உயிரற்று போனபின்னே
உன்பெயர் கூட உனதில்லை
இனமேது ஆனாலும் நீ
பிணமன்றி வேறில்லை
உடல் உறுதியாய் இருந்தும்
உயிரற்று கிடத்திட்டால்
உடல் ஊதி புழுத்திடும்
ஊர் தூற்ற நாரிடும்
உயிரற்ற உடல் கண்டும்
உன் மனமின்னும் மாறலியோ
உயிரில்லா பொருள்மீது
உன் மோகம்தான் தீரலியோ?
-
கிறுக்கன்
Bookmarks