விநாயகர்
SUN TV
http://www.biggbosstamil.net/vinayagar-today/"
Thirumathi Selavam
Thendral
Chellame
Thangam
விநாயகர்
SUN TV
http://www.biggbosstamil.net/vinayagar-today/"
Last edited by aanaa; 5th November 2017 at 05:02 AM.
"அன்பே சிவம்.”
பரமசிவனும், பார்வதியும் யார்?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் கடவுள் முருகன் தொடரில் தற்போதைய எபிசோட்களில் அதிகமாக வரும் பார்வதி, பரமசிவன் கேரக்டர்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கும், ஆனால் அவர்கள் யாரென்று தெரியாது. அவர்கள் இருவரும் எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவர்கள் தான்.
பரமசிவன் கேரக்டரில் நடிப்பவர் வம்சம் தொடரில் வில்லனாக நடித்த நந்தகுமார். ஆறடி உயரமும், சிவன் கேரக்டருக்கேற்ற முகமும் அமைந்திருப்பதால் அவருக்கு இந்த கேரக்டர் கிடைத்திருக்கிறது. அவரும் சிறப்பாக நடித்து பெண்களின் ஆதரவை பெற்று வருகிறார்.
பார்வதியாக நடிப்பவர் பிரபல செய்தி வாசிப்பாளர் பிரியா. அமைதியே உருவான முகம், கனிவான தோற்றம் இவருக்கு பார்வதி கேரக்டரை பெற்றுத் தந்திருக்கிறது. சிறிது காலத்துக்கு செய்தி வாசிப்பை ஒதுக்கி வைத்து சினிமாவில் தலை காட்ட துவங்கி உள்ளார். சீரியல் முழுக்கவே செண்டிமெண்டாக தாய்மை உணர்வுடன் உருகி வருகிறார்.
நன்றி: தினமலர்
"அன்பே சிவம்.”
மீண்டும் சின்னத்திரையில் தலைவாசல் விஜய்
பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவரான தலைவாசல் விஜய், தூர்தர்ஷனில் ஒளிபரப்பான நீலாமாலா தொடர் மூலம் சின்னத்திரை நடிகராக அறிமுகமானர். அதன்பிறகு கோபிகா, கங்கா யமுனா சரஸ்வதி தொடர்களில் நடித்தார். தலைவாசல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான விஜய், அன்று முதல் தலைவாசல் விஜய் ஆனார். அதன்பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணசித்ர வேடத்திலும், வில்லன் வேடத்திலும் நடித்தார். யுகபுருஷன் என்ற மலையாளப் படத்தி ஸ்ரீ நாராயணகுருவாக நடித்து, சிறந்த நடிகருக்கான கேரள மாநில விருது பெற்றார்.
தலைவாசல் விஜய் தற்போது அழகு சீரியல் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். இதில் அவர் பழனிச்சாமி வாத்தியாராக நடிக்கிறார். அவரது மனைவியாக ரேவதி நடிக்கிறார். 5 குழந்தைகளை கணவன், மனைவி இருவரும் எப்படி வளர்த்து ஆளாக்கி அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கிறார்கள். அப்போது அவர்கள் சந்திக்கும் பிரச்னை என்ன என்பதான் கதை.
நன்றி: தினமலர்
"அன்பே சிவம்.”
ராஜ் டி.வியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு ஸ்பெஷல்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு இது. இதையொட்டி பல நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் ராஜ் தொலைக்காட்சி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு ஸ்பெஷல் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.<br><br>திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாறு. அவரது சினிமா வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை ஆகியவை பற்றி பேசுகிறது இந்த தொடர். அவர் சந்தித்த சோதனைகள், செய்த சாதனைகள் படக் காட்சிகளாக விரிகிறது. அரசியல் உலகில் எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்தவர்கள். சினிமாவில் இணைந்து நடித்தவர்கள் ஆகியோரின் நேர்காணலும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது.
எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் காட்சிகள், பாடல்கள் ஆகியவற்றை கொண்டு நிகழ்ச்சியை விறுவிறுப்பாக ஒளிபரப்புகிறார்கள்
நன்றி: தினமலர்
"அன்பே சிவம்.”
நெஞ்சம் மறப்பதில்லை: 9-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புத்தம் புதிய தொடர் நெஞ்சம் மறப்பதில்லை. தற்போது விஜய் டி.வி வித்தியாசமான தொடர்களை பிரமாண்டமாக ஒளிபரப்புகிறது. பாகுபலி பிரமாண்டத்தில் தமிழ் கடவுள் முருகன் தொடரை ஒளிபரப்புகிறது. முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் சின்னத்தம்பியை ஒளிபரப்புகிறது. அந்த வரிசையில் நெஞ்சம் மறப்பதில்லை குளுகுளு கொடைக்கானில் நடக்கிறது.
இதில், காதல் முதல் கல்யாணம் வரை புகழ் அமித் பார்கவ் ஹீரோவாக நடிக்கிறார். புதுமுகம் சரண்யா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் தவிர நிஷா முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். அமித் பார்கவ் கொடைக்கானலுக்கு புதிய போலீஸ் அதிகாரியாக வருகிறார். கொடைக்கானில் ஒரு காலத்தில் அவர் காதலை நிராகரித்த சரண்யா இருக்கிறார். இவர் வந்த நேரம் சரண்யாவின் தந்தை விபத்தில் இறந்து போகிறார். அவரும் ஒரு போலீஸ் அதிகாரிதான். சரண்யா அமித் பார்கவ் மீது சந்தேகம் கொள்கிறார். இப்படி தொடங்குகிறது சீரியல். காதல் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லரா தயாராகிறது சீரியல். வருகிற 9-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு பிரைம் டைமில் ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினமலர்
"அன்பே சிவம்.”
மீண்டும் ரேவதி
மண்வாசனை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரேவதி தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் சின்னத்திரைக்கு வந்தார். 1990ம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இரவில் ஒரு பகல் தொடரில் அறிமுகமானார். அதன் பிறகு பெண், ரேவதி, நிறங்கள் உள்பட பல சீரியல்களில் நடித்தார். சின்ன சின்ன ஆசை, பூம் பூம் சக்கலக்க, கதை கதையாம் காரணமாம், புதுமை பெண்கள், சிந்தனைகள், சேம்பியன்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
சில காலம் சின்னத்திரையிலிருந்து ஒதுங்கியிருந்த ரேவதி இப்போது மீண்டும் வந்திருக்கிறார். அழகு என்ற தொடரில் நடிக்க இருக்கிறார். ரேவதியின் கணவராக தலைவாசல் விஜய் நடிக்கிறார். குடும்ப பிரச்னைகளை வெற்றிகரமாக சமாளிக்கும் அழகு என்ற கேரக்டரில் நடிக்கிறார் ரேவதி. தற்போது இதன் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஒஸ்தி, பவர் பாண்டி படங்களில் அம்மாவாக நடித்த ரேவதி தொடர்ந்து சினிமாவில் அம்மா கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
நன்றி: தினமலர்
"அன்பே சிவம்.”
காமெடி கில்லாடிகள் : ஜீ தமிழில் புதிய நிகழ்ச்சி
ஜீ தமிழ் சேனல் தனது புதிய மாற்றத்திற்கு பிறகு பிரமாண்ட ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறது. மிஸ்டர் அண்ட் மிசஸ் கில்லாடிகள், ஜூனியர் சூப்பர் ஸ்டார், சரிகமபா, டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளை தொடர்ந்து தற்போது காமெடி கில்லாடிகள் என்ற புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறது
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கான ஆடிசன் தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது. திருநெல்வேலி, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி நகரங்களில் நடந்தது. வருகிற 10ம் தேதி சென்னையில் நடக்கிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 30 போட்டியாளர்களை கொண்டு நிகழ்ச்சியை படம்பிடிக்க இருக்கிறார்கள். இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் காமெடிக்கான ஸ்கிரிப்டை தாங்களே உருவாக்கி கொள்ள வேண்டும் என்பது முக்கிமான அம்சமாகும்
நன்றி: தினமலர்
"அன்பே சிவம்.”
பாடல் பிறந்த கதை
ஒருபுறம் சீரியல்கள், இன்னொருபுறம் நடன நிகழ்ச்சிகள், இதையும் தாண்டினால் பாட்டுப்போட்டி என்கிற எல்லைக்குள் பல சேனல்கள் நின்று விடுகின்றன. கிராமத்தில் அழியாப்புகழோடு இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் பல கலைகளை மக்களின் பார்வைக்கு சேனல்கள் தருவது அபூர்வம். மக்கள் தொலைக்காட்சி போன்ற குறிப்பிட்ட சில சேனல்களில் மண் மணம் மாறாமல் இதுமாதிரியான நிகழ்ச்சிகளைத் தருகிறார்கள்.
கவிஞர் குளத்தூர் துளசிதாசன் நாட்டுப்புற பாடல்கள் மூலம் புகழ் பெற்றவர். இவர் கிராமிய மணம் கமழும் பல பாடல்களை எழுதி இசையமைத்து மேடைகள் தோறும் பாடி வருகிறார். இந்தப் பாடல்களின் மேன்மையை பறைசாற்றும் விதத்தில் தமிழக நாட்டுப்புற பாடல் மைய ஆராய்ச்சி மையம் அமைத்தும் இயங்கி வருகிறார்.
இந்தப்பாடல்களை ரசிக்கத்தெரிந்த பலருக்கும் அதன் `பிறந்த கதை' தெரிவதில்லை. எந்த சூழலில் எதற்காக அந்தப்பாடல் உருவானது என்பதை தெரியப்படுத்தும் நோக்கில் இப்போது `பாடல் பிறந்த கதை' என்ற தலைப்பில் ஒரு நெடுந்தொடர் இசை நிகழ்ச்சியை தயாரித்து வருகிறார். தமிழ்ப்பேராசிரியர்கள், புலவர்கள், கிராமியக்கலை வளர்க்கும் அறிஞர்கள் என பலரும் இநத நிகழ்ச்சியில் பங்கேற்று, தமிழிசைப் பாடல்களை அதன் வரலாற்றுப் பின்னணியில் தருகிறார்கள்.
தற்போது படப்பிடிப்பில் இருந்து வரும் இந்த நிகழ்ச்சி, விரைவில் தனியார் சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினதந்தி
"அன்பே சிவம்.”
நெல்லியாண்டவரின் தடுமாற்றம்
சன் டிவி.யில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 7.30 க்கு ஒளிபரப்பாகும் தொடர், நாதஸ்வரம். முழுக்க முழுக்க புதுமுகங்களைக்கொண்டு வெளிďர்களிலேயே படப்பிடிப்பு நடத்தப்படும் இந்த தொடரில் புதிதாக வந்திருக்கும் நெல்லியாண்டவரின் அண்ணன் குடும்பமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இவர்கள் தொடர்பான பின்னணி காட்சிகள் திருவையாறு, சுவாமிமலை பகுதிகளில் படமாக்கப்படுகிறது,
பரமு, செந்திலிடம் கொண்டுள்ள காதலால் காமு-மூர்த்தியிடையே விரிசல் ஏற்படுகிறது, இந்நிலையில் வனிதா-கோபி திருமணப்பேச்சு வேண்டாம் என்று நெல்லி கூறும் போது வனிதாவுக்கு கோபி மீது பிடிப்பு ஏற்படுகிறது.
நெல்லியாண்டவரின் அண்ணன் மகள் வீரலெட்சுமியும் அவளது அம்மாவும் நெல்லி வீட்டிற்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. வீரலட்சுமி நெல்லி வீட்டுக்கு வந்தால் வனிதாவின் திருமணம் தடைபடும் வாய்ப்பு அதிகம். நெல்லிக்கு மகள் பக்கம் சாய்வதா, அண்ணன் மகள் பக்கம் சாய்வதா என்ற தடுமாற்றம் ஏற்பட, நெல்லி மனைவி நீலா உச்சக்கட்டகோபத்தில் இருக்கிறாள்.
மலர், கோகுலுடன் வாழச்செல்வதாக கூறியது பொய் என சொக்குவிற்கு தெரிய வர, அவர் சில முக்கிய முடிவுகளை எடுத்து யாருக்கும் தெரியாமல் மலரை கோபியுடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்குகிறார், இது தெரிந்த மயிலின் அண்ணனுக்கு சொக்கு மீது கடுங்கோபம்
இதற்கெல்லாம் மகுடமாக மகாவிற்கு நினைவு திரும்புகிறது அவள் என்ன முடிவெடுப்பாள் என்பது அனைவருக்கும் தெரியும் அதனால் ஏற்படும் விளைவுகள்?
பரமு, செந்திலுடன் செல்வதனால் ஏற்படும் விளைவுகள்?
வீரலட்சுமி நெல்லி வீட்டிற்கு வந்தால் வனிதாவின் நிலை?
மகாவிற்கு நினைவு திரும்பியதால் பாண்டியின் நிலை?
மலர்-கோபி காதலால் அண்ணன் சொக்கு, தம்பி மயிலின் உறவு நிலை?
இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவில் மாட்டிக்கொண்டிருக்கும் கோபியின் நிலை? இப்படி பல சுவாரஸ்யமான கேள்விகளுடன் வேக வேகமாய் பயணிக்க இருக்கிறது நாதஸ்வரம்'' என்கிறார் இயக்குனர் திருமுருகன்.
நன்றி: தினதந்தி
"அன்பே சிவம்.”
சின்னமாமி பெரியமாமி
வசந்த் டிவியில் திங்கட்கிழமை தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நகைச்சுவைத் தொடர், `சின்னமாமி பெரியமாமி.' மாமியார்-மருமகள் இடையே நடைபெறும் சின்னச்சின்ன கலாட்டாக்கள் தொடரின் சுவாரசிய பகுதிகள் என்பதால், கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் தொடர்கிறது, தொடர்.
தொடரில் பெரியமாமியாக நித்யாவும், சின்னமாமியாக நளினியும் நடிக்கிறார்கள். மற்றும் சாமிநாதன், நெல்லை சிவா, கொட்டாச்சி, கணேஷ்கர் ஆகியோரும் உண்டு.
கதை, வசனம் எழுதி தொடரை இயக்குகிறார், ஜெயமணி.
நன்றி: தினதந்தி
"அன்பே சிவம்.”
Bookmarks