-
4th April 2009, 09:25 PM
#1
Moderator
Diamond Hubber
"சீரியலுக்கு சென்சார் தேவை'
சினிமாவை விட சீரியலுக்கான வரவேற்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதற்குக் காரணம் சீரியல்களின் புதிய கதைக் களங்கள்தான் என்கிறார் நடிகை தேவிப்ரியா.
சினிமா நடிகைகள் சீரியலுக்கு வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், எந்த நடிகையின் சினிமா சாதனை சீரியலில் தொடர்கிறது? சினிமாவை விட சீரியலில்தான் நடிகைகளின் கேரக்டர்கள் அதிகமாகப் பேசப்படுகிறது. சீரியல் பல கதைகளை வீட்டுக்குள்ளேயே கொண்டு செல்வதால் மக்களால் மிகவும் ரசிக்கப்படுகிறது. சினிமா போல் சீரியல் பொழுதுபோக்கிற்காகப் பார்க்கப்படுவதில்லை. சீரியலில் ஒவ்வொரு நாளும் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறோமே அதுவே பெரிய வெற்றிதான்.
பழி வாங்கல், துரோகம், கணவன் மனைவி தொடர்புகளில் சிக்கல் இவைகள்தான் சீரியல்களில் ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்டு வருகின்றன என்பது உண்மைதான். யாருடைய வாழ்க்கையில்தான் இந்த விஷயங்கள் இல்லை? மனிதர்களின் சராசரி வாழ்க்கைதான் இங்கு சீரியலாக்கப்படுகிறது.
மாமியார்-மருமகள் பிரச்னையை பற்றி சொல்லும் போது பழி வாங்கல், துரோகம் போன்றவற்றை சொல்லித்தான் ஆக வேண்டும். இதில் மாற்றம் தேவை இல்லை.
பாலியல் தொடர்பான விஷயங்கள் சினிமாவை விட சீரியலில் குறைவுதான். இருந்தாலும் ஒரு கதை சொல்லப்படும்போது அது தவிர்க்க முடியாத விஷயமாகி விடுகிறது. சீரியலை குடும்பமே உட்கார்ந்து பார்க்கக் கூடிய இன்றைய சூழலில் இந்த விஷயங்கள் குறைந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும். அதைக் கட்டுப்படுத்தும் வகையில் சீரியலுக்கென தனி சென்சார் வந்தால் வரவேற்கலாம்.
இப்போது "சதிலீலாவதி', "தெற்கத்தி பொண்ணு', "பந்தம்', "ஆனந்தம் விளையாடு வீடு' ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறேன். "சதிலீலாவதி' மாலதி, "தெற்கத்தி பொண்ணு' கீதா நாயுடு ஆகிய கேரக்டர்கள் தற்போது பேசப்பட்டு வருகின்றன.
நடிகர் ஜே.கே.ரித்தீஷின் தயாரிப்பில் "ஆண்டாள்' என்ற புது சீரியலில் நடித்து வருகிறேன். அதில் இதுவரை பார்க்காத புதிய தேவிப் பிரியாவை பார்க்கலாம்.
சினிமாவில் முக்கியத்துவமான கேரக்டரில் மட்டும் நடித்து வருகிறேன். சமீபத்தில் "வல்லமை தாராயோ', "நாயகன்' படங்களில் நல்ல கேரக்டர் கிடைத்தது. அது போல் கேரக்டர்கள் வந்தால் நடிப்பேன் என்றார் தேவிப்ரியா.
நன்றி: தினமணி
-
4th April 2009 09:25 PM
# ADS
Circuit advertisement
Bookmarks