீசன் தற்போது துவங்குகிறது. இந்த நிகழ்ச்சியை ஜூலி தான் தொகுத்து வழங்க போகிறார். நடன இயக்குநர் கலா மற்றும் நடிகர் கோகுல் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாகப் பங்கேற்கிறார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.


நன்றி: தினமலர்