-
10th July 2016, 05:07 AM
#1
Moderator
Diamond Hubber
Annakodiyum Aindhu Pengalum serial, telecasting Monday to Friday at 7 pm, in Zee Tamil Tv, to touch the 350th episode mark on 11th July.
The story goes as this – Thangadurai and Kanchana are determined to take revenge on Gauri, the lead character of the story, for the legal notice served against them.In collusion with Gauri’s mother-in-law Uma Maheshwari, they push Siddarth to send divorce notice to Gauri.Moreover, they plan to marry Siddarth to Kavitha, who is his personal secretary. According to their plan it happens that both Siddarth and Kavitha begin liking each other.Meanwhile, Anna Kodi goes against the family and gets Gauri’s sister Sankari married to Dass, a trickster who wins the trust of Anna Kodi and Sankari.Kanchana is determined to have a child following the insult she receives after she fondly cuddles Thangadurai’s kid. In the meantime, Gauri gets deeply shocked knowing the growing intimacy between Siddarth and Kavitha.In the upcoming episodes Annakodiyum Ainthu Pengalum TV soap travels finding answers to quizzes such as…..Will Siddarth divorce Gauri as planned by Thangadurai, Kanchana and Uma Maheshwari ?,Will he marry Kavitha?, What Gauri understands about Kavitha ?,
Do Anna Kodi and Sankari come to know about the intentions of Dass ?,
Does Kanchana succeed in having a child ?….etc.,To know about all of these watch Zee Tamil Tv, Monday to Friday at 7pm,
-
10th July 2016 05:07 AM
# ADS
Circuit advertisement
-
20th July 2016, 09:00 PM
#2
Moderator
Diamond Hubber
சரவணன் மீனாட்சி 3வது சீசன்
விஜய் டி.வியின் புகழ்பெற்ற இளமை காதல் தொடர் சரவணன் மீனாட்சி. முதல் சீசனில் மிர்சி செந்திலும், ஸ்ரீஜாவும் நடித்தனர். இவர்களே நிஜ வாழ்க்கையிலும் காதலர்களாகி திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஸ்ரீஜா வேறு தொடர்களில் நடித்து வருகிறார். செந்தில் சினிமா நடிகர் ஆகிவிட்டார். 2வது சீசனில் கவினும், ரக்ஷிதாவும் நடித்தார்கள்.
தற்போது 3வது சீசன் நேற்று முதல் தொடங்கியது. இதில் மீனாட்சியாக ரக்ஷிதாவே நடிக்கிறார். சரவணனாக மியூசிக் சேனல் தொகுப்பாளராக இருந்த ரியோ நடிக்கிறார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு இது ஒளிப்பாகிறது. புதிய சரவணன் மீனாட்சியில் இளமை ததும்பும் காதல் காட்சிகள் இருக்கும், இன்றைய இளைஞர்களின் காதலை பிரதிபலிப்பதாக இருக்கும் என்கிறது சேனல் தரப்பு.
நன்றி: தினமலர்
-
29th July 2016, 10:56 PM
#3
Moderator
Diamond Hubber
6 ஆண்டுகளை கடந்து வெற்றி நடைபோடும் அது இது எது
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று அது இது எது. இரண்டு நடிகர்களை சினிமாவுக்கு தந்த நிகழ்ச்சி. ஒருவர் சிவகார்த்திகேயன் மற்றொருவர் மா.. பா. ஆனந்த். முதலில் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார் அவர் சினிமா நடிகர் ஆனதும் மா.கா.பா. ஆனந்த் தொகுத்து வழங்க ஆரம்பித்தார். தற்போது அவரும் நடிகராகிவிட்டாலும் இன்னும் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ப்ரைம் டைமான இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி இப்போதும் மக்களின் விருப்ப நிகழ்ச்சியாக இருக்கிறது. குரூப்ல டியூப், சிரிச்சா போச்சு, மாத்தியோசி போன்ற ரவுண்டுகள் மக்களை தொடர்ந்து சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. சிரிச்சா போச்சு ரவுண்டில் வந்த பல காமெடிகள் வைரலாக பரவியது.
லட்சுமி ராமகிருஷ்ணனை கிண்டல் செய்து வந்த “என்னம்மா இப்படி பண்றீங்ளேம்மா” சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மக்களை கவர்ந்த அது இது எது 6 வருடங்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 350 எபிசோட்கள் ஒளிபரப்பாகியிருக்கிறது. விரைவில் மா.கா.பா ஆனந்த் முழுநேர நடிகராக இருக்கிறார். அதன்பிறகு புதிதாக ஒருவர் தொகுத்து வழங்க வருவார். அப்படியொரு நட்சத்திர தொகுப்பாளரை சேனலும் தேடிக் கொண்டிருக்கிறது.
நன்றி: தினமலர்
-
29th July 2016, 11:10 PM
#4
Moderator
Diamond Hubber
நாட்டு நடப்புகளைதான் சீரியல்களில் சொல்கிறார்கள்! -ஏகவள்ளி
அபூர்வ ராகங்கள் தொடரில் பத்மினி என்ற வேடத்தில் நடித்து வருபவர் ஏகவள்ளி. இந்த தொடரில் எனக்கு அமைதியான வேடம். எத்தனை பெரிய பிரச்சினைகள் என்றாலும் அதை மனதுக்குள்ளேயே பூட்டி வைத்துக்கொண்டு போராடும் பெண்ணாக நடிக்கிறேன். அதனால் எனக்கு பர்பாமென்ஸ் பண்ண நல்ல ஸ்கோப் கிடைத்திருக்கிறது. அதையடுத்து வம்சம் தொடரில் ஒரு அண்ணி வேடத்தில் நடிக்கிறேன். இதுதவிர மதியால் வெல் என்ற படத்தில் வில்லனின் மனைவியாக நடிக்கிறேன். தவிர சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறேன் என்கிறார் இந்த ஏகவள்ளி.
அவரிடத்தில் எந்தமாதிரியான சீரியல்களில் நடிப்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறீர்கள்? என்று கேட்டபோது,
என்னைப்பொறுத்தவரை ஜாலியான சீரியல்களில் நடிப்பதுதான் ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் எனக்கு கிடைப்பதோ பிரச்சினைக்குரிய கேரக்டர்கள்தான். ஆனால் அப்படி அந்த பிரச்சினைக்குரிய கேரக்டர்களே இறுதியில் சந்தோசத்துடன் முடிவடைய வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன். அந்த வகையில், சீரியல்களில் பிரச்சினைகளை மட்டுமின்றி, சந்தோசங்களை யும் சொல்லக் கூடிய இரண்டுவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசையாக உள்ளது என்கிறார்.
அவரிடத்தில், சமீபகாலமாக சில சீரியல்களில் கொடூரமான மற்றும் வக்ரத்தன்மையுள்ள காட்சிகள் அதிகமாக காண்பிக்கப்படுகிறதே? இதுபற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்றபோது,
மக்கள் எந்த மாதிரியான சீரியல்களுக்கு அதிக வரவேற்பு கொடுக்கிறார்களோ அதை மனதில் கொண்டுதான் சீரியல்கள் உருவாகின்றன. அதோடு, இப்படி
சீரியல்களில் சொல்லப்படும் விசயங்கள் எல்லாமே நாட்டு நடப்புகள்தான். மக்கள் மத்தியில் நடக்கிற விசயங்களைத்தான் கதையாக்குகிறார்கள். அந்தமாதிரி விசயங்கள் தங்களது வாழ்க்கையில் நடந்திருப்பதால் அதை நேயர்களும் விரும்பிப்பார்க்கிறார்கள். அதனால் சீரியல்களை தவறாக விமர்சனம் செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் ஏகவள்ளி.
நன்றி: தினமலர்
-
4th August 2016, 07:31 PM
#5
Moderator
Diamond Hubber
விஜய் டி.வியில் பிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா
கடந்த ஜூன் மாதம் 18ந் தேதி 63வது பிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா ஐதராபத்தில் உள்ள கன்வென்சன் சென்டரில் பிரமாண்டமாக நடந்தது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளைச் சேர்ந்த கலைஞர்களுக்கு 2015ம் ஆண்டுக்கான பிலிம்ஃபேர் விருதுகள் வழங்கப்பட்டது. தென்னிந்தியாவின் முக்கிய நடிகர், நடிகைகள் கலந்து கொண்ட இந்த விழாவில் நடிகர் நடிகைளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
இந்த விழாவின் ஒளிபரப்பு உரிமத்தை விஜய் டி.வி பெற்றுள்ளது. விரைவில் பிலிம்ஃபேர் விருது வழங்கும் விழாவை மூன்று பகுதிகளாக ஒளிபரப்ப இருக்கிறது. இதுவரை தேதி அறிவிக்கவில்லை என்றாலும் வருகிற ஞாயிற்றுக் கிழமை விழாவின் ரெட்கார்பட் வரவேற்பு உள்ளிட்ட அறிமுக நிகழ்வுகள், பேட்டிகளை ஒளிபரப்ப இருக்கிறது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் தமிழ் நடிகர் நடிகைகள் விருது பெறும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படலாம் என்று தெரிகிறது.
நன்றி: தினமலர்
-
29th July 2016, 11:07 PM
#6
Moderator
Diamond Hubber
வந்தது புதிய டிரண்ட்: இனி வாரத்தின் 6 நாட்களும் சீரியல்
சின்னத்திரை சேனல்களின் தரம் என்பது அந்த சேனல் ஒளிபரப்பும் புதிய திரைப்படங்கள், தரமான தொடர்களால் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு சேனலில் டிஆர்பி ரேட்டை உயர்த்துவது இந்த இரண்டும் தான். செய்தி சேனல்கள் தவிர மற்ற அனைத்து சேனல்களுமே தொடர்களை ஒளிபரப்புகிறது. சொந்தமாக தயாரிக்க முடியாத சேனல்கள் டப்பிங் சீரியல்களை வாங்கி ஒளிபரப்புகிறது. இப்போது முன்னணி சேனல்களும் டப்பிங் சீரியலை வாங்கி ஒளிபரப்ப தொடங்கி விட்டது.
சில முக்கிய தொடர்கள் மட்டுமே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சில ஞாயிற்றுக் கிழமை மட்டும் ஒளிபரப்பாகும். மற்ற தொடர்கள் அனைத்துமே திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும். இப்போது இந்த நிலையில் மாற்றம ஏற்பட்டுள்ளது.
தற்போது முன்னணி சேனல்கள் தொடர்களை திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்ப தொடங்கியிருக்கிறிது. சமீபத்தில் விஜய் டி.வி. இந்த பார்முலாவை கையில் எடுத்துள்ளது. விஜய் டி.வியின் முக்கிய தொடர்களான சீதையின் ராமன், பகல் நிலவு, தெய்வம் தந்த வீடு, சரவணன் மீனாட்சி, கல்யாணம் முதல் காதல் வரை இந்த தொடார்கள் அனைத்தும் திங்கள் முதல் சனி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அனைத்து சேனல்களுமே தொடர்களை திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பும்.
இதற்கு காரணம் தற்போது முன்னணி சேனல்கள் திரைப்படங்களை வாங்குவதை குறைத்துக் கொண்டன. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட சில பண்டிகை காலங்களில் மட்டும் புதிய படங்களை ஒளிபரப்பி விட்டு மற்ற நேரதித்தில் போட்ட படத்தையே திருப்பி திருப்பி போடுகிறார்கள். இது விளம்பரதாரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்பட்டுத்தியது. போட்ட படத்திலேயே தங்கள் விளம்பரத்தை ஒளிபரப்புவதை விட நெடுந்தொடர்களில் ஒளிபரப்புவதையே விரும்புகிறார்கள். எனவேதான் தொடர்கள் ஒளிபரப்பாகும் நாட்களை சேனல்கள் அதிகரிக்கின்றன. இனி சிறப்பு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக் கிழமை மட்டுமே ஒளிபரப்பாகும். சீரியல் பார்க்கும் பெண்களும் அடுத்து என்ன என்பதை காண இரண்டு நட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் பொறுத்துக் கொண்டால் போதும்.
நன்றி: தினமலர்
-
4th August 2016, 07:29 PM
#7
Moderator
Diamond Hubber
ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்: 6ந் தேதி முதல் ஒளிபரப்பு
இதுவரை சிறுவர், சிறுமிகளுக்கான பாட்டு போட்டி, நடன போட்டிகளை நடத்தி சின்னத்திரை சேனல்கள் ஒளிபரப்பி வந்தன. முதன் முறையாக ஜீ தமிழ் தொலைக்காட்சி சிறுவர், சிறுமிகளின் நடிப்பு திறனை வெளியில் கொண்டு வரும் வகையில் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியை தயாரித்து வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதிலும் ஆடிசன் நடத்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சிறுவர் சிறுமிகளை தேர்வு செய்துள்ளனர். இந்த போட்டியின் படப்பிடிப்புகள் கடந்த பல வாரங்களாக நடந்து வந்தது.
இந்த நிகழ்ச்சிகள் வருகிற 6ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றம் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கே.பாக்யராஜ், நடிகை குஷ்பு, தொகுப்பாளினி அர்ச்சனா ஆகியோர் நடுவர்களாக இருந்து நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். தற்போது முதல்கட்ட போட்டிகள் ஒளிபரப்பாகிறது. பின்னர் கால் இறுதி போட்டி, அரைஇறுதி போட்டிகள் ஒளிபரப்பாகும், இறுதி போட்டியில் வெற்றி பெறும் சிறுவர், சிறுமிகளுக்கு கணிசமான பரிசுத் தொகை வழங்கப்படுவதுடன் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
நன்றி: தினமலர்
-
24th August 2016, 06:44 AM
#8
Moderator
Diamond Hubber
கலக்க போவது யாரு: 21ம் தேதி முதல் ஒளிபரப்பு
விஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு. மிமிக்ரி மற்றும் மற்றும் காமெடி திறமைகளை வெளியே கொண்டு வரும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் திறமைகளை காட்டிய சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், ஈரோடு மகேஷ், உள்ளிட்ட பலர் திரைப்பட நடிகர்களாகிவிட்டார்கள்.
கலக்கப்போவது யாரின் 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்தது. இதன் 6வது சீசனுக்கான பணிகள் நடந்து வந்தது. தற்போது அது முடிந்திருக்கிறது. வருகிற 21ந் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கியவர்கள் பலர் திரைப்பட நட்சத்திரங்களாகிவிட்டதால் இந்த 6வது சீசனுக்கு வெள்ளித் திரைக்கான அடுத்த பயணம் ஆரம்பம் என்பதையே ஸ்லோகனாக வைத்திருக்கிறார்கள்.
6வது சீசனில் பல புதுமையான அம்சங்களும் இடம்பெற இருக்கிறது. பல திறமையான புதியவர்கள் வர இருக்கிறார்கள். அவர்களுடன் பழைய திறமையாளர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த முறை பிரமாண்ட அரங்கம் நிர்மாணம் செய்து அதில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி மூலம் இன்னொரு சிவகார்த்திகேயனோ, ரோபோ சங்கரோ கிடைப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நன்றி: தினமலர்
-
31st August 2016, 07:27 AM
#9
Moderator
Diamond Hubber
சிரிப்புடா விஜய் டிவியில் புதிய காமெடி நிகழ்ச்சி
கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா என்ற பாடல்வரி ஒரு படத்தின் தலைப்பில் இருந்து பச்சை குழந்தைகளின் மழலை வார்த்தை வரை ஊடுருவிவிட்டது. இப்போது இந்த நெருப்புடாவை சிரிப்புடா என்று மாற்றி விஜய் டி.வியில் புதிய காமெடி நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறார்கள்.
இதில் விஜய் டி.வியில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ஈரோடு மகேஷ் மற்றும் தாடி பாலாஜி இணைந்து நடத்துகிறார்கள். பிரபலமான திரைப்படங்களில் வரும் ஹீரோவின் ஸ்டைல்கள் பன்ஞ் டயலாக்குகள், ஆக்ஷன் காட்சிகளை நையாண்டி செய்வதுதான் இந்த நிகழ்ச்சியின் கரு. முதல் நிகழ்ச்சியாக அவர்கள் நையாண்டி செய்வது கபாலியைத்தான்.
இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. வருகிற 29ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது
நன்றி: தினமலர்
-
8th September 2016, 07:42 PM
#10
Moderator
Diamond Hubber
‛நாகினி-க்கு போட்டியாக ‛மாய மோகினி : விஜய் டி.வியில் புதிய திகில் தொடர்
"டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பி எங்கள் வேலை வாய்ப்பை பறிக்காதீர்கள்" என்று ஒரு புறம் சின்னத்திரை நட்சத்திரங்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் இன்னொரு புறம் முன்னணி சேனல்கள் போட்டிபோட்டுக் கொண்டு இந்தி சீரியல்களை இறக்குமதி செய்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. முன்னணி சேனல் ஒன்று ஒளிபரப்பி வரும் நாகினி தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதையொட்டி அதே போன்ற ஒரு பேண்டஸி திகில் தொடரை ஒளிபரப்ப இருக்கிறது விஜய் டி.வி. இந்தியில் பிரபலமான திகில் தொடரை வாங்கி அதனை மாய மோகினி என்ற பெயரில் டப் செய்து ஒளிபரப்ப இருக்கிறது.
இரண்டு பெண்கள் முக்கிய கதாபாத்திரம். ஒருவனை தீவிரமாக காதலிக்கும் பெண் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். ஆனால் அவளின் ஆன்மா அந்த இளைஞனையே சுற்றிச் சுற்றி வருகிறது. அந்த இளைஞனுக்கு திருமணமாகிறது. மனைவியின் ஆன்மா மூலம் அந்த இளைஞனோடு வாழ துடிக்கிற பெண்ணின் கதை. "உள்ளே உருவம், வெளியே அருவம் விளங்க முடியாத அதிசயம் நான்" என்பதுதான் அந்த கேரக்டரின் தாராக மந்திரம். "அவள் தொடுவாள் நான் பரவசமாவேன், அவள் உடல் நான் உயிர்" என்பது கேரக்டரின் தன்மை.
மாயமோகினி வருகிற 5ந் தேதி விநாயகர் சதுர்த்தி முதல் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ப்ரைம் டைமான இரவு 7 மணிக்கு ஒளிப்பாகிறது. இந்த மாயமோகினி அந்த நாகினியை வெல்வாளா என்பது ஒரு சில வாரங்களில் தெரிந்துவிடும்.
நன்றி: தினமலர்
Bookmarks