-
4th January 2017, 03:33 AM
#1
Moderator
Diamond Hubber
நாகினி இயக்குனருடன் சுதா சந்திரன் மோதல்
பிரபல இந்தி தொடரான நாகின் தற்போது நாகினி என்ற பெயரில் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்தியில் நாகின் தொடரின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் படப்பிடிப்புகளும் மும்முரமாக நடந்து வருகிறது. மவுனி ராய் இரண்டாம் பாகத்திலும் நாகினியாக நடிக்கிறார். அர்ஜுன் பிலானி, ஆதா கான், ஆகியோருடன் சுதாசந்திரனும் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பில் நடிகை சுதாசந்திரனுக்கும் இயக்குனர் குஷால் ஜவேரிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அனைவருக்கும் அவர்களுக்கான வசனம் முதலிலேயே கொடுக்கப்பட்டு விடும். அதனை அவர்கள் வீட்டில் மனப்பாடம் செய்துவிட்டு வரவேண்டும். ஸ்பாட்டில் நடிப்பு மட்டுமே சொல்லித் தரப்படும். ஆனால் சுதா சந்திரன் வீட்டில் மனப்பாடம் செய்ய வேண்டிய வசனத்தை ஸ்பாட்டில் மனப்பாடம் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இயக்குனர் "எப்போதும் ஸ்கிரிப்டும் கையுமாக இருந்தால் எப்படி?" என்று கோபித்துக் கொண்டுள்ளார். அதற்கு சுதா சுந்திரன் "சூட்டிங் ஸ்பாட்டில் ஸ்கிரிப்டை கையில் வைத்திருக்காமல் பீர் பாட்டிலையா வைத்திருப்பார்கள்?" என்று திருப்பி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாகி படப்பிடிப்பு தடைபட்டது.
>"குஷால் ஜவேரி இயக்கினால் நான் நடிக்க மாட்டேன். அவருக்கு நான் நடிப்பது பிடிக்கவில்லை. வேண்டுமானால் வேறு யாரையாவது நடிக்க வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிய சுதா சந்திரனை தயாரிப்பார்கள் சமாதானப்படுத்தி உள்ளனர். "இயக்குனர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே நடிப்பேன்" என்று கூறியுள்ளார். இயக்குனர் "நான் என் கடமையை செய்தேன். அதற்கு எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார். ஒரு வழியாக இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர். அரை நாள் படப்பிடிப்பு தடைபட்டு மீண்டும் நடந்திருக்கிறது. இப்போதைக்கு சமானதானம் ஆனாலும் சுதா சந்திரன் எப்போது வேண்டுமானாலும் தொடரில் இருந்து விலகலாம் என்கிறார்கள்
நன்றி: தினமலர்
-
4th January 2017 03:33 AM
# ADS
Circuit advertisement
Bookmarks