-
1st January 2012, 04:11 AM
#1
Moderator
Diamond Hubber
கிருஷ்ணனை மீட்க போராடும் காயத்ரி
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் முற்பகல் 11.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `உறவுகள்' தொடர், 650 எபிசோடுகளை நிறைவு செய்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. குடும்ப உறவுகளின் மேன்மையை காட்சிப்படுத்தியிருக்கும் இந்த தொடரின் சிறப்பு யதார்த்தமான கேரக்டர்கள். அதற்குப் பொருத்தமான நட்சத்திரங்கள்.
கிருஷ்ணன்-முகுந்தன் இடையே நீடித்து வரும் சண்டையில், கிருஷ்ணன் தன் மீதான நம்பகத் தன்மையை முகுந்தனிடம் ஏற்படுத்த பல வழிகளில் முயற்சி மேற்கொள்கிறான். ஆனால் அவை அனைத்தும் முகுந்தனின் அலட்சிய மனோபாவத்தால் தோல்வியில் முடிகிறது.
இந்நிலையில் முகுந்தனின் இரண்டாவது மனைவி சுவேதாவுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. இதை தெரிந்து கொண்ட சுவேதாவின் முதல் கணவன் சத்யா, குழந்தையை திருடிப்போய் விடுகிறான். குழந்தையை ஆளாளுக்கு தேடிப்போக, கிருஷ்ணனும் தேடலை தீவிரமாக்குகிறான். இந்த சூழலில் கிடைக்கிறது சத்யாவின் மரணச்செய்தி. சத்யா இறந்ததற்குக் காரணம் கிருஷ்ணன் தான் என்பதாக சந்தர்ப்பம் சாட்சியமைக்க, கிருஷ்ணன் ஜெயிலுக்குப் போகிறான்.
கிருஷ்ணன் ஜெயிலுக்குப் போன பிறகும் முகுந்தன் திருந்தினானில்லை. தன்னை நல்லவனாக நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக இது கிருஷ்ணன் நடத்தும் நாடகம் என்பதாகவே நினைக்கிறான்.
கணவன் முகுந்தனின் இந்த கடின முகம் பிடிக்காத அவன் மனைவிகள் சுவேதாவும் சித்ராவும் அவனை திருத்தும் நோக்கில் ஒரு முடிவெடுக்கிறார்கள். எந்த சூழலிலும் அவனிடம் பேசிவிடக்கூடாது என்பது தான் அந்த முடிவு. இதற்காக அவர்கள் ஒரு ஒப்பந்தமும் போட்டுக் கொள்கிறார்கள்.
ஆனால் ஒருகட்டத்தில் இந்த ஒப்பந்தத்தை சித்ரா மீறி விடுகிறாள். சுவேதாவுக்குத் தெரியாமல் முகுந்தனிடம் பேச ஆரம்பிக்கிறாள். இது தெரிய வந்ததும் சித்ராவிடம் சுவேதா கோபமாகிறாள். இருவருக்கும் சண்டை ஆரம்பம். அதுவரை ஒற்றுமையாக இருந்தவர்களை இந்த சண்டை ஜென்ம விரோதிகள் போலாக்கி விடுகிறது. இதனால் `முகுந்தன் யாருக்கு?' என்ற போட்டி அவர்களுக்குள் தீவிரமாகிறது. இரண்டு மனைவிகளின் இந்த உரிமைப் போராட்டத்தில் கிருஷ்ணன் யார் பக்கமாய் சாய்கிறான் என்பது அடுத்த கட்ட திருப்பம்.
இதற்கிடையே ஜெயிலில் இருக்கும் தன் கணவன் கிருஷ்ணனை மீட்க காயத்ரி முயற்சி மேற்கொள்கிறாள்.அவள் முயற்சிக்கு பலன் கிடைத்ததா? சஸ்பென்சை தக்கவைத்தபடி தொடர்கிறது, தொடர்.
தொடரின் நட்சத்திரங்கள்: ஸ்ரீகுமார், பாவனா, ராஜ்காந்த், ஸ்ரீதுர்கா, அமரசிகாமணி, பீலிசிவம், ரேவதி சங்கர், ராஜேஸ்வரி, சிநேகா, பாஸ்கர்ராஜா, சாந்தி வில்லியம்ஸ், சிவகவிதா, ராமச்சந்திரன், ஜெயந்த், சோனியா, ஜெயலலிதா, சுதா, ஆர்த்தி, அப்சர், கே.எஸ்.ஜெயலட்சுமி, பரத், ஜெயபிரபு, வைரவராஜ்.
பின்னணி இசை: ரேஹான். முகப்பு இசை: டி.இமான். பாடல்: வைரமுத்து. ஒளிப்பதிவு: பழனி. திரைக்கதை: குமரேசன். வசனம்: பாலசூர்யா. இயக்கம் ஷிவா.
தயாரிப்பு: சேன் மீடியா.
நன்றி: தினதந்தி
-
1st January 2012 04:11 AM
# ADS
Circuit advertisement
-
1st January 2012, 04:12 AM
#2
Moderator
Diamond Hubber
இல்லம் தேடி இறைவன்!
ஸ்ரீசங்கரா தொலைக்காட்சியில் தினந்தோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த "யுவர் சாய்ஸ்'' நிகழ்ச்சி தற்போது மாற்றம் செய்யப்பட்டு 5 மணிக்கு தொடங்கி 5.30 மணி வரையும், பின்னர் 6 மணிக்கு தொடங்கி 6.30 மணி வரையும் நேரடி ஒளிபரப்பாக தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் நேயர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி ஆன்மிகம் சம்பந்தமான திருத்தலக் காட்சிகளையும் கண்டு பரவசிக்கலாம்.
தமிழகத்தில் ஒரு பகுதியில் இருக்கும் ஒரு நேயர் தாம் நினைத்தவுடனேயே பல ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள ஆலயம் குறித்தோ, அல்லது அந்த ஆலயத்தில் நடைபெறும் உற்சவங்கள் குறித்தோ அரிய காட்சிகளை இந்நிகழ்ச்சிகளின் மூலம் கண்டு மகிழ முடியும்.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் பல மொழிகள் பேசும் நேயர்களிடமும் சரளமாக அவர்களின் மொழியில் பேசுவதோடு, நிகழ்ச்சியின் இடையிடையே பல்வேறு அரிய தகவல்களையும் அற்புதமான பாசுரங்களையும் பாடுவது பரவசம்.
நன்றி: தினதந்தி
-
11th December 2011, 01:57 AM
#3
Moderator
Diamond Hubber
ராதாவின் மாயாஜாலம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர், `ராதா கல்யாணம்.'
தனது கண்களுக்கு மட்டுமே தெரிந்து வரும் ராதாவை அடைத்து வைத்து, வீட்டில் இருப்பவர்களிடம் அவள் காணாமல் போகவில்லை என்று நிரூபிக்க நினைக்கும் கீர்த்தி ஒருபுறம். மகளின் இந்த நிலைக்காக கீர்த்தியின் தாய் எடுக்கும் அதிர்ச்சி முடிவு இன்னொருபுறம்.
ராதாவின் பிரிவால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் கீர்த்தியை கொலை செய்ய இதை விட நல்ல சந்தர்ப்பம் இல்லை என்று நினைக்கும் சந்தனாவின் திட்டம் நிறைவேறுமா? சந்தனாவின் இந்தத் திட்டத்திற்கு அவளுக்கு உதவப் போவது யார்?
இதற்கிடையே டெண்டரில் ராதாவின் கையெழுத்து எப்படி வந்தது? கீர்த்தி சொல்வது போல் ராதா இருப்பது உண்மையா? உண்மையென்றால், ராதா ஏன் கீர்த்தியின் கண்களுக்கு மட்டும் தெரிகிறாள்? ராதா இருப்பது எங்கே?அழைத்த அந்த நிமிடத்தில் வந்து போகும் ராதாவின் நோக்கம் என்ன? இதன் பின்னால் ஏதாவது ச(க்)தி இருக்கிறதா? இருந்தால் அதற்குக் காரணம் என்ன? வம்சியின் தேடல்களுக்கான பதில் என்ன?
இதற்கிடையே சந்தனா பற்றி விஸ்வநாதன் தெரிந்து கொண்டது என்ன? அவர் பிடியில் இருந்து சந்தனா தப்பிப்பாளா? அல்லது அகப்பட்டு வம்சியை அடையும் திட்டத்தைக் கைவிட்டு அவர் வாழ்க்கையில் இருந்து விலகுவாளா? சுவாரசிய திருப்பங்களுடன் தொடர்கிறது, தொடர்.
நன்றி: தினதந்தி
-
17th December 2011, 11:33 PM
#4
Moderator
Diamond Hubber
உறவுக்கு கைகொடுப்போம்-500
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஏவி.எம்.மின் `உறவுக்கு கைகொடுப்போம்' தொடர் 500 எபிசோடை நிறைவு செய்திருக்கிறது. தொடர்ந்து குடும்ப உணர்வுகளின் சங்கமமாக தொடரும் இந்த தொடருக்கு குறிப்பாக பெண் ரசிகைகள் அதிகம்.
அண்ணன்-தம்பிகளின் ஒற்றுமை பற்றியும், வீட்டுக்கு வந்த மருமகள்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வது பற்றியும் சொல்லும் குடும்பக்கதை பின்னணி என்பதால், தொடர் நேயர்களின் ஏகோபித்த வரவேற்புக்குரியதாகி இருக்கிறது. விளைவு, கலைஞர் டிவியின் தொடர்கள் வரிசையில் டி.ஆர்.பி.ரேட்டிங்கிலும் முதல் தொடர் என்ற நிலையை தொடர்ந்து தக்க வைத்திருக்கிறது.
அண்ணன், தம்பி, தங்கை என்று சின்னக்குடும்பம். அந்தக் குடும்பத்தின் தாயான தெய்வநாயகி இறந்து மீண்டும் பெரியண்ணாவுக்கு குழந்தையாக பிறக்கிறாள். அந்தக் குழந்தை போன ஜென்ம நினைவுகளுடன் தன் பிள்ளைகளுக்கு தாயாக, மருமகள் களுக்கு மாமியாராக குடும்பத்தை சிறப்பாக நடத்திச் செல்கிறாள். இந்த கேரக்டரில் குழந்தை தெய்வநாயகியாக 21/2 வயது சின்னஞ்சிறுமி யுவினா நடித்திருக்கிறாள். பெரிய மனுஷி தோரணையில் மாமியார் தெய்வநாயகியாக நடிக்கும் அவள் சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை ஒட்டுமொத்தமாக தன் நடிப்பால் கவர்ந்திருக்கிறாள்.
இந்த குடும்பத்தின் கடைசி மருமகள் மதுவிற்கு குழந்தை என்றால் கொள்ளைப் பிரியம். அவள் 8 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது பிறக்கும் குழந்தையின் எதிர்காலம் பற்றி அறிய ஜாதகம் பார்க்க செல்கிறார்கள். ஜோதிடரோ, `ஆண் குழந்தை பிறந்தால் தாய் உயிரோடு இருக்கமாட்டாள் என்றும், பெண் குழந்தை பிறந்தால் தாய்க்கு ஆபத்து இல்லை' என்றும் சொல்ல, குடும்பமே ஆடிப்போகிறது. மதுவிற்கு என்ன குழந்தை பிறக்கப்போகிறது?
தெய்வநாயகியின் தம்பி நந்தகுமார்-கிருஷ்ணா குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பத்மா யார் என்ற சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்து விட்டது. இனியாவின் தாய் தான் பத்மா என்பது தெரிந்து விட்டது. இதற்குப்பிறகு கிருஷ்ணா எதிர்பார்த்ததுபோல் இனியா, கிருஷ்ணாவை வெறுத்தாளா? அல்லது பத்மா-கிருஷ்ணாவின் தியாகத்தை உணர்ந்தாளா? பத்மா வந்ததால் கிருஷ்ணாவின் நிலை என்ன?
கேள்விகளுக்கு பதில், வரப்போகும் பரபரப்பான எபிசோடுகளில்.
தொடரின் இன்னொரு சிறப்பு அம்சம், வியாழன் தோறும் பாபாவின் தரிசனம். அதுவும் கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு அவர் ஆலோசனை சொல்லும் விதத்தில் காட்சிகள் அமைந்திருப்பது சிறப்பு.
நட்சத்திரங்கள்: பூவிலங்குமோகன், விஜய்ஆனந்த், புஷ்பலதா, காயத்ரிபிரியா, யுவினா பார்த்தவி, சுரேஷ்வர், தினகர், சீதா, காஞ்சி வினிதா, பூரணி, சுபாஷினி, கிருஷ்ணமூர்த்தி.
கதை, திரைக்கதை வசனம்: சேக்கிழார். இயக்கம்: கே.ஏ.புவனேஷ்.
தயாரிப்பு: எம்.சரவணன், எம்.எஸ்.குகன்.
நன்றி: தினதந்தி
-
25th December 2011, 07:18 AM
#5
Moderator
Diamond Hubber
பாட்டு ராணிக்கு பாட்டுத்திருவிழா
பிரபல பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரிக்கு சமீபத்தில் பாராட்டு விழா நடந்தது. `பாட்டு ராணிக்கு பாட்டுத்திருவிழா' என்ற தலைப்பில் சென்னை காமராஜர் அரங்கில் நடந்த இந்த விழாவில் எல்.ஆர். ஈஸ்வரி பாடிய காலத்தால் அழியாத பாடல்களை சாதகப்பறவைகள் இசைக்குழுவினர் பாடினார்கள். நிகழ்ச்சியின் நாயகி எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். எல்.ஆர்.ஈஸ்வரிபாடி பிரபலமான பாடல்களான `பட்டத்துராணி பார்க்கும் பார்வை, அம்மம்மா கேளொரு சேதி, முத்துக் குளிக்க வாரீகளா, பளிங்கினால் ஒரு மாளிகை' போன்ற பாடல்களை தங்கள் குரலில் பாடகிகள்பாடியபோது நெகிழ்ந்துஅவர்களை பாராட்டவும் செய்தார். நிகழ்ச்சியில் `எலந்தப்பய(ழ)ம்' பாடலை அவரே பாடி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
விழாவில் கவிஞர் வாலி, நடிகர்கள் சிவகுமார், விவேக் ஆகியோர் எல்.ஆர்.ஈஸ்வரியின் இசை சாதனைகளை பட்டியலிட்டார்கள்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை வசந்த் டிவியுடன் இணைந்து `சாதகப்பறவைகள்' சங்கர் செய்திருந்தார்.
இந்த விழாக்கொண்டாட்டம் வசந்த் டிவியில் நாளை காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினதந்தி
Last edited by aanaa; 25th December 2011 at 07:24 AM.
"அன்பே சிவம்.”
-
1st January 2012, 04:03 AM
#6
Moderator
Diamond Hubber
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி!
116 நாடுகளில் 83 மொழிகளில் 13 வருடங்களாக வலம் வந்து கொண்டிருப்பது `ஹு வாண்ட்ஸ் டு பி எ மில்லினிர் கேம் ஷோ' நிகழ்ச்சி. இதை இந்தியில் `கோன் பனேகா குரோர்பதி' என்ற பெயரில் அமிதாப்பச்சன் நடத்தி புகழ் பெற்றார். இப்போது தமிழில் `நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' என்ற தலைப்பில் பிரத்யேகமாக தயாராகிக் கொண்டிருக்கிறது, இந்த நிகழ்ச்சி.
எளிய நடையில், எளிய கேள்விகள் மூலம் பொது அறிவில் தங்களை வளர்த்துக் கொண்டவர்களை கோடீஸ்வரராக்கும் இந்த நிகழ்ச்சியை நடிகர் சூர்யா வழங்குகிறார். சின்னத்திரையில் சூர்யாவின் முதல் பங்களிப்பு இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான படப்பிடிப்பு புத்தாண்டு முதல் தொடங்குகிறது. பிப்ரவரியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்குகிறது.
நன்றி: தினதந்தி
-
1st January 2012, 04:27 AM
#7
Moderator
Diamond Hubber
300ஐ தாண்டிய வந்தாளே மகராசி!
ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் "வந்தாளே மகராசி தொடர் 300 எபிசோடுகளை கடந்து தொடர்கிறது. பெண்ணின் பெருமைகளைச் சொல்லும் தொடர் என்பதால் தொலைக்காட்சி நேயர்களிடம் வரவேற்பு பெற்ற தொடர் இது. குறிப்பாக இந்த தொடருக்கு பெண் ரசிகைகள் அதிகம். எந்தவொரு குடும்பத்திலும் பெண் குழந்தை பிறந்தால் குடும்பத்தில் உள்ளவர்கள் அழைக்கிற வார்த்தை தான் தொடரின் தலைப்பு. பெண் மணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும்போதும் இதை வார்த்தையைத்தான் சொல்வார்கள். இந்த வார்த்தையையே தலைப்பாக்கி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
சொர்ணமால்யா, ஐஸ்வர்யா, ஸ்ரீ, இளவரசன், லதாராவ், சுக்ரன், ஸ்ரீலதா, அமரசிகாமணி, ஷண்முகசுந்தரம், புவனா, சுதா, சுமங்கலி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இசை: ராஜ்பாஸ்கர். இயக்கம்: செந்தில்குமார். இவர் சுந்தர் சி.யின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடித்த `புதிய கீதை மற்றும் பள்ளிக்கூடம், சாணக்யா, குப்பி, பகைவன் போன்ற படங்களைத் தயாரித்த விஸ்வாஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வி.சுந்தர் இத்தொடரை தயாரித்து வருகிறார்.
நன்றி: தினமலர்
-
7th January 2012, 08:13 PM
#8
Moderator
Diamond Hubber
சரவணன்- மீனாட்சி நிச்சயதார்த்தம்
விஜய் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர், சரவணன் -மீனாட்சி'.
சரவணனாக செந்திலும், மீனாட்சியாக ஸ்ரீஜாவும் நிஜ காதலர்களோ என்று கேட்கும் அளவிற்கு நடிப்பில் அசத்துகிறார்கள்.
பெண் பார்க்கும் படலத்தில் ஆரம்பித்து, பெரியவர்களால் நிச்சயித்த கல்யாணமாக முடிந்திருக்க வேண்டிய கதையில் திடீரென `ஜாதகம்' வில்லனாகி விடுகிறது. அந்த ஜாதக குளறுபடியில் மனதை கல்லாக்கிக் கொண்டு சரவணனை மறக்க சம்மதம் தெரிவிக்கிறாள் மீனாட்சி. ஆனாலும் எல்லா உறுதிமொழிகளையும் தாண்டி, ஜாதக தடைகளை மீறி காதல் ஜெயிக்கிறது.
இப்போது காதல் ஜோடிகளுக்கு நிச்சயதார்த்தம். காரைக்குடியில் பிரம்மாண்ட பங்களாவில் நடை பெறும் இந்த நிச்சயதார்த்த பகுதிகள் மிகவும் சுவாரசியமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியில் பொங்கி வரும் காதலும், குறும்பான ஊடலும் கூடலும் கரும்பாக நேயர்களை கவரும்.
சரவணனின் அப்பாவாக வரும் ராஜசேகர், அம்மா குயிலி இருவருமே நகைச்சுவை நடிப்பிலும் கலக்குகிறார்கள்.
நன்றி: தினதந்தி
-
7th January 2012, 08:15 PM
#9
Moderator
Diamond Hubber
காதம்பரியாக மாறிய மிதுனா!
கருத்தம்மா ராஜஸ்ரீயின் தங்கை மிதுனா `மாமதுரை' படத்தில் அறிமுகமானவர். தமிழிலும், தெலுங்கிலும் நடித்தவர் இப்போது சின்னத்திரையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். சாப்ரன் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் `காதம்பரி' மெகா தொடரில் இவர்தான் கதையின் நாயகி. இவருடன் சுதா சந்திரன், லஷ்மிராஜ், காயத்ரி, பாலாஜி, செம்புலி ஜெகன், சுந்தரி, சூரி, தேசிங்கு உட்பட பலர் நடித்து வருகின்றனர்.
பிரபு சங்கர் கதை எழுதி இயக்கும் இந்த தொடரின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த மணிமங்கலம் பகுதியில் நடைபெற்று வருகிறது. அங்கு நடித்து கொண்டு இருந்த மிதுனாவிடம் பேசினோம்.
"அந்த காலத்தையும், இந்த காலத்தையும் இணைக்கும் கதை. 200 ஆண்டுகளுக்கு பிறகு மறுஜென்மம் எடுத்து சந்திக்கும் காதம்பரியின் வாழ்க்கை சம்பவம். 2 கதாபாத்திரத்திலும் நடிக்கிறேன். அதிலும் அந்த காலத்து வேடத்துக்காக நான் ஜாக்கெட் அணியாமல் சேலை கட்டி, கொண்டை போட்டு, அந்த கால நகைகளை மாட்டிக்கொண்டு நடிப்பது புது அனுபவம் தான். இந்த தொடருக்கு பிறகு என்னை காதம்பரி என்றே அழைப்பார்கள். எனக்கு எதிரான பாத்திரத்தில் சுதா சந்திரன் நடிப்பில் மிரட்டியிருக்காங்க. அவுங்களுக்கும் பெரிய அளவில் பேர் கிடைக்கும். ''
நன்றி: தினதந்தி
-
7th January 2012, 08:17 PM
#10
Moderator
Diamond Hubber
சின்னத்திரையில் நடிகை காவேரி
தியாகம் தொடரில் நடிக்கிறார்
`தங்கம், வசந்தம், மாமா மாப்ளே..' போன்ற பல வெற்றித் தொடர்களை தயாரித்து வரும் விஷன் டைம் நிறுவனம் இப்போது `தியாகம்' என்ற புதிய தொடரை தயாரிக்கிறது.
முற்றிலும் குடும்ப பின்னணியில் மனித உறவுகளின் மகத்துவத்தை சொல்லவிருக்கும் இந்த தொடரில், கூட்டுக்குடும்பத்தின் முக்கியத்துவம் கதைக்களமாக்கப் பட்டிருக்கிறது. அன்றாடம் வாழ்வில் சந்திக்கும் இயல்பான முகங்கள்.. அவதாரம் எடுக்காத யதார்த்தமான கதாபாத்திரங்கள் தொடரின் உயிர்நாடி.
கவிஞர் வைரமுத்து இந்த தொடருக்காக ``தியாகம் என்பது யாகம்..'' என்ற பாடலை எழுதி உள்ளார். தினா இசையமைக்கிறார். சமுத்திரம், காசி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கும் காவேரி, இந்த தொடரின் மூலம் சின்னத் திரையில் கால் பதிக்கிறார். கன்னடத்தில் நானூறுக்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்த ஸ்ரீநாத் இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சபிதா ஆனந்த், கவுதமி, உதய், துர்கா, சூசன், பிர்லாபோஸ், விஜய் ஆனந்த், கீர்த்தி ஆகியோர் தொடரின் ஏனைய நட்சத்திரங்கள்.
கதை, திரைக்கதை வசனம்: குரு சம்பத்குமார். ஒளிப்பதிவு: செல்லப்பாண்டி. டைரக்ஷன்: ஏ.அப்துல்லா.
தொடருக்கான படப்பிடிப்பு காரைக்குடி, கும்பகோணம், திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.
விஷன் டைம் நிறுவனத்தின் சார்பில் வைதேகி ராமமூர்த்தி இந்த தொடரை தயாரிக்கிறார். விரைவில் சன் டி.வி.யில் பகல் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது, தொடர்.
நன்றி: தினதந்தி
Bookmarks